PDA

View Full Version : கண்ணீர் + கவிதை = காதல்



noveltv
07-04-2005, 08:37 AM
உன் கோபம்
பல்முளைக்காத
குழந்தையின் கவ்வல்...(கடி)

என் கோபமோ
தாவிகுதித்து தாயைமுட்டும்
கன்றின் துள்ளல்...

கவலை வந்தால்
நீ கண்ணீர்வடிவிலும்
நான் கவிதைவடிவிலும்
அழுகின்றோம்..

கண்ணீரின் தாய்
உன் விழிகள்
என்றால்..
என்
கவிதையின் தாய்
நீதானே..

இக்பால்
07-04-2005, 09:07 AM
நாவல்டி...கண்ணீருக்குக் காரணம் நீங்களாக இல்லாமல் இருந்தால் சரி.

அழகிய கவிதை....தொடருங்கள். -அன்புடன் இக்பால்.

kavitha
07-04-2005, 04:47 PM
"கவலை வந்தால்
நீ கண்ணீர்வடிவிலும்
நான் கவிதைவடிவிலும்
அழுகின்றோம்.."

அருமையான வரிகள் நாவல்டிவி.. தொடருங்கள்.வாழ்த்துக்கள்.

karikaalan
09-04-2005, 11:16 AM
நாவல்டிவிஜி

கவிதை நன்றாகவே வந்திருக்கிறது.

குழந்தையின் கவ்வலும், கன்றின் முட்டலும் இன்பமே பயக்குமன்றோ?

உங்கள் கவிதைக்கு அவள் தாய் என்றால், அவள் கண்ணீருக்கு நீங்கள் தந்தை!

===கரிகாலன்