PDA

View Full Version : உன் கண்களை பார்த்தே (பப்பி).



இளசு
03-05-2003, 06:12 AM
உன் கண்களை பார்த்தே

எழுதியவர் : பப்பி
----------------------------------------------------

என்னவளே இனி யாரையும்
நிமிர்ந்து பார்க்காதே


உன்
என்னை
கண்டு பிடித்து விடுவார்கள்


பப்பி

**********************************

சிந்தனை மட்டும் போதாது....செய் !!

**********************************

karikaalan
03-05-2003, 06:28 AM
கண்ணுக்குள் ஒளித்து வைத்திருக்கிறாளோ!

இவன் ஏன் ஒளிந்து வாழவேண்டும்? இன்னும் களவொழுக்கம் களையவில்லையோ?


நல்ல கவிதையே. வாழ்த்துக்கள் பப்பிஜி! இளவலுக்கு நன்றிகள்.

===கரிகாலன்

poo
03-05-2003, 09:44 AM
காதல் ரசம்..........

நன்றிகள் பப்பிக்கும்.. அண்ணனுக்கும்!!

e_roy123
03-05-2003, 11:31 AM
உன்னை கண்டு பிடித்து விடுவார்கள் என்பதர்க்காக, அவள் இனி யாரையும்

நிமிர்ந்து பார்க்க கூடாதா அல்லது இதிலும் உனது ஆண் ஆதிக்கமா ?

rambal
03-05-2003, 03:32 PM
கண்களில் கைது செய்தவள்..

இமைச்சிறையில் அடைத்து வைத்தவள்...

பாராட்டுக்கள்.. பப்பிக்கும்.. அண்ணனுக்கும்..

suma
05-05-2003, 02:17 AM
திருட்டுபயலை காதலிக்கின்றாயே.

இதனால் தான் காதலுக்கு கண் இல்லை

என்றார்களோ....

அறிஞர்
05-05-2003, 06:31 AM
கோழையை... காதலிப்பது.... சரியாக படவில்லை....

ஆதவா
07-01-2007, 09:26 AM
என்னவளே இனி யாரையும்
நிமிர்ந்து பார்க்காதே

உன்
என்னை
கண்டு பிடித்து விடுவார்கள்

காதல் கவிதை. வரி அமைப்புகளில் மாற்றம் இருக்கவேண்டுமென நினைக்கிறேன்.