PDA

View Full Version : நீயும் காதலும்தான்...



rambal
02-04-2003, 04:35 PM
நீயும் காதலும்தான்...

மண்ணாகத்தான் இருந்தேன்..
ரங்கோலி போட்டு
அழகு பார்த்தது...

மண்பானையாகத்தான் இருந்தேன்..
ஆன்மாவை தட்டியெழுப்பும்
கடமாக்கிப் பார்த்தது..

ஒரு வரி விமர்சகனாத்தானிருந்தேன்..
கவிதை வாளெடுத்து
போர் புரிய வைத்தது...

சபையில் நிற்கவே கூச்சப்பட்டுக்கொண்டிருந்தேன்..
அரியணையில் ஏறி அமர வைத்து
ஆட்சி புரிய வைத்தது..

பூக்களை மணமுள்ள வஸ்துவாகத்தான் பார்த்தேன்..
பூவை பூவாகப் பார்க்க
கற்றுக் கொடுத்தது..

இன்னபலவும் உண்டு...
ஒரே நாளில் எல்லாவற்றையும்
திரும்பப் பெற்றுக் கொண்டது...

இளசு
02-04-2003, 05:28 PM
வலியோ வலிமையோ
காதல் முழுமையாகக் கெ()டுத்துவிடுகிறது அல்லவா?
அருமை ராம்.

anushajasmin
03-04-2003, 01:27 PM
அந்த இறுதி வரிகள் கவிதையின் மொத்த பரிணாமத்தையும் எடுத்து வெளிப்படுத்தியது.அருமையான கவிதை...பாராட்டுகள்

periyavaa
13-06-2007, 02:03 PM
காத்திருந்த கவிதைக்கு
வேர்த்திருந்த சிறுபறவை
கவரி வீசுகிறது.

ஓவியா
20-06-2007, 07:58 PM
கவிதை மிகவும் அருமை,

வரிகளில் சொக்கி போனேன், அழகிய கோர்வை.

காதல் சிந்தனை சிறப்பாக இருக்கின்றது, ஒவ்வொரு வரியும் அற்புதம்.


நன்றி ராம்பால் அண்ணா.

மனோஜ்
20-06-2007, 08:02 PM
எப்ப எழுதியது இப்ப படித்தாலும் அருமை நன்றி அண்ணா

அனுராகவன்
02-05-2008, 10:13 AM
கவிகள் காலத்தால் அழியாதவை..
என்றும் படிக்க தூண்டும்..
என் நன்றிகள்...................

பூமகள்
01-06-2008, 09:12 AM
நீயும் காதலும்தான்
இன்னபலவும் உண்டு...
ஒரே நாளில் எல்லாவற்றையும்
திரும்பப் பெற்றுக் கொண்டது...
பிரபஞ்சமே எதிர்த்தாலும்
பின்வாங்காத வலிமையும் தரும்..:rolleyes:
புல் தடுக்கிவிட்டாலும்
புரண்டுவிழும்.. வலியும் தரும்..:icon_rollout::icon_rollout:

வலியோ வலிமையோ
காதல் முழுமையாகக் கெ(�)டுத்துவிடுகிறது அல்லவா?
அருமை ராம்.
மிகச் சரி பெரியண்ணா...! :icon_b::icon_b:

shibly591
01-06-2008, 09:16 AM
தொடரட்டும் இதுபோன்ற அற்புதக்கவிதைகள்...

சூரியன்
01-06-2008, 10:31 AM
அழகான வரிகள்.
சபாஷ் ராம் அண்ணா.