நிலா
30-05-2003, 09:48 PM
பெண்ணே!
நான் உனைப்பார்க்காத வேளையென்றெண்ணி
நீ எனை ஓரக்கண்ணால்...........
என் உடை கசங்குதல்கண்டு
உன் முகம் சுருங்குகிறதுதானே?
எனக்குப்பிடித்த நிறங்கள்தானே
உன் உடையில்?
பேச எனை நெருங்கிவந்து
தள்ளிச்செல்கிறாயல்லவா?
உன்பெயரின் முதலெழுத்தை உச்சரிப்பினும்
உன் பெயரோ எனவெட்கித்தலைகுனிகிறாயல்லவா?
தூரத்தில் நான் தடுக்கிவிழ காற்றில்
உதவிக்கரம் நீட்டுகிறாய்தானே?
நான் உன் பார்வைக்கு வரவில்லையென்றால்
வருத்தப்படுகிறாயல்லவா?
உன் உறவுக்கூட்டத்தில் எனைத்தேடுகிறாய்தானே?
நீ செய்வதெல்லாம் எனக்கெப்படி............வியக்கிறாய்தானே?
நீ செய்யும் அத்துணை செயல்களும் என்னாலும்..............
இதுதான் காதலா?
நான் உனைப்பார்க்காத வேளையென்றெண்ணி
நீ எனை ஓரக்கண்ணால்...........
என் உடை கசங்குதல்கண்டு
உன் முகம் சுருங்குகிறதுதானே?
எனக்குப்பிடித்த நிறங்கள்தானே
உன் உடையில்?
பேச எனை நெருங்கிவந்து
தள்ளிச்செல்கிறாயல்லவா?
உன்பெயரின் முதலெழுத்தை உச்சரிப்பினும்
உன் பெயரோ எனவெட்கித்தலைகுனிகிறாயல்லவா?
தூரத்தில் நான் தடுக்கிவிழ காற்றில்
உதவிக்கரம் நீட்டுகிறாய்தானே?
நான் உன் பார்வைக்கு வரவில்லையென்றால்
வருத்தப்படுகிறாயல்லவா?
உன் உறவுக்கூட்டத்தில் எனைத்தேடுகிறாய்தானே?
நீ செய்வதெல்லாம் எனக்கெப்படி............வியக்கிறாய்தானே?
நீ செய்யும் அத்துணை செயல்களும் என்னாலும்..............
இதுதான் காதலா?