rambal
01-06-2005, 06:04 PM
இடம் பெயர்தல்..
பச்சையையும் நீலத்தையும் அள்ளித் தெளித்தது போன்று அந்த இடம் இருந்தது. அந்தச் சமவெளியில் ஒரு குளம்.
குளமெங்கும் தாமரைகள் இலை விரித்து படர்ந்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். மனித நடமாட்டம் அவ்வளவாக
இல்லாத இடம். காற்றில் எப்போதும் ஏதாவது ஒரு பூவின் மணம் மிதந்து கொண்டே இருக்கும். சமவெளிக்கு வகிடெடுத்தாற் போன்று
அதன் நடுவில் செம்மண்ணால் ஆன ரஸ்தா. அதன் இரு ஓரங்களிலும் பூச்செடிகள். வித விதமான வண்ணங்களில் பூக்கள் பூத்திருந்தன.
இந்த இடத்தை கொஞ்சம் தள்ளி நின்று சிறிதாக்கிப் பார்க்க முடியுமானால் அது மோனட்டின் வரையப்படாத அடுத்த ஓவியமாகவே இருக்கும்.
கடும் குளிரும் அல்ல.. பனியும் அல்ல.. ஏறக்குறைய வசந்த காலத்தின் முடிவில் இருந்த காலமது. வானில் பறவைக்கூட்டம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
அநேகமாக இந்தப் பறவைக் கூட்டம் இரை தேடிப் போகலாம். அல்லது சாதகமான தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற இடம் தேடி இடம் பெயர்ந்தும்
கொண்டிருக்கலாம். அந்தப் பறவைக்கூட்டம் ஒரு விதமான ஒழுங்கமைவு வடிவில் பறந்து கொண்டிருந்தன. இப்படி வடிவ ஒழுங்குகள் பற்றி அவைகளுக்கு
யார் கற்றுக் கொடுத்திருப்பார்கள்? இப்படிப் பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டிருப்பதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பறப்பதற்கு ஆசைப்பட்டோ அல்லது பறவைகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டோ அவள் நின்று கொண்டிருந்த இடம் அவள் வீட்டு மொட்டைமாடி.
அவள் வழக்கமாக அங்கு நின்றுதான் கண் முழுக்க நிறைந்திருக்கும் பச்சையைக் கண்டு ரசிப்பாள். பச்சை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு புள்ளியில் நீல
நிற ஆகாயத்துடன் கலந்து வானமாக மாறியிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொள்வாள். விதவிதமான ஓசை எழுப்பும் பறவைகளின் சத்தத்தைக் கேட்பாள்.
அது அவளது மனதிற்கு இனிமையைத் தரக்கூடியதாக இருந்தது.
சமவெளிகளில் குறுக்காகச் செல்லும் ரஸ்தா அவள் வீட்டை தொட்டுச் செல்கிறது. அது முக்கியமான ரஸ்தா அல்ல.
இருந்தாலும் கடந்த ஒரு வாரத்திற்குள் அந்த ரஸ்தா வழியாக பல வண்டிகள் சென்று கொண்டிருக்கின்றன. ஒரே திசையில்
அந்த வண்டிகள் சென்று கொண்டிருந்தன. இது அவளுக்கு வேடிக்கையாகவும், அவர்களைப் பார்ப்பது மனதிற்கு உகந்ததாகவும் தோன்றியது.
மொட்டைமாடியில் தான் ஒரு குட்டி இளவரசியைப் போலவும் கடந்து செல்லும் மக்களை குடியானவர்களாகவும் அவள் நினைத்துக் கொள்வாள்.
அதற்காகவே அவள் இப்பொழுது அடிக்கடி மொட்டை மாடிக்கு வருகிறாள். இரண்டு வாரங்களாக இந்தக் காட்சிகள் தொடர்ந்து
நடந்தவண்ணம் இருந்தன. இப்பொழுது அவள் கடந்து செல்பவர்களின் முகங்களைக் கவனிக்கத் தொடங்கியிருந்தாள்.
எல்லோர் முகங்களும் சொல்லி வைத்தது போன்று கவலை ரேகை படர்ந்திருந்தது. அவர்கள் எதையோ இழந்து விட்டு துக்கம்
அனுசரிப்பவர்களைப் போல் இருந்தார்கள். ஒரு நீண்ட பயணத்தின் விளைவாக அனைவரும் சோர்வுற்றிருந்தனர்.
ஆண்களின் முகத்தில் லேசாக தாடி வளர்ந்திருந்தது. பெண்கள் ஏதோ இழந்தது போன்று தோற்றமளித்தனர்.
குழந்தைகள் மட்டும் அந்தப் பிராந்தியத்தில் பூத்திருக்கும் பூக்களையும் பச்சையத்தையும் ரசித்ததின் அடையாளமாக
மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால், பெரியவர்களின் முகமெல்லாம் ஒருவித கோபமும் இயலாமையின் வெளிப்பாடும் தெரிந்தது.
இவர்கள் அப்படி எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள், அதுவும் ஒரே திசையில் தோன்றி மற்றொரு திசையில்? என்பது அவளுக்குப்
புரியாத புதிராக இருந்தது.
ஒரு முறை ஒரு கூட்டம் அந்தத் ரஸ்தாவைக் கடந்து செல்கையில் ஆவல் மிகுதியில் அவர்களை நோக்கி அவள் கை அசைத்தாள்.
ஒருவரும் அவளைக் கண்டுகொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவர்களைத் தன்பக்கம் கவரும் விதமாக அவள் அவர்களை
நோக்கி 'ஹலோ' என்று உரக்கக் கத்தினாள். ஓரிரு முகங்கள் அவளைத் திரும்பிப்பார்த்தன. பின் ஒன்றும் நடவாதது போல் தலையைத் திருப்பிக் கொண்டு
நடக்கத் தொடங்கினார்கள். அவளது அழைப்பு அவர்களை சிறிதும் சலனப்படுத்தவில்லை. இந்நிகழ்வால் அவள் மனம் கொஞ்சம் வருத்தமடைந்தது.
இருந்தாலும் மனம் தளராமல் அவள் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு கூட்டத்தைப் பார்த்துக் கத்திக் கொண்டுதான் இருந்தாள்.
சொல்லிவைத்தாற் போன்று எந்தக் கூட்டமும் அவளை லட்சியம் செய்யவில்லை. அவள் அவர்களின் இச்செய்கையினால் கொஞ்சம்
சோர்வடைந்திருந்தாள்.
இப்பொழுது அவள் அவர்களைப் பார்ப்பதோடு சரி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான கூட்டம் அந்த வழியாகப் போய்க் கொண்டே இருந்தது.
தினம் தினம் நடக்கும் இந்த ஊர்வலங்கள் அவளுக்கு வியப்பாக இருந்தது. இவர்கள் எங்கிருந்து முளைத்தார்கள்.? இப்பொழுது எங்கு போகிறார்கள்?
கண்டிப்பாக அம்மா வயிற்றில் இருந்துதான் இவர்கள் முளைத்திருக்க வேண்டும் என்று அவளது மனது சொன்னது. ஆனால், இவர்கள் இத்தனை
நாள் எங்கிருந்தார்கள்? ஏன் திடீரென்று சொல்லி வைத்தாற்போன்று சோகமாகச் செல்கிறார்கள்? இவர்களுக்கென்று பாடுவதற்கு ஒரு
நாட்டுப்புறப்பாடல் கூடவா இல்லை. நடையின் சோர்வைப் போக்கிக் கொள்ளவாவது இவர்கள் பாடிக்கொண்டே நடக்கலாம்.
பாடல்கள் என்றவுடன் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் வீட்டைச் சுற்றி இருக்கும் வயல் வெளிகளில் எப்போதும் வேலை நடந்து கொண்டே
இருக்கும். தேநீர் இடைவேளையிலோ அல்லது வேலை முடிந்ததுமோ அங்கு வேலை பார்க்கும் மக்கள் பல குழுக்களாகப் பிரிந்து கொண்டு
பாட்டுப் பாடுவார்கள். சமயத்தில் போட்டி கூட நடப்பதுண்டு. வேடிக்கையாக இவள் அதை மொட்டைமாடியில் இருந்து பார்ப்பதுண்டு.
சில சமயங்களில் இரவுக் காவலுக்குத் தங்கி இருக்கும் குழு, குளிர் காய்வதற்காக வைக்கப்பட்டத் தீயைச் சுற்றி ஆடிக் கொண்டே இருப்பார்கள்.
அந்த ஆட்டதிற்கு பயன்படும் இசைக்கருவி தோலால் செய்யப்படிருக்கும். அதில் இருந்து எழும்பும் இசையானது கேட்பவரை ஆட வைக்கும்
ஆற்றல் கொண்டது. இதெல்லாம் ஒரு நொடியில் மனதினுள் தோன்றி மறைய அவர்களையும் இப்போது காணவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள்? கரும்புத் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் கறுப்பாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்களின் உடல் இரும்பால் செய்தது போல் இருக்கும். பேரல்களை எந்தக் கஷ்டமும் இல்லாமல் அவர்கள் தூக்கிச் செல்வது யானை ஒன்று மரத்தை தூக்கிச் செல்வது போன்றிருக்கும். இத்தனைக்கும் இது வெயில் காலமோ அல்லது குளிர்காலமோ அல்ல.
வசந்தகாலம் தான். உழவு செய்வதற்கு ஏற்ற காலம்தான். இருந்தபோதிலும் கடந்த சில வாரங்களாக அவர்களையும் காணவில்லை.
இவள் வீட்டிலிருந்து ஒரு கல் தொலைவில் இருக்கும் பக்கத்து வீடுகளில் கூட மனிதர்கள் இருக்கிறார்களா என்று அவளுக்கு சந்தேகம் வந்தது.
இதை நினைத்துப் பார்க்க அவளை அறியாமல் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. சிறிது நேரம் அமைதியாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அங்கு ஒரு பறவைக் கூட்டம் பறந்து கொண்டிருந்தது. இது வேறு ஒரு கூட்டம் என்று எண்ணினாள். அவளது கவனம் இப்பொழுது
பறந்து செல்லும் பறவைகளின் மேல் திரும்பிவிட்டது. எவ்வளவு நேரம் அவள் இந்தப் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று அவளுக்குத்
தெரியாது. பார்த்துக் கொண்டே இருந்தாள். கூட்டம் கூட்டமாகப் பறவைகள் பறந்து கொண்டே இருந்தன. திடீரென டிரக் வரும் சத்தம்
தூரத்தில் கேட்க அவள் கவனம் பறவைகள் மீதிருந்து மீண்டும் ரஸ்தா மீது பதிந்தது. மனிதர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த திசையில் இருந்து
ஒரு டிரக் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. எதிர்த் திசையில் செல்லப்போகும் டிரக்கை ஆவல் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அது இவள் வீட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தது. டிரக் முழுதும் ராணுவ சீருடை அணிந்த நபர்கள் நிறைந்திருந்தனர். அனைவரின் கைகளும்
துப்பாக்கியைத் தாங்கிப் பிடித்திருந்தன. அந்த டிரக், கண்கள் நிறைய விரிந்திருக்கும் பசுமைக்குள் சென்று மறையும் வரை அவள் பார்த்துக்
கொண்டே இருந்தாள். அதன் பின்பு மற்றுமொரு டிரக் அதே திசையில் தோன்றி பசுமைக்குள் சென்று மறைந்தது. டிரக்குகள்
ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் மக்கள் செல்லும் திசைகளின் எதிரே தோன்றி பசுமைக்குள் மறைந்து கொண்டே இருந்தன.
அவள் ஒவ்வொரு டிரக்காக எண்ணிக் கொண்டிருந்தாள். மொத்தம் 32 டிரக்குகளை எண்ணி முடித்த போது அவள் அம்மா அவளை அழைத்தாள்.
இவள் மாடியில் இருந்து கீழே இறங்கி சென்ற பொழுது அங்கு அவள் அம்மா இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்தாள்.
இவளைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டே ஒரு பையை அவளது தோளில் மாட்டினாள். பின் அவள் கையைப் பற்றி வீட்டை விட்டு
நடக்க ஆரம்பித்தாள். இவள் மொட்டைமாடியில் இருந்து பார்த்த மனிதர்கள் எந்தத் திசையில் போனார்களோ அதே திசையில் இவளும் தனது
அம்மாவுடன் நடக்க ஆரம்பித்தாள். டிரக்கின் டயர்கள் வழியெங்கும் இருந்த பூஞ்செடிகளை நசுக்கியிருந்தது.
பச்சையையும் நீலத்தையும் அள்ளித் தெளித்தது போன்று அந்த இடம் இருந்தது. அந்தச் சமவெளியில் ஒரு குளம்.
குளமெங்கும் தாமரைகள் இலை விரித்து படர்ந்திருந்தன. அங்கொன்றும் இங்கொன்றுமாய் வீடுகள். மனித நடமாட்டம் அவ்வளவாக
இல்லாத இடம். காற்றில் எப்போதும் ஏதாவது ஒரு பூவின் மணம் மிதந்து கொண்டே இருக்கும். சமவெளிக்கு வகிடெடுத்தாற் போன்று
அதன் நடுவில் செம்மண்ணால் ஆன ரஸ்தா. அதன் இரு ஓரங்களிலும் பூச்செடிகள். வித விதமான வண்ணங்களில் பூக்கள் பூத்திருந்தன.
இந்த இடத்தை கொஞ்சம் தள்ளி நின்று சிறிதாக்கிப் பார்க்க முடியுமானால் அது மோனட்டின் வரையப்படாத அடுத்த ஓவியமாகவே இருக்கும்.
கடும் குளிரும் அல்ல.. பனியும் அல்ல.. ஏறக்குறைய வசந்த காலத்தின் முடிவில் இருந்த காலமது. வானில் பறவைக்கூட்டம் ஒன்று பறந்து கொண்டிருந்தது.
அநேகமாக இந்தப் பறவைக் கூட்டம் இரை தேடிப் போகலாம். அல்லது சாதகமான தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற இடம் தேடி இடம் பெயர்ந்தும்
கொண்டிருக்கலாம். அந்தப் பறவைக்கூட்டம் ஒரு விதமான ஒழுங்கமைவு வடிவில் பறந்து கொண்டிருந்தன. இப்படி வடிவ ஒழுங்குகள் பற்றி அவைகளுக்கு
யார் கற்றுக் கொடுத்திருப்பார்கள்? இப்படிப் பறவைகள் கூட்டம் கூட்டமாகப் பறந்து கொண்டிருப்பதை அவள் பார்த்துக் கொண்டிருந்தாள்.
பறப்பதற்கு ஆசைப்பட்டோ அல்லது பறவைகளைப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டோ அவள் நின்று கொண்டிருந்த இடம் அவள் வீட்டு மொட்டைமாடி.
அவள் வழக்கமாக அங்கு நின்றுதான் கண் முழுக்க நிறைந்திருக்கும் பச்சையைக் கண்டு ரசிப்பாள். பச்சை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு புள்ளியில் நீல
நிற ஆகாயத்துடன் கலந்து வானமாக மாறியிருப்பதைக் கண்டு ஆச்சரியம் கொள்வாள். விதவிதமான ஓசை எழுப்பும் பறவைகளின் சத்தத்தைக் கேட்பாள்.
அது அவளது மனதிற்கு இனிமையைத் தரக்கூடியதாக இருந்தது.
சமவெளிகளில் குறுக்காகச் செல்லும் ரஸ்தா அவள் வீட்டை தொட்டுச் செல்கிறது. அது முக்கியமான ரஸ்தா அல்ல.
இருந்தாலும் கடந்த ஒரு வாரத்திற்குள் அந்த ரஸ்தா வழியாக பல வண்டிகள் சென்று கொண்டிருக்கின்றன. ஒரே திசையில்
அந்த வண்டிகள் சென்று கொண்டிருந்தன. இது அவளுக்கு வேடிக்கையாகவும், அவர்களைப் பார்ப்பது மனதிற்கு உகந்ததாகவும் தோன்றியது.
மொட்டைமாடியில் தான் ஒரு குட்டி இளவரசியைப் போலவும் கடந்து செல்லும் மக்களை குடியானவர்களாகவும் அவள் நினைத்துக் கொள்வாள்.
அதற்காகவே அவள் இப்பொழுது அடிக்கடி மொட்டை மாடிக்கு வருகிறாள். இரண்டு வாரங்களாக இந்தக் காட்சிகள் தொடர்ந்து
நடந்தவண்ணம் இருந்தன. இப்பொழுது அவள் கடந்து செல்பவர்களின் முகங்களைக் கவனிக்கத் தொடங்கியிருந்தாள்.
எல்லோர் முகங்களும் சொல்லி வைத்தது போன்று கவலை ரேகை படர்ந்திருந்தது. அவர்கள் எதையோ இழந்து விட்டு துக்கம்
அனுசரிப்பவர்களைப் போல் இருந்தார்கள். ஒரு நீண்ட பயணத்தின் விளைவாக அனைவரும் சோர்வுற்றிருந்தனர்.
ஆண்களின் முகத்தில் லேசாக தாடி வளர்ந்திருந்தது. பெண்கள் ஏதோ இழந்தது போன்று தோற்றமளித்தனர்.
குழந்தைகள் மட்டும் அந்தப் பிராந்தியத்தில் பூத்திருக்கும் பூக்களையும் பச்சையத்தையும் ரசித்ததின் அடையாளமாக
மகிழ்ச்சியுடன் இருந்தனர். ஆனால், பெரியவர்களின் முகமெல்லாம் ஒருவித கோபமும் இயலாமையின் வெளிப்பாடும் தெரிந்தது.
இவர்கள் அப்படி எங்கே போய்க் கொண்டிருக்கிறார்கள், அதுவும் ஒரே திசையில் தோன்றி மற்றொரு திசையில்? என்பது அவளுக்குப்
புரியாத புதிராக இருந்தது.
ஒரு முறை ஒரு கூட்டம் அந்தத் ரஸ்தாவைக் கடந்து செல்கையில் ஆவல் மிகுதியில் அவர்களை நோக்கி அவள் கை அசைத்தாள்.
ஒருவரும் அவளைக் கண்டுகொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை. அவர்களைத் தன்பக்கம் கவரும் விதமாக அவள் அவர்களை
நோக்கி 'ஹலோ' என்று உரக்கக் கத்தினாள். ஓரிரு முகங்கள் அவளைத் திரும்பிப்பார்த்தன. பின் ஒன்றும் நடவாதது போல் தலையைத் திருப்பிக் கொண்டு
நடக்கத் தொடங்கினார்கள். அவளது அழைப்பு அவர்களை சிறிதும் சலனப்படுத்தவில்லை. இந்நிகழ்வால் அவள் மனம் கொஞ்சம் வருத்தமடைந்தது.
இருந்தாலும் மனம் தளராமல் அவள் அவ்வப்பொழுது ஏதாவது ஒரு கூட்டத்தைப் பார்த்துக் கத்திக் கொண்டுதான் இருந்தாள்.
சொல்லிவைத்தாற் போன்று எந்தக் கூட்டமும் அவளை லட்சியம் செய்யவில்லை. அவள் அவர்களின் இச்செய்கையினால் கொஞ்சம்
சோர்வடைந்திருந்தாள்.
இப்பொழுது அவள் அவர்களைப் பார்ப்பதோடு சரி. ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான கூட்டம் அந்த வழியாகப் போய்க் கொண்டே இருந்தது.
தினம் தினம் நடக்கும் இந்த ஊர்வலங்கள் அவளுக்கு வியப்பாக இருந்தது. இவர்கள் எங்கிருந்து முளைத்தார்கள்.? இப்பொழுது எங்கு போகிறார்கள்?
கண்டிப்பாக அம்மா வயிற்றில் இருந்துதான் இவர்கள் முளைத்திருக்க வேண்டும் என்று அவளது மனது சொன்னது. ஆனால், இவர்கள் இத்தனை
நாள் எங்கிருந்தார்கள்? ஏன் திடீரென்று சொல்லி வைத்தாற்போன்று சோகமாகச் செல்கிறார்கள்? இவர்களுக்கென்று பாடுவதற்கு ஒரு
நாட்டுப்புறப்பாடல் கூடவா இல்லை. நடையின் சோர்வைப் போக்கிக் கொள்ளவாவது இவர்கள் பாடிக்கொண்டே நடக்கலாம்.
பாடல்கள் என்றவுடன் தான் அவளுக்கு ஞாபகம் வந்தது. அவள் வீட்டைச் சுற்றி இருக்கும் வயல் வெளிகளில் எப்போதும் வேலை நடந்து கொண்டே
இருக்கும். தேநீர் இடைவேளையிலோ அல்லது வேலை முடிந்ததுமோ அங்கு வேலை பார்க்கும் மக்கள் பல குழுக்களாகப் பிரிந்து கொண்டு
பாட்டுப் பாடுவார்கள். சமயத்தில் போட்டி கூட நடப்பதுண்டு. வேடிக்கையாக இவள் அதை மொட்டைமாடியில் இருந்து பார்ப்பதுண்டு.
சில சமயங்களில் இரவுக் காவலுக்குத் தங்கி இருக்கும் குழு, குளிர் காய்வதற்காக வைக்கப்பட்டத் தீயைச் சுற்றி ஆடிக் கொண்டே இருப்பார்கள்.
அந்த ஆட்டதிற்கு பயன்படும் இசைக்கருவி தோலால் செய்யப்படிருக்கும். அதில் இருந்து எழும்பும் இசையானது கேட்பவரை ஆட வைக்கும்
ஆற்றல் கொண்டது. இதெல்லாம் ஒரு நொடியில் மனதினுள் தோன்றி மறைய அவர்களையும் இப்போது காணவில்லை. அவர்கள் எங்கு சென்றார்கள்? கரும்புத் தோட்டத்தில் வேலை பார்ப்பவர்கள் அனைவரும் கறுப்பாகத்தான் இருப்பார்கள். ஆனால், அவர்களின் உடல் இரும்பால் செய்தது போல் இருக்கும். பேரல்களை எந்தக் கஷ்டமும் இல்லாமல் அவர்கள் தூக்கிச் செல்வது யானை ஒன்று மரத்தை தூக்கிச் செல்வது போன்றிருக்கும். இத்தனைக்கும் இது வெயில் காலமோ அல்லது குளிர்காலமோ அல்ல.
வசந்தகாலம் தான். உழவு செய்வதற்கு ஏற்ற காலம்தான். இருந்தபோதிலும் கடந்த சில வாரங்களாக அவர்களையும் காணவில்லை.
இவள் வீட்டிலிருந்து ஒரு கல் தொலைவில் இருக்கும் பக்கத்து வீடுகளில் கூட மனிதர்கள் இருக்கிறார்களா என்று அவளுக்கு சந்தேகம் வந்தது.
இதை நினைத்துப் பார்க்க அவளை அறியாமல் கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது. சிறிது நேரம் அமைதியாக வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அங்கு ஒரு பறவைக் கூட்டம் பறந்து கொண்டிருந்தது. இது வேறு ஒரு கூட்டம் என்று எண்ணினாள். அவளது கவனம் இப்பொழுது
பறந்து செல்லும் பறவைகளின் மேல் திரும்பிவிட்டது. எவ்வளவு நேரம் அவள் இந்தப் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள் என்று அவளுக்குத்
தெரியாது. பார்த்துக் கொண்டே இருந்தாள். கூட்டம் கூட்டமாகப் பறவைகள் பறந்து கொண்டே இருந்தன. திடீரென டிரக் வரும் சத்தம்
தூரத்தில் கேட்க அவள் கவனம் பறவைகள் மீதிருந்து மீண்டும் ரஸ்தா மீது பதிந்தது. மனிதர்கள் நடந்து போய்க் கொண்டிருந்த திசையில் இருந்து
ஒரு டிரக் எதிர் திசையில் வந்து கொண்டிருந்தது. எதிர்த் திசையில் செல்லப்போகும் டிரக்கை ஆவல் பொங்கப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அது இவள் வீட்டைக் கடந்து சென்று கொண்டிருந்தது. டிரக் முழுதும் ராணுவ சீருடை அணிந்த நபர்கள் நிறைந்திருந்தனர். அனைவரின் கைகளும்
துப்பாக்கியைத் தாங்கிப் பிடித்திருந்தன. அந்த டிரக், கண்கள் நிறைய விரிந்திருக்கும் பசுமைக்குள் சென்று மறையும் வரை அவள் பார்த்துக்
கொண்டே இருந்தாள். அதன் பின்பு மற்றுமொரு டிரக் அதே திசையில் தோன்றி பசுமைக்குள் சென்று மறைந்தது. டிரக்குகள்
ஒரு குறிப்பிட்ட கால அவகாசத்தில் மக்கள் செல்லும் திசைகளின் எதிரே தோன்றி பசுமைக்குள் மறைந்து கொண்டே இருந்தன.
அவள் ஒவ்வொரு டிரக்காக எண்ணிக் கொண்டிருந்தாள். மொத்தம் 32 டிரக்குகளை எண்ணி முடித்த போது அவள் அம்மா அவளை அழைத்தாள்.
இவள் மாடியில் இருந்து கீழே இறங்கி சென்ற பொழுது அங்கு அவள் அம்மா இரண்டு பைகளுடன் நின்று கொண்டிருந்தாள்.
இவளைக் கண்டதும் ஓடி வந்து கட்டிப் பிடித்துக் கொண்டே ஒரு பையை அவளது தோளில் மாட்டினாள். பின் அவள் கையைப் பற்றி வீட்டை விட்டு
நடக்க ஆரம்பித்தாள். இவள் மொட்டைமாடியில் இருந்து பார்த்த மனிதர்கள் எந்தத் திசையில் போனார்களோ அதே திசையில் இவளும் தனது
அம்மாவுடன் நடக்க ஆரம்பித்தாள். டிரக்கின் டயர்கள் வழியெங்கும் இருந்த பூஞ்செடிகளை நசுக்கியிருந்தது.