பிரியன்
01-12-2004, 03:38 PM
தீண்டிப் போ !
எச்சில் வடிய
உறங்கி கொண்டிருப்பேன்.
சேலையால் துடைத்துவிட்டு
ஒரு பழிப்பு காட்டுவாய் ..
கள்ளனாய் கண்விழித்து -
கை பற்றி இழுத்தால்
கூந்தல் ஈரத்தால்
நனைத்து நழுவிடுவாய்.
கலங்கும் மனம் கண்டு
மார்பிலிட்டு கொள்வாய் ..
நேசமாய் தலை கோதி
உச்சியில் பனிமலை
பொழியும் நின் இதழ்கள் .
கண்கள் சொருகி சேயாய்
மடி உறங்கி போகிறேன்..
பேசாமலே நான்
மரணம் விரும்பும்
கணங்கள் .
என்னுள் என்னுள்
எல்லாமூம் உன்
உயிரை முகர்ந்து
சிறுவிரலில் சொடுக்கெடுத்து,
பாதமதில் மருதாணி வைத்தேன்
விடியலில் சிவப்பாய்
உன் பாதமும்,என் முகமும்
தனித்த என்னை விட்டு
கூரை எரிக்கும் நெருப்பே-
எனை தீண்டி போ !!!!!
எச்சில் வடிய
உறங்கி கொண்டிருப்பேன்.
சேலையால் துடைத்துவிட்டு
ஒரு பழிப்பு காட்டுவாய் ..
கள்ளனாய் கண்விழித்து -
கை பற்றி இழுத்தால்
கூந்தல் ஈரத்தால்
நனைத்து நழுவிடுவாய்.
கலங்கும் மனம் கண்டு
மார்பிலிட்டு கொள்வாய் ..
நேசமாய் தலை கோதி
உச்சியில் பனிமலை
பொழியும் நின் இதழ்கள் .
கண்கள் சொருகி சேயாய்
மடி உறங்கி போகிறேன்..
பேசாமலே நான்
மரணம் விரும்பும்
கணங்கள் .
என்னுள் என்னுள்
எல்லாமூம் உன்
உயிரை முகர்ந்து
சிறுவிரலில் சொடுக்கெடுத்து,
பாதமதில் மருதாணி வைத்தேன்
விடியலில் சிவப்பாய்
உன் பாதமும்,என் முகமும்
தனித்த என்னை விட்டு
கூரை எரிக்கும் நெருப்பே-
எனை தீண்டி போ !!!!!