poo
13-04-2004, 05:16 PM
வயிறு நிறைந்த இரவுகள்..
வறண்டுபோனதின் மாயமென்ன...
உணவுக்கு கதறும் பிள்ளைகள்..
தேடியும் கிடைக்கவில்லை....
தேற்றவும் வார்த்தைகளில்லை...
கூட்டுக்குள்ளே தவித்தன - தூக்கனாங்குருவிகள்...
மரித்துப்போக மனமில்லை...
தூக்கிப்போக திறனில்லை..
சிறகுகள் விரிக்கும்வரை பொறு - விதி...
அமைதி..
மெதுவாய் இறங்கினேன்...
பொய்த்துவிட்ட பூமியால்
தொலைத்துவிட்ட மனிதம்..
மறந்துபோன மேகங்களை..
மரத்துப்போன மனங்களை...மன்னித்தேன்..
கதவுகள் திறக்கும்வரை
வெற்றுக்காற்றை புசித்தாலென்ன..
சிறகுகள் முளைக்கும்வரை
காத்திருக்கும் பறவைகளைப்போல..
கரிசல்காட்டில் பூத்துக்கொண்ட ஞானத்தில்
உள்வைத்தேன்... உண்டிவில்லை!!
வறண்டுபோனதின் மாயமென்ன...
உணவுக்கு கதறும் பிள்ளைகள்..
தேடியும் கிடைக்கவில்லை....
தேற்றவும் வார்த்தைகளில்லை...
கூட்டுக்குள்ளே தவித்தன - தூக்கனாங்குருவிகள்...
மரித்துப்போக மனமில்லை...
தூக்கிப்போக திறனில்லை..
சிறகுகள் விரிக்கும்வரை பொறு - விதி...
அமைதி..
மெதுவாய் இறங்கினேன்...
பொய்த்துவிட்ட பூமியால்
தொலைத்துவிட்ட மனிதம்..
மறந்துபோன மேகங்களை..
மரத்துப்போன மனங்களை...மன்னித்தேன்..
கதவுகள் திறக்கும்வரை
வெற்றுக்காற்றை புசித்தாலென்ன..
சிறகுகள் முளைக்கும்வரை
காத்திருக்கும் பறவைகளைப்போல..
கரிசல்காட்டில் பூத்துக்கொண்ட ஞானத்தில்
உள்வைத்தேன்... உண்டிவில்லை!!