PDA

View Full Version : நிழற்படப் பதிவுகள்...



Pages : [1] 2

இளசு
11-07-2003, 07:08 AM
அன்பு நண்பர்களே...



நண்பர் அஞ்ஞானி (எங்க இன்னும் ஆளக் காணோம்? :wink: ) ஆரம்பித்து,

சென்ற மாதம் சிறப்புப் பார்வையாய் தம்பி பூ ,

பின் புதியவர்கள் கவிதை அலசலாய் ராம் ஆகியோர் வரை



மன்றத்தின் " நிழற்படப்பதிவுகள்"

தனித்துவம், சிறப்பிடம் பெற்றவை..



இந்த மாதம், இனி வரும் காலம்...

நிழற்படப் பதிவை நீங்கள் பதிக்க விரும்புகிறீர்களா?



ஒரே நேரத்தில் பலர் இந்த கனகாலமெடுக்கும் முயற்சியில்

ஈடுபடுவதைத் தவிர்க்க....

எனக்கு தனிமடல் அனுப்புங்களேன்...

மாதம் ஒருவர் என சுழற்சிமுறையில் வாய்ப்பு ஒரு வழி...

என்ன நினைக்கிறீர்கள்? இது சம்மதமா உங்களுக்கு?



பலர் பார்வையில் மாதாமாதம் வித்தியாச நிழற்படங்கள்

தொகுக்கப்படுவது கூடுதல் ஜொலிப்பாய் இருக்கும் என நம்புகிறேன்..



படைக்க விரும்பும் முன் புதிய உறுப்பினர்கள் வாழ்த்துகள் என்ற இதே பகுதியில் பழைய

நிழற்படப் பதிவுகளை முதலில் படிக்க வேண்டுகிறேன்..



நன்றி... வணக்கம்...

gankrish
18-07-2003, 06:53 AM
ஐயா இளசே... என்ன நிழற்படம். எதை பற்றி கூறுகிறீர்கள். எனக்கு விளங்கவில்லை. முடிந்தால் விளக்கி கூறுங்களேன்.

இளசு
19-07-2003, 07:23 AM
இளசே... என்ன நிழற்படம்.

இனிய நண்பனே,இதே வாழ்த்துகள் தலைப்பில்,
தேதியுடன் நிழற்பட படைப்புகள் என

அஞ்ஞானி (இன்று நம் தளம் ) முதல்

பூ வரை (சிறப்பூப் பார்வை ) பதித்து இருக்கிறார்கள்.

கவிதைகள் பற்றி ராம் பல பதிவுகள் படைத்திருக்கிறார்.



புகைப்படப் பதிவு போல்

மன்ற நிகழ்வுகளை "படம்" பிடித்து தொகுக்கும் முயற்சி இது!



இன்றைய மன்ற நிகழ்வுகள்...

நாளைய இணையத் தமிழ் வரலாறு!

இளசு
27-07-2003, 11:02 PM
இப்படி அடம் பிடிச்சா எப்படி மன்ற சொந்தங்களே!

நானே மாதம் ஒருத்தர்னு பொறுப்பு குடுத்துடவா?

anbu
29-07-2003, 08:58 AM
இளசு நண்பரே நான் நிழற்படப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன் அதற்க்கு உங்கள் ஆலோசனை தேவை.

poo
29-07-2003, 05:17 PM
அன்பு.... வாழ்த்துக்கள்.. முன்வந்தமைக்கு பாராட்டுக்கள்..



என்ன மாதிரியான ஆலோசணை வேண்டுமென நினைக்கிறீர்கள்?!!

இளசு
29-07-2003, 06:53 PM
[quote]இளசு நண்பரே நான் நிழற்படப் பதிவு செய்ய ஆசைப்படுகிறேன். அதற்கு



அப்பாடி.. நண்பர் அன்பு அவர்களே

நீங்க ஒரு ஆளாவது இப்படி தாமாக முன்வந்தீங்களே..

இல்லன்னா, பள்ளி ஆசிரியர் போல்

கண்டிப்பான முறையில்

யார் தலையில் பொறுப்பைக் கட்டுவது

என யோசித்துக்கொண்டிருந்தேன்.



கீழ்க்கண்ட சுட்டிகளில் உள்ள பதிவுகளைக் காணுங்கள்.

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=506

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=675

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=978

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=1239


ஜூன் 13 வரை மன்ற நிகழ்வுகளின் பதிவுகள் இவை.
ஜூன் 14 முதல் வந்த பலவித பதிவுகளைப் பற்றி

உங்கள் பாணியில், உங்கள் பார்வையில்

தொகுத்து எழுதி அசத்துங்கள் தோழரே..

வாழ்த்துகள்!



(கவிதைகள் பற்றி ராம்பால் நல்ல பல பதிவுகள் தந்தார்.

இப்போது அவர் விடுப்பில்.

உங்களுக்கு விருப்பமாயின்

உங்கள் அலசலில் கவிதைகளையும் சேர்க்கலாம்..

இல்லையெனில் அதற்கு தனியே ஓர் அழைப்பு விடுக்கிறேன்..

நண்பன் என் முதல் குறி.. உஷார்!!! )


(சுட்டி பிறகு மாற்றப்படும் - மன்மதன் )

anbu
29-07-2003, 07:01 PM
நன்றி நண்பரே !



உங்கள் ஆசீர்வாதத்துடன் இனி ஆரம்பம் செய்கிறேன்.

இளசு
03-09-2003, 10:45 PM
அன்பு நண்பர் அன்புவின் அருமையான பதிவுக்குப்பின்

அடுத்து இப்பணி மேற்கொள்ளப்போகும் அன்பரை

அன்போடு அழைக்கிறேன்..

gankrish
06-09-2003, 10:11 AM
ஐயா இளசு.. மற்றும் பூவுக்கு எனது வணக்கம். என் சந்தேகத்தை தீர்த்து வைத்ததற்க்கு என் நன்றி. நான் நம் அன்பு எழுதிய நிழற்பாடத்தை படித்தேன். ஐயா தமிழ் பண்டிதர்கள்.. கவிஞர்கள் உலாவரும் இவ்விடத்தில் நானும் ஒரு உறுப்பினன் என்ற தகுதியே எனக்கு பெருமை சேர்க்குது.

நான் ஏன் கூறுகிறேன் என்றால் என்றைக்கவது உங்கள் மனதில் ( இளசு/பூ ) என் பெயர் நினைவு வந்து இதை எழுத சொன்னால் நான் fail தான்.

முத்து
07-09-2003, 07:36 PM
அண்ணா... என்னால் முடிந்த அளவுக்கு ஆறாம் நிழற்படப் பதிவினை நான் செய்ய முயல்கிறேன்...

anbu
07-09-2003, 07:50 PM
வாழ்த்துக்கள் நண்பர் முத்து அவர்களே.......



உங்களால் அடுத்த நிழற்படப் பதிவை மிகவும் சிறப்பான முறையில் உருவாக்க முடியும் என்பதில் சந்தேகமே இல்லை.



உங்களுக்கு என்னுடைய அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

இளசு
08-09-2003, 12:01 AM
அண்ணா... என்னால் முடிந்த அளவுக்கு ஆறாம் நிழற்படப் பதிவினை நான் செய்ய முயல்கிறேன்...



முத்து...

முயல்வதாய்ச் சொன்னபோது மன்ற நேரம்.. 1.06.am



முடித்து பதித்த போது

http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=21329#21329

மன்ற நேரம் 3.21 am.



எடுத்தது கண்டனர்..

இற்றது கேட்டனர்...



கம்பன் அன்று சொன்னதையே

அண்ணன் இன்று சொல்கிறேன். பாராட்டுகள்.

rambal
09-09-2003, 02:33 PM
ஒரு சின்ன யோசனை..

குதர்க்கமாக இருக்கிறது என்றால் எடுத்துக் கொள்ளவேண்டாம்...

ஒரு மனசாட்சியோடு பேசுவது போன்று மன்றத்தில் உள்ள குறைகளைப் பற்றி

விமர்சிக்கலாமா?

சும்மா மாத மாதம் நிழற்படப்பதிப்பு என்று வெறும் பாராட்டுக்கள் மட்டுமே வருகிறது..

விமர்சணம் இருந்தால்தான் (எதிர்சீட்டு ) மன்றத்தை தரமுள்ளதாக ஆக்கமுடியும்

என்பது என் கருத்து..

ஏனெனில், மன்றம் தேங்கியது போல் இருக்கிறது..(என் பார்வையில் )

இதைப் பற்றி கொஞ்சம் யோசித்தால் நலம்..

உங்கள் பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கும்..

poo
09-09-2003, 03:42 PM
நல்ல யோசனை ராம்.



நானும் யோசித்தேன்.. ஒரேமாதிரியாய் வருகிறதே என.. ஆனாலும் அது அந்த மாதம் பணிசெய்தோர்க்கு ஒட்டுமொத்த நன்றிக்கடனாய் பாராட்டு மடலாய் சிரத்தையெடுத்து எழுதியிருக்கிறார் என எண்ணிக்கொள்வேன்.



மன்றம் தேங்கிய உணர்வுக்கு காரணம்.. பாதிமன்றம் திடீர் என சொல்லாமல் கொள்ளாமல் தொலைந்துபோனதுதான்... அவரவர்க்கு ஆயிரம் பிரச்சிணைகள்.. அதில் மன்றத்து பணிகளும் சற்றே தளர்ந்துவிட்டது.



எதிர்சீட்டை ஆரோக்கியமாய் எத்தனைபேர் எடுப்பார்கள். மேலும் அவ்வாறு எதிர்சீட்டாய் அமர்பவர் அதிகம் பக்குவப்பட்டவராய் இருக்க வேண்டும்.. அப்போதுதான் மனம் நோகாவண்ணம் கருத்துக்கள் வரும்.குறைகள் குத்தாமல் சொல்லப்படும்!



ஒரு படைப்பில் குறையெனில் அதற்கு கீழேயே அவற்றை கூச்சமின்றி நம் நண்பர்கள் சொல்லிவிடுகிறார்கள்.. படைத்தவரும் திருத்திக்கொள்கிறார்..



என்னைப்பொறுத்தவரை .. மாதப்பதிப்பில் சிற்சில குறைகளை சொல்லி பழையதை நினைவூட்டி கசப்பூட்டாமல் இனிப்பாய் அமையட்டுமே என நிறைகளை சொல்லி இன்னமும் தன்னம்பிக்கையை வளர்ப்பதாகவே தோணுகிறது நிழற்படப்பதிப்பு.அடுத்த மாதம் சிறப்பாய் உழைக்கத்தரும் உற்சாக டானிக் இதுவென நினைத்துக் கொள்கிறேன்!!



உன்னால் எதிர்சீட்டை அழகாக கையாளமுடியுமென எனக்கு தெரியும். முன்வருவாயா ஒவ்வொரு மாதமும்?!!..



சிறந்த அறிஞர்கள் அல்ல எல்லோரும்.. ஆக ஆதிஅந்தமென சந்திப்பிழைகளாய் குறைகளை சொல்ல ஆரம்பித்தால் சோர்வுதான் மிஞ்சுமென நினைக்கிறேன்!!



எளிய நடையில் நடைபோடும் சாமாண்யர்களின் மன்றமாகவே நம்முடையது இருந்துவிட்டு போகட்டுமென எண்ணுகிறேன்.



எனக்கு தோணியதை எழுதினேன். தவறாக எண்ணவேண்டாம். இன்னும் நிறைய பெரியவர்கள் இருக்கிறார்கள் அவர்களின் பார்வைகளுக்காக காத்திருக்கிறேன்.. உன்னோடு நானும்!!!

இக்பால்
09-09-2003, 04:10 PM
இந்த உலகத்தில் குறைகளை எடுத்துச் சொன்னால் யாருக்கும்

ஏனோ பிடிப்பதில்லை. ஆனால் நம் மன்றத்தில் மிக மூத்தோராக

இருக்கும் ஒருவரின் கருத்துக்களை மிக இளையவரான ஒருவர்

விமர்ச்சிப்பதைப் பார்க்கிறோம். ஆச்சரியப்படும் வகையில் எந்த

எதிர்ப்பும் இல்லாமல் அந்த மூத்தோர் ஒத்துக்கொண்டு பின்

வாங்குவதை இங்கே நிறைய முறை பார்த்துள்ளேன். உண்மையைச்

சொல்லப் போனால் இரு மன்ற உறுப்பினர்களுக்கிடையில்

மனக் கசப்பு, வாக்குவாதம் வந்து நான் பார்க்கவில்லை.

கண்பட்டு விடாமல் இருக்க நானே சுற்றிப் போட்டு விடுகிறேன்.



ராம்பால் தம்பி சொன்னது நல்ல யோசனைதான் என்றாலும்

பூ தம்பி சொன்ன கருத்துக்களும் ஏற்கக் கூடியதாகவும்,

நன்றாக யோசித்தக் கருத்தாகவும் இருக்கிறது.



-அன்புடன் அண்ணா.

anbu
10-09-2003, 04:35 PM
நண்பர் ராம்பால் அவர்களே மன்றத்தின் மூத்தவர் என்ற

முறையில் உங்கள் கருத்தை சொல்லி இருக்கிறீர்கள்.



இந்த மன்றத்தின் இளையவன் என்ற முறையில் என் மனதில்

உள்ளதை சொல்கிறேன் தவறாக என்ன வேண்டாம்.



அன்றாடம் வாழ்க்கையில் எத்தனையோ பிரட்ச்சனை ஆபீஸில்

குடும்பத்தில் மற்றும் பல இடங்களில் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட

சூழ்நிலையில் கொஞ்சம் மனக் கவலை தீர இணையம் பக்கம்

வருகிறோம். கொஞ்சம் சந்தோசம் கிடைக்கிறது. அதிலும்

நமது தாய் மொழியில் சில விசயங்களை இணையத்தில் தெரிந்து

கொள்ளும் வாய்ப்பு கிடைப்பது அதைவிட சந்தோசம்.



அதிலும் இந்த தமிழ் மன்றம் கிடைத்து அதில் ஒவ்வொருவரும்

தம் மனதில் பட்ட கருத்துக்களை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது

மிகப் பெரிய சந்தோசம். இதற்க்கு மேல் ஒவ்வொருவரும் தன்

முயற்ச்சியால் சில படைப்புகளை உருவாக்கி (தன்னுடைய அன்றாட

வேலை சிரமத்திலும் இந்த தமிழ் மன்ற பங்கெடுப்பை பெரிதாக

எடுத்துக்கொண்டு) அதை இந்த மன்றத்தில் பதிய என்னுவது

அதன் முதன்மை குறிக்கோள் தமக்கு இந்த பதிப்பின் மூலம்

பாராட்டு கிடைக்கும் என்ற என்னம்தானே தவிர வேறு எதுவும்

இருக்க முடியாது. இரண்டாவதான காரணம் வேண்டுமானால்

இந்த பதிப்பின் மூலம் அடுத்தவருக்கு பயன் கிடைக்கும் என்ற

என்னம் இருக்கலாம்.



நானே ஒவ்வொரு பதிப்பிற்க்கு பிறகும் என்னுடைய பதிப்பை

பற்றி அடுத்த நண்பர் சிறப்பாக என்ன சொல்லி இருக்கிறார்

என்று ஆவலோடு திரும்ப திரும்ப எத்தனையோ தடவை அந்த

பகுதியை சுற்றி சுற்றி வந்திருக்கிறேன். (இந்த மன நிலை

என்னைப்போன்ற புதிய நண்பர்கள் எல்லொருக்கு இருக்கும்

என்றே நினைக்கிறேன்).



இந்த சூழ்நிலையில் என்னுடைய படைப்புகளில் உள்ள

குறைகளை விமர்சித்து ஒரு பகுதியில் விமர்ச்சனம் வந்து கொண்டு

இருப்பதை நான் பார்க்க நேரிட்டால் என் மன நிலை எந்த

அளவுக்கு பாதிக்கப்படும் என்று அந்த சோகத்தை எனக்கே

நினைத்து பார்க்க கஷ்டமாக இருக்கிறது.



இந்த மன்றத்தில் மூத்த உறுப்பினராக சேர்ந்து பல

படைப்புகளை படைத்த தங்களைப்போன்றவர்களுக்கு

வேண்டுமானால் குறைகளை ஏற்றுக்கொள்ளும் மன நிலை

இருக்கலாம் ஆனால் என்னைப்போன்ற நேற்றைய

உறுப்பினர்களுக்கு குறைகளை ஏற்றுக்கொள்ளூம் மனநிலை

அவ்வளவு எளிதில் அமையாது என்பதே என் கருத்து.



மற்றபடி இந்த மன்றத்தில் ஏற்ப்படும் அன்றாட தவறுகளை

பாசபினைப்போடு சுட்டிக்காட்டும் செயல் எல்லாப் பகுதிகளிலும்

நடந்துகொண்டுதான் இருக்கிறது இதை யாரும் தவறாக எடுத்துகொள்வதும்

இல்லை. அப்படி தவறாக எடுத்துக்கொள்ள நேரிட்டாலும்

தவறுகளை சுட்டிக்காட்டியவர் தன் அடுத்த பதிப்பில்

நான் சுட்டிக்காட்டிய விதம் தவறு என்றால் மன்னித்துவிடுங்கள்

என்று கேட்டுக்கொள்ளும் நல்ல பக்குவமும் இருக்கிறது.



ஆனால் இதை பெரிய ஆலோசனையாக வாக்குவாதமாக எடுத்து

விவாதித்து அதை பலபேர் சரி என்று சொல்லும் பக்குவம் வந்துவிட்டால்

பாதிக்கப்பட்டவர் சொல்லாமல் கொள்ளாமல் கானாமல் போய்விட

நாமே காரணமாகிவிடுவோம்.



அதன் பிறகு அதுவரை அந்த பாதிக்கப்பட்டவர் மன்றத்திற்க்கு

பட்ட பாடு செயல் இழந்து போய்விடும்.



இது என் மனதில் பட்ட தனிப்பட்ட கருத்து........



மற்ற நண்பர்களின் விமர்சனங்களையும் எதிர்பார்க்கிறேன்.

முத்து
10-09-2003, 09:28 PM
அன்பு.. நீங்கள் சொல்வதும் ஒரு வகையில் சரிதான்..... ஏனென்றால் தமிழ்மன்றத்தில் உள்ள பெரும்பாலோனோர் தமிழில் பெரும் புலமை படைத்தவர்களோ அல்லது பெரும் படைப்பாளிகளோ அல்லர்.... இன்னும் சொல்லப்போனால் தமிழை பள்ளி அளவில் மட்டும் பயின்றோர் மிகப்பெரும்பாலானோர்...



ஆனால் இங்கு மிகச் சில சிறந்த படைப்பாளிகளும் இருக்கலாம் .. எனவே படைப்பின் விமர்சனம் என்பது சிறந்த படைப்பாளிகளின் ...



இன்னொரு வகையில் பார்க்கும்போது மன்றத்தின் பெரும்பானோர் தம் வாழ்க்கையில் முதன்முதலாய்ப் படைப்புக்கள் படைக்க ஆரம்பித்திருப்போராதலால்.. அததகையோரின் படைப்புக்கள சிறு குழந்தையின் தளிர்நடையாய் இருப்பது இயற்கையே.. என்றாலும் நாம் சிறு குழந்தையின் நடையைப் பாராட்டுவதில்லையா... அதைக்கண்டு மகிழ்வதில்லையா ....



தள்ளாடி நடக்கும் குழந்தையின் தளிர் நடையையும் பாராட்டி மகிழ்கிறோம் .... ஒலிம்பிக் ஓட்டப்போட்டியில் தங்கப் பதக்கம் பெற்ற வீரரையும் பாராட்டி மகிழ்கிறோம்... அதுதான் நமது நிழற்படப் பதிப்புக்கள்... .. (இணையத்தில் தமிழ் இப்போதுதான் தன் தளிர்நடையைத் தொடங்கியிருக்கிறது என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது... )



பாராட்டுவதில் பலன் உண்டு.. எனவே யாரையும் பாராட்டுவதில் தவறே இல்லை.. பாராட்டு அவர்களுக்கு மேலும் படைக்க உற்சாகத்தைக் கொடுக்கும்.... ஆனால் விமர்சனமும் அதுபோல் ஆரம்ப நிலைப் படைப்பாளிகளுக்கு உற்சாகமளிக்குமா... மேலும் சிறப்பாய் படைக்கத் தூண்டுமா.. என்பதுதான் கேள்வியே..



ஓட்டவீரரின் ஓட்டத்தை ஓட்டத்தில் அனுபவமிக்கோர் விமர்சிக்கலாம்.... அது அவரின் திறமையைக் கூட்ட உதவலாம்.... அதுபோல குழந்தையின் தளிர்நடையை விமர்சிப்பது குழந்தைக்கு உதவுமா.. அல்லது நடக்க உற்சாகத்தைக் கூட்டுமா என்று தெரியவில்லை...

சேரன்கயல்
12-09-2003, 11:05 AM
அண்ணன் இக்பாலின் கருத்தே என்னுடையதும்...

இளசு
13-09-2003, 10:34 AM
இளவல் ராமின் ஆலோசனை ஒட்டி எழுந்த

எல்லோர் கருத்தையும் ஆழ்ந்து படித்து வருகிறேன்...நன்றி அனைவருக்கும்.

இன்னும் பல அறிவார்ந்த சான்றோர்கள் கருத்துகளுக்கு காத்திருக்கிறேன்..

குறிப்பாய் பாரதி, ஆரென், அண்ணல்,லாவண்யா, பிஜிகே,இசாக், கரவையார்,கண்ஸ், மதுரைக்குமரன், அஞ்ஞானி, வந்தியத்தேவன், அனுஷாஜாஸ்மின்,அருள்மொழிவர்மன், அழகன், குமரன், தமிழ்குமரன், நிலா, ஹமாயூன்,காரைக்குடியான், செழியன், குருவிகள்., இக்பால், இப்படி....

பாரதி
14-09-2003, 09:10 AM
அன்பு அண்ணா, உங்கள் பதிவைக் கண்டேன்.



தனிப்பட்ட முறையில் என்னுடைய எண்ணம் - கண்டிப்பாக எதிர்மறை விமர்சனம் வேண்டும் என்பதே. காரணம் படைப்பாளிக்கு தான் படைத்த படைப்பைக் கண்டு மகிழத்தான் தோன்றும். சில திருத்தங்களுக்குப் பின் சிறப்பான படைப்பைக் கொடுத்திருப்பதாக அவருக்குத் தோன்றும். ஆனால் அது எல்லா படைப்புகளிலும் பிரதிபலிக்காது. அந்த நேரங்களில் விமர்சனங்களானது படைப்பில் உள்ள குறைகளை எடுத்துக் காட்டுமானால், அது அந்த படைப்பாளி மேற்கொண்டு படைக்கும் படைப்புகளை சீராக அமைக்க உதவும். ஒருவனுடைய மிகப் பெரிய பலம் என்னவென்றால் அவனுடைய பலவீனம் என்ன என்பதை அறிந்த்திருப்பதுதான். ஒரு வேளை உணர முடிய வில்லை என்றால் விமர்சனங்கள் மூலம் அதை இனங்கண்டு கொள்ள முடியும். அந்த வகையில் விமர்சனங்கள் மிகவும் வரவேற்கப் பட வேண்டியவை என்பதே என் கருத்து.



அதே நேரத்தில் சாதாரணமாக மனித இயல்பு என்னவெனில் நம்மை யாரேனும் குறை கூறினால் உடனே நமக்கு தோன்றுவது - இவர் யார் நம்மை குறை கூற? - என்பதுதான். உடனே உணர்ச்சி வேகம் அதிகமாக தன் விளக்கம் என்கிற பெயரில் எதிர்தாக்குதல் நடத்துவதுதான் பொதுவான இயல்பாக இருக்கிறது. சற்று ஆழ்ந்து சிந்தித்து விமர்சனத்தில் கண்ட குறைகள் உண்மையானவைதானா, இல்லையா என்பதைக் கண்டறிந்த பின் உண்மையெனில் திருத்திக்கொள்ளவும், உண்மையில்லை எனில் எந்த விதத்தில் அது சரி இல்லை என்பதை மனங்கோணா முறையில் எடுத்துரைக்கும் போது அந்த படைப்பாளி ஒரு படி மேலே உயருகிறான் என்பதே உண்மை.



விமர்சகன் படைப்பாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இலக்கணங்கள் அறிந்தவனாக இருக்க வேண்டியதும் இல்லை. ஆனால் விமர்சிக்கும் போது வேண்டியவரா, வேண்டாதவரா என்பதை பற்றி ஆராயாமல், படைப்பாளியின் இன்னல்களை சற்றே கவனத்தில் எடுத்துக் கொண்டு, நடுநிலைமையுடன் குறைகளை எடுத்துக்கூற வேண்டும். நம்மில் எத்தனை பேர் அவ்விதம் செய்கிறோம் என்பது தெரியவில்லை - நான் உள்பட. நம்முடைய கருத்தை தெரிவிக்க சுதந்திரம் உண்டென்றாலும், பொறுப்புணர்வுடன் பதிப்புகளை பதிவு செய்தல் வேண்டும்.



அடுத்து பாராட்டுக்கள் நிச்சயம் ஒருவரை ஊக்கப்படுத்தும் என்பதும் உண்மையே. ஆனால் போலியான பாராட்டு என்றைக்கும் தேவை இல்லை. மன்றத்தில் அடியெடுத்து வைக்கும் புதியவர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில் ஆரம்பத்தில் பாராட்டுவதில் தவறு ஒன்றும் இல்லை. ஆனால் காலப்போக்கில் அவர்களுடைய படைப்புகளையும் உரிய முறையில் விமர்சிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்.



நம்முடைய மன்றத்தில் சில மன்றங்களில் வரும் விமர்சனங்கள் சிறப்பான முறையில் பட்டி மன்றம் போலவும் நடைபெற்று வருகிறது. ஆனால் சில சமயங்களில் படைப்பாளிகள் விமர்சிக்கப்பட்ட போது குட்டிக்கலவரமே நடந்து அதனால் சில நண்பர்கள் மன்றத்திற்கு வருவது குறைந்து போனதையும், படைப்புகள் படைக்காமலிருப்பதையும் நம்மில் அனேகம் பேர் நேரிடையாக கண்டதை இப்போது உங்கள் நினைவுக்கு வேதனையுடன் கொண்டு வருகிறேன்.



முறையற்ற விமர்சனங்களை கண்காணிப்பாளர்கள் உரிய முறையில் நீக்க வேண்டும். தயவு தாட்சண்யம் பார்க்கக்கூடாது.



அண்ணன், அக்கா, தம்பி, தங்கை, சித்தப்பு என்ற அளவிற்கு பாசத்துடன் இந்த மன்றத்தை வலம் வரும் நண்பர்களின் விமர்சனங்களை 'நம்முடைய உடன்பிறப்புதானே சொன்னான் - ஏன் சொன்னான்' என்கிற முறையில் அணுகினால் மன்றம் மேலும் சிறப்பு பெறும். படைப்புகளின் தரம் கூடும். படைப்பாளிகள் பட்டைத்தீட்டப் படுவார்கள்.

இக்பால்
14-09-2003, 10:40 AM
எனக்கு இப்பொழுது ஒரு எண்ணம் எழுகின்றது. இனிவரும்

ஒவ்வொரு நிழற்பட பதிவுகளும் குறைகளைச் சுட்டிக்

காட்டும் பதிப்பாக எண்ணிக் கொண்டு இந்த விவாதம்

போய்க் கொண்டு இருக்கிறது. அவரவர் இயல்புகேற்ப

நிழற்பட பதிவுகளைத் தரட்டும். ஆனால் அடுத்த நிழற்பதிவு

மட்டும் நண்பர் ராமையே குறைகளைச் சுட்டிக் காட்டி,

உங்கள் கருத்துக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப ஒரு பதிவைத்

தருமாறுக் கேட்டுக் கொள்கிறேன். ஆகையால் எல்லோரும்

நண்பர் ராமின் கண்டனங்களை எதிர்கொண்டு, தக்க

காரண பதில் கொடுத்தோ, அல்லது அவர் சொன்னபடி

தவறெனப் பட்டால் திருத்திக் கொண்டோ தொடர்ந்து

காணாமல் போகாமல் மன்றத்திற்கு வந்து முன்னிலும் அதிக

ஆர்வம் காட்டி ஆதரவு தந்து எங்களைப் பிரியாமல் இருக்க

வேண்டிக் கொள்கிறோம். கண்காணிப்பாளர் இளசு அண்ணா

இதற்கு ஏற்பாடுச் செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

-அன்புடன் இக்பால்.

anbu
14-09-2003, 02:15 PM
இக்பால் அண்ணா சொல்வதுபோல நிழற்படப் பதிவு என்பது

குறைகளை சுட்டிக்காட்டும் பதிவாகவே இருக்கலாம்.

ஆனால் அந்த நிழற்படப் பதிவுகளை கண்காணிப்பாளர்கள்

மட்டும் ஒவ்வொரு மாதமும் உருவாக்கினால் யாருடைய

மனதும் புண்படாத வகையில் இருக்கும் என நினைக்கிறேன்.

இக்பால்
15-09-2003, 05:03 AM
அச்சச்சோ...அன்பு அன்புத்தம்பி... நான் அப்படி சொல்லவில்லை.

அவர் அவர் தன்மைக்கேற்பத்தான் கொடுக்கச் சொல்லி இருக்கிறேன்.

ராம் வேண்டுமானால் குறைகளைச் சுட்டிக் காட்டி ஒரு பதிவு

தரட்டும் என்று சொல்லி இருக்கிறேன். எதற்கும் இன்னொரு முறை

படியுங்களேன்.-அன்புடன் அண்ணா.

anbu
15-09-2003, 08:01 AM
எனக்கு இப்பொழுது ஒரு எண்ணம் எழுகின்றது. இனிவரும்

ஒவ்வொரு நிழற்பட பதிவுகளும் குறைகளைச் சுட்டிக்

காட்டும் பதிப்பாக எண்ணிக் கொண்டு இந்த விவாதம்

போய்க் கொண்டு இருக்கிறது.



ஆமாம் இக்பால் அண்ணா....நீங்கள் அப்படி சொல்லவில்லை... மன்னிக்கவும்.



சரி நானே சொல்கிறேன் !!



இனி நிழற்படப் பதிவுகளில் மட்டும் குறைகளை சுட்டிக்காட்டலாம் தவறில்லை !!



(நண்பர் ராம்பால் அவர்கள் மன்றத்தின் குறைகளை சுட்டிக்காட்டவேண்டும் என்று

கேட்டுக்கொண்டதனால்...)




அவரவர் இயல்புகேற்ப

நிழற்பட பதிவுகளைத் தரட்டும். ஆனால் அடுத்த நிழற்பதிவு

மட்டும் நண்பர் ராமையே குறைகளைச் சுட்டிக் காட்டி,

உங்கள் கருத்துக்கும் எண்ணத்திற்கும் ஏற்ப ஒரு பதிவைத்

தருமாறுக் கேட்டுக் கொள்கிறேன்.



அடுத்த நிழற்பதிவு மட்டும் நண்பர் ராம்பால் பதியவேண்டும் என்று சொன்னதனால் என்னுடைய சிந்தனையில் வந்தது என்னவென்றால் இனி ஒவ்வொரு நிழற்படபதிவையும் கண்காணிப்பாளர்களே குறைகளை சுட்டிக்காட்டுவதற்கென்றே உருவாக்கினால் மன்றத்தின் குறைகளை நீக்கி அனைத்து நண்பர்களுக்கும் அவரவர் குறைகளை புரியவைத்து அடுத்து வரும் பதிப்புக்களையும் சிறப்பாக்க உதவுமே என்பதுதான் !!



இதை ஏன் கண்காணிப்பாளர்கள் செய்யவேண்டும் என்று சொல்கிறேன் என்றால் அவர்களைத்தவிர மற்றவர்கள் எல்லோருடைய குறைகளையும் சுட்டிக்காட்டுவது என்பது இயலாத காரியம். (மன்றத்தில் தேவை இல்லாத பிரட்ச்சனைகளைத்தான் உருவாக்கும் என்பது என் எண்ணம் )

இக்பால்
15-09-2003, 08:07 AM
அன்புத் தம்பியின் கருத்து தெளிவாகவும் நன்றாகவும் இருக்கிறது.

ஆனால் ஒரு பிரச்னை....அன்பையும் கண்காணிப்பளராக பதவி

உயர்வு செய்ய வேண்டி வரலாம். பரவாயில்லையாங்க தம்பி?

-அன்புடன் அண்ணா.

anbu
15-09-2003, 08:26 AM
ஐயோ ! இக்பால் அண்ணா அப்படி ஒரு பெரிய பதவிக்கு எல்லாம் நான் கொஞ்சம் கூட பொருத்தம் இல்லை.....................................



இந்த மன்றத்தை ஒரு சாமாணியனாக சுற்றி வருவதில் தான் எனக்கு சந்தோசம்.



நாம் நம் நண்பர்கள் படைக்கும் எந்த படைப்புக்கும் எளிதாக பாராட்டையும் விமர்ச்சனத்தையும் கொடுத்துவிட்டு தப்பித்துவிடுகிறோம். ஆனால் நமது கண்காணிப்பளர்கள் ஒருவர் படைத்த படைப்புக்கு விமர்ச்சனம் மற்றும் பாராட்டு கொடுக்கவேண்டும் என்றால் ரெம்பவும் யோசிக்கிறார்கள். ஏனென்றால் கண்காணிப்பாளர்கள் பாராட்டு கொடுத்த ஒரு படைப்பு பின்பு ஒரு நாள் சர்ச்சையை உருவாக்கினால் இந்த படைப்புக்கு நமது கண்காணிப்பாளர்கள் எப்படி ஆதரவு கொடுக்கிறார்கள் என்று மற்ற சாதாரண நண்பர்கள் கேட்டுவிடக்கூடாது என்ற முன் ஜாக்கிரதைதான் !!

இளசு
17-09-2003, 11:08 PM
இங்கு கலந்து கருத்து சொன்ன அனைவருக்கும் நன்றி.

கரிசனம் எல்லாருக்கும் ஒன்றே!

இனிப்பு மருந்தா, அறுவை சிகிச்சையா

எது நல்ல பலனளிக்கும் என்ற அலசலில்

கருத்து மாறுபாடு என்பதைவிட

மன்றம் செழிக்கவேண்டும் என்ற

கவனமே எல்லார் பதிவிலும்.

நெகிழ்கிறேன்..



இளவல் இக்பால் சொன்னதுபோல்

சுழற்சி முறை வாய்ப்பு இது என்பதால்

அவரவர் பார்வையில், பாணியில்

பதிய விடுவதே நல்ல வழி என எண்ணுகிறேன்..



பேச்சுவாக்கில் இம்மாதம் முடியப்போகிறது...



ஆகஸ்ட் 1 முதல் செப் 15 வரையிலான

நிழற்படப் பதிவு செய்ய முன்வரும்

அடுத்த தன்னார்வ உறுப்பினர் யார்?

அன்பாய் அழைக்கிறேன்...

poo
18-09-2003, 02:20 PM
இந்தமுறை நிறையவே யோசிப்பார்கள் நண்பர்கள்..



(அநேகமாய் இக்பால் அண்ணா செய்வார் என நினைக்கிறேன்..(ம்ம்..போட்டுக்கொடுத்துட்டேன்!!)

இ.இசாக்
18-09-2003, 04:42 PM
இளசு அண்ணா

கருத்து சொல்ல வேண்டியவர்கள் பட்டியலில் என் பெயரையும் சேர்த்திருந்தீர்கள்.என் தனி கருத்தை பதியவேண்டுமா என யோசித்தேன். தாமதமாகிவிட்டது.

தாமதமான கருத்துக்கு வருந்துகிறேன்.

என்னைப் பொருத்தவரை விமர்சன பார்வையுடன் நிழற்படப் பதிவுகள் வருவது வரவேற்க வேண்டியதுதான்.

அந்த விமர்சன பார்வை படைப்பாளியை மிக தரமுள்ளவனாக வளர்த்தெடுக்க உதவும்.

நண்பர்கள் குறிப்பிட்டது போல எத்தனை படைப்பாளிகள் இதை இலகுவாக தன் வளர்ச்சிக்கான ஆலோசனையென எடுத்துக்கொள்வார்கள் என்பது யோசிக்க வேண்டிய ஒன்று!

இது விசயத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவம் ஒன்று.

நண்பர்களின் ஆக்கங்களுக்கு கருத்து சொல்லும் பழக்கத்தை யோசிக்க வைத்துவிட்டது.

அமீரகத்தில் கவிஞர்களுக்கான அமைப்பு உருவாக்கப்பட்ட புதிதில்

ஒரு நண்பர் கவிதை எழுதி எடுத்து வந்து கருத்து கேட்டார்.

நன்றாக உள்ளது என்று சொன்னேன்.(ஊக்கப்படுத்துவதற்காக)

திரும்பவும் வந்தார்,

உள்ளபடியே அவரின் நலன் கருதி சிலவிளக்கங்களை சொல்லி

உன் எழுத்தில் சிறுமாற்றம் தேவை என சொன்னேன்.

அவ்வளவுதான் அதன் பிறகு என்னை சந்திப்பதேயில்லை.

அமைப்பு நிகழ்ச்சிக்கும் வருவதில்லை.

என்ன செய்வது இப்படியான படைப்பாளிகளை வைத்துக்கொண்டு.

இருந்தாலும் நமது போலியான பாராட்டு தவறான தரத்தோடு படைப்பாளிகள் வளர வழிவகுக்கும்.

ஒன்று செய்யலாம்.

மன்றத்தில் படைப்புகளை முன்வைக்கும் நண்பர்கள்.

என் படைப்பு குறித்த வெளிப்படையான விமர்சனம் கொடுங்கள் என அறிவித்தால்

அந்த படைப்பாளியின் ஆக்கங்கள் குறித்து நண்பர்களும், நிழற்படப் பதிவிலும் வெளிப்படையான விமர்சனத்தை முன்வைக்கலாம்.

இளசு அண்ணாவும் நண்பர்களும் யோசிக்கலாம்.



(எப்படியோ தாமதமாகவேனும் அண்ணனின் அன்புக் கட்டளைக்கு பணியாற்ற இயன்றதே!)

இளசு
29-09-2003, 09:09 PM
இந்தமுறை நிறையவே யோசிப்பார்கள் நண்பர்கள்..


(அநேகமாய் இக்பால் அண்ணா செய்வார் என நினைக்கிறேன்..(ம்ம்..போட்டுக்கொடுத்துட்டேன்!!)



இன்னுமா யோசிக்கிறார்கள்???

சுழற்சி முறையில் பலர் பார்வையில் பதிய ஆசைப்படுகிறேன்.

என்ன இளவல் இக்பால் அவர்களே... தயாரா?

இக்பால்
30-09-2003, 07:37 AM
ஆஹா... பூ தம்பி போட்டுக் கொடுத்தது ... வேலை செய்து விட்டதா?



ஆகையால் இளசு அண்ணா வீசிய பந்து என் மேல் நின்று விட்டதா?



சரிதான்... வெள்ளி, சனி விடுமுறை. அன்று முடித்து விடுகிறேன்.



உங்கள் பார்வைக்கு ஞாயிறு அல்லது திங்களன்று தயாராக இருக்கும்.



சரீங்களா பூ தம்பி...இளசு அண்ணா.



பூ தம்பி ... நீங்கள் சொல்லி கேட்காமல் இளசு அண்ணா சொல்லி



கேட்கிறேன் என நினைக்கக் கூடாது. வாடிக்கையாளர் பிரச்னைகளுக்கு



தீர்வு காணும் வேலையில் இருப்பதால் தொடர்ச்சியாக நேரம் ஒதுக்குவது



என்பது எனக்குச் சிரமம். பெரிய கூட்டம் எப்போவுமே அண்ணாவுக்காக



வேலை செய்யும் இடத்தில் காத்திருப்பது ஒரு காட்சி. விரைவில் தப்பிக்க



நினைக்கிறேன். Tension Job. உடல் நலம் போய் விடும். அதனால்தான்



நீங்கள் சொன்னபோது தவிர்த்தேன். ஆனால் இப்பொழுது அண்ணா



சொல்லி விட்டார். இனி மரியாதையாக இருக்காது. அதனால்தான்.



அவர் நமக்காக எவ்வளவு நேரம் ஒதுக்குகிறார். ஆனால் நினைவில்,



நெஞ்சத்தில் அதிக நேரம் ஒதுக்கியது இந்த 50 நாட்களில் அதிகம்



பூ தம்பிக்குத்தான். இது உண்மை. இப்போ ஓகே யா? சிரிங்க!



-உங்கள் இக்பால்.

poo
30-09-2003, 10:18 AM
எனக்கு எந்த வருத்தமும் இல்லையண்ணா...



அலை படித்தீர்கள் அல்லவா..



நான் சொன்னால் என்ன என் அண்ணா சொன்னால் என்ன?!!



அதிக ஆவலாய் இருக்கிறது..



நிச்சயம் மாறுபட்ட நிழற்படபதிவுதான் தங்களுடையதென நினைக்கிறேன்!!

இளசு
30-09-2003, 05:33 PM
என் மகிழ்ச்சியும் நன்றியும் இளவல் இக்பால் அவர்களுக்கு...



என் பொருட்டு எது செய்தாலும் என் தம்பிக்கு வருத்தம் வாராது இளவலே..



அடுத்த வாரத்துக்கு இப்போதே தயாராகிவிட்டேன்...

இளசு
29-10-2003, 05:13 PM
இளவல் இக்பால் அவர்களின் பதிவைத்தொடர்ந்து

இம்முறை நிழற்படப் பதிவு தர முன்வருபவர் யார்?

முன்னமே என் பாராட்டும் நன்றியும் அந்த நபருக்கு.

இக்பால்
30-10-2003, 09:57 AM
நம் மன்றத்தில் அழகிய முறையில் அலசி ஆய்வு செய்து நல்ல முடிவுகளைக்



கொடுக்கும் நண்பர் நண்பனை அடுத்த நிழற்பட பதிவைக் கொடுக்க நான்



முன் மொழிகிறேன்.-அன்புடன் இக்பால்.(மன்றத்தின் சார்பாக )

சேரன்கயல்
03-11-2003, 05:48 AM
option ... š¢...
ʺ Ӿ š ﺢġ...

இக்பால்
03-11-2003, 11:34 AM
.

ĢŢ
. ....

-Ҽ .

சேரன்கயல்
07-11-2003, 11:50 PM
...
ʺ Ӿ š Ȣ 츢...
Ţ á ý Ţ𼨾 츧 ɡ ...

இக்பால்
08-11-2003, 10:32 AM
θȡá? Ţ¡?

. 즸

츢.-Ҽ .

poo
08-11-2003, 11:20 AM
நண்பர் நண்பன் மட்டும் நிழற்படப்பதிவு தருவாரேயானால் அதைப்படித்து முடிக்க ஒரு வாரத்திற்குமேல் ஆகுமென்பது மட்டும் நிச்சயம்!!

(மனுஷர் ஒரு பதிவுக்கு பதில் எழுதுவதை படிக்கவே 10 நிமிடம் ஆகிறது.. அந்தளவு ஒன்றி ஆழ்ந்து படிக்கவேண்டியிருக்கும்!)

இக்பால்
08-11-2003, 11:23 AM
ஆகையால் நவம்பர் மாத நிழற்படப் பதிவு பொறுப்பு சேரன்கயல் தம்பியிடம்

சென்று சேர்கிறது. நண்பர் நண்பனுக்கு ஒரு தனிக்கடிதம் எழுதலாமா?

-அன்புடன் இக்பால்.

Nanban
10-11-2003, 06:40 AM
இப்பொழுது தான் பார்த்தேன்.........



ஒரு வாரம் கழியட்டும்........



நிழற்படப் பதிவுகளை பதிந்து விடுகிறேன்........



நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.........



என் போக்கில் நான் செய்கிறேன்.......



திருப்தி அடைவீர்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது........

இக்பால்
10-11-2003, 07:08 AM
திருப்தி அடைவீர்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது........





எங்களுக்கும் தெரியாது. பார்த்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும்.

எதிர்பார்ப்புகளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி நண்பர் நண்பன் அவர்களே.

-அன்புடன் அண்ணா.

poo
10-11-2003, 07:33 AM
மிக மிக நன்றி நண்பன் அவர்களே!!



இந்த வெற்றியை அங்கே கொண்டாடிவிட்டேன்!!!

poo
10-11-2003, 07:36 AM
திருப்தி அடைவீர்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது........





எங்களுக்கும் தெரியாது. பார்த்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும்.





அண்ணா..நண்பனின் அனைத்து அலசல்களையும் படித்திருக்கிறீர்கள் அல்லவா?!! (அப்படியுமா சந்தேகம்?!!)

இக்பால்
10-11-2003, 07:44 AM
நான் என்ன செய்யட்டும் தம்பி. நண்பர் நண்பன் தான் சந்தேகத்தைக்

கிளப்பி விட்டார். நம்பிக்கை இருக்கிறது என்னவோ உண்மைதான்.

-அன்புடன் அண்ணா.

சேரன்கயல்
10-11-2003, 08:46 AM
நண்பன் முடித்த பிறகு நான்...

பிரியானி சாப்பிட்ட பிறகு உப்புமா...

நான் காலி...

இக்பால்
10-11-2003, 09:31 AM
எப்பவும் பிரியாணி ... உடல் ஒத்துக் கொள்ளாதே.



காலையில் உப்புமாவை மனசு விரும்புதே.-அன்புடன் அண்ணா.

சேரன்கயல்
11-11-2003, 08:11 AM
உப்புமாவோட சட்னி என்னனும் சொல்லிடுங்க இக்பால் அண்ணே...

ரெடி பண்ணிடலாம்...

puppy
11-11-2003, 08:19 AM
உப்புமாவுக்கு சர்க்கரை தான் சேரன் கயல் நல்லா இருக்கும்......ஆனால் எனக்கு உப்புமா பிடிக்காது..நல்லா மிளகு போட்டு பொங்கல் செய்யுங்க

உறைப்பா ......அப்படியா பாசிபருப்பு சாம்பார் வச்சுடுங்க.......கொஞ்சம் கெட்டி தேங்காய் சட்னி......

சேரன்கயல்
11-11-2003, 08:23 AM
சூப்பர் ஐட்டமாச்சே...

எனக்கும் ரொம்ப பிடிக்கும்...மிளகுப் பொங்கல், தேங்காய் சட்னி, மெதுவடை, சாம்பார்...

சூடான ஒரு காப்பி....

அடடே...

Nanban
14-11-2003, 06:07 AM
இப்பொழுது தான் பார்த்தேன்.........



ஒரு வாரம் கழியட்டும்........



நிழற்படப் பதிவுகளை பதிந்து விடுகிறேன்........



நிறைய எதிர்பார்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறீர்கள் போலிருக்கிறது.........



என் போக்கில் நான் செய்கிறேன்.......



திருப்தி அடைவீர்களா, இல்லையா என்பது எனக்குத் தெரியாது........



செய்தாகி விட்டது - இனி, இங்கு பங்கு கொண்ட அனைவரும் அங்கு வந்து படிக்க வேண்டும்..........

இக்பால்
06-12-2003, 03:21 PM
மன்ற உறுப்பினர்களே...



நவம்பர் மாத நிழற்படம் சேரன்கயல் ஏறக்குறைய முடித்து எந்த நேரமும்

வெளிவரும் நிலையில் இருப்பதாக செய்திகள் கிடைப்பதால் டிசம்பர் மாத

நிழற்படம் பற்றி சிந்திக்க வேண்டியிருக்கிறது.



லாவண்யா தங்கை அவர்க்ளை புத்தாண்டு நிழற்படத்தை தர முன்மொழிகிறேன்.



அருமையான நடைகொண்டு சினிமா விமர்சனங்களைத் தரும் தங்கை, மேலும்

தன் சிறுவயது நினைவுகளை மிகச் சிறந்த வகையில் கடைசிவரை ஆர்வம்

குறையாமல் படிக்கச் சொல்லும் வகையில் சொல்லும் லாவண்யாத் தங்கை

ஒரு நிழற்படம் தராவிட்டால் நாம் ஏதோ ஒன்றை இழந்தவர்களாக எப்போதும்

உணர்வோம். என்ன தங்கை உங்கள் அண்ணாவுக்கு சரி சொல்லுவீர்களா?



அன்புடன் அண்ணா.

lavanya
06-12-2003, 03:31 PM
கவுத்திட்டீங்களே அண்ணா.....



நிழல்படம் தருமளவுக்கு எனக்கு இன்னும் 'விஷயம்' போறாதே அண்ணா...!



( அண்ணா கொஞ்சம் கிட்ட காத கொடுங்க ...இப்ப கூட ஒண்ணும் மோசம் இல்லை...சத்தமே இல்லாம இந்த பதிவை மாத்திடுங்க.... நாம ரெண்டுபேருக்குள்ளே பேசி கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணிக்குவோம்)

poo
06-12-2003, 04:06 PM
ஆமாம்..ஆமாம்... இவங்கதான் தரனும்!!!



(தொடர்ந்தார்ப்போல இதுக்குதான் தலையை காட்டக்கூடாதுங்கோவ்!!!....)

இக்பால்
06-12-2003, 04:32 PM
லாவண்யா தங்கை பூ தம்பி கவனித்து விட்டாரே. இப்பொழுது என்ன

செய்வது? என் தங்கை நல்ல அறிவு என எனக்குத் தெரியுமே!

சரி சொல்லுங்கள் தங்கையே!-அன்புடன் அண்ணா.

இளசு
06-12-2003, 11:41 PM
....



நிழல்படம் தருமளவுக்கு எனக்கு இன்னும் 'விஷயம்' போறாதே அண்ணா...!







பெரிய தம்பி : டேய், லாவ் சொல்றது நிஜமா? "விஷயம்" போறாதவங்க

நிழற்படம் தரமுடியாதா?



சின்ன தம்பி : அப்படி சொல்ல முடியாதுண்ணே.. ஏன்... முன்னாடி நீங்களே

தந்திருக்கீங்களே..

சேரன்கயல்
07-12-2003, 02:06 AM
அண்ணன் இக்பாலின் அசைக்கமுடியாத நம்பிக்கையில் (???) நெகிழ்கிறேன்...

நிழற்படம் தயாராகிக்கொண்டிருக்கிறது...முன்னர் சொன்னபடி ஞாயிற்றுக்கிழமையான இன்று தந்துவிடுகிறேன்...

ஊடே கொஞ்சம் அலுவலக சிக்கல்கள் என்பதால் நேரம் மட்டும் தாமதப்படலாம்...

பொறுத்தருள வேண்டுகிறேன்...



அன்பு லாவ்ஸ்...

விஷயம் தெரிந்தவர்கள்தான் நிழற்படம் கொடுக்கவேண்டும் என்றால்...நான் எங்கே பொருந்தமுடியும் சொல்லுங்கள்...அதுவும் நீங்கள் அப்படி என் வரிசையில் வந்து நிற்கலாமா...உங்கள் வரிசை முன்வரிசை...நீங்கள் என்னோடும், வீர்சிங்கோடும் வந்து உட்காரமுடியாது...(தலை சும்மா ஒரு உதாரணத்துக்காக வீரை என்னோடு சேர்த்துகிட்டேன், கோச்சுக்காத தலை )

இக்பால்
07-12-2003, 03:45 AM
சேரன்கயல் தம்பி...அவசரமில்லை. அடுத்த மாதம் வந்து விடாமல் பார்த்துக்

கொள்ளுங்கள். அதுவுமில்லாமல் லாவண்யா தங்கை சொல்லவே வேண்டாம்.

சூப்பராக இருக்கும். நீங்கள் அதை ரசிக்க முடியாமல் போய் விடும்.

-அன்புடன் அண்ணா.

சேரன்கயல்
07-12-2003, 08:43 AM
அன்புள்ளங்களே...

சங்கமம் என்ற தலைப்பில் நிழற்படப் பதிவு செய்துள்ளேன்...

முதலில் பதிவுகளை அலசி எழுதியதைக் கண்டு திருப்தியில்லாத்தால்...உள்ளத்தின் ஆழத்திலிருந்து எழுந்த எண்ணங்களை...என்னுள் சில பாதிப்புகளை ஏற்றிய உள்ளங்களை இங்கே படம் பிடித்திருக்கிறேன்...தனித்தனியே இவர்களை படம்பிடிக்க இப்போது வசையில்லை எனவே எல்லோரையும் ஒரே பதிவில் பதியம் வைத்திருக்கிறேன்...என்றும் வாடாது இந்த மன்றத்தில் இவர்கள் மணம் வீசுவார்களாக...

பிழைகள் எழுத்திலும், கருத்திலும் இருந்தால் மன்னிக்கவும்....

இளசு
07-12-2003, 08:58 AM
இனிய சேரனுக்கு முதலில் நன்றியும் பாராட்டும்.

நிழற்படத்தை வாழ்த்துகள் பகுதிக்கு (மற்ற நிழற்படங்களுடன் )சேர்த்துவிடுகிறேன்.

"சங்கமம்" பற்றி என் எண்ணங்கள் பின்னர் விரிவாய்...

சேரன்கயல்
07-12-2003, 09:45 AM
நன்றி இனிய இளசு...

நான் எந்தப் பகுதியில் பதிவு செய்தேன் என்றுகூட பார்க்கவில்லை...

அப்படியே பிழைகளையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ளவும்...

poo
07-12-2003, 09:52 AM
நன்றி இனிய இளசு...
நான் எந்தப் பகுதியில் பதிவு செய்தேன் என்றுகூட பார்க்கவில்லை...
அப்படியே பிழைகளையும் கொஞ்சம் கவனித்துக்கொள்ளவும்......

சந்தோஷம் கண்ணை மறைக்கும்னு சொல்வாங்க சேரன்!!

இளசு
25-12-2003, 07:14 AM
இந்த மாத நிழற்படப் பதிவை லாவ் செய்ய நான் ஆட்சேபிக்கிறேன்.மாதம் முழுவதும் எங்கும் அவர் ஆதிக்கம். சொந்தப் படமாய்தான் அவரின் நிழற்படம் இருக்கும்.

சொல்லாமல் நீண்ட நாள் டீல் விட்ட தம்பி அன்புவை தண்டிக்க டிசம்பர் நிழற்படப் பதிவு பொறுப்பை அவரிடம் கொடுத்தால் என்ன?

puppy
25-12-2003, 07:17 AM
கண்டிப்பாக......லாவ்க்கு கொஞ்சம் ஓய்வு தேவை...........

anbu
25-12-2003, 07:30 AM
இளசு அண்ணா டிசம்பரில் எனக்கு வேலை அதிகம். நான் கணக்காளர் அயிற்றே. அதனாலே இந்த தடவை என்னை விட்டுடுங்க ப்ளீஸ்.....

puppy
25-12-2003, 07:31 AM
பாரதி தான் எனக்கு கொடுங்க எனக்கு கொடுஙக்ன்னு கேட்டுட்டு இருக்காரு...அவருகிட்டே கொடுத்துடாலாமே.....என்ன இளசு நான் சொல்றது.....

இளசு
25-12-2003, 07:33 AM
பாயிண்ட்டை புடிச்சீட்டீங்க பப்பி...

பாரதி, ஓக்க்கேவா?

இக்பால்
25-12-2003, 08:04 AM
? :)

பாரதி
26-12-2003, 12:33 AM
பப்பிக்கும் அண்ணனுக்கும் நன்றிகள். தற்போது உள்ள நிலைமையில் என்னால் அந்தப்பணியை சரிவர நிறைவேற்ற இயலாது என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் வாய்ப்பு கிட்டுமெனில் செய்வதற்கு காத்துக்கொண்டிருப்பேன். நன்றி.

இளசு
26-12-2003, 06:45 AM
நன்றி பாரதி...சூழல் சாதகமானதும் தானே வந்து ஆஜர் தரணும் சரியா?

லாவ், அன்பு, பாரதி, நண்பன், சேரன்கயல் தவிர மற்றவரில் ஒருவர் முன்வர அழைக்கிறேன்.

சனவரி முதல் இருவாரங்கள் (பொங்கல் வரை) நேரம் எடுத்துக்கலாம்.

நிலா ..?

பாரதி
26-12-2003, 06:54 AM
நிச்சயம் அண்ணா..

poo
26-12-2003, 01:47 PM
நிலா...

நல்ல தெரிவு...

இக்பால்
27-12-2003, 07:26 AM
நிலா தங்கை... நீங்கள் தயாரா?

லாவண்யா தங்கைக்கு நன்றிகள். நீங்கள் ஒரு முறை கண்டிப்பாக

நிழற்படம் தர வேண்டும். உங்கள் நடை மிக்க அழகாக இருக்கிறது.

அன்பு தம்பி... வருட கணக்கு சிறப்பாக முடிக்க வாழ்த்துக்கள்.

பாரதி தம்பி... அடடா... நிச்சயம் விரைவில் ஒரு நிழற்படம் தாருங்கள்.

-அன்புடன் அண்ணா.

நிலா
27-12-2003, 08:58 PM
நிலா ..?




நிலா...
நல்ல தெரிவு...


பாசமா பூ!
தலை சொல்லி செய்யாமலா?காத்திருந்து அட்டாக் பண்ணமாதிரித்தெரியுது
ஆனால் இது நான் எதிர்பார்த்த அட்டாக்கேஏஏஏஎ
பொங்கல் வரை நேரம் எடுத்துக்கொண்டால் அடுத்த நிழற்படப்பதிவு வர மேலும் தாமதமாகும்.இதைக்கருத்தில் கொண்டே இம்மாதமே இதைப்பதித்தேன்.அடுத்த நிழற்படப்பதிவு ஜனவரிக்கே சொந்தமாயிருக்கும்.
எல்லோரும் ரவுண்டுகட்டி(முக்கியமாக சேரன்,இக்பால்,நண்பன்,இளசு) அதப்பார்க்கப்போறாப்ல இருக்கு!

இளசு
27-12-2003, 11:59 PM
நன்றி நிலா

அசரவைக்கும் வேகம்.. இது ஒரு மன்றச் சாதனை.. பாராட்டுகள்..

இக்பால்
28-12-2003, 03:55 AM
தங்கையின் நிழற்படத்தைத் தேடிக் கொண்டிருக்கிறேன். இன்னும் பார்க்க

இல்லை. அவ்வளவு அவசரம். நன்றி நிலாத் தங்கை.

poo
28-12-2003, 06:26 AM
நினைத்ததை நடத்தியே முடிப்பவள்(ர்) நான்..நான்.. என நீங்கள் பாடுவது கேட்கிறது நிலா!!!

வாழ்த்துக்கள்.. எங்கும் வேகம்..எதிலும் வேகம்.. ஆனாலும் நிதானம்!!

சேரன்கயல்
28-12-2003, 03:12 PM
நிலாவா...கொக்கா...!!

இக்பால்
28-12-2003, 03:45 PM
இரண்டுமே வெள்ளைதாங்க தம்பி....

இளசு
03-01-2004, 07:55 PM
இதுவரை வந்த அனைத்து நிழற்படப் பதிவுகளும் இன்று முல்லை மன்றத்தில் உள்ள

"உங்கள் சந்தேகங்கள், நமது தளம் " பிரிவுக்கு மாற்றப்பட்டன.

இனி வரும் நிழற்படப்பதிவுகளும் அங்கே தொடர்ந்து பதியப்படும்.

நிலா
04-01-2004, 02:19 AM
நிழற்படப்பதிவுகள் மற்றும் மாத நிழற்படப்பதிவுகளைத்தனித்தலைப்பாக்கி முல்லை மன்றத்தில் அமைத்தால் புதுவரவுகளுக்கும்,மன்றம் வரநினைப்பவர்களுக்கும் நம்மைப்பற்றி அறிய வசதியாய் இருக்குமே!?

aren
04-01-2004, 03:12 AM
நிழற்படப்பதிவுகள் மற்றும் மாத நிழற்படப்பதிவுகளைத்தனித்தலைப்பாக்கி முல்லை மன்றத்தில் அமைத்தால் புதுவரவுகளுக்கும்,மன்றம் வரநினைப்பவர்களுக்கும் நம்மைப்பற்றி அறிய வசதியாய் இருக்குமே!?



நீங்கள் சொன்னதுபோலவேதான் இளசு அவர்கள் செய்திருக்கிறார்.

நிலா
04-01-2004, 03:15 AM
இல்லை ஆரென்!"உமது சந்தேகங்கள்,நமது தளம்"--இதில் மாற்றியதற்கு

பதிலாக இதையே தனித்தலைப்பாய் நிழற்படப்பதிவுகள் எனக்குறிப்பிட்டால் புதுவரவுகளின் கவனத்தை ஈர்க்கும் என்பது என் எண்ணம்!

aren
04-01-2004, 05:33 AM
இல்லை ஆரென்!"உமது சந்தேகங்கள்,நமது தளம்"--இதில் மாற்றியதற்கு

பதிலாக இதையே தனித்தலைப்பாய் நிழற்படப்பதிவுகள் எனக்குறிப்பிட்டால் புதுவரவுகளின் கவனத்தை ஈர்க்கும் என்பது என் எண்ணம்!



அப்படிச் சொல்கிறீர்களா?



ஆனால் இப்படி தனித் தலைப்பாக எல்லா விஷயத்தையும் எடுத்துக் கொண்டே போனால் இந்த தளத்தின் நீளம் கூடிவிடுமே. அதனால் இதை Browse செய்வதற்கு கடினமாக இருக்கும். Navigation Problem வரக்கூடுமே. இருந்தாலும் தலைவர் பார்த்து முடிவு செய்யட்டும்.

இக்பால்
04-01-2004, 06:59 AM
ஆரென் தம்பி... நிலா தங்கை சொல்லும் திட்டம் நல்லதாகவே படுகிறது.

சில விசயங்கள் முக்கியத்துவத்தைப் பொறுத்து மறுபரிசீலணை செய்ய

வேண்டியது அவசியம்தான். அவற்றால் சில சிரமங்கள் இருந்தாலும்.

தலைவர், பப்பி என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம். இளசு அண்ணா

இப்பொழுது செய்திருப்பது முன்னரை விட சிறந்ததுதான். அண்ணாவுக்கு

நன்றிகள். -அன்புடன் இக்பால்.

aren
04-01-2004, 07:24 AM
ஆரென் தம்பி... நிலா தங்கை சொல்லும் திட்டம் நல்லதாகவே படுகிறது.

சில விசயங்கள் முக்கியத்துவத்தைப் பொறுத்து மறுபரிசீலணை செய்ய

வேண்டியது அவசியம்தான். அவற்றால் சில சிரமங்கள் இருந்தாலும்.

தலைவர், பப்பி என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம். இளசு அண்ணா

இப்பொழுது செய்திருப்பது முன்னரை விட சிறந்ததுதான். அண்ணாவுக்கு

நன்றிகள். -அன்புடன் இக்பால்.



நான் தலைவர் மற்றும் பப்பி, இளசு ஆகியவர்களின் மேற்பார்வைக்கு அனுப்பியிருக்கிறேன். அவர்கள் என்ன முடிவு எடுத்தாலும் அது நல்லதாகத்தான் இருக்கும்.

இக்பால்
04-01-2004, 07:26 AM
இளசு அண்ணா...இந்த பதிவையும் அந்த தலைப்புக்கே மாற்றி விடலாமே!

Nanban
05-01-2004, 05:07 AM
முல்லை மன்றத்திற்கு மாற்றப் பட்டது நல்ல காரியம்...... கூடிய சீக்கிரம் நிழற்பட பதிவுகளுக்கு, தனி மன்றம் திறக்க வேன்டிய அவசியம் தேவைப்படும்..... அங்கே, இந்த நிழற்பட பதிவுகளுடன், மனஓவியம், லாவ் 1000+, நிலாக்காலம், மணியா 1000+, பூ 4000+ என்ற மாதிரியான நண்பர்களைப் பற்றிய அலசல்களையும் சேர்த்துவிட்டால், முழுமையான அறிமுகப் பக்கமாகிவிடும்.......

puppy
06-01-2004, 12:36 AM
யோசிச்சுட்டு தான் இருக்கேன் நானும் ரொம்ப நாளா....சீக்கிரம் செய்வோம் கண்டிப்பாக தேவையானதை

இக்பால்
06-01-2004, 04:03 AM
நன்றி பப்பி அவர்களே....

aren
06-01-2004, 07:05 AM
பப்பி அவர்கள் கவனிக்கிறேன் என்று சொன்னால் நிச்சயம் அது முடிந்த மாதிரிதான். காத்திருப்போம் ஆவலுடன்.

puppy
03-02-2004, 11:36 PM
...¡է èħ......á ɡ 狀 ġ......

நிலா
10-02-2004, 11:16 PM
அலையை நான் முன்மொழிகிறேன்!

நிலா
10-02-2004, 11:22 PM
ஜனவரி மாதப்பதிவுகளின் 95%பதிவுகள் விவரம் ஜனவரிமாதத்தேர்தல் அட்டவணையில் இருக்கிறது.இது நிழற்படப்பதிவுவேலையை எளிதாகச்செய்ய உதவும்!



அலை உங்கள் பதிலென்ன?

puppy
10-02-2004, 11:23 PM
கையில லிஸ்ட் வச்சுட்டு அலைந்துச்சுட்டு இருந்தார்...எங்காச்சும் போய் இருக்காரோ என்னவோ....

அலை...
10-02-2004, 11:28 PM
அலையை நான் முன்மொழிகிறேன்!



அஹா..ரொம்ப கதை பேசினால் இப்படிதான்...இந்த வாரக் கடைசியில் நேரம் கிடைக்குமா என்பது சந்தேகமே..அடுத்த மாதம் செய்கிரேனே நிலா..(என்ன பப்பி சரியா?)

அலை...
10-02-2004, 11:29 PM
கையில லிஸ்ட் வச்சுட்டு அலைந்துச்சுட்டு இருந்தார்...எங்காச்சும் போய் இருக்காரோ என்னவோ....



பாத்திங்களா பப்பி...உங்களுக்கெ தெரியுது அலை எவ்ளோ பிஸின்னு...(ஹி ஹி)

puppy
10-02-2004, 11:31 PM
நிலா அடுத்த மாசம் அலை..நோட் பண்ணிக்குங்க...இந்த மாசம் யாரு பண்றது......



நிலா நிழற்பட பதிவுகள் இனிமேல் உங்கள் பொறுப்பு......இன்றுமுதல்..இந்தமாதம் எப்படியோ கொஞ்சம் தாமதமாகி விட்டது...இனிமேல் 10ஆம் தேதிக்குள் வருகிற மாதிரி பார்த்துகொள்ளுங்கள்....சரியா நிலா.....

நிலா
10-02-2004, 11:34 PM
முடிந்தவரை என்னாலானதைச்செய்கிறேன் பப்பி!

பிப்ரவரி மாதம்--அலை!



இந்தமாதம் பரஞ்சோதி தான் அப்ப!சராவைக்காணோமே!

அலை...
10-02-2004, 11:43 PM
நிலா...உங்களை...

நிலா
10-02-2004, 11:44 PM
என்னை .....சொல்லுங்க அலை பாராட்டுகிறேன்னு சொல்றீங்களா :wink:

நிலா
11-02-2004, 12:02 AM
அலை என்ன சொல்றீங்க நிஜமாவா!?

இந்தவார இறுதியில் ஜனவரிமாத நிழற்படமா?ஓ.கே.அட்வான்ஸ் வாழ்த்துகள்!

அலை...
11-02-2004, 12:06 AM
பப்பி ஒரு திருத்தம்



நிலா குட்டி கர்னம்லாம் போட்டு...ரொம்ப கெஞ்சியதால்...லேசாக மிரட்டியதாலும்...



இந்த மாதப் பதிவை, இந்த வாரக் கடைசியில் நானே தருகிரேன்...

puppy
11-02-2004, 12:08 AM
நிலா கிட்டே பொறுப்பை ஒப்படைச்சிட்டேன் அலை...இனி நீங்கள் ஆச்சு அவங்க ஆச்சு....சரியா......நான் நிழற்பதிவு படிக்க மட்டும் தான் வருவேன்......

நிலா
11-02-2004, 05:22 PM
நண்பர் பரஞ்சோதியிடம் தனிமடலில் கேட்டேன்.அவர் சகோதரரின் திருமணத்தை முன்னிட்டு தற்போது இயலாது எனத்தன் வருத்தத்தை தெரிவித்தார்.

சரான்னாலே கொஞ்சம் பயமா இருக்கு.அதுதான் பொதுவா கேட்டுட்டேன் :wink:

sara
11-02-2004, 05:50 PM
ப்ராஜெக்ட் ஒன்றின் ரிலீஸ் இந்த வாரத்தில் இருந்ததால், மன்றத்துக்குள் கடந்த சில நாட்களாக கால் எடுத்து வைக்க முடியவில்லை. இன்று எதேச்சையாக இந்த பதிவுக்குள் வந்தால் என் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கிறது.



விஷயத்திற்கு வருகிறேன். நான் மன்றத்துப் பதிவுகள் அனைத்தையும் படிப்பவனல்ல. கவிதைகள் பக்கம் எட்டிப்பார்ப்பதோ அபூர்வம். நிலாவின் ஒரேயொரு 'நிழற்படபதிவை'த் தவிர வேறெந்த நிழற்பதிவுகளையும் இதுவரை படித்ததில்லை. இப்படி சொற்பமான மன்ற அனுபவத்தை வைத்து, ஒரு மாதத்தின் எல்லா பதிவுகளைப் பற்றிச் சொல்லும் ஒரு மைல்கல்லை நடச்சொல்கிறீர்களே?? என்னைப் பற்றி நான் சொல்லிவிட்டேன். இன்னும் நான் இதைச் செய்ய வேண்டும் என நண்பர்கள் விரும்பினால், முயற்சிக்கிறேன்.






ஆனாலும் நான் கேட்டதுக்காகவே அவர் ஓ.கே சொல்லாமலும் போகலாம் பப்பி!அதற்கான வாய்ப்புகள் அதிகம்!


சரான்னாலே கொஞ்சம் பயமா இருக்கு.அதுதான் பொதுவா கேட்டுட்டேன்



ஊப்ஸ்ஸ்..நிலாஆஆஅ., என்ன நீங்க இப்படி தயங்கி நின்னுட்டீங்களே? பயப்படுற அளவுக்கு நான் என்ன செஞ்சேன்?



(மன்ற நண்பர்கள் எதன் பொருட்டும் தனிமடல் மூலமாக என்னை தொடர்பு கொள்ளலாம். பப்பி சொல்லியிருப்பது போல் தனிமடல் வந்திருக்குமாயின், உடனே நான் பதிலளித்திருப்பேன். நல்லவேளையாக இந்த பதிவை இப்பொழுது படித்தேன். இல்லாவிட்டால் என்னிடமிருந்து இந்த பதில் கூட வராமலிருந்திருக்கும். )

நிலா
11-02-2004, 09:52 PM
சரா உங்களின் பதிலுக்கு மிக்க நன்றி!



பிப்ரவரி மாதப்பதிப்புகளைப்படித்துவிட்டு நிழற்படம், கொடுங்க.



உங்களிடமிருந்து ஒரு சிறப்பான நிழற்படப்பதிவு வருமென்பதில் ஐயமில்லை.



பிப்ரவரி-------சரா.

lavanya
11-02-2004, 10:13 PM
புதிய நண்பர்கள் எல்லாம் நிழற்பட பதிவுக்கு ஆர்வமாக....

பாராட்டுக்கள் ..வாழ்த்துக்கள்....நமக்குதான்...(???!!!)



சி.த : இப்படி சொல்லி நழுவுறீங்களே..ஒரு வருஷமா இருக்கீங்க

வெட்கமா இல்லை இதை சொல்றதுக்கு..

puppy
11-02-2004, 10:39 PM
நிலா உங்க விஷயத்திலே மூக்கை நுழைக்கிறேன்னு திட்டாதீங்க....லாவ்-க்கு எல்லாம் இதில் இருந்து விலக்கு கொடுத்து விடலாம்....லாவ்,பிஜிகே இன்னும் சிலர் மட்டுமே.....அவங்க எல்லாம் என்ன பெரிய இதுவான்னு கேட்கலாம்..ஆனால் நான் சொல்ல வேண்டியது இல்லை...அவர்களை பற்றி உங்களுக்கே தெரியும்.........உங்களுக்கு விருப்பம் இருப்பின் உங்களை யாரும் நிறுத்த போவதில்லை லாவ்...

lavanya
11-02-2004, 10:46 PM
நீங்கள் சொல்ல வருவது புரிகிறது பப்பி...நான் அதை

வழி மொழிகிறேன்..எனவே நிலா அதை வேறு யாருக்கேனும் மாற்ற

முடியுமா?

நிலா
11-02-2004, 11:44 PM
நல்லது பப்பி!இருப்பினும் லாவ் எப்பவாவது நிழற்படம் கொடுத்தால்

மிக மகிழ்வேன்!அடுத்த குறி:நண்பர் ஆரென்!

மார்ச் மாத நிழற்படம் கொடுக்க ஆரென் நீங்க ரெடியா?

aren
14-02-2004, 01:54 AM
நஅடுத்த குறி:நண்பர் ஆரென்!

மார்ச் மாத நிழற்படம் கொடுக்க ஆரென் நீங்க ரெடியா?



மன்றத்தில் பல ஜாம்பவான்கள் இருக்கும்பொழுது இந்த அணிலைப்போய் கேட்கிறீர்களே?

நிலா
05-03-2004, 05:47 PM
நண்பர் சராவின் அசத்தல் நிழற்படம் குறித்தநேரத்தில் ரிலீஸ் ஆகி பேராதரவு பெற்று வெற்றிநடை போட்டுக்கொண்டுள்ளது!



மார்ச் மாத நிழற்படப்பதிவை செய்யப்போவது யார்?

ஹிட் லிஸ்ட்





.நண்பர் ஆரென்

நண்பர் பாரதி

நண்பர் மதுரைக்குமரன்

தோழி சுமா

நண்பர் மணியா

நண்பர் கரிகாலன்

நண்பர் தஞ்சைத்தமிழன்

நண்பர் அறிஞன்

நண்பர் திருவருள்

நண்பர் மன்மதன்

நண்பர் பரஞ்சோதி

நண்பர் DR. அகத்தியன் :wink:

தலை இளசு



நண்பர்கள் தாங்களாய் முன்வந்து பொறுப்பேற்பார்கள் என நம்புகிறேன்!

இல்லையெனில் ....ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யாராவது முன்னாடிவாங்க ராசாஆஆஆஆஅ!

நிலா
10-03-2004, 10:19 PM
பாரதி வேலை அதிகமாயிருப்பதால் இம்மாதம் இயலாது எனக்கூறியுள்ளார்!

ம.கு ஆளையேஏஏஏ காணோம்!



சுமா நீங்க ரெடியாஆஆஅ?

மக்கள் ரொம்ப பிஸியா இருக்காங்க என்ன பண்றது?யாரையும் வற்புறுத்த மனமில்லை!தலை உதவுங்கள் ப்ளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்!

சேரன்கயல்
12-03-2004, 03:43 AM
நம்ம மணியா (தலை ) சாரை செய்ய வைக்கலாமே "விடாது நிலா"...!!!!

(ஹி ஹி ஹி...தலைகிட்ட நல்லா வாங்கி கட்டிக்கப் போறேன்..)

நிலா
12-03-2004, 05:02 AM
அவர் தீர்த்தயாத்திரை போயிட்டுவார்ட்டும்!அப்புறம் சொல்றேன் சேரன்!

உங்களூக்கு இருக்கப்பு! :D

mania
12-03-2004, 05:30 AM
நம்ம மணியா (தலை ) சாரை செய்ய வைக்கலாமே "விடாது நிலா"...!!!!

(ஹி ஹி ஹி...தலைகிட்ட நல்லா வாங்கி கட்டிக்கப் போறேன்.. )



சேரன்கயல்.............ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.......நற நற.......

:rolleyes: :rolleyes: நன் பன்னுவன் செரன் அனால் பத்து பத்தா சாரி தப்பு தப்பா வாருமே அதன் பக்கிரேன்.இன்னும் கொன்ச நாலில் தமிளை கத்துகிட்டா அபுரம் புழந்துகட்டலாம் :rolleyes: :rolleyes: ....ஹி....ஹி....(உனக்கு இருக்கு இன்னும் ரெண்டு நாளிலே ) :D

அன்புடன்

மணியா

நிலா
16-03-2004, 11:06 PM
ஏம்பா யாராவது முன்வருவீங்கன்னு பார்த்தா !



தலை உதவுங்கள்!7000க்கு அப்புறம்!என்ன பண்றதுன்னு புரியலை!

நிலா
01-04-2004, 10:42 PM
மன்மதன் அல்லது பரஞ்சோதியை இம்மாத(மார்ச்) நிழற்படப்பதிவு செய்ய அழைக்கிறேன்!

சேரன்கயல்
01-04-2004, 11:49 PM
யார்பா அது...

அதான் நம்ம நிலா சொல்லிட்டாங்கல்ல...

சீக்கிரம் ரெடி பண்ணிடுங்க...

mania
02-04-2004, 02:53 AM
மன்மதன் அல்லது பரஞ்சோதியை இம்மாத(மார்ச்) நிழற்படப்பதிவு செய்ய அழைக்கிறேன்!



சேரன்கயல் என்னுடன் தொலைபேசியில் பேசின போது இப்போது தற்காலிகமாக மனைவி இல்லாததால் நிறைய நேரம் இருக்கிறது....என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று புலம்பிக்கொண்டுருந்தார்....ஒருவேளை இப்போது அவரை கேட்டுக்கொண்டால்..............

அன்புடன்

மணியா

சேரன்கயல்
02-04-2004, 04:21 AM
தலை...

உங்களைத்தான் நம்ம விடாது நிலா புடிக்கப் போறாங்க...

ரொம்ப நாளா நீங்க டபாய்ச்சிட்டு இருக்கீங்க...

(மாமியை நீங்க சமாளிச்சிடலாம்...இந்த விடாது நிலாவை...ஹம் ஹம்...ஹேய் சிங்கம் போல...)

நிலா
03-04-2004, 09:59 PM
மார்ச் மாத நிழற்படம் -நண்பர் மன்மதன்!






சேரன்கயல் என்னுடன் தொலைபேசியில் பேசின போது இப்போது தற்காலிகமாக மனைவி இல்லாததால் நிறைய நேரம் இருக்கிறது....என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று புலம்பிக்கொண்டுருந்தார்....ஒருவேளை இப்போது அவரை கேட்டுக்கொண்டால்..............






தலை...

உங்களைத்தான் நம்ம விடாது நிலா புடிக்கப் போறாங்க...

ரொம்ப நாளா நீங்க டபாய்ச்சிட்டு இருக்கீங்க...

(மாமியை நீங்க சமாளிச்சிடலாம்...இந்த விடாது நிலாவை...ஹம் ஹம்...ஹேய் சிங்கம் போல...)

_________________







என்னை விடாது கலாய்த்துக்கொண்டிருக்கும் மக்கா ! :evil:

முன்னாடி மாதிரி இல்ல.இப்ப உதவியாளர் லெவல்ல இருப்பதால் சப்போர்ட் ஜாஸ்தி!வம்பு பண்ணினா விளைவுகள் பயங்கரமா இருக்கும் ஜாக்கிரதை! :wink:



மணியா தாத்தா உடல்நலை பார்த்துக்கோஙோஓஓஓஓஓஓ!

இளசு
03-04-2004, 10:23 PM
மன்மதனுக்கு பாராட்டும் நன்றியும்..

mania
04-04-2004, 06:03 AM
தலை...

உங்களைத்தான் நம்ம விடாது நிலா புடிக்கப் போறாங்க...

ரொம்ப நாளா நீங்க டபாய்ச்சிட்டு இருக்கீங்க...

(மாமியை நீங்க சமாளிச்சிடலாம்...இந்த விடாது நிலாவை...ஹம் ஹம்...ஹேய் சிங்கம் போல...)



:lol: :lol: மாமியையே இவ்வளவு வருஷம் சமாளிச்சுகிட்டு இருக்கோமேன்கிற தைரியம் தானே எனக்கு......... நிலா ஆனா நீ சொல்ற மாதிரி இல்லை ரொம்ப நல்ல பொண்ணாக்கும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :roll: :roll: (எப்பிடி ஜால்ரா......சத்தம் கேக்கலை ???......)

அன்புடன்

மணியா

mania
04-04-2004, 06:07 AM
மணியா தாத்தா உடல்நலை பார்த்துக்கோஙோஓஓஓஓஓஓ!

_________________

இப்படிக்கு

நிலா



சரி பேட்டி(ஹிந்தி)....பேத்தி (தமிழ்)......

அன்புடன்

மணியா (தாத்தா)

சேரன்கயல்
04-04-2004, 10:57 AM
தலை...

நீங்க தாத்தாவா இல்லையாங்கிறது சீக்கிரம் தெரிஞ்சிரும்...ஆனால் நம்ம விடாது நிலா...பேட்டியா இருக்க வாய்ப்பில்லைனு நெனைக்கிறேன்....(பாட்டியாவேனா இருக்கலாம்)

மன்மதன்
04-04-2004, 01:21 PM
மன்மதனுக்கு பாராட்டும் நன்றியும்..



நன்றி இளசு .. ஆமாம் எதற்கு எனக்கு நன்றி.. :rolleyes:

எல்லோரும் நிலாவின் தலையை உருட்டுற மாதிரி தெரியுது

kavitha
05-04-2004, 05:28 AM
nila wrote:-






மார்ச் மாத நிழற்படம் -நண்பர் மன்மதன்!



அப்படீன்னா, இம்மாதம் மன்மதரின் கைவரிசைய பார்க்கலாம்!

ஆவலுடன் நாங்கள்! கலக்கு ராசா!

பரஞ்சோதி
05-04-2004, 06:50 PM
மன்மதர் கண்டிப்பாக கலக்குவார். கலக்கல் என்றாலே மன்மதன் என்று தானே அர்த்தம்.

நிலா
16-04-2004, 11:39 PM
தலை...

நீங்க தாத்தாவா இல்லையாங்கிறது சீக்கிரம் தெரிஞ்சிரும்...ஆனால் நம்ம விடாது நிலா...பேட்டியா இருக்க வாய்ப்பில்லைனு நெனைக்கிறேன்....(பாட்டியாவேனா இருக்கலாம்)







:evil:

அறிக்கை விரைவில்....



பரம்ஸ் ஏப்ரல் நிழற்படம் செய்ய நீங்க ரெடியா?

பரஞ்சோதி
17-04-2004, 02:24 PM
தலை...

நீங்க தாத்தாவா இல்லையாங்கிறது சீக்கிரம் தெரிஞ்சிரும்...ஆனால் நம்ம விடாது நிலா...பேட்டியா இருக்க வாய்ப்பில்லைனு நெனைக்கிறேன்....(பாட்டியாவேனா இருக்கலாம்)







:evil:

அறிக்கை விரைவில்....



பரம்ஸ் ஏப்ரல் நிழற்படம் செய்ய நீங்க ரெடியா?



நான் செய்கிறேன், ஆனால் கிண்டல் செய்யக்கூடாது, திட்டக்கூடாது, இல்லை என்றால் அழுது விடுவேன், ஆமாம். சலினா நறுமுகை எனக்கு உதவுவார் என்று நினைக்கிறேன்.

மன்மதன்
18-04-2004, 04:58 AM
ஆகா...ஆகா.. வாங்க பரம்ஸ்.. இதைதான் எதிர்பார்த்தேன்.. போன மாதம் நான் பண்ணினப்ப அடுத்தது நீங்கதான் பண்ணனும்னு நினைத்தேன்.. அது நடந்துடுச்சு.. அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.. கண்டிப்பா அசத்தப்போறீங்க.. அடுத்த மாதத்தை எதிர்பார்த்து..

சேரன்கயல்
18-04-2004, 09:28 AM
கவலையே படாதீங்க பரம்ஸ்...

நறுமுகை உங்களுக்கு உதவறதா சொல்லிவிட்டாள்...ஹா ஹா...

இன்னும் ஆள் வேணும் என்றால்...நம்ம தலையின் பேரனையும் கேட்கலாம்...

(ஆமாம் நம்ம தலை தாத்தா ஆயிட்டார்..)

poo
18-04-2004, 12:52 PM
பரம்ஸ்...



நிச்சயம் மாறுபட்ட கோணத்தில் உங்கள் பதிவு அமையுமென நினைக்கிறேன்.. வாழ்த்துக்கள்!

mania
20-04-2004, 09:19 AM
கவலையே படாதீங்க பரம்ஸ்...

நறுமுகை உங்களுக்கு உதவறதா சொல்லிவிட்டாள்...ஹா ஹா...

இன்னும் ஆள் வேணும் என்றால்...நம்ம தலையின் பேரனையும் கேட்கலாம்...

(ஆமாம் நம்ம தலை தாத்தா ஆயிட்டார்..)



அடெடே....இங்கே செய்தி சொல்லியாச்சா.....நான் இதை பார்க்காமல் தனி செய்தியாக கொடுத்திருக்கிறேனே..........சரி பரவாயில்லை....நன்றி நண்பனே.............

அன்புடன்

மணியா

இளசு
09-05-2004, 10:30 PM
மே மாத நிழற்படம் ஜூன் முதல் வாரம் மன்றத்தில் பதிக்க

இங்கே முன்பதிவு செய்துகொள்ளலாம்.... வாரீர்..

பரஞ்சோதி
10-05-2004, 01:47 PM
எல்லோரும் ஜோரா கை தட்டுங்க, நம்ம சலீனா நறுமுகை செய்கிறேன் என்று சொல்கிறார். எங்கப்பா சேரனை, உடனே பாண்டியில் இருந்து அழைத்து வாருங்கள்.

இக்பால்
10-05-2004, 03:15 PM
சலீனா தங்கத்துக்கு என் அன்பு முத்தங்கள்.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர வாழ்த்துகள்.

-அன்புடன் பெரியப்பா & மாமா.

சேரன்கயல்
11-05-2004, 02:16 PM
நறுமுகையின் சார்பில் மீண்டும் நானா...???

வேண்டாமே பரம்ஸ்...

நம்ம "தலை"யை செய்ய சொல்லலாமே...

பத்த(வைக்க)வச்சிட்டியே பரம்ஸ்...

(நான் ஒரு நாலு நாளைக்கு எஸ்கேப்...இல்லைனா என் கதை... )

பரஞ்சோதி
11-05-2004, 02:35 PM
நறுமுகையின் சார்பில் மீண்டும் நானா...???

வேண்டாமே பரம்ஸ்...

நம்ம "தலை"யை செய்ய சொல்லலாமே... :wink:

பத்த(வைக்க)வச்சிட்டியே பரம்ஸ்... :roll: :mrgreen: :wink:

(நான் ஒரு நாலு நாளைக்கு எஸ்கேப்...இல்லைனா என் கதை... :cry: )



நீங்க வேற சேரன், இன்றைக்கு கதை நேரத்திற்கு வந்த சலீனா எப்பொழுதும் போல் வந்தவுடன் முத்தம் கொடுக்கவில்லை, :evil: கோபமாக இருந்தார், ஏண்டா என்று கேட்டதற்கு,



மாமா, நீங்க மட்டும் என்னை எல்லாம் தமிழ் மன்றம் சுற்றுலா கூப்பிட்டு போய் நல்ல பெயர் வாங்கிட்டீங்க, எங்க அப்பா மட்டும் வேண்டாம் என்றா சொன்னார், அவரையும் ஏதாவது செய்ய விடுங்களேன். என்றார். :lol: 8)



சரி சேரன், நம்ம தலை மணியா அண்ணாவை ஒரு கேள்வி கேட்டு விட்டால் ஆச்சுது, எங்க கொஞ்சம் சிரிங்க தலைவா... :wink:

mania
12-05-2004, 04:56 AM
சரி சரி உண்மையை உடைக்கவேண்டியதுதான்........



பரம்ஸ் தற்போதைய நிலமையில் சேரன்தான் சரியான தேர்வு . அவரும் எப்படியும் நமக்கு தான் வரும் என்று வேலையில் இறங்கி விட்டதாகவும் அதனால் கொஞ்ச நாளைக்கு அவர் பங்கு கொஞ்சம் குறைவாகவே இருக்கும் என்று என்ன்னிடம் சொல்லியிருந்தார். நிழல் படம் என்னங்க......நிஜமாகவே நல்லா படம் காண்பிப்பார்ங்க.....வேணுமானால் கொடுத்துப்பாருங்க உங்களுக்கே தெரியும்.....பாண்டியிலே காண்பிக்காத படமா.....

அன்புடன்
உண்மை விளம்பி

மணியா

சேரன்கயல்
12-05-2004, 05:01 AM
தலை...

இது உங்களுக்கே நியாமா இருக்கா...

சும்மா ஒரு தமாஷக்காக நான் உங்கள் பெயரை போட்டுக் கொடுத்ததுக்கு இப்படி என்னை பழிவாங்கறீங்களே...

உண்மை என்ற பெயரில் இவ்வளவு பெரிய புளுகு மூட்டையை பரம்ஸ் தலையில் இறக்கியிருக்கீங்களே...இது தகுமா... :?:



(தலை...நீங்க முதல்ல கூப்பிட்டீங்களே...அது இப்போதான் காதில் விழுந்துச்சு...வாங்க எஸ்கேப் ஆயிடலாம் )

மன்மதன்
12-05-2004, 05:12 AM
பாண்டியிலே காண்பிக்காத படமா...

அன்புடன்

உண்மை விளம்பி

மணியா



அது எப்போ .. கோ.மு மணியா உ.வி மணியாவா மாறினா எத்தனை மேட்டர் கிடைக்குது.. :D :D

சேரன்கயல்
12-05-2004, 05:16 AM
சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டாதே மன்மதன்... :evil:

விளைவுகள் விபரீதமா இருக்கும்...

மன்மதன்
12-05-2004, 05:18 AM
இப்படியெல்லாம் மிரட்டினா பயந்துடுவேனா.. என் சைடுல மணியா,பூ,பரம்ஸ் இருக்காங்களாக்கும்.. :lol: :lol: ஹிஹி .. அது என்னா படம்.. :wink:

mania
12-05-2004, 05:49 AM
சைக்கிள் கேப்ல ஆட்டோ ஓட்டாதே மன்மதன்...
விளைவுகள் விபரீதமா இருக்கும்...



:D :D மன்மதன் தான் ஏற்கனவே நிறைய முறை சைக்கிள் கேப்பிலே ஆட்டோ ஓட்டி பரிசெல்லாம் வாங்கியிருக்காரே..... இனிமே நீங்க ஏதாவது ஆட்டோ கேப்பிலே லாரி ஓட்டினாத்தான்............ :rolleyes: :D

அன்புடன்

மணியா

mania
12-05-2004, 05:53 AM
இப்படியெல்லாம் மிரட்டினா பயந்துடுவேனா.. என் சைடுல மணியா,பூ,பரம்ஸ் இருக்காங்களாக்கும்.. :lol: :lol: ஹிஹி .. அது என்னா படம்.. :wink:



:D :D பெயர் தெரியலை மன்மதன்.....ஆனா படம் ரொம்பவே நீளமா....!!!!! இருந்தது..... :rolleyes: :rolleyes: :rolleyes:

அன்புடன்
கோமூ மணியா

சேரன்கயல்
12-05-2004, 06:43 AM
இப்படியெல்லாம் மிரட்டினா பயந்துடுவேனா.. என் சைடுல மணியா,பூ,பரம்ஸ் இருக்காங்களாக்கும்.. ஹிஹி .. அது என்னா படம்..

_________________

மன்மதன்

_________________





வேற என்ன படம்...கலப்படம் தான்...

மன்மதன்
12-05-2004, 06:56 AM
அதான் ரொம்ப ஏறிடுச்சா?? ஹிஹி.. பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன் சொன்னேன்..

இக்பால்
12-05-2004, 01:53 PM
பஜ்ஜி பவானி முதல் கடைசி சேர்ப்பான கல்யாணி





பவானியில் பஜ்ஜி பேமஸா? கல்யாணி எங்கே இருக்கு? பம்பாய்

புற நகரில் கல்யாண் என்ற இடம் கேள்விப் பட்டிருக்கிறேன்.

இளசு
24-05-2004, 10:12 PM
சரிங்க மக்கா..

மேட்டருக்கு வாங்க...



இம்மாத நிழற்படம் தரப்போறது யாராம்?

kavitha
25-05-2004, 03:47 AM
அதானே! அடுத்த சூராதி சூரன் யாருப்பா?

அதோ.... நிலா வரவெளிச்சம் தெரியுது....சொல்லுவாங்க இருங்க!

மன்மதன்
25-05-2004, 09:41 AM
கவிதாதான்..கவிதாவேதான். :lol: .. கவிதாவை விட்டா வேற யாரு இருக்கா..



அடுத்து சூராதி சூரன் இல்லை கவிதாக்கா.. சூராதி சூரி..



எங்கெளுக்கெல்லாம் கவிதாவை விட்டா வேற யாரு இருக்கா.. (மெதுவா அழும் குரல் கேட்கிறதா.. ) ... கவிதா.. நீ வில்லன் வீரப்பா ரேஞ்சுல சிரிச்சதுக்கு நான் பழி வாங்குறேன்னு மட்டும் நினைச்சுடாதே ;) ;) மன்றமே கேட்குது .. நீதான் அடுத்த நிழற்படம் கொடுக்கணும்.. விடாது நிலாவின் அஸிஸ்டெண்ட் விடாது மன்மதன் வேண்டி விரும்பி கேட்டுக்கொள்வது என்னவென்றால் 'கவிதா உன்னை விட்டா எங்களுக்கு யார் இருக்கா???' :D :D
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
25-05-2004, 10:12 AM
மன்மதா, அப்படி போட்டு தாக்கு, என்னுடைய ஆதரவும் சகோதரிக்கே..

kavitha
25-05-2004, 10:31 AM
ஆஹா! வேணும்னா அத்தைகிட்ட சிபாரிசு பண்ணி இன்னும் 2 கப் பாஸந்தி வாங்கி தரேன் அப்புகளா!

இப்படி என்னை நேரம் பாத்து கவுக்கிறீங்களே! நியாயமா?

இக்பால்
25-05-2004, 10:35 AM
மன்மதன் தம்பி, பரஞ்சோதி தம்பி... அண்ணாவை விட்டு விட்டீர்களே.



என்னுடைய வாக்கும் கவிதா தங்கைக்கே. :wink:

மன்மதன்
25-05-2004, 10:41 AM
ஓகே. வோட்டு எண்ணிக்கை ஆரம்பம்..முதல் மூன்று ஓட்டும் கவிதாவுக்கே கிடைத்து விட்டது.. எலோரும் ஓடியாங்கோ.. கவிதாவுக்கே ஓட்டு போடுங்கோ.. போட்டியின்றி தேர்வு செய்யுங்கோ..



(எது..எப்படியோ.. கொளுத்தி போட்டது நல்லவே எரியுது.. )

poo
25-05-2004, 11:13 AM
மீண்டுமொரு வித்தியாச நடையில் வரப்போகும் நிழற்படப்பதிவுக்கு காத்திருக்கிறேன்!!



(மன்மதன் உங்களுக்கு ஆதரவா ஓட்டு போட்டிருக்கேன்.. ஆட்டோவை வூட்டுப்பக்கமா அனுப்புங்க...உள்ள மேட்டரோட...)

மன்மதன்
25-05-2004, 11:27 AM
முதலாவது வாக்கு எண்ணிக்கையில் எங்கள் தொகுதி வேட்பாளர் கவிதா அவர்கள் 4 (ஆயிரம் ) வாக்குகள் பெற்று முண்ணனியில் உள்ளார்..



(சர வெடி ரெடி ) :D

mania
25-05-2004, 12:14 PM
ஆமாம் நானும் சேரனும் கூட சேர்ந்துக்கறோம் . ஒன்லி கவிதா ....நிழல் கொடும்மா . எங்களுக்கு ஆட்டோல மேட்டர் கிடைக்கும்....மன்மதன் முதல்ல எங்க தெரு வந்திட்டு அப்புறம் பூகிட்ட போ. (கொஞ்சம் ஹெவியான சப்போர்டில்ல....) :D :D

அன்புடன்
மணியா

(அது என்ன மேட்டராயிருந்தாலும் டஸ் நாட் மேட்டர் ...!!!! )ஹி....ஹி....ஹி... ஏதோ வயத்து பாட்டுக்குத்தானே.....:rolleyes: :rolleyes: :rolleyes:

மன்மதன்
25-05-2004, 12:36 PM
கவிதா .. வாழ்த்துக்கள்..மெஜாரிட்டி கிடைத்துவிட்டது.. :D



தலை.. அது என்ன வயத்துபாட்டு.. ???

பரஞ்சோதி
25-05-2004, 02:06 PM
கவிதா .. வாழ்த்துக்கள்..மெஜாரிட்டி கிடைத்துவிட்டது..



தலை.. அது என்ன வயத்துபாட்டு.. ???



கவிதாவின் ஆட்டோக்காரன் பாட்டை கேட்டப் பின்பு மன்மதனுக்கு பாட்டு என்றாலே அலர்ஜியாகி விட்டது. அதான் வயத்துப்பாட்டு பற்றி கேட்கிறார். :lol: :wink:

mania
25-05-2004, 03:48 PM
கவிதா .. வாழ்த்துக்கள்..மெஜாரிட்டி கிடைத்துவிட்டது..



தலை.. அது என்ன வயத்துபாட்டு.. ???



சாரி ஸ்பெல்லிங் மிஸ்டேக் (மைதிலி ) :rolleyes: :rolleyes:
வயத்திலே போட்டுங்கிறத்துக்கு பதிலா ........... :D :D

அன்புடன்
மணியா

சேரன்கயல்
26-05-2004, 03:42 AM
சரி...இனிமேலயும் யாரும் கேட்காதததால...

இம்மாத நிழற்படப்பதிவாளராக

கவிதா ஒருதரம்...

கவிதா ரெண்டுதரம்...

கவிதா மூனுதரம்...

ஜூட்டோ... :D

மன்மதன்
26-05-2004, 04:49 AM
சேரன் தான் கொடுக்கவேண்டியதா இருந்தது.. அவரும் ஜகா வாங்கியதால் இனி கவிதாதான் எல்லாமே.. :D :D

சேரன்கயல்
26-05-2004, 04:57 AM
நான் ஏற்கனவே ஒரு மாதிரியா கொடுத்து தப்பிச்சாச்சு மன்மதன்...இரண்டாவதா எதுக்கு...அதுவுமில்லாம...நான் செஞ்சா என்ன, நீங்க செஞ்சா என்ன இல்லை கவிதா செஞ்சாதான் என்ன...அதனால...ஜகா வாங்கினேன், மகா வாங்கினேன்னு புதுசா இன்னும் ஒரு பெண் பெயரை சொல்லி என்னை வம்புல மாட்டிவிடாதீங்க...(ஏற்கனவே...பவானி, கல்யாணி, அம்புஜம், பங்கஜம்னு லிஸ்ட் நீண்டுகெடக்கு) :wink:

பரஞ்சோதி
27-05-2004, 08:07 AM
இனிமேல் அந்த அந்த பதிவில் அட்டகாசம் செய்யாமல், ஐவர் அணியில் அட்டகாசம் செய்யலாம் என்று தொடங்கியாச்சு, அதுவும் தூள் கிளப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்படி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் அப்படியே QUOTE காப்பி செய்து, அங்கே பேஸ்ட் பண்ணி கலக்கலாம். பாவம் பதிவாளர்கள் நம் அட்டகாசம் தாங்க முடியாமல் என்ன சொல்லுவது என்று தெரியாமல் விழிப்பது தெரிகிறது.

இளசு
22-06-2004, 10:42 PM
ஜூன் நிழற்படம் பதிக்க விருப்பமா... முந்தி பெயர் கொடுங்க...

(இல்லாட்டி நியமனம் பண்ணவேண்டி வரும்...ஹி.ஹி..)

இளசு
23-06-2004, 10:52 PM
அன்பு நண்பர் அறிஞர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்..



இல்லையின்னா மௌனம் சம்மதம்னு ஆயிடும்.. சரிதானே..!

அறிஞர்
24-06-2004, 08:39 AM
அட மக்கா.... கொஞ்சம் பிஸி... நண்பர்களே......



நிழற்படம்... தயாரிக்கும் அளவுக்கு நேரம் இல்லை நண்பர்களே...



தயவாய்.. மன்னிக்கவும்

பரஞ்சோதி
24-06-2004, 03:54 PM
அறிஞர் அவர்கள் வேலைப்பளு காரணமாக முடியாது என்பதால் அடுத்தது யார் என்ற எண்ணம் வருகிறது?



பதில் கொடுங்களேன்.

இக்பால்
28-06-2004, 08:12 AM
யார் இந்த மாதம் நிழற்படம் தயார் செய்வது?



மைதிலி தங்கை நீங்கள் தயாரா? நேரம் குறைவாகத்தான் இருக்கிறது.

அதிகம் சிரமம் எடுக்காமல் எளிமையாக கொடுத்தால் போதுமானது.



-அன்புடன் அண்ணா.

mythili
28-06-2004, 08:45 AM
யார் இந்த மாதம் நிழற்படம் தயார் செய்வது?



மைதிலி தங்கை நீங்கள் தயாரா? நேரம் குறைவாகத்தான் இருக்கிறது.

அதிகம் சிரமம் எடுக்காமல் எளிமையாக கொடுத்தால் போதுமானது.



-அன்புடன் அண்ணா.



நானா என்ன அண்ணா இப்படி மாட்டி விடறீங்க?



அன்புடன்,

மைதிலி

இக்பால்
28-06-2004, 08:50 AM
அப்படி எல்லாம் ஒன்றுமில்லைங்க தங்கச்சி.



எப்படியின் இந்த மாதப் பதிவுகள் பட்டியல் பரம்ஸ் தம்பி (!) கொடுப்பார்.

அவரை கொஞ்சம் விரைவாக கொடுக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளலாம்.

அதற்கப்புறம் உங்கள் வேலையை ஆரம்பித்தால் எளிதாக இருக்கும்.



-அன்புடன் அண்ணா.

mythili
28-06-2004, 09:50 AM
அப்படி எல்லாம் ஒன்றுமில்லைங்க தங்கச்சி.



எப்படியும் இந்த மாதப் பதிவுகள் பட்டியல் பரம்ஸ் தம்பி (!) கொடுப்பார்.

அவரை கொஞ்சம் விரைவாக கொடுக்கச் சொல்லி கேட்டுக் கொள்ளலாம்.

அதற்கப்புறம் உங்கள் வேலையை ஆரம்பித்தால் எளிதாக இருக்கும்.



-அன்புடன் அண்ணா.



ஹ்ம்ம் சரி அண்ணா நான் பரம்ஸ் அண்ணாவிடம் மடலில் பேசிவிட்டு சொல்கிறேன் அண்ணா. அண்ணா விரிவாகக் கொடுத்தால் அதில் கொஞ்சம் சேர்த்து கவிதா போல் பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும் எளிதாக கொடுக்கிறேன் அண்னா. வேலை அதிகம்... அதுதான்... ஆனால் நான் கட்டாயம் செய்கிறேன் அண்ணா :-)



அன்புடன்,

மைதிலி

இக்பால்
28-06-2004, 10:21 AM
நன்றிங்க தங்கச்சி.

mania
28-06-2004, 11:42 AM
அட்வான்ஸ் வாழ்த்துக்கள் மைதி......

அன்புடன்

மணியா

இக்பால்
29-07-2004, 03:40 PM
அன்பிற்குரிய மன்ற உறவுகளே....



நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் என்ற பாராட்டுதலுக்கு

ஏற்ப ஒவ்வொரு மாதமும் மென்மேலும் சிறப்படைந்து தவறாமல் வரும்

நம் மன்றத்தின் நிழற்படம்...இம்மாதம் அன்புத் தம்பி பாரதி அவர்களின்

கைகளாலும் எண்ணங்களாலும் வண்ணப்பட, சிறப்படைய முன்மொழுவதில்

நான் சந்தோசம் அடைகிறேன்.



-என்றும் அன்புடன் இக்பால்.

பரஞ்சோதி
29-07-2004, 06:17 PM
இக்பால் அண்ணா, நானே அடுத்த நிழற்பதிவாளர் மற்றும் ஆகஸ்ட் மாத சிறந்த பதிவாளார் யார் என்று கேட்க நினைத்தேன். நீங்கள் சொன்னது சந்தோசம், ஆனால் பாரதி அண்ணாவில் முடியுமா என்று தெரியவில்லை, முடியும் என்றால் என் பங்களிப்பு எப்பொழுதும் போல் இருக்கும்.



அதே நேரத்தில் என்னுடைய விருப்பமாக அறிஞர் அவர்கள் அல்லது திருவருள் அவர்களை நிழற்படம் செய்ய முடியுமா என்று கேட்கிறேன்.

kavitha
30-07-2004, 11:13 AM
அதே நேரத்தில் என்னுடைய விருப்பமாக அறிஞர் அவர்கள் அல்லது திருவருள் அவர்களை நிழற்படம் செய்ய முடியுமா என்று கேட்கிறேன்.

கூடவே நம்ம 'தலை'யாரையும் கேளுங்க அண்ணா.



போ.கு - கவிதா

இக்பால்
30-07-2004, 03:37 PM
அதே நேரத்தில் என்னுடைய விருப்பமாக அறிஞர் அவர்கள் அல்லது திருவருள் அவர்களை நிழற்படம் செய்ய முடியுமா என்று கேட்கிறேன்.



என்னுடைய விருப்பத்திலும் அவர்கள் இருவரும் உண்டு. ஆனால் பாரதி

தம்பியின் பதிலுக்குப் பிறகு...அல்லது அடுத்தடுத்த மாதங்களை அவர்கள்தான்

ஆள வேண்டும்.


கூடவே நம்ம 'தலை'யாரையும் கேளுங்க அண்ணா.



யாரு தங்கை... மணியா அண்ணாவா... அண்ணா தானாக முன் வந்தால்

தான் உண்டு... அண்ணா சுபாவத்துக்கு நிழற்படமெல்லாம் ஒத்துவருமா

என்று தெரியவில்லை.



-அன்புடன் இக்பால்.

இளசு
01-08-2004, 06:49 AM
பாரதி, அறிஞர், திருவருள், தலை மணியா ---



பட்டியலில் உள்ள இவங்களத் தவிர்த்து மத்தவங்க நாம மட்டும் பேசிக்கிட்டிருக்கமே..



அந்த 4 பேரில் ஒருவருக்கு முன்நன்றி..



அது யார்..? வந்து ஒத்துக்கோங்க மக்கா..

mania
02-08-2004, 06:01 AM
பாரதி, அறிஞர், திருவருள், தலை மணியா ---



பட்டியலில் உள்ள இவங்களத் தவிர்த்து மத்தவங்க நாம மட்டும் பேசிக்கிட்டிருக்கமே..



அந்த 4 பேரில் ஒருவருக்கு முன்நன்றி..



அது யார்..? வந்து ஒத்துக்கோங்க மக்கா..



:rolleyes: :rolleyes: என்ன பாண்ட் இளசு உபயோகிக்கிறார்....... :rolleyes: :rolleyes: ஒன்னுமே என்னால் படிக்க முடியலையே....... :rolleyes: :rolleyes: :rolleyes:
அன்புடன்
மணியா

mania
02-08-2004, 06:18 AM
யாரு தங்கை... மணியா அண்ணாவா... அண்ணா தானாக முன் வந்தால்

தான் உண்டு... அண்ணா சுபாவத்துக்கு நிழற்படமெல்லாம் ஒத்துவருமா

என்று தெரியவில்லை.



-அன்புடன் இக்பால்.





என்ன அப்படி சொல்லிட்டிங்க.. அவர் நிழற்படம் கொடுத்தா அதை படிச்சுகிட்டே இ(சிரி)ருக்கலாமே..





அன்புடன்

மன்மதன்



:lol: :lol: எலே யவண்டா அது ....கடைசி பெஞ்சிலேயிருந்து கூவறது........ :twisted: :twisted: புட்பால் டீமுலே சேம் சைட் கோல் போட ஆள் தேடராங்களாம்....... :lol: :lol: :lol: அங்கே போறதுதானே....... :lol: :lol:

அன்புடன்

மணியா

சேரன்கயல்
02-08-2004, 06:19 AM
எலே யவண்டா அது ....கடைசி பெஞ்சிலேயிருந்து கூவறது........ புட்பால் டீமுலே சேம் சைட் கோல் போட ஆள் தேடராங்களாம்....... அங்கே போறதுதானே.......

அன்புடன்

மணியா





ஹம்...ம்ம்ம்ம்....தலை...அப்போ நானு... :cry:

மன்மதன்
02-08-2004, 06:29 AM
என்ன தலை அ.. அ..அப்படி சொல்லிபுட்டிங்க.. உங்க நிழற்படத்திற்காக யாரு யாரெல்லாம் தவம் கிடக்கிறாங்கன்னு தெரியுமா... ஐஸ்வர்யா ராய்லேர்ந்து ஆரம்பிச்சு.. (அப்பாடா கூல் பண்ணியாச்சு.. :D :D)



அன்புடன்

மணியா ரசிகர் மன்ற தலை

மன்மதன்

mania
02-08-2004, 06:47 AM
என்ன தலை அ.. அ..அப்படி சொல்லிபுட்டிங்க.. உங்க நிழற்படத்திற்காக யாரு யாரெல்லாம் தவம் கிடக்கிறாங்கன்னு தெரியுமா... ஐஸ்வர்யா ராய்லேர்ந்து ஆரம்பிச்சு.. (அப்பாடா கூல் பண்ணியாச்சு.. )



அன்புடன்

மணியா ரசிகர் மன்ற தலை

மன்மதன்



:roll: :roll: :twisted: அதெப்பிடி.....உனக்கு........நான் தவம் இருக்கேன்னு...........ஓ....உளறிட்டேனோ........அதெல்லாம் இப்படியா சபையிலே போட்டு.......ஹி....ஹி....ஹி..... :D :D

அன்புடன்
கூலான மணியா...... :D :D :D

(அவங்க ஐடி இருந்தா கொடேன்........நான் தனியா கேட்டுக்கிறேன்..... :wink: :wink: )

இக்பால்
04-08-2004, 12:22 PM
பாரதி தம்பிக்கு நான் முன்மொழிந்ததைத் திரும்பப் பெற்றுக்

கொள்கிறேன். மரியாதைக்கு பதிலாவது கொடுத்து இருக்கலாம்.



வேறு யாராவது கொடுக்க முன் வாருங்கள். ஏற்கனவே தாமதம்.



அறிஞர் தம்பி... நீங்களாவது பதில் கொடுங்க...

சிறியதாக சுலபமாக கொடுங்க...பரஞ்சோதி தம்பியின் பதிவை

வழிகாட்டியாக பயன்படுத்தினீர்கள் என்றால் ரொம்ப சுலபத்தில்

சீக்கிரத்தில் முடித்து விடலாம்தானே!



-அன்புடன் அண்ணா.

பரஞ்சோதி
04-08-2004, 01:52 PM
இளசு அண்ணா வந்தால் யாரையாவது சுட்டிக் காட்டினால் போதும், அவருக்கு உதவி செய்ய நான் தயாராக இருக்கிறேன்.

மன்மதன்
05-08-2004, 05:46 AM
சேரன் - உங்களால் நிழற்படம் கொடுக்க முடியுமா.. உதவி செய்ய பரம்ஸ், மைதிலி , நான் இருக்கோம்....





அன்புடன்

மன்மதன்

kavitha
05-08-2004, 07:42 AM
சேரன் - உங்களால் நிழற்படம் கொடுக்க முடியுமா.. உதவி செய்ய பரம்ஸ், மைதிலி , நான் இருக்கோம்....





அன்புடன்

மன்மதன்

தலைய தலையாட்ட வைக்கமுடியல.. பேசவந்திட்டீர்..



மணியா அண்ணா.. நாங்களெல்லாம் ஆவலுடன் தானே கேட்கிறோம். எளிமையாகவாவது செய்ய ஒப்புக்கொள்ளக்கூடாதா?

:?:

பிகு அண்ணாவின் தங்கை

mania
05-08-2004, 08:12 AM
சேரன் - உங்களால் நிழற்படம் கொடுக்க முடியுமா.. உதவி செய்ய பரம்ஸ், மைதிலி , நான் இருக்கோம்....





அன்புடன்

மன்மதன்

தலைய தலையாட்ட வைக்கமுடியல.. பேசவந்திட்டீர்..



மணியா அண்ணா.. நாங்களெல்லாம் ஆவலுடன் தானே கேட்கிறோம். எளிமையாகவாவது செய்ய ஒப்புக்கொள்ளக்கூடாதா?

:?:

பிகு அண்ணாவின் தங்கை



:lol: :lol: நீ ஆவலுடன் எளிமையாக கேட்பதால் நான் வெறும் அவலை கொடுத்தால் போதுமா...... :lol: :lol: எனக்கு முன் பதித்தவர்கள் என்ன அளவுக்கு கடின உழைப்பை போட்டீர்கள் என்று எனக்கு தெரியும். எனக்கு திடீரென்று வேலை விஷயமாக ஒரு 4 , 5 நாட்கள் வெளியூர் செல்ல வேண்டி வரும். முக்கியமாக மன்றத்தில் உள்ள எல்லா முக்கியமான பதிவுகளையும் படித்தாக வேண்டும் . அதற்கு எனகு பொறுமையும் கிடையாது.....நேரமும் இல்லை.....இதையெல்லாம் பார்க்கும் போதுதான் நான் தீர்மானமாக மறுக்க வேண்டியிருக்கிறது...... :cry: :cry: தவறாக எடுத்துக்கொள்ளாதீர்கள் தயவு செய்து.........

அன்புடன்

தங்கையின் அண்ணன்

அறிஞர்
06-08-2004, 03:17 AM
இந்த பக்கம் வராததற்கு மன்னிக்கவும்.....



எத்தனை நாளில் தயார் பண்ணனும்....



சேரன் முன்பு கிண்டிய மாதிரி... சிறிய அளவில் உப்புமா கிண்ட நான் ரெடி....



என்ன மன்மதா.. நீர் செய்கிறீரா.. இல்லை... நான் செய்யட்டுமா..



உதவும் கரங்கள் (பரம்ஸ், மைதிலி, கவி மற்றும் மன்மதன்) இருப்பதால்.... கடினம் ஒன்றும் இருக்காது என எண்ணுகிறேன்...

இளசு
25-08-2004, 04:47 AM
அன்பின் அறிஞரின் அற்புத நிழற்படம் இங்கே ----

http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=4370





அடுத்த ஒளி ஓவியர் யாரு..?

இக்பால்
30-08-2004, 11:07 AM
ஏறக்குறைய ஒரு சுற்று வந்து விட்டது.



நிழற்படம் தன் உற்சாகம் குறையாமல் சிறப்புடன் தொடர...

எல்லோருக்கும் இன்னும் ஒரு முறை தரும் ஊக்கம் கொடுக்க...

இளசு அவர்கள் அடுத்த நிழற்படம் தர முன் மொழிகிறேன்.



-அன்புடன் இக்பால்.

இளசு
01-09-2004, 09:11 PM
ஆலோசனைக்கு நன்றி இக்பால் அவர்களே..



இன்னும் தராதவர்கள் விரும்பி இம்மாதம் முன்வந்தால்

சென்ற ஆண்டுமலர் நான் இம்மாதம் ஈடாகப் பதிகிறேன்..



நண்பர்களின் தெரிவைத் தொகுத்து தரவேண்டிய பணி அது..

நேரம் சரியாக அமையாமல் தள்ளிப்போனபடி உள்ளது..



இப்படி ஒரு பேரம் குதிர்ந்தால், ஆண்டு மலருக்கு நேரம் பிறக்கும்..

அறிஞர்
02-09-2004, 03:53 AM
இந்த மாதத்திற்கு என் விருப்பம்...



இளந்தமிழ்ச்செல்வன் அல்லது தேம்பா....

இக்பால்
02-09-2004, 04:18 AM
இளசு அவர்களின் பதிலுக்கு நன்றியும்,



ஆண்டு மலருக்கு முன்வாழ்த்துகளும் தெரிவித்து...



அறிஞருக்கு வழிமொழிகிறேன்.



-அன்புடன் இக்பால்.

மன்மதன்
02-09-2004, 04:36 AM
ஆண்டு மலர் தொகுத்து வெளியிடும் இளசு அவர்களுக்கு இப்பவே வாழ்த்தினை தெரிவித்து கொள்கிறேன்..

இந்த மாத நிழற்படத்தை சேரன் கொடுக்கலாமே..

அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
02-09-2004, 04:38 AM
இளசு அண்ணாவின் ஆண்டு மலரை ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

இளசு
12-09-2004, 07:26 AM
நண்பர்களே

மன்ற நிழற்படங்கள் பற்றி நண்பன் தொடங்கிவைத்த அலசல் இங்கே..
http://www.tamilmantram.com/board/viewtopic.php?t=4442

அங்கே உங்கள் எண்ணங்களை சொல்லுங்கள்..

அதுபோக, இம்மாத நிழற்படத்தை அளிக்க விருப்பம் யாருக்கு?

அதையும் சொல்லிட்டுப் போங்க...

சேரன்கயல்
12-09-2004, 10:17 AM
இந்த மாத நிழற்படத்தை சேரன் கொடுக்கலாமே..



அன்புடன்

மன்மதன்



புதியவர்கள் கொடுக்கட்டுமே, அப்போ தான் புது புது விசயங்கள் தெரிந்துக் கொள்ள முடியும்.



(சேரா, மவனோ-க்கு என்ன ஆச்சு, கொஞ்சம் தனியா கவனிங்க... :wink: )



மவனுக்கு லொள்ளு தாங்கலை சம்பந்தி... :evil:

நம்ம "தலை" எழுத்து அப்படி...

(நான் தலை பெயரை போட்டுக் கொடுக்கலை சாமி...) :wink:

சேரன்கயல்
12-09-2004, 10:19 AM
இனிய இளசு...
ஆண்டு மலர் உங்கள் கைவண்ணத்தில்...சபாஷ்...
மாத நிழற்படத்துக்கே விழி பிதுங்குகிறது...ம்ம்ம்ம்...
முன்வாழ்த்துக்கள் இளசு...

kavitha
13-09-2004, 05:22 AM
இளசு அண்ணாவிற்கு வாழ்த்தும் பாராட்டும் சொல்ல வயதில்லை.
ஆனால் மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
ஆண்டுமலர் தயாரிக்க என் உதவி தேவைப்படின் நிச்சயம் உதவி செய்கிறேன்.

அன்புடன், தங்கை

mythili
13-09-2004, 05:39 AM
ஆண்டு மலரை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் இளசு அண்ணா :-)

அதென்னப்பா, தலை(மணியா அண்ணா), ஒவ்வொரு முறையும் டிமிக்கு கொடுத்துக் கொண்டு இருக்கிறார்......யாராவது கேட்கக்கூடாதா :wink: :wink: :wink:

நான் இதை எப்போதும் போல ரகசியமாகத்தான் சொன்னேன்...... :wink:

அன்புடன்,
மைதிலி

பரஞ்சோதி
13-09-2004, 07:39 AM
இளசு அண்ணாவின் ஆண்டுமலர் தயாரிப்பு என்னுடைய வாழ்த்தும், ஆர்வமும்.

தங்கை உதவும் போது தம்பியின் கை பூ பறிக்கவா போகும். மட்டையை வீசி விட்டு ஓடி வருகிறேன்.

மன்மதன்
13-09-2004, 09:29 AM
எல்லோரும் தொகுத்து அனுப்பியிருக்கிறோம்.. அதை சீர் செய்வது என்பது ரொம்பவும் கடினம்.. எதாவது உதவி தேவைப்பட்டால் தெரிவியுங்கள் இளசு அண்ணா..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
20-09-2004, 06:58 AM
இளசு... நிழற்படம் தயாரிக்க... சுற்று முறையில் ஒரு வருடத்திற்கு... நாம் தொகுப்பாளரின்... அட்டவணையை தயாரிக்கலாமே...

mythili
20-09-2004, 07:22 AM
அறிஞர் சொல்லவது கூட நல்ல யோசனையாகத் தான் இருக்கிறது,

ஆனால் எல்லோரும் அதற்கு ஒற்றுக்கொள்ள வேண்டுமே :?:

அன்புடன்,
மைதிலி

இளந்தமிழ்ச்செல்வன்
20-09-2004, 10:39 AM
இந்த மாதத்திற்கு என் விருப்பம்...



இளந்தமிழ்ச்செல்வன் அல்லது தேம்பா....



அன்புள்ள அறிஞர் அவர்களே,



தாங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைகும், முன்மொழிந்ததற்கும் மிக்க நன்றி.



என் வேலை காரணமாக வெளியில் நிறைய சுற்றுவதால் என்னால் தவிர்க்கமுடியாமல் மறுக்கிறேன். மன்னிக்கவும்.



எனக்கு வாய்ப்பிருந்திருந்தால் நீங்கள் முதல்முறை கூறியபோதே வேலைகளை ஆரம்பித்திருப்பேன். இன்றுதான் இப்பதிவினை காண்கிறேன். தாமதத்திற்கு வருந்துகிறேன்.

அறிஞர்
20-09-2004, 04:25 PM
அன்புள்ள அறிஞர் அவர்களே,

தாங்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைகும், முன்மொழிந்ததற்கும் மிக்க நன்றி

என் வேலை காரணமாக வெளியில் நிறைய சுற்றுவதால் என்னால் தவிர்க்கமுடியாமல் மறுக்கிறேன். மன்னிக்கவும்.

எனக்கு வாய்ப்பிருந்திருந்தால் நீங்கள் முதல்முறை கூறியபோதே வேலைகளை ஆரம்பித்திருப்பேன். இன்றுதான் இப்பதிவினை காண்கிறேன். தாமதத்திற்கு வருந்துகிறேன்.

எந்த மாதம் தயாரிப்பதாக இருக்கிறீர்கள்.......

திசைமாறிய பறவையில் உள்ள கலந்தாலோசனை.. உங்களுக்கு உதவியாக அமையும்

எல்லா பதிவையும் படித்து... உங்கள் கருத்துக்களை.. கூறுங்கள்.. தளத்தில் ஒவ்வொரு பதிப்பு எவ்வாறு ஆராயப்பட்டது... என்று கூறுவதுதான் நிழற்படத்தின் நோக்கம்....

இக்பால்
21-09-2004, 10:12 AM
இதசெ தம்பியின் பொறுப்பான பதில் அறிஞருடன் வழிமொழிந்தவன்
என்ற வகையில் எனக்கும் மகிழ்ச்சி கொடுக்கிறது.

நன்றிங்க தம்பி. நேரம் கிடைக்கும்பொழுது ஒரு முறை கொடுங்கள்.

உங்கள் கரிகாலன் அண்ணாவுடன் சந்திப்புக்கான கட்டுரை இந்த
எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.

-அன்புடன் இக்பால்.

அறிஞர்
21-09-2004, 10:22 AM
இதசெ தம்பியின் பொறுப்பான பதில் அறிஞருடன் வழிமொழிந்தவன்

என்ற வகையில் எனக்கும் மகிழ்ச்சி கொடுக்கிறது.



நன்றிங்க தம்பி. நேரம் கிடைக்கும்பொழுது ஒரு முறை கொடுங்கள்.



உங்கள் கரிகாலன் அண்ணாவுடன் சந்திப்புக்கான கட்டுரை இந்த

எதிர்பார்ப்பை மேலும் வலுப்படுத்துகிறது.



-அன்புடன் இக்பால்.



எங்க அண்ணா பார்த்து ரொம்ப நாளாயிடுச்சு.. எப்படியிருக்கிங்க.... :lol: :lol: :lol: :lol: :lol:

இக்பால்
21-09-2004, 10:41 AM
நன்றாக இருக்கிறேன் அறிஞர் தம்பி....

நீங்களும் குடும்பமும் நலம்தானே? -அன்புடன் அண்ணா.

இளந்தமிழ்ச்செல்வன்
30-09-2004, 06:33 AM
நண்பர்களே தங்கள் ஊக்கத்துக்கு நன்றி. இன்று சில பகுதிகள் பதிந்துள்ளேன். பார்த்து கருத்து கூறவும்.

நிழற்படம்

நன்றி

மன்மதன்
30-09-2004, 06:41 AM
நேரம் எடுத்தாலும் சிறப்பாக செய்த இ.த.செக்கு பாராட்டுக்கள்..
அன்புடன்
மன்மதன்

அறிஞர்
26-10-2004, 09:17 AM
செப்டம்பர் மாதம்.. நிழற்படம் யாரும் கொடுக்கவில்லை......

யாராவது தயாரிக்கிறீர்களா...

உதவி தேவையா......

இளசு
28-10-2004, 06:29 AM
யாரும் தயாரிப்பதாகத் தெரியவில்லை அறிஞரே..

பலருக்கும் வேலைப்பளு இருக்கிறது என்று எண்ணுகிறேன்.

மன்மதன்
28-10-2004, 06:55 AM
அக்டோபரையும் சேர்த்துக்கொள்வோம்.. இன்னும் 3 நாட்கள்தானே இருக்கு.. இந்த இரண்டு மாதத்திற்கும் யார் பண்ணப்போறா??

இராகவன் செப்டம்பர் பண்ணட்டுமே..

அன்புடன்
மன்மதன்

அறிஞர்
28-10-2004, 06:58 AM
மன்மதன் சொல்வது போல்.. இராகவனுக்கு நேரம் இருந்தால் செய்யட்டும்.....

gragavan
28-10-2004, 08:14 AM
செப்டம்பருக்கா நானா! எத்தனை நாள் கொடுப்பீர்கள்? யாரேனும் உதவிக்கு வந்தால் கண்டிப்பாகச் செய்யலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

வதனரூபர் இராகவனுக்குச் சொன்னதென்ன? இங்கே பாருங்கள்.
http://www.tamilmantram.com/board/viewtopi...p?p=91278#91278

அறிஞர்
28-10-2004, 09:01 AM
உதவ நாங்கள்.. தயார்...

நீங்கள்.. விருப்பப்பட்ட நாட்களை எடுத்துக்கொள்ளுங்கள்... (ஒரு வாரம் ஓகேயா)

gragavan
28-10-2004, 11:47 AM
ஒரு வாரம் போதும் அறிஞரே. என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு ஒரு தனிமடல் அனுப்புங்கள். உடனே தொடங்கிவிடலாம்.

அன்புடன்,
கோ.இராகவன்

அறிஞர்
29-10-2004, 04:22 AM
போன நிழற்படம்.. இ.தெ.செ... கொடுத்துள்ளார். படித்து.. அதை மாதிரி உங்கள்.. பாணியில் கொடுங்கள்.....

kavitha
29-11-2004, 07:55 AM
அக்டோபர் மாத நிழற்படம் தயாரித்துக்கொண்டிருப்பவர் திரு. பிரியன் அவர்களா?

இளசு
30-11-2004, 05:32 AM
அக்டோபர், அடுத்து நவம்பர் மாத நிழற்படங்கள் காத்திருக்கின்றன கவீ..

முன்வந்து பொறுப்பேற்க யார் வருகிறார்கள் எனப் பார்ப்போம்.

அறிஞர்
14-06-2005, 08:46 AM
நிழற்படம்.. அமைப்பது.. சுழற்சிமுறையில் வைத்துக்கொள்ளலாம்.... என்ன நினைக்கிறீர்கள் அன்பர்களே....

மன்மதன்
14-06-2005, 09:07 AM
இன்னும் ஓரிரு தினங்களில் நம்முடைய நண்பர் 'பிரியன்' அவர்கள் ஒரு மெகா திரைப்படம் .. சாரி. நிழற்படம் கொடுக்க போகிறார். அவருக்கு முன் கூட்டிய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்..

(அவரின் நிழற்படம் , கடைசி நிழற்படத்தில் தொடர்ச்சியாக இருக்கும்.. அதாவது இ.த.செயின் நிழற்படத்திலிருந்து இதுவரை பதித்த பதிவுகளை உள்ளடக்கி இருக்கும்.
வாழ்த்துக்கள் பிரியன் )
அன்புடன்
மன்மதன்

பிரியன்
14-06-2005, 09:17 AM
மன்மதன் நான் தயாரித்து கொண்டிருப்பது புதிய மன்றத்திற்கான நிழற்படமே, மேலும் இதசெ செய்தது செப்டம்பர் மாதம் என்று நினைக்கிறேன். அதன் தொடர்ச்சியாக தருவதென்பது மிகவும் கடினம். மேலும் நானும் இரண்டு மாதங்கள் பங்கேற்கவில்லை. முடிந்தவரை அந்த இடைவெளியை சுருக்கமாக கொடுக்க முயற்ச்சிக்கிறேன். வெள்ளி அல்லது சனிக்கிழமை நிழற்படம் உங்கள் பார்வைக்கு இருக்கும்...

மன்மதன்
14-06-2005, 09:24 AM
நன்றி பிரியன். உங்கள் சௌகரியம் போல் செய்யுங்க..
தானாக முன் வந்து செய்வதற்கு அனைவரின் சார்பிலும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்..
அன்புடன்
மன்மதன்

பரஞ்சோதி
14-06-2005, 09:53 AM
பிரியனா கொக்கா,

பிரியனுக்கு படமா?

மன்ற சந்திரமுகியாக அமைய வாழ்த்துகள்.

அறிஞர்
14-06-2005, 10:07 AM
நன்றி பிரியன்.. தங்கள் வசதி போல் கொடுங்கள்......

புது முயற்சிக்கு வாழ்த்துக்கள்...

இனி ஒவ்வொருவராக.. செய்யலாம்... அடுத்து யாரு....

பிரியன்
14-06-2005, 11:23 AM
பிரியனா கொக்கா,

பிரியனுக்கு படமா?

மன்ற சந்திரமுகியாக அமைய வாழ்த்துகள்.

பரஞ்சோதி ஏன் இப்படி வாறீங்க . சந்திரமுகியா ? பாபாவான்னு ரீல் விட்ட பிறகுதான தெரியும். ஏதோ பழைய சூழலை கொண்டு வரும் ஒரு முயற்ச்சியாகத்தான் நிழற்படம் செய்யும் எண்ணமே வந்தது. திட்றதுக்காகவது நிழற்படம் செஞ்ச நம்ம பழைய உறவுகள் வரவேண்டுமென்பதற்காகவே இந்த முயற்சி....

அறிஞர்
14-06-2005, 11:30 AM
பரஞ்சோதி ஏன் இப்படி வாறீங்க . சந்திரமுகியா ? பாபாவான்னு ரீல் விட்ட பிறகுதான தெரியும். ஏதோ பழைய சூழலை கொண்டு வரும் ஒரு முயற்ச்சியாகத்தான் நிழற்படம் செய்யும் எண்ணமே வந்தது. திட்றதுக்காகவது நிழற்படம் செஞ்ச நம்ம பழைய உறவுகள் வரவேண்டுமென்பதற்காகவே இந்த முயற்சி....
நல்ல முயற்சி.. தங்கள் எண்ணமே எங்கள் எண்ணமும்.. அது வெற்றியடைய வாழ்த்துக்கள்...

இளசு
24-02-2008, 11:36 AM
தற்செயலாய் இத்திரி கண்ணில் பட்டது இன்று..

மின்னிதழ் (செல்வா) -ன் முன்னோடி இந்நிழற்படங்கள்.

ஆரம்பித்த அஞ்ஞானி எங்கே???!

kavitha
25-02-2008, 10:02 AM
மின்னிதழ் படித்தேன். நவீனத்துவமாக மிக அழகாக இருந்தது.
குறும்பாக்களும், கடி சிரிப்புகளும் கையில் நிஜ இதழையே புரட்டிப்பார்ப்பது போல் இருந்தது.தொகுத்த அனைவருக்கும் எனது வாழ்த்துகள்

ஒரு சிறிய விண்ணப்பம்....
இந்த மின்னிதழ் மாதா மாதம் வரும் என்றால்....
சென்ற மாதத்தின் சிறந்த பதிவுகளை தேர்ந்தெடுத்து....
அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கும் வண்ணம் செய்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பது என் எண்ணம்.
தொகுப்பாளினிகளும் கவனிக்க!

நண்பன் - பறவைப்பார்வை, ராம்பால் - கானகக் குரல் போல கவிதை பக்கத்தை விமர்சிக்கலாமா? உடன்பிறப்புகள் ஒத்துக்கொண்டால் தனிப்பக்கம் ஆரம்பிக்க என் ஆவல்.

அமரன்
25-02-2008, 11:32 AM
நண்பன் - பறவைப்பார்வை, ராம்பால் - கானகக் குரல் போல கவிதை பக்கத்தை விமர்சிக்கலாமா? உடன்பிறப்புகள் ஒத்துக்கொண்டால் தனிப்பக்கம் ஆரம்பிக்க என் ஆவல்.
எப்ப ஆரம்பிக்கப்போகின்றீர்கள் அக்கா..:icon_b: எந்த வகையில் உங்களுக்கு நாம் உதவேண்டும்.:) சொன்ன அடுத்த நொடி செய்துடுவோம்..

அனுராகவன்
25-02-2008, 02:33 PM
அப்படியா..
கவி என்ன உதவி..
அதற்கும் நாங்க ரெடி..
அப்ப யொசிக்காம காரியத்துல இரங்குங்க...
நாங்கள் தொடர்ந்து வாறோம்..

இளசு
25-02-2008, 08:06 PM
அன்பு கவீ..

ஈடுபாடு உள்ள உங்களைப்போன்றவர்கள் நேரமும் கிடைத்து
அதுபோல் விமர்சனத்தொகுப்பு அளித்தால்?
கரும்புகள் தின்கிறவனுக்கு கரும்புச்சாறும் கொடுத்தால்?

இதற்கெல்லாம் அனுமதி வேண்டுமா என்ன?

காத்திருக்கிறோம் அருந்துவதற்கு!

kavitha
26-02-2008, 07:24 AM
அனுமதிக்கு நன்றி அண்ணா. அமரன், அனு தேவைப்படின் உங்களை அழைக்கிறேன். ஆதரவிற்கு மிக்க நன்றி.

இளசு
26-02-2008, 05:03 PM
நானும் உதவக் காத்திருக்கிறேன் கவீ...
தேவையெனில் அண்ணனை அழைக்கலாம்.

kavitha
20-03-2008, 11:01 AM
நானும் உதவக் காத்திருக்கிறேன் கவீ...
தேவையெனில் அண்ணனை அழைக்கலாம்.

நன்றி அண்ணா. அண்ணா என்னால் பழைய திஸ்கி பதிவுகளை படிக்கமுடியவில்லை. உதவுவீர்களா?

அனு, அமரன் - ஜனவரி மாத பதிவுகளின் சுட்டிகளை மட்டும் தேடித்தர முடியுமா?

அமரன்
25-05-2008, 10:22 PM
நன்றி அண்ணா. அண்ணா என்னால் பழைய திஸ்கி பதிவுகளை படிக்கமுடியவில்லை. உதவுவீர்களா?

அனு, அமரன் - ஜனவரி மாத பதிவுகளின் சுட்டிகளை மட்டும் தேடித்தர முடியுமா?

அச்சச்சோ..
உதவுவதாகச் சொல்லிவிட்டு இந்தப்பக்கம் எட்டிப்பார்க்காமல் இருந்துவிட்டேன். மன்னியுங்கள் கவீக்கா.. மேமாதம் முடியும் நேரம்.. மேமாத திரிகளின் திரட்டைத் தரவா?

யுனிக்கோட்டாக்கத்தின்போது பல நிழல்படப்பதிவுகள் கண்ணில் பட்டன. (சுட்டிகள் பின்னர் தருகிறேன்.) தொடர்ந்தால் என்ன என்றும் தூண்டின. சொந்தங்கள் சொல்வது என்னவோ? வரவேற்றால், சின்னத் திருத்தத்துடன் அண்ணன் வழியில் பயணிப்போம்.. எனக்கு/அன்றாடம் மன்றம் வரும் பொறுப்பாளர்களுக்கு தனிமடல்கள் வந்து குவியட்டும்..

இளசு
30-08-2008, 05:06 PM
அன்பு அமரா,

கவீ சில வாரங்களாய்க் காணவில்லை..

மீண்டும் வந்தவுடன் இத்திரியை கவீ கண்ணில் காட்டவேண்டும்!

SS_குமார்
02-09-2008, 07:39 AM
அன்பு வேண்டுகொள்! என்னால் வேலை வாய்ப்பு பதிவுகளை படிக்கமுடியவில்லை. உதவுவீர்களா?

ஓவியன்
02-09-2008, 07:46 AM
அன்பு வேண்டுகொள்! என்னால் வேலை வாய்ப்பு பதிவுகளை படிக்கமுடியவில்லை. உதவுவீர்களா?

வேலைவாய்ப்புப் பகுதி குறிஞ்சி மன்றத்தில்(சிறப்பு அனுமதி உள்ளவர்களுக்கு மட்டும்) இருக்கிறது நண்பரே...!!

குறிஞ்சி மன்றப் பதிவுகளைப் படிக்க நீங்கள் மன்றத்தில் பண்பட்டவர் தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்...

பண்பட்டவர் தகுதியைப் பெற இந்த திரியைச் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=17214) சுட்டுங்கள்...

பண்பட்டவராக நீங்கள் குறைந்தது 25 தமிழ் பதிவுகளை மன்றத்தில் பதித்திருக்க வேண்டும்...

kavitha
06-09-2008, 09:52 AM
தொடர்ந்தால் என்ன என்றும் தூண்டின. சொந்தங்கள் சொல்வது என்னவோ? வரவேற்றால், சின்னத் திருத்தத்துடன் அண்ணன் வழியில் பயணிப்போம்.. எனக்கு/அன்றாடம் மன்றம் வரும் பொறுப்பாளர்களுக்கு தனிமடல்கள் வந்து குவியட்டும்..
__________________
-அமரன்


அன்பு அமரா,

கவீ சில வாரங்களாய்க் காணவில்லை..

மீண்டும் வந்தவுடன் இத்திரியை கவீ கண்ணில் காட்டவேண்டும்!


கண்ணில் பட்டுவிட்டது அண்ணா.
வேலை பளு... அதனால் முன்பு போல் உலவ முடியவில்லை.

அமரன் சொன்னபடி, மே-மே சிறந்த திரிகளை வரும் மே மாதத்தில் திரட்டி தருகிறேன்.

அதுவரை விருப்பமுள்ளவர்கள் நிழல்படம் தரலாமே.
நன்றி