PDA

View Full Version : இது ஒரு காதல் கவிதை..



rush8080
01-04-2003, 12:02 PM
உன் எண்ணங்களின் கற்பனைகளோடு

என் நாள்

உன் கனவுகளின் யோசனைகளோடு

என் இரவு



உன் நினைவுகளின் உதவியோடு

என் பகல்

உன் குரலின் இனிமையோடு

என் துயில்



உன்னோடு தொலைபேசி உரையாடியபடியே

என் தூக்கம்

உன்னை எப்பொழுதும் நினைத்தபடியே

என் ஏக்கம்



சேவலின் கூவலுக்குப் பதிலாய்,

உன் தொலைபேசி அழைப்பே விடியலாய். . .



நீ முதல் முதலாய்

காலை வணக்கம் சொல்வாய்

உன் இனிய குரலையே

முதலில் கேட்கவைப்பாய்



அப்படியே

எந்தன் நாளை தொடக்கி வைக்கிறாய்

அத்தினம் முழுவதும்

உன்னையே நினைக்க வைக்கிறாய்



அடுத்து உரையாடப் போகும் நேரத்தை

எண்ண வைக்கிறாய்

என்னை மாபெரும் ஏக்கத்திலே

தத்தளிக்க வைக்கிறாய்



என்னை மறந்து

உன்னையே நினைக்க வைக்கிறாய்

என் உயிரினும் மேலாய்

உன்னை காதலிக்க வைக்கிறாய்!

aren
01-04-2003, 12:46 PM
காதல் கவிதை அருமையாக உள்ளது.

Mano.G.
01-04-2003, 12:55 PM
அருமையான கவிதை

மேலும் இம்மாதிரியான

கவிதைகள்

எழுத வாழ்த்துக்கள்



மனோ.ஜி.

இளசு
01-04-2003, 07:08 PM
காதல் குளத்தில் நீராடிக்கொண்டே படைக்கப்பட்ட கவிதை...

குளிர்ச்சியாய் குதூகலமாய் புத்துணர்ச்சியாய் உள்ளது.

Nanban
10-01-2004, 11:50 AM
எழுதிய அத்தனை கவிதைகளும் ஏப்ரில் ஒன்றாம் தேதியில் மட்டும் தான்...... நல்ல குறும்பான கவிஞர் போலும்........



அழகிய காதல் கவிதை......

அறிஞர்
15-06-2005, 04:43 AM
காதலிக்கும் காலத்தில்
உள்ள உணர்வுகளை..
இயல்பாய் வெளிப்படுத்திய
கவிதை