View Full Version : தண்ணீரின் தாகம் !!!
முத்து
03-05-2003, 02:17 PM
தண்ணீரின் தாகம் !
நான் ஒரு சிரஞ்சீவி !
காலச்சக்கரத்தால் அழிக்கப்படா
சிற்சில பேர்களிலே
நான் முதல்வன்.
நானே பெரும்பகுதி !
இவ்வுலகில் மட்டுமல்ல,
உங்கள் உடலிலும்தான்.
நான் சமத்துவத்திற்கோர் முன்னுதாரணம் !
கர்ப்பக்கிரகக் கடவுளையும்,
காரிருள் நெஞ்சம் கொண்ட கடையோனையும்
சமமாகப் பாவித்து நீராட்டுவதால்.
நான் தவிர்க்கமுடியாதவன் !
மண்ணை,பொன்னை,பெண்ணை வெறுத்தோரும்
என்னை வேண்டாமென்று சொல்லமுடியாததால்.
நான் பொதுநலவாதி !
பிறரை சுத்தமாக்கி
நான் அழுக்காவதால்.
நான் இவ்வுலகத் தேரின் அச்சாணி !
அதுமட்டுமல்ல,
அத்தேரின் சக்கரங்களும் நானேதான்.
தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்காதே என
என்னைப் பாராட்டும் மக்களே !
ஒரு சிறு விண்ணப்பம்,
கேவலமான, மக்களைக் கெடுக்கும் மதுவுக்கு
என் பெயரைச் சூட்டாதீர் !!!!
rambal
03-05-2003, 03:39 PM
அருமை முத்து அவர்களே...
தண்ணீரைப் பற்றி ஒரு வித்யாசமான கண்ணோட்டம்..
நீங்கள் ஒரு முத்தாய் திகழப்போகின்றீர்கள்...
பாராட்டுக்கள்..
இராசகுமாரன்
03-05-2003, 05:25 PM
அருமையான கவிதை நண்பரே..
கடைசியில் ஒரு விண்ணப்பத்தோடு அழகாக முடிந்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
முத்து
03-05-2003, 05:52 PM
அருமையான கவிதை நண்பரே..
கடைசியில் ஒரு விண்ணப்பத்தோடு அழகாக முடிந்துள்ளீர்கள்.
பாராட்டுக்கள்.
நன்றிகள் பல !மோதிரக் கையால் குட்டு வாங்கியமைக்கு மகிழ்கிறேன்.!
முத்து .. தலைவர் குட்டு வைக்கவில்லை.. உங்கள் விரலுக்கு
மோதிரம் வழங்கி இருக்கிறார்!
குமரன்
04-05-2003, 01:34 AM
முத்து...நீர்(தந்த ) க்கவிதை அருமை...
அனைவரையும் உற்சாகம் கொள்ள வைக்கும்
உங்கள் கையெழுத்தும்தான்...
பாராட்டுக்கள் பல.
அருமை முத்து... அசத்தலாய் படைத்திட்டமைக்கு பாராட்டுக்கள்!!!!
Narathar
06-05-2003, 04:36 AM
அடடா!
அழகான, அருமையான ஒரு கவிதை..............
உங்கள் பெயர் முத்து என்றிருப்பது சாலப்பொருந்தும்!
தண்ணீர் அருமை அது தேவையின் போது கிடைக்காமல் தவிக்கும் போது தான் தெரியும்.அருமை.முத்து
prabhaa
06-05-2003, 11:42 PM
கேவலமான, மக்களைக் கெடுக்கும் மதுவுக்கு
என் பெயரைச் சூட்டாதீர் !!!!
"கேவலமான" சொல்லிற்கு பிறகுள்ள ","வையும் நீக்கிவிடுங்கள்.
கேவலமான மக்கள் தான் அதைக் குடிப்பவர்கள்.
அருமையான் எண்ண ஓட்டம், பாராட்டுக்கள் முத்து.
madhuraikumaran
07-05-2003, 05:09 AM
கேவலமான மக்கள் தான் அதைக் குடிப்பவர்கள்.
போச்சு... பிரபாவுக்கு இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்....
முத்து.... தண்ணீர்க் கவிதை அருமை !! பாராட்டுக்கள் !!!
kaathalan
07-05-2003, 02:56 PM
முத்தானதும் அருமையான கவிதை தந்த கவிஞருக்கு நன்றிகள். உங்கள் கோரிக்கை பரிசிலிக்கப்படும். ஆமாம் நாங்கள் வைக்கும் பெயர் தண்ணி அல்லவா அது தண்ணீர் அல்லவே
அறிஞர்
08-05-2003, 07:41 AM
முத்தான கவிதைக்கு வாழ்த்துக்கள் ..
prabhaa
08-05-2003, 10:55 PM
போச்சு... பிரபாவுக்கு இன்னைக்கு நேரம் சரியில்லைன்னு நினைக்கிறேன்....
அதெப்படி அன்பரே, தமிழ் வளர்க்கும் நண்பர்கள் யாரும்
குடிக்கமாட்டார்கள் அயிற்றே. அதனால் தான் தைரியமாக
எழுதினேன்
inian
31-05-2003, 04:40 PM
"கேவலமான" சொல்லிற்கு பிறகுள்ள ","வையும் நீக்கிவிடுங்கள்.கேவலமான மக்கள் தான் அதைக் குடிப்பவர்கள்.
அருமையான் எண்ண ஓட்டம், பாராட்டுக்கள் முத்து.
அட ..அமெரிக்காவில் இப்படியும் ஒரு மனிதரா ?...வியப்புடன் பாராட்டுக்கள் பிரபா...
chezhian
31-05-2003, 09:07 PM
முத்து உங்கள் கவிதை மிக அருமை
பாராட்டுக்கள் + வாழ்த்துக்கள்...
முத்து
22-06-2003, 12:08 PM
பாராட்டிய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி..நன்றி...நன்றி...
முத்து
08-01-2004, 11:04 PM
நல்ல வேளையாக மன்ற விழாவுக்கு வந்த யாரும்
இதைப் படிக்கவில்லை ...
நண்பர் பிரபா தப்பித்தார் ... :) :D
kavitha
09-01-2004, 10:59 AM
சரியாகச்சொன்னீர்கள் பிரபா!
அப்படியும் அருந்துபவர்களை,
மட்டுமா பழிக்கிறார்கள்?
அவர்களை வளர்த்த தாயையும் தானே!
தன் தாயை நேசிப்பவன் எவனும்
தவறு செய்ய மாட்டான்.
கவிதை அருமை முத்து அவர்களே!
அசத்தலான கவிதை வரிகளில் கலக்கிய முத்துவிற்கு பாராட்டுகள்,வாழ்த்துகள்
பார்வையாளர்,படைப்பாளரானப்போ பதித்ததை கண்காணிப்பளாரானப்பிறகு வாழ்த்துகிறேன்.தாமதத்திற்கு மன்னிக்கவும்!
முத்து
09-01-2004, 09:09 PM
ரொம்ப நன்றிங்க நிலா ...
நன்றி கவிதா அவர்களே ...
ரொம்ப நன்றிங்க நிலா
என்ன முத்து திடீரென மரியாதை பலமா இருக்கு!ஒன்னுமேஏஏஏஏ புரியல உலகத்துலஆஆஆஆஆஆஅ
முத்து
09-01-2004, 10:25 PM
ரொம்ப நன்றிங்க நிலா
என்ன முத்து திடீரென மரியாதை பலமா இருக்கு!ஒன்னுமேஏஏஏஏ புரியல உலகத்துலஆஆஆஆஆஆஅ
திடீன்னா.. ?
அப்படியெல்லாம் இல்லை ..
நிலா மேல எப்பவுமே மரியாதை உண்டு ... :wink:
ஹலோஓஒ எப்பவும் நன்றி நிலான்னு சொல்லிட்டு இப்ப நன்றிங்க நிலான்னா?
கடைசிவரியப்பார்த்துட்டு பயந்துபோயிட்டேன் முத்து! :wink:
முத்து
09-01-2004, 10:33 PM
கடைசிவரியப்பார்த்துட்டு பயந்துபோயிட்டேன் முத்து!
நீங்க பயந்தால் பரவாயில்லை ..
ஆனால் உஷாராயிடாதீங்க ...
முத்து...
மன்றம் ஈந்த முத்தான இளவல்!
நீரின்றி அமையாது உலகு என்னும் பெருமை கொண்ட நீரின்
தாபத்தை கடைசி வரியில் வைத்துத் தந்த கவிதை!
நினைவுக்கடலில் மூழ்கிக் கண்டெடுத்த ''முத்து''!
எஸ்.எம். சுனைத் ஹஸனீ
12-01-2009, 04:34 PM
அட! அசத்தல்ங்க.
நேசம்
13-01-2009, 06:12 AM
உங்கள் பெயரை போல் முத்தான கவிதை.வாழ்த்துகள்.