View Full Version : அறையின் மூலையில்....
முத்து
21-06-2003, 02:59 AM
என் அறையின் மூலையில் ....
எழுதித் தீர்ந்த
பேனாக்கள்...
உழைத்துத் தேய்ந்த
செருப்புகள்....
பலர் படித்துக் கிழிந்த
புத்தகங்கள்...
காய்ந்து உலர்ந்த
மலர்கள்...
அனைத்தும் கடமை முடித்த
பெருமிதத்தில்...
அறையின் நடுவே புத்தம் புதிதாய்..
நான் மட்டும்....
Narathar
21-06-2003, 04:21 AM
ஒரு மனிதனுக்குத்தேவை அந்த உணர்வுதான்
அது இல்லை என்றுதான் பலர் புலம்பித்தள்ளுகிறார்கள்
அந்த உணர்வு உங்களுக்கிருப்பது மகிழ்ச்சியே..............
ஒவ்வொரு நாளும் புதியவனாய் ஒவ்வொரு கவிதை
இப்படி புத்துணர்ச்சியாய் எழுதிக்கொண்டே இருங்கள்
karikaalan
22-06-2003, 09:26 AM
அவன் தான் மனிதன். நித்தம் நித்தம் புதியதாய் அவனால் மட்டுமே வாழக் கூடும்.
வாழ்த்துக்கள், முத்துஜி!
===கரிகாலன்
முத்து
22-06-2003, 12:05 PM
நன்றிகள் நண்பர் நாரதருக்கும் ... அண்ணன் கரிகாலன் அவர்களுக்கும்...
யோசிக்கவைக்கும் முத்துக்கள் முத்து...
பாராட்டுக்கள்!!!
பாரதி
22-06-2003, 02:30 PM
மூளையில் இருப்பதை முளைக்க வைத்திருக்கும் முத்துவுக்கு பாராட்டுக்கள்.
அருமையான கவிதை!வாழ்த்துகள் நண்பரே!
சிந்தனைச் சிற்பி
என் தம்பி முத்து....
அவர் சிந்தனைச் சிப்பியில்
உதித்திட்ட முத்து ...
மிக இரசித்தேன்...
தம்பியைப் பாராட்டி மகிழ்கிறேன்...
noveltv
26-06-2003, 04:41 AM
நல்ல சிந்தனை நண்பரே!
வளரட்டும் உங்கள் கவிதைப்பணி!
puppy
09-01-2004, 07:57 PM
நல்ல கவிதை முத்து.........
Nanban
10-01-2004, 06:03 AM
புதியவனாகத் தினம் தினம் பிறப்பதற்கே தினமும் தூங்கி எழுகிறோம்.... அந்த தூக்கத்தையும் தொலைத்து விட்டு, கசங்கிப் போய் கிடக்கும் பலர் உண்டு...... நீங்கள் புத்தம் புதியவனாய் என்றதும் உங்களைப் பார்க்கும் பொழுது, நிம்மதியான ஆள் என்று தெரிகிறது.........
வாழ்த்துகள்.......
அறையின் நடுவே புத்தம் புதிதாய்..
நான் மட்டும்....
இப்ப நிலை என்ன?நீங்க மட்டுமா உக்கார்ந்திருக்கீங்க?கூடத்தென்றலும் தானே?