poo
24-05-2003, 10:26 AM
அதிகாலை குளிரில்
விழித்திருந்தும் எழாமல்
நிமிடமொருமுறை தலைநீட்டி
வேகமாய் வைத்த நேரம் மிச்சமிருப்பதாய்
மனதுக்குள் பேசிக்கொண்டு
காபிபோடவும் மனசில்லாமல்
கால்களை மார்புமேல் போட்டு..
காட்சிகளை கனவுகளாக்கிவிட்டு
கனவுகளை காட்சிகளாய்
கற்பனை செய்து
விடியலில் தேடலை தேடிக்கொண்டிருக்கையில்
ஆலைச்சங்கு அலறியது...
பதறியெழுந்து
போர்வையொடு என்னையும்
உதறிவிட்டு..
குக்கரில் அரிசியிட்டு
மூன்றாம் விசிலில் நிறுத்தும்படி
என்னால் முடியாதென்றாலும்
அரைத்தூக்கத்தில் கட்டளையிட்டு
அவசர வேகத்தில்
குளியலறை நுழைந்தாள்..
அரைக்கண்ணால் கவனித்தேன்..
எடுக்க மறந்த மாற்றுத்துணி..
எரிச்சலடையாமல்(?!)
எழுந்து சென்று
எட்டிப்பார்த்தேன்...
செல்லமாய் ஒரு குட்டுவைத்து
"ஏனிந்த கஷ்டம் சார்"..
கண்களை பொத்தி
கதவை மூடினாள்..
காக்கா குளியல்..
குளித்துமுடித்த குயில்..
குளியலறைவிட்டு
கண்ணாடிமுன் சிறகடித்தது..
கண்களை கசக்கிக்கொண்டே
கட்டிலில் அமர்ந்து
காட்சிகளை கண்டிருக்கையில்..
துலக்க மறந்த பல்..
கழற்றிவிட்ட கூந்தல்..
அவள் கரங்களில் பிரஷ்..
என்னுடையதில் சீப்பு..
தேங்ஸ்டா செல்லம்
குங்குமத்தை வகிடில்..
கொஞ்சமாய் சாதம்
இரவே வைத்த புளிக்குழம்பு..
தயாரானவுடன்
கைப்பையை தோளில்
மாட்டி..
கண்ணங்களை பற்றி
சற்றே நிமிர்த்தி
உதடுகளில் சத்தமாய்
முத்தமிட்டு..
ஆபிஸ் போனதும்
போன் பண்றேன்..
பத்திரமாய் இருங்கள்..
படியிறங்கிப்போவதை
ஜன்னலில் கண்வைத்து
கண்கள் பனிக்க
பார்த்துக்கொண்டிருந்தேன்..
விபத்தொன்றில்
இருகால்களை இழந்தபின்
தந்தையாய்..தாயாய்.. மகனாய்..
துளியும் முகம்கோணாமல்
எனை நடத்தும்
என் மனைவியை
கண்கள் பனிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்..
விழித்திருந்தும் எழாமல்
நிமிடமொருமுறை தலைநீட்டி
வேகமாய் வைத்த நேரம் மிச்சமிருப்பதாய்
மனதுக்குள் பேசிக்கொண்டு
காபிபோடவும் மனசில்லாமல்
கால்களை மார்புமேல் போட்டு..
காட்சிகளை கனவுகளாக்கிவிட்டு
கனவுகளை காட்சிகளாய்
கற்பனை செய்து
விடியலில் தேடலை தேடிக்கொண்டிருக்கையில்
ஆலைச்சங்கு அலறியது...
பதறியெழுந்து
போர்வையொடு என்னையும்
உதறிவிட்டு..
குக்கரில் அரிசியிட்டு
மூன்றாம் விசிலில் நிறுத்தும்படி
என்னால் முடியாதென்றாலும்
அரைத்தூக்கத்தில் கட்டளையிட்டு
அவசர வேகத்தில்
குளியலறை நுழைந்தாள்..
அரைக்கண்ணால் கவனித்தேன்..
எடுக்க மறந்த மாற்றுத்துணி..
எரிச்சலடையாமல்(?!)
எழுந்து சென்று
எட்டிப்பார்த்தேன்...
செல்லமாய் ஒரு குட்டுவைத்து
"ஏனிந்த கஷ்டம் சார்"..
கண்களை பொத்தி
கதவை மூடினாள்..
காக்கா குளியல்..
குளித்துமுடித்த குயில்..
குளியலறைவிட்டு
கண்ணாடிமுன் சிறகடித்தது..
கண்களை கசக்கிக்கொண்டே
கட்டிலில் அமர்ந்து
காட்சிகளை கண்டிருக்கையில்..
துலக்க மறந்த பல்..
கழற்றிவிட்ட கூந்தல்..
அவள் கரங்களில் பிரஷ்..
என்னுடையதில் சீப்பு..
தேங்ஸ்டா செல்லம்
குங்குமத்தை வகிடில்..
கொஞ்சமாய் சாதம்
இரவே வைத்த புளிக்குழம்பு..
தயாரானவுடன்
கைப்பையை தோளில்
மாட்டி..
கண்ணங்களை பற்றி
சற்றே நிமிர்த்தி
உதடுகளில் சத்தமாய்
முத்தமிட்டு..
ஆபிஸ் போனதும்
போன் பண்றேன்..
பத்திரமாய் இருங்கள்..
படியிறங்கிப்போவதை
ஜன்னலில் கண்வைத்து
கண்கள் பனிக்க
பார்த்துக்கொண்டிருந்தேன்..
விபத்தொன்றில்
இருகால்களை இழந்தபின்
தந்தையாய்..தாயாய்.. மகனாய்..
துளியும் முகம்கோணாமல்
எனை நடத்தும்
என் மனைவியை
கண்கள் பனிக்க பார்த்துக்கொண்டிருந்தேன்..