PDA

View Full Version : நாளை உண்டு நமக்கு...



thamarai
14-01-2005, 08:15 AM
நாளை உண்டு நமக்கு...

சுதந்திர பூமி தமிழீழத்துக்காய்
சுதந்திர வேட்கை மனதில்
சூழ விழித்திருந்த வேளைதனில்
சுனாமி என்ற பெயர் கொண்ட
சூறாவளி சுழன்று சுழன்று அடித்தே
சூறையாடி விட்டது எம் இனத்து
சொந்த பந்தங்களை

தண்ணீருக்குள் தண்ணீராய் ஈரமாக
இணைந்திருக்கும் உனக்கில்லை இரக்கம்
கண்ணுக்குள் கண்ணீராய் இணைந்த எம்
நெஞ்சுக்குள் ஈரம் எமக்குண்டு

அடங்கி விட்டது உன் சீற்றம்
அடங்க வில்லை எம் உணர்வுகள்
ஆறாத்துயரில் அழுதிடும் எம் உறவுகளை
அணைத்திட எம் கரங்கள் உண்டு

மனித அவலத்தின் உச்சியின் கதறல்களில்
மனிதம் விழிப்புறட்டும்
இனம் மதம் தேசம் கடந்த
இணைந்த கைகள் இறுகப்பற்றியே
நாளை உண்டு நமக்கு என்றே
நாளைய பயணம் நல்வழியாக அமையட்டும்

samuthira
16-01-2005, 10:54 AM
நல்ல கவிதைக்கு, இன்பத்தமிழில் வாழ்த்து சொல்லத்தான் ஆசை... என் கணினி கோளாறால் ஆங்கிலத்தில் சொல்கிறேன். பாராட்டுக்கள் தோழி.

(பாரதியால் திருத்தப்பட்டது)

பாரதி
16-01-2005, 02:09 PM
நம்பிக்கை மீதும், மனித நேயத்தின் மீதும் உங்களுக்கு இருக்கும் எண்ணம் விரைவில் உண்மையாக வேண்டும். உண்மையாகும். பாராட்டுக்கள் தாமரை.

thamarai
16-01-2005, 03:22 PM
வாழ்த்து சொன்ன சமுத்திரா, பாரதிக்கு நன்றிகள்...

பிரியன்
17-01-2005, 06:31 PM
வேதனையும் , ஏக்கமும் வெளிப்படுத்திய கவிதை அருமை......



தமிழன் துயர் நீங்கும் விரைவில்......



தாய்மடியில் உறங்கிய எண்ணற்ற சொந்தங்களுக்காக என் பிராத்தனைகள்............

kavitha
23-01-2005, 12:37 PM
ஆறாத்துயரில் அழுதிடும் எம் உறவுகளை
அணைத்திட எம் கரங்கள் உண்டு

அற்புதம் தாமரை!

அறிஞர்
19-02-2005, 04:06 AM
நாளை பயணம் நலமாக அமைய சகோதரியுடன் வாழ்த்துக்கிறோம்...

அருமையான வரிகள்...

வாழ்த்துக்கள்.. தாமரை

அறிஞர்
19-02-2005, 04:06 AM
நாளை பயணம் நலமாக அமைய சகோதரியுடன் வாழ்த்துகிறோம்...

அருமையான வரிகள்...

வாழ்த்துக்கள்.. தாமரை