PDA

View Full Version : நாணயம்



Mano.G.
17-04-2003, 10:32 AM
நாணயம்.

நாணயத்தின் மறுபெயர் பணம்
மனிதனின் மறுபக்கம் அவனின் நாணயம்.
நாணயமற்றவன் அரைமனிதன்
நாணயமில்லாதவன் நம்பதகாதவன்

மனிதனை மதிப்பது
அவனிடம் உள்ள நாணயத்தை வைத்து
மனிதனை அளவெடுப்பது
அவனின் வார்த்தையிலுள்ள நாணயத்தை வைத்து

நாணயமே உன்னிடமுள்ள இரண்டு அர்த்தங்களால்
மனிதனையும் உலகத்தையும் ஆட்டிபடைக்கிறாயே
நாணயமே உன் அளவுதான் என்ன?
உன் மதிப்புதான் என்ன?

மனோ.ஜி

இளசு
17-04-2003, 12:09 PM
நா-நயம் சிந்தும் நாணயக்கவிதை

பாராட்டுகள் நண்பர் மனோGக்கு

poo
17-04-2003, 01:43 PM
நல்ல கவிதை..

அடிக்கடி வந்து சவுக்கடியாய் கவிதை தரும் அண்ணனுக்கு நன்றி!!

Hayath
17-04-2003, 02:26 PM
நாணயத்தைப் பற்றி நமது நண்பர் நாணயமாக எடுத்துக் கூறியுள்ளார்....எனது பாராட்டுக்கள் நிறைய....

lingam
17-04-2003, 06:28 PM
காளமேகப் புலவர் போல்
சிலேடையாக நாணயக் கவி
எழுதிய நண்பரே உமக்கு இந்த
புதியவனின் மனமார்ந்த பாராட்டுக்கள்

நிலா
17-04-2003, 08:28 PM
நல்ல கவிதை நண்பரே!

உண்மையைப் பாராட்டிய நாங்கள் நாணயமானவர்கள் தானே!

Mano.G.
18-04-2003, 12:13 AM
நாணயத்தின் மதிப்பையும்
நா-நயத்தின் பெருமையும்
உங்கள் அனைவரிடமிருந்தும்
மேலும் கற்று கொண்டேன்
வாழ்த்துக்கு நன்றி நண்பர்களே


மனோ.ஜி

aren
18-04-2003, 03:57 AM
மனோஜி, சிறியதாக இருந்தாலும், விஷயத்தில் பெரியதாக உள்ளது. பாராட்டுக்கள். தொடருங்கள் உங்களின் சிறப்பான சேவைகளை.

Narathar
18-04-2003, 04:21 AM
நாணயத்துக்கும்-நாணயத்துக்கும் வித்தியாசம் காணும் கவிதை.............

பாராட்டுக்கள்!!!

Nanban
02-06-2003, 11:36 AM
நாணயமும் வேண்டும்
நாணயமும் வேண்டும்

நல்ல வாழ்க்கை வாழ....

kavinila
21-08-2006, 10:02 AM
jfjffnhdh

இணைய நண்பன்
21-08-2006, 10:28 AM
அர்த்தமுள்ள கவிதை.வாழ்த்துக்கள் நண்பா!

ஓவியா
21-08-2006, 01:18 PM
மனோ அண்ணா,
உங்களுக்கு கவிதை சூப்பரா வருதே..

அருமை அருமை

அதிகம் எழுதவும்

Mano.G.
22-08-2006, 01:08 AM
தங்கையே மூன்று வருடங்களுக்கு முன்பு எழுதியது
சமயங்களில் இந்த மாதிரி ஏதாவது வரும்
சும்மா கிறுக்குவேன் அவ்ளோதான்.

மனோ.ஜி

vckannan
22-08-2006, 07:00 AM
நாணயம்.

நாணயமே உன்னிடமுள்ள இரண்டு அர்த்தங்களால்
மனிதனையும் உலகத்தையும் ஆட்டிபடைக்கிறாயே
நாணயமே உன் அளவுதான் என்ன?
உன் மதிப்புதான் என்ன?

மனோ.ஜி

நாணயத்தினை நாநயதுடன் நாணயதினில் ஒப்ப
பாநயத்துடன் பன்நயதுடன் எண்ணிச் சிறந்தமனோ
நாணயமும் நாநயமும் இணைந்த்ருக்கவேண்டு மென்றும்
நாநயங்கொண்டு நாணயம்விட்டால் ஊரில்லில்லை மதிப்பு
நாநயம்விட்டு நாணயம் சேர்த்தகையிற்வருங் காப்பு

arul5318
22-08-2006, 01:18 PM
நாணயத்திற்கு இவ்வளவு அர்த்தம் இருக்கிறதே எல்லோரும் நன்நாணயமுள்ளோராய் இருக்க வேண்டும்.