View Full Version : ஒரு ஹைக்கூ முயற்சி
காரைக்குடியான்
30-05-2003, 11:43 AM
செத்த எலிவால் மீது
படாமல் வண்டி ஓட்டுகிறான்
என்னை அறைந்த கணவன்.
....
ஒரு இறந்த எலிக்குக் கொடுக்கும் மரியாதையை ஒரு மணைவிக்கு கொடுக்க மாட்டேன் என்கிறானே என்று அழகாக எடுத்துச் சொல்லும் உங்கள் கவிதைக்கு ஒரு சபாஷ்.
முதல் பதிவே அருமையாக உள்ளது. பாராட்டுக்கள்.
prabha_friend
30-05-2003, 03:46 PM
அவர் வீட்ல புலி , வெளியில எலி போல இருக்கு . அதான் தனது இனம் செத்துகிடப்பதை பார்த்துவிட்டு ஒதுங்கிப்போகிறார் . நல்ல கவிதை காரக்குடியாரே . தொடருங்கள் உங்கள் கவிதையை , படிக்க ஆவலுடன் இருக்கிறேன் .
karikaalan
30-05-2003, 04:20 PM
காரைக்குடியாரே, வாழ்த்துக்கள். மனிதாபிமானம் இல்லாத கயவர்களுடைய முகமூடி எவ்வாறிருக்கும் என்பதற்கு இது ஒரு சான்று.
===கரிகாலன்
அருமையான பதிப்பு!தொடருங்கள் நண்பரே!
வாழ்த்துக்கள்!
காரைக்குடியான்
31-05-2003, 04:44 AM
உங்கள் பாராட்டுக்கு நன்றி. அவ்வப்போது எழுதும் எனக்கு ஊக்கமளிக்கிறது உங்கள் வார்த்தைகள்
பாரதி
31-05-2003, 06:20 AM
அருமையான தொடக்கம் காரைக்குடியாரே! என் பாராட்டுக்கள்.
தொடரட்டும் உங்கள் நற்பணி.
செத்த எலிவால் மீது
படாமல் வண்டி ஓட்டுகிறான்
என்னை அறைந்த கணவன்
ஹ ஹ பாவம் இந்த மனைவி.. இப்படியா ஒப்பிடுவது? இருப்பினும் அழகுதான்.