PDA

View Full Version : உடனடிச்செய்திகள்



Pages : 1 2 3 [4] 5 6 7 8 9 10 11 12

அக்னி
15-02-2008, 02:34 AM
ஒரு வரிச் செய்திகளும்,
அவற்றின் இறுதியில் தரப்படுகின்ற கருத்துப் பொதிந்த வாக்கியங்களும்,
மிக மிக அருமை...
நன்றிகளும் பாராட்டுக்களும்...

mgandhi
15-02-2008, 04:55 PM
16-2-2008

1. தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் பதில்

2. இணைவேந்தரின் செயலரிடம் போலீஸ் தீவிர விசாரணை

3. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பொதுமக்கள் பாடம் கற்பிப்பார்கள் ; வைகோ

4. எலி காய்ச்சலுக்கு ஒருவர் பலியானதால் பீதி!

5. வீடு புகுந்து கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை

6. பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளி கைது : பாகிஸ்தான் போலீஸ்

7. கிட்னி மோசடி வழக்கு தொடர்பாக கொடைக்கானலில் சி.பி.ஐ., விசாரணை

8. சோனியாவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

9. கிட்னி மோசடி வழக்கு தொடர்பாக அமீத் குமார் இரண்டாவது மனைவியிடம் சி.பி.ஐ., விசார?ணை

10. ஆஸ்திரேலிய வீரர்கள் இந்தியன் பிரீமியர் லீக்கில் விளையாட முடிவு

11. முத்தரப்பு ஒருநாள் போட்டி: இலங்கையை 46வது ஓவரில் 63 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது

எண்ணங்களைச் செயலாக்கும் ஆற்றலே
வெற்றியாக வளர்கிறது

mgandhi
16-02-2008, 04:48 PM
17-2-2008

1. பாகிஸ்தான் மக்கள் கட்சி அலுவலகத்தில் தாக்குதல்: 38 பேர் பலி

2. விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி

3. கருத்து வேறுபாடுஇல்லை:ராஜ்பால்

4. போலீசை குறை கூறக்கூடாது: சென்னை போலீஸ் கமிஷனர் கண்டிப்பு

5. தர்மபுரி போலீஸ் ஸ்டேஷனில் கொள்ளையடிக்கப்பட்ட துப்பாக்கிகள் மீட்பு

6. தீவிரவாதிகள் பிரச்னை: தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பாராட்டு

7. மேகாலயாவில் மன்மோகன், சோனியா அடுத்த வாரம் தேர்தல் பிரச்சாரம்

8. ராணுவ தளவாட ஒப்பந்தங்களில் இடைத்தரகர்களுக்கு இடம் இல்லை: அந்தோனி

9. மதுரையில் திங்கட்கிழமை வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

10. எஸ்.சி.வி., ஆபரேட்டர்கள் மிரட்டப்படும் விவகாரம்: தயாநிதி போலீஸ் கமிஷனரிடம் புகார்

11. மலேசியாவில் அமைதி பேரணி நடத்திய மலேசிய தமிழர்கள் மீது தாக்குதல்

சோதனைகள் தாம் ஓரு மனிதனை
அவனுக்கு அறிமுகப்படுத்துகின்றன

mgandhi
17-02-2008, 05:19 PM
18-2-2008
1. ஐ.பி.எல் பரிசுத்தொகை அறிவிப்பு

2. திருப்பதியில் 2 நாளில் ஒரு லட்சம் பேர் தரிசனம்

3. பருத்தி வீரன் படத்துக்கு விருது

4. சென்னைஇஸ்லாமாபாத் நேரடி விமான போக்குவரத்து : அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு

5. ஒரிசாவில் 20 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பலி: பாதுகாப்பு அதிகாரிகள் தகவல்

6. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவை 50 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றது

7. பேன்சி நம்பரை ரூ.55 கோடிக்கு ஏலம் எடுத்த பணக்காரர்

8. ஜெயலலிதா வீட்டு முன் தீக்குளிக்க முயன்ற வாலிபர்

9. பாகிஸ்தானில் கலவரம் வெடிக்கும்: பெனாசிர் கணவர் எச்சரிக்கை

10. தேர்தல் நடவடிக்கையில் தலையிட மாட்டேன்: முஷாரப்

11. பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து கேரளாவில் ஸ்டிரைக்

12. ஐதராபாத்தில் 35 கிலோ கஞ்சா பறிமுதல்

ஒரிசாவில் நக்சல்களை பிடிக்க விமானப்படை

13. பாகிஸ்தானில் பஸ் விபத்து : 40 பேர் பலி

உண்மையை உறுதியாய் பிடி
சுயநலம் கொள்ளாதே

mgandhi
18-02-2008, 05:37 PM
19-2-2008

1. ம.தி.மு.க., பொதுக்கூட்டத்தில் தி.மு.க.,வினர் ரகளை: 10 பேர் காயம்

2. சிங்கப்பூரை கலக்கிய சீர்காழி சிவசிதம்பரம்

3. பாகிஸ்தானில் ஓட்டுப்பதிவு குறைவுதான்! பன்னாட்டு பார்வையாளர்கள் கருத்து

4. புதுடில்லியில் அதிரடிப்படை குவிப்பு

5. பாகிஸ்தானில் 20 இடங்களில் குண்டு வெடிப்பு

6. மகாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ்

7. கிட்னி மோசடி வழக்கு தொடர்பாக அமீத் குமாரின் சகோதரருக்கு 11 நாள் சி.பி.ஐ., காவல்

8. பெங்களூருவில் கார் திருடர்கள் கைது

9. போலி இருப்பிட சான்றிதழ் கொடுத்த சஞ்சய்தத் மனைவி மான்யதாவுக்கு நோட்டீஸ்

10. மூன்று ஆண்டுகளின் தமிழகத்தில் உள்ள கிராமங்கள் தன்னிறைவு பெற்றுவிடும் : ஸ்டாலின்

11. தமிழை கட்டாய பாடமாக்குவதை எதிர்த்த வழக்கு :சுப்ரீம் கோர்ட் தள்ளூபடி

12. சம்பள உயர்வு கேட்டு துபாயில் தொழிலாளர்கள் போராட்டம்

13. பாகிஸ்தானில்மாகாண வேட்பாளர் சுட்டு

mgandhi
21-02-2008, 06:41 AM
21-2-2008

* சாத் பூஜையை தமிழகத்தில் செய்ய லாலுவுக்கு பால் தாக்கரே அட்வைஸ்

* பாகிஸ்தானில் ஆஸ்திரேலியா சுற்று பயணம் : பி.சி.பி. நம்பிக்ககை

* ஜெய்ப்பூர் அருகே சாலை விபத்தில் 4 பா.ஜ., தொண்டர்கள் பலி

* பட்ஜெட்டில் பெண்களுக்கும், விவசாயிகளுக்கும் சலுகை: சோனியா நம்பிக்கை

* அமெரிக்க செயற்கை கோள் சுட்டு வீழ்த்தப்பட்டது

* டிஸ்கவரி விண்கலத்தை விண்ணுக்கு அனுப்புவதில் தாமதம்: நாசா

* ப்ளூ லைன் பஸ்களை கில்லர் என டில்லி ஐகோர்ட் விமர்சனம்

* நவாஸ் ஷெரீப் ஆசிப் அலி ஜர்தாரி ஆலோசனை

* இந்தியா பாகிஸ்தான் மீண்டும் பேச்சுவார்த்தை

* அரக்கோணம் அருகே 60 பேருக்கு வாந்தி மயக்கம்

mgandhi
21-02-2008, 05:00 PM
22-2-2008

1. நவாஸ்ஷெரீப் சர்தாரி இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி

2. தினகரன் உடலுக்கு ரஜினி அஞ்சலி

3. கேப்டன் ரிக்கி பாண்டிங் மிக குறைந்த ஏலத்தொகை: யுவராஜ்சிங் அதிர்ச்சி

4. தாய்மொழி நாள் சென்னையில் மனித சங்கிலி

5. கருணாநிதி வாழ்க்கை வரலாறு : ஐந்தாம் பாகம் விரைவில் ஆரம்பம்

6. மொரிலியா லினேரஸ் செஸ் தொடரில் ஆனந்த் முதலிடம்

7. திருக்கோஷ்டியூர் திருவிழாவில் தோஷங்கள் நீங்க வழிபாடு

8. திரிபுராவில் மார்க்., கம்யூ., அலுவலகத்தில் தாக்குதல்: 25 பேர் காயம்

9. திருக்கடையூரில் ஜெயலலிதா யாகம்

10. போலீசாரின் தடையை எதிர்த்து கோர்ட்டில் ராஜ் தாக்கரே மனு

11. சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் எண்ணிகையை உயர்த்த மத்திய அரசு முடிவு

12. பெட்ரோலிய துறை அமைச்சர் மீது பிருந்தா காரத் புகார்

13. தி.மு.க., பா.ம,க., கூட்டணி தொடரும்: ராமதாஸ்

14. அமெரிக்க செயற்கை கோள் சுட்டு வீழ்த்தப்பட்டது

அறிவை மேலும் மேலும் கூர்மையாக்கிக்
கொள்ளப் பயன்படும் கருவி கல்வி

mgandhi
22-02-2008, 05:43 PM
23-2-2008

1. திருச்செந்தூரில் தெப்பத் திருவிழா கோலாகலம்

2. டில்லியை தகர்க்கப்போவதாக இமெயில் மூலம் மிரட்டல்

3. சபாநாயகர் சட்டர்ஜி விருந்து

4. மயூரணி கொலை வழக்கு : பிரசன்னா விடுவிப்பு

5. கர்நாடகாவில் நள்ளிரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம்

6. வெனிசுலா விமான விபத்து : 46 பேர் பலி

7. சென்னை எழும்பூர் கோர்ட்டில் பிரபல வக்கீல் வெட்டிக்கொலை

8. பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 13 பேர் பலி

9. தமிழ்நாட்டில் 10 லட்சம் பேருக்கு வேலை : தமிழக அரசு அறிவிப்பு

10. தேசிய செஸ் போட்டி : தமிழக அணி தங்கம்

11. இமாலய இலக்கை எட்டுகிறது பீஜிங் ஹூண்டாய் நிறுவனம்

நீரை சல்லடையில் கூட அள்ளிவிடலாம் அது
பனிக்கட்டியாகும் வரை பொறுத்திருக்க வேண்டும்

mgandhi
24-02-2008, 10:50 AM
24-2-2008

1. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிரான் ஆட்டத்தில் 18 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி

2. காம்பிர் சதம் அடித்தார்; முதல் ஓவரிலேயே சச்சின் அவுட்

3. போலி தங்க கட்டியை விற்க முயற்சி: கணவன் மனைவி கைது

4. பதவி விலக முஷாரப் திட்டம்

5. கவுகாத்தியில் ஏரியில் பஸ் கவிழ்ந்து 12 பேர் பலி

6. மலேசியாவில் இருந்து போலி பாஸ்போர்ட்டில் சென்னை வந்த 5 பேர் கைது

7. திருவண்ணாமலை: திருமண நிச்சயதார்த்தத்திற்கு சென்ற 6 பேர் விபத்தில் பலி

8. இலங்கை பிரச்னையை இந்தியாவால்தான் தீர்க்க முடியும்: இலங்கை அமைச்சர்

9. வங்கிகள் வேலை நிறுத்தம் : பணிகள் பாதிக்கும் அபாயம்

10. இந்திய பங்கு சந்தையில் தீவிரவாதிகள் ஊடுருவல்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

வாய்ப்பை எதிர்பார்க்காமல் வாய்ப்பை
உண்டாக்குபவன் தான் அறிஞன்

ராஜா
24-02-2008, 11:01 AM
முஷரப் பதவி விலக முடிவா..?

ஆச்சரியமளிக்கும் செய்தி..!

நன்றி மோகன் காந்தியாரே..!

mgandhi
25-02-2008, 06:27 AM
முஷரப் பதவி விலக முடிவா..?

ஆச்சரியமளிக்கும் செய்தி..!

நன்றி மோகன் காந்தியாரே..!

மிக்க நன்றி ராஜா

mgandhi
25-02-2008, 05:00 PM
26-2-2008

1. போலீஸ் குற்ற செய்திகள் இமெயில் அனுப்ப உத்தரவு

2. மூன்றாவது அணியில் அ.தி.மு.க?

3. துப்பாக்கி கொள்ளை எதிரொலி : போலீசுக்கு உண்மை சோதனை

4. பெண்களுக்கு மரியாதை கிடைத்துள்ளது : ஸ்டாலின்

5. ஒசாமாவின் நெருங்கிய கூட்டாளி பாகிஸ்தானில் கைது

6. மார்ச் 26ம் தேதி ராஜ்யசபா தேர்தல் : தேர்தல் ஆணையம்

7. பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல் : 9 பேர் பலி

8. காஷ்மீரில் மிதமான நிலநடுக்கம்

9. சென்னையில் இரண்டரை கோடி ரூபாய் போதைப்பொருள் பறிமுதல்

10. பொருளாதார வளர்ச்சி கடந்த நான்கு ஆண்டுகளில் 9 சதவீதமாக உயர்ந்தது: பிரதீபா பாட்டீல்

11. ஏ.சி., ரயில் கட்டண குறைப்பு

12. முல்லை பெரியாற்றில் ரூ.216 கோடியில் புதிய அணை

mgandhi
26-02-2008, 05:44 PM
27-2-2008

*சாத்தான்குளம் அருகே 2 பேர் வெட்டிக்கொலை

*பழநி ரோப்கார் இயக்கம் தள்ளி வைப்பு

*உலககோப்பை அண்டர் 19 கிரிக்கெட் : அரையிறுதியில் இந்தியா

*குருவாயூர் கோவிலில் பள்ளி வேட்டை கோலாகலம்

*ஈராக்கில் பஸ் பயணிகள் 21 பேர் கடத்தல்

*ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு : 6 பேர் பலி

*ஆரோவில் சர்வதேச நகர் 40ம் ஆண்டு விழா

*ரயில்வே ஊழியர்களுக்கு ரூ.5,000 கோடி ஒதுக்கீடு

*முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா வெற்றி

*கர்நாடகாவில் லாரி ஸ்டிரைக் வாபஸ்

பயமும் தயக்கமும் உள்ளவனைத்
தோல்வி தொடர்ந்து கொண்டே இருக்கும்.

இளசு
26-02-2008, 10:37 PM
ஆரோவில் வயது நாற்பதா?

தொடரும் செய்திப்பணிக்கு நன்றிகள் காந்தி அவர்களே!

க.கமலக்கண்ணன்
27-02-2008, 10:48 AM
உங்களின் செய்திகளுக்கு நன்றி காந்தி அவர்களே...

அனுராகவன்
27-02-2008, 11:31 AM
நன்றி காந்தி அவர்களே...

அறிஞர்
27-02-2008, 03:24 PM
இந்திய அணி -19 இறுதி போட்டியில் சாதிக்குமா...

அறிஞர்
27-02-2008, 03:26 PM
ஆரோவில் வயது நாற்பதா?

தொடரும் செய்திப்பணிக்கு நன்றிகள் காந்தி அவர்களே!
ஆரேவில் பற்றி மேலும் அறிய
http://www.auroville.org/

mayakrishnan
27-02-2008, 05:28 PM
எழுத்தாளர் சுஜாதா மரணமடைந்து விட்டார்

சாலைஜெயராமன்
27-02-2008, 06:13 PM
தமிழை ஆராதித்த ஒர ஜனரஞ்சக எழுத்துக்குச் சொந்தக்காரர்.

தமிழை அனைவரையும் நேசிக்க வைத்த ஒரு மாய வித்தை வைத்திருந்தவர். என் மன்ங்கவர் மனிதர்.

ஆழ்ந்த இரங்கல்கள்.

mgandhi
01-03-2008, 04:58 PM
2-3-2008

1. லாலு மீது மும்பை பீகாரிகள் எரிச்சல்

2. நெல் கொள்முதல் முறைகேடு 18 ஊழியர்கள் சஸ்பெண்ட்

3. காஷ்மீரில் நிலநடுக்கம்

4. கைக்கு எட்டாத விலையில் தங்கம்

5. பாகிஸ்தான் சிறையில் இருந்த இந்தியரை விடுவிக்க முஷாரப் உத்தரவு

6. நாளை மறுதினம் பிளஸ் 2 தேர்வுகள் துவக்கம்

7. வேலூர் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய நிலம் எடுப்பதற்கு ராமதாஸ் எதிர்ப்பு

8. பீகாரில் கிராமவாசி ஒருவர் நக்சல்களால் அடித்து கொலை

9. ஜனாதிபதி மாளிகையில் உள்ள தோட்டத்தில் பார்வையாளர் ஒருவர் தற்கொலை முயற்சி

10. தேசிய நகர்புற சுகாதார திட்டம் 3 மாதங்களில் துவக்கம்

mgandhi
02-03-2008, 04:33 PM
3-3-2008

1. சீன துணை வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று நேபாளம் வருகை

2. சச்சினை கடைபிடியுங்கள்:பாண்டிங் அறிவுரை

3. வடசீனாவில் நிலக்கரி சுரங்க தீ விபத்தில் 9பேர் பலி

4. ஜூனியர் உலக கோப்பையை வென்று இந்தியா சாதனை

5. 4 எம்.பி.,க்கள் இன்று ராஜினாமா

6. பேசின்பிரிட்ஜ் அருகே சிக்னல் கோளாறு: ரயில் பயணிகள் அவதி


7. பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 40 பேர் பலி

8. மேகலாயாவில் கோழி இறைச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

9. முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் முதல் பைனல் : இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

10. சச்சின் சதம் அடித்தார்

11. ஏ.டி.எம்.மில் 4 மணி நேரம் சிக்கி தவித்த கல்லூரி மாணவர்

12. விவசாய கடன் ரத்தால் வங்கிகளுக்கு பாதிப்பு இல்லை : சிதம்பரம்

13. சுனாமியை தவிர்க்கும் சேது கால்வாய்: புதிய மனுவில் மத்திய அரசு தகவல்

14. இலங்கை சிறைபிடித்த 25 மீனவர்கள் விடுதலை

15. எஸ்.எம்.எஸ் மூலம் ஒட்டுநர்களுக்கு தகவல் அளிக்க ரயில்வே முடிவு

16. பாலஸ்தீனத்தில் தாக்குதல் : 63 பேர் பலி

17. ஆடவருக்கான ஒலிம்பிக் ஹாக்கி போட்டி தகுதிச்சுற்றில் இந்தியா வெற்றி

18. ஒரிசாவில் 7 ஆயிரம் இன்ஜினியர்கள் ஒட்டுமொத்த விடுப்பில் செல்கின்றனர்

ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ
அவனை நேசிப்பதில்லை

mgandhi
03-03-2008, 04:29 PM
4-3-2008

* திருச்சியில் விடுதலை புலி கைது

* வேலூர் சிறை முன்பு வக்கில் குழுவினர் போராட்டம்

* மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தையின் வர்த்தக நேரம் மாற்றம்

* பாகிஸ்தான் சிறையில் வாடிய காஷ்மீர் சிங் விடுதலை

* முதல்வர் கருணாநிதியுடன் மத்திய அமைச்சர் சந்திப்பு

* மேகாலாயா சட்டப்பேரவை தேர்தல் அமைதியாக முடிந்தது

* சேது சமுத்திர திட்டம் தொடர்பாக தமிழகத்தில் நாளை மறுதினம் பா.ஜ., போராட்டம்

* மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய அலுவலக உதவியாளர் கைது

* நேபாளத்தில் ஐ.நா., ஹெலிகாப்டர் விபத்து : 7 பேர் பலி

* விவசாயிகள் ஓட்டு :காங்., நம்பிக்கை

* கன்னியாகுமரியில் கடல் சீற்றம் : பீதியில் பொதுமக்கள் ஓட்டம்

mgandhi
04-03-2008, 04:35 PM
5-3-2008

1. பாகிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல்: ஆறு பேர் பலி

2. தமிழகத்தில் கொல்கட்டா கலாமண்டலம் நிகழ்ச்சிகள்

3. ஏவுகனை ஊழல் வழக்கு : முன்னாள் கப்பல்படை தளபதி சுசில் குமாரிடம் சி.பி.ஐ.,விசாரணை

4. பார்லிமென்டிற்கு முன்கூட்டியே தேர்தல்: சோனியா எம்.பி.,க்களுடன் ஆலோசனை

5. கிரிக்கெட்போட்டி வெற்றி: பிரதமர் வாழ்த்து

6. நேபாள விமான விபத்தில்10 பேர் பலி

7. திகார் சிறைக்கு கூடுதல் பாதுகாப்பு : மத்திய அமைச்சர் ராதிகா செல்வி

8. ஜோதாஅக்பர் திரைப்பத்தின் மீதான தடை விலக்கப்பட்டது

9. சேது சமுத்திர திட்டம் : மத்திய அரசின் பதில் மனுவிற்கு வி.எச்.பி., எதிர்ப்பு

10. பாகிஸ்தானில் 4 இடங்களில் குண்டு வெடிப்பு

11. தமிழை சிதைக்கும் வகையில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரிசலுகை கிடையாது : தமிழக அரசு

12. சிதம்பரம்கோயிலில் தேவாரம் பாட எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை : தமிழக அரசு அறிவிப்பு

13. பாகிஸ்தான் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட காஷ்மீர் சிங் இந்தியா வந்தார்


தன்னைப் புகழ்ந்து கொள்வதும் பிறரை
இகழ்வதும் பொய்க்கு இனையானது

namsec
11-03-2008, 09:45 AM
கேரளாவில் ஜனசக்தி அமைப்பை சேர்ந்த வக்கீல் முல்லை பெரியார் அணையை கட்ட கேரள அரசுக்கு உத்தரவிட *வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவில் முல்லை பெரியார் அணை உடைந்தால் பலத்த உயிர்சதேம் ஏற்படும் என்பதால் கேரள அரசு விரைவில் அணையை கட்ட வேண்டுமென்று கோரிக்*கை விடுத்திருந்தார். இதே போல் சுப்பிரமணி சுவாமி கேரள அரசு கடமையை நிறைவேற்றுவதிலிருந்து தவறி விட்டதாக மனு தாக்கல் செய்திருந்தார். இவ்விரு மனுக்களையும் விசாரித்த நீதிபதிகள் டி.கே.*ஜெயின், தாக்கூர் அடங்கிய பெஞ்ச், மனுக்களை தள்ளுபடி செய்தது. கேரள அரசு சார்பில் ஆஐரான வக்கீல் பட்வாரியாவின் வேண்டுகோளுக்கு இணங்க கேரள அரசு முல்லை பெரியார் அணை தொடர்பான கூடுதல் ஆவணங்களை சமர்பிக்க 4 வார காலம் அவகாசம் கொடுத்துள்ளது

namsec
11-03-2008, 10:03 AM
மற்ற பாங்க் ஏ.டி.எம். இலவசம்

மற்ற பாங்க் ஏ.டி.எம். இல் பணம் எடுத்தால் அதற்காக விதிக்கப்படும் கட்டணத்தை, ஒரு தடவைக்கு ரூ.20 வீதம் மார்ச் 31 ம் தேதியில் இருந்து வாங்கிக்கொள்ளுமாறு வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வேண்டுகோள் விடுத்துள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரலில் இருந்து அதை இலவசமாக உபயோகிக்க விடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. ஆனால் வெளிநாட்டில் இருப்பவர்களிடமிருந்து இதற்காக கட்டணத்தை வசூலித்துக்கொள்ளலாம் என்றும் கூறியுள்ளது. இந்தியாவில் டிசம்பர் 31,2007 கணக்குபடி 32,342 ஏ.டி.எம்.மிஷின்கள் இருக்கின்றன.

ராஜா
30-03-2008, 01:20 PM
வரி ஏய்ப்பு: முருகன் இட்லிகடைகளில் அதிரடி ரெய்டு

ஓகனேக்கல்: தமிழகத்திற்கு கன்னட அமைப்புகள் கெடு!

டோணி இந்திய கிரிக்கெட்டின் 'ரஜினிகாந்த்': ஸ்ரீகாந்த்

சென்னை முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது

ஏர்இந்தியா பஸ் மோதி விமான நிலைய ஊழியர் பலி

நக்சலைட் நடமாட்டம் அதிகரித்து விட்டது - ஜெ. புகார்

நிர்வாணப்படுத்தி ராமேஸ்வரம் மீனவர்களை சித்திரவதை செய்த கடற்படை

பணியில் ஒழுங்கீனம்: காஞ்சி கோவில் மேலாளர் சஸ்பெண்ட்
இயக்கம் ஆடியோ வெளியீடு!

மாடுகளை வழிப்பறி செய்ததாக மேனகா காந்தி மீது வழக்கு..!

ராஜா
30-03-2008, 01:28 PM
ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் பெண் நீதிபதி..

செல்போன் கட்டணம் மேலும் குறைகிறது..

வாஜ்பாயை அரசமைக்க விடாமல் கே.ஆர்.நாராயணன் சதி செய்தார்-அத்வானி..

பஹ்ரைனில் இந்திய தூதரகத்துக்கு புதிய கட்டடம்..

தலித்துகளுக்கு பிளாஸ்டிக் கப்புகளில் டீ - கடைக்காரர்களுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..

கம்யூனிஸ்ட்கள் நாட்டின் எதிரிகள்;ராமகோபாலன் பேச்சு..


மேற்கு வங்கத்தில் தொல்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன

கணினி விளையாட்டுகளினால் குழந்தைகளுக்கு ஆபத்து


சதாம் ஹுசேன் செலவில் இராக் பயணம் செய்த அமெரிக்க எம்.பி.க்கள்..

இந்தூர் அருகே தடை செய்யப் பட்ட சிமி இயக்கத்தைச் சேர்ந்த 10 பேர் கைது..

டி.ஆர். விலகிய பதவியில் ரகுமான்கான் நியமனம்..

mgandhi
06-04-2008, 05:58 PM
7-4-2008

1. இலாக்கா மாற்றப்பட்ட அமைச்சர்கள்

2. புதிய அமைச்சர்களின் பொறுப்பு அறிவிப்பு

3. அமைச்சர்பதவியை ஏற்க ராகுல் மறுப்பு: சோனியா

4. லண்டன் வந்த ஒலிம்பிக் ஜோதியை தாக்க முற்பட்ட 10பேர் கைது

5. மத்திய அமைச்சரவை மாற்றம்: எம்.எஸ்.கில், வி.நாராயணசாமி, சந்தோஷ் பக்ரோடியா, ரகுநாத் ஜா, ராமேஸ்வர் ஓரான், ஜோதிர்ஆதித்யா மாதவ்ராவ் சிந்தியா, ஜிதின் பிரசாத்புதிய அமைச்சர்களாக பதவி ஏற்பு

6. 6 மத்திய அமைச்சர்கள் ராஜினாமா

7. பென்ஹர் படத்திற்காக 1959ல் ஆஸ்கர் விருது பெற்ற நடிகர்சார்ல்டன் ஹெஸ்டன் காலமானார்

8. ஓசூரில் கர்நாடக பஸ் எரிப்பு; 3 பேர் கைது

9. வெள்ளச்சேதங்களை பார்வையிட்டு வருகிறது மத்திய அரசுக்குழு

10. ஜார்ஜ் புஷ் ,புடின் சந்திப்பு: தீவிரவாத எதிர்ப்பு குறித்து பேச்சுவார்த்தை

11. பெங்களூரு விமான நிலைய ஓடுபாதையில் புகுந்த பறவையால் பரபரப்பு

mgandhi
07-04-2008, 05:33 PM
8-4-2008

1. சோனியாவை சந்தித்தார்: சீதாராம் யெச்சூரி

2. திருச்சூர் பூரம் திருவிழா: 16ம் தேதி நடக்கிறது

3. மே 2ம் வாரத்தில் பிளஸ் 2 முடிவுகள்

4. பாரிசிலும் ஒலிம்பிக் ஜோதியை அணைக்க முயற்சி

5. குஜராத் மாநிலம் ஆமதபாத்தில் நிலநடுக்கம்

6. ஒப்பந்த பணியாளர்களுக்கு: மாவட்ட நிர்வாகம் கடும் எச்சரிக்கை

7. ஐ.பி.எல். கிரிக்கெட்: சச்சின் முழு உடல் தகுதி பெறுவார்

8. இலங்கையில் விடுதலைப்புலிகள் தாக்குதல்: 13 பேர் பலி

9. தூத்துக்குடி மாவட்டத்தில்வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்தியக்குழு ஆய்வு

10. பிரச்சாரத்தின் போது சுஷ்மா சுவராஜ் உடல்நிலை பாதிப்பு

11. தூத்துக்குடி அருகே குளத்தில் மூழ்கி இரண்டு சிறுமிகள் பலி

12. மழை வெள்ள சேதம் குறித்த அறிக்கை ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்கப்படும்: மத்திய குழுவினர்

13. விவசாய காப்பீட்டு திட்டம் தொடங்க ஒரிஸா அரசு முடிவு

14. மணிப்பூரில் புதுவருட பிறப்பு உற்சாக கொண்டாட்டம்

mgandhi
08-04-2008, 05:08 PM
9-4-2008

1. பாக்., இந்துக்கள்: இந்தியா வருகை

2. தூத்துக்குடியில் இடிதாக்கி: 2பேர் பலி, 3பேர் காயம்

3. இடுப்பில் கிள்ளிய வாலிபருக்கு: நடிகை ஸ்ரேயா பளார்

4. கிரிக்கெட் தவிர்த்து மற்ற விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வு ஊதியம்: பரிசீலனை

5. தமிழகம்-கர்நாடகா இடையே: பஸ் போக்குவரத்து துவக்கம்

6. கோவையில் 3000 ஏ.ஐ.டி.யு.சி. தொழிலாளர்கள் கைது

7. கர்நாடகா: கோஷ்டி மோதலில் ஒருவர் பலி

8. நெல்லையில் மழை

9. தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மத்திய குழுவினர் சோதனை

10. சட்டசபையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு

11. மகாராஷ்டிரா முதல்வர் பதவிக்கு நெருக்கடி

12. என்.எல்.சி., தலைமையகத்தை முற்றுகையிட்ட பாமகவினர் கைது

13. வளர்ச்சியடையாத நாடுகளுக்கு வரி விலக்கு : பிரதமர் மன்மோகன்

mgandhi
09-04-2008, 05:35 PM
10-6-2008

1. மதுரையில் புலி ஆதரவாளர் கைது

2. இந்தியா பாகிஸ்தான் இடையே விரைவில் நல்லுறவு பேச்சுவார்த்தை
3. மழை சேதம் பற்றி மத்தியக்குழு அறிக்கை: அமைச்சர்களுடன் கலந்தாய்வு

4. அனுமதி பெறாத விளம்பரங்கள் அகற்றும் விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவு செல்லும்

5. வங்கதேசத்தில் உள்ளாட்சி தேர்தல்:முன்னெச்சரிக்கையாக 14 பேர் கைது

6. அமெரிக்காவுடன் ராணுவ கூட்டு பயிற்சிக்கு தயார் : மத்திய அரசு அறிவிப்பு

7. நேபாளத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 7 மாவோயிஸ்டுகள் பலி

8. மத்திய ஆய்வுக்குழு சென்னையில் இன்று உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை

9. பாகிஸ்தான் இந்துக்கள் வைஷ்ணவதேவி கோயிலில் பிரார்த்தனை

10. ஆறாவது சம்பள கமிஷன் அளித்த அறிக்கையில் உள்ள குறைகளை களைய உயர்மட்டக்குழு அமைப்பு

11. சீனாவிற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க திபெத்திய ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கு மத்திய அரசு தடை

mgandhi
10-04-2008, 06:15 PM
11-4-2008

1. பாகிஸ்தான் அதிபர் முஷாரப் சீனா பயணம்

2. தமிழக அரசு பஸ் மீது கல்வீச்சு: ஒருவர் காயம்

3. ஒகேனக்கல் குடிநீர் திட்ட விவகாரத்தில் ஏமாற்று வேலை: மத்திய, மாநில அரசுகள் மீது விஜயகாந்த் பாய்ச்சல்

4. நார்வேயில் கருத்தரங்கு: வைகோ பங்கேற்பு

5. நந்திகிராமில் மோதல்: 3 பேர் காயம்

6. விளாத்திகுளம் கொலை வழக்கில் 4 பேருக்கு ஆயுள் : நெல்லை விரைவு கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

7. மியான்மரில் 54 பேர் மூச்சுத் திணறி பலி

8. ரூ.15 ஆயிரம் கோடி செலவில் நாங்குனேரி சிறப்பு பொருளாதார திட்டம்: அரசு அறிவிப்பு

9. *என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு 8.3% போனஸ்

mgandhi
11-04-2008, 05:39 PM
12-4-2008

1. தேக்கடியில் போலீஸ் படகு : கேரள வனத்துறை அனுமதி

2. மதுரை இரட்டைக் கொலை : நெல்லையில் மூவர் சரண்

3. குளத்தில் குளிக்க சென்ற 3 பேர் நீரில் மூழ்கி பலி

4. டேவிஸ் கோப்பை : 20 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை

5. சிருங்கேரி பாரதீதீர்த்த சுவாமிகள் 58வது பிறந்தநாள் விழா

6. கர்நாடக சட்டசபை தேர்தல் : அ.தி.மு.க., 7 இடங்களில் போட்டி

7. கான்பூர் டெஸ்ட் : தென்னாப்ரிக்கா 265 ரன்களில் சுருண்டது

8. *பத்து வயது சிறுவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

9. மத்திய அரசின் இடஒதுக்கீட்டு சட்ட பரிந்துரைக்காக முதல்வருக்கு பாராட்டு

10. *எய்ம்ஸ்சில் இந்த ஆண்டு முதல் 27 சதவீத இடஒதுக்கீடு : மத்திய அமைச்சர் அன்புமணி

11. என்கவுண்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை : சென்னை போலீஸ் அதிரடி

12. பணவீக்கம் 7.41 சதவீதமாக உயர்வு

13. *நாசிக் சாலை விபத்தில் 2 தொழிலாளர்கள் பலி ; 24 பேர் காயம்

mgandhi
12-04-2008, 05:49 PM
13-4-2008

1. ஜனாதிபதியுடன் கனிமொழி வெளிநாட்டு சுற்றுப்பயணம்

2. மணிப்பூரில் என்கவுன்டர் : ஆறு பயங்கரவாதிகள் பலி

3. வரும் 16ம் தேதி தி.மு.க., செயல்திட்ட குழுக்கூட்டம்

4. இடஒதுக்கீடு விவகாரம் முதல்வருடன் பிரதமர் போனில் பேச்சு

5. இந்தியாவின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் : சர்வதேச நிதியம் எச்சரிக்கை

6. கான்பூர் டெஸ்ட் : இந்தியா முதல் இன்னிங்ஸ் :288/9

7. *தமிழகத்தில் மின் வளம் மேம்படுத்தப்படும்: ஆற்காடு வீராச்சாமி

8. நெல்லையில் மூடப்பட்ட கூட்டுறவு நூற்பாலையை திறக்கக் கோரி காங்கிரசார் உண்ணாவிரதம்

9. ஆப்கன் குண்டு வெடிப்பு: 2 இந்தியப் பொறியாளர்கள் பலி

10. ஜனாதிபதியின் முதல் வெளிநாட்டுப் பயணம்: லத்தீன் அமெரிக்காவுக்கு 13 நாள் பயணம்

11. ஐந்து நாட்களாக நடுக்கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் பத்திரமாக மீட்பு

12. நேபாள தேர்தலுக்கு அமெரிக்கா பாராட்டு

mgandhi
14-04-2008, 05:34 PM
15-4-2007

1. -பாதிரியார்கள் உள்பட 1000 கிறிஸ்தவர் மீண்டும் இந்து மதத்துக்கு மாறினர்

2. சென்னை விமான நிலையத்தில் குண்டு பீதி ஏற்படுத்திய பெட்டியில் அதிரசம், பருப்பு

3. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகையில் போப்பாண்டவருக்கு பர்த்டே

4. லக்கேஜ் தருவதில் தாமதம் விமான நிறுவனத்துக்கு அபராதம் நுகர்வோர் கோர்ட் அதிரடி தீர்ப்பு

5. 27 கோடி பேரிடம் செல்போன் அமெரிக்காவை மிஞ்சியது இந்தியா
6. பாதிரியார்கள் உள்பட 1000 கிறிஸ்தவர் மீண்டும் இந்து மதத்துக்கு மாறினர்

7. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை - ப.சிதம்பரம் அறிவிப்பு

8. சென்னையில் போலீஸ் வேட்டை - 465 ரவுடிகள் கைது

mgandhi
16-04-2008, 05:59 PM
17-4-2008

1. எண்ணூரில் ஒருங்கிணைந்த கப்பல் தளம்: கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்

2. தொலைபேசி ஒட்டுக்கேட்பு; நீதி விசாரணை நடத்தப்படும்: கருணாநிதி

3. 2 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்டு

4. வெடிகுண்டு வழக்கில் நக்கீரன் கோபால் விடுதலை

5. சோனியாகாந்தி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்: கிருஷ்ணசாமி

6. வேலூர் ஜெயிலில் நான் நளினியை சந்தித்து பேசியது உண்மைதான்: பிரியங்கா

7. ராமர் பாலத்தை வழிபாட்டுத் தலம் என்று கூறாதீர்: நீதிபதிகள் அதிருப்தி

8. தமிழகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 பேர் மேல்-சபை எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்

9. பா.ஜனதா, இடதுசாரிகள் அமளியால் பாராளுமன்றம் ஒத்திவைப்பு

10. 27 சதவீத இடஒதுக்கீடு: சோனியா காந்தியிடம் தி.மு.கழக எம்.பி.க்கள் மனு

mgandhi
17-04-2008, 05:51 PM
18-4-2008

1-டெலிபோன் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் சிக்கப்போவது யார்?

சென்னை : தலைமைச் செயலர் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனரின் டெலிபோன் பேச்சுப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. "டெலிபோன் ஒட்டுக் கேட்கப்படவில்லை; கூடுதல் டி.ஜி.பி., உபாத்யாய் அறையில் இருந்த கம்ப்யூட்டரில் பதிவாகியிருந்த உரையாடல், மர்ம நபரால் வெளியாகியிருக்கிறது என்ற தகவல், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில், போலீசார் நடத்திய திடீர் ரெய்டு மூலம் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் தவறு செய்த போலீசார் யார் யார்? என்ற பரபரப்பு போலீசில் ஏற்பட்டுள்ளது.

2-ஆந்திராவில் வெற்றி பெற சந்திரபாபு நாயுடு புது தந்திரம்


தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, தன் கட்சியின் வளர்ச்சிப் பொறுப்பை சிறிது சிறிதாக தளர்த்தி, மெல்ல மெல்ல என்.டி.ராமாராவின் வாரிசுகள் மீது திணிக்கும் முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர்களை பிரசார களமிறக்கி, தேர்தலில் வெற்றி பெறுவது என்ற புதிய தந்திரத்தை பின்பற்ற தீர்மானித்துள்ளார்.

3-""மதுரையில் தொழில்நுட்ப பூங்கா அமைக்க சில வாரங்களில் அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்,'' என்று முதல்வர் கருணாநிதி அறிவித்தார்

: கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்க எல்காட் நடவடிக்கை எடுத்து வருகிறது. கோவை, சேலம், நெல்லை பூங்காங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்துள்ளது. திருச்சி, மதுரை நகரங்களிலும் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மதுரையைப் பொறுத்தவரை சில வாரங்களில் தொழில்நுட்ப பூங்கா தொடங்க அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்

4-ஆலடிஅருணா கொலை வழக்கு 2பேருக்கு தூக்கு தண்டணை.


திருநெல்வேலி: முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா கொலை வழக்கில் 2 பேருக்கு தூக்கு தண்*டனை வழங்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்துள்ள ஆலடிப்பட்டியை சேர்ந்தவர் ஆலடிஅருணா. தி.மு.க.,அமைச்சராக இருந்தார். கடந்த 2004 டிசம்பர் 31ல் காலையில் ஆலடிப்பட்டியில் நடைப்பயிற்சி செல்லும் போது வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அவருடன் சென்ற ஆசிரியர் பொன்ராஜூம் கொலை செய்யப்பட்டார்

5-போலி சாமியாராடன் பெண் டாக்டர் சயனட் குடித்து தற்கொலை

சென்னை : சென்னை உள்ளகரத்தில் ஆசிரமம் நடத்தி, இரவு நேரங்களில் பெண்களுக்கு குறி சொல்லி பிரச்னைகளை சந்தித்த சுருட்டு சாமியார் என்ற போலி சாமியார் பழனிச்சாமியும், டாக்டருக்கு படித்து வந்த அவரது மூன்றாவது மனைவி திவ்யாவும் மர்மமான முறையில் நேற்று இறந்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இவர்கள் இருவரும் சயனைட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது

mgandhi
18-04-2008, 05:48 PM
19-4-2008

1. பெங்களூரு ஐ. பி.எல்., கிரிக்கெட்: டிராவிட் அணி 69 /8

2. டீக்கடைகளில் போண்டா மடிக்க பயன்படும் வாக்காளர் பட்டியல்

3. பெண்களை மட்டும் துரத்தி கடிக்கும் கருங்குரங்கு

4. கலெக்டரை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு : உ. . பி.,யில் மறியல்
5. ஐ. பி., எல்., கிரிக்கெட் போட்டி துவக்கவிழா கோலாகலம்

6. மெக்சிகோவில் தமிழ் திரைப்படம் வெளியீடு

7. மைத்ரி எக்ஸ்ப்ரசை தடை செய்ய வேண்டும் : சிவ சேனா

8. இலங்கையில் பெட்ரோல் விலையை உயர்த்த ஐ.ஓ.சி., கோரிக்கை

9. இடஒதுக்கீட்டில் இருந்து வருமான வரம்பை நீக்க தொடர்ந்து வலியுறுத்துவோம் : டி.ஆர்.பாலு

10. சர்வதேச போட்டிகளுக்கு ஐ.பி.எல்., இடையூறு : பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள்

11. சர்சையில் சிக்கியது மதுரை அமெரிக்கன் கல்லூரி

12. மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் இனிதே நடந்தேறியது

13. தமிழகத்தில் பேருந்து கட்டணம் உயராது: கே.என்.நேரு

14. சரப்ஜித் சிங்குக்கு பொது மன்னிப்பு : பாகிஸ்தான் பிரதமருக்கு அத்வானி கடிதம்

15. எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் சிறுவர்கள் தாயகம் திரும்பினர்

16. சென்னை -மதுரை இடையே புதிதாக விமான சேவைகள்

17. மெக்சிகோவில் பிரதீபாபாட்டீல்

18. தாய்லாந்து சென்றது ஒலிம்பிக் *ஜோதி

19. கேம்பிரிட்ஜ் பல்கலை., ஐ.ஐ.டி ஒப்பந்தம்

20. பிரபல நாட்டுப்புற பாடகி தேனி குஞ்சராம்பாள் காலமானார்

21. இந்த கல்வியாண்டு 18 சதவீத இட ஓதுக்கீடு அமல் : அன்புமணி

22. வங்கிகளின் வட்டி விகிதம் உயர்வு: ரிசர்வ் வங்கி

23. மலைக்கோட்டை ஸ்ரீதாயுமான ஸ்வாமி கோவிலில் நாளை சித்திரை தேரோட்டம்

24. 22--ம் தேதி 'மிஸ் கூவாகம்' போட்டி

SathyaThirunavukkarasu
18-04-2008, 06:44 PM
காந்தி அவர்களே நீங்கள் கும்பகோணத்தில் எங்கு உள்ளீர்கள் ஏன் என்றால் நான் கும்பகோணம் அருகில் உள்ள கிராமம் என் சொந்த ஊர்

mgandhi
19-04-2008, 05:37 PM
20-4-2008

1-நெல்லை ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து

2-டில்லியில் நடக்கும் ஐ. பி.எல்., கிரிக்கெட் : சேவக் அணி 5 ஓவரில் 48 /1 : வார்ன் அணி : 129 /8

3-மொகாலி ஐ. பி. எல்,, கிரிக்கெட் தோனி அணி 33 ரன் வித்தியாசத்தில் வெற்றி

4-வெளிநாடுகளில் இருந்து நேரடியாக பாமாயில் இறக்குமதி: தமிழக அரசு முடிவு

5-மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து : 11 பேர் பலி

6-பாகிஸ்தானில் ஏவுகணை சோதனை

7-டில்லியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் கொலை

8-கொடைக்கானலில் நக்சலைட் தீவிரவாதி சுட்டுக் கொலை

9-புதுடில்லியில் முதல்வர்கள் , மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாடு

10-மெக்சிகோவில் காந்தி சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினார் பிரதீபாபாட்டீல்

11- சுதந்திரப் போரின் 150வது ஆண்டு விழா

12-சென்னையில் கல்வி செயற்கைகோள் படப்பதிவு நிலையம்

13-ஒலிம்பிக் ஜோதிக்கு உரிய மரியாதை வழங்கப்படும் : தாய்லாந்து பிரதமர்

14-அரண்மனையை விட்டு வெளியேற ஞானேந்திராவிற்கு கெடு

15-சரப்ஜித்சிங்கின் தண்டனை நிறுத்திவைப்பு

16-எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி இன்று ஆரம்பம்

17- உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் : தலாய் லாமா

mgandhi
20-04-2008, 06:09 PM
21-4-2008

1. விழுப்புரத்தில் அரவாணிகளுக்கான விளையாட்டுப் போட்டி

2. மும்பை ஐ.பி.எல்., கிரிக்கெட் : டிராவிட் அணி: 15 வது ஓவரில் 118 /4; ஹர்பஜன்சிங் அணி 165 /6

3. மும்பை அணி கேப்டன் சச்சின் திடீர் மாற்றம்

4. எவரெஸ்ட் சிகரத்தில் பாதுகாப்பு படையினர் குவிப்பு : நேபாள அரசு அதிரடி

5. தமிழர் பண்பாட்டு சின்னம் கண்ணகி சிலைக்கு அரசு மரியாதை

6. அமெரிக்காவிடமிருந்து போர் கண்காணிப்பு விமானம் வாங்கப்படும் : கடல் படை தளபதி

7. ராகுல் காந்தி சிறந்த தலைவர் : ஜி.கே.வாசன்

8. சங்கரன்கோவில் அருகே தண்டவாளத்தில் விரிசல் : மதுரை -செங்கோட்டை ரயில் தாமதம்

9. கச்சா எண்ணெய் விலை உயரும் : எண்ணெய் வள நாடுகள் எச்சரிக்கை

10. மாவோயிஸ்ட் தீவிரவாதி சாவு குறித்து நீதி விசாரணை : பி.யு.சி.எல்

11. இந்தியா, சவுதி அரேபியா இடையேயான உறவு பலப்படுத்தப்பட வேண்டும் : பிரானாப்முகர்ஜி


12. மலேசியா வந்தடைந்தது ஒலிம்பிக் ஜோதி

13. பச்சை பட்டு அணிந்து கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

14. கோவையில் உயர் தொழில்நுட்ப நெசவுப் பூங்கா

15. தாலிபான் தீவிரவாதிகள் பிடியில் பாகிஸ்தான் தூதர்

16. கர்நாடகா தேர்தல்:அ.தி.மு.க.,வேட்பாளர் மாற்றம்

17. திருவண்ணாமலையில் 1,008 லிங்கம் பிரதிஷ்டை

18. ரயிலில் ஓசி பயணம் : உ.பி., எ ம்.எல்.ஏ.,வுக்கு அபராதம்

19. நெல்லை ஜவுளி கடையில் பயங்கர தீ விபத்து

mgandhi
21-04-2008, 05:10 PM
22-4-208
1. ."அத்தியாவசியப் பொருள்களை ரேஷன் மூலம் வழங்க வேண்டும்': ஆர். நல்லகண்ணு


2. .மரபணு சோதனையின் முடிவை ஏற்பதாக பெற்றோர்கள் அறிவிப்பு


3. .மொபைல் போன் இணைப்பை கண்காணிக்க தனி மையம்



4. .ஐஐடி-யிலும் கல்விக் கட்டணம் உயர்கிறது



5. .ரத யாத்திரையை தொடங்கினார் சந்திரபாபு நாயுடு



6. .நாடு முழுவதும் 3.70 கோடி போலி ரேஷன் அட்டைகள்



7. .ராணுவ அதிகாரிகளுக்கு ஊதிய உயர்வு: பிரதமர் உறுதி


8. .ரஜினியுடன் நடிக்க ஆவலுடன் இருக்கிறேன்: ஐஸ்வர்யா ராய்



9. .மேற்கு வங்கத்தில் முழுஅடைப்பு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு


10. .கொள்முதல் விலையை விடக் கூடுதல் விலையில் கோதுமை இறக்குமதி: சரத் பவார் தகவல்


11. .பேரவையிலிருந்து அதிமுக வெளிநடப்பு


12. .தப்பி ஓடிய நக்சலைட் தீவிரவாதிகள் விவகாரத்தில் அரசு ஏன் மெüனம் காக்கிறது: ஜெயலலிதா கேள்வி


13. .பாகிஸ்தான் மீண்டும் ஏவுகணை சோதனை


14. .கம்போடியாவில் ஜூலை 27-ல் தேர்தல்


15. .கோவை அருகே பைக் மீது கார் மோதி தந்தை-மகன் சாவு


16. .ஆப்கானிஸ்தானில் மோதல்: 11 தாலிபான்கள் பலி

mgandhi
22-04-2008, 05:18 PM
23-4-2008

1.ஏழைகளுக்கு வழங்கிய 4 கோடி ரேஷன் கார்டுகள் போலி..மாநிலங்களில் நடத்திய சோதனையில் கண்டுபிடிப்பு

2.கர்நாடகாவில் டிஜிட்டல் பேனர், எஸ்.எம்.எஸ்., பிரசாரத்திற்கு தடை! அரசியல் கட்சிகள் கலக்கம்

3.நக்சலைட் உடல் அடக்கம் : 12 கி.மீ., இறுதி ஊர்வலம்: தமிழக போலீசார் அதிர்ச்சி


4.இந்திய கம்யூனிஸ்ட் நெடும் பயணம் : முதல்வர்

5.தீவிரவாதிகள் பரிணாம வளர்ச்சி அடைகின்றனர்: ஜெயலலிதா


6.வைகோ தலைமையிலான ம.தி.மு.க.,வுக்கு அங்கீகாரம்


7.காடுகளில் வாழ்ந்த காலம் மாறி ஆட்சியில் அமரும் பிரசாண்டா

8.ராஜஸ்தான் ராயல்ஸ் அசத்தல் வெற்றி:யுவராஜ் அணி ஏமாற்றம்

mgandhi
23-04-2008, 06:06 PM
24-4-2008

24-4-2008


இலங்கையில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு: மத்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம்
.டிஎன்ஏ பரிசோதனை முடிவு: பரகத் பேகத்துக்கு ஆண் குழந்தை
.தேர்தல் ஆணைய தீர்ப்பு: வைகோவுக்கு ஜெயலலிதா வாழ்த்து
.காவல்துறை குறித்த மோசமான காட்சிகளை நீக்க "நேபாளி' பட இயக்குநர் உறுதி
.தேவர் சிலைக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு: முதல்வர் கருணாநிதி அறிவிப்பு
.மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு: பாமக கோரிக்கை
."விலைவாசி உயர்வு பற்றி மத்திய அமைச்சர் சிதம்பரம் கவலைப்படுவதில்லை': ஆர். நல்லகண்ணு
.பாகிஸ்தானில் சரப்ஜித் சிங் குடும்பத்தினர்
.இலங்கை மோதல்களில் 11 பேர் பலி
.பூஞ்ச் மாவட்டத்தில் ஊடுருவல் முறியடிப்பு
.இலங்கைப் பிரச்னை: பேரவையில் காங்கிரஸ்-பாமக வாக்குவாதம்
.ஈரான் அணுஆயுத விவகாரத்தில் அமெரிக்காவுக்கு கவலை வேண்டாம்: பிரணாப் முகர்ஜி
.இந்தியா வல்லரசாகும்: சிங்கப்பூர் அமைச்சர் நம்பிக்கை
.மும்பை அணியை வெல்வோம்: தோனி நம்பிக்கை
.பென்சில்வேனியாவில் ஹிலாரி கிளின்டன் வெற்றி!
.ராகுல் காந்தியை அலுவலகத்துக்குள் வர அனுமதித்த அதிகாரி மாற்றம்

அனுராகவன்
23-04-2008, 06:10 PM
நன்றி காந்தி அவர்களே!!

mgandhi
24-04-2008, 05:39 PM
நன்றி காந்தி அவர்களே!!

மிக்க நன்றி அனு

mgandhi
24-04-2008, 05:39 PM
25-4-2008

1-குழந்தைகளை நாமே கொன்றது போலாகி விட்டது: முதல்வர்


2-.எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும்: அதிமுக


.3-விவேகானந்தர் இல்லத்தை அபகரிக்க முயலவில்லை: கருணாநிதி பதில்


.4-தடுப்பூசியால் பலியான குழந்தைகளின் குடும்பத்துக்கு அரசு உதவி


5-.தேவர் சிலை அவமதிப்பு: மதுரையில் இன்று போக்குவரத்து பாதிப்பு



.6-சங்கரமடம் சார்பில் புதிய டிவி: 3 மொழிகளில் ஒளிபரப்பு



.7-கிராமப்பகுதிகளில் தொலைபேசி சேவை: தனியார் நிறுவனங்கள் மீது நடவடிக்கை



.8-தர்மபுரி அருகே நடந்த கார் விபத்தில் 7 பேர் பலி


.9-மும்பை தலைமைச் செயலகத்தில் தீ விபத்து


.10-2011-ல் மக்கள் தொகை 120 கோடி: உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தகவல்


.11-ரூ.42 கோடியில் 116 புதிய ஆரம்ப சுகாதார மையங்கள்



.12-ரயில்வே சுற்றுலா மூலம் ரூ. 74 லட்சம் வருவாய்: இணை அமைச்சர் ஆர். வேலு



.13-ராஜஸ்தானில் வேன் மீது லாரி மோதி 24 பேர் சாவு


.14-விழுப்புரம் அருகே வெடி விபத்து: 3 பேர் காயம்õ


.15-மகாராஷ்டிராவில் படகு கவிழ்ந்து 11 பேர் பலி


.16-"இந்தியா-மலேசியா புரிந்துணர்வு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது'



.17-குடும்பத்தோடு தொழில் அதிபர் கடத்தல்: அதிமுக கவுன்சிலர் கைது


.18-மனித உறுப்புகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம்: அமைச்சர் அன்புமணி ராமதாஸ்



.19-8,000 செல்போன் கோபுரங்கள் அமைக்க திட்டம்: ஆ. ராசா



.20-இலங்கை ராணுவம்-புலிகள் இடையே கடும் சண்டை: 143 பேர் சாவு

mgandhi
25-04-2008, 06:03 PM
26-4-2008

1. பா.ஜனதா எம்.பி.க்கள் மனித சங்கிலி போராட்டம்


2. உயிர் இழந்த 4 குழந்தைக∙குடும்பத்துக்கு ரூ.12 லட்சம்


3. வேலூரில்எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள்திருத்தும் மையத்தில்ஏற்பட்ட தீவிபத்தில் ஆயிரக்கணக்கான விடைத்தாள்கள் எரிந்து நாசம்.


4. இலங்கையில்விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடந்த சண்டையில் 143 பேர் பலி ஆனார்கள்.


5. டி.ஆர்.பாலு விவகாரம் தொடர்பாக, பிரதமர் மன்மோகன் சிங் பதவி விலக வேண்டும் என்று ஜெயலலிதா கூறியுள்ளார்


6. ஆசிரியர் பணியை பாக்கியமாக கருதுங்கள்: டாக்டர் அப்துல் கலாம்

7. விவேகானந்தர் இல்லத்தை அரசு எடுப்பதாகக் கூறுவது தவறு: கருணாநிதி

8. 4 குழந்தைகள் இறந்தது பற்றி விசாரிக்க விசாரணை கமிஷன்: டாக்டர் ராமதாஸ்

mgandhi
26-04-2008, 06:45 PM
27-4-2008

1-காலாவதியான தடுப்பூசி மருந்து பயன்படுத்தப்படவில்லை: தமிழக அரசு விளக்கம்

2-ஹர்பஜனுக்கு பி.சி.சி.ஐ நோட்டீஸ்

3-புதுக்கோட்டையில் எம்.பி. தொகுதியை மீண்டும் அறிவிக்க கோ பந்த்

4-அ.இ.ச.மு.க. ஒன்றிய செயலாளர் வெட்டிக் கொலை: தூத்துக்குடியில் பரபரப்பு

5கூயர் நிறுவனங்களை வரைமுறைப்படுத்த சட்டம்: மத்திய அமைச்சர் ஆ. ராசா

6-பஸ் குண்டுவெடிப்பு: "விடுதலைப் புலிகளின் பழிவாங்கும் நடவடிக்கை' - இலங்கை அரசு தகவல்
.
7-தேமுதிக தலைமை அலுவலகம்: தில்லியில் 4ம் தேதி திறப்பு

8-தடுப்பூசி போடப்பட்ட குழந்தை மரணம்

9-.ஜப்பானில் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்: பலத்த பாதுகாப்பு

mgandhi
27-04-2008, 07:11 PM
28-4-2008

1. அத்வானி சுயசரிதை புத்தகம் கொச்சியில் வெளியீடு


2. ராமர் பாலம் பாதுகாக்க கடலில் பெண்கள் தீபமேற்றி வழிப்பாடு


3. .நெல்லை அருகே விவசாயி மீது வெடிகுண்டு வீச்சு


4. ஆண்டிபட்டியில் தீவிரவாதிகளுக்கு ஆதரவு போஸ்டர்


5. ராமேஸ்வரம் கடலுக்குள் கண்டெய்னர் தள்ளி விட்ட தி. மு.க., பிரமுகர் கைது


6. மும்பை ஐ.பி.எல். கிரிக்கெட்: டெக்கான் சார்ஜர்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி


7. குற்றால அருவிகளில் தண்ணீர் குறைவு


8. சேலம் மத்திய சிறையில் கைதிகள் உண்ணாவிரதம்


9. மொகாலி ஐ.பி.எல். கிரிக்கெட்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி


10. சென்னை பார் அசோசியேஷன் தலைவர் தேர்வு

11. புட்டபர்த்தி சாய்பாபா பெங்களூரு பயணம்


12. மாஸ்டர் டென்னிஸ்: பைனலில் பூபதி ஜோடி


13. ஹர்பஜனை மன்னித்துவிட்டேன்: ஸ்ரீ சாந்த்

14. 11 இலங்கை அகதிகள் மண்டபம் வந்தனர்

15. ஐ.பி.எல் மும்பை இந்தியன் அணிக்கு ஷான் போலக் கேப்டன்


16. தி.மு.க., காங்கிரஸ் உறவு பலமாக உள்ளது : வயலார் ரவி
17. .
18. பி.எஸ்.எல்.வி சி9 ராக்கெட் பத்து செயற்கைகோள்களுடன் நாளை விண்ணில் பாய்கிறது

19. ஹர்பஜன் மீதான கிரிக்கெட் தடை: வீடியோ சாட்சி சிக்கியது


20. மதுரை அருகே குழந்தைகளுக்கு திடீர் வாந்தி பேதி:ஒரு குழந்தை பலி

21. ஒலிம்பிக் படகுப்போட்டி தகுதி சுற்றில் மூன்று இந்திய வீரர்கள் வெற்றி

22. ஹர்பஜன் நடத்தை : அணி நிர்வாகம் வருந்துகிறது


23. ஆட்சி அமைப்பதற்கு முன் ஆயுதங்களுக்கு பை பை : நேபாள காங்கிரஸ் தலைவர்


24. இலங்கையில் இறந்த கடலூர் இளைஞரின் உடல் தமிழகம் வந்தது: உறவினர்கள் சாலை மறியல்

mgandhi
28-04-2008, 05:34 PM
29-4-2008

1. .பி.எஸ்.எல்.வி } சி9 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது


2. .பி.எஸ்.எல்.வி.யின் வெற்றி வரலாற்றுச் சாதனை: இஸ்ரோ தலைவர் பெருமிதம்


3. .சீனாவில் பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதல் } 66 பேர் பலி


4. .பி.எஸ்.எல்.வி.யின் வெற்றி நம்பகத்தன்மையை அதிகரித்துள்ளது: மிஷன் இயக்குநர்


5. .வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழி


6. .மாஸ்டர் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் பூபதி இணை தோல்வி


7. .மேற்கு வங்கத்தில் சட்டம்- ஒழுங்கு நிலை: சோனியா அதிருப்தி


8. .ஹர்பஜனுக்கு 11 ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை



9. .காற்று வீசுவதால் எங்கும் மின் தடை இருக்காது: அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி


10. .செங்கோட்டையன் மீது உரிமை மீறல் பிரச்னை



11. .எந்த எஸ்டேட்டையும் நான் வாங்கவில்லை: செங்கோட்டையனுக்கு கருணாநிதி பதில்



12. .தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம் நேரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: அதிமுக வலியுறுத்தல்



13. .ஜப்பானில் நிலநடுக்கம்



14. .தொடர் கொள்ளையன் ரமேஷுக்கு ஆயுள்



15. .மலேசிய நாடாளுமன்றம் கூடியது: 10 தமிழ் எம்.பி.க்கள் பதவியேற்பு


16. .கிராம மின் இணைப்புத் திட்டம்: மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு



17. .ஜார்க்கண்டில் பாஜக மாவட்ட நிர்வாகி சுட்டுக் கொலை


18. .திருச்சி: பிரபல ரவுடி 'பாம்' பாலாஜி சுட்டுக் கொலை


19. .இராக்கில் மோதல்: 38 பேர் பலி


20. .நிலத் தகராறு: பெண்ணை பலாத்காரம் செய்து கொளுத்தியது கும்பல்


21. .மனைவியின் கள்ளக் காதலரைக் கொன்ற முன்னாள் ராணுவ வீரர் குற்றவாளி என அறிவிப்பு


22. .2 ஐபிஎஸ் அதிகாரிகளின் ஜாமீன் மனு தள்ளுபடி

mgandhi
30-04-2008, 08:00 PM
1-5-2008

1. பணவீக்க விகிதத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: ரிசர்வ் வங்கி -
2. 69 சதவீத இட ஒதுக்கீடு நிச்சயம் பெற்றுத் தருவோம்: ஆற்காடு வீராசாமி
3. ராமநாதபுரம் வாலிபர்கள் 2 பேருக்கு žனாவில் தூக்கு தண்டனை

4. கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறு பரிžலனை செய்ய வேண்டும்: இந்திய கம்யூனிஸ்டு

5. சோனியாவின் கருத்துக்கு ஜோதிபாசு கடும் கண்டனம் – கொல்கத்தா

6. கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானம்: பாராளுமன்றம் ஒப்புதல்
7. கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானத்திற்று பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.
8. மருத்துவ நிபுணர்கள் குழு இன்னும் 10 நாளில் அறிக்கை சமர்பிக்கும்: மந்திரி அன்புமணி

mgandhi
01-05-2008, 06:23 PM
2-5-2008


1.வேட்பாளர்களின் ஏஜென்டுகள் நியமனத்தில் கிடுக்கிப்பிடி: கர்நாடகாவில் தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு

2.லோக்சபா எம்.பி.,க்கள் பின்பற்ற ஒன்பது கட்டளை

3.விடுதலை செய்யக்கோரி ஐகோர்ட்டில் நளினி மனு

4.டி.ஆர்.பாலு நிறுவனத்துக்கு எரிவாயு அளிக்கப்படவில்லை: பார்லியில் மத்திய அரசு விளக்கம்

5.ஐ.எஸ்.ஐ., அமைப்பினர் என்னை கொன்று விடுவர் : மாஜி உளவாளியின் உயிர் பயம்

6.தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.168 குறைந்தது

7.வங்க தேச மாஜி பிரதமர் மீதான ஊழல் வழக்கு: சட்ட ஆலோசனை வழங்கும் டோனி பிளேர் மனைவி

8.டில்லி அணிக்கு 'திரில்' வெற்றி

mgandhi
01-05-2008, 06:30 PM
2-5-2008


1.வேட்பாளர்களின் ஏஜென்டுகள் நியமனத்தில் கிடுக்கிப்பிடி: கர்நாடகாவில் தேர்தல் கமிஷன் அதிரடி உத்தரவு

2.லோக்சபா எம்.பி.,க்கள் பின்பற்ற ஒன்பது கட்டளை

3.விடுதலை செய்யக்கோரி ஐகோர்ட்டில் நளினி மனு

4.டி.ஆர்.பாலு நிறுவனத்துக்கு எரிவாயு அளிக்கப்படவில்லை: பார்லியில் மத்திய அரசு விளக்கம்

5.ஐ.எஸ்.ஐ., அமைப்பினர் என்னை கொன்று விடுவர் : மாஜி உளவாளியின் உயிர் பயம்

6.தங்கம் விலை: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.168 குறைந்தது

7.வங்க தேச மாஜி பிரதமர் மீதான ஊழல் வழக்கு: சட்ட ஆலோசனை வழங்கும் டோனி பிளேர் மனைவி

8.டில்லி அணிக்கு 'திரில்' வெற்றி

mgandhi
02-05-2008, 05:18 PM
3-5-2008



கருணாநிதியுடன் வயலார் ரவி சந்திப்பு


சென்னை ஐ.பி.எல். கிரிக்கெட் : டில்லி டேர்வெவில்ஸ் அணி 64/0 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 169 ரன்



புலி ஆதரவாளர் அறந்தாங்கி கோர்ட்டில் சரண்



கடையடைப்பால் மூணாறில் ரூ.50க்கு விற்ற எலுமிச்சை சாதம்



ராஜபாளையம் அருகே அரசு பஸ் ஷேர்ஆட்டோ மோதல்: 5 பேர்பலி



கங்குலிக்கு அபராதம்: ஐ.பி.எல்., அடுத்த அதிரடி



நாளை தொடங்குகிறது அக்னி வெயில்



100 வது வெற்றி: ரபேல் நாடல் காலிறுதிக்கு தகுதி



டி.வி சேனல் மீது வழக்கு தொடர்ந்துள்ளார் ஜோதிகுமரன்



பெரம்பலூரில் 900 கோடி ரூபாயில் டயர் தொழிற்சாலை



நெல்லை தி.மு.க., மேயருக்கு கொலை மிரட்டல் : போலீஸ் பாதுகாப்பு



அமர்நாத் புனித யாத்திரைக்கான பதிவு தொடங்கியது




கொள்ளிடம் ஆற்றில் மணல் திருடியவர்கள் கைது



இந்தியா 2012ம் ஆண்டில் வல்லரசாகும் : அப்துல்கலாம்



உலகிலேயே அதிக செலவில் கட்டப்படும் அம்பானியின் வீடு




தமிழகத்தில் பா.ஜ.க., பந்த் எதிரொலி : 18 பஸ்கள் மீது கல் வீச்சு



என்னை இழிவு படுத்த நினைப்பவர்களின் விருப்பம் பலிக்காது : டி.ஆர்.பாலு



ஈரோடு பஞ்சாலையில் தீவிபத்து



மறைந்த தலைவர் நிர்மலா தேஷ்பாண்டேக்கு வெளிநாடு வாழ் இந்தியர்கள் அஞ்சலி



சங்ககிரி அருகே ரயில் எஞ்சினில் தீ விபத்து : 14 ரயில்கள் தாமதம்



ஹாங்காங் வந்தது ஒலிம்பிக் ஜோதி



பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதில் சீனா முதலிடம் : புஷ் கண்டனம்
மே 02,2008,08:49 IST



எல்லை தாண்டிய 45 இலங்கை மீனவர்கள் கைது



காட்டாமணக்கு விதை சாப்பிட்ட 13 சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம்



கொல்லிமலையில் குவியும் சுற்றுலா பயணிகள்



கர்நாடக தேர்தல் 31 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு



திருவாரூர் தியாகராஜர் கோவிலில் வரும் 4ம் தேதி ஆழி தேரோட்டம்

mgandhi
03-05-2008, 06:41 PM
4-5-2008

1. மொகாலி ஐ.பி.எல். கிரிக்கெட் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி



2. நெல்லை அருகே பெண் வெட்டி கொலை



3. நாகப்பட்டினத்தில் 5ம்தேதி அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்



4. ரேஷன் கடைகளில் கோதுமை சப்ளை நிறுத்தம்



5. அழியும் நிலையில் ஊட்டி கருங்குரங்குகள்



6. மதுரை மாவட்ட பா.ம.க. தொண்டரணி செயலர் தோட்டத்தில் வெடிகுண்டுகள்



7. பெங்களூரு ஐ.பி.எல்.கிரிக்கெட் : ராயல் சாலஞ்சர்ஸ் அணி வெற்றி



8. மும்பை நடிகை மானபங்கம் : வேலைக்காரர் கைது



9. டில்லி அணிக்கு நெருக்கடி கொடுப்போம்: அபிசேக் நாயர்



10. சென்னை அணி எழுச்சி பெறும்: தோனி



11. ஆசியாவின் மிகப்பெரிய மிளகாய் சந்தையில் தீவிபத்து




12. முன்னாள் ராணுவ வீரருக்கு ஆயுள் தண்டனை விதித்தது *டில்லி ஐகோர்ட்



13. மியான்மரை தாக்கியது நர்கிஸ் புயல்



14. தி.மு.க., மகளிர் அணி மாநாடு ஒத்தி வைப்பு



15. ஆயிரம் ஆண்டுகளாக அமைதியாக இருந்த எரிமலை வெடித்தது



16. போட்டோவா, அபராதமா : சிக்கலில் ஷரபோவா



17. ரபேல் நாடல் அரையிறுதிக்கு தகுதி



18. காவிரி டெல்டா பகுதி பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்பட வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை



19. வள்ளியூரில் வியாபாரி கொலை



20. மின்வெட்டை கண்டித்து நெல்லையில் அரசியல் கட்சிகள் இன்று ஆர்ப்பாட்டம்



21. விலைவாசி உயர்வுக்கு இந்தியாவே காரணம் : புஷ்



22. நாகர்கோவிலில் பயணிகள் ரயில் தடம்புரண்டது



23. உத்தமபுரம் தடுப்புசுவர் பிரச்னை : பேச்சுவார்த்தை தோல்வி



24. வேட்பாளர் தேர்தலில் ஒபாமாவிற்கு பின்னடைவு



25. தலாய்லாமாவுடன் சீனா பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா வலியுறுத்தல்



26. விலைவாசி உயர்வால் விரைவில் மக்களவை தேர்தல்: அத்வானி எச்சரிக்கை



27. பாகிஸ்தானில் நீதிபதிகள் மீண்டும் நியமனம்



28. பொலிவியா விபத்தில் 13 பேர் பலி



29. அக்னி வெயில் ஆரம்பம்



30. ஸ்ரீரங்கத்தில் சித்திரைத் தேரோட்டம்

mgandhi
04-05-2008, 06:24 PM
5-5-2008


1. .ஜார்ஜ் புஷ் கருத்து "கொடூரமான ஜோக்': அந்தோனி


2. .உணவு பற்றாக்குறைக்கு அமெரிக்காவே காரணம்: பாஜக குற்றச்சாட்டு


3. .புஷ் கருத்து; மன்மோகன் மெüனம் வெட்கக் கேடு: பாஜக


4. .ஓரிரு நாளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு: கருணாநிதி


5. .பாகிஸ்தானில் மோட்டார் வாகன பணிமனையாக மாற்றப்பட்ட ஹிந்து கோயில்


6. .அமெரிக்க அதிபர் புஷ்ஷுக்கு தமிழகத்தில் கண்டனம்


7. .மக்கள் குறையை தீர்க்க வட இலங்கையில் சிறப்புப் பிரிவு


8. .பொய் வழக்குப் போடுகிறார் மாயாவதி: முலாயம் சிங் யாதவ் குற்றச்சாட்டு


9. .சந்தேகக் கண்ணோடு பார்க்காதீர்கள்: ராமதாஸýக்கு கருணாநிதி பதில்


10. .ராஜஸ்தான் ராயல்ûஸ சமாளிக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ்?


11. .அமெரிக்காவில் விமானங்கள் மோதல்: 3 பேர் பலி


12. .திபெத் பிரச்னை: தலாய் லாமா தூதர்களுடன் பேச்சுவார்த்தையை தொடங்கியது சீனா


13. ."வசந்த்' டி.வி.: சோனியா தொடங்கி வைக்கிறார்


14. .இராக்கில் கண்ணிவெடி தாக்குதல்: அமெரிக்க வீரர்கள் 4 பேர் பலி


15. .இடைத் தேர்தலில் போட்டியில்லை: நவாஸ் ஷெரீப் முடிவு

அனுராகவன்
05-05-2008, 12:26 AM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!

mgandhi
05-05-2008, 12:24 PM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!

மிக்க நன்றி அனு

mgandhi
05-05-2008, 06:46 PM
6-5-2008

1-பெங்களூரு ஐ.பி.எல். கிரிக்கெட் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

பெங்களூரு : ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில், பெங்களூருவில் டிராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி பீல்டிங்செய்ய முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 126 ரன் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 18.2 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 127 ரன் எடுத்து வெற்றி பெற்றது.



2-தமிழகம் முழுவதும் மத்திய சிறைகளில் இந்து அமைப்பு கைதிகள் உண்ணாவிரதம்

திருநெல்வேலி: தமிழகம் முழுவதும் மத்திய சிறைகளில் இந்து அமைப்பு கைதிகள் உண்ணாவிரதம் மேற்கொண்டனர். திருநெல்வேலி மாவட்டம் தென்காசியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்.எஸ். எஸ்., அலு<வலகத்தில் பைப் வெடிகுண்டு வெடித்தது. இது தொடர்பாக இந்து அமைப்பை சேர்ந்த சிவா, முருகன், குமார், ரவிப்பாண்டியன், நாராயணசர்மா, ஆகியோர் கைது செய்யப்பட்டு பாளை., மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்காசி குண்டுவெடிப்பு பிரச்னை தொடர்பாக பார்லி.,யில் விவாதம் நடந்தது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ்பாட்டீல் பதில் அளித்து பேசுகையில் இந்து அமைப்பினர் குண்டு வைத்து விட்டு மற்றவர்கள் மீது பழி போடுவதாக கூறினார். இவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தமிழகம் முழுவதும் மதுரை, கோவை , சென்னை, கடலூர், சேலம், பாளையங்கோட்டை ஆகிய மத்திய சிறைகளில் உள்ள இந்து அமைப்பு கைதிகள் காலை முதல் உண்ணாவிரதம் இருந்தனர். இரவு வரை உணவு உண்ண மறுத்து விட்டனர். பாளை மத்திய சிறையில் இந்து அமைப்பை சேர்ந்த சிவா, முருகன், குமார், ரவிப்பாண்டியன், நாராயணசர்மா, உள்பட 50 கைதிகள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். சிறையில் உண்ணாவிரதம் நடந்ததையடுத்து கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

3-கராத்துடன் விஜயகாந்த் சந்திப்பு

புதுடில்லி: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத்தை டில்லியில் மரியாதை நிமித்தமாக விஜயகாந்த் சந்தித்துப் பேசினார். டில்லி வந்துள்ள தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் நேற்று தனது கட்சி நிர்வாகிகளுடன் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார். பின்னர் மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பிரகாஷ் கராத்தை சந்தித்துப் பேசினார். மார்க்சிஸ்ட் தலைமை அலுவலகமான ஏ.கே.ஜி., பவனில் நடைபெற்ற இச்சந்திப்பு அரைமணி நேரம் நீடித்தது. சந்திப்பின்போது, விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மட்டும் உடன் சென்றிருந்தார்.

4-நாகையில் அ.தி.மு.க.,வினர் சவ ஊர்வல ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம்: நாகையில் அ.தி.மு.க., வினர் சவ ஊர்வலம் நடத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.நாகை மாவட்ட மருத்துவமனைகளில் நிலவி வரும் அவல நிலையை கண்டித்து, நாகை அரசு தலைமை மருத்துவமனை முன்பு அ.தி.மு.க., சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று பொதுச்செயலர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அ.தி.மு.க., அமைப்பு செயலர் கருப்பசாமி தலைமையில், ஓ.எஸ்.மணியன், ஜீவானந்தம், சந்திரமோகன், தங்க.கதிரவன் ஆகியோர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். மருத்துவமனை சிகிச்சைக்கு வருபவர்களுக்கு ஏற்படும் நிலையை சித்தரித்துக் காட்டும் வகையில் வக்கீல் தங்க.கதிரவன் தலைமையில் தொண்டர் ஒருவரை பாடையில் படுக்க வைத்து சவ ஊர்வலம் மற்றும் மொட்டை அடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பெண்கள் ஒப்பாரி வைத்து அழுதனர்.நூதன போராட்டத்தை கண்ட பொதுமக்கள் கூட்டமாக நின்று வேடிக்கை பார்த்ததால், நாகை பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்ட பஸ்கள் மாற்று பாதையில் திருப்பி விடப்பட்டன.

5-ஆட்டோ மீது தனியார் மில் வேன் மோதி 2 பேர் பலி

சிவகங்கை: சிவகங்கை அருகே ஆட்டோ மீது வேன் மோதிய விபத்தில் ஆட்டோ டிரைவர் உள்பட இருவர் பலியாகினர்.

மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா வண்ணார்பாறைபட்டியை சேர்ந்த பாண்டியன் மனைவி சகுந்தலா (58). இவர் சிவகங்கையில் மேலூர் ரோட்டிலுள்ள காமராஜர் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வீட்டில் இருந்து ஆட்டோவில் சிவகங்கை நோக்கி வந்து கொண்டிருந்தார். ஆட்டோவை சிவகங்கையை சேர்ந்த மணிசாமி (60 ) ஓட்டினார். குறிஞ்சி நகர் அருகே வந்த போது ஆட்டோ மீது எதிரே சிவகங்கையில் இருந்து சக்கந்தியிலுள்ள மில்லுக்கு ஆட்களை ஏற்றிச் சென்ற வேன் மோதியது. இதில் ஆட்டோ நொறுங்கி உள்ளே இருந்த சகுந்தலா சம்ப இடத்திலேயே பலியானார். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ஆட்டோ டிரைவர் மணிசாமியை ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

6-அக்தர் மீதான வழக்கு வாபஸ்: பாக்., கிரிக்கெட் போர்டு அறிவிப்பு

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் மீது தொடர்ந்த மான நஷ்ட ஈடு வழக்கை திரும்பப் பெறுவதாக பி.சி.பி., செயலாளர் நஷிம் அஷ்ரப் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த வழக்குகள், தடையால் துவண்டு போயிருந்த அக்தருக்கு, தற்போது அடுத்தடுத்து மகிழ்ச்சிகள் குவிகின்றன. ஐந்து ஆண்டு தடையிலிருந்து தற்காலிகமாக தப்பியவருக்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் இன்றைய அறிவிப்பு மேலும் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இன்று பி.சி.பி., செயலாளர் நஷிம் அஷ்ரப் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐ.பி.எல்., போட்டிகளில் வீரர்களை சேர்க்க பணம் கேட்டதாக கூறிய அக்தர் மீது 22 கோடி பணம் கேட்டு வழக்கு தொடர்ந்தோம். வரும் 16 ந்தேதி வழக்கு விசாரணைக்கு வர இருந்தது. இப்போது அவரது பதில் அறிக்கையில் திருப்தியடைந்ததால் கிரிக்கெட் போர்டு, நஷ்ட ஈடு வழக்கை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது, என்றார். இதனிடையே ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்பதற்காக வேகப்பந்து வீச்சாளர் அக்தர் இன்று டில்லி வந்து சேர்ந்தார். தடை பற்றிய வழக்கு ஜூன் 6 ந்தேதி தான் விசாரணைக்கு வரும் என்பதால் இனி தனது கவனம் முழுவதையும் கிரிக்கெட்டில் செலுத்த போவதாக சோயிப் அக்தர் தெரிவித்தார்.

7-பிரதமரை சந்தித்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள்

புதுடில்லி : ஒரே ராக்கெட்டில் 10 செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தி செயற்கரிய செயலை செய்து முடித்தனர் இஸ்ரோ விஞ்ஞானிகள். இதனை தொடர்ந்து இன்று டில்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார்கள் இஸ்ரோ விஞ்ஞானிகள். சந்திப்பின் போது பிரதமருக்கு பி.எஸ்.எல்.வி ராக்கெட்டின் மாதிரியை வழங்கினார்கள். இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர், மற்றும் உடன் வந்திருந்த விஞ்ஞானிகளுக்கு, பிரதமர் அறிவியல் சாதனை தொடர வாழ்த்து தெரிவித்தார்.

8-விதிமுறைகளை பின்பற்றாத மெட்ரிக் பள்ளிகள் அங்கீகாரம் ரத்து

சென்னை : சட்டப்பேரவையில் இன்று பேசிய பள்ளி கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விதிமுறைகளை பின்பற்றாத மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று கூறினார். மெட்ரிக் பள்ளிகளின் அடிப்படை வசதி குறித்து நீதிபதி சம்பத் தலைமையில் அமைந்த குழு விதிமுறைகளை நிர்ணயித்துள்ளது. இந்த விதிமுறைகளை பின்பற்றாத மெட்ரிக் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளை தோல்வி அடைய செய்ய கூடாது என்ற சட்டம் நடைமுறையில் உள்ளதாகவும், இந்த அரசு ஆணை குறித்து அனைத்து பள்ளிகளுக்கும் மீண்டும் வலியுறுத்த இருப்பதாகவும் கூறினார்.

9-விளையாட்டு விபரீதமானது

காபுல் ஆப்கானில் எதிர்பாராத விபத்தில் 5 பேர் பலியாகினர். ஆப்கான் தலைநகர் காபூலில் குழந்தைகள் *பழைய பீரங்கி குண்டுகளுடன் விளையாடினர். அவர்கள் விளையாட்டு விபரீதமானது. திடீரென்று அந்த குண்டு வெடித்தது. இதில் 3 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 2 பேர் காயமடைந்தனர். மற்றொரு சம்பவத்தில், ஆப்கானின் வட பகுதியில் மண்ணில் புதைந்திருந்த குண்டின் மீது டிரக் ஏறியதில் அந்த குண்டு வெடித்தது. இதில் 2 பேர் பலியாகினர், 13 பேர் காயமடைந்தனர். இந்த இரு சம்பவங்களும் போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கான் மக்களின் தொடரும் அவல நிலையை எடுத்துக்காட்டுகிறது. மழை விட்ட பிறகும் தூவானம் விடாத கதை இது தான் போல.

10-நந்திகிராமில் மீண்டும் கலவரம், இருவர் படுகாயம்

கோல்கட்டா : டாட்டா நிறுவனம் விளைநிலங்களை கையகப்படுத்துவதை எதிர்த்து பெரும் போராட்டம் வெடித்து வன்முறையில் முடிந்தது அனைவருக்கும் தெரிந்ததே. சில காலமாக அமைதியாக இருந்தது அப்பகுதி. இந்நிலையில் இன்று நந்திகிராம் பகுதியில் மீண்டும் கலவரம் வெடித்தது. நில ஆர்ஜிதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் பி.யு.பி.சி அமைப்பினருக்கும், ஆளும் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர்களுக்கும் இடையே கலவரம் வெடித்தது. இதில் இரு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆயுதங்களால் தாக்கிக் கொண்டனர். துப்பாக்கி சூடும் நடைபெற்றது. இதனை அடுத்து அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது. சுமார் 500 பேர் நந்திகிராமில் உள்ள கேம்பில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

11-தபேலா கலைஞர் பண்டிட் கிஷன் மகாராஜ் மரணம்

வாரணாசி : பிரபல தபேலா கலைஞர் பண்டிட் கிஷன் மகாராஜ் நோய் காரணமாக உயிரிழந்தார். நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கிஷன் மகாராஜ் 2002ம் ஆண்டுக்கான பத்ம விபூஷன் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கிஷன்ஜியை மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்து பேசினார் சரோட் இசை கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கான்.

12-ராஜஸ்தான் அணி தன்வீர் உலக சாதனை : தோனி பாராட்டு

ஜெய்பூர்: ஐ.பி.எல் 'டுவென்டி20' போட்டியில் பதினான்கு ரன்களுக்கு ஆறு விக்கெட்டுகளை கைப்பற்றி, புதிய உலக சாதனை படைத்த, ராஜஸ்தான் ராயல் அணியின் தன்வீரை , சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி பாராட்டியுள்ளார்.நேற்று முன்தினம் நடைபெற்ற ஐ.பி.எல் 'டுவென்டி20' போட்டியில், வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணி, தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோற்கடித்தது. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் தன்வீர், 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து, 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் சென்னை அணி, அதிக பட்ச ரன்களை குவிக்க முடியாமல், தோல்வியை தழுவியது. இருப்பினும் சென்னை அணியின் கேப்டன் தோனி, தன்வீரை புகழ்ந்துள்ளார். இது குறித்து தோனி பேசியபோது, தன்வீர் தனது சிறப்பான பந்துவீச்சால், 'டுவென்டி20' கிரிக்கெட் வரலாற்றில், புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார். இவர் ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப சிறப்பான முறையில் பந்துவீசி, எங்கள் அணி ரன் குவிப்பதை தடுத்து நிறுத்தினார். இந்த போட்டியில் பேட்ஸ்மேன்கள், 150 ரன்கள் குவித்திருந்தால், எங்கள் பந்துவீச்சாளர்கள் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வரிசைக்கு நெருக்கடி ஏற்படுத்தி, தோல்வியை தவிர்த்திருப்போம். ஆனால் தன்வீரின் அபார பந்துவீச்சால், நாங்கள் அதிக ரன்கள் அடிக்க முடியவில்லை. துவக்கத்திலேயே விக்கெட்டுகளை பறிகொடுத்த காரணத்தால், எங்கள் வெற்றி வாய்ப்பு பறிக்கப்பட்டது. பார்த்திவ் படேல், பிளமிங், வித்யூத், மார்கல், முரளிதரன், நிட்டினி போன்ற வீரர்கள், தன்வீர் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். ராஜஸ்தான் அணியோடு சென்னை மைதானத்தில் விளையாடும்போது, தன்வீர் இத்தகைய சாதனையை நிகழ்த்துவது கடினம். இந்த போட்டியில் நாங்கள், ராஜஸ்தான் அணிக்கு பதிலடி கொடுக்கும். எங்கள் அணியில் சிறப்பாக பந்து வீசும் பவுலர்கள் குறைவாக உள்ளனர். இதனால் பவுலர்களை குறை சொல்ல விரும்பவில்லை என்று தோனி கூறினார்.


13-தேசிய ஜனநாயக கூட்டணி பார்லிமென்ட்டில் மவுனம் காக்கும் போராட்டம்

புதுடில்லி : பார்லிமென்ட்டில் இன்று நடக்கும் கூட்டத்தொடரில் தேசிய ஜனநாயக கூட்டணி மவுனம் காக்கும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளது. இன்று காலை பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அத்வானியின் அறையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது. நான்கு நாட்கள் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் கூடுகிறது பார்லிமென்ட்.. ஏப்ரல் 24ம் தேதி பார்லிமென்ட்டில் நடந்த அமளி தொடர்பாக 32 எம்.பி., கள் மீது நடவடிக்கை எடுக்க உரிமை குழுவிற்கு பரிந்துரை செய்யப்பட்டது. இதனால் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகளிடையே அதிருப்தி நிலவி வருகிறது. தேசிய ஜனநாயக கூட்டணி இது தொடர்பாக பார்லிமென்ட்டில் இன்று சபாநாயகர் சோம்நாத் சேட்டர்ஜியுடன் விவாதிக்க போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் திடீரென்று இன்று பார்லிமென்ட்டில் மவுன போராட்டம் நடத்தப் போவதாக தேசிய ஜனநாயக கூட்டணி அறிவித்துள்ளது.

14-அஸ்ஸாமில் 10 பேர் விபத்தில் பலி

திப்ருகர் : அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரில் திருமண கோஷ்டி ஒன்று கோர விபத்தில் சிக்கியது. இதனால் 10 பேர் பரிதாபமாக பலியாகினர். 20 பேர் படுகாயமடைந்தனர். திருமண விழாவிற்காக டிரக்கில் பயணம் செய்தனர் லட்சுமிபூரரை சேர்ந்தவர்கள். இன்று அதிகாலை அவர்களது டிரக் *எதிரே வந்து கொண்டிருந்த பஸ்சுடன் மோதியது. இதில் டிரக்கில் பயணித்த 10 பேரா இறந்தனர். காயமடைந்தவர்கள் அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



15-டில்லியில் நாளை அணு சக்தி ஒப்பந்தம் குறித்து ஆலோசனை கூட்டம்

புதுடில்லி : இந்தியா , அமெரிக்கா இடையேயான அணு சக்தி ஒப்பந்தம் ஏற்பட்டதிலிருந்தே இடது சாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கருத்து வேறுபாடுகளை கலைவதற்கு இடது சாரிகள், ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர்களின் உயர் மட்டக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு கடைசியாக மார்ச் 17ம் தேதி கூடி அலோசனை நடத்தியது. இதனை அடுத்து நாளை மீண்டும் இக் கூட்டம் கூடவிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்த இடது சாரிகள் கட்சி அணு சக்தி ஒப்பந்தம் பொறுத்தவரை தங்கள் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் *செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது. நாளை கூட்டத்தில் சர்வதேச அணு சக்தி முகமையுடன் இந்தியா நடத்திவிருக்கும் பேச்சுவார்த்தை குறித்தும், அந்த முகமையுடன் ஏற்படும் ஒப்பந்தத்தில் இடம் பெறவிருக்கும் சிறப்பம்சங்கள் குறித்தும் விளக்கப்படும் என தெரிகிறது. அணு சக்தி ஒப்பந்தம் குறித்து பா.ஜ., தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில் இந்தியா, அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றார்.


16-இலங்கையிலிருந்து 40 பேர் அகதிகளாக வருகை

ராமேஸ்வரம் : இலங்கையில் இருந்து 40 பேர் அகதிகளாக இன்று தனுஷ்கோடி வந்தனர். இலங்கையில் இருந்து பலர் அகதிகளாக நாள்தோறும் வந்த வண்ணம் உள்ளனர். இன்று தனுஷ்*கோடி அருகே உள்ள முகுந்தராயர் சத்திரத்தில் 40 பேர் அகதிகளாக வந்திறங்கினர். அவர்களிடம் போலீசார் விசாரணைு நடத்தி வருகின்றனர்.

17-தமிழகம் முழுவதும் 90 நாட்கள் சுற்றுப்பயணம்: சரத்குமார் முடிவு

நாகர்கோவில்: அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், மாவட்டம் தோறும் கொள்கை விளக்கக் கூட்டங்களை கட்சியின் தலைவர், நடிகர் சரத்குமார் நடத்திவருகிறார். நாகர்கோவிலில் நடந்த கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் 90 நாட்கள் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணத்தில் ஈடுபட உள்ளேன். வரும் மார்ச்சில் பார்லி., தேர்தல் நடக்க உள்ளது. அதோடு சேர்த்து சட்டசபை தேர்தல் வந்தாலும், சந்திக்கத் தயாராக எங்கள் கட்சி உள்ளது. ஒகேனக்கல் பிரச்னையில் எங்கள் கேள்விகளுக்கு அரசு முறையாக பதில் தரவில்லை. கர்நாடகத்தில் அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் இதே நிலை தொடர்ந்தால் என்ன செய்வது. அப்போது மீண்டும் போராட்டம் நடத்தவேண்டுமா. காவிரி நீர் பிரச்னை போல, ஒகேனக்கல் பிரச்னையையும் கிடப்பில் போட்டு விடக்கூடாது என்பதுதான் எங்கள் கோரிக்கை என்று சரத்குமார் கூறினார்.

18-திண்டிவனத்தில் வாந்தி,பேதி30 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி

விழுப்புரம்: திண்டிவனத்தில் 30க்கும் மேற்பட்டோர் திடீர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.திண்டிவனம் 3,4, 5 வார்டுகளில் வசிக்கும் மக்கள் திடீர் வாந்தி பேதியால் பாதிக்கப்பட்டனர். இதில் 20 பெண்கள் உட்பட 40 பேர் சுருண்டு விழுந்தனர். இவர்கள் அனைவரும் திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். இந்த வார்டுகளுக்கு கண்டரக்கோட்டை மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் இருந்துதான் தண்ணீர் வருகிறது. இந்த தண்ணீரை குடித்ததால்தான் வாந்திபேதி ஏற்பட்டது என ஊர் மக்கள் தெரிவித்தனர்.இதனையடுத்து மருத்துவ குழுவினர் அந்த பகுதிகளில் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு முடிவில் குடிநீரில் எந்தவித பாதிப்பும் இல்லை, வெயிலுக்காக தரம் குறைவான குளிர்பானத்தை மக்கள் குடித்ததால்தான் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தனர். இதையடுத்து அப்பகுதியில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகதாரத்துறையினர் எடுத்து வருகின்றனர்.

19-அம்பானி குடும்பத்தினர் திருப்பதியில் தரிசனம்

திருப்பதி : ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில், கட்டப்பட்ட பக்தர்கள் தங்கும் விடுதியை, முகேஷ் அம்பானி திருப்பதி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைத்து, தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். ரிலையன்ஸ் நிறுவனம் சார்பில், திருமலையில் ஏழு கோடி ரூபாய் மதிப்பில், பக்தர்கள் தங்கும் விடுதி கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதை திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் ஒப்படைப்பதற்காக முகேஷ் அம்பானி, தனது குடும்பத்தினருடன் திருப்பதி வந்தார். பூஜைகளுக்கு பிறகு, திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டியிடம் தங்கும் விடுதி ஒப்படைக்கப்பட்டது. இது ரிலையன்ஸ் நிறுவனத்தால், வழங்கப்படும் இரண்டாவது தங்கும் விடுதி. இதற்கு முன்னர், கடந்த ஆண்டு மே மாதம் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான தங்கும் விடுதியை கோவில் நிர்வாகத்திடம் முகேஷ் அம்பானி வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் அம்பானி குடும்பத்தினர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


20-ஆர்.எஸ்.எஸ்., தலைவருடன் அத்வானி சந்திப்பு

நாகபுரி: எதிர்க்கட்சித் தலைவரும், பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவருமான அத்வானி, நேற்று ஆர்.எஸ். எஸ்., தலைவர் சுதர்சனத்தை நாகபுரியில் சந்தித்து பேசினார்.நாகபுரியில் அமைந்துள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைமையகத்தில் இருவரும் இரண்டு மணி நேரம் பேசினர். இந்த சந்திப்பின்போது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் முக்கியத் தலைவர்கள் உடனிருந்தனர். இது வழக்கமான சந்திப்பு என்று ஆர்.எஸ்.எஸ்., செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார் .

21-மல்லிகை பூ விலை திடீர் வீழ்ச்சி : விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே மல்லிகை பூவின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப் பட்டுள்ளனர்.திண்டிவனம் அருகே உள்ள ஒலக்கூர் ஒன்றியத்தில் உள்ள பட்டணம், ஊரல், ஒலக்கூர், நொளம்பூர், விளங்கம்பாடி உட்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிகளவில் முல்லை மற்றும் மல்லிகை பூ சாகுபடி செய்துள்ளனர். விளைச்சலில் பெரும் பகுதி சென்னை மற்றும் திண்டிவனம் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் விவசாயிகள் முல்லை மற்றும் மல்லிகை பூக்களை கிலோ ரூ.100 லிருந்து 300 வரை விற்பனை செய்து வந்தனர்.தற்போது பூ மார்க்கெட்டில் திடீரென்று விலை சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்தப் பூக்களின் விலை கிலோ ரூ. 25 லிருந்து 50 வரை விற்கிறது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். முகூர்த்த நேரத்தில் மட்டும் பூ விலை உயர்வாகவும், மற்ற நேரங்களில் சரிந்து விடுவதால் பூ பயிரிடும் விவசாயிகள் அதிகளவு நஷ்டமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

22-சென்னையில் அனல் காற்று : பொதுமக்கள் கடும் அவதி


சென்னை: சென்னை மற்றும் வேலூரில் 42 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. அனல் காற்று வீசியதால், பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். தமிழகத்தில் சென்னை மற்றும் வேலூரில் 107.6 டிகிரி பாரன்ஹீட் (42 டிகிரி செல்சியஸ்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. திருச்சியில் 105.8 டிகிரி (41 டிகிரி செல்சியஸ்) பாரன்ஹீட், கடலூரில் 104 டிகிரி பாரன்ஹீட் (40 டிகிரி செல்சியஸ்), மதுரை, பாளையங்கோட்டை, புதுச்சேரி, சேலம், தஞ்சாவூரில் 102.2 டிகிரி பாரன்ஹீட் (39 டிகிரி செல்சியஸ்), தர்மபுரி, நாகப்பட்டினத்தில் 100.4 டிகிரி பாரன்ஹீட்(38 டிகிரி செல்சியஸ்) அளவு வெப்பநிலை பதிவாகியிருந்தது. தமிழகத்தின் வடக்கு கடலோரப் பகுதிகளிலும், ஆந்திராவின் கடலோரப் பகுதிகளிலும் தற்போது நிலவும் வெப்பக் காற்றலை தொடர்ந்து நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸ் அளவை ஒட்டியே இருக்கும்.நாட்டிலேயே அதிகபட்சமாக அரியானாவின் ஹிசார் பகுதியில் நேற்று 115 டிகிரி பாரன்ஹீட் (46.2 டிகிரி செல்சியஸ்) அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

mgandhi
06-05-2008, 06:09 PM
7-5-2008

1-தமிழக அமைதி; ஒத்துழைப்பு தாருங்கள்: கருணாநிதி வேண்டுகோள்


2-கருத்துக்களை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும்: ராமதாஸ்


3-.உத்தப்புரம்: சர்ச்சைக்குரிய சுவர் இடிப்பு


4-.தீண்டாமை சுவர் இடிப்பு: மார்க்சிஸ்ட் வரவேற்பு


5-.உயர்கல்வித் தரத்தை பின்னுக்குத் தள்ளி விட்டீர்கள்: அதிமுக குற்றச்சாட்டு


6-.நெல்லை: புஷ் உருவ பொம்மை எரித்தவர்கள் கைது


7-.விலைவாசியை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை: திட்டக்குழு துணைத் தலைவர் அலுவாலியா


.8-பலத்த போராட்டத்துக்கிடையே மாநிலங்களவையில் மகளிர் மசோதா தாக்கல்


.9-மகளிர் மசோதா அறிமுகம்: காங்கிரஸ், பாஜக, இடதுசாரிகள் வரவேற்பு


10-.முன்னாள் அமைச்சர் அகிலேஷ் தாஸ் மாநிலங்களவையில் இருந்து விலகல்


11-.முல்லைப் பெரியாறு அணையின் பலம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்


12-.நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தது


.13-பாகிஸ்தானில் இலங்கை ராணுவ தளபதி


.14-சிவராஜ் பாட்டில் பேச்சுக்கு கண்டனம்: தொடரும் உண்ணாவிரதம்


.15நர்கீஸþக்கு பலியானோர் எண்ணிக்கை 15 ஆயிரத்தை தொட்டது


.16-போலி விசா: இலங்கை பெண்கள் கைது

அனுராகவன்
07-05-2008, 12:43 AM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!

mgandhi
07-05-2008, 05:54 PM
8-5-2008

1-.மியான்மரில் புயல் சாவு 22,500ஆக அதிகரிப்பு


2-.தீவிரவாதத்தை ஒழிக்க உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும்: நிருபமாசென்


3-.சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தில்லிக்கு மாற்றம்


4-.அக்னி-3 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை


5-.பார்வர்டு பிளாக் எம்பி ராஜிநாமா ஏற்பு


6-.வெற்றியை நெருங்குகிறார் ஒபாமா


7-.ராமேசுவரம் மீனவர்கள் 6 பேரை விடுவித்தது இலங்கை நீதிமன்றம்


8-.இலவச கலர் டிவி வெடித்ததா?: போலீஸôர் மீது அரசு உயர் அதிகாரி குற்றச்சாட்டு


9-.பல்வேறு சம்பவங்களில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி: முதல்வர் அறிவிப்பு


10-.எடப்பாடி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மறைவுக்கு இரங்கல்


11-.இருண்ட தமிழகம்தான் திமுக அரசின் சாதனை: அதிமுக


12-.நான்கு மாவட்டங்களில் புதிய தொழிற்பேட்டைகள்: அமைச்சர் அறிவிப்பு


.13-எம்.எல்.ஏ.க்கள் தொழில் தொடங்க அமைச்சர் அழைப்பு


14-.பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: மே 9 ஆம் தேதி வெளியிடப்படுகிறது


1-.கடைசியாக ஒரு வாய்ப்பு தாருங்கள்!: பிசிசிஐ-க்கு ஹர்பஜன் சிங் கடிதம்


16-.தீவிரவாதிகளிடம் மென்மையான போக்கா?: பாஜக குற்றச்சாட்டுக்கு சோனியா மறுப்பு

mgandhi
09-05-2008, 06:22 PM
10-5-2008

1-ஐ.பி.எல். கிரிக்கெட் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி

ஜெய்ப்பூர் : ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், கில்கிறிஸ்ட் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதியதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் செய்ததை தொடர்ந்து, களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 140 ரன் எடுத்தது. அடுத்து பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 16 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 141 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

2-இலங்கைக்கு அலுமினிய சல்பேட் : கடத்த முயன்ற 4 பேர் கைது

ராமநாதபுரம்: இலங்கைக்கு அலுமினிய சல்பேட் கடத்த முயன்ற நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் சூசையர்பட்டினத்தை சேர்ந்தவர்கள் கிறிஸ்துராஜ், சந்தியா, ஜான், ரோமான். இவர்கள் சூசையர்பட்டினம் கடற்கரை பகுதியில் 25 கைலிகள், ஒரு மூட்டை அலுமினிய சல்பேட் ஆகியவைகளை நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்த முயன்றனர். தங்கச்சிமடம் போலீசார் நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து கைலிகள் அலுமினிய சல்பேட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

3-ஈரோடு மாணவி10ம் வகுப்பில் முதலிடம்; பிளஸ் 2ல் 2ம் இடம்

ஈரோடு: பத்தாம் வகுப்பில், மாநில அளவில் முதலிடம் பெற்ற ஈரோடு மாணவி ரம்யா, பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.ஈரோடு பெரியார் நகரைச் சேர்ந்தவர் அங்கமுத்து (54), இவரது மகள் ரம்யா (17), கலைமகள் கல்வி நிலையம் பள்ளி மாணவி. இவர் பிளஸ் 2 தேர்வில், 1,181 மதிப்பெண் பெற்றுள்ளார். 2006 - 07 கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாநில அளவில் முதலிடம் பெற்றார். தற்போது, பிளஸ் 2 தேர்வில் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளார். தமிழ் 193, ஆங்கிலம் 190, இயற்பியல் 199, வேதியியல் 199, கணக்கு 200, கம்ப்யூட்டர் சயின்ஸ் 200 என மார்க் எடுத்துள்ளார்.ரம்யா கூறியதாவது:முதலிடம் பிடிக்க முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது. ஒரு "மார்க்'கில் அதை தவறவிட்டுள்ளேன்.மொழிப்பாடங்களை எழுதிப் படிக்க வேண்டும். இயற்பியல் "ஈக்குவேஷன்'களை அடிக்கடி எழுதி பார்ப்பேன். பள்ளியில் நடத்திய அனைத்து தேர்வுகளையும் பொதுத்தேர்வு போல் நினைத்து எழுதினேன்.காலாண்டு தேர்வின் போது, பாதி பாடங்களை முடித்து விட்டேன். அரையாண்டு தேர்வின் போது முழு "போர்ஷனை'யும் முடித்தேன்.இவ்வாறு ரம்யா கூறினார்.

4-வேலூர் கோட்டை மசூதி பிரச்னை சாலையில் தொழுகை

வேலூர்: தடையை மீறி வேலூர் கோட்டை மசூதியில் தொழுகை நடத்த சென்றவர்களை போலீசார் கைது செய்தனர். சாலையில் தொழுகை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் கோட்டையில் திப்பு சுல்தான் குடும்பத்தினர் தொழுகை நடத்த வசதியாக மசூதி அமைக்கப்பட்டிருந்தது. திப்பு சுல்தான் குடும்பத்தினருக்கு பின் இங்கு தொழுகை நிறுத்தப்பட்டது. சுதந்திரத்துக்குப்பின், வேலூர் கோட்டை மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறை கட்டுப்பாட்டில் சென்றது. மசூதியை தொல்பொருள் ஆய்வுத்துறையினர் பூட்டினர்.தொழுகை நடத்த பல்வேறு முஸ்லிம் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்து வந்தன. "கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் கோவில் இருப்பதால் தொழுகை நடத்தினால் பிரச்னை வரும்' என கூறி இந்து முன்னணி எதிர்த்து வந்தது. மசூதியில் மீண்டும் தொழுகை நடத்த த.மு.மு.க., அனுமதி கேட்டனர். "மத்திய தொல்பொருள் துறை அனுமதி கொடுத்தால் தான் மசூதி திறக்கப்படும்' என போலீசார் தெரிவித்துவிட்டனர். கோட்டையை சுற்றியுள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. கோட்டை அருகே மக்கான் ரோட்டில் இருந்து காலை 12 மணிக்கு த.மு.மு.க.,வினர் தடையை மீறி கோட்டை மசூதியை நோக்கி ஊர்வலம் சென்றனர். நுழைவு வாயில் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர்.இதையடுத்து, மக்கான் ரோட்டில் இருந்து கோட்டை முன் வரை சாலையில் அமர்ந்து நசீர்உமர் தலைமையில் தொழுகை நடத்தினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அப்போது, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தை சமாளிக்க போலீசார் லேசான தடியடி நடத்தினர். கைது செய்யப்பட்டவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

5-கூலித் தொழிலாளியின் மகன் : மாநில அளவில் மூன்றாமிடம்

சங்கராபுரம்: கரும்பு வெட்டும் கூலி தொழிலாளியின் மகன், பிளஸ் 2 தொழிற்பாடத்தில், மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த, அரியலூரைச் சேர்ந்தவர் சீராளன்; விவசாய கூலி தொழிலாளி. இவரது மகன் சந்தோஷ்குமார்; சங்கராபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 தேர்வில் ரேடியோ மற்றும் "டிவி' தொழிற் பாடப் பிரிவில், 200க்கு 187 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் மூன்றாமிடம் பெற்றுள்ளார்.

6-ரஷ்ய அதிபருக்கு மன்மோகன் அழைப்பு

புதுடில்லி: ரஷ்யாவின் புதிய அதிபராக பதவியேற்றுள்ள டிமிட்ரி மெட்வதேவிற்கு மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.அவருக்கு தொலைபேசியில் தனது வாழ்த்துக்களை தெரிவித்த பிரதமர், அவரை இந்தியாவிற்கு வரும்படி கேட்டு கொண்டார். பிரதமரின் அழைப்பை ரஷ்ய அதிபர் ஏற்றுக் கொண்டதாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தியா - ரஷ்ய நாடுகளுக்கிடையே தற்போதுள்ள நல்லுறவுகள் குறித்து திருப்தி தெரிவித்த இரண்டு தலைவர்களும், எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.அது போலவே புதிய பிரதமராக பதவியேற்கும் முன்னாள் அதிபர் புடினுக்கும் தனியாக வாழ்த்து அனுப்பியுள்ளார் மன்மோகன் சிங்.

7-ஐ.பி.எல்., அபராதம் தொடர்கிறது

புதுடில்லி: குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காத கங்குலி, டிராவிட் அணிகளுக்கு தலா ரூபாய் 20,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியன் பிரீமீயர் லீக் நடத்தும் சூடுவென்டி-20' கிரிக்கெட் போட்டிகளில் நடத்தை தவறும் வீரர்கள், அணிகள் மற்றும் நடுவர்களுக்கும் அவ்வப்போது அதிரடியாக அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த வரிசையில் நேற்று முன்தினம் மோதிய கோல்கட்டா, பெங்களூரு அணிகளுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணிகள் மோதிய போட்டி மழை காரணமாக தாமதமாக துவங்கியது. 16 ஓவர்களைக் கொண்டதாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் கோல்கட்டா அணி வெற்றி பெற்றது. இதனிடையே இரு அணிகளின் கேப்டன்கள் குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசாத காரணத்தால் தலா 20,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக மேட்ச் ரெப்ரி பரூக் இன்ஜினியர் அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட நேரத்திற்குள் டிராவிட் அணி இரண்டு ஓவர்களும், கங்குலி அணி ஒரு ஓவரும் தாமதமாக பந்து வீசினர். ஐ.பி.எல்., ஆட்ட விதிகளின் படி இது குற்றம். எனவே இரு அணியினருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

8-அகதிகள் ராமேஸ்வரம் வருகை
ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து 16 குடும்பங்களைச் சேர்ந்த 65 அகதிகள் ராமேஸ்வரம் வந்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்களை மண்டபம் முகாமுக்கு போலீசார் அனுப்பி வைததனர்.

9-ஹர்பஜன், ஸ்ரீசாந்த் விவகாரம் விசாரணை முடிந்தது

ஆமதாபாத்: ஹர்பஜன், ஸ்ரீசாந்த் விவகாரத்தில் இன்று இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணை முடிவுக்கு வந்துள்ளது என பி.சி.சி.ஐ., செயலாளர் நிரஞ்சன் ஷா அறிவித்துள்ளார்.

மொகாலியில் நடந்த ஐ.பி.எல்., தொடரில் யுவராஜின் பஞ்சாப் அணி, மும்பை அணியை வீழ்த்தியது. இப்போட்டி முடிந்ததும் பஞ்சாப் அணியின் ஸ்ரீசாந்த் கைகுலுக்க வர, ஆத்திரமடைந்த ஹர்பஜன் அவரது கன்னத்தில் ஓங்கி ஒரு அறை கொடுத்தார். இது தொடர்பாக ஹர்பஜனுக்கு 11 ஐ.பி.எல்., போட்டிகளில் பங்கேற்க தடை வதிக்கப்பட்டது.

அடுத்து இந்திய கிரிக்கெட் போர்டும்(பி.சி.சி.ஐ.,), இதில் நடவடிக்கை எடுக்க உள்ளது. இப்பிரச்னை பற்றி விசாரணை நடத்த வக்கீல் சுதிர் நானாவதியை கமிஷனராக நியமித்தது. இவர் முன்பாக ஹர்பஜன், ஸ்ரீசாந்த்ஸ்ரீசாந்த் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஹர்பஜனிடம் ஒன்றரை மணி நேரமும், ஸ்ரீசாந்திடம் அரை மணி நேரமும் நடந்த விசாரணை முடிவுக்கு வந்தது. இருவரது வாக்குமூலங்களும் நான்கு கேமரா மூலம் பதிவு செய்யப்பட்டது. இந்த அறிக்கை வரும் 12ம் தேதி பி.சி.சி.ஐ., தலைவர் சரத் பவாரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், பி.சி.சி.ஐ., ஒழுங்கு நடவடிக்கை கமிட்டி இறுதி முடிவு எடுக்கும் எனவும் நிரஞ்சன் ஷா செய்தியாளர்களிடம் தெரிவித்தார். விசாரணை முடிந்து வெளியில் வந்த இருவரும் செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

10-பிரேமானந்தாவுக்கு மாரடைப்பு

கடலூர்: பாலியல் குற்றச்சாட்டு காரணமாக கைது செய்யப்பட்ட பிரேமானந்தா கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பல ஆண்டுகளாக சிறையில் உள்ள பிரேமானந்தாவுக்கு இன்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக அரசு மருத்து*வமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

mgandhi
11-05-2008, 05:23 PM
115-2008


1-ஐ.பி.எல். கிரிக்கெட் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 65/2 டில்லி டேர்டெவில்ஸ் 156/7

ஜெய்ப்பூர் : ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் வார்ன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், சோவாக் தலைமையிலான டில்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பீல்டிங் செய்யதை தொடர்ந்து களமிறங்கிய டில்லி டேர்டெவில்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன் எடுத்தது. தற்போது பேட்டிங் செய்யும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 65 ரன் எடுத்துள்ளது.

2-சீன ஆக்கிரமிப்பை கண்டித்து கோவையில் திபெத்தியர் ஊர்வலம்

கோவை: "ஆக்கிரமிப்பு திபெத்திலிருந்து சீனா வெளியேற வேண்டும்' என்ற, கோரிக்கையை வலியுறுத்தி, மைசூர் திபெத் அகதிகள் சங்கம் சார்பில், கோவையில் கண்டன ஊர்வலம் நடந்தது.சீனா திபெத்தை ஆக்கிரமித்துள்ளதைக் கண்டித்தும், சீன அரசால் திபெத்தியர்கள் துன்புறுத்தப்படுவதைக் கண்டித்தும், கோவையில் கண்டன ஊர்வலம் நடந்தது. கோவை பெண்கள் பாலிடெக்னிக் கல்லூரி அருகில் ஊர்வலம் தொடங்கியது.மைசூர் திபெத் அகதிகள் சங்கத் தலைவர் வான்தோ தலைமை வகித்தார். ஊர்வலம், ஆர்.டி.ஓ., அலுவலகம், அண்ணா சிலை, ஓசூர் ரோடு வழியாக செஞ்சிலுவை சங்கத்தை அடைந்தது. "திபெத் பகுதியிலிருந்து சீனா வெளியேற வேண்டும். அவர்களது உரிமையை மீட்க வேண்டும்' என்ற கோரிக்கைகள் வைக்கப்பட்டன. கண்டன ஊர்வலத்தில், ஊட்டி, கொடைக்கானல் பகுதியில் இருந்து வந்த திபெத்தியர்கள் பங்கேற்றனர்.


3-சென்னை வேலை வாங்கி தருவதாக மோசடி 3 பேர் கைது

சென்னை: சென்னை அண்ணாநகரில் தனியார் நிறுவனம் நடத்தி வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சார்லஸ், ஸ்ரீகணேஷ், கிரன் அகர்வால் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் மோசடி கம்ப்யூட்டர் நிறுவனத்தில் இரண்டாயிரத்து 500 பேர் வரை ஏமாந்திருக்கலாம் என, போலீசார் கணக்கிட்டுள்ளனர். இதில், 70 சதவீதத்தினர் மதுரை, தூத்துக்குடி, சிவகாசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள். ரூ. 50 கோடிக்கும் மேல் மோசடி நடந்துள்ளதால், அவ்வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கமிஷனர் நாஞ்சில் குமரன் உத்தரவிட்டார்.


4-கேரளாவில் சாமியார் ஆசிரமத்தில் போலீஸ் ரெய்டு

எர்ணாகுளம்: கேரளாவில் சாமியார் ஆசிரமத்தில் கேரள போலீஸ் ரெய்டு நடத்தினர். எர்ணாகுளம் பகுதியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் அம்ருதா சாப்யா சந்தோஷ். இவரது ஆசிரமத்தில் பலரை சேர்த்து பணமோசடி செய்தாக புகார் எழுந்தது. இதனை தொடர்ந்து கேரள போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் அங்கு நூற்றுக்கணக்கான ஆபாச சி.டி., க்கள் மற்றும் புலித்தோல் கைப்பற்றப்பட்டன. தொடர்ந்துத் அவரை தேடும் பணியை போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.


5-மத்திய அரசுக்கு ஆதரவு நீடிக்கலாமா ஆலோசிக்க இ.கம்யூ.,முடிவு

புதுடில்லி: தொடர்ந்து ஏறிவரும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசுக்கு ஆதரவு நீடிக்கலாமா என ஆலோசிக்க இ.கம்யூ.,முடிவு செய்துள்ளது. டில்லயில் நடந்த இந்திய கம்யூ., கட்சியின் தேசிய குழு கூட்டத்தில் பங்கேற்ற டி.ராஜா நிருபர்களிடம் கூறுகையில் விலைவாசி உயர்வை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலமுறை வலியுறுத்தியும் இது வரை மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இடது சாரி கட்சிகளின் கருத்தை பொருட்படுத்துவதாக தெரியவில்லை. இடதுசாரிகளின் ஆதரவு நிலையானது என காங்கிரஸ் அரசு கருதி விடக்கூடாது என எச்சரிப்பதற்காக ஆலோசனை கூட்டம் வரும் 23 ம் தேதி நடக்கவுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.




6-ஐ.பி.எல். கிரிக்கெட் : கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி

ஐதராபாத் : ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் ஐதராபாத்தில் நடைபெற்ற போட்டியில் கங்குலி தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியும், லட்சுமண் தலைமையிலான டெக்கான் சார்ஜர்ஸ் அணியும் மோதியதில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 23 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன் எடுத்தது. அதனை தொடர்ந்து களமிறங்கிய டெக்கான் சார்ஜர்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 181 ரன் எடுத்து தோல்வி அடைந்தது. டின்டா அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

7-விலைவாசி உயர்வை குறைக்காவிட்டால் போராட்டம் :ஜெ., அறிவிப்பு

சென்னை: விலைவாசி உயர்வை குறைக்காவிட்டால் விரைவில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என அ.தி.முக., பொதுசெயலர் ஜெயலலிதா எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அத்தியாவசிய பொருட்களான அரிசி , பருப்பு, எண்ணெய் மட்டுமகின்றி கட்டுமான பொருட்கள் விலையும் இது வரை இல்லாத அளவிற்கு உயர்ந்துள்ளது. இது குறித்து கவலை கொள்ளத்தேவையில்லை என நிதியமைச்சர் சிதம்பரம் கூறியுள்ளார். பிரதமர் மன்மோகன்சிங் மவுனம் சாதித்து வருகிறார். ஆன்லைன் வர்த்தகமும், பொருட்கள் பதுக்கலும் இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமைந்துள்ளது. இது குறித்து மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போர்க்கால் அடிப்படையில் மத்திய அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இதனை வலியுறுத்தி நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என கூறியுள்ளார்.




8-தமிழக வளர்ச்சிப் பணிகளுக்கு தாராள நிதி ஒதுக்கீடு: மத்தியஅமைச்சர் வாசன்

ராமநாதபுரம் : தமிழக வளர்ச்சிப் பணிகளுக்காக மத்திய அரசு பலவித நலத்திட்டப் பணிகளை அறிவித்துள்ளதாக, ராமநாதபுரத்தில் காங்கிரஸ் கட்சியின் ஊழியர் சங்கக் கூட்டத்தில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில் ; விவசாய கடன் 60 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டதுடன், கிராமப்புற வளர்ச்சிக்காக, ரூ.17 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அனைவருக்கும் கல்வி திட்டத்திற்காக ரூ.34 ஆயிரத்து 400 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகமாகும். மேலும், மதிய உணவுத்திட்டத்திற்காக 8000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் சுமார் 13.9 சதவீத மாணவர்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார். பெண்கள் இடஒதுக்கீட்டு சட்டத்தை மத்திய அரசு நிராகரித்தால், மக்கள் தேர்தலை புறக்கணிக்கும் நிலை உருவாகி இருப்பதாகவும் , தமிழக திட்டங்களுக்கான எட்டுத் துறைகளுக்கு, சுமார் 43 ஆயிரத்து 107 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். பெரிய திட்டங்களுக்கு 25 ஆயிரத்து 737 கோடியும், நடுத்தர திட்டங்களுக்கு 6 ஆயிரத்து 303 கோடியும், சிறிய திட்டங்களுக்கு ஆயிரத்து 67 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


9-ராமேஸ்வரம் வந்த அகதிகள் 3 பேர் கைது

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ஓலைக்குடா, சங்குமாதன் பகுதிக்கு, விசைப்படகு மூலம் வந்திறங்கிய இலங்கை அகதிகள் மூன்று பேர் தமிழக எல்லைப்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கை அகதிகள் ஒன்பது பேர், விசைப்படகு மூலம் இன்று ராமேஸ்வரம் வந்துள்ளனர். இவர்களை இறக்கி விட்டு திரும்பிய படகு வழியில் பழுதானதால், அப்படகில் வந்த இலங்கை படகுக்காரர்கள் நடுக்கடலில் தவித்துள்ளனர். இவர்களிடம் விசாரித்த போலீசார், மூன்று பேரை கைது செய்துள்ளனர். இவர்களில் ஆறு அகதிகள் தீவிர விசாரணைக்கு பிறகு, ராமேஸ்வரம் அகதிகள் முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். கைது செய்யப்பட்ட பரமேஸ்வரன் (32), பிரசன்னா (22) மற்றும் மயூரன்(21) ஆகிய மூவரும் ராமேஸ்வரம் போலீசாரின் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


10-அஸ்லான் ஷா ஹாக்கி: இந்தியாவுக்கு முதல் வெற்றி

இபோ: அஸ்லான் ஷா ஹாக்கி தொடரின் மூன்றாவது போட்டியில் இந்தியாவின் திவாகர் ராம் இரண்டு கோல் அடிக்க, கனடாவை 3க்கு-1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

மலேசியாவின் இபோ நகரில் அஸ்லான் ஷா ஹாக்கி தொடர் நடக்கிறது. இந்திய அணி முதலிரண்டு போட்டியில் நியூசிலாந்து, அர்ஜென்டினாவிடம் தோல்வியடைந்தது. நேற்று நடந்த மூன்றாவது போட்டியில் கனடாவை எதிர்கொண்டது.

ஆட்டம் துவங்கிய ஒன்பதாவது நிமிடத்தில் கனடாவின் வாய்னே பெர்னான்டேஸ் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை கோலாக மாற்றினார். இதனால் கனடா 1 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. கிடைத்த மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்பை நழுவவிட்ட இந்திய அணிக்கு 45வது நிமிடத்தில் மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. இதனை சரியாக பயன்படுத்திய திவாகர் ராம் முதல் கோலடித்து 1க்கு-1 என சமநிலைப்படுத்தினார். மீண்டும் இரண்டு பெனால்டி கார்னர் வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணிக்கு 51வது நிமிடத்தில் கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய திவாகர் ராம் மீண்டும் கோலடிக்க இந்தியா 2-க்கு1 என முன்னிலை வகித்தது. அடுத்த இரண்டாவது நிமிடத்தில் கேப்டன் சர்தாரா சிங், எஸ்.வி. சுனில் உதவியுடன் சிவேந்திர சிங் மூன்றாவது கோலடித்தார். இதனால் இந்தியா, கனடாவை 3-க்கு1 என்ற கணக்கில் வீழ்த்தி, தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது.

அடுத்த போட்டியில் இந்திய அணி, பெல்ஜியத்தை சந்திக்கிறது.

11-கவனத்தை மாற்றுங்கள்: பாண்டிங்

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் தங்களின் கவனத்தை ஐ.பி.எல்., போட்டிகளை விட்டு வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கிரிக்கெட் பக்கம் திருப்பவேண்டும் என்று ரிக்கி பாண்டிங் கேட்டுக்கொண்டுள்ளார். ஐ.பி.எல்., போட்டிகளில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணி சார்பில் விளையாடிய பாண்டிங் தேசிய அணிக்காக விளையாட சென்று விட்டார். நேற்று ஆஸ்திரேலியாவில் நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர், இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் நடத்தப்படும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக தெரிவித்தார். கடந்த சில ஆண்டுகளாக சரியாக விளையாடவில்லை என்பதை ஒப்புக் கொண்ட பாண்டிங், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நன்றாக ஆட முயற்சி செய்வேன் என அறிவித்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய ரசிகர்கள் தங்கள் கவனத்தை ஐ.பி.எல்., கிரிக்கெட்டில் இருந்து தேசிய அணியின் பக்கம் திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். வரவிருக்கும் தொடருக்கு ஆதரவு அளிக்கவேண்டும் என்று பாண்டிங் கேட்டுக் கொண்டுள்ளார்.

12-பெங்களூருவில் இரு வாக்குச்சாவடிகளில் நாளை மறு தேர்தல்

பெங்களூரு : கர்நாடக மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்கு பதிவு நேற்று முடிவடைந்தது. இந்நிலையில் அங்கு இரு தொகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடக்கும் என கர்நாடக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மல்லேஸ்வரம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியிலும், ராம்நகர் தொகுதியில் ஒரு வாக்குசாவடியிலும், மின்னனு வாக்கு பதிவு இயந்திரம் கோளாறு காரணமாக மறு தேர்தல் நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மறு தேர்தல் நாளை காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


13-தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் ஒத்தி வைப்பு

சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் இன்று நடக்கவிருந்தது. திரைப்பட சங்கத்துக்கான தலைவர், செயலாளர், பொருளாளர் தவிர மற்ற அலுவலக பணிகளுக்கான தேர்தலில் துணை இயக்குநர்கள் போட்டியிட முடிவு செய்திருந்தனர். இந்நிலையில் 2 தரப்பினருக்கும் இடையே நடந்த முக்கிய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் தமிழ் திரைப்பட இயக்குநர்கள் சங்க தேர்தல் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

mgandhi
12-05-2008, 06:32 PM
13-5-2008

1-ஐ.பி.எல். கிரிக்கெட் : கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி

சண்டிகர் : ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் சண்டிகரில் நடைபெற்ற போட்டியில் டிராவிட் தலைமையிலான பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியும், யுவராஜ்சிங் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதியதில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று களமிறங்கிய பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 143 ரன் எடுத்தது. ஸ்ரீசாந்த் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அடுத்து பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 15.4 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது.

2-மூன்றே நாளில் 23 லட்சம் 'ஹிட்'கல்விமலர் வெப்சைட் அமோக வரவேற்பு


சென்னை: கடந்த மூன்று நாட்களில், வாசகர்களின் அமோக வரவேற்பால் கல்விமலர் வெப்சைட்டுக்கு 23 லட்சம் `ஹிட்' கிடைத்துள்ளது. கல்விக்கான வெப்சைட்கள் எதுவும் இந்த உயரத்தை இதுவரை எட்டியதில்லை.
வெப்சைட் பார்வையிடுவது தொடர்பாக புள்ளிவிபரங்களை அளிக்கும் அமெரிக்க நிறுவனமான வெப் அலைசர் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, கடந்த வெள்ளிக்கிழமை துவக்கப்பட்ட கல்விமலர் வெப்சைட் கல்வி தொடர்பான பல்வேறு தகவல்களை தமிழில் வழங்கிவருகிறது. படிப்பு மற்றும் கல்லூரிகளை தேர்வு செய்வதில் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு உள்ள சிரமங்களை குறைத்து உதவிவருகிறது. மாணவர்கள் படிப்பை தேர்வு செய்வதற்கான நிபுணர்களின் ஆலோசனைகளும் இத்தளத்தில் இடம்பெற்றுள்ளன.
பிளஸ் 2 மாணவர்களுக்கு தேர்வு முடிவு, `கட்-ஆப்' மதிப்பெண் மற்றும் உத்தேச ரேங்கிங் ஆகியவற்றை உடனுக்குடன் வழங்கி அனைத்து தரப்பினரையும் இந்த வெப்சைட் தற்போது கவர்ந்து வருகிறது. இந்த தகவல்கள் மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து இன்ஜினியரிங் கல்லூரிகளில் வழங்கப்படும் படிப்புகள், மருத்துவம் மற்றும் தொழில்படிப்புகள் பற்றி மாணவர்கள் அறிந்து கொள்ளும் படி உள்ளது. பிளஸ் 2 முடித்து வாழ்க்கையில் முக்கிய தருணத்தில் உள்ள லட்சக்கணக்கான மாணவர்களுக்கு இந்த வெப்சைட் வரப்பிரசாதமாக உள்ளதால், நாளுக்கு நாள் `ஹிட்' எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

3-திண்டிவனம் அருகே தீ விபத்து: 7,000 கோழி குஞ்சுகள் பலி

திண்டிவனம்: கோழிப் பண்ணையில் ஏற்பட்ட தீ விபத்தில், கோழிக்குஞ்சுகள் மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகின.திண்டிவனம் அடுத்த கோவடி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி காந்தி. இவர் தென்நெற்குணம் கிராமத்தில் கோழிப்பண்ணை வைத்துள்ளார். நேற்று அதிகாலை 2 மணிக்கு இங்கு திடீரென்று தீப்பிடித்தது. தீயணைப்பு வீரர்கள், தீ பரவாமல் அணைத்தனர். பண்ணையிலிருந்த ஏழாயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி இறந்தன.பிரம்மதேசம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

4-தமிழக அரசை கண்டித்து சட்டசபை முற்றுகை? : தவ்ஹீத் ஜமாத் மாநாட்டில் தீர்மானம்


தஞ்சாவூர்: "இட ஒதுக்கீடு விஷயத்தில் முறையாக கடைபிடிக்காததைக் கண்டித்து குளிர்கால கூட்டத் தொடரின் போது, தமிழக சட்டபை முற்றுகை போராட்டம் நடத்துவது' என்று தவ்ஹீத் ஜமாத் எழுச்சி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தஞ்சாவூர் அடுத்த வல்லத்தில் தவ்ஹீத் ஜமாத் எழுச்சி மாநாடு இரண்டு நாள் நடந்தது. மாநாட்டின் நிறைவு நாளில் மாநில தலைவர் ஜெயினுல்ஆபூதீன் தலைமை வகித்து பேசினார். மாநில செயலாளர்கள் பாக்கர், கோவை ஜாபர், முகமது முனீர் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.இஸ்லாம் பெண்களுக்கு வழங்கிய சொத்துரிமை, மணவாழ்வைத் தேர்வு செய்யும் உரிமை, விவகாரத்து உரிமை, பள்ளிவாசலில் வழிபாடு நடத்தும் உரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளையும் முறையாக வழங்க வேண்டும். பெண்ணின் மணவாழ்க்கையை பாதிக்கும் வரதட்சணைக்கு எதிராக கடுமையான நிலைபாட்டை எடுக்க வேண்டும்.இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வந்த பின் முப்பதாயிரம் பேருக்கு மேல் வேலைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். 3.5 சதவீதம் என்ற அடிப்படையில் ஆயிரம் பேருக்கு மேல் முஸ்லிம்களுக்கு வேலை கிடைத்திருக்க வேண்டும். ஆனால், முன்னூறு முஸ்லிம்களுக்குத்தான் வேலை கிடைத்துள்ளது. இந்த அநீதியை கண்டித்து வரும் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் ஒரு லட்சம் முஸ்லீம்களை திரட்டி சட்டசபை முற்றுகை போராட்டம் நடத்துவது.உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


5-சீனாவில் பயங்கர பூகம்பம் 5 ஆயிரம் பேர் பலி ? : இடிபாடுகளில் பலர் புதைந்தனர்

பெய்ஜீங்: சீனாவில் ஏற்பட்ட பயங்கர பூகம்பத்திற்கு 5 ஆயிரம் பேர் வரை பலியாகியிருக்கலாம் என அங்குள்ள அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இடிபாடுகளில் பலர் புதைந்தனர். சீனாவில் அதிகாலையில் திடீரென பூகம்பம் அந்நாட்டை நிலைகுலையச்செய்துள்ளது. சிக்வான்ஸ், பெய்ச்சுவான், செய்ச்சுவோ, சாக்கிங் பகுதிகளில் கடும் தாக்குதலை இயற்கை சீற்றம் நிகழ்த்தியுள்ளது. தென்மேற்கு சீனாவில் ஒரு பள்ளியில் 900 மாணவர்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போய்விட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நில நடுக்கம் ஏற்பட்டதும் பெரிய, பெரிய கட்டிடங்கள் தரைமட்டமாகின. வீடுகளில் இருந்தவர்கள் அலறியபடி ரோடுகளுக்கு ஓடி வந்தனர். ரிக்டர் அளவில் 7. 6 ஆக நில நடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த அளவு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். இது வரை 3 ஆயிரம் பேர் வரை இறந்திருப்பதாக அங்குள்ள லோக்கல் அரசு நிர்வாகம் அறிவித்துள்ளது. பலர் கட்டட இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போரடிக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் அவசர உதவி பிரிவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.


6-கேரளாவில் ஒரு வாரம் முன்னதாகவே பருவமழை

புதுடில்லி: "தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே துவங்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான விவசாயிகள், தங்களின் உயிர்நாடியாக கருதும் தென்மேற்கு பருவமழை, தெற்கு அந்தமான் கடல் மற்றும் வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில், வழக்கத்திற்கு மாறாக ஐந்து நாட்களுக்கு முன்னதாகவே துவங்கியுள்ளது. இதனால், அந்தமான் நிகோபார் தீவுகளில், கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே மிதமானது முதல் பலமான மழை பெய்து வருகிறது. அத்துடன் பலத்த காற்றும் வீசுகிறது.

இந்த சாதகமான சூழ்நிலை தொடர்ந்தால், அடுத்த இரண்டு நாட்களுக்கு அந்தமான் கடல் பகுதிகளிலும், வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பகுதியிலும் பருவமழை தீவிரம் அடையலாம். அந்தமான் நிகோபார் தீவுகளிலும் அடுத்த மூன்று முதல் நான்கு நாட்களுக்கு மழை தொடரும் என்று வானிலை ஆய்வுமையம் அறிவித்துள்ளது. அத்துடன், கேரளாவின் தெற்கு கடற்கரையோர பகுதிகளிலும் ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பருவமழை துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் வழக்கமாக ஜூன் முதல் தேதி தென்மேற்கு பருவமழை துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

7-டிராவிட் ஏமாற்றிவிட்டார்: விஜய் மல்லையா


புது டில்லி : ஐ.பி.எல் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை தேர்வு செய்த விவகாரத்தில் கேப்டன் டிராவிட், உயர் அதிகாரி சாரூ சர்மா இருவரும் தன்னை ஏமாற்றி விட்டதாக அணி உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் அணிகளின் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது. இது வரை எட்டு போட்டிகளில் பங்கேற்ற பெங்களூரு அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, நான்கு புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது.
இது குறித்து விஜய் மல்லையா கூறியது: பெங்களூரு அணிக்கான வீரர்களை ஏலத்தில் எடுக்க, பட்டியலை தயார் நிலையில் வைத்திருந்தேன். முதல் சுற்று ஏலத்தில் என்னுடைய ஆலோசனையை, டிராவிட் மற்றும் சாரு சர்மா நிராகரித்தனர். டிராவிட் நட்சத்திர வீரர் என்பதால் அவருடைய கணிப்பு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். இரண்டாவது சுற்று ஏலத்தில் டிராவிட் பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் வீரர் மிஸ்பா-உல்-ஹக்கை தேர்வு செய்வதில் உறுதியாக இருந்தேன். இதனால் மிஸ்பா ஏலத்தில் எடுக்கப்பட்டார். அணியின் தொடர்ச்சியான தோல்விக்கு காரணம் கேட்டபோது, வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாட தவறிவிட்டனர், பயிற்சி வசதிகள் சிறப்பாக இல்லை என்று கூறப்பட்டது. சாரு சர்மா சிறப்பாக செயல்படவில்லை. இந்த சூழ்நிலையில் சாரு சர்மாவுக்கு பதிலாக, கர்நாடகா கிரிக்கெட் கழகத்தின் கவுரவ செயலாளர், பிரிஜேஸ் படேலை, அணியின் உயர் அதிகாரியாக நியமித்துள்ளேன். புள்ளிகள் பட்டியலில், அணி கடைசி இடத்தில் இருப்பதை நான் விரும்பவில்லை. டிராவிட்டும் விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன். அணியின் அரை இறுதி வாய்ப்பு பறிபோன சூழ்நிலையில், எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெங்களூரு அணியின் கேப்டன் டிராவிட் இந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு மல்லையா கூறினார்.

8பெண்கள் கிரிக்கெட் அணிக்கு பரிசுத்தொகை :பி.சி.சி. ஐ அறிவிப்பு

புதுடில்லி: ஆசிய கோப்பையை வென்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் 15 வீராங்கனைகளுக்கு , தலா ரூபாய் 5 லட்சம் பரிசுத்தொகை அளிப்பதாக, இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவர் சரத்பவார் அறிவித்துள்ளார். இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை இடையே நடைபெற்ற ஆசிய கோப்பை இறுதி போட்டியில், இந்திய பெண்கள் அணி, இலங்கை அணியை வீழ்த்தியது. இந்திய அணி தொடர்ந்து நான்காவது முறை ஆசிய கோப்பையை கைப்பற்றியுள்ளது. இது குறித்து பேசிய சரத்பவார் , ஆசிய கோப்பை வென்ற இந்திய பெண்கள் அணியை பாராட்டுவுதாக கூறினார். இந்திய அணி, ஆசிய கோப்பை லீக் போட்டிகள் ஒன்றில் கூட தோல்வி பெறவில்லை. தொடர்ந்து ஆறு லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. இறுதி போட்டியில் சிறப்பாக விளையாடி, இலங்கை அணியை 175 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சாதனை படைத்துள்ளது என்று புகழ்ந்து பேசினார்.

9-ஜாதி, மத கலவரங்களை தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும்


சென்னை : ஜாதி, மத கலவரங்களை தூண்டுவோர் மீது குண்டர் சட்டம் பாயும் சட்டதிருத்தம் செய்யப்படும் என முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இன்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் இந்த ஆண்டில் 2000 காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார். மேலும் காவலர்களை நியமிக்கும் அதிகாரத்தை டி.ஜி.பிக்கு அளிப்பதாக கூறினார். திருச்சியில் காவலர் பயிற்சி மையம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்த அவர், சென்னை மாநகரில் பெருகி வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு, புறநகருக்கு என தனி காவல்துறை ஆணையம் அமைக்கப்படும் என்றும் முதல்வர் தெரிவித்துள்ளார்.


10-இஸ்லாமியர்கள் மத தலைவர் ஆகாகான் இந்தியா வருகை


புதுடில்லி : இஸ்லாமியர்கள் மத தலைவர் ஆகாகான் இந்தியா வந்துள்ளார். அவரது 50வது பிறந்தநாள் விழாவை கொண்டாடும் பொருட்டு அவர் இந்தியா வந்துள்ளார். இரண்டு நாட்கள் டில்லியில் தங்கும் ஆகாகான், ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், துணை ஜனாதிபதி ஹமித்அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், ஆகியோரை சந்தித்து பேசவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வருகிற புதன் கிழமை ஆகாகான் ஐதராபாத் செல்கிறார். ஐதராபாத்தில், ஆகாகான் 2 வருட*ங்களுக்கு முன் ஆகாகான் அகடெமி நிறுவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

அறிஞர்
12-05-2008, 10:36 PM
7-டிராவிட் ஏமாற்றிவிட்டார்: விஜய் மல்லையா


புது டில்லி : ஐ.பி.எல் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணியை தேர்வு செய்த விவகாரத்தில் கேப்டன் டிராவிட், உயர் அதிகாரி சாரூ சர்மா இருவரும் தன்னை ஏமாற்றி விட்டதாக அணி உரிமையாளர் விஜய் மல்லையா தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் அணிகளின் புள்ளிகள் பட்டியலில் பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ் அணி கடைசி இடத்தில் உள்ளது. இது வரை எட்டு போட்டிகளில் பங்கேற்ற பெங்களூரு அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று, நான்கு புள்ளிகளை மட்டும் பெற்றுள்ளது.
இது குறித்து விஜய் மல்லையா கூறியது: பெங்களூரு அணிக்கான வீரர்களை ஏலத்தில் எடுக்க, பட்டியலை தயார் நிலையில் வைத்திருந்தேன். முதல் சுற்று ஏலத்தில் என்னுடைய ஆலோசனையை, டிராவிட் மற்றும் சாரு சர்மா நிராகரித்தனர். டிராவிட் நட்சத்திர வீரர் என்பதால் அவருடைய கணிப்பு சரியாக இருக்கும் என்று நினைத்தேன். இரண்டாவது சுற்று ஏலத்தில் டிராவிட் பங்கேற்கவில்லை. பாகிஸ்தான் வீரர் மிஸ்பா-உல்-ஹக்கை தேர்வு செய்வதில் உறுதியாக இருந்தேன். இதனால் மிஸ்பா ஏலத்தில் எடுக்கப்பட்டார். அணியின் தொடர்ச்சியான தோல்விக்கு காரணம் கேட்டபோது, வீரர்கள் ஒருங்கிணைந்து விளையாட தவறிவிட்டனர், பயிற்சி வசதிகள் சிறப்பாக இல்லை என்று கூறப்பட்டது. சாரு சர்மா சிறப்பாக செயல்படவில்லை. இந்த சூழ்நிலையில் சாரு சர்மாவுக்கு பதிலாக, கர்நாடகா கிரிக்கெட் கழகத்தின் கவுரவ செயலாளர், பிரிஜேஸ் படேலை, அணியின் உயர் அதிகாரியாக நியமித்துள்ளேன். புள்ளிகள் பட்டியலில், அணி கடைசி இடத்தில் இருப்பதை நான் விரும்பவில்லை. டிராவிட்டும் விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன். அணியின் அரை இறுதி வாய்ப்பு பறிபோன சூழ்நிலையில், எஞ்சிய ஐ.பி.எல் போட்டிகளில் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். பெங்களூரு அணியின் கேப்டன் டிராவிட் இந்த நம்பிக்கையை காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு மல்லையா கூறினார்.

சிறந்த சிரிப்பு...

பலமுனை வியாபாரம் தெரிந்தவர்... இப்படி பேசுவது சிரிப்பாக உள்ளது.

இராஜேஷ்
13-05-2008, 06:26 AM
இதே பூகம்பத்தில் 900 பள்ளிக் குழந்தைகள் புதையுந்டதை படித்தேன் துக்கம் தாங்கமுடியவில்லை, இயற்கை அன்னை பீஞ்சுக் குழந்தைகளுக்கு கருனை காட்டக் கூடாதா,

mgandhi
13-05-2008, 05:50 PM
14-5-2008

1-žசீனாவில் நடந்த பயங்கர பூகம்பத்தில் 10,000 பேர் பலி

பெய்ஜிங், மே.- சீனாவில் நடந்த பயங்கர பூகம்பத்தில் 10,000 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 900 பள்ளி மாணவர்கள் புதைந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

2- அமைச்சரவையில் இருந்து விலக நவாஸ் ஷரீப் கட்சி முடிவு

இஸ்லாமாபாத் - கூட்டணி ஆட்சி நடைபெறும் பாகிஸ்தானில், அமைச்சரவையில் இருந்து விலக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி முடிவு செய்துள்ளது.

3- லெபனான் கலவரத்தில் 11 பேர் சாவு

பெய்ரூட் -லெபனானில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 11 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.

4- தலாய் லாமாவை தனது இல்லத்தில் பிரிட்டன் பிரதமர் சந்திக்க மாட்டார்

லண்டன். மே.-திபெத் தலைவர் தலாய் லாமாவை பிரிட்டன் பிரதமர் தனது இல்லத்தில் சந்திக்க மாட்டார் என்றும் அதற்கு பதிலாக ஆர்ச் பிசப் ஒருவரின் இல்லத்தில்தான் தலாய் லாமாவை பிரிட்டன் பிரதமர் சந்திப்பார் என்றும் கூறப்படுகிறது.

5- திருமலை கப்பல் தகர்ப்பு குழப்பத்தில் சிறிலங்காப் படைத்தரப்பு

கொழும்பு - திருகோணமலை துறைமுகத்தில் கடந்த சனிக்கிழமை அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விநியோகக் கப்பல் தகர்க்கப்பட்டது எதனால் என்று சிறிலங்காப் படைத்தரப்பு குழப்பத்தில் இருப்பதாக கொழும்பில் இருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது.

6- மியான்மர் நாட்டில் வயிற்றுப்போக்கு காலராவும் பரவும் அபாயம்

ரங்கூன் - நர்கீஸ் புயலால் பாதிக்கப்பட்ட மியான்மர் நாட்டில் வயிற்றுப்போக்கு நோய் பரவி வருகிறது

mgandhi
15-05-2008, 02:10 AM
15-5-2008



1- பொடா சட்டம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் கருத்து

புதுடில்லி : ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சிக்கி 85 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.சம்பவ இடத்தை பார்வையிட்ட லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும் , பா.ஜ.க., மூத்த தலைவருமான அத்வானி மாநிலத்தில் உடனே பொடா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். இதற்கு பதிலளித்துள்ள பிரதமர் மன்மோகன்சிங் , பொடா சட்டத்தின் மூலம் குண்டு வெடிப்பை தடுக்க 2- முடியாது என்று ம், பொடா சட்டம் அமலில் இருந்த போதும் குண்டுவெடிப்புகள் இருந்துள்ளதால் தற்போதைக்கு பொடா சட்டம் அமல் குறித்து எவ்வித ஆலோசனைகள் இல்லை என்று கூறினார். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த சம்பவ இடத்தை உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் இன்று பார்வையிடுகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் எவ்வித உதவி கேட்டாலும் அதை மத்திய அரசு செய்ய தயங்காது என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறியுள்ளார்.

2- தீவிரவாதத்தை வேரறுப்பதில் இந்தியாவிற்கு உதவியாக இருப்போம் : அமெரிக்கா

வாஷிங்டன் : ஜெய்ப்பூரில் நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் சிக்கி 85 பேர் பலியாயினர். 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த வெள்ளை மாளிகை உயர் அதிகாரி தீவிரவாதத்தை வேரறுப்பதில் இந்தியாவிற்கு அமெரிக்கா உறுதுணையாக இருக்கும் என்றும் , தன்னால் இயன்ற உதவிகளை அமெரிக்கா இந்தியாவிற்கு செய்யத் தயங்காது என்று அவர் கூறியுள்ளார். தீவிரவாதம் குறித்து அதிகாரி கருத்து தெரிவித்துள்ளதாவது : தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் அதை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும் என்றும் அதனை வளரவிட்டால் இறுதியில் நம்மையே அழித்துவிடும் என்று கூறியுள்ளார்.


3- ஜஸ்டின் ஹெனின் திடீர் ஓய்வு

புரூசல்ஸ்: சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜஸ்டின் ஹெனின் திடீரென அறிவித்துள்ளார். பெல்ஜியத்தை சேர்ந்த 25 வயது டென்னிஸ் வீராங்கனை ஹெனின். இந்த ஆண்டில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்தார். போதிய தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதாக வெளிப்படையாக கூறினார். இவர் ஓய்வு பெற முடிவு செய்துள்ளார். இது குறித்து ஹெனின் கூறுகையில்,'டென்னிஸ் அரங்கில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன். இனி சர்வதேச போட்டிகளில் பங்கேற்கமாட்டேன். ஒரு குழந்தையின் கனவு முடிவுக்கு வந்துள்ளது,' என்றார். ஏழு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஹெனின் திடீர் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது டென்னிஸ் ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை அளிக்கக் கூடும்.


4- ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஜீப் -லாரி விபத்து : 3 பேர் பலி


ஸ்ரீவில்லிபுத்தூர் : கேரள மாநிலம் இடுக்கியைச் சேர்ந்த திருமண கோஷ்டி ஒன்று ஜீப் மற்றும் குவாலிஸ் வாகனங்களில் திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தனர். வாகனங்கள் விருதுநகர் மாவட்டம் அழகாபுரி அருகே சென்று கொண்டிருந்த போது இவற்றின் மீது சரக்கு லாரி எதிர்பாராத விதமாக பின்னால் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாயினர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்தின் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.

5- பாகிஸ்தானில் தலிபான்கள் ஏவுகணைத் தாக்குதல் : 12 பேர் பலி

இஸ்லாமாபாத் : ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் பஜாவுரில் ராணுவ முகாம் மீது தலிபான் தீவிரவாதிகள் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர் இந்த தாக்குதலில் 2 வெளிநாட்டுபடைவீரர்கள் உட்பட 12 படை வீரர்கள் பலியாயினர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


6- கடலூரில் பலத்த காற்று : தெருவடைச்சான் சரிந்தது

கடலூர்: கடலூரில் வீசிய சூறாவளிக் காற்றில் பாடலீஸ்வரர் கோவில் ராஜகோபுரத்திலிருந்து ஒரு கலசமும், சுவாமி புறப்பாட்டிற்கு தயாராக இருந்த தெருவடைச்சானும் கீழே சரிந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசிப் பெருவிழாவை 10ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று 14ம் தேதி தெருவடைச்சான் நிகழ்ச்சிக்காக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ரதம் தயாராக இருந்தது. இந்நிலையில் நேற்று இரவு பலத்த சூறாவளிக் காற்று வீசியதில் அலங்கரிக்கப்பட்ட தெருவடைச்சான் சாரத்துடன் கீழே சரிந்தது. காற்று பலமாக வீச துவங்கியதும் மின்சாரம் நிறுத்தப்பட்டது. பக்தர்கள் அனைவரும் கலைந்து சென்றதால் காயமின்றி தப்பினர். பலத்த காற்றின் காரணமாக ராஜகோபுரத்திலிருந்த ஒரு கலசமும் கீழே விழுந்தது. இதனால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

7-இலங்கை பிரச்னையில் உலக நாடுகளின் ஆதரவு தேவை : ராஜபக்சே
லண்டன்: விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு, அரசு முயற்சித்து வருகிறது; ஆனால், பேச்சுவார்த்தையில் பங்கேற்பதில் புலிகள் அதிக ஆர்வம் காட்டவில்லை என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே குற்றம் சாட்டினார். ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக மாணவர் சங்க கூட்டம் நடந்தது. இதில், மகிந்தா ராஜபக்சே பேசியதாவது: இலங்கை இனப் பிரச்னைக்கு ராணுவத்தின் மூலம் தீர்வு காண முடியாது. விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த, அரசு பல முறை முயன்றுள்ளது. நான் அதிபர் ஆன பின், மூன்று முறை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம். ஆனால், விடுதலைப் புலிகள் ஏதாவது நொண்டி சாக்கு கூறி, இப்பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். இனப் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, அரசு இப்போதும் தயாராக உள்ளது. ஆயுதங்களை கீழே போட்டு விட்டு, இனப் பிரச்னைக்கு அரசியல் ரீதியாக தீர்வு காண்பதற்கு புலிகள் தயாராக உள்ளனர் என்றால், அந்த இயக்கத்துடன் பேச தயாராக இருக்கிறோம். புலிகள் பிரச்னைக்கு தீர்வு காண, உலக நாடுகளின் ஆதரவு தேவை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் தோல்வி ஏற்பட்டால், பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் உலக நாடுகளுக்கு தோல்வி கிடைத்ததாகக் கருதப் படும். விடுதலைப் புலிகள், உலகிலேயே மிக கொடிய இயக்கம். இந்த இயக்கத்தை தோற்கடிக்க, உலக நாடு களின் ஆதரவு தேவை.இவ்வாறு ராஜபக்சே பேசினார்.


8-ஈராக்கில் தற்கொலைப்படை தாக்குதல் : 22 பேர் பலி

பாக்தாத் : பாக்தாத்தின் வடக்குப்பகுதியில் உள்ள சன்னி முஸ்லீம் இனத்தவரின் பள்ளி அருகே தற்கொலைப்படை தீவிரவாதி ஒருவன் வெடிகுண்டை வெடிக்கச் செய்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 22 பேர் பலியாயினர் . 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். பள்ளி அருகில் இந்த தாக்குதல் நிகழ்ந்துள்ளதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயரும் என்று அஞ்சப்படுகிறது.


9- நெல்லை அருகே காட்டன் மில்லில் பயங்கர தீ விபத்து

திருநெல்வேலி: நெல்லை அருகே தனியார் மில்லில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. நெல்லையை அடுத்துள்ள தச்சநல்லூரில் சுப்புராஜ் காட்டன் மில் உள்ளது. பஞ்சு பேல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த குடோவுனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர். காட்டன் மில் குடோவுன் மானேஜர் ராகவன் கூறுகையில், குடோவுனில் ஒவ்வொன்றும் 165 கிலோ எடையுள்ள பஞ்சு பேல்கள், லேசான இரும்பு பட்டைகளால் சுற்றி வைக்கப்பட்டிருக்கும். வெயில் காலம் என்பதால், இரும்பு பட்டைகளின் நெருக்கத்தால் தீப்பற்றியிருக்கலாம் என தெரிகிறது. மற்றபடி அந்த அறையில் மின்சாரமோ தீப்பற்றும் பொருட்களோ கிடையாது. எட்டாயிரம் பேல்கள் தீயில் எரிந்துள்ளன. இவற்றின் மதிப்பு எட்டு கோடி ரூபாய். கட்டடமும் சேதமடைந்தது என்றார். தச்சநல்லூர் போலீசார் விசாரித்தனர்.


10- போலீஸ் மீது குண்டு வீசிய 2 பேர் கைது: வெடிகுண்டு, அரிவாள், கார் பறிமுதல்
திருநெல்வேலி: போலீஸ் மீது வெடிகுண்டு வீசிய ஊராட்சி துணைத்தலைவர் உட்பட இரண்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் தாழையூத்தில் இன்ஸ்பெக்டர் மகாதேவன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது போலீசார் மறித்தும் நிற்காமல் சென்ற ஒரு சுமோ காரை விரட்டினர். அதில் இருந்தவர்கள் போலீஸ் மீது ஒரு நாட்டுவெடிகுண்டை வீசினர். அது பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதில் யாருக்கும் காயமில்லை. போலீசார் தொடர்ந்து அந்த காரை விரட்டிச்சென்று நிறுத்திய போது அதில் இருந்த இருவர் ஓட முயற்சித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் சென்ற சுமோ காரை (டிஎன் 72-வி 8174)யும் அதில் இருந்து மூன்று நாட்டுவெடிகுண்டுகள், இரண்டு அரிவாள்களையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நெல்லை டி.ஐ.ஜி., கண்ணப்பன் நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது கைதானவர்கள் வள்ளியூர், அக்கசாலை விநாயகர் கோவில்தெருவைச் சேர்ந்த சண்முகபாண்டி(38), அவரது தம்பி முத்துகிருஷ்ணன்(34). சண்முகபாண்டி மீது ஐந்து கொலை வழக்குகள் உள்ளன. நான்கு கொலைமுயற்சி வழக்குகள் உள்ளன. இதில் வள்ளியூரில் மகராஜன், முருகன் என இரண்டு ரவுடிகளை 1999ம் ஆண்டு கொலை செய்து புதைத்துள்ளனர். அந்த கொலைகளை, தொழில் போட்டியில் செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர். ஆனால், அவர்களை காணவில்லை என அவர்களது உறவினர்கள் போலீசில் புகார் செய்திருந்தனர். அதை தற்போது கொலை வழக்காக மாற்றி இறந்தவர்களின் உடல்களைத் தேட உள்ளோம். மேலும், இவர்கள் வள்ளியூர் பகுதியில் ஜவுளிக்கடைகள், நகைக்கடைகளுக்கு ஒரு துண்டுசீட்டில் ஒரு தொகையை எழுதி கொடுத்து மிரட்டி, மாமூல் பெற்றுவந்ததும் தெரியவந்துள்ளது. அந்த பகுதியில் பல நபர்களிடம் மிரட்டி நிலங்களை எழுதிவாங்கியது உள்ளிட்ட பல்வேறு மோசடிகளைச் செய்துவந்துள்ளதும் விசாரணையில் தெரியவந்தது. வேறு வழக்குகளில் தொடர்பு உள்ளதா எனவும் விசாரித்து வருகிறோம். இவ்வாறு டி.ஐ.ஜி., கண்ணப்பன் கூறினார்.

mgandhi
15-05-2008, 05:09 PM
16-5-2008

1- விடுதலை புலிகளுக்கு தடை நீட்டிப்பு : மத்திய அரசு முடிவு

புதுடில்லி: விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூர் குணஅடு வெடிப்பு சம்பவம் மற்றும் தற்போதைய முக்கிய பிரச்னைகள் குறித்து விவாதிக்க மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடந்த இக்கூட்டத்த்தில் மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், லாலு பிரசாத் யாதவ், சரத்பவார் .தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இலங்கை கூட்ட முடிவில் நிருபர்களிடம் பேசிய ப.சிதம்பரம் , ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன .சட்டம் ஒழுங்கு பாதுகாத்திட மத்திய மாநில அரசுகள் இணைந்து செயலாற்ற வேண்டும் என கருத்து விவரிக்கப்பட்து. 50 கிலோ சிமென்ட் விலை குறைப்பு போதுமானதாக இல்லை. இன்னும் குறைக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். விடுதலை புலிகள் இயக்கத்திற்கான தடை மேலும் 2 ஆண்டு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டது.

2- சென்னையில் சதித்திட்டம் : பதுங்கி இருந்த 5 தீவிரவாதிகள் கைது

சென்னை: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பிற்கு பின்னர் நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் முக்கிய பகுதிகளில் போலீசார் ரகசிய கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த 5 தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர். 5 பேரும் சென்னையில் பயங்கர நாச வேலைகளில் ஈடுபட சதித்ததிட்டம் தீட்டியிருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. 5 பேரும் ரகசிய இடத்தில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

3- குஷ்பு மீதான வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

புதுடில்லி: நடிகை குஷ்பு மீதான வழக்கை விசாரிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. திருமணத்திற்கு முன்பு பெண்கள் செக்ஸ் உறவு வைத்து கொள்ளலாமா என்பது தொடர்பாக குஷ்பு வெளியிட்ட கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இதனையடுத்து தமிழ் கலாச்சாரத்திற்கு எதிராக குஷ்பு பேசுவதாக கோர்ட்களில் பல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க தடை விதிக்க வேண்டும் என சென்னையில் தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் குஷ்பு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இதனையடுத்து இந்த வழக்குகளை விசாரிக்க கோர்ட் இடைக்கால தடை விதித்தது.

4- விலைவாசி உயர்வை கண்டித்து மறியல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கைது

சென்னை: விலைவாசி உயர்வை கண்டித்து மறியல் செய்ய முயன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டனர். விலைவாசி உயர்வை கண்டித்தும் ஆன்-லைன் வர்த்தகத்தை தடைசெய்ய கோரியும், தமிழ்நாடு முழுவதும் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொலதுசெயலாளர் வரதராஜன் கலந்து கொண்டார். *தமிழ்நாட்டில் மொத்தம் 300 இடங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. மேலும், விலைவாசி உயர்வால் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு இருக்கின்றனர், ஆனால் மத்திய அரசு இதனை கட்டுகொள்ளவே இல்லை. அரசின் கவனத்தை ஈர்க்கவும், ஆன்லைன் வர்த்தகத்தை தடைசெய்ய கோரியும் இப்போராட்டம் நடைபெற்றதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது

5- சீனாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம்

பீஜிங்: சீனாவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் தாக்கி உள்ளது. சீனாவில் தென்மேற்கு பகுதியில் உள்ள சிசூவான் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், இது முந்தய நிலநடுக்கத்தை விட அதிகமாக இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஏற்பட்ட நிலநடுக்கத்திற்க மீட்பு பணிகள் முடியாத நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது, சீனாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

6- ப்ளஸ்2 வில் மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல்வர் பரிசு

சென்னை: ப்ளஸ்2 வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல்வர் இன்று பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார். மொத்தம் 64 ஆயிரம் ரூபாயும், சான்றிதழ்களும் மாணவர்களுக்கு வழங்கப் பட்டது. தமிழகத்தில் கடந்த வாரம் ப்ளஸ்2 *அரசு தேர்வில் முடிவுகள் வெளியிடப் பட்டன. இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு முதல்வர் இன்று பரிசு வழங்கினார். இதில் முதல் இடம் பிடித்த மாணவர்களுக்கு ரூ.15,000, இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.12,000, மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.10,000 முதல்வர் வழங்கினார். இது தவிர, முதலிடம் பெற்ற மாணவர்களின் உயர்நிலை கல்விக்கான செலவுகளை அரசே ஏற்றுக் கொண்டதற்கான சான்றிதழ்களையும் முதல்வர் வழங்கினார்

7- ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு 15 பேர் பலி

காபூல்: ஆப்கானிஸ்தானில் மக்கள் கூட்டம் அதிகம் உள்ள தென்மேற்கு பகுதியில் தற்கொலை படை*யினர் நடத்திய தாக்குதலில் 15 பேர் பலியானார்கள். மேலும் 22 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களுக்கு மருந்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுபற்றி தலைமை போலீஸ் அதிகாரி யூனுஸ் தெரிவிக்கும் போது, திலாராம் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலால் 3 போலீசார் உட்பட 15 பேர் பலியானார்கள் பலர் பலத்த காயமடைந்து மருந்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்று கூறினார். இந்நிலையில் 2008ம் ஆண்டில் நடந்த தாக்குதலில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் *என்றும் இதில் பலர் ராணுவத்தினர் என்றும் தகவல்கள் வெளியிடப் பட்டுள்ளன.

8-ஜெய்ப்பூர் குண்டு*வெடிப்பு தொடர்பான இ-மெயில் வெளியீடு

ஜெய்ப்பூர்:* ஜெய்ப்பூரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு காரணமான தீவிரவாத அமைப்புகளின் இ-மெயில் கிடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த குண்டு வெடிப்பிற்கு குரு-அல்ஹிந்தி என்ற தீவிரவாத அமைப்பு *பொறுப்பேற்றுள்ளது. மேலும், குண்டு வெடிப்பிற்காக பயன்படுத்தப் பட்ட சைக்கிள் மற்றும் குண்டுகள் வைக்கப் பட்டு சிவப்பு பை உள்பட பல்வேறு படங்கள் இ-மெயிலில் அவர்கள் அனுப்பி உள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக கம்ப்யூட்டர் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது மகன் கைதுசெய்யப் பட்டுள்ளனர். அமெரிக்காவை ஆதரிப்பதை இந்தியா நிறுத்த வேண்டும் என்றும், இல்லையெனில் தனது தாக்குதல் தொடரும் எனவும் இ-மெயிலில் குறிப்பிட்டு இருந்தது. இந்நிலையில் குண்டு வெடிப்புக்கு காரணமானவன் என நம்பப்படும் பயங்கரவாதியின் வரைபடத்தை அம்மாநில போலீசார் வெளியிட்டனர். மேலும், ஜெய்ப்பூரில் உள்ள இரண்டு சைக்கிள் கடையில் சமீபத்தில் ஒரே நபர் ஒன்பது சைக்கிள்களை வாங்கியுள்ளார். அந்த சைக்கிள் கடை ஒன்றின் உரிமையாளரிடம் தற்போது போலீசார் விசாரணை நடத்தினர். அவர் கொடுத்த தகவல்களின் பேரில், குண்டு வெடிப்புக்கு காரணமானவன் என நம்பப்படும் பயங்கரவாதியின் வரைபடத்தை போலீசார் வெளியிட்டனர். 25 வயது தோற்றமுடைய அந்த நபர், குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடங்களில் ஒன்றான மனாஸ் சவுக்கில் வெடிகுண்டை வைத்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்த தொடர் குண்டு வெடிப்பில் பலர் ஈடுபட்டிருக்கலாம் என்றும், அனேகமாக ஒன்பது குழுவினர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

9- அசாம் கலவரம்: இரண்டு பேர் பலி

ஹப்லாங்: அசாமில் ஏற்பட்ட கலவரத்தில் இரண்டு பேர் பலியானார்கள் . சமீபத்தில் நடைபெற்ற கவவரம் காரணமாக அசாமில் நேற்று 24க்கு மணி நேர முழு பாந்த் நடைபெற்றது. இதையடுத்து இன்று கலவரக் காரர்கள் அஸ்ஸாமின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள காலிஜன் ரயில்வே நிலையத்தில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இரண்டு பேர் பலியானார்கள். கலவரத்தை அடுத்து அசாம் மாநிலத்தில் ராணுவத்தினர் குவிக்கப் பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்.

10- தோடாவில் 10 கிலோ ஆர்.டி.எஸ் வெடிமருந்து பறிமுதல்

ஜம்மூ: ஜம்மூவில் உள்ள தோடா மாவட்டத்தில் 10 கிலோ ஆர்.டி.எஸ் வெடிமருந்து பறிமுதல் செய்யப் பட்டது. தோடா மாவட்டத்தின் குறிப்பிட்ட பகுதியில் ஆர்.டி.எஸ் வெடிமருந்து கடத்த இருப்பதாக ராணுவத்தினர்க்கு தகவல் வந்தது. இதனையடுத்து ராணுவத்தினர் நடத்திய அதிரடி சோதனை வெடிமருந்து கண்டு பிடிக்கப் பட்டதாக *ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதுதவிர மார்மாட் பகுதியில் 10 ராஷ்டிரா துப்பாக்கி பூமியில் இருந்து தோண்டி எடுக்கப் பட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அனுராகவன்
16-05-2008, 03:02 AM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!

mgandhi
16-05-2008, 06:01 PM
நன்றி மோகன் காந்தி அவர்களே!!

நன்றி அனு

mgandhi
16-05-2008, 06:04 PM
17-5-2008

1*கரூரில் கடையடைப்பு

கரூர்: மத்திய, மாநில அரசுகளை நூல் விலையேற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி கரூரில் ஜவுளி கூட்டமைப்பு சார்பில் நேற்று கடையடைப்பு, வேலை நிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. கரூரில் உள்ள 400க்கும் மேற்பட்ட ஏற்றுமதியாளர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஜவுளி துணி உற்பத்தியாளர்கள், சாயப்பட்டறைகள் மற்றும் ஜவுளி சார்ந்த தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டதால், ரூ.50 கோடி வரை உற்பத்தி பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.கரூர் தாலுகா அலுவலகம் முன் நேற்று நடந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், கூட்டமைப்பு தலைவர் சிவக்கண்ணன் தலைமை வகித்தார். முன்னாள் ரோட்டரி சங்க கவர்னர் பாஸ்கர் துவக்கி வைத்தார்.

2*ஐ.பி.எல்., கிரிக்கெட் : மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

மும்பை : ஐ.பி.எல். டுவென்டி 20 கிரிக்கெட் தொடரில் மும்பையில் நடைபெற்ற போட்டியில், கங்குலி தலைமையிலான கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியும், சச்சின் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியதில் மும்பை இந்தியன்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டாஸ் வென்று பீல்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி, முதலில் பேட்டிங் செய்த கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணியை 15.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க செய்து 67 ரன்னில் சுருட்டியது. வெற்றி இலக்கு 68 ரன் என்ற நிலையில் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 5.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 68 ரன் எடுத்து வெற்றி வாகை சூடியது.


3*நெய்வேலி அருகே இரண்டு இடங்களில் குண்டுவெடிப்பு


நெய்வேலி : நெய்வேலி முதல் தெர்மல் பிளாண்ட் அருகே உள்ள விஷ்ணுபிரியா காளியம்மன் கோவிலுக்கும் முருகன் கோவிலுக்கும் இடையே இன்று மாலை ஒரு குண்டுவெடித்தது. இந்த குண்டுவெடித்த அடுத்த ஒரு மணிநேரம் கழித்து 20மீ இடைவெளியில் மற்றொரு குண்டுவெடித்தது. குண்டுவெடிப்பிறக்கான காரணம் குறித்து கியூபிராஞ்ச் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


4*அரியலூர் அருகே 5 பேர் கொலை : 8 பேர் கைது


அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டி வங்குடி காலனியில் நழிக்கு பழி வாங்கும் விதமாக 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 5 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இதே பகுதியை சேர்ந்த பிரபாகரன், ரமேஷ், தினேஷ், ராஜதுரை, திருஞானம், பழனிச்சாமி, உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


5*இடிக்கவில்லை.., மின்னிக்கவில்லை: மதுரையில் காற்றுடன் கலந்த பலத்த மழை


மதுரை: இடி இடிக்காமல் மின்னல் ஏதும் இல்லாமல் பலத்த காற்றுடன் மதுரையில் கடும் மழை பெய்தது. மாலை 5.15 மணியளவில் திடீரென மதுரை நகர் இருண்டது. லேசாக பெய்ய துவங்கிய மழை நேரம் , பிடிக்க , பிடிக்க மழையின் வேகமும் அதிகரித்தது. ஒரு கட்டத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. சாலைகளில் உள்ள மரங்கள் எல்லாம் பெரும் அசைவுடன் ஆர்ப்பரித்தது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதன்காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டன.வீதிகளில் இருந்த விளம்பர போர்டுகள் ஆங்காங்கே பிய்த்து கொண்டு விழுந்தன. மழையில் சென்ற மக்களின் குடைகள் எதுவும் தாக்குப்பிடிக்கவில்லை. காற்றுக்கு அஞ்சிய பலர் ஆங்காங்கே கிடைத்த பாதுகாப்பான ஓரங்களில் ஒதுங்கி கொண்டனர். போதாத குறைக்கு மழையுடன் வானில் இருந்து பனிக்கட்டிகளும் சிதறி தெறித்தன. இது போன்ற மழையை இது வரை பார்த்ததில்லை என மதுரை வாழ் மக்கள் அதிசயித்துப்போயினர்.

6*மதுரையில் போஸ்ட் கார்டு மோசடி ஒருவர் சரண்

மதுரை: மதுரையில் போஸ்ட் கார்டு மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தேடிய "பான் டிரஸ்ட்' நிறுவன உரிமையாளர் முருகேசன் நேற்று முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். திருச்சி ஜமால்பேட்டையைச் சேர்ந்தவர் முருகேசன்(37). இவர், மதுரை அரசரடியில் கடந்தாண்டு டிசம்பரில் "பான் டிரஸ்ட்' என்ற நிறுவனத்தை ஏற்படுத்தினார். பெரிய நிறுவனங்களின் விளம்பரங்களை போஸ்ட் கார்டுகளில் எழுதி பொதுமக்களுக்கு அனுப்பி வந்தார். போஸ்ட் கார்டில் விளம்பரங்களை எழுத டீலர்கள் மூலம் ரூ. ஆயிரத்து 500 டெபாசிட் பெற்றுக் கொண்டு வேலையாட்கள் சேர்க்கப்பட்டனர். மதுரை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த பெரிய நிறுவனங்கள் விளம்பரம் செய்வதற்காக இவரது நிறுவனத்தை அணுகினர். இதனால், ஏராளமான பணம் புழங்கியது. போஸ்ட் கார்டில் எழுதும் வேலையில் சேர்ந்தவர்களுக்கு குறிப்பிட்டபடி சம்பளம் வழங்கவில்லை. அவர்கள் இதுகுறித்து கேட்பதற்குள் சுதாரித்துக் கொண்ட முருகேசனும், அவரது கூட்டாளிகள் மகபூப்பாளையம் ஜாக்ஸ்மித், பாலமேடு பிச்சைக்கனி, மைத்துனர் சந்துரு ஆகியோரும் வசூலான பணத்துடன் தலைமறைவாகினர். இதனால், ஏமாற்றப்பட்டவர்கள் கமிஷனர் நந்தபாலனிடம் புகார் கொடுத்தனர். கமிஷனர் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கரன் தலைமையில் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு முருகேசன் உட்பட அவரது கூட்டாளிகளைத் தேடி வந்தனர்.முருகேசன் வக்கீல்கள் பசும்பொன்முத்தையா, சரவணனுடன் முதலாவது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை, 15 நாட்களுக்கு ரிமாண்டில் வைக்க மாஜிஸ்திரேட்(பொறுப்பு) கே.நாகராஜ் உத்தரவிட்டார்.


7*கர்நாடகாவில் 60 சதம் ஓட்டுப்பதிவு


பெங்களூரு : கர்நாடகாவில்நடந்த 2 ம் கட்ட ஓட்டுப்பதிவில் சுமார் 60 சதம் ஓட்டுக்கள் பதிவாகியதாக தெரிகிறது. 66 தொகுதிகளில் 2வது கட்ட தேர்தல் நடந்தது. விறுவிறுப்பாக ஓட்டுப்பதிவ நடைபெற்றது. மொத்ம் 1கோடியே 10 லட்சம் வாக்காளர்கள்.

8*குஜராத் ஐகோர்ட்டில் வெடிகுண்டு புரளி


ஆமதாபாத் : குஜராத் ஐகோர்ட்டுக்கு இன்று தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. கோர்ட் வளாகத்தினுள் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவலால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனை அடுத்து விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். ஆனால, சோதனையில் வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை. டெலிபோன் மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்தது. தொடர்ந்து அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.


9*புதிய காஸ் இணைப்பு வழங்க வேண்டாம்: எண்ணெய் நிறுவனங்கள் கேட்கிறது


புதுடில்லி: புதிய சமையல் காஸ் இணைப்பு வழங்க வேண்டாம் என இந்திய எண்ணெய் நிறுவனங்கள் மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. காஸ் உற்பத்தி செலவு அதிகமாக இருப்பதால் நிறவனங்களுக்கு பெருத்த நஷ்டமே ஏற்படுவதாகவும் , ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு காஸ் சப்ளை செய்வதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே புதிய இணைப்புகள் வழங்குவதை அரசு நிறுத்தி கொள்ள உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

mgandhi
18-05-2008, 05:13 PM
19-5-2008


மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் கருணாநிதி


.ரஜினிக்கு அன்புமணி பாராட்டு: ஹிந்தி நடிகர்கள் பின்பற்ற வேண்டுகோள்


.ஜெய்ப்பூர் தொடர் குண்டுவெடிப்பு: 20 கடைக்காரர்கள் கைது


.அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேறும்: லாலு நம்பிக்கை


.ஆப்கனில் கடத்தப்பட்ட இந்தியர் மீட்பு


.மத்தியில் காங்கிரஸ்-பாஜக கூட்டாட்சி ஆர்எஸ்எஸ் தலைவர் யோசனை


.சீனாவில் மீண்டும் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பரபரப்பு


.பார்வர்டு பிளாக்: கட்சிப் பொறுப்பிலிருந்து நடிகர் கார்த்திக் நீக்கம்



.விஷச்சாராயம் குடித்த 8 பேர் பலி; ஓசூர் அருகே பரிதாபம்


.இரண்டு நக்சலைட்டு தீவிரவாதிகள் மதுரையில் கைது



.ஹரியானாவில் சுவர் இடிந்து விழுந்து 12 கட்டிட தொழிலாளர்கள் பலி


.மேற்குவங்க தேர்தலில் ஐந்து பேர் கொலை


.பயங்கரவாதத்துக்கு ஜாதி, மதம் இல்லை: ப. சிதம்பரம்


.கோத்ராவில் எரிக்கப்பட்ட ரயிலை நானாவதி கமிஷன் பார்த்தது


.சீன நிலநடுக்கம்: இடிபாடுகளுக்குள் சிக்கிய 63 பேர் 5 நாள்களுக்குப் பின் உயிரோடு மீட்பு


.இலங்கை விமானப்படை தாக்குதல்: 16 புலிகள் பலி



.சுர்ஜீத் சிங் நிலை குறித்து நேரில் விசாரித்தார் மன்மோகன் சிங்


.உயர் கல்விக்கு ரூ.20,000 கோடி மானியத்தை நிறுத்த அரசுக்கு யோசனை



.போலீஸ் நிலையத்தில் சாமியார் தற்கொலை முயற்சி

mgandhi
21-05-2008, 06:46 PM
21-5-2008


1- .பணியாளர்கள் சென்ற பேருந்து கவிழ்ந்து 2 பேர் பலி

அருப்புக்கோட்டை, மில்லுக்கு பணியாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் படுகாயம் அடைந்தனர்
.
2- .ஜம்முவில் லேசான நிலநடுக்கம்

ஜம்மு மாநில டோடா மாவட்டத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை டோடா மாவட்டத்தில் உள்ள பதர்வாக் என்ற இடத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கத்தினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் இது நான்கு விநாடிகள் மட்டுமே உணரப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது.


3- .பூபதியின் கோரிக்கையை ஏற்க டென்னிஸ் சம்மேளனம் மறுப்பு

லியாண்டர் பயஸிற்குப் பதிலாக ரோஹன் போபண்ணாவை அணியில் சேர்க்கும்படி பூபதி கேட்டுக் கொண்டார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்தோடு அணியில் மாற்றம் இல்லை என்றும் அனைத்திந்திய டென்னிஸ் சம்மேளனம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

4- .விடுதலைப் புலிகளின் உயர் தளபதி மரணம்

விடுதலைப் புலிகள் அமைப்பின் உயர் தளபதிகளில் ஒருவரான பாலசேகரம் கண்டையா இலங்கையில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 42.

அவரது மறைவையொட்டி 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பாலசேகரம் கண்டையா என்கிற பால்ராஜ் விடுதலைப் புலிகளுக்குப் போர் தந்திரங்களை வகுத்துக் கொடுத்தவர். இலங்கை ராணுவத்துக்கு எதிரான பல போர்களில் நேரடியாகப் பங்கேற்றவர்.
மே 20-ம் தேதி பிற்பகல் 2 மணிக்கு அவர் இறந்ததாக விடுதலைப் புலிகள் அமைப்பு அறிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை ராணுவத்துக்கும் இடையே போர் நிறுத்தம் இருந்தபோது, சிங்கப்பூரில் 2003-ம் ஆண்டு பாலசேகரம் கண்டையாவுக்கு இதய அறுவை சிகிச்சை நடந்தது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் இதயக் கோளாறு செவ்வாய்க்கிழமை காலமானார்.

5- .இராக் குண்டுவெடிப்பில் பலியான இரு தமிழர்களின் சடலங்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு

சென்னை: இராக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட இரு தமிழர்களின் சடலங்கள் புதன்கிழமை சென்னைக்கு கொண்டுவரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
நாகர்கோவில் மாவட்டத்தின் கீழ ஈசனூரைச் சேர்ந்த ரமேஷ் குமார் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டம் மாம்பாக்கத்தைச் சேர்ந்த செந்தில் கங்காதரன் ஆகியோரின் உடல்கள் துபையிலிருந்து இந்திய விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டன.
அலுவலக நடைமுறைகளுக்குப் பின்னர் அந்த உடல்கள் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.
குவைத் நிறுவனத்தில் ரமேஷ் குமார் டிரைவராகப் பணியாற்றினார். செந்தில் கங்காதரன் டீசல் மெக்கானிக்காக பணியாற்றினார். இருவரும் மே 8ல் இராக்கில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலியானார்கள்.


6- .உத்தரகாண்ட்: பேருந்து பள்ளத்தினுள் விழுந்து 18 பேர் பலி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் பிதோரகர் மாவட்டத்தில் பேருந்து ஒன்று புதன்கிழமை காலை பள்ளத்தினுள் விழுந்ததில் அதில் பயணம் செய்தவர்களில் 18 பேர் பலியானார்கள். மேலும் 12 பேர் காயமுற்றனர்.
பிதோரகரிலிருந்து பெஷாவருக்கு அந்த பேருந்து சென்றுகொண்டிருந்தபோது இவ்விபத்து நிகழ்ந்தது. விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என போலீசார் கூறினர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவரின் நிலைமை மிகவும் ஆபத்தான கட்டத்தில் உள்ளது.
உயர் அதிகாரிகள் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

7- .குவாரிகளில் மணல் எடுப்பதில் மீண்டும் ஏல முறை ஏன்?: ராமதாஸýக்கு பொன்முடி பதில்

மணல் கொள்ளையைத் தடுப்பதற்காகவே திமுக அரசு ஏல முறை போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. 2006-ம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தினமும் மணல் கொள்ளை நடைபெறுவதாகவும், கேரளத்துக்கு தினமும் 2,000 லாரிகளில் மணல் போவதாகவும் பாமக நிறுவனரும், அவரது கட்சியினரும் கூறி வருகிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக அதற்காக அறிக்கை மேல் அறிக்கை விட்டதையும், ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தியதையும் எல்லோரும் அறிவார்கள்.
மணல் எடுப்பதில் ஏற்கெனவே இருந்த முறை பற்றி அடுக்கடுக்காக குறை கூறியவர்களே அந்த முறையில் மாற்றம் கொண்டு வரும்போது எதிர்க்கிறார்கள். எப்படியும் குறை சொல்ல வேண்டும் என்று நினைப்பவர்களிடம் இருந்து வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
2003-ம் ஆண்டிலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையில் தவறு என்கிறபோது அதில் மாற்றம் கொண்டு வருவதுதான் முறை. 2002-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட உயர் நிலைக் குழுவின் அடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது.
அன்றைய ஆட்சியின் அணுகுமுறைக்கேற்ப அப்போது எடுக்கப்பட்ட முடிவு இந்த ஆட்சியின் அணுகுமுறைக்கு எப்படி பொருத்தமாக இருக்கும்? ஜூலை மாதம் ஏல முறை அமலுக்கு வரும். அதற்குள் இதனை எப்படி அமல்படுத்துவது என்பது பற்றி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும். அப்போது ராமதாஸ் சொன்ன பரிந்துரைகளையும், உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் கருத்தையும் ஏற்றுச் செயல்படுவோம் என்று பொன்முடி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


8- .சிபிஎஸ்இ: தமிழகத்தில் தேர்ச்சி 96 சதவீதம்

சென்னை, மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் (சி.பி.எஸ்.இ.) கீழ் தமிழகத்தில் தேர்வு எழுதியவர்களில் 96 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு 10 சதவீதம் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள 176 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 30 பள்ளிகள் கேந்திரிய வித்யாலய பள்ளிகள் ஆகும். மற்றவை தனியார் நடத்தும் பள்ளிகள் ஆகும். சென்னையில் 72 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்ளன.


9- .மணல் குவாரியை தனியாரிடம் தரும் முடிவுக்கு ஜெயலலிதா கடும் எதிர்ப்பு

மணல் கொள்ளையை ஊக்குவிக்கும் வகையில் மணல் குவாரிகளை தனியாரிடம் அளிக்கும் முடிவுக்கு அதிமுக பொதுச்செயலர் ஜெயலலிதா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
அரசின் வருவாயையும், மக்கள் நலனையும் கருத்தில் கொள்ளாமல் பொதுப்பணித் துறை மூலம் நடத்திய மணல் குவாரிகளுக்கு பகிரங்க ஏல முறையை திமுக அரசு தற்போது அறிமுகம் செய்யவுள்ளது.
இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதோடு, மணல் விலையும் பல மடங்கு உயரும். ஏல முறை மூலம் திமுகவினர் தான் பயனடைவர். எனவே, மணல் கொள்ளையை ஊக்குவிக்கும், விலையை உயர்த்தக் கூடிய ஏல முறையை வன்மையாகக் கண்டிக்கிறோம். உடனடியாக இந்த முறையை அரசு திரும்பப் பெறவேண்டுமென வலியுறுத்துகிறேன் என அறிக்கையில் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.



.

mgandhi
22-05-2008, 06:19 PM
23-5-2008
.
என் வளர்ச்சியை தடுக்க தொல்லை கொடுக்கிறார்கள்: விஜயகாந்த்


.மும்பை ரசிகர்களின் செயல் குறித்து யுவராஜ் வருத்தம்


.5வது ஆண்டுவிழா கொண்டாட மத்திய அரசுக்கு தகுதியில்லை: ஏ.பி.பரதன்


.வீரர்களின் பொறுப்பற்ற ஆட்டமே தோல்விக்கு காரணம்: தோனி


.மேலூர் அருகே அகதிகள் முகாமில் ஆக்கிரமிப்பு அகற்றம்


.வட நாட்டு மனநோயாளிகளால் தேவகோட்டை மக்கள் அவதி


.ஆண்டிப்பட்டி அருகே தேவர் படம் அவமதிப்பால் பதட்டம்


.கர்நாடக தேர்தல்: நண்பகல் வரை 25 சதவீத வாக்குப்பதிவு


.சுர்ஜீத்தின் நிலைமையில் முன்னேற்றம்


.மீண்டும் ஒலிம்பிக் ஜோதி ஓட்டம்


.சுமத்ரா தீவில் நிலநடுக்கம்


.திருநெல்வேலி அருகே நீரில் மூழ்கி அக்கா, தம்பி பலி


.சாலை விபத்தில் நைஜீரிய படை வீரர்கள் பலி


.சாதனைகளை பிரசாரம் செய்வது எப்படி?: காங்கிரஸ் ஆலோசனை


.இட ஒதுக்கீட்டை எதிர்த்து உண்ணாவிரதம்


.இந்திய-பாக். பேச்சுக்கு முக்கியத்துவம் அளிக்காத பத்திரிகைகள்


.சவூதிக்கு புதிய இந்தியத் தூதர்


.இந்தியாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து: மலேசியா அறிவிப்பு


."அனைத்து துறைகளிலும் மத்திய அரசு தோல்வி': பா.ஜ.க.


.ஆகஸ்ட்-செப்டம்பரில் பணவீக்கம் குறையும்: மாண்டேக் சிங்


.ஐ.நா. மனித உரிமை அமைப்பில் உறுப்பினரானது பாகிஸ்தான்


.ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இணைப்பு: அரசு உத்தரவை ரத்து செய்யக் கோரி வழக்கு


.சோனியா காந்திக்கு பிகார் நீதிமன்றம் சம்மன்


.பேருந்துக்காக காத்திருந்தோர் மீது கார் மோதல்: 3 பேர் பலி

mgandhi
23-05-2008, 05:17 PM
24-5-2008

1-.தேசிய கட்சிகளுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை: விஜயகாந்த்


2-.பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சில நாட்களில் முடிவு



3-.லாரி விபத்து: 20 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டிகள் சேதம்



4-.பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி


5-.தொழிலாளர்களை பணியமர்த்தல்: இந்தியா-மலேசியா விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


6-.மலேசியாவில் இந்திய வம்சாவளி எம்.பி.,க்கு கொலை மிரட்டல்



7-.சாதிவாரியான கணக்கெடுப்பு: வீரமணி வலியுறுத்தல்


8-மக்களவைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தத் தயார்: தேர்தல் கமிஷன்


9-.ஐ.நா. மனித உரிமை அமைப்பில் உறுப்பினரானது பாகிஸ்தான்


10-.திபெத்தியர்கள் சீனாவின் எதிரிகள் அல்ல: தலாய் லாமா



11-25,000 என்ஜினீயர்களுக்கு வேலை: இன்போசிஸ் அறிவிப்பு


12-.தமிழக கல்விக் கொள்கை} ஆலோசிக்க மார்க்சிஸ்ட் முடிவு


13-.மணல் குவாரி விவகாரம்: அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்க அதிமுக. தேமுதிக முடிவு


14-.தமிழக தேர்தல் ஆணையராக சந்திரசேகரன் மீண்டும் நியமனம்


15-இந்தியத் திரைப்படங்களுக்கான தடை நீக்கப்படும்: ஜர்தாரி


16-.இந்திய தொழிலாளர்களை பணியமர்த்தல்: ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து- மலேசியா


17-பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.5-ம் உயர்த்த மத்திய அரசு தீவிர பரிசீலனை


18-இந்தியாவுடனான அமைதிப் பேச்சு தொடரும்: நவாஸ் ஷரீப்


19-.குஜ்ஜார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு

mgandhi
23-05-2008, 05:48 PM
24-5-2008

1-.தேசிய கட்சிகளுக்கு மக்களைப் பற்றி கவலையில்லை: விஜயகாந்த்


2-.பெட்ரோல், டீசல் விலை உயர்வு: சில நாட்களில் முடிவு



3-.லாரி விபத்து: 20 லட்சம் மதிப்புள்ள தீப்பெட்டிகள் சேதம்



4-.பிரித்வி ஏவுகணை சோதனை வெற்றி


5-.தொழிலாளர்களை பணியமர்த்தல்: இந்தியா-மலேசியா விரைவில் புரிந்துணர்வு ஒப்பந்தம்


6-.மலேசியாவில் இந்திய வம்சாவளி எம்.பி.,க்கு கொலை மிரட்டல்



7-.சாதிவாரியான கணக்கெடுப்பு: வீரமணி வலியுறுத்தல்


8-மக்களவைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் நடத்தத் தயார்: தேர்தல் கமிஷன்


9-.ஐ.நா. மனித உரிமை அமைப்பில் உறுப்பினரானது பாகிஸ்தான்


10-.திபெத்தியர்கள் சீனாவின் எதிரிகள் அல்ல: தலாய் லாமா



11-25,000 என்ஜினீயர்களுக்கு வேலை: இன்போசிஸ் அறிவிப்பு


12-.தமிழக கல்விக் கொள்கை} ஆலோசிக்க மார்க்சிஸ்ட் முடிவு


13-.மணல் குவாரி விவகாரம்: அனைத்து கட்சிக் கூட்டத்தை புறக்கணிக்க அதிமுக. தேமுதிக முடிவு


14-.தமிழக தேர்தல் ஆணையராக சந்திரசேகரன் மீண்டும் நியமனம்


15-இந்தியத் திரைப்படங்களுக்கான தடை நீக்கப்படும்: ஜர்தாரி


16-.இந்திய தொழிலாளர்களை பணியமர்த்தல்: ஒப்பந்தம் விரைவில் கையெழுத்து- மலேசியா


17-பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.5-ம் உயர்த்த மத்திய அரசு தீவிர பரிசீலனை


18-இந்தியாவுடனான அமைதிப் பேச்சு தொடரும்: நவாஸ் ஷரீப்


19-.குஜ்ஜார் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்ப்புகை குண்டு வீச்சு

mgandhi
24-05-2008, 05:54 PM
25-5-2008

1- ராஜஸ்தானில் மீண்டும் குஜ்ஜர் கலவரம்: 15 பேர் பலி

2- இருபத்தைந்தாயிரம் பொறியாளர்களுக்கு வேலை: இன்போசிஸ் அறிவிப்பு

3- கள்ளச் சாராய சாவு: நீதி விசாரணை கோருகிறார் ராமதாஸ்

4- கச்சா எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு: பெட்ரோலுக்கு ரூ.10, டீசலுக்கு ரூ.5 உயர்த்த பரிசீலனை

5- என்னை ஒழிக்க எதிரிகள் வில் அம்பு தேடுகின்றனர்: கருணாநிதி

6- மாநிலத் தேர்தல் ஆணையர் சந்திரசேகரனுக்கு 2 ஆண்டுகள் பதவி நீட்டிப்பு

|7-பெரு விவசாயிகளுக்கும் கடன் தள்ளுபடி: கடன் தள்ளுபடித் தொகை ரூ.71 ஆயிரம் கோடியாக உயர்வு

8- மணல் விற்பனை விவகாரம்: தமிழக அரசு கூட்டத்தில் அதிமுக பங்கேற்காது: ஜெயலலிதா அறிவிப்பு

9-பிருத்வி ஏவுகணை சோதனை வெற்றி |

mgandhi
25-05-2008, 05:52 PM
26-5-2008

1- ராஜஸ்தான் மாநிலத்தில் மீண்டும் கலவரம் : பலி எண்ணிக்கை 33 ஆக உயர்வு

2- ஜம்மு காஷ்மீரில் 16 ஆயிரம் பேருக்கு அரசு வேலைவாய்ப்பு


3- கைதிகளுக்கு நடன சிகிச்சை : கொல்கத்தாவில் புதுமை

4-கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடித்தது பாஜக


.மணல் விற்பனை: முதல்வர் தலைமையில் நாளை ஆலோசனை


6-.வாக்குகள் சிதறியதே தோல்விக்கு காரணம்: காங்கிரஸ் விளக்கம்


7-.காங்கிரஸ் நிலைமை படு மோசம்: மோடி


8-.தோல்வியை ஏற்கிறோம்: காங். தலைவர் கிருஷ்ணா


9-.மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு இது முன்னோட்டம்: ராஜ்நாத் சிங்


10-.ஒகேனக்கல் பிரச்னை சுமூகமாகத் தீர்க்கப்படும்: இல.கணேசன் நம்பிக்கை


11-.கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல்: தரம்சிங் கின்னஸ் சாதனை


12-.ராஜஸ்தான் மாநிலத்தில் குஜ்ஜார் போராட்டம்: பாமக ஆதரவு



13-.குஜராத்தில் குஜ்ஜார் இனமக்களின் போராட்டம் தீவிரம்


14-.பிரமருக்கு கண் அறுவை சிகிச்சை


15-.தாணே தொகுதியை தக்கவைத்தது சிவசேனை

mgandhi
26-05-2008, 05:28 PM
27-5-2008

1-மணல் குவாரிகளை தனியார்மயமாக்கும் முடிவை கைவிட்டது தமிழக அரசு


2-.அரசு ஊழியர் காப்பீட்டுத் திட்டத்தை தனியாரிடம் ஒப்படைத்தது வேதனைக்குரியது: ஜெ.


3-.செவ்வாயில் அமெரிக்க விண்வெளி கலம்


4-.இரண்டு கைகள் இணைந்திருப்பது போல் கட்சிக் கொடி: கார்த்திக்


5-.மணல் திட்டில் தவித்த இலங்கை அகதிகள் மீட்பு


6-.வங்கதேசத்தவரை வெளியேற்ற வி.எச்.பி. பிரசாரம்


7-.விபத்தில் இருந்து தப்பியது வைகை எக்ஸ்பிரஸ்


8--.மூன்று நாடுகள் கிரிக்கெட்: யூசுப் பதானுக்கு வாய்ப்பு?


9-.கிரேனிலிருந்து பார்சல் விழுந்ததில் கிளீனர் சாவு


10-ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு: விசாரணைக்காக இமாம் கைது



11-.நம்பகத்தன்மையை காங்கிரஸ் இழந்ததையே கர்நாடக முடிவு காட்டுகிறது: பிரகாஷ் காரத்



12-.குடியரசுத் தலைவரின் பதர்வா பயணம் திடீர் ரத்து


13-.சீனாவில் மீண்டும் நில நடுக்கம்


14-.கங்குலி அதிரடி


15.தென்ஆப்பிரிக்க கலவரத்தில் இதுவரை 50 பேர் பலி


16-.தமிழக-கர்நாடக உறவை காத்திட பாஜகவுக்கு காங். கோரிக்கை


17-.அதிகக் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகள் மீது நடவடிக்கை எடுக்க பாமக கோரிக்கை


18-.இந்திய உறவை மேற்கத்திய நாடுகள் வலுப்படுத்த வேண்டும்: டோனி பிளேர்

mgandhi
27-05-2008, 06:00 PM
28-5-2008

1-மணல் கொள்ளையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ.


2-.மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம்: இல. கணேசன்


3-.ஒகேனக்கல் திட்டத்துக்கு பாஜக தடையாக இருக்கக் கூடாது: சரத்குமார்


.4-அரங்கில் "கலைஞர் 85 கொண்டாட்டம்'


5-.ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்: என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?- டி.ராஜேந்தர்


6-.மார்க்சிஸ்ட் தலைவர்களுடன் முலாயம் சிங் யாதவ் சந்திப்பு


7-.எமிரேட் அரசு விசா கட்டணத்தை உயர்த்தியது


8-.நேருவின் 44வதுஆண்டு நினைவுதினம்


9-.சார்க் உச்சி மாநாட்டுக்கு போதிய பாதுகாப்பு: இலங்கை அதிபர் உறுதி


.10-நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைத்தார் லாலு


11-.மத்திய அரசு தலையிட குஜ்ஜர்கள் கோரிக்கை


12-.அரசியல் நிர்ணய சபை நேபாளத்தில் பொறுப்பேற்றது



13-.மருந்துக்கு தனித் துறை: மத்திய அரசு முடிவு


14-.அணுசக்தி ஆராய்ச்சி பற்றி முழு விவரங்களை ஈரான் தரவில்லை: சர்வதேச அணுசக்தி ஏஜென்சி

mgandhi
28-05-2008, 05:12 PM
29-5-2008

1. மே 30ல் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு


2. .இலங்கைப் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன?: இல.கணேசன்


3. .கரூரில் அதிமுகவினர் நாளை மறுநாள் ஆர்ப்பாட்டம்


4. .அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு பாக்கியை தவணை முறையில் வழங்க யோசனை


5. .நக்ஸலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகள் பற்றி மத்திய அரசு ஆய்வு


6. .தொழிலாளர்களை துன்புறுத்தும் முதலாளிகள் மீது நடவடிக்கை: சவூதி அரசு முடிவு


7. .கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி ரத்து


8. .கடாரா கொலை வழக்கில் 2 பேர் குற்றவாளிகள் என்று தீர்ப்பு


9. .மாளிகையில் இருந்து வெளியேற நேபாள மன்னருக்கு 15 நாள் கெடு


10. .ராணுவ இல்லத்தை முஷாரப் காலி செய்யக் கோரி நீதிமன்றத்தில் மனு


11. ."பின்லேடனை பிடிக்க அமெரிக்கா புது யுக்தி'

mgandhi
29-05-2008, 05:20 PM
30-5-2008

1-கள்ளச்சாராய சாவுக்கு, தமிழக அரசு காரணம் அல்ல: தேவேகவுடா

முன்னாள் பிரதமர் தேவேகவுடா, நேற்று காலை ஹெலிகாப்டர் மூலம் காஞ்žபுரம் வந்தார். அவர் வந்த ஹெலிகாப்டர், பச்சையப்பன் ஆண்கள் கல்லூரி மைதானத்தில் வந்து இறங்கியது.

2- கள்ளச்சாராய சாவு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும்: ராமதாஸ்

ஓசூர் கள்ளசாராய சாவு குறித்து நீதிவிசாரணை நடத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார்.

3-வட மாநில பயணிகளை கண்டித்து குழித்துறையில் ரயில் மறியல்

மார்த்தாண்டம், ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாதோர் பயணிக்கும் பெட்டியின் கதவைத் திறந்து விடாமல் வட மாநில பயணிகள் பூட்டிக் கொண்டதால், பிற பயணிகள் ரயிலைக் கிளம்ப விடாமல் மறித்துப் போராட்டம் நடத்தினர்.

4-ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை கடத்த முயன்ற பெண் கைது

சென்னை, ரூ.3 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை மலேசியாவுக்கு கடத்த முயன்ற பிலிப்பைன்ஸ் நாட்டு பெண் கைது செய்யப்பட்டார்.

5-சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம்: அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. புறக்கணிப்பு

சென்னை,ஆற்று மணல் விவகாரம் தொடர்பாக கூட்டப்படும் அனைத்து கட்சித்தலைவர்கள் கூட்டத்தை புறக்கணிக்க போவதாக அ.தி.மு.க., ம.தி.மு.க., தே.மு.தி.க. கட்சிகள் அறிவித்துள்ளன.

6-தியாகராஜ பாகவதர் மனைவிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிதி உதவி: கருணாநிதி உத்தரவு

சென்னை, தியாகராஜ பாகவதர் மனைவிக்கு மருத்துவ செலவுகளுக்காக ஒரு லட்ச ரூபாய் நிதி உதவி வழங்குவதாக கருணாநிதி அறிவித்துள்ளார்

7- குஜ்ஜார் கலவரத்தில் 13 பேர் பலி

பரத்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள குஜ்ஜார் இன மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று போராடி வருகிறார்கள்.

8-மேலும் ரூ.11,680 கோடி விவசாய கடன் ரத்து ஆகிறது

புதுடெல்லி, மத்திய பட்ஜெட்டில், விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

9-பாராளுமன்ற தேர்தலை நடத்த எந்த நேரத்திலும் தயார்: தேர்தல் கமிஷனர்

புதுடெல்லி,ஆகஸ்டு 31-ந் தேதிக்குப் பிறகு, எந்த நேரத்திலும் பாராளுமன்ற தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் தயாராக இருக்கிறது என்று தலைமை தேர்தல் கமிஷனர் என்.கோபால் சாமி கூறினார்.

10-பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தற்கொலைக்கு சமமானது: இடதுசாரிகள்

புதுடெல்லி, பெட்ரோல், டீசல் விலையை உயர்த்துவது தற்கொலைக்கு சமமானது. இந்த முடிவினால் பணவீக்கம் 10 மடங்கு அதிகரித்து விடும் என்று இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

11- பெட்ரோல், டீசல் விலை உயர்வு 2 வாரம் தள்ளிவைப்பு
புதுடெல்லி, பெட்ரோல், டீசல் விலை உயர்வை 2 வாரங்களுக்கு தள்ளிவைப்பது என்று மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

mgandhi
30-05-2008, 06:30 PM
31-5-2008

1-தூத்துக்குடி: தூத்துக்குடி கடலில் கல்லூரி மாணவர் உட்பட இரண்டு மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

2-ஐ.பி.எல். கிரிக்கெட் : ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இறுதி போட்டிக்கு தகுதி

3-ஜெ., பாதுகாப்பு போலீசார் ஆறு பேர் கைது

4-வரலாறு புவியியலில் மாநிலத்தில் 2ம் இடம் பெற்ற மதுமிதா

5-போத்தனூர் பொள்ளாச்சி ரயில்கள் ரத்து

6-பழம்பெரும் நடிகை முத்துலட்சுமி மரணம்

7-நிதிஷ் கட்டாரா கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை

8-சமையல் காஸ் விலை ரூ.20 உயர்கிறது

9-பரம்பிக்குளம், ஆழியாறு நீர் பங்கீடு விவகாரம் : தோல்வியடைந்தது பேச்சுவார்த்தை
.
10-கர்நாடக மாநில முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா

11-தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வில் சிறுபான்மையினருக்கு 3.5% இட ஒதுக்கீடு

12-மாருதி காருக்குள் மர்ம பிணம் : ஊட்டியில் பீதி

13-ஆங்கிலோ இந்தியன் பத்தாம் வகுப்பில் குன்னூர் மாணவி முதலிடம்

14-குஜ்ஜார்கள் விவகாரம் : பிரதமரிடம் கொண்டு செல்ல பாஸ்வான் முடிவு

15-கர்நாடகாவில் ஜனாதிபதி ஆட்சியை ரத்து செய்யும் பிரகடனம் கையெழுத்து

16கடலூரில் சைக்கோ மனிதன் பிடிபட்டான்

17-பணவீக்கம் 8.1% மாக உயர்வு : நிதி அமைச்சர் கவலை

18-*தீயில் எரிந்த விடைத்தாள்களுக்கும் இன்று ரிசல்ட் வெளியிடப்பட்டது

19-காஷ்மீரில் 9 வங்கதேசத்தவர்கள் கைது

20-மெட்ரிக் பத்தாம் வகுப்பில் நாமக்கல் மாணவி முதலிடம்

21-தமிழ் பாடத்தில் தூத்துக்குடி மாணவி முதலிடம்

22-10ம் வகுப்பு தேர்வில் திருநெல்வேலி மாணவி முதல் இடம்

23-பனாமா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து : 11 பேர் பலி

24-ஈராக்கில் தற்கொலைப்படையினர் தாக்குதல் : 35 பேர் பலி

25-ஐஸ்லாந்தில் நிலநடுக்கம்

mgandhi
03-06-2008, 07:14 PM
4-6-2008

1-விலைவாசி உயர்வுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்

2-பீகாரில் பந்த்: தண்டவாளம் தகர்ப்பு

ஒரு ரூபாய்க்கு ஒரு லட்சம்: முதல்வர் பிறந்தநாளில் புதிய திட்டம்

3-பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் தேர்வை தொடங்கியது பா.ஜனதா

4-சேது சமுத்திர திட்டத்தை நிறைவேற்றித் தாருங்கள்: கருணாநிதி வேண்டுகோள்

5-ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நாட்டுக்கு ஆபத்து: அத்வானி

6-நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்: மின் உற்பத்தி பாதிக்கும் ஆபத்து

7-ஒகேனக்கல் பிரச்சினை: விட்டுக் கொடுக்கும் பேச்சுக்கே இடமில்லை; எடியூரப்பா

8-ஓட்டல்களில் 20 ரூபாய்க்கு அளவு சாப்பாடு: தமிழகம் முழுவதும் இன்று முதல் அமல்

9-பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது: பிரதமர் மன்மோகன்சிங்

mgandhi
04-06-2008, 05:58 PM
5-6-2008

1-பெட்ரோல் லிட்டருக்கு 5 ரு, டீசல் லிட்டருக்கு 3 ரூ. விலை உயர்வு



.2-என்.எல்.சி. தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்: இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை


.3-பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு: நாட்டுமக்களுக்கு பிரதமர் இன்று விளக்கமளிக்கிறார்


.4-பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிராக மேற்கு வங்கத்தில் நாளை பந்த்


.5-நாடு முழுவதும் ஒரு வார போராட்டம்: இடதுசாரி கட்சிகள் அறிவிப்பு


.6-பெட்ரோல் விலை உயர்வை கைவிடக் கோரி தமிழகத்தில் 7-ல் வேலைநிறுத்தம்: இடதுசாரிகள் அறிவிப்பு


.7-பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க விற்பனை வரியை தமிழக அரசு குறைக்க வேண்டும்: ஜெயலலிதா வேண்டுகோள்


.8-உறுதி அளித்தபடி கூட்டுறவு சங்கத் தேர்தல்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு


.9-3 தீவிரவாதிகள் காஷ்மீரில் சுட்டுக் கொலை


.10-லஞ்சப் புகார்: அசாம் அமைச்சருக்கு சிபிஐ காவல்


.11-பாகிஸ்தானுக்கு எஃப் 16 ரக போர் விமானங்கள்: அமெரிக்கா அறிவிப்பு


.12-அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக ஒபாமா தேர்வு


.13-மன்னர் ஞானேந்திரா மற்றொரு அரண்மனையில் தங்க அரசு அனுமதி


.கிரிக்கெட் வீரர் முகமது ஆசிப் விடுதலையாவதில் தாமதம்


.14மேல்மலையனூர் கோயிலில் மின்கம்பி அறுந்து விழுந்து 6 பக்தர்கள் பலி

mgandhi
05-06-2008, 07:01 PM
6-6-2008

1-தமிழ்நாட்டில் 7-ந் தேதி பொது வேலை நிறுத்தம்: கம்யூனிஸ்டுகள் அறிவிப்பு

2-ஊட்டி மலைப்பாதையில் பஸ் உருண்டது: 11 பேர் பலி

3-பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து இடதுசாரிகள் ஒரு வாரம் போராட்டம்

4-கம்யூனிஸ்டுகளுக்கு விஜயகாந்த் கண்டனம்

5-விலை உயர்வு நாடு மீது ஏவப்பட்ட பொருளாதார தீவிரவாதம்: பா.ஜனதா

6-ஐக்கிய முற்போக்கு கூட்டணி படுதோல்வியை சந்திப்பது நிச்சயம்: வைகோ

7-ஆந்திராவில் சிறை பிடிக்கப்பட்ட சென்னை மீனவர்கள் 106 பேர் மீட்பு

8-உயர்வால் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரிக்கும்

9-பெட்ரோல் மிக குறைந்த அளவில்தான் விலை உயர்த்தப்பட்டுள்ளது: மன்மோகன்சிங்


10-கேரளா, மே.வங்கம், திரிபுரா மாநிலங்களில் முழு அடைப்பு

mgandhi
06-06-2008, 06:11 PM
7-6-2008

1-குஜ்ஜார் இனத்தவர்கள் புது கோரிக்கை

2-ரிலையன்ஸ் பெட்ரோகெம் ஆலையில் வெடிவிபத்து : 3 பேர் பலி
.
3-அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த குஜ்ஜார் மக்கள் முடிவு

4-புதிய சட்டசபைக்கு 12ம் தேதி முதல்வர் அடிக்கல்

5-குன்னக்குடி வைத்தியநாதன் மயக்கம்

6-மீனாட்சி கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம்

7-புதுச்சேரியில் திடீர் பவர் கட்

8-நம்பிக்கை *கோரும் தீர்மானம்: பா.ஜ.க., அரசு வெற்றி

9-கொலை வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

10-திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் தீ விபத்து

11-பாங்காக் சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்றனர் பச்சன் குடும்பத்தினர்

12-நாளை பேருந்துகள் வழக்கம் போல் ஓடும் : தமிழக அரசு அறிவிப்பு

13-பணவீக்கம் உயர்வு : பிரதமர் பதவி விலக கோரி பா.ஜ., ஆர்ப்பாட்டம்

14-பொறியியல் கல்லூரிகளில் கட்டணம் உயர்வு : ராமதாஸ் கண்டனம்

15-இலங்கைக்கு பேட்டரிகள் கடத்திய இளைஞர் கைது

mgandhi
07-06-2008, 05:53 PM
8-6-2008


1-சென்னையில் அறக்கட்டளை அலுவலகம் சூறை

2-அமெரிக்காவில் சிருங்கேரி மடம் கிளை ரெடி: ஜூலையில் திறப்பு

3-மேட்டூர் அணை 12ம் தேதி திறப்பு

4-பீகாரில் லேசான நிலநடுக்கம்

5-காப்புரிமை பெறுகிறது திருப்பதி லட்டு

6-பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு : 5 பேர் பலி

7-ராமதாஸ்குற்றச்சாட்டுக்கு முதல்வர் கருணாநிதி மறுப்பு

8-போலி டாக்டர்கள் கைது

9-கான்பூரில் ஜூன் 27ம் தேதி பா.ஜ., பேரணி : அத்வானி பங்கேற்கிறார்

10-தமிழக முழுவதும் ஜூன் 12ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் : டி.ராஜேந்தர் அறிவிப்பு
.
11-தமிழ்நாட்டில் நதிகள் இணைக்கப்படும் : துரை முருகன்

12-ஆண்டர்சன் பந்துவீச்சில் திணறியது நியூசிலாந்து

13-பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: பைனலில் இவானோவிச் - சபினா இன்று மோதல்

14-இலங்கை அகதிகளை சந்தித்தார் வைகோ
.
15-வங்கதேச முத்தரப்பு: ஸ்ரீசாந்துக்கு பதிலாக கோனி சேர்க்கப்பட்டுள்ளார்

16பெட்ரோல் விலை உயர்வை மறுபரீசிலிக்கும் எண்ணம் இல்லை : முரளி தியோரா

17மும்பையில் மழை : ஒருவர் பலி


18-பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் : பட்டம் வென்றார் இவனோவிக்

mgandhi
08-06-2008, 06:53 PM
9-6-2008

1-நிர்ப்பிரச்னைகளில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்: துரைமுருகன்

2-மத்திய எரிவாயு நிறுவனத்துடன் டிட்கோ ஒப்பந்தம்

3-புதிய சட்டமன்ற கட்டிடம்: கருணாநிதி 12-ந் தேதி அடிக்கல் நாட்டுகிறார்

4-கூடுதல் கட்டணம் வசூலிக்கும் என்ஜினீயரிங் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து: பொன்முடி

5-பெட்ரோலிய பொருட்கள் மீதான வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்: வைகோ

6-மாயாவதி - முலாயம் திடீர் சந்திப்பு

7-அரசுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: குஜ்ஜார் தலைவர்

8-பிரதமர் மன்மோகன்சிங் பதவி விலக வேண்டும்: பா.ஜனதா

9-ஒகேனக்கல் குடிநீர் திட்டம்: மத்திய மந்திரி விளக்கம்

10-முன்னாள் பிரதமர் வி.பி.சிங், மும்பை ஆஸ்பத்திரியில் அனுமதி

mgandhi
09-06-2008, 05:36 PM
10-6-2008


1-விழுப்புரம் கலெக்டர் மாற்றம்

2-பழநி ரோப்கார் 3 வாரத்தில் இயக்கப்படும்: அமைச்சர் தகவல்

3-டாக்டர்கள் கவுன்சிலிங் : ஐகோர்ட் உத்தரவு

4-புதிய கட்சி துவக்கினார் நடிகர் கார்த்திக்

5-தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல்

6-தொலைதொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் ஏவியது சீனா

7-தீவிரமடைகிறது என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட்டம்

8-சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்

9-புனேயில் பஸ் ஓடையில் கவிழ்ந்து விபத்து : 12 பேர் பலி

10-இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தும்: பயிற்சியாளர் லாசன்

11-சினிமாவில் புகை பிடிக்கும் காட்சி: அன்புமணிக்கு சரத் குமார் கண்டனம்

12-குஜ்ஜார்களுடன் பேச்சுவார்த்தை துவங்கியது

13-ஈரோடு மாவட்டத்தில் 10ம் *தேதி கடையடைப்பு

14-ஒகேனக்கல் திட்டம் நிறைவேறுமா ? சரத்குமார் சந்தேகம்

15-அணு ஆயுத பரவலுக்கு எதிரான 2 நாள் கருத்தரங்கு துவக்கம்

16-என்.எல்.சி., விவகாரம் : பிரதமர் தலையிட கோரி முதல்வர் கருணாநிதி கடிதம்

17-விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் விஷம் குடித்து ஒருவர் மரணம்

18-கனடா பார்முலா ஒன் கார் பந்தயம்: ராபர்ட் குபிகா முதலிடம்

19-தரவரிசை: இவானோவிச் முதலிடம்

20-சென்னையில் மோசர்பேர் தொழிற்சாலை : ஒப்பந்தம் கையெழுத்து

mgandhi
10-06-2008, 06:19 PM
11-6-2008



1-யூரோ கால்பந்து : ஸ்பெயின் அணி 41 கோல் கணக்கில் வெற்றி


2-முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா அபார வெற்றி

3-ரேஷனில் சமையல் எண்ணெய் தமிழகத்திற்கு ரூ.15 மானியம்


4-விவசாய காப்பீடு : சிதம்பரம் நடவடிக்கை


5-ஐ.ஆர்.டி.ஏ., இயக்குனராக ஹரிநாராயணன் நியமனம்


6-கொடைக்கானலில் ஆப்பிள் விளைச்சல் அமோகம்


7-மதுபான விற்பனை அதிகரிக்க அரசு முடிவு


8-தமிழக நீச்சல் வீரர் அக்னீஸ்வர்க்கு 1லட்சம் ஊக்கத் தொகை : தமிழக அரசு அறிவிப்பு


9-சாலைவிபத்தில் முவேந்தர் முன்னேற்றக் கழக முக்கிய பிரமுகர் பலி
என்.எல்.சி., விவகாரம் : பேச்சுவார்த்தை தோல்வி


10-பீகாரில் 5 மாவோயிஸ்ட்கள் கைது


11-ராஜஸ்தான் அரசு குஜ்ஜார்களுக்கு அழைப்பு


12-மேற்கு வங்கத்தில் கூர்கா இனத்தவர் தனி மாநிலம் கோரி போராட்டம்


13-முதல்வர் கருணாநிதியின் இலக்கிய படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு


14-நடிகை பிரியாமணிக்கு தேசிய விருது


15-உ.பி., அமைச்சர் ஜமுனாநிஷாத் கைது


16-டென்னிஸ் தரவரிசை: பெடரர் முதலிடம்

mgandhi
12-06-2008, 06:50 PM
13-6-2008

1-யூரோ கால்பந்து : குரோஷியா வெற்றி


2-அணுசக்தி ஒப்பந்தம் : யெச்சூரி கருத்து



3-குஜ்ஜார் பேச்சு மீண்டும் ஆரம்பம்



4-முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் : இந்தியா 7விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி


5-வாட்வரியை அதிரடியாக குறைத்தது பஞ்சாப்


6-ஆகஸ்டில் வாக்காளர் பட்டியல் : நரேஷ் குப்தா


7-ஜலந்தரில் ஹெராயின் பறிமுதல் : 2 பேர் கைது


8-பாகிஸ்தான் சிறையில் இருந்து இந்திய மீனவர்கள் விரைவில் விடுதலை


9-பாசனத்திற்காக மேட்டூர் அணை திறக்கப்பட்டது


10-மா.கம்யூ., கோவிந்தசாமி பதவி நீக்கம்


11-மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் கேபிள் இணைப்பு: மு.க.அழகிரி அறிவிப்பு

12-குஜ்ஜார் பெண்கள் 25 பேர் ஜாமீனில் விடுதலை


13-நெல்லுக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.850 ஆக உயர்வு


14-யூரோ கால்பந்து: குரோஷியா-ஜெர்மனி, ஆஸ்திரியா-போலந்து அணிகள் மோதல்


15-அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட இந்தியாவிற்கு அமெரிக்கா வேண்டுகோள்

16-தசாவதாரத்துக்கு எதிரான வழக்கு: தள்ளுபடி செய்தது சுப்ரீம் கோர்ட்

இளசு
12-06-2008, 07:07 PM
அவசர வாழ்க்கையில் துரிதமாய் செய்திகள் அறிய ஏதுவாய்....

இப்பதிவைத் தொடரும் அன்பர் காந்தி அவர்களுக்கு என் நன்றி!

mgandhi
12-06-2008, 07:32 PM
அவசர வாழ்க்கையில் துரிதமாய் செய்திகள் அறிய ஏதுவாய்....

இப்பதிவைத் தொடரும் அன்பர் காந்தி அவர்களுக்கு என் நன்றி!

மிக்க நன்றி இளசு

mgandhi
14-06-2008, 07:00 PM
15-6-2008

1-தெற்காசிய கால்பந்து : மாலத்தீவு சாம்பியன்

2-வங்கதேச முத்தரப்பு தொடர் : கோப்பையை வென்றது பாகிஸ்தான்

3-பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வாய்ப்பில்லை :பிரணாப் முகர்ஜி

4-அஜ்மீரை தகர்ப்போம் : பயங்கரவாதிகள் மிரட்டல்

5-குஜராத்தில் பரவுகிறது ஆந்த்ராக்ஸ்


6-கூர்க்கா தனி மாநில கோரிக்கை ஏற்க முடியாது: காங்., அறிவிப்பு


7-சாதனை மாணவர்களுக்கு தமிழக அரசு "லேப்டாப்'


8-கிளாஸ்கோவில் தனது கிளையை அமைக்கிறது பாங்க் ஆப் இந்தியா


9-மும்பைஷாங்காய் புதிய தனியார் விமான சேவை துவக்கம்


10-நிதிநிறுவன மோசடியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் திரும்ப கிடைத்தது (அனுபவ் மற்றும் ஸ்நேகம் நிதி நிறுவனம்)

11-காரைக்கால் பாட்டாளி மக்கள் கட்சியிலிருந்து தேவமணி வெளியேற்றம்

12-பேச்சுவார்த்தை நடத்த தயார் : கூர்கா ஜன முக்தி மோர்சா அமைப்பினர்


13-தி.மு.க., மகளிர் அணி மாநாடு : பேரணி தொடங்கியது


14-லாலு சென்ற விமானத்தில் மோதியது பறவை : ப*யணிகள் பத்திரம்

15-யூரோ கால்பந்து: சுவீடன்ஸ்பெயின், கிரீஸ்ரஷ்யா அணிகள் இன்று மோதல்

16-தஞ்சை தமிழ் பல்கலைகழகத்துக்கு புதிய து*ணைவேந்தர்

17-நிலச்சரிவு : 11 பேர் பலி


18-கடலூர் தி.மு.க., மகளிர் அணி மாநாடு : கொடியேற்றத்துடன் தொடங்கியது


19-ரிசர்வ் வங்கிக்கு எதிராக பொதுநல வழக்கு

mgandhi
15-06-2008, 07:32 PM
16-6-2008


1-தங்க ரத பக்தர்களுக்கு புதிய முறையில் பிரசாதம்


2-தமிழகத்தில் காஸ் விலை ரூ. 30 குறைப்பு : கடலூர் மாநாட்டில் கருணாநிதி அறிவிப்பு


3-இந்திய எல்லையில் மீன் பிடித்த சிங்கள மீனவர்கள் 10 பேர் கைது


4-20 நாட்களுக்குப் பின் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியை எட்டியது


5-காணாமல் போனதாக கருதப்பட்ட கர்நாடக பா.ஜ.க., எம்.எல்.ஏ., மனைவி தற்கொலை


6-சந்தோஷ் டிரோபி கால்பந்து : கோப்பையை வென்றது பஞ்சாப்


7-மகளிர் இடஒதுக்கீடு மசோதா : விரைவுபடுத்த அ.தி.மு.க., கோரிக்கை


8-18 இலங்கை அகதிகள் தமிழகம் வருகை


9-பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க யோசனை : சுப்பிரமணியசாமி பேட்டி


10-சென்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1,500 பேர் கைது


11-தி.மு.க., மகளிர் அணி மாநாடு 2வது நாள் : தலைவர்கள் படம் திறப்பு !


12-உத்திரபிரதேசத்தில் மின்னல் தாக்கி 6 பேர் பலி


13-டில்லியில் பருவமழை தொடங்கியது


14-பிரதமருக்கு கேடராக்ட் அறுவை சிகிச்சை நடந்தது


15-திருத்தியமைக்கப்பட்ட ஊதிய வரம்பு : கிரீமி லேயர் பிரச்னை முடிவுக்கு வருமா ?

16-தேர்தல் பிரசாரத்துக்கு நூதன யுக்தி : பா.ஜ., அறிவிப்பு


17-நிதி அமைச்சர் பதவி விலக வேண்டியதில்லை : காங்., அறிவிப்பு


18-தண்டவாளத்தில் விரிசல் : மைசூர் எக்ஸ்பிரஸ் தப்பியது


19-ஒகேனக்கல் திட்டம் குறித்து தமிழக அரசுடன் பேசத் தயார் : கர்நாடக அரசு அறிவிப்பு


20-கர்நாடக ராஜ்யசபா தேர்தல் : ம.ஜ.த.,காங்.,பேச்சுவார்த்தை

mgandhi
16-06-2008, 06:11 PM
17-6-2008


1*அமைதிக்கான தேசிய விருது பெறுகிறார் பிரசந்தா


2*சத்தியமங்கலத்தில் யானைகள் அட்டகாசம் : ஒருவர் பலி


3*இறங்கி வந்தன தனியார் இன்ஜி., கல்லூரிகள்


4*பா.ம.க., உடனான கூட்டணி : தி.மு.க., நாளை முடிவு


5*கோடநாட்டில் ஜெ., சுப்பிரமணிய சாமி சந்திப்பு


6*நாளிதழ் விளம்பர தூதராக தோனி


7*விம்பிள்டனில் பெடரரை தோற்கடிப்பேன்: நாடல்


8*பா.ம.க., உயர்நிலை குழு கூட்டம் : ராமதாஸ் தன்னிலை விளக்கம்


9*கடலூர் மாநாடு தி.மு.க., பெருமைக்கு எடுத்துக்காட்டு : கருணாநிதி


10*கர்நாடகாவில் ராஜ்யசபா தேர்தலுக்கு காங்., வேட்பாளர் எஸ்.எம்.கிருஷ்ணா


11*வெள்ளித்திரையில் வீரப்பன் : ராம்கோபால்வர்மா அதிரடி


12*சபாநாயகர் தலைமையிலான 6 பார்லி., உறுப்பினர்கள் பல்கேரியா பயணம்


13*வேலைவாய்ப்பு அலுவலகம் சிறப்பு முகாம் : 5 நாட்கள் செயல்படும்


14*பேச்சுவார்த்தைக்காக ஜெய்ப்பூர் வந்தடைந்தார் பாயின்சாலா



15*நெல்லையில் பூட்டிய வீட்டிலிருந்து 250 பவுன் நகை கொள்ளை


16*நெல்லையில் பார்வையற்றோர் பள்ளி பழைய மாணவர்கள் உண்ணாவிரதம்

17*டெல்டா பாசனத்துக்காக கல்லணை திறக்கப்பட்டது


18*சென்னையில் ஓடும் காரில் தீ: ஒருவர் பலி


19*திருவண்ணாமலை மாவட்டத்தில் 895 பேர் மீது சாராய வழக்கு


20*பசுபதீஸ்வரர் கோவில் நந்திக்கு அபிஷேகம்

mgandhi
17-06-2008, 06:23 PM
18-6-2008

1-.கூட்டணியிருந்து பாமக நீக்கம்: திமுக முடிவு


.2-கடலூர் மகளிர் மாநாடு: முதல்வர் கடிதம்


.3-பாஜக சதி செய்கிறது: திருமாவளவன்


.4-திமுக முடிவு: மார்க்சிஸ்ட் நாளை அறிவிப்பு


.5-இலங்கை சமூக சேவகி மரணம்: கருணாநிதி இரங்கல்


.6-மத்திய அரசுக்கு ஆதரவு போதும்: இடதுசாரிகள் பரிசீலிக்க வேண்டும்- தாஸ் குப்தா


.7-பாகிஸ்தானின் எதிர்ப்புக்கு இடையே சியாச்சின் மலையேற்றப் போட்டி


.8-நெல் விலை போதுமானதல்ல: தமிழக விவசாயிகள் சங்கம்


.9-சாவு: சிபிஐ விசாரணை தேவையில்லை- கர்நாடக அமைச்சர் ஆச்சார்யா


.10-பேருந்து கட்டணம் உயராது: நேரு


.11-2,000 திருட்டு சிடிக்கள் பறிமுதல்: 4 பேர் கைது


.12-கல்லூரி பேருந்து கவிழ்ந்து மாணவர்கள் படுகாயம்

mgandhi
18-06-2008, 05:50 PM
19-6-2008


1-தேசிய தடகளப்போட்டி : ஜார்க்கண்ட் அணி சாம்பியன்


2-தேரோட்டம் நிறுத்தம்: 144 தடை உத்தரவு


3-உதவி கமிஷனர்கள் மாற்றம்


4-சென்னை திரும்பினார் அமைச்சர் ஸ்டாலின்


4-பழநி கோவிலில் அன்னாபிஷேகம்


6-திண்டுக்கல் அருகே சாக்குமூடையில் பெண் பிணம்


7-அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக எவ்வித மாற்று கருத்துமில்லை : பரதன்


8-ஆர்டினா ஓபன் டென்னிஸ் : சானியா , போபன்னா தோல்வி


9-அசாம் மற்றும் ஒரிசாவில் வெள்ளம்: பலர் வீடுகளை இழந்து தவிப்பு



10-காஞ்சிபுரத்தில் ஒரு கோடி மதிப்புள்ள திருட்டு பொருட்கள் கண்டுபிடிப்பு


11-ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்திற்கான திட்ட அலுவலகம் திறப்பு


12-அணுசக்தி ஒப்பந்த விவகாரம்: உயர்மட்டக் குழு பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு


13-பா.ம.க பொதுக்குழு கூட்டம் சென்னையில் நாளை மறுதினம் கூடுகிறது
சோனாபட்டில் சாலை விபத்து: 3 பேர் பலி


14-உலக பயிற்சி மையம் அமைகிறது ரயில்வே துறை


15-நெல்லையில் ஆனி தேரோட்டம் இனிதே நடைபெற்றது
.
16- தி.மு.க., முடிவால் கவலையில்லை : பா.ம.க.,


17-மதுரை மருத்துவக் கல்லூரி ரூ.40 கோடியில் நவீனமயம்


18-தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தேர்தல் : ஏ.சி.முத்தையா மீண்டும் போட்டி

mgandhi
20-06-2008, 05:23 PM
21-6-2008



1-மீனாட்சி அம்மனுக்கு வெள்ளி ஊஞ்சல் காணிக்கை

2-வடமாநில ரயில்கள் 24ம் தேதி வரை ரத்து

3-சென்குப்தா காலமானார் "வர்த்தமான்' வங்காளி பத்திரிகை ஆசிரியர் வருண் சென்குப்தா

4-மும்பையில் கடும் மோதல் : போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி

5-திருச்சி மதுரை ரயில் பாதை விரைவில் மின்மயம் :தென்னக ரயில்வே பொதுமேலாளர் தகவல்

5-நாசிக்கில் நீண்ட மின்தடை

6-அமர்நாத் புனிதயாத்திரை மீண்டும் துவங்கியது


7-கோவையில் வறண்ட கிணற்றிலிருந்து சிறுமி உடல் கண்டுபிடிப்பு


8-ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தொடரும்: கராத் அறிக்கை


9-தி.மு.க., மீது பா.ம.க., மீண்டும் குற்றச்சாட்டு : பொதுக்குழுவில் தீர்மானம்


10-நாட்டின் பணவீக்கம் 11.05 %ஆக உயர்வு
.

11-ராமேஸ்வரத்தில் போதை பொருள் வைத்திருந்தவர் கைது


12-வருத்தம் தெரிவித்தால் பா.ம.க.,வுடன் மீண்டும் கூட்டணி : கருணாநிதி உறுதி


13-நீதிபதிகளிடம் விசாரணை நடத்த தலைமை நீதிபதியிடம் அனுமதி


14-குழந்தை வரம் வேண்டி 108 தம்பதிகள் சிறப்பு பூஜை

15-விலை உயர்வு


16-போலீஸ் அதிகாரிகள் இருவருக்கு வாரன்ட் வழக்கில் சாட்சி சொல்ல கோர்ட்டில் ஆஜராகாத போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இருவருக்கு "வாரன்ட்' பிறப்பிக்கப்பட்டது

mgandhi
21-06-2008, 05:32 PM
22-6-2008

1-மதுரை அருகே (பரவை அருகே கொண்டமாரி பாலம் ரயில்வே தண்டவாளத்தில் )தண்டவாளத்தில் விரிசல்


2-சேது கப்பல் அதிகாரி சாவு (கோல்கட்டா பாலிஜீசி பகுதியைச் சேர்ந்த ஆஸிசிஸ் ஜேட்டர்ஜி(59)


3-சென்னைப் பல்கலையில் 7,000 "சீட்' அதிகரிப்பு


4-வடமாநிலங்களுக்கு செல்லும் ரயில்கள் அதிரடி ரத்து (சென்னையில் இருந்து கோல்கட்டா செல்லும் அனைத்து ரயில்களும் இந்த மாதக் கடைசி வரை ரத்து )


5-தர்மபுரி அருகே மீண்டும் விஷச்சாராயம் : ஒருவர் பலி


6-மத்திய அரசுடனான ஆதரவு வாபஸ் : மாயாவதி


7-அணையில் பொக்லைன் இயந்திரம் மூழ்கி ஒருவர் பலி


8-தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு : இருவர் படுகாயம்


9-ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம்


10-கூர்கா இனத்தவர் ஒத்துழையாமை போராட்டம் : நம்பர் பிளேட்டில் வித்தியாசம்
.

11-நவம்பர் மாதம் லோக்சபா தேர்தல் : பா.ஜ., எதிர்பார்ப்பு


12-அணுசக்தி ஒப்பந்தம் : பிரதமரை சந்தித்தார் பிரணாப் முகர்ஜி


13-அணுசக்தி ஒப்பந்த விவகாரம் : கருணாநிதியிடம் ராஜா பேச்சு


14-அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதில் சோனியா உறுதி : தாஸ்முன்ஷி


15பிரணாப்பின் ஆஸ்திரேலிய பயணம் தள்ளி வைப்பு


16-பெங்களூருவில் 6 தீவிரவாதிகள் கைது (உல்பா தீவிரவாதிகள் )


17-சென்னையில் இரவு முழுவதும் போலீஸ் சோதனை

mgandhi
22-06-2008, 05:22 PM
23-6-2008

1-காதல் திருமணத்துக்கு வழிவிடவேண்டும்: முதல்வர் கருணாநிதி


2-மத்திய, மாநில அரசுகள் மீது மக்கள் வெறுப்பு: வைகோ


3-விடுதலைப் புலிகள் ஆதரவு கட்சியுடன் பேச்சு நடத்த இந்தியா சம்மதம்


4-இடதுசாரி தலைவர்களுக்கு கொலை மிரட்டல் கடிதம்


5-என்எல்சி ஊழியர்களுக்கு போனஸ் குறித்த பேச்சுவார்த்தை 25-ல் துவக்கம்


6-அணுசக்தி ஒப்பந்தம்: ஐமுகூ- இடதுசாரிகள் கூட்டம் ஒத்திவைப்பு?


7-ஸ்ரீநகரில் தீவிரவாதி சுட்டுக் கொலை


8-விஷச்சாராயம் வழக்கு: ஏடிஜிபி நேரில் விசாரணை


9-'இந்திய மாணவர்கள் உலகிலேயே சிறந்தவர்கள்': ஆக்ஸ்போர்டு பல்கலை. பாராட்டு


10-கிரிக்கெட் வீரர் கிளன்மெக்கிராத் மனைவி காலமானார்


11-சென்னையில் இடி மின்னலுடன் மழை


12-தில்லி விரைகிறார் கருணாநிதி


13-காஷ்மீர் பிரிவினைவாத தலைவர்களுடன் பாகிஸ்தான் அரசு பேச்சு

அனுராகவன்
23-06-2008, 05:14 AM
நன்றி R.மோகன் காந்தி.

mgandhi
23-06-2008, 07:30 AM
நன்றி R.மோகன் காந்தி.

நன்றி அனு

mgandhi
23-06-2008, 05:27 PM
24-6-2008

1-முதல்வர் கருணாநிதியின் தில்லிப் பயணம் ரத்து


2-சொத்துவரி உயர்வு குறித்த விளக்கத்தை அரசாணையாக வெளியிட வேண்டும்: ஜெ. வலியுறுத்தல்


3-"ஒபெக்' நாடுகள் நினைத்தால் பெட்ரோல் விலை குறையும்: இந்தியா நம்பிக்கை


4-இராக்: பெண் மனிதவெடிகுண்டு தாக்குதலில்16 பேர் சாவு


5-மாயாவதி கட்சியுடன் கூட்டணி இல்லை: பாஜக திட்டவட்டம்


6-சூறாவளியில் சிக்கிய கப்பல்: 163 பேர் சடலங்கள் மீட்பு


7-இலங்கை மீனவர்கள் 28 பேரை விடுவிக்க இந்தியா முடிவு


8-பாதுகாப்பு அமைச்சரின் ஜப்பான் பயணம் ஒத்திவைப்பு


9-இந்தியா-பாகிஸ்தான்-ஈரான் எரிவாயுக் குழாய் திட்டம் குறித்து அடுத்த மாதம் பேசத் திட்டம்


10-தேடப்படும் குற்றவாளிகளை நாடு கடத்த இந்தியா, ஆஸ்திரேலியா ஒப்பந்தம்


11-சுயநிதிக் கல்லூரி ஒதுக்கீட்டில் எந்த குழப்பமும் இல்லை: ராமதாஸýக்கு பொன்முடி பதில்


12-குப்பை இருப்பதாக கனவு காணுகிறார் ஜெயலலிதா: சுகாதாரத் துறை அமைச்சர்


13-சினிமா படப்பிடிப்பில் பயங்கரம்: லிஃப்ட் அறுந்து விழுந்து 2 தொழிலாளர்கள் சாவு


14-பாமகவினரை கைது செய்யும் திட்டம் இல்லை: ராமதாஸ் புகாருக்கு டிஜிபி மறுப்பு


15-"எல்லா டி.வி.யும் எனது டி.வி.தான்': கருணாநிதி


16-ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அட்டகாசம்


17-பாகிஸ்தான் சிறையில் இருக்கும் இந்தியர் சரப்ஜித் சிங்குக்கு மரண தண்டனை ரத்தாகாது

இளசு
23-06-2008, 06:07 PM
அனல் பறக்கும் செய்திகள்..
நன்றி காந்தி அவர்களே!

முதல்வரின் தலைநகர்ப் பயணம் - மிகவும் எதிர்பார்த்தேன்;ஏமாந்தேன்!

mgandhi
24-06-2008, 05:18 PM
அனல் பறக்கும் செய்திகள்..
நன்றி காந்தி அவர்களே!

முதல்வரின் தலைநகர்ப் பயணம் - மிகவும் எதிர்பார்த்தேன்;ஏமாந்தேன்!

நன்றி இளசு

mgandhi
24-06-2008, 05:30 PM
25-6-2008
1-கூடலூர் அருகே மண் சரிவு : மூன்று மாநில போக்குவரத்து துண்டிப்பு

2-பிரதமர் முடிவுக்கு காங்கிரஸ் ஆதரவு

3-ஹைடெக் ஆகிறது டில்லி ஐகோர்ட்
.
4-கல்லூரி ஆசிரியர்களுக்கு 26, 27ம் தேதி "கவுன்சிலிங்'

5-ஈரோட்டில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு திடீர் வாந்தி, மயக்கம்

6-பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம்

7-அரசியல்வாதிகள் தலையீட்டுக்கு கண்டனம் : மருத்துவர்கள் திடீர் ஸ்டிரைக்

8-தனியார் கல்விநிறுவனங்களில் அதிக கட்டண வசூல் : மாணவர் சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

9-டார்ஜிலிங்கில் நாளை முதல் மீண்டும் பந்த் : அத்தியாவசிய பொருட்கள் வா*ங்க கூட்டம்

10-வெள்ளி விழா கொண்டாட்டம் : லண்டன் சென்றது உலககோப்பை டீம்

11-தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தின் 200வது ஆண்டு விழா

12-அணுசக்தி ஒப்பந்த விவகாரம் : டில்லி செல்கிறார் கருணாநிதி

13-அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற கால அவகாசம் குறைகிறது : அமெரிக்கா

14மதுரையில் போஸ்ட் கார்டு மோசடி நிறுவன அதிபர் கைது

15-ஆஸ்திரேலிய பயணம் முடிந்தது : இந்தியாவுக்கு புறப்பட்டார் பிரணாப்

16-அணுசக்தி ஒப்பந்தத்தை அல்ல ஹைட் சட்டத்தையே எதிர்க்கிறோம் : அத்வானி

அனுராகவன்
25-06-2008, 05:15 AM
நன்றி R.மோகன் காந்தி.

mgandhi
25-06-2008, 08:06 AM
நன்றி R.மோகன் காந்தி.

நன்றி அனு

mgandhi
25-06-2008, 05:19 PM
26-6-2008

.1-'ஆந்திர ஜோதி' ஆசிரியர் கைது: பத்திரிகையாளர்கள் போராட்டம்


.2-அணுசக்தி ஒப்பந்தம்: சமாதான திட்டத்தை இடதுசாரிகள் நிராகரிப்பு


.3-அமிதாப்-அனில் அம்பானி கூட்டாக படம் தயாரிப்பு


.4-அணுசக்தி ஒப்பந்தம் நாட்டு நலனுக்கு எதிரானது: யஷ்வந்த் சின்ஹா


.5-சோம்நாத் சாட்டர்ஜிக்கு அறுவை சிகிச்சை


.6-குடியரசுத் தலைவருக்கு முதலாவது இ-பாஸ்போர்ட்: தில்லியில் அறிமுகம்


.7-அணுசக்தி ஒப்பந்தத்துக்கு சிவசேனை ஆதரவு


.8-10 ஆயிரம் போர்ட்டர்கள் கேங்-மேன்களாக நியமனம்


.9-பஞ்சாபில் சீக்கியர்கள் மறியல்: பல ரயில்கள் ரத்து


.10-விவசாய உரங்கள் பற்றாக்குறை: மத்திய அரசுக்கு பாஜக கண்டனம்


.11-பிகாரில் மாவோயிஸ்ட் தலைவர் கைது


.12-யுஏஇ-யில் பணிபுரிய தொழிலாளர்கள் விருப்பம்


.13-ரிசர்வ் வங்கி நடவடிக்கை பொருளாதார வளர்ச்சியை பாதிக்காது: நிதியமைச்சகம் தகவல்


.14-ராமேஸ்வரத்தில் 30-ல் இளைஞர் காங். செயற்குழு


.15-அணுசக்தி ஒப்பந்தம்: காரத்துடன் முலாயம் ஆலோசனை


.16-முஸ்லிம் லீக் தலைவர் பனாத்வாலா மறைவுக்கு முதல்வர் இரங்கல்


.17-கன்னடத்துக்கு செம்மொழி அந்தஸ்து: ஆகஸ்ட் 7-ம் தேதி முடிவு தெரியும்

mgandhi
27-06-2008, 05:38 PM
28-6-2008
1-முதல்வர் ரங்கசாமி மாற்றம் இல்லை

2-காம்பீருக்கு சிறந்த 2020 ஆட்டக்காரர் விருது

3-நெல்லையில் கார் விபத்து : 5 பேர் பலி

4-ஆசிரியர் பயிற்றுனர்கள் கவுன்சிலிங் தேதி மாற்றம்

5-அமெரிக்கன் கல்லூரி முதல்வர் சரண்

6-அந்தமானில் மிதமான நிலநடுக்கம்
.
7-ஆருசி கொலை வழக்கு : ராஜ்குமாரை கைது செய்தது சி.பி.ஐ.,

8-சென்னையில் கடும் நில அதிர்வு
.
9-போலி ஆவணங்களை தடுக்க புதிய அமெரிக்க தூதரகம் விரைவில் துவக்கம்

10-சென்னையில் ரூ.100 கோடி செலவில் சுற்றுச்சூழல் பூங்கா

1 1-புதுச்சேரி கலவரம்: முதல்வர் பதவி விலகியதாக வதந்தி

12-அண்ணா பல்கலைகழகத்தின் புதிய துணைவேந்தராக மன்னர் ஜவஹர் நியமனம்

13-டாக்டர் மீது தாக்குதலை கண்டித்து நெல்லையில் திடீர் ஆர்ப்பாட்டம்

14அமர்நாத் யாத்திரை மீண்டும் நிறுத்தி வைப்பு

15-பணவீக்கம் மேலும் உயர்ந்தது 11.42 சதவீதமாக

16-பங்கு சந்தையில் கடும் வீழ்ச்சி : 500 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்தது

17-இந்தியா பாகிஸ்தான் அமைதி பேச்சு

18-கடத்தப்பட்ட அருணாசல பிரதேச முன்னாள் முதல்வரின் மகன் விடுவிப்பு

19- எம்.பி.பி.எஸ்., ரேங்க் பட்டியல் 28ம் தேதி வெளியீடு

20- பீல்டு மார்ஷல் மானக்ஷா மரணம்

mgandhi
29-06-2008, 07:27 PM
30-6-2008

.செம்மொழி தமிழ் ஆய்வு மைய அலுவலகம் நாளை திறப்பு


.கிருஷ்ணகிரியில் அதிமுக ஆர்ப்பாட்டம்: ஜெ. அறிவிப்பு


.சார்க் மாநாட்டில் மன்மோகனை பாதுகாக்க இந்திய பாதுகாப்புப் படை


.ஜூலை 15 முதல் அரசு கேபிள் டி.வி.


.அந்தமானில் 3 முறை நில அதிர்வு


.மோசமான வானிலை: அமர்நாத் யாத்திரை நிறுத்திவைப்பு


.விலைவாசி உயர்வு: விழி பிதுங்கும் நடுத்தர வர்க்கம்


.கேரள பாடப் புத்தகத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தம்: எதிர்க்கட்சிகள் போர்க்கொடி


.இந்து கோயிலைப் பாதுகாக்க அணைத் திட்டத்தை நிறுத்த வேண்டும்: பாகிஸ்தான் எம்.எல்.ஏ.க்கள்


.ரூ. 1,500 கோடி முதலீட்டில் கோவையில் புதிய தொழிற்சாலை


.பாதசாரிகளின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும்: நரேஷ் குப்தா


.கர்நாடக திரைப்பட சங்கம்: தலைவராக ஜெயமாலா தேர்வு

mgandhi
30-06-2008, 05:47 PM
1-7-2008


1-நடராஜர் கோவிலில் ஆனித்திருமஞ்சன கொடியேற்றம்


2-பெட்ரோல் டீசல் வரத்து பாதிப்பு : வட மாவட்டங்களில் கடும் பாதிப்பு


3-மாமல்லபுரத்தில் தயாரான சிலைகள் மலேசியா பயணம்


4-அரசு கேபிள் டி.வி. விவகாரம் : தினகரன் நாளிதழுக்கு தமிழக அரசு மறுப்பு


5-சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு வரும் முக்கிய ரயில்கள் நேரம் மாற்றம்


6-400 கோடி ரூபாய் முதலீட்டில் திருநெல்வேலியில் டயர் தொழிற்சாலை


7-உணவு பிரச்னையை சமாளிக்க செயற்குழு : ஜி8 நாடுகள் முடிவு


. 8-டில்லி, பிசினஸ் லைன் பத்திரிகையாளர் மறைவு


9-ஆந்திராவில் மாவோயிஸ்ட்டு தாக்குதல் : 36 அதிரடிப்படை வீரர்கள் மாயம்


10-ஜம்முவில் இன்று பா.ஜ., சார்பில் பந்த்


11-நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த அத்வானி வலியுறுத்தல்


. 12-ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் தங்கதேர் பணி தீவிரம்


13-விஷச்சாராயம் விற்ற இருவர் கைது (மணப்பாறை: வையம்பட்டி )


14-காரைக்காலில் இருந்து டீசல் கடத்திய மூவர் கைது

15-படகு கவிழ்ந்து விபத்து மூவர் உயிருடன் மீட்பு (வேதாரண்யம்)

mgandhi
01-07-2008, 05:23 PM
2-7-2008

1-.இலங்கை ராணுவத்துக்கு இந்தியா பெரிய அளவில் உதவுகிறது: இலங்கை ராணுவத் தளபதி


2-.பன்னாட்டு போட்டியைச் சமாளிக்க இந்திய நிறுவனங்களுக்கு பிரதமர் யோசனை


3-.நிதிப் பற்றாக்குறை 2.5%-ஐ தாண்டாது: சிதம்பரம்


4-.அமர்நாத் பிரச்னை: ஜம்முவில் பந்த்; வன்முறையில் 30 பேர் காயம்


5-.சோனியாவைச் சந்தித்தார் லாலு அணு ஒப்பந்த விவகாரம்


6-.இந்திய ஏற்றுமதி வீழ்ச்சி


7-.பெட்ரோலியப் பொருள்களின் இறக்குமதி 49 சதவீதம் அதிகரிப்பு


8-.புஷ்ஷுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றுவதே பிரதமரின் ஒரே நோக்கம்: இடதுசாரிகள்


9-.மும்பையில் கனமழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு



10-.குற்றாலத்தில் ஐந்தருவியில் குளிக்க தடை



11-.ஜவுளி ஆலைகள் நாளை வேலை நிறுத்தம்


12-.வக்கீல்கள் நாளை முதல் மூன்று நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு

ராஜா
01-07-2008, 05:31 PM
நன்றி மோகன் காந்தியாரே..!

அனைவரும் சுகம்தானே..?

இளசு
01-07-2008, 05:34 PM
நன்றி காந்தி அவர்களே..

இன்றும் தொடரும் பெட்ரோல் தட்டுப்பாடு
லாரிகளின் வேலை நிறுத்தம் நள்ளிரவு தொடங்கி
கூடவே நெசவாலைகளும்...

ஏனிந்த கூட்டு நெருக்கடி?

mgandhi
01-07-2008, 05:42 PM
நன்றி மோகன் காந்தியாரே..!

அனைவரும் சுகம்தானே..?




நன்றி ராஜா
அனைவரும் நலம்
அங்கு அனைவரும் நலமா?

mgandhi
01-07-2008, 05:44 PM
நன்றி காந்தி அவர்களே..

இன்றும் தொடரும் பெட்ரோல் தட்டுப்பாடு
லாரிகளின் வேலை நிறுத்தம் நள்ளிரவு தொடங்கி
கூடவே நெசவாலைகளும்...

ஏனிந்த கூட்டு நெருக்கடி?

இதுதான் இந்தியா

mgandhi
02-07-2008, 05:35 PM
3-7-2008



1-ஆசிய கோப்பை கிரிக்கெட்: பாகிஸ்தான் 255/2

2-உ.பி.,யில் எல்லா தொகுதிகளிலும் பா.ஜ. போட்டி


3-லோக்சபா தேர்தல் இப்போது வராது ஆந்திர முதல்வர் கருத்து


4-ஈரோட்டில் வக்கீல்கள் ஸ்டிரைக்


5-அந்தியூர் வனப்பகுதியில் பெண் யானை பலி


6-தமிழகத்தில் ஜவுளி ஆலைகள் உரிமையாளர்கள் ஸ்டிரைக் : ரூ.2000 கோடி இழப்பு


7-லாரி ஸ்டிரைக்: ஜவுளி, மஞ்சள் பாதிப்பு


8-கிணற்றில் விஷவாயு தாக்கி 3பேர் பலி


9-லாரி உரிமையாளர்களின் கோரிக்கை பரிசீலனை


10-பிரணாப் சரத்பவார் சந்திப்பு


11-எய்ம்ஸ் இயக்குநர் வேணுகோபால் பதவிக்காலத்தை நீட்டிக்க ஐகோர்ட் மறுப்பு


12-சோம்நாத் சாட்டர்ஜியை பதவி விலக வைக்க கம்யூ., நடவடிக்கை


13-வடகிழக்கு மாநிலங்களுக்கு புதிய வளர்ச்சி திட்டங்கள் : பிரதமர் அறிவிப்பு


14-லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்த விவகாரம் : பேச்சுவார்த்தை தோல்வி


15-அமர்நாத் யாத்தி*ரைக்கு அடுத்த கட்ட குழு புறப்பட்டது


16-ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சமாஜ்வாடி கட்சி : வாய்ப்புகள் பிரகாசம்

பாலகன்
02-07-2008, 06:11 PM
சோதனை மேல் சோதனை இந்தியாவிற்கு போதும்மடா சாமின்னு பாட தோனுது........... விடுமுறையில் சென்னை வந்த எனக்கு மீன்டும் துபாய் ஞாபகம் வந்துவிட்டது.....................

என்று தணியும் இந்த இந்தியாவின் பிரச்சனைகள்...........

தகவலுக்கு நன்றி காந்தி

அன்புடன்
பில்லா

mgandhi
02-07-2008, 06:21 PM
சோதனை மேல் சோதனை இந்தியாவிற்கு போதும்மடா சாமின்னு பாட தோனுது........... விடுமுறையில் சென்னை வந்த எனக்கு மீன்டும் துபாய் ஞாபகம் வந்துவிட்டது.....................

என்று தணியும் இந்த இந்தியாவின் பிரச்சனைகள்...........

தகவலுக்கு நன்றி காந்தி

அன்புடன்
பில்லா

மிக்க நன்றி பில்லா

mgandhi
04-07-2008, 05:28 PM
5-7-2008

1-11வது ஐந்தாண்டு திட்டத்துக்கு 85 ஆயிரத்து 344 கோடி ரூபாய் ஒதுக்கீடுதமிழக அரசு முடிவு


2-சென்னை துறைமுகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

3-நாட்டின் நலன் கருதி அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க வேண்டும்முலாயம்சிங்கிற்கு, கலாம் யோசனை


4-கட்டுமானத் தொழில் பாதிப்புஅடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனை வீழ்ச்சி


5-ஏழரை லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் பறிமுதல்தொழிலதிபர் கைது


6-பெட்ரோல்டீசல் தட்டுப்பாடு தமிழ்நாட்டில் மட்டும் ஏற்பட காரணம் என்ன?ஜெயலலிதா கேள்வி


7-மத்திய அரசுக்கு 3வது அணி புதிய நிபந்தனை


8-பாரத் பந்த் : மோதலில் 4 பேர் பலி


9-ஆயிரம் தமிழக மீனவர்கள் கடத்தி சித்ரவதை : இலங்கை கடற்படை அட்டூழியம்


10-நவீனமயமாகும் சீன ராணுவம் : இந்திய ராணுவ தளபதி எச்சரிக்கை

.

mgandhi
05-07-2008, 05:36 PM
6-7-2008

1-76 ஏட்டுகளுக்கு எஸ்.ஐ.,யாக பதவி (தமிழ்நாடு சிறப்புக் காவல் படையில் பணிபுரியும் )


2-அனைத்து தொகுதியிலும் போட்டி : அத்வானி


3-ஆண்களுக்கு கருத்தடை ஊசி சோதனை பெரும் வெற்றி


4-காணாமல் போன மீனவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் : கருணாநிதி


5-நாய்க்கடிக்கு தோல் ஊசி மதுரையில் அறிமுகம்


6-இடதுசாரிகள், பா.ஜ., அச்சுறுத்துல்களுக்கு அஞ்ச மாட்டோம் : காங்கிரஸ் பதில்


7-சாம்மானெக்சாவுக்கு சென்னையில் அஞ்சலி : ஆளுநர், முப்படை தளபதிகள் பங்கேற்பு


8-தமிழகம் முழுவதும் தொடக்க கல்வி ஆசிரியர்கள் போராட்டம்


9-அணுசக்தி ஒப்பந்தத்தை புறக்கணித்தால் வரலாறு மன்னிக்காது : அனில்ககோட்கர்


10-காடுவெட்டி குரு கைது எதிரொலி : அரசு பஸ் சேதம்


11-முலாயம்சிங் வெளியேற வேண்டும் : சந்திரபாபு நாயுடு


12-அத்வானி, புஷ்ஷை விட அபாயகரமானவர் : அமர்சிங்


13-பா.ம.க,.வைசேர்ந்த காடுவெட்டி குரு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார்.


14-காஷ்மீரில் தொடர்கிறது ஊரடங்கு உத்தரவு


15-நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் : அத்வானி வலியுறுத்தல்


16-காஷ்மீரில் லஷ்கர் இ தொய்பா கமாண்டர் சுட்டுக்கொலை


17அருணாச்சலபிரதேசத்தில் நிலநடுக்கம்


18ராமேஸ்வரத்தில் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்


19ஆக., முதல் தேதி வேலூர் மாநகராட்சி துவக்க விழா

mgandhi
06-07-2008, 05:26 PM
7-7-2008

.1-காமராஜர் பிறந்த நாளுக்கு ரூ. 1.31 கோடி: கருணாநிதி உத்தரவு


.2-திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்: ராம.நாராயணன் வெற்றி


.3-அமர்நாத் கோயில் நிலப் பிரச்னை: மழை, ஊரடங்கை மீறி ஆயிரக்கணக்கானோர் ஜம்முவில் பேரணி


.4-5 ஹிந்து தலைவர்களுக்கு தொடர் சிறை: மலேசிய அமைச்சர்


.5-புஷ்ஷை விட அத்வானி ஆபத்தானவரா? அமர்சிங்குக்கு வெங்கைய்யா கண்டனம்


.6-அடுத்த மாதம் சென்னை உஸ்மான் சாலை மேம்பாலம் திறக்கப்படும்: ஸ்டாலின்


.7-மத்திய அரசுக்கு எதிராக "குற்றப் பத்திரிகை' தயாரிக்கும் இடதுசாரிகள்


.8-பெட்ரோல் விலை கட்டுப்படுத்த உலக நாடுகளிடம் மன்மோகன் வலியுறுத்தல்


.9-மும்பை ரயிலில் பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்: 2 அதிகாரிகள் சஸ்பெண்ட்


.10-தமுமுக ஆதரவுடன் புதிய கட்சி: செயற்குழுவில் தீர்மானம்


.11-மீன் பிடிக்கச் சென்று காணாமல் போன 7 பேரின் குடும்பங்களுக்கு நிதியுதவி


.12-அணுசக்தி ஒப்பந்தம்: சமாஜ்வாடி கட்சி ஆதரவு



.13-ஐந்தாவது முறையாக அமர்நாத் யாத்திரை ரத்து

mgandhi
07-07-2008, 05:37 PM
8-7-2008

1-குற்றாலத்தில் குறைந்த அளவு தண்ணீர்


2-அரியலூர் கோர்ட்டில் போலீசாருடன் பா. ம.க., வினர் மோதல் : தடியடி


3-பாட்னா எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து


4-ஜப்பானில் பிரதமர் மன்மோகன் சிங்


5-தண்டவாளத்தில் விரிசல் வைகை ரயில் தாமதம்


6-மதமாற்றத்திற்கு ஜாதிச்சண்டையே காரணம்:ராமகோபாலன் பேச்சு


7-அணுசக்தி விவகாரம்* : இடதுசாரிகளுடன் மத்திய அரசு மீண்டும் பேச்சு வார்த்தை


8-சென்னையில் 3000 கோடி ரூபாய் செலவில் சரக்கு வாகனம் தயாரிக்கும் தொழிற்சாலை


9-தமிழக காங்கிரஸ் புதிய தலைவர் அறிவிப்பு


10-மகாராஷ்டிரா போக்குவரத்து துறை அமைச்சர் ராஜினாமா
.

11-குலாம் நபி ஆசாத் ராஜினாமா : ஜம்முவில் கவிழ்ந்தது காங்கிரஸ்


12-காபூலில் நடந்த தற்கொலை படை தாக்குதல் கோழைத்தனமானது : வெளியுறவு துறை


13-அரியலூரில் ஆட்சியர் அலுவலகத்தில், அரசு ஊழியர் பிணம்


14-ஸ்ரீநகர் தலைமைசெயலகம் அருகே குண்டு வெடிப்பு ; ஒருவர் படுகாயம்



15-திருப்பூரில் முழு அடைப்பு : பஸ் தீ வைத்து எரிப்பு

.
16-அணுசக்தி நாட்டிற்கு மிகவும் முக்கியமானது: ஏ.கே. அந்தோணி


17-அலகாபாத்தில் சினிமா மேற்கூரை இடிந்து விழுந்தது: சுமார் 100 பேர் உயிர் தப்பினர்

பாலகன்
07-07-2008, 05:52 PM
நிலையில்லா வாழ்க்கையை படம்பிடித்து காட்டும் செய்திகள்

தகவலுக்கு நன்றி நண்பரே

அன்புடன்
பில்லா

mgandhi
07-07-2008, 05:58 PM
நிலையில்லா வாழ்க்கையை படம்பிடித்து காட்டும் செய்திகள்

தகவலுக்கு நன்றி நண்பரே

அன்புடன்
பில்லா

நன்றி பில்லா

ராஜா
08-07-2008, 01:39 PM
ஆதரவு வாபஸ்..!
நடுகால் பிடுங்கிய இடதுசாரிகள்..!

ஆட்சியை கவிழ விடமாட்டோம்..!
தோள் கொடுக்கும் முலாயம் சிங்..!

ஆகஸ்ட் 11க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு..!

ஆளும் காங்கிரஸ் அறிவிப்பு..!

பாலகன்
08-07-2008, 04:21 PM
ஆதரவு வாபஸ்..!
நடுகால் பிடுங்கிய இடதுசாரிகள்..!

ஆட்சியை கவிழ விடமாட்டோம்..!
தோள் கொடுக்கும் முலாயம் சிங்..!

ஆகஸ்ட் 11க்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு..!

ஆளும் காங்கிரஸ் அறிவிப்பு..!

எத்தனை நிறமுடையாள் நம் பாரத அன்னை

வாழ்துக்கள் ராசா

mathura
08-07-2008, 04:33 PM
தலைப்பு செய்திகள் அருமை.
இலங்கைக்கு செல்லும் இந்திய கிரிகெட் அணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு தோனி கேட்டுகொண்டுள்ளார். இந்திய கிரிகெட் வாரியம் இதை வரவேற்றுள்ளது

mgandhi
08-07-2008, 05:26 PM
நன்றி ராஜா

பில்லா

மதுரா

mgandhi
08-07-2008, 05:26 PM
9-7-2008

.1-மத்திய அரசுக்கு புதிய சிக்கல்: முலாயம் கட்சியில் குழப்பம்?


.2-ஆதரவு வாபஸ்: இடதுசாரிகள் அறிவிப்பு


.3-இடதுசாரிகள் முடிவு: கருணாநிதி வருத்தம்


.4-காபூலில் பலியான 4 இந்தியர் உடல்கள் தில்லி வந்தன


.5-புதுவை மருத்துவக் கல்லூரி விஜயகாந்த் குடும்பத்துக்குச் சொந்தம்: பொன்முடி விளக்கம்


.6-மத்திய அரசுக்கு ஆபத்தில்லை: மன்மோகன் சிங் கருத்து


.7-மீனவர்கள் தாக்கப்படுவதைத் தடுக்க அனைத்துக் கட்சிக் குழு: ராமதாஸ்


.8-காடுவெட்டி குரு கைது: ஆர்ப்பாட்டத்தில் தடியடிக்கு நெடுமாறன் கண்டனம்


.9-பாரதியார் பல்கலை. துணைவேந்தருக்கு இந்து மக்கள் கட்சி கண்டனம்


.10-இலங்கை டெஸ்ட்: தோனி முடிவுக்கு பிசிசிஐ வரவேற்பு


.11-நாசா நடத்திய போட்டியில் தமிழக மாணவர்கள் இரண்டாம் இடம்


.12-மலேசியாவில் இறந்த ஹிந்துவின் உடல் முஸ்லிம் வழக்கப்படி அடக்கம்


.13-அணுசக்தி ஒப்பந்தம்: சர்வதேச ஏஜென்சி விரைவில் ஒப்புதல்


.14-இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம்: "மத்திய அரசுக்கு ஆதரவு; முலாயம் பேட்டி

mgandhi
09-07-2008, 05:17 PM
10-7-2008

1-காங்., அணியுடன் கூட்டணி : ராமதாஸ்


2-ஜனாதிபதியை நாளை சந்திக்கிறார் மன்மோகன் சிங்


3-இன்ஜினியரிங் கவுன்சிலிங் முறைகேடு தடுக்க புது முறை


4-காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை கூடுகிறது


5-இந்தியா புறப்பட்டார் மன்மோகன் சிங்


6-ஐ.மு.கூ., க்கு ஆதரவு : எல்.கணேசன் அறிவிப்பு


7-அமர்நாத் *கோவிலுக்கு 21வது யாத்திரிகர்கள் குழு புறப்பட்டது


8-காங்கிரஸ் கட்சிக்கு புதிய நிர்வாகிகள் : தங்கபாலு அறிவிப்பு


9-சமாஜ்வாடி கட்சி சந்தர்ப்பவாத அரசியலுக்கு கலாமை பயன்படுத்துகிறது : பா.ஜ., குற்றச்சாட்டு


10-பார்லிமென்ட்டில் பெரும்பான்மையை நிரூபிப்போம் : சிதம்பரம் பேட்டி


11-ரிசர்வ் வங்கி கவர்னர் முதல்வர் கருணாநிதி சந்திப்பு


12-சமாஜ்வாடி கட்சியினர் காங்கிரசுக்கு ஆதரவு : ஜனாதிபதியிடம் கடிதம்



13-இடதுசாரிகள் ஜனாதிபதியை சந்தித்து வாபஸ் கடிதத்தை அளித்தனர்


14-ஆதரவை திரட்டுவதை தவிர்த்து தேர்தலில் களமிறங்குங்கள் : காங்கிரசுக்கு சிவ்சேனா யோசனை


15-பஞ்சு விலை உயர்வை கண்டித்து நாடு முழுவதும் நூற்பாலைகள் வேலைநிறுத்தம்






.

பாலகன்
09-07-2008, 05:23 PM
என் இந்தியாவே.............

நன்றி காந்தி

பில்லா

mgandhi
09-07-2008, 05:48 PM
என் இந்தியாவே.............

நன்றி காந்தி

பில்லா

நன்றி பில்லா

mgandhi
10-07-2008, 07:05 PM
11-7-2008

1-ராமேசுவரம்: மீனவர்களுக்கு ஆதரவாக வர்த்தக சங்கங்கள் கடையடைப்பு


.2-மக்களவைத் தலைவர் பதவியை சோம்நாத் சாட்டர்ஜி ராஜினாமா செய்ய வாய்ப்பில்லை


.3-தமிழகத்தில் 8 மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு: ஜெ. குற்றச்சாட்டு



.4-காடுவெட்டி குரு தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் கைது


.5-கேரளாவில் பேருந்து கட்டணங்கள் உயர்வு


.6-மன்மோகன் சிங்கை சந்தித்தார் பிரணாப்


.7-இந்திய தூதரகம் தாக்கப்பட்டதில் வெளிநாட்டவர்களின் பங்கு இல்லை: யுஎஸ்


.8-டிவி அலுவலகத்துக்கு போலி வெடிகுண்டு பார்சல்: குற்றப் பிரிவுக்கு வழக்கு மாற்றம்


.9-ஒப்பந்தம் செய்துகொள்வதில் சிக்கல் இருக்காது: இந்தியா


.10-தொடர்ந்து ஏவுகணை சோதனை செய்யும் ஈரான்


.11-துவண்டுவிட மாட்டோம்: ராமதாஸ்


.12-நம்பிக்கைத் துரோகம்: மத்திய அரசு மீது இடதுசாரிகள் புகார்


.13-பிரதமருக்கு புஷ் பாராட்டு

arun
10-07-2008, 09:00 PM
ஜெயலலிதா -தினமும் ஏதேனும் அறிக்கை என்ற பெயரில் ஏதேனும் சொல்ல வேண்டும்

ராமதாஸ் -பாவம் கூட்டணியில் இருக்கும்போது தினமும் பேசியவர் இப்போது பேச தயங்குவதை போல தெரிகிறது

காடுவெட்டிகுரு- எதிர்பார்த்த ஒன்று தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

செய்திகளின் பகிர்வுக்கு நன்றி காந்தி

mgandhi
11-07-2008, 01:31 PM
ஜெயலலிதா -தினமும் ஏதேனும் அறிக்கை என்ற பெயரில் ஏதேனும் சொல்ல வேண்டும்

ராமதாஸ் -பாவம் கூட்டணியில் இருக்கும்போது தினமும் பேசியவர் இப்போது பேச தயங்குவதை போல தெரிகிறது

காடுவெட்டிகுரு- எதிர்பார்த்த ஒன்று தான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

செய்திகளின் பகிர்வுக்கு நன்றி காந்தி

நன்றி அருன்

mgandhi
11-07-2008, 05:41 PM
12-7-2008

1-வரும் 22 ம் தேதி பார்லி.,யில் நம்பிக்கை ஓட்டெடுப்பு கோருகிறார்


2-சென்னையில் நரேந்திர மோடிக்கு எதிராக போராட்டம்


3-கருணாநிதி மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதி


4-ஈரோட்டில் சாலை விபத்து தாய் மகள் பலி


5-சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் எலும்புக்கூடுகள்


6-ஆருஷி கொலை வழக்கு : ராஜேஷ் தல்வார் விடுதலை


7-அணுசக்தி ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரள சட்டசபையில் தீர்மானம்


8-குஜராத்தில் லேசான நில அதிர்வு

.
9-குழந்தைகளுக்கான இதய அறுவைசிகிச்சை : அப்பல்லோஸ்டெர்லைட் நிறுவனம் ஒப்பந்தம்


10-முலாயம் சிங், பிரதமர் சந்திப்பு


11-ஜெயலிலதா பாதுகாப்பு குறித்த வழக்கு : ஜூலை 15ம் தேதிக்கு ஒத்தி வைப்பு



12-இந்தியாவின் மதிப்பு மிக்க ஐ.டி., நிறுவனங்களில் இன்போசிஸ் முதலிடம்


13-இடதுசாரிகள் எதிரியில்லை : லாலுபிரசாத் யாதவ்


14-ஜம்முவில் கண்ணிவெடிகள் கண்டுபிடிப்பு


15-நம்பிக்கை ஓட்டெடுப்பை சந்திக்க தயார்: பிரணாப்


16-பணவீக்கம் உயர்வு : 11.89 சதவீதத்தை எட்டியது
.


17-நம்பிக்கை வாக்கெடுப்பிற்கு தயார் : மன்மோகன்சிங்

mgandhi
13-07-2008, 05:03 PM
14-7-2008

.1-நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசுக்கு ஆதரவு: ராமதாஸ்


.2-மீது இலங்கை கடற்படைத் தாக்குதல்: ஜெ. கண்டனம்


.3-"பருத்தி வீரன்' படத்துக்கு 6 பிலிம்பேர் விருதுகள்


.4-கிரானைட் குவாரியில் வெடிபொருட்கள் பறிமுதல்


.5-தேர்தலுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணிக்கு ஆதரவு அளிக்கத் தயங்க மாட்டோம்: மார்க்சிஸ்ட்



.6-திருநாவுக்கரசரின் 60-வது பிறந்தநாள்: கருணாநிதி, வாஜ்பாய் வாழ்த்து


.7-சரத்குமார் பிறந்தாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்


.8-மாயாவதி வழக்கில் அரசியல் உள்நோக்கம் இல்லை: சிபிஐ


.9-அணுசக்தி ஒப்பந்தம் மின்னாற்றலை வலுப்படுத்தவே: அனில் ககோட்கர்


.10-மாயாவதியை சந்தித்தார் காரத்


.11-மோடிக்கு விசா வழங்கக்கூடாது: அமெரிக்க சட்டதுறை நிபுணர்


.12-ஆப்கன் தற்கொலை படைத் தாக்குதலில் 15 பேர் பலி


.13-முதுமலையில் "நியுட்ரினோ' ஆய்வகம் அமைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு


.14-மக்களை திசைதிருப்பவே அணுசக்தி ஒப்பந்தம்: பாஜக குற்றச்சாட்டு


.15-தமிழக மீனவர்கள் சுட்டுக் கொலை: காங்கிரஸ் கடும் கண்டனம்

பாலகன்
13-07-2008, 05:08 PM
சரத்குமார் பிறந்தாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

மோதிரத்திற்கு ஆசைபட்டு இன்னும் நிறைய பெத்துக்க போறாங்க ஏழை சனங்க

தகவலுக்கு நன்றி காந்தி

mgandhi
13-07-2008, 05:22 PM
சரத்குமார் பிறந்தாளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

மோதிரத்திற்கு ஆசைபட்டு இன்னும் நிறைய பெத்துக்க போறாங்க ஏழை சனங்க

தகவலுக்கு நன்றி காந்தி

மிக்க நன்றி மணவாளன்

mgandhi
14-07-2008, 05:28 PM
15-7-2008

1-ஆசிய கோப்பை ஜூனியர் ஹாக்கி: அரையிறுதியில் இந்தியாபாக்.,


2-செயற்கை கருத்தரிப்பு முறை: கிடுக்கிப்பிடி சட்டம் வருது


3-டெலிபோன் டேப் விவகாரம் : கமிஷன் அறிக்கை தாக்கல்


4-திருவாரூர்சற்குணேஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம்


5-ஈரோட்டில் கென்ய நாட்டு பெண் மானபங்கம்


6-இலங்கை தொடருக்கு வீரர்கள் தயார்: கிறிஸ்டன் மகிழ்ச்சி


7-பிரச்னையை திசை திருப்புகிறது காங்கிரஸ்: பா.ஜ., குற்றச்சாட்டு


8-காங்கிரசுக்கு அமர்சிங் நிபந்தனை


9-தமிழகத்தில் மூன்றாவது அணிக்கு வாய்ப்பு: சரத்குமார் அறிவிப்பு


10-இந்திய அணி நாளை இலங்கை செல்கிறது


11-ஐ.மு.கூட்டணிக்கு எதிராக நாடு தழுவிய பிரசாரம் : இடதுசாரிகள் அறிவிப்பு


12-சேலத்தில் தே.மு.தி.க., கம்யூ., மோதல் : போலீஸ் தடியடி


13-மின்வெட்டை கண்டித்து 16ம் தேதி மறியல் : கோவை குறுந்தொழில் சங்கம் அறிவிப்பு


14-மீண்டும் மன்மோகன்சிங் பிரதமர் ஆக வேண்டும் : அமர்சிங் பேட்டி
.

15-பார்லிமென்ட் தேர்தல் பா.ஜ., வுக்கு வெற்றி வாய்ப்பு: அத்வானி


16-தி.மு.க., உயர்நிலை குழு கூட்டம் வரும் 17ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற உள்ளது


17-ஒன்பதாவது கப்பல் தளம் (14-7-2008 )அன்று தூத்துக்குடி துறைமுகத்தில் திறந்து வைக்கப் பட்டது





.

பாலகன்
14-07-2008, 05:32 PM
செயற்கை கருத்தரிப்பு முறை: கிடுக்கிப்பிடி சட்டம் வருது
ஆமா அப்படியே வந்துட்டாலும்.........................

தகவலுக்கு நன்றி காந்தியாரே

அன்புடன்

mgandhi
15-07-2008, 05:49 PM
16-7-2008

1-தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம்: விசாரணை அறிக்கை அளிக்கப்பட்டது


2-ராமேஸ்வரத்தில் மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது


3--ராஜபக்சே கொடும்பாவியை எரித்து வக்கீல்கள் போராட்டம்


4--நம்பிக்கை வாக்கெடுப்பை புறக்கணிக்க தயாநிதி மாறன் முடிவு?


5--வெளிநாட்டு கழிவுகளை இறக்குமதி செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை: என்.வரதராஜன்


6-இடதுசாரிகள் பிரச்சார இயக்கம் தொடங்கியது


7--பிரதமருடன் முகேஷ் அம்பானி சந்திப்பு


8--ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்காவுக்கு இந்தியா எச்சரிக்கை


9--ராஜ் தாக்கரே கட்சி மீண்டும் வன்முறை: அரசு அலுவலகம் சூறை


10-சோம்நாத் வாக்களிக்கக் கூடாது: ஜெத்மலானி

mgandhi
16-07-2008, 05:45 PM
17-7-2008

1-மாயாவதியுடன் டி.ஆர்.எஸ்., கைகோர்ப்பு


2-வங்காள விரிகுடாவில் எரிவாயு கண்டுபிடிப்பு


3-ஜுனியர் ஆசிய கோப்பை ஹாக்கி: இறுதி போட்டியில் இந்தியா


4-பா.ஜ.வுடன் கூட்டணி பேச்சுக்கே இடமில்லை: டி. ராஜா


5-ராமேஸ்வரத்தில் 27ம் தேதி வைகோ உண்ணாவிரதம்
.

6-ஒரிசாவில் கண்ணிவெடி தாக்கி: 20 போலீசார் பலி


7-நஷ்டஈடு வழங்காத அரசு பஸ் ஜப்தி


8-இலங்கை செல்லும் பிரதமருக்கு : பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்


9-மின்வெட்டை கண்டித்து காரைக்குடியில் கடையடைப்பு போராட்டம்


10-காஷ்மீரில் கடையடைப்பு : அமர்நாத் நில மாற்றம் எதிரொலி


11-கும்பகோணம் தீ விபத்து நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலி அனுசரிப்பு


12-சர்வதேச அணுசக்தி முகமையுடனான சந்திப்பு ரத்தானது


13-ஜெ., பாதுகாப்பு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணை


14-காஷ்மீரில் தீவிரவாதிகள்பாதுகாப்புப்படையினர் இடையே மோதல் : ஒருவர் பலி


15-கன்னியாகுமரியில் பலத்த மழை : அணைகள் நீர்மட்டம் உயர்வு

இளசு
16-07-2008, 05:47 PM
சுடச்சுடச் செய்திகளுக்கு - நன்றி காந்தி அவர்களே!

மன்றச் செய்தி -துரித உணவகத்தின்
900-வது பரிமாறலுக்கு வாழ்த்துகள்!

mgandhi
16-07-2008, 06:01 PM
சுடச்சுடச் செய்திகளுக்கு - நன்றி காந்தி அவர்களே!

மன்றச் செய்தி -துரித உணவகத்தின்
900-வது பரிமாறலுக்கு வாழ்த்துகள்!

நன்றி இளசு

mgandhi
18-07-2008, 05:46 PM
19-7-2008

1-மீனவர்கள் தாக்கப்படுவதை கண்டித்து தி.மு.க. சார்பில் நாளை உண்ணாவிரதம்

2-நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு உறுதியாக வெற்றி பெறும்: ராமதாஸ்

3-கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. உபாத்யாயா சஸ்பெண்டு

4-கச்சத்தீவில் இருந்த உரிமைகளை மீட்க நடவடிக்கை: கருணாநிதி

5-மர்ம மனிதனை துரத்திய மக்கள்: நள்ளிரவில் சென்னையில் பரபரப்பு!

6-கம்யூனிஸ்டு கட்சியின் 10 தலைவர்கள் ரூ.200 கோடி சொத்து குவிப்பு?

7-அஜ“த்சிங்கை ஏ.பி.பரதன் நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்

8-பிரதமர் அலுவலகம் பேர மையமாகி விட்டது: பாஜக

9-ரூ.6080 கோடி செலவில் மேலும் 8 புதிய ஐ.ஐ.டி.கள்: மத்திய அரசு ஒப்புதல்

10-எல்.ஜி, செஞ்சியை நீக்க சோம்நாத்திடம் மதிமுக கோரிக்கை

ராஜா
18-07-2008, 05:54 PM
நன்றி காந்தியாரே..!

mgandhi
22-07-2008, 05:23 PM
23-7-2008

1-நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் அரசு வெற்றி: ஆதரவு 275, எதிர்ப்பு 256: தேதி குறிப்பிடாமல் நாடாளுமன்றம் ஒத்திவைப்பு

2-சேதுசமுத்திர திட்டத்தை தள்ளிவைக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்

3-மத்திய அரசை நோயாளி என்று விமர்சனம்: அத்வானி பேச்சுக்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம்

4- அணுசக்தி விவகாரத்தில் இடதுசாரிகள் குழப்பத்தில் உள்ளன: மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் '

ராஜா
22-07-2008, 05:29 PM
எல்லா விஷயத்திலும் மக்கள் குழப்பத்துல இருக்காங்களே அப்பச்சி..!

நன்றி மோகன் காந்தியாரே..!

அறிஞர்
22-07-2008, 06:44 PM
மக்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தினாதானே...
அவுங்க குழப்பில்லாமல் ஆட்சி நடத்த இயலும்...

mgandhi
01-08-2008, 04:15 AM
1-8-2008


1-எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ : 4 பேர் பலி செகந்திராபாத் காக்கிநாடா கவுதாமி எக்ஸ்பிரஸ்


2-சார்க் உச்சி மாநாடு துவக்கம்


3-ஆமதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பாக 5 பேர் கைது

4-புலிகளுக்கு கடத்த பதுக்கிய 1250 லிட்டர் ஆசிட் பறிமுதல்


5-மும்பை வணிக வளாகத்தில் வெடிகுண்டு புரளி


6-சிவகங்கை ஆர். டி. ஓ. கைது
.

7-வேலூர் மாநகராட்சி ஆகிறது



8-ரஜினி உருவப்படம் தீ வைப்பு: கன்னட அமைப்பினர் போராட்டம்


9-ஜெ., வழக்கு ஒத்திவைப்பு


10-பெண்களுக்கு உதவிதொகை கருணாநிதி துவக்கி வைத்தார்


11-கன்னடர்களிடம் ரஜினி மன்னிப்பு


12-இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்ட்ஆட்ட நேர முடிவில் : இந்தியா 214/4

13-நாட்டின் பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சரவைகூட்டத்தில் விவாதம்


14-அமைச்சரவை விரிவாக்கம் குறித்து கருத்து கூற மத்திய அமைச்சர் மறுப்பு


15-மேட்டூர் அணை நீர் வரத்து அதிகரிப்பு

mgandhi
02-08-2008, 04:50 PM
2-8-2008

1-மீண்டும் முதல்வர் ஆகும் ஆசை இல்லை: கருணாநிதி

2-அலி அப்துல்லா உள்பட 3 தீவிரவாதிகளும் நெல்லை கோர்ட்டில் ஆஜர்

3-ராமநாதபுரத்தில் வெடிபொருட்களுடன் பெண் கைது

4-சுர்ஜித் மரணம்: தமிழக தலைவர்கள் இரங்கல்

5-கச்சத்தீவில் தேசியக் கொடி நடும் போராட்டம்: இந்து மக்கள் கட்சி

6-சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன்: சோம்நாத் சட்டர்ஜி

7-ஆந்திராவில் ரயில் விபத்து: பலி 32 ஆக உயர்வு

8-பிரதமர் பதவி யாருடைய குடும்ப சொத்தும் இல்லை: டி.ராஜா

9-சைக்கிள் வாங்க அடையாள அட்டை: டெல்லி போலீஸ் உத்தரவு

10-அமெரிக்க படைத் தளமாக இந்தியாவை மாற்ற முயற்சி: பிருந்தா காரத்

mgandhi
03-08-2008, 05:29 PM
4-8-2008

1-தூத்துக்குடி மாநகராட்சியை 5-ந் தேதி கருணாநிதி தொடங்கி வைக்கிறார்


2-கொல்கத்தாவில் குண்டு வெடிப்பு: 4 பேர் பலி


3-கோடநாட்டில் இருந்து ஜெயலலிதா, சென்னை வருகை தள்ளிவைப்பு


4-17-ந்தேதி சந்திர கிரகணம்


5-கீழக்கரை தொழில் அதிபர் கடத்தல்: 5 போலீசார் சஸ்பெண்டு


6-தமிழக மீனவர்கள் இலங்கை கடல் பகுதியிலும் சென்று மீன்பிடிக்க அனுமதிக்கப் படுவார்கள்-தங்கபாலு எம்.பி. தகவல்


7-தமிழக அரசின் அறிவிப்புகள் தொய்வு இல்லாமல் நிறைவேறி வருகின்றன: கருணாநிதி அறிக்கை


8-வருமான வரி கட்டுவதில் மாயவதிக்கு முதலிடம்

9-ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. ïனியன் தலைவி மலர்விழி கட்சியில் இருந்து நீக்கம்: ஜெயலலிதா அறிவிப்பு


10-மத்திய அரசுக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் மாயாவதி மனு


11-ஹர்கிஷன் சிங் சுர்ஜித் உடல் தகனம்


12-இமாசல பிரதேசத்தில் கோவில் திருவிழாவில் நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 ஆக உயர்வு


13-வங்காள விரிகுடாவில் புயல் சின்னம்: சென்னைக்கு மழை எச்சரிக்கை


14-ஆமதாபாத்தில் மீண்டும் வெடிகுண்டு அபாயம்


15-பீகார் சிறைச்சாலையில் 37 செல்போன்கள் பறிமுதல்

mgandhi
04-08-2008, 05:28 PM
5
-8-2008

1-தி.மு.க.வில் இணைய போகிறார் எல். கணேசன்!

2-நைனா தேவி சம்பவம், இறந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம்: பிரதமர்

3-தமிழகத்தில் தொடர் தாக்குதல் நடத்த லாரி மூலம் வெடிபொருட்கள்: பயங்கரவாதி தகவல்

4-"கோவிந்தா,கோபாலா" கோஷங்களுடன் .வில்லிபுத்தூர், ஆண்டாள் கோவில் தேரோட்டம்

5-ஆப்கனில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு : கர்சாய், மன்மோகன் ஆலோசனை

6-ஒலிம்பிக் கிராமத்தில் இந்திய அணி

7-காளிதாஸ் கொலை வழக்கு : இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனை (இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் காளிதாஸ் )

8-ஓட்டுக்கு நோட்டு விவகாரம் : பா.ஜ., மீது ஐ.மு., கூட்டணி குற்றச்சாட்டு

9-பந்த் விவகாரத்தில் 4 வாரங்களுக்குள் விளக்கம் : சுப்ரிம் கோர்ட் *கெடு

10-பாராட்டு விழாவில் டி.எம்.எஸ்., சுசீலாவுக்கு பணமுடிப்பு : மு.க.அழகிரி அறிவிப்பு

11-தீவிரவாதிகள் விசாரணையில் திருப்பம் : மற்றுமொரு புழல் சிறை கைதிக்கும் தொடர்பு

12-விழுப்புரத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டது
.
13-சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு தீவிரம்

14-நெல்லையில் எரிந்து கிடந்த மோட்டார் பைக்கால் பரபரப்பு

15-ஆத்தூரில் கழுதைப்பால் விற்பனை

mgandhi
05-08-2008, 05:25 PM
6-8-2008

1-ஆந்திராவில் மழை : ஏழு பேர் பலி


2-மதுரை வந்தார் முதல்வர் கருணாநிதி


3-துரோணாச்சாரியா விருதுக்கு வாலிபால் வீரர் ஸ்ரீதரன் தகுதி


4-அமர்நாத் நில விவகாரம் : ஜம்முவில் போலீசார் துப்பாக்கிச்சூடு


5-மூன்றாவது அணி என்ற பேச்சுக்கே இடமில்லை : சுஷ்மா சுவராஜ்


6-மேற்குவங்கத்தில் அரிய வகை பாம்பு கண்டுபிடிப்பு


7-முதல்வர் விழாவுக்கு தடை கோரி மனு : தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு


8-இந்தியா சி.டி.பி.டி., யில் கையெழுத்திட வேண்டும் : ஜப்பான் வலியுறுத்தல்


9-மழைக்கால கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்பட வேண்டும் : அத்வானி வேண்டுகோள்


10-பிமன்போஸ் கோல்கட்டா ஐகோர்ட்டில் ஆஜரானார்


11-தீவிரவாதி தவ்பீக் போலீசாரால் சுற்றி வளைக்கப்பட்டானா? நெல்லையில் பரபரப்பு


12அகஸ்தியலிங்கம் மறைவுக்கு முதல்வர் இரங்கல்


13-கச்சா எண்ணெய் விலை குறைவு


14-தூத்துக்குடி மாநகராட்சியை முதல்வர் துவங்கி வைத்தார்


15ஸ்ரீநகரில் கலவரம் : ராணுவம் குவிப்பு

mgandhi
07-08-2008, 05:46 PM
8-8-2008

1-ஈரோடு தலைமை மின் பொறியாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை


2-இலங்கை மீனவர்கள் 12 பேர் கைது


3-தி.மு.க., உடனான உறவு குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதிரடி முடிவு


4-பி.எஸ்.ஜி., கல்வி நிறுவனத்தை பல்கலையாக உயர்த்த எதிர்ப்பு : மாணவர்கள்போலீசார் இடையே மோதல்


5-ஆசிய சாலஞ்சர் கோப்பை கால்பந்து: பைனலுக்கு முன்னேறியது இந்தியா


6-12.01 சதவீதத்தை எட்டியது பணவீக்கம்


7-அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா பதவி நீக்கம்


8-சென்னை சேலம் இடையே விரைவு ரயில் அறிமுகம்


9-கிரிக்கெட்: ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு



10-இந்தியாஇலங்கை கடைசி டெஸ்ட் கிரிக்கெட் நாளை ஆரம்பம்


11-ஒலிம்பிக் தொடக்க விழாவில் கலந்து கொள்ள பீஜிங் சென்றார் சோனியா


12-சென்னையை உலுக்கிய சைகோ கொலை: 6 பேர் *கைது


13-புதுச்சேரியில் நாணயக் கண்காட்சி


14-ஜம்மூவில் இக்கட்டான நிலையை சரிசெய்ய 4 பேர் கொண்ட குழு


15-ஸ்ரீநகரில் சக்திவாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு

ராஜா
07-08-2008, 06:27 PM
இன்றைய செய்திகள் அனைத்தும் செம காட்..!

சுடச் சுட தந்த மோகன் காந்தியாருக்கு ஒரு ஜே..!

rajatemp
08-08-2008, 12:45 PM
சென்னையில் கொலையாளி கைதா ஆச்சரியம்
வாழ்த்துக்கள்

mgandhi
09-08-2008, 05:40 PM
10-8-2008


1-பருவநிலை ஆய்வு குறித்த இணையதளம் துவக்கம்



2-அமர்நாத் நில விவகாரம் : சமரச பேச்சுவார்த்தை தோல்வி



3-அமர்நாத் சங்கர்ஸ் சமிதி சமரச பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள ஒப்புதல்


4-சூரத்தில் மேலும் ஒரு குண்டு கண்டுபிடிப்பு



5-அந்தியூர் பஞ்சாயத்து யூனியன் அலுவலகம் தாக்குதல்



6-போலி பாஸ்போர்ட்டுடன் விமான நிலையம் வந்த இலங்கை இளைஞர் கைது



7-மதுரையில் டி.ராஜேந்தர் வீட்டில் கட்சி செயலாளரே 'கைவரிசை'



8-கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயில்கள் மறிப்பு



9-திண்டுக்கல்லில் குழந்தைகளுடன் தீக்குளித்து இளம் பெண் சாவு



10-பூஞ்ச் பகுதியில் துப்பாக்கி சூடு



11-ஹீரா வீட்டில் சோதனை : நெல்லை போலீஸ் முடிவு



12திருநாகேஸ்வரம் ராகு ஸ்தலத்தில் நவசண்டி மகாயாகம்

mgandhi
10-08-2008, 05:03 PM
11-8-2008


1-ஆண்கள் ஒற்றையர் பேட்மின்டன்: இந்தியா வெற்றி



2-ராஜேந்தர் தான் ஏமாற்றினார்: மாவட்ட செயலர் பேட்டி


3-கடலுக்கு சென்று கரை திரும்பாத 9 மீனவர்கள்


4-அந்தமானில் நிலநடுக்கம்


5-தமிழகத்தில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் வீட்டில் முக்கிய ஆதாரங்கள் சிக்கின


6-அணுசக்தி ஒப்பந்தத்தால் தொழில் பெருகும்: மத்திய அமைச்சர் வாசன் நம்பிக்கை


7-டைரக்டர் ஜீவா குடும்ப தகராறு: வீடு, கார் மீது தாக்குதல்


8-ஆள் இல்லாத லெவல் கிராஸிங் ரயில்-கார் மோதி விபத்து : 3 பேர் பலி ( திருச்சி அருகே இடைமலை புதூரில் )


9-ஜம்முகாஷ்மீர் மக்களுக்கு பாதகம் இல்லாமல் முடிவு : சிவ்ராஜ் பாட்டீல் அறிவிப்பு


10-ராமநாதபுரத்தில் விவசாய துறை செயலர் அதிரடி சோதனை : 5 பேர் சஸ்பெண்ட்


11-ஜம்முவில் 14 தேதி வரை பந்த் நீடிப்பு


12-திருச்சியில் துணிகர கொள்ளை : 3 கோடி ரூபாய் அபேஸ்


13-ஆந்திராவில் மழை வெள்ளத்துக்கு 42 பேர் பலி


14சென்னை மெட்ரோ ரயில் திட்டம் : அக்டோபரில் துவங்குகிறது


15-சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு



16-ஒலிம்பிக் நடக்கும் சீனாவில் தொடர் குண்டு வெடிப்பு : 2 பேர் பலி

mgandhi
12-08-2008, 05:06 PM
13-8-2008

1-கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு முதல்வர் கருணாநிதி வேண்டுகோள்


2-பாளையங்கோட்டையில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்


3-ஒகேனக்கல் குடிந“ர் திட்டம்: பா.ம.க. வழக்கு முடிவுக்கு வந்தது


4-மதுரையில் வருகிற 16 ம் தேதி உலக தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடு


5-10 நாள் போலீஸ் விசாரணைக்கு பிறகு 3 தீவிரவாதிகளும் கோர்ட்டில் ஆஜர்


6-அணு உலைகள் என்ற பெயரில் அணுகுண்டுகளைப் பொருத்துவதா?: ஸ்வராஜ் பால்


7-காஷ்மீருக்கு பேரணி சென்றவர்கள் மீது போலீஸ் துப்பாக்கிச் சூடு: 5 பேர் பலி


8-பாஜக எம்.பி.க்களுக்கு லஞ்சம்: வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாயின!


9-ராஜஸ்தானில் இடிபாடுகளில் சிக்கிய 135 பக்தர்கள் மீட்பு


10-எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் தாக்குதலுக்கு இந்தியா பதிலடி

பாலகன்
12-08-2008, 05:11 PM
எல்லா செய்தியிலும் முக்கியமானது இது தான்

அந்தமானில் நிலநடுக்கம்

புலி வருது கதை தான் இது

மழை வரும் முன் வானிலை சொல்ல மாட்டார்கள், சுனாமி வரும்முன் சொல்லமாட்டார்கள், நிலநடுக்கம் வரும் முன் சொல்லவும் மாட்டார்கள்

ஆனா வந்துடுச்சின்னா? அப்பப்பா எப்படியெல்லாம் பீதிய கெளப்புவாங்க தெரியுமா? இந்த வானிலை துறை ஆசாமிங்க,, பாவம் சம்பளத்தை அதிக படுத்தனும்னு நெனைக்கிறேன்

(கைமாறு கருதாது பொழியும் மழை போல)
நிறைய தகவல்களை தினந்தோரும் தரும் காந்தியாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்,,,

mgandhi
13-08-2008, 05:22 PM
14-8-2008

1-17ல் சந்திர கிரகணம் : வெறும் கண்ணில் பார்க்கலாம்



2-பினாகா ராக்கெட் லாஞ்சர் சோதனை வெற்றி
.


3-ஸ்ரீநகரில் போலீஸ் துப்பாக்கிச்சூடு : 42 பேர் படுகாயம்



4-மீண்டும் துவங்கியது அமர்நாத் யாத்திரை



5-ஒகேனக்கலில் வெள்ளப்பெருக்கு



. 6-நொய்டாவில் விவசாயிகள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு : 3 பேர் பலி



7-பீஜிங் புறப்படும் இந்திய மல்யுத்த வீரர்கள்



8-ஜஸ்வந்த் சிங் உள்ளிட்ட 9 பேர் குற்றச்சாட்டு பதிவு



9-தலைவாசலில் ஆக்கிரமிப்பு அகற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்



10-உசிலம்பட்டி மலைப்பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம்? காரில் வந்த 4 பேரிடம் விசாரணை



11-அமர்நாத் கோயிலுக்கு நிலம் வழங்க கோரி பா.ஜ., வினர் தமிழகத்தில் ஆர்ப்பாட்டம்



12-செ*ன்னையை மூன்று மாநகராட்சியாக பிரிக்க முடிவு




13-அமர்நாத் விவகாரம்: டில்லியில் நடைபெற இருந்த அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டம் ரத்து



14-2008 09 ல் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.7 சதவீதம் தான் இருக்கும்



15-புதுடில்லியில் கனமழை: போக்குவரத்து பாதிப்பு




16-சுதந்திர தின கொண்டாட்டம்: தமிழகத்தில் ஒரு லட்சம் போலீசார் குவிப்பு

mgandhi
14-08-2008, 05:20 PM
15-8-2008

1-ஆந்திராவில் குண்டு வெடிக்கும் : அல்-குவைதா மிரட்டல்


2-பயணிகளுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு


3-சீக்கியர்களுக்கும்-தேரா சச்சா மீண்டும் மோதல்


4-பெரியாற்று நீர் வரத்து காரணமாக வைகை நீர் மட்டம் உயர்வு


5-பணவீக்கம் மேலும் உயர்வு


6-தஞ்சாவூர் புதிய கலெக்டராக சண்முகம் பொறுப்பேற்பு


6-6-வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


7-10 ஆயிரம் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு


8-சிறப்பு தலைமைச் செயலராக ஸ்ரீபதி நியமனம்


9-தமிழக மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார் முதல்வர் கருணாநிதி
.

10-சிவகாசியில் ஜெர்மன் நாட்டு மாணவி மின்சாரம் தாக்கி பலி


11-ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு


12-சுதந்திர தின கொண்டாட்டம்: தமிழகத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு


13-கர்நாடக அணைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


14-கிணற்றில் விஷவாயு தாக்கி 4பேர் பலி


15-அகதிகள் முகாம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை


16-டில்லியில் அபினவ் பிந்த்ராவுக்கு உற்சாக வரவேற்பு

mgandhi
14-08-2008, 05:26 PM
15-8-2008

1-ஆந்திராவில் குண்டு வெடிக்கும் : அல்-குவைதா மிரட்டல்


2-பயணிகளுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு


3-சீக்கியர்களுக்கும்-தேரா சச்சா மீண்டும் மோதல்


4-பெரியாற்று நீர் வரத்து காரணமாக வைகை நீர் மட்டம் உயர்வு


5-பணவீக்கம் மேலும் உயர்வு


6-தஞ்சாவூர் புதிய கலெக்டராக சண்முகம் பொறுப்பேற்பு


6-6-வது ஊதியக் குழு பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


7-10 ஆயிரம் ஏரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு


8-சிறப்பு தலைமைச் செயலராக ஸ்ரீபதி நியமனம்


9-தமிழக மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்தார் முதல்வர் கருணாநிதி
.

10-சிவகாசியில் ஜெர்மன் நாட்டு மாணவி மின்சாரம் தாக்கி பலி


11-ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு தளர்வு


12-சுதந்திர தின கொண்டாட்டம்: தமிழகத்தில் உச்ச கட்ட பாதுகாப்பு


13-கர்நாடக அணைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


14-கிணற்றில் விஷவாயு தாக்கி 4பேர் பலி


15-அகதிகள் முகாம் மீனவர்கள் கடலுக்குள் செல்ல தடை


16-டில்லியில் அபினவ் பிந்த்ராவுக்கு உற்சாக வரவேற்பு

mgandhi
15-08-2008, 05:18 PM
16-8-2008

1-ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றது: ஊழியர்களுக்கு 21 சதவீத சம்பள உயர்வு


2-சிறையில் காடுவெட்டி குருவுக்கு அவமதிப்பு: மனித உரிமை ஆணையத்தில் புகார்


3- கர்நாடகா: பள்ளி மாணவர்கள் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து 11 பேர் சாவு


4-ரசிகர்கள் எதிர்ப்பு: குசேலன் படத்தில் ரஜினியின் அரசியல் வசனங்கள் நீக்கம்


5- தியாகராஜ பாகவதர் மனைவி காலமானார்


6-ஜாங்கிட் உட்பட 7 போலீஸ் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் விருது


7- தமிழக அரசின் சிறப்புத் தலைமைச் செயலாளராக ஸ்ரீபதி நியமனம்


8- ஒகேனக்கல் திட்டம் கிடப்பில் போடப்படும் அபாயம்: ராமதாஸ் புகார்


9- வன்முறை வேண்டாம்; அமைதி காப்போம்: பிரதிபா பாட்டீல் வேண்டுகோள்


10- ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் கொடிகள் அகற்றம்


11- முஷாரஃப்பின் சமரசத் திட்டம்: கிலானி நிராகரிப்பு: குற்றப் பத்திரிகை தயார் என மக்கள் கட்சி அறிவிப்பு


12- இந்தியாவின் பணவீக்கம் 12.44 சதவீதமாக அதிகரிப்பு


13-அமர்நாத் யாத்ரீகர்களுக்கு நிலம் வழங்க வேண்டும்: பிரதமருக்கு அத்வானி கடிதம்


14-ஸ்ரீநகரில் மீண்டும் வன்முறை: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி


15- எனது வெற்றி இந்திய விளையாட்டில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும்: பிந்த்ரா

mgandhi
17-08-2008, 05:22 PM
18-8-2008

1- அகமதாபாத் குண்டுவெடிப்பு : 10 பேர் கைது

2- தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் மீண்டும் தாக்குதல்

3- திண்டிவனம் அருகே காவல்துறையினர் துப்பாக்கி சூடு

4- காஷ்மீர் கலவரம் : பாகிஸ்தான் மீது அமெரிக்கா குற்றச்சாட்டு

5- காஷ்மீரில் தீவிரவாதி சரண்

6- முஷாரப் பிடிவாதம் : பாகிஸ்தானில் குழப்பம் நீடிப்பு

7- இலங்கை ராணுவத்தை முறியடிக்க விடுதலைப்புலிகள் தீவிரம்

8- பெல்ப்ஸ் புதிய சாதனை : 8 தங்கப்பதக்கங்களை வென்றார்

9- தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: கருணாநிதி அறிவிப்பு

10-கன்னியாகுமரி கலெக்டர் ஜோதி நிர்மலாவுக்கு கல்பனா சாவ்லா விருது

11-நேரு கொள்கைக்கு நேர்மாறாக செயல்படும் மத்திய அரசு: நல்லக்கண்ணு

12-முதலமைச்சர் பதவிக்கு காங்கிரஸ் ஏன் ஆசைப்படக்கூடாது: தங்கபாலு

13-இந்திய மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் 18-ந் தேதி தொடங்குகிறது

mgandhi
18-08-2008, 05:55 PM
19-8-2008

1-இலங்கைக்கெதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து சேவக் நீக்கம்


2-ரங்கராஜன், கிருஷ்ணா எம்.பி.,யாக பதவியேற்பு


3-இந்திய மாம்பழங்கள் இறக்குமதிக்கு ஆஸி., அனுமதி


4-சென்னை மின்சார ரயில் திருப்பதி வரை செல்லும்


5-முஷாரப் ராஜினாமா : இந்தியா கருத்து


6-மம்தா பானர்ஜிக்கு புத்ததேவ் அழைப்பு


7-சிபு சோரனுக்கு ஆதரவில்லை : பா.ஜ.க., அறிவிப்பு


8-உயர்கிறது முட்டை விலை


9-ஜார்கண்டுக்கு தேர்தல் : முன்னாள் முதல்வர் மராண்டி யோசனை


10-காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு : அரசியல் கட்சிகள் ஒருமித்து செயல்பட பிரதமர் வேண்டுகோள்


11-ஜெப்பூர் குண்டு வெடிப்பு சம்பவம் : எய்ம்ஸ் மாணவரிடம் விசாரணை


12-ஐ.நா., அலுவலகம் நோக்கி ஹூரியத் அமைப்பினர் பேரணி

mgandhi
20-08-2008, 05:44 PM
21-8-2008

1- ராமேஸ்வரம் பகுதியில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற 16 மீனவர்கள் மாயம் : பதற்றம்

2- தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு கழுதைகள் மூலம் ரேஷன் அரிசி கடத்தல்

3- மர்மயோகி திரைப்பட தொடக்கவிழா விரைவில் நடைபெறும் : நடிகர் கமலஹாசன் தகவல்

4- தமிழகத்தில் நேற்றிரவு பலத்த மழை : இன்று தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

5- பாகிஸ்தான் அரசு மருத்துவமனையில் தற்கொலைப் படைத்தாக்குதல் : 25 பேர் பலி

6- இந்தியாவில் கோடிக்கணக்கான கள்ளநோட்டு : வெள்ளை அறிக்கை வெளியிட பாஜக வலியுறுத்தல்

7- அகமதாபாத் குண்டு வெடிப்பு : கைது செய்யப்பட்டுள்ள தீவிரவாதி திடுக்கிடும் தகவல்கள்

8- சென்னையில் மீண்டும் டீசல் தட்டுப்பாடு : மத்திய அமைச்சர் விளக்கம்

9- ஆந்திராவில் புதிய கூட்டணி : நடிகர் சிரஞ்சீவியின் புதிய கட்சிக்கு அத்வானி வாழ்த்து

10- முஷாரப்பை அழைத்து வர விமானத்தை அனுப்பவில்லைசவூதி அரேபிய தூதர் மறுப்பு

11- இந்திய விமானச் சேவை நிறுவனங்கள் சரக்கு போக்குவரத்து மூலம் அதிக வருவாய்

12- ஜம்முகாஷ்மீரில் இரண்டு லட்சம் பேர் கைதுதேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் நேரில் ஆய்வு

13- கருணாநிதியின் அவாள் கவிதையால் சலசலப்பு!

14- சிமி மீதான தடையை நீடிக்க வேண்டும் உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு மனு

mgandhi
21-08-2008, 05:50 PM
22-8-2008


1-சிபு சோரன் பொய் கூறுகிறார் : லாலு


3-விவசாயத்துக்கு தனி மின் பாதை : தமிழக மின்வாரியம் அறிவிப்பு


4-புதுச்சேரி கோவை இடையே சரக்கு போக்குவரத்து துவக்கம்


5-மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி கைது


6-பணவீக்கம் மேலும் உயர்வு


7-யு.எஸ். ஓபன் டென்னிஸ் : சானியா விலகல்


8-வியன்னா கூட்டத்தில் இந்தியாவிற்கு ஆதரவு


9-காஷ்மீர் நிலவரம் குறித்து எம்.கே. நாராயணன் விளக்கம்


10-முஷாரப் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு


11-எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்


12-இந்திராகாந்தி விமான நிலையத்தில் 3வது ரன்வே திறப்பு


13-திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்


14-டீசல் பற்றாக்குறையால் லாரி போக்குவரத்து பாதிப்பு


15-கூட்டணி கட்சிகள் பற்றி விமர்சனம் கூடாது : கருணாநிதி


16-கும்பகோணம் அருகே தனியார் பஸ் வாய்காலில் கவிழ்ந்து 10 பேர் காயம்

arun
21-08-2008, 06:24 PM
செய்திகளின் பகிர்வுக்கு நன்றி காந்தி

mgandhi
22-08-2008, 05:47 PM
23-8-2008

1-கூட்டணியில் இருந்து விலக கம்யூனிஸ்டுகள் திட்டம்: கருணாநிதி

2- ஒகேனக்கல் திட்டத்தில் தலையிட கர்நாடகாவுக்கு எந்த உரி€€யும் இல்லை: தங்கபாலு

3-விஜய டி.ராஜேந்தர் மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி

4- மாவீரன் இமானுவேல் சேகரன் சிலை அனுமதியின்றி வைப்பு

5- ஐ.டி. நிறுவனங்களால் தமிழ்நாட்டில் டீசல் தட்டுப்பாடு

6- இசட் பிரிவு பாதுகாப்பு: ஜெயலலிதாவுடன் போலீஸ் அதிகாரி ஆலோசனை

7- காங்கிரசுடனான உறவை நியாயப்படுத்த இடதுசாரிகள் மீது அவதூறு: என்.வரதராஜன்

8- அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் பதவியை ராஜினாமா செய்ய முடிவு

9- டிசம்பர் மாதம் முதல் சென்னையில் இருந்து திருச்சி வரை மின்சாரம் மூலம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஓடும்

10- தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மர்ம காய்ச்சல்

11- பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவர் பலி: 25 பஸ்களின் கண்ணாடிகள் உடைப்பு - வத்தலக்குண்டு,

12-சென்னையில் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் உண்ணாவிரதம்

13- கூட்டணி கட்சிகளை விமர்சிக்க வேண்டாம்: கருணாநிதி

14-ராமேஸ்வரத்தில் காணாமல் போன மீனவர்களை ஹெலிகாப்டரில் தேடுதல்

15-அணுசக்தி ஒப்பந்தம் பற்றி வீராசாமிக்கு எதுவும் தெரியாது: தா.பாண்டியன்

mgandhi
23-08-2008, 05:57 PM
24-8-2008


1-நடிகர் நாசர் வீட்டில் ரகளை

2-சிபுசோரன் ஆட்சி அமைக்க லாலு ஆதரவு

3-ஜார்கண்ட் முதல்வர் மதுகோடா ராஜினாமா

4-டாடா தொழிற்சாலைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

5-விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சென்னையில் பாதுகாப்பு தீவிரம்

6-ஜனாதிபதி மேற்குவங்கம் வருகை

7-ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களுக்கு பி.சி.சி.ஐ., ரொக்கப்பரிசு

8-குசேலன் படத்திற்கு 70 சதவீத நஷ்டஈடு தரகோரிக்கை

9-நேனோ கார் நிறுவனம் : மகாராஷ்டிரா வரவேற்கிறது
.
10-அமர்நாத் பிரச்னை : அரசுடன் சமிதி பேச்சுவார்த்தை

11-டாடா நேனோ தொழிற்சாலை*க்கு எதிராக பேரணி : மம்தா முடிவு

12-புலிகளுக்கு டீஸல் கடத்தல்? வேலூரில் தீவிர சோதனை

13--ஈரோட்டில் பரவலாக மழை

14--காரிமங்கலம் போலீஸ் ஸ்டேஷன் முற்றுகையால் பரபரப்பு

15-டி.வி.ஆர்., நினைவு 2020 கிரிக்கெட் போட்டி திருச்சியில் இன்று துவக்கம்

mgandhi
27-08-2008, 05:47 PM
28-7-2008

1-லட்சக் கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் பிரஜா ராஜ்யம் சிரஞ்சீவியின் புதிய கட்சி ஆரம்பம்

2- டீசல் தட்டுப்பாட்டால் தமிழகத்தில் விலைகள் உயரும் அபாயம்

3- தற்கொலை முயற்சி என்ற செய்தி வெறும் வதந்தி: நடிகை ரம்பா விளக்கம்

4- சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா அக்காள் மகள், மருமகனுக்கு சிறை

5- தூத்துக்குடியில் செப்டம்பர் 5ல் சுதேசி கப்பல் நூற்றாண்டு விழா

6-பெட்ரோல் பங்க் விடுமறை இல்லை: உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தகவல்

7- தமிழகத்தில் மீண்டும் மின்தடை: மின்வாரியம் அறிவிப்பு


8-மீண்டும் முதல்வரின் கவிதை சர்ச்சை: பழ. நெடுமாறன் மீது தாக்குதல்

9-குடும்பத்துக்காக திமுக; தோழிக்காக அதிமுக: விஜயகாந்த்

10-தமிழ்நாட்டில் கடும் மின் வெட்டு: வைகோ கண்டனம்

11-மத்திய அரசு தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டு ஈழத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்: வீரமணி

12பழனி ரோப் காரில் 7 இடங்களில் எமர்ஜென்சி சுவிட்ச்

13- அக்டோபரில் நானோ கார்: மேற்கு வங்க முதல்வர் நம்பிக்கை


14 எல்லைப் பகுதியில் அத்துமீறி பாகிஸ்தான் படைகள் தாக்குதல்: 4 வீரர்கள் காயம்

mgandhi
01-09-2008, 06:11 PM
2-9-2008

1-சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தது விஜயகாந்த் பாதிப்பு தான் : பிரேமலதா



2-மதுரை பாசனத்திற்கு வைகை அணை திறப்பு



3-பீகாரில் மீட்புப் படகு மூழ்கி 20 பேர் பலி



4-பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை



5-ஓணம் சிறப்பு ரயில் போக்குவரத்து மாற்றம்



6-வேலூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.கருணாகரனுக்கு சிகிச்சை



7-ரிசர்வ் வங்கி கவர்னராக டி. சுப்பாராவ் நியமனம்
.


8-மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு



9-ஹூண்டாய் தொழிற்சாலையில் தீவிபத்து



10-வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்கு பிரதமர் நிதி உதவி



11-பெட்ரோல், டீசல் விலை தற்சமயம் குறையாது : முரளி தியோரா



12-திருமலை திருப்பதி தேவஸ்தானம் பிரமோற்சவத்துக்கு தயாராகிறது



13-சென்னை சரவணா ஸ்டோர்ஸ்சில் தீ கட்டுக்குள் வந்தது



14-ஜம்முவில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது



15-மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் மதுரை கேபிள் டி.வி., ஆப்பரேட்டர்கள் சந்திப்பு

இளசு
01-09-2008, 06:35 PM
செய்திகளுக்கு நன்றி காந்தி அவர்களே!

-----------------------------------------------------------------

1-சிரஞ்சீவி கட்சி ஆரம்பித்தது விஜயகாந்த் பாதிப்பு தான் : பிரேமலதா

சிவப்பு எம்ஜிஆர், ஆந்திர எம்ஜிஆர் கட்சி தொடங்கியது கூட
கறுப்பு எம்ஜிஆர் பாதிப்பில்தான்





2-மதுரை பாசனத்திற்கு வைகை அணை திறப்பு
சூறாவளியால் ஒரு லட்சம் வாழைகள் மடிந்தன..
பல்லாயிரம் பயிர் விளைந்த நிலங்கள் மூழ்கின -
பலத்த சூறாவளி +மழையால் - தென் தமிழகத்தில்!



3-பீகாரில் மீட்புப் படகு மூழ்கி 20 பேர் பலி
நதியின் போக்கு நூறு மைல் தள்ளிப் போகும் இயற்கைச் சீற்றம்!



4-பச்சிளம் குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் சாதனை

பச்சிளம் சிறுவர்களே அறிவை சிகிச்சை செய்யாதவரை சரி!:icon_b:



5-ஓணம் சிறப்பு ரயில் போக்குவரத்து மாற்றம்

நல்ல மாற்றமாய் இருக்க வேணும்!



6-வேலூரில் காங்கிரஸ் மூத்த தலைவர் கே.கருணாகரனுக்கு சிகிச்சை

நலம் பெறட்டும்!


7-ரிசர்வ் வங்கி கவர்னராக டி. சுப்பாராவ் நியமனம்

1000 ரூபாய் நோட்டுக்கும் ஆப்புராவ் ஆவாரா?
.

8-மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு

ஆணையங்கள் செய்யாததை அடைமழை செய்துவிடும்!


9-ஹூண்டாய் தொழிற்சாலையில் தீவிபத்து

பாதுகாப்பு, தடுப்புகளுக்கு இன்னும் முன்னுரிமை தேவை!



10-வன்முறையால் பாதிக்கப்பட்ட ஒரிசா மக்களுக்கு பிரதமர் நிதி உதவி

ஏற்கனவே பலவீன மாநிலம்..
கூடவே மதவெறிக் கலவரம்..
கோணவாயன் கொட்டாவியும் விட்டதைப்போல்.. !:confused:


11-பெட்ரோல், டீசல் விலை தற்சமயம் குறையாது : முரளி தியோரா

ஏற்ற மட்டும் அவசரம் அவசியம்..
இறக்க இப்போ என்ன அவசரம்?

12-திருமலை திருப்பதி தேவஸ்தானம் பிரமோற்சவத்துக்கு தயாராகிறது

பிரஜா ராஜ்யம் தேர்தலோற்சவத்துக்குத் தயாராகிறது!


13-சென்னை சரவணா ஸ்டோர்ஸ்சில் தீ கட்டுக்குள் வந்தது

பலத்த நஷ்டம்; மீளட்டும் விரைந்து!



14-ஜம்முவில் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது

நாள்பட்ட வியாதி.. மேல்பூச்சு சிகிச்சை!

15-மார்க்சிஸ்ட் கம்யூ., மாநில செயலாளர் மதுரை கேபிள் டி.வி., ஆப்பரேட்டர்கள் சந்திப்பு

கூட்டணியில் இருக்கும்வரை வராதராஜன்..
முறிந்தவுடன் வந்தராஜன்

mgandhi
02-09-2008, 06:03 PM
நன்றி இளசு

mgandhi
02-09-2008, 06:03 PM
3-9-2008


1-ரிச்சர்ட் பௌச்சர் டெல்லி வருகை : அணு ஒப்பந்தம் குறித்து தீவிர விவாதம்


2-பயணிகள் கட்டணம் குறையாது : விமான நிறுவனங்கள் முடிவு


3- சர்தாரிக்கு மனநலன் பாதிப்பு : அமெரிக்கா கவலை


4- அதிமுகவில் கருணாநிதி : ஜெயலலிதா பேச்சு


5- குமரியில் கனமழை : 2 பேர் பலி


6- திருப்பதியில் பிரமோற்சவம் : ஏற்பாடுகள் தீவிரம்


7- இந்திய எல்லைக்குள் 10 லட்சம் பேர் ஊடுருவல் : அதிர்ச்சி தகவல்


8- வெள்ள சேதம் : மதவேறுபாடுகள் நீங்கிய மக்கள்


9-மாயாவதி தலைமையில் மூன்றாவது அணி: தேவே கவுடா அறிவிப்பு


10- அதிமுகவில் சேரப் போவது கருணாநிதி குடும்பத்தினர்தான்: ஜெயலலிதா கடும்தாக்கு


11- மயக்கக் குளிர்பானம் கொடுத்து ரயில்களில் திருடும் கும்பல் கைது: 104 பவுன் மீட்பு


12- பீஷ்மர், துரோணர் என்றெல்லாம் என்னைத் திட்டாதீர்கள்: கருணாநிதி கோபம்


13-மின் பற்றாக்குறைக்கு ஜெயலலிதா, கருணாநிதி அரசுகள்தான் காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு


14-கேரள முன்னாள் முதல்வர் கருணாகரன் மருத்துவமனையில் அனுமதி


15-ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சுப்பாராவ் நியமனம் ந


16-கண்ணகிக் கோயிலைக் கைப்பற்ற நடவடிக்கை: கேரள அரசு திடீர் சர்வே

ராஜா
02-09-2008, 06:31 PM
3-9-2008


1-ரிச்சர்ட் பௌச்சர் டெல்லி வருகை : அணு ஒப்பந்தம் குறித்து தீவிர விவாதம்

நச்சரிக்கும் ரிச்சர்ட்..?


2-பயணிகள் கட்டணம் குறையாது : விமான நிறுவனங்கள் முடிவு

அப்ப ரயிலுக்குதான் பொட்டியைக் "கட்டணும்"..!

3- சர்தாரிக்கு மனநலன் பாதிப்பு : அமெரிக்கா கவலை

சர்தான்..!

4- அதிமுகவில் கருணாநிதி : ஜெயலலிதா பேச்சு

புஷ், புதின் இவங்களையும் இழுத்துப் போடுங்க மேடம்..!


7- இந்திய எல்லைக்குள் 10 லட்சம் பேர் ஊடுருவல் : அதிர்ச்சி தகவல்

எதுக்கு அதிர்ச்சி..? இன்னும் அதிகமா எதிர்பார்த்தாங்களாமா..?

8- வெள்ள சேதம் : மதவேறுபாடுகள் நீங்கிய மக்கள்

அன்பு வெள்ளமோ..?

9-மாயாவதி தலைமையில் மூன்றாவது அணி: தேவே கவுடா அறிவிப்பு

"தேவ"யில்ல "கவுடா" ன்னு சொல்லாம இருந்தாச் சரி..!

10- அதிமுகவில் சேரப் போவது கருணாநிதி குடும்பத்தினர்தான்: ஜெயலலிதா கடும்தாக்கு.

இருங்க.. இருங்க.. இவங்க எங்க இருக்காங்க இப்போ..? ஏன் அதிமுகவில் சேர்ந்தா தாக்கறாங்க..?


13-மின் பற்றாக்குறைக்கு ஜெயலலிதா, கருணாநிதி அரசுகள்தான் காரணம்: விஜயகாந்த் குற்றச்சாட்டு

பல்பும் ஸ்விட்சும்தான் காரணம்ன்னு சொல்லாம விட்டாரே..!


15-ரிசர்வ் வங்கி புதிய கவர்னராக சுப்பாராவ் நியமனம்

சுப்பாராவ் சூப்பரா வங்கியை வச்"சுப்பாரா"..?

[/QUOTE]

mgandhi
03-09-2008, 06:43 PM
நன்றி ராஜா

mgandhi
03-09-2008, 06:44 PM
4-9-2008



1-அமெரிக்காவின் புதிய நிபந்தனை : பா.ஜ.க., இடதுசாரிகள் கடும் கண்டனம்
.



2-சிங்குர் விவகாரம் : செப்., 5 சமரச பேச்சுவார்த்தை




3-வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு




4-கேரளாவில் விநாயகர் கோவிலில் தீ விபத்து: ஒருவர் பலி




5-ஹுப்ளியில் வீடு இடிந்து விழுந்து 3 பேர் பலி




6-பிரதமரை சந்திக்கிறார் அத்வானி




7-பெங்களூரில் பிரவுன் சுகர் விற்க முயன்ற 6 பேர் கைது




8-ஒரிசா கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஒரிசா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு





9-பீகார் வெள்ளம்: கூடுதலாக நிதி அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதி




10-அணுசக்தி விவகாரம்: இரண்டு நாள் கூட்டம் இன்று(செப்.4) வியன்னாவில் கூடுகிறது




11-செப். 11ம் தேதி திருப்பதி செல்கிறார் சோனியா




12-சிங்குர் விவகாரம்: டாடாவிற்கு எம் அன்ட் எம் ஆதரவு




13-நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி உற்சாக கொண்டாட்டம்




14-காவிரி டெல்டாவில் பரவலாக மழைப்பதிவு
ந்து பெய்தது.




15-மேட்டூர் அணை நீர் மட்டம் 90 அடியாக அதிகரிப்பு

ராஜா
04-09-2008, 04:23 AM
4-9-2008



1-அமெரிக்காவின் புதிய நிபந்தனை : பா.ஜ.க., இடதுசாரிகள் கடும் கண்டனம்
.
போற போக்கைப் பார்த்தால்.. "அமெரிக்கா"ன்னு பேரைச் சொன்னாலே இடதுசாரிகள் கண்டனம் தெரிவிப்பாங்க போல இருக்கே..!

2-சிங்குர் விவகாரம் : செப்., 5 சமரச பேச்சுவார்த்தை

சிங்கு(ர்)ன்னாலே வெவகாரம்தானா..?


3-வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

அடுத்தது வெள்ள எச்சரிக்கையா..?


4-கேரளாவில் விநாயகர் கோவிலில் தீ விபத்து: ஒருவர் பலி

விநாயகர் சதுர்த்தீ..?


7-பெங்களூரில் பிரவுன் சுகர் விற்க முயன்ற 6 பேர் கைது

வேற எந்த ஊரில் வித்தா கைது செய்யமாட்டாங்களாம்..?


8-ஒரிசா கலவரம்: அறிக்கை தாக்கல் செய்ய ஒரிசா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

வெரசா தாக்கல் பண்ணுங்கப்பு..!


10-அணுசக்தி விவகாரம்: இரண்டு நாள் கூட்டம் இன்று(செப்.4) வியன்னாவில் கூடுகிறது

VAIN-ஆ முடியாம இருந்தாச் சரி..!

11-செப். 11ம் தேதி திருப்பதி செல்கிறார் சோனியா

"சோனி"யா..? ஏழுமலையான் அருள் அவருக்"குண்டா"..?

12-சிங்குர் விவகாரம்: டாடாவிற்கு எம் அன்ட் எம் ஆதரவு

"எம் ஆதரவு" உண்டுன்னு சொன்னாங்களாக்கும்..?


15-மேட்டூர் அணை நீர் மட்டம் 90 அடியாக அதிகரிப்பு

மேட்டூர் தண்ணீர் ரொம்ப உதவியா இருக்கு.. அதைப்போய் "மட்டம்"ன்னு சொல்றாங்களே..!



கோவிச்சுக்காதீங்க காந்தி அண்ணா..!

mgandhi
04-09-2008, 05:27 PM
நன்றி ராஜா

mgandhi
04-09-2008, 05:32 PM
5-9-2008

1-மின்வெட்டால் ஜவுளி ஏற்றுமதி வீழ்ச்சி: ஜெயலலிதா


2-வைகை அணை நீர்மட்டம் 68 அடியை தாண்டியது: வெள்ள அபாய எச்சரிக்கை


3-தமிழகம் முழுவதும் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு


4-வைத்திலிங்கம் தலைமையிலான புதுச்சேரி அமைச்சரவை இன்று பதவியேற்பு

5-விவசாயி மீது துப்பாக்கி சூடு; உடலில் 7 குண்டுகள் பாய்ந்தன


6-கும்பகோணம் அருகே பி.எஸ்.என்.எல். இணைப்பகத்தில் தீ விபத்து


7-கரசேவையை ஆதரித்து பேசியவர் ஜெயலலிதா: கருணாநிதி


8-தினமலர் ஆசிரியர், பதிப்பாளரை கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை


9-சரவணா ஸ்டோர்ஸ் தீவிபத்து: 2 ஊழியர்கள் கைது


10-அத்துமீறி நுழைந்த கேரள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ


11-ஜெயலலிதாவுக்கு பதில் அளிக்க டான்சி நிலம் வழக்கு ஒன்று போதும்: கருணாநிதி


12-நாங்கள் யாரையும் மிரட்டவில்லை: ராயல் கேபிள் விஷன்


13-ஆற்காடு வீராசாமி ராஜிநாமா செய்ய வேண்டும்: இல. கணேசன்


14-ஏழை, எளிய நடுத்தர மக்களுக்காகவே நில உச்ச வரம்பு சட்டம் திருத்தப்படுகிறது: கருணாநிதி


15-அப்பல்லோ மருத்துவமனை சார்பில் ரூ.1,000 கோடி செலவில் புதியதாக 25 மருத்துவமனை

mgandhi
05-09-2008, 06:03 PM
6-9-2008

• வலிமையான பாரதத்திற்கு கல்வி அவசியம்: பிரதமர்

• கிருஸ்துவர்களுக்கு மட்டும் உதவுவதா? - ஜெ

• 'சரவணா': ஓனர்களுக்கு முன்ஜாமீன் இல்லை

• ஸ்பென்சர் பிளாசாவில் தீ: ரூ. 25 லட்சம் சேதம்

• பணவீக்கம் 12.34%: 2வது வாரமாக குறைந்தது

• துபாய் ஹெலிகாப்டர் விபத்து: 2 இந்தியர்கள் பலி

• விஎச்பி யாத்திரை தடுக்கப்படும்: ஒரிஸ்ஸா அரசு

• அணு ஒப்பந்தம் மிக அவசியம்: சோனியா

• மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கி சூடு

• ஜெ.வுக்காக தொண்டர்கள் வேட்பு மனு

• யுஎஸ் ஓபன்: லியாண்டர் ஜோடி சாம்பியன்

• பிரதமருடன் டாடா சந்திப்பு-பேச்சுக்கு மம்தா ரெடி

• தினத்தந்தி, தினகரன் மும்பை பதிப்புகள் தொடக்கம்

• சோனியா வந்த விமானத்தில் 'என்ஜின் ஆப்'!

• தமிழக தொகுதி மறு சீரமைப்புக்கு ஒப்புதல்

ராஜா
06-09-2008, 07:51 AM
6-9-2008

• வலிமையான பாரதத்திற்கு கல்வி அவசியம்: பிரதமர்.

வலிமையான பிரதமருக்கு என்ன அவசியம்ன்னு தெரிஞ்சுகிட்டீங்களா..?

• கிருஸ்துவர்களுக்கு மட்டும் உதவுவதா? - ஜெ

முன்னாள் கன்னி மேரி இப்படிச் சொல்லலாமா..?

• 'சரவணா': ஓனர்களுக்கு முன்ஜாமீன் இல்லை.

அண்ணாச்சிகள் கதி அப்புறம் என்னாச்சி..?

• ஸ்பென்சர் பிளாசாவில் தீ: ரூ. 25 லட்சம் சேதம்.

இது என்ன "தீ பார்ட்டி" வாரமா..?

• பண'வீக்கம்' 12.34%: 2வது வாரமாக குறைந்தது

மனசுக்கு 'ஒத்தடம்' தரும் செய்தி..!

• அணு ஒப்பந்தம் மிக அவசியம்: சோனியா

யாருக்குன்னு சொன்னீங்கன்னா தேவலை..!

• ஜெ.வுக்காக தொண்டர்கள் வேட்பு மனு

அடடே..! எங்கே..? சென்னையா.. தஞ்சையா..?

• பிரதமருடன் டாடா சந்திப்பு-பேச்சுக்கு மம்தா ரெடி

சந்திப்பு முடிஞ்சதும் 'டாட்டா' காட்டியிருப்பாங்களே..!

• தினத்தந்தி, தினகரன் மும்பை பதிப்புகள் தொடக்கம்

• சோனியா வந்த விமானத்தில் 'என்ஜின் ஆப்'!

"ஆன்"டவனே.....! அப்புறம் என்ன ஆச்சு..?


• தமிழக தொகுதி மறு சீரமைப்புக்கு ஒப்புதல்

பார்த்து செய்யுங்கப்பா.. எங்க ஊரை சென்னை துறைமுகத்துல கொண்டுபோய் போட்டுடாதீங்க..!

அமரன்
06-09-2008, 07:59 AM
காந்தி அண்ணாவின் உடனடிச் செய்தியும்
ராஜா அண்ணாவின் அதிரடிக் கொமென்டும் கலக்கல்...

mgandhi
07-09-2008, 12:37 PM
7-9-2008

1-1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி: கருணாநிதி 15-ந்தேதி தொடங்கி வைக்கிறார்

2- தக்கலையில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு - கடைகள் சூறை

3- மின்வெட்டை கண்டித்து கோவையில் கண்ண்ல் கறுப்பு துண் கட்டி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்

4- இலங்கை கடற்படை அட்டூழியம்: மன்மோகன்சிங்குக்கு கருணாநிதி கடிதம்

5- காஷ்மீரில் தீவிரவாதிகளின் தளபதி சுட்டுக்கொலை

ராஜா
07-09-2008, 04:55 PM
7-9-2008

1-1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி: கருணாநிதி 15-ந்தேதி தொடங்கி
வைக்கிறார்.

அரிசி கிலோ 1 ரூ. உப்பு கிலோ 10 ரூ. !

2- தக்கலையில் விநாயகர் ஊர்வலத்தில் கல்வீச்சு - கடைகள் சூறை

விநாயகருக்கு சூறைத் தேங்காய் விடுவாங்க..

இது என்ன.. வழிப் பிள்ளையாருக்கு "கடை" தேங்காயா..?


3- மின்வெட்டை கண்டித்து கோவையில் கண்ணில் கறுப்பு துணி கட்டி விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்.

கறுப்பு (துணி) எம்.ஜி.ஆர்..!

4- இலங்கை கடற்படை அட்டூழியம்: மன்மோகன்சிங்குக்கு கருணாநிதி கடிதம்.

கடிதில் நடவடிக்கை தருமா கடிதம்..?

mgandhi
07-09-2008, 07:45 PM
8-9-2008


1-."திமுகவைப் பற்றி ராமதாஸýக்கு ஏன் கவலை?': கருணாநிதி கேள்வி


2-.'சரவணா ஸ்டோர்ஸ்' உரிமையாளர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்


3-.அணுகுண்டு சோதனைக்குத் தடை: அமெரிக்காவிடம் பேச இந்தியா முடிவு?


4-.நிலக்கரி ஊழல் குற்றச்சாட்டு; ராமதாஸின் கலப்படமற்ற கற்பனை: கருணாநிதி


5-.மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச் சூடு: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்


6-.மதுக்கடைகளை அரசு படிப்படியாக மூட வேண்டும்: கோ.க. மணி


7-.அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறுவதற்கு குறுகிய அவகாசமே உள்ளது: ரைஸ்


8-.மாத இறுதியில் பிரதமர் அமெரிக்கா பயணம்


9-.ஆட்சிப் பொறுப்புக்கு வர விரும்புகிறோம்: கே.வீ.தங்கபாலு


10-.துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் சாவு: காஷ்மீரில் மீண்டும் வன்முறை


11-.சிங்குர் நிலப் பிரச்னை பேச்சு நாளை ஒத்திவைப்பு


12-.என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு


13-.முதல்வர் கருணாநிதியை புதுச்சேரி முதல்வர் சந்தித்தார்



14-.ரயில் நிலையங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு தீவிரம்


15-.புதுவையில் குண்டர் சட்டம்: முதல்வர் வைத்திலிங்கம்

ராஜா
08-09-2008, 06:31 AM
8-9-2008


1-."திமுகவைப் பற்றி ராமதாசுக்கு ஏன் கவலை?': கருணாநிதி கேள்வி.

அதானே..? கலைஞரே அதுபற்றிக் கவலைபடறதில்ல..!


2-.'சரவணா ஸ்டோர்ஸ்' உரிமையாளர்களை பிடிக்க போலீஸ் தீவிரம்

கடைக்குள்ளேயே சாமான் வாங்கறமாதிரி ஒளிஞ்சிட்டு இருக்காங்களோ என்னவோ..?


5-.மீனவர்கள் மீது இலங்கை துப்பாக்கிச் சூடு: பிரதமருக்கு கருணாநிதி கடிதம்.

நேத்து போட்ட கடிதம் என்னாச்சு..? முகவரி தப்பாயிடுச்சோ..?


6-.மதுக்கடைகளை அரசு "படிப்படி"யாக மூட வேண்டும்: கோ.க. மணி.

குடிச்சுட்டு வாசல்படியிலேயே விழுந்து கிடக்கறாங்கன்னு அப்"படி" சொல்லியிருப்பாரோ..?


8-.மாத இறுதியில் பிரதமர் அமெரிக்கா பயணம்.

நிம்மதியா போயிட்டு வாங்கப்பு.. இனிமே வாய்ப்பு கிடைக்காது..!!


9-.ஆட்சிப் பொறுப்புக்கு வர விரும்புகிறோம்: கே.வீ.தங்கபாலு.

யாருக்குதான் அந்த விருப்பம் இல்லை..?


12-.என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பு.

இப்போ வேலை செய்துட்டு இருக்காங்களா என்ன..?


13-.முதல்வர் கருணாநிதியை புதுச்சேரி முதல்வர் சந்தித்தார்.

உங்களை கவுக்காம எப்படி விட்டு வச்சிருக்காங்கன்னு தெரிஞ்சுக்க வந்திருப்பாரோ..?


14-.ரயில் நிலையங்களில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தடுக்க மத்திய அரசு தீவிரம்.

அப்போ இனிமே போர்ட்டர் எல்லாம் இருக்க மாட்டாங்களா..?

15-.புதுவையில் குண்டர் சட்டம்: முதல்வர் வைத்திலிங்கம்

புது வை(த்தி) ஒல்லியா இருக்காருங்கற திமிர்..!

mgandhi
09-09-2008, 01:18 AM
மிக்க நன்றி ராஜா

mgandhi
09-09-2008, 01:20 AM
9-9-2008

1-ராமேசுவரம் கடல் பகுதியில் மத்திய பாதுகாப்பு புலனாய்வு துறை அதிகாரி ஆய்வு


2-தஞ்சை சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் ஊழியரை கொன்று விட்டு 6 சிறுவர்கள் தப்பி ஓட்டம்



3-வயலின் இசைக்கலைஞர் குன்னக்குடி வைத்தியநாதன் மாரடைப்பால் மரணம்


4-ஜெயாப்பச்சன் மன்னிப்பு கேட்கும் வரை அமிதாப் குடும்பத்தினர் நடிக்கும் படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம்: ராஜ் தாக்கரே எச்சரிக்கை


5-காஷ்மீரில் துப்பாக்கி சூடு; 28 பேர் காயம்


6-பரபரப்பான சூழ்நிலையில் பாராளுமன்றம் அடுத்த மாதம் 17-ந் தேதி கூடுகிறது


7-தமிழ்நாட்டில் முதல் முறையாக தபால் நிலையங்களில் ரெயில் டிக்கெட் பெறும் வசதி


8-அமெரிக்க பாராளுமன்ற ஒப்புதலுக்கு பிறகுதான் அணு வர்த்தகத்தில் ஈடுபடுவோம்: பிரணாப் முகர்ஜி


9-தொழிற்சாலைகளுக்கான டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு


10-விஜயகாந்திற்கு அ.தி.மு.க. கண்டனம்


11-ஜாமீன் நிபந்தனையை எதிர்த்து வக்கீல்கள் செவ்வாய்க்கிழமை கோர்ட்டு புறக்கணிப்பு


12-இந்தியா அணு ஆயுத சோதனை நடத்த எந்த வித தடையும் இல்லை: மத்திய மந்திரி கபில் சிபல் திட்டவட்ட அறிவிப்பு


13-ஒப்பந்த தொழிலாளர்கள் வேலைக்கு திரும்ப வேண்டும்: என்.எல்.சி. நிர்வாகம்


14-கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியை நீக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை


15-புகார் கொடுத்தவருக்கு பாதுகாப்பு தராவிட்டால் கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடரலாம்

mgandhi
09-09-2008, 06:18 PM
10-9-2008

.1-புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இலங்கை ராணுவம்


.2-ரூ. 45,000 கோடியில் மேலும் ஒரு சுத்திகரிப்பு ஆலை: சிபிசிஎல் திட்டம்


.3-புதிய விமான நிலையத்தின் தரம் மோசம்: முதல்வர் அதிருப்தி


.4-100 நாளில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலைதான் எடியூரப்பா அரசின் சாதனை: காங்கிரஸ்


.5-பெங்களூர் மெட்ரோ ரயில் திட்டம்: கர்நாடகம் 200 கோடி தரும்


.6-ரூ.36 கோடியில் வளர்ச்சிப் பணிகள்: ஸ்டாலின்


.7-மயக்க பிஸ்கட் கும்பலுக்கு வலைவீச்சு: கொள்ளையர்களைக் கைது செய்ய ஓடும் ரயில்களில் ரகசிய கேமிரா


.8-தே.மு.தி.க.வினருக்கு எதிராக நடிகர் வடிவேலு சாட்சியம்


.9-123 ஒப்பந்தத்துக்கு அவகாசத்துக்குள் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைத்துவிடும்: புஷ் நிர்வாகம்


.10-மகாராஷ்டிர மக்களுக்கு எரிச்சலுட்டாதீர்கள்: பால் தாக்கரே


.11-தீவிரவாதத் தாக்குதல் அச்சத்தில் அமெரிக்கா!


.12-"டாடா ஆலை அமையும் இடத்தில் 300 ஏக்கர் நிலம் வேண்டும்'


.13-காஷ்மீர் பிரச்னை தீர நல்ல செய்தி தருவோம்: ஜர்தாரி


.14-மின்தடை: முட்டை ஏற்றுமதி கடும் பாதிப்பு!



.15காஷ்மீரில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியது

உதயசூரியன்
09-09-2008, 09:50 PM
10-9-2008
.1-புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இலங்கை ராணுவம்
இலங்கை ராணுவ ரேடார்கள் அழிப்பு...
வான் புலிகள். கரும் புலிகள் தாக்குதல்..
இது தானே செய்தி..

செய்தி மாற்றியும் இருட்டடிப்பும் செய்ய பட்டுள்ளதே..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

தீபன்
10-09-2008, 02:05 AM
10-9-2008

.1-புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இலங்கை ராணுவம்



இலங்கை ராணுவ ரேடார்கள் அழிப்பு...
வான் புலிகள். கரும் புலிகள் தாக்குதல்..
இது தானே செய்தி..

செய்தி மாற்றியும் இருட்டடிப்பும் செய்ய பட்டுள்ளதே..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

உங்கள் செய்தி சேவைக்கு நன்றியும் பாராட்டுக்களும் நண்பரே.
ஆனாலும், உங்கள் ஒரு செய்தியிலேனும் ஏற்படும் நம்பகத்தன்மை பற்றிய சந்தேகமானது உங்கள் ஏனைய செய்திகளும் இவ்வாறானதுதானோ என்ற ஐயத்தை ஏற்படுத்தி விடக்கூடியது...!
மேற்படி செய்தி தொடர்பாக இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?p=381067#post381067post381067) தனித் திரியே உள்ளது. அதில் நீங்கள் குறிப்பிட்ட விடயம் உட்பட மேலும் பல முக்கிய விடையங்கள் உள்ளது.
நீங்கள் குறிப்பிட்ட செய்தி சம்பந்தப்பட்ட த்ரப்பால் ஆதாரமேதுமற்று பொய்யாக வெளியிடப்பட்ட ஒன்று. அது உண்மையாக இருந்திருப்பின் அத் தரப்பின் பிரதிபலிப்பு இவ்வளவு அமைதியாக இருந்திருக்காது என்பது பொதுவாக பலருக்கும் தெரியும். மிக ஆர்ப்பாட்டமாக அந்த செய்தியையே இன்னும் பல நாட்களுக்கு சொல்லிக் கொண்டிருந்திருப்பர்...
உங்கள் பகிர்வில் தவறில்லை. ஆனால், ஆதாரமற்ற செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்தை அதனுடன் தொடர்புபட்ட அதனிலும் முக்கிய செய்திகளுக்கு கொடுக்காமைதான் நெருடுகிறது.:icon_b:

mgandhi
10-09-2008, 05:22 PM
11-9-2008

1-.தாக்குதலில் ஈடுபட்ட விமானம் பத்திரமாக திரும்பிவிட்டது: விடுதலைப் புலிகள்


2-.காஷ்மீர் பிரச்சனைக்கு விரைவில் ஒருங்கிணைந்த முடிவு: ஜர்தாரி


2-.ரூ. 11 கோடியில் பால் உற்பத்தி திட்டம்: முதல்வர்


4-.சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் சரண்


5-.மக்களுக்கு நல்லது செய்வோம் என்று எழுதி தரும் கட்சியுடன் கூட்டணி: விஜயகாந்த்


6-.5 இடங்களில் பதநீர் கொள்முதல் நிலையம்: திட்டக்குழு உறுப்பினர்


7-.ஈரானில் நிலநடுக்கம்


8-.அணுக்கதிர்களால் பாதிப்பு இல்லை: கலாம்


9-.கிராமப்புறங்களிலும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி: நாராயணமூர்த்தி யோசனை


10-.270 ஆண்டுக்கு முற்பட்ட ரயில் பாலம் விரைவில் சுற்றுலா மையமாகிறது


11-.காலிறுதியில் பிரஜ்னேஷ், சுனில்குமார்


12-.இந்திய -ஆஸ்திரேலிய ஆட்டம் மழையால் பாதிப்பு


13-.அரை இறுதியில் ஆர்மி லெவன்


14-.கண்டெய்னர் லாரி மோதி கல்லூரி ஊழியர் சாவு

mgandhi
10-09-2008, 05:31 PM
1-.தாக்குதலில் ஈடுபட்ட விமானம் பத்திரமாக திரும்பிவிட்டது: விடுதலைப் புலிகள்(11-9-2008)

1-புலிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியது இலங்கை ராணுவம்(10-9-2008)

இலங்கை அரசும் விடுதலை புலியும் மாறி மாறி பத்திரிக்கைகளுக்கு தரும்செய்தியை தான் பத்திரிக்கைகள் வெளிஇடுகின்றன் இந்த செய்தி இரண்டும் தினமணியில் வந்தவை.



இலங்கை ராணுவ முகாம் மீது தாக்குதல் நடத்திய விமானம் பத்திரமாக திரும்பிவிட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.


வவுனியாவில் உள்ள ராணுவ தலைமை அலுவலகம் மீது நேற்று விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதல் நடத்தினர். இதில், ராணுவத்தினர் 10 பேர் உட்பட 22 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதலில் ஈடுபட்ட புலிகளின் விமானத்தை சுட்டு வீழ்த்திவிட்டதாக இலங்கை ராணுவம் கூறியிருந்தது. ஆனால், இதை புலிகள் மறுத்துள்ளனர்.


இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''எங்கள் தாக்குதலில் வவுனியாவில் உள்ள ராணுவ தலைமை அலுவலகம் முற்றிலும் சேதமடைந்துவிட்டது. தாக்குதலில் ஈடுபட்ட எங்களது விமானம் பத்திரமாக அதன் தளத்திற்கு திரும்பிவிட்டது'' என்று கூறியுள்ளனர்.

தினமணி


நன்றி
தீபன்
உதயசூரியன்

mgandhi
11-09-2008, 06:15 PM
12-9-2008


1-சர்வே செய்யாமல் ஒகேனக்கல் திட்டத்தை நிறைவேற்ற கூடாது: கர்நாடகா


2-ஜெ.,க்கு அத்வானி வாழ்த்து



3-பணவீக்கம் குறைவு



4-ஈரோட்டில் மினி பஸ் டிரைவர்கள் திடீர் போராட்டம்



5-உடல் தகுதியில் முன்னேறும் ஸ்ரீசாந்த்



6-நாமக்கல் அருகே படகு கவிழ்ந்து ஒருவர் பலி



7-பெட்ரோல் மானியத்தை நிறுத்த இந்தியாவுக்கு ஐ.இ.ஏ., வேண்டுகோள்



8-ராஜ் தாக்ரே ஆதரவாளர்களின் வன்முறை: சோனியா கண்டனம்



9-ஆகஸ்ட்டில் கார் விற்பனை குறைந்து பைக் விற்பனை அதிகரித்திருக்கிறது



10-பீகாரில் படகு கவிழ்ந்ததில் ஏராளமானோர் பலி



11-பா.ஜ தேசிய செயற்குழு கூட்டம் நாளை கூடுகிறது



12-அமிதாப்பிற்கு எதிரான நடவடிக்கை வாபஸ்: ராஜ் தாக்ரே



13-புதுச்சேரி முதல்வர் பாரதியார் நினைவிடத்தில் அஞ்சலி



14-ஓணம் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து


15-கோவை மாவட்ட அணைகள் நிரம்பியது

mgandhi
12-09-2008, 05:10 PM
13-9-2008

1-.தமிழ் புத்தாண்டு விவகாரம்: தமிழக அரசுக்கு நோட்டீஸ்


2-.காற்றாலை மின்சாரம் கணக்கில் வராது: விஜயகாந்துக்கு அதிமுக பதில்


3-.ஈழத்தமிழர்களுக்கு உதவி: மத்திய அரசுக்கு கம்யூனிஸ்ட் கோரிக்கை


4-.வியாபாரிகளுடன் தகராறு: இந்து முன்னணி நிர்வாகிகள் இருவர் கைது


5-ரூ. 1,300 கோடியில் மின்னணு பூங்கா: பெங்களூர் நிறுவனம் சென்னையில் அமைக்கிறது


6-.நாளை பெங்களூரில் பாஜக பேரணி: அத்வானி பங்கேற்பு


7-.கள்ளநோட்டு மூலம் பொருளாதாரத்தைச் சீர்குலைக்க சதி: ராஜ்நாத் சிங் புகார்


8-.சியாச்சின், சர் கிரீக் பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு: ஜர்தாரி நம்பிக்கை


9-.காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை


10-.ஆங் சான் சூகி மீதான தடைகள் நீக்கம்



11-.ஊடுருவ முயன்ற வங்கதேசத்தவர் 145 பேர் கைது


12-.காஷ்மீர் தீவிரவாதிகளுக்கு மாதம் ரூ.30 கோடி சம்பளம்: பாக். உளவு அமைப்பு வழங்குகிறது


13-.பொதுமக்கள் மீது தொடரும் தற்கொலைப் படை தாக்குதல்: பான்-கி-மூன் வேதனை


14-.பாகிஸ்தானில் தீவிரவாதிகள் தாக்குதல்: 32 ராணுவத்தினர் பலி

ராஜா
13-09-2008, 05:47 AM
பல்வேறு தகவல்களுக்கு நன்றி அண்ணா..!

mgandhi
13-09-2008, 06:01 PM
பல்வேறு தகவல்களுக்கு நன்றி அண்ணா..!

மிக்க நன்றி ராஜா

mgandhi
13-09-2008, 06:02 PM
14-9-2008

1-.தில்லியில் தொடர் குண்டுவெடிப்பு: 18 பேர் பலி


2-.சிங்குர் விவகாரம்: புத்ததேவ் மீது மம்தா பாய்ச்சல்


3-.மின்வெட்டு: 'நான் ராஜிநாமா செய்ய தேவையில்லை' }ஆர்க்காடு வீராசாமி


4-.அரிசி உற்பத்தி: இந்தியா அபார சாதனை - சரத் பவார்


5-.கருக்கலைப்பு சட்டத்தில் திருத்தம்: அமைச்சர் அன்புமணி


6-.அஸ்த்ரா ஏவுகணை: இந்தியா வெற்றிகரமாக சோதனை


7-.பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மலேசியாவில் 2 பத்திரிகையாளர்கள் கைது


8-.அமெரிக்காவைத் தாக்கியது 'இகே' புயல்


9-.ஜார்ஜியாவிலிருந்து ரஷியப் படைகள் வாபஸ்


10-.கிரிக்கெட் கேப்டன்கள் கூட்டம் ஒத்திவைப்பு


11-.ஆப்கானில் மனித வெடி குண்டு தாக்குதல்: ஆளுநர் பலி


12-.காங்கிரஸ் காரியக் கமிட்டி தில்லியில் கூடியது


13-.இந்தோனேசியாவில் நிலநடுக்கம்


14-.அமெரிக்காவில் ரயில்கள் நேருக்குநேர் மோதல்: 15 பேர் பலி

mgandhi
14-09-2008, 06:27 PM
15-9-2008

1-இன்று பொது **விடுமுறை: த*மிழக அரசு அ*றி*வி*ப்பு!


2-ஏழைகளு*க்கும்* உயர்கல்*வி அ*ளி*ப்பதே கு*றி*க்கோ*ள்: கருணாநிதி!


3- செ*ப்.16 கடையடை*ப்பு போரா*ட்ட*த்து*க்கு இ*ந்*திய க*ம்யூ*னி*ஸ்*ட் ஆதரவு!


4- ராமேசுவரம் நடு*க்கட*லி*ல் படகு கவிழ்ந்து அகதிகள் 7 பே*ர் ப*லி!


5- டெ*ல்*லி கு*ண்டு வெடி*ப்*பு எ**திரொ*லி: த*மிழக*த்*தி*ல் பல*த்த பாதுகா*ப்பு!


6-த**ஞ்சாவூ*ர் அருகே வேன்லாரி மோதல்: 3 பேர் ப*லி!


7- கேரளாவு*க்கு கட**த்த முய*ன்ற ரூ.15 ல*ட்ச**ம் ம*தி*ப்பு*ள்ள ரேஷ*ன் அ*ரி*சி *ப*றிமுத*ல்!


8- டி.டி.வி.தினகரன் மனு: உய*ர் *நீ*திம*ன்ற*ம்!


9-மாவட்ட தலைமை அரசு மரு*த்துவமனைக*ளிலு*ம் சித்த மருத்துவ பிரிவு: பனபாக லட்சுமி தகவல்!


10- சென்னையில் இருந்து திருச்சி, மதுரை*க்கு சிறப்பு ரயில்: தெ*ன்னக ரயில்வே அறிவிப்பு!


11- *மி*ன் த*ட்டு*ப்பாடு மெ*ல்ல மெ*ல்ல ச*ரியா*கி*விடு*ம்: கே.*வி.த*ங்கபாலு!


12-பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ் ஈழம் மலரும்: ராமதாஸ்!


13- வணிகர்கள் கடையடைப்புக்கு ஆதரவு : வரதராஜன்!


14- சமைய*ல் எ*ரிவாயு இணைப்பு பெறுவதற்கு குடு*ம்ப அ*ட்டை க*ட்டாய*மி*ல்லை: அரசு அறிவிப்பு!


15 க*ல்*வி *நிறுவன வாகன*ங்களு*க்கு ம*ஞ்ச*ள் *நிற வ*ர்ண*ம்: த**மிழக அரசு உ*த்தர*வு!

mgandhi
15-09-2008, 07:00 PM
16-9-2008

1-எப்போது தேர்தல் வந்தாலும் அ.தி.மு.க.-ம.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்: வைகோ


2-கட்சி மாறிய எம்.பி. பதவி ரத்து: சபாநாயகர் உத்தரவு


3-சங்கரன்கோவில் அருகே அ.தி.மு.க.-ம.தி.மு.க. மோதல்: 3 பேருக்கு அரிவாள் வெட்டு

4-ஆந்திரா சட்ட சபையில் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி

5-ஆமதாபாத், டெல்லி தொடர்ந்து தீவிரவாதிகளின் அடுத்த குறி மும்பை

6-சோனியாவின் முழு ஆதரவு எனக்கு உள்ளது: சிவராஜ் பட்டீல் பேட்டி


7-கச்சத்தீவு அருகே ராமேசுவரம் மீனவர்களின் படகுகளை உடைத்து துப்பாக்கியால் சுட்டு மிரட்டல்

8-ரேஷன் கடைகளில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார்

9-ரேஷன் கடைகளில் 1 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி திட்டத்தை கருணாநிதி தொடங்கி வைத்தார்

10-லாட்டரி சீட்டை ஒழிக்க கோரி வழக்கு: மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீசு

11-குஜராத் விநாயகர் ஊர்வலத்தில் கலவரம்: துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

12-நெல்லையில் அரசு கேபிள் டி.வி. ஒளிபரப்பு தொடங்கியது

13-தமிழக மக்கள் அரசியல் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்-ஜெயலலிதா பேட்டி

14-தீவிரவாதிகள் பிரச்சினையை உள்துறை சரியாக கையாளவில்லை-லல்லுபிரசாத் யாதவ் குற்றச்சாட்டு

15-கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல்:மாநில உள்துறை அமைச்சர் பதவி விலக தேவேகவுடா கோரிக்கை

mgandhi
16-09-2008, 06:37 PM
17-9-2008

1-
நாங்குநேரியில் தேவர் சிலை அவமதிப்பு: 4 பஸ்கள் உடைப்பு

2-
திண்டுக்கல் இணை சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு போலீசார் சோதனை

3-
நாங்குநேரியில் தேவர் சிலை அவமதிப்பு: 4 பஸ்கள் உடைப்பு

4-
தூத்துக்குடியில் தொழிற்சாலையில் பயங்கர தீ: ரூ.35 கோடி சேதம்

5-
தீவிரவாத குற்றங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுங்கள்: சிவராஜ் பட்டீலுக்கு காங்கிரஸ் கட்டளை

6-
விஜயன் கொலை:பானுமதியை 3 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி


7-
கோட்டை முன்பு ஆர்ப்பாட்டம்: சட்டக்கல்லூரி மாணவர்கள் கைதாகி விடுதலை

8-
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெடி குண்டு மிரட்டல்: போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

9-
எம்.பி.பி.எஸ். இறுதி கவுன்சிலிங் 24-ந் தேதி தொடங்குகிறது

10-
அரசு பணியில் இருக்கும் பெண்களுக்கு பிரசவ கால விடுமுறை 6 மாதங்களாக உயர்வு

11-
7 ஆண்டு தண்டனை அனுபவித்தவர்கள்தான் விடுதலை செய்யப்பட்டனர்: முதல்-அமைச்சர் பதில்

12-
சென்னை மாநகராட்சி 2 வார்டுகளில் 18-ந்தேதி இடைத்தேர்தல்

13-
திருச்சியில் கலைஞர் அறிவாலயத்தை 21-ந்தேதி முதல் அமைச்சர் கருணாநிதி திறந்து வைக்கிறார்

14
தீவிரவாதத்தை ஒடுக்க கடுமையான சட்டங்கள் தேவை-மொய்லி கமிட்டி

15-
கர்நாடகவில் கிறிஸ்துவ ஆலயங்கள் மீது தாக்குதல்: காங்கிரஸ் சி.பி.ஐ. விசாரணை கோரிக்கை

mgandhi
18-09-2008, 05:47 PM
19-9-2008

1-நான்கு ஆண்டுகளில் மட்டும் குண்டு வெடிப்புக்கு 650 பேர் பலி

2-ஏமன் குண்டு வெடிப்பில் பலியானவர் கேரள பெண்

3-45 புதிய மருத்துவ படிப்புகள் அடுத்த ஆண்டு துவக்கம்

4-பொடா சட்டம் தேவையில்லை மத்திய அரசு முடிவு

5-அ.தி.மு.க., தே.மு.தி.க., வுடன் கூட்டணி பற்றி ஆலோசனை: என். வரதராஜன்

6-தமிழகத்தில் இன்னும் 6 மாதத்திற்கு மின்வெட்டு தொடரும்: ஜெய்ராம் ரமேஷ்


7-ராஜா மீதான ஆள்கடத்தல் வழக்கு சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றம்

8-டாடா நிறுவனத்திற்கு 1800 ஏக்கர் நிலம் வழங்க தயார்: கர்நாடக அரசு

9-ஒலிம்பிக் தங்கமகன் அபினவ் பிந்திராவுக்கு 50 லட்சம் பரிசு

10-10 கிராம் தங்கத்தின் விலை ரூ.1000 உயர்ந்தது

11-நிலுவைத்தொகை வழங்க லஞ்சம் : ஆவின் பொதுமேலாளர் கைது

12-தீவிரவாதத்திற்கெதிரான சட்டம் : பா.ஜ.க., ஆதரவு

13-முதுகுளத்தூர் பகுதியில் தொடர் பதற்றம்:கடைகள் அடைப்பு

14உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் பதவிக்கு ஆபத்து இல்லை

mgandhi
19-09-2008, 06:24 PM
20-9-2008

1-.தில்லியில் துப்பாக்கிச் சண்டை: தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக் கொலை; 2 பேர் தப்பியோட்டம்


2-.தேர்தல் கூட்டணி பற்றி முடிவு செய்ய ஜெயலலிதாவுக்கு முழு அதிகாரம்: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம்


3-.நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியில் அதிமுகவின் எதிர்காலம்: பொதுக் குழுவில் ஜெ.


4-.தில்லி துப்பாக்கிச் சண்டையில் காயமடைந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் உயிரிழந்தார்


5-.25-ம் தேதியை அணுசக்தி ஒப்பந்த எதிர்ப்பு தினமாகக் கடைப்பிடிக்க கம்யூனிஸ்ட்கள் முடிவு


6-.ராணுவத் தாக்குதலை இலங்கை நிறுத்த அக்.2-ல் உண்ணாவிரதப் போராட்டம்: இந்திய கம்யூனிஸ்ட்


7-.பங்குச் சந்தை 700 புள்ளிகள் உயர்வு


8-.தீவிரவாதத்திற்கு எதிரான சட்டங்களை கடுமையாக்க வேண்டும்: கிரண் பேடி


9-.தில்லி பாதுகாப்பு: சிவராஜ் பாட்டீல் தலைமையில் மறுஆய்வு


10-.ஒரிசாவில் வெள்ளம் : ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்


11-.மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை: மோடி, பட்நாயக் குற்றச்சாட்டு


12-.டேவிஸ் கோப்பை : தொடக்க ஆட்டத்தில் இந்தியா தோல்வி


13-.வங்கிகள் இணைப்பை கண்டித்து வங்கி ஊழியர்கள் செப்.24-ல் வேலைநிறுத்தம்


14-.இலங்கை ராணுவம்-புலிகள் மோதல்: 46 பேர் சாவு



15-.நேபாள அமைச்சர் திடீர் ராஜிநாமா

ராஜா
21-09-2008, 04:43 PM
கேப்டனை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்..!

வைகைப்புயல் அதிரடி அறிவிப்பு..!

sakthim
22-09-2008, 05:12 AM
கேப்டனை எதிர்த்து தேர்தலில் போட்டியிடுவேன்..!

வைகைப்புயல் அதிரடி அறிவிப்பு..!


தேர்தலில் போட்டி போடலாம் தவறு இல்லை,ஆனா அவருதான் வடிவேல் வீட்ட்டு மேல கல்லை போட்டு பிரச்சனை பண்ண சொன்ன மாதிரி எல்லா செய்திகளும் வந்து கொண்டு உள்ளன,

இது தவறான முன் உதாரணம்,யாராக இருந்தாலும் செய்தது தவறு தான், ஆனால் யார் செய்தார்கள் என்பதை தீர விசாரிக்க வேண்டும்.

mgandhi
22-09-2008, 05:47 PM
23-9-2008

1-மீனாட்சி கோவில் பாதுகாப்பு: டி.ஜி.பி., நேரில் ஆய்வு செய்கிறார்

2-தூத்துக்குடி அருகே மீனவர்களின் படகு மீது காவல் படை கப்பல் மோதியது

3-கிரிக்கெட்: ஆஸி., அணி இன்று இந்தியா வந்தது

4-சர்ச்சுகள் மீது தாக்கினால் குண்டர் சட்டம் பாயும் கர்நாடக அரசு எச்சரிக்கை

5-அமெரிக்கா புறப்பட்டார் பிரதமர் மன்மோகன்சிங்

6-கிரிக்கெட்: பைனலில் இந்தியா-ஆஸ்திரேலியா ஏ அணிகள் மோதல்

7-யமுனை ஆற்றில் பயங்கர வெள்ள பெருக்கு

8-விஜயகாந்தை எதிர்த்து தேர்தலில் நிற்க தயார்: வடிவேலு சவால்

9-டென்னிஸ் ரேங்கிங்: டினரா சபினா முன்னேற்றம்

10-சரவணா ஸ்டோர்ஸ் தீ விபத்து வழக்கு: உரிமையாளர்களுக்கு ஜாமீன்

11-வடிவேலு மணிக்கு ஒருமுறை மாற்றி பேசுகிறார்: விஜயகாந்த் பதிலடி

12-வங்கிகள் வேலை நிறுத்தம் தேவையற்றது: சிதம்பரம்

13-விஜயன் கொலை வழக்கு: பானுமதி ஜாமீன் மனு தள்ளுபடி

14-ஆதிஃப் லேப்டாப்பில் டில்லி குண்டு வெடிப்பிற்கான ஆதாரங்கள் கண்டுபிடிப்பு

15-மகாராஷ்டிராவில் வடமாநிலத்தவர் குடியேற அனுமதிக்காதீர் : ராஜ் தாக்கரே

mgandhi
23-09-2008, 05:56 PM
24-9-2008

1-கோல்கத்தா ஹவுரா ரயில் நிலையத்தில் வெடிகுண்டு


2-கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்; பொங்கல் முதல் செயல்படத் தொடங்கும்: ஸ்டாலின்


3-கிறிஸ்தவ அமைப்புகள் குறித்து சிறுபான்மை ஆணையத்திடம் விஹெச்பி புகார்


4-தில்லி: ரயில்வே கட்டிடத்தில் வெடிகுண்டு வதந்தி


5-அலைக்கற்றை கட்டணம் அக்டோபரில் அறிவிக்கப்படும்: ஆ. ராஜா


6-பஜ்ரங் தளத்தை தடை செய்யவேண்டும்: முலாயம்


7-டாடா ஆலை விவகாரம்: நிவாரணத்தை ஏற்க 2000 விவசாயிகள் மறுப்பு


8-முன் ஜாமீன் கேட்டு விஜயகாந்த் மனு


9-2010 உலகக் கோப்பை கால்பந்து : அதிகாரப்பூர்வ சின்னம் வெளியீடு


10-தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளியின் கிராமத்தில் போலீசார் தீவிர சோதனை


11-பிஎம்டபிள்யூ கார் விபத்து வழக்கு: போலீஸýக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


12-விரைவில் திருமணம்: ராகுல் காந்தி


13-சென்செக்ஸ் 424 புள்ளிகள் சரிவு


14-பொறுத்தது போதும் என இந்து மதத்தினர் முடிவெடுத்துவிட்டனர்: இல.கணேசன்


15-விஜயகாந்துடன் கூட்டணி வாய்ப்பு: இந்திய கம்யூனிஸ்ட்

kampan
23-09-2008, 08:07 PM
தமிழ்நாட்டில் தொடருந்து மறியல் போராட்டம்: முன்னணி தலைவர்கள் உட்பட திராவிடர் கழகத்தினர் அணி அணியாகக் கைது

மேலதிக செய்திகளுக்கு (படங்களுடன்)
http://www.puthinam.com/full.php?2b1VoAe0dUcYA0ecKA4A3b4U6Dr4d3f1e3cc2AmI2d424OO2a030Mt3e

http://www.puthinam.com/full.php?2b1VoAe0dUcYA0ecKA4A3b4U6Dr4d3f1e3cc2AmI2d424OO2a030Mt3e (http://www.puthinam.com/full.php?2b1VoAe0dUcYA0ecKA4A3b4U6Dr4d3f1e3cc2AmI2d424OO2a030Mt3e)

kampan
24-09-2008, 12:31 PM
ஈழத் தமிழர்களையும் தமிழக கடற்றொழிலாளர்களையும் காத்திட வலியுறுத்தி திருச்சியில் உண்ணாநிலை போராட்டம்

மேலதிக செய்திகளுக்கு (படங்களுடன்)
http://www.puthinam.com/full.php?2b1...424OO2a030Mt3e (http://www.puthinam.com/full.php?2b2RuGe0daj6F0ecKAaJ3b40aBS4d4f7g3cc2JnR2d43dUS2b032Ms3e)

mgandhi
24-09-2008, 06:24 PM
25-9-2008

1-ஸ்ரீபெரும்புதூர் அருகே மின்னல் தாக்கி 3 பேர் பலி

2-இந்திய கிரிக்கெட் வாரியம் வருமானம் ஆயிரம் கோடி

3-மதுக்கடைகளை நிரந்தரமாக இழுத்து மூட உத்திரவிடவேண்டும் :டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

4-பொதுத்துறை நிறுவன ஊழியர்களுக்கு வருமான உச்சவரம்பு இன்றி போனஸ்: முதல்-அமைச்சர் கருணாநிதி தகவல்

5-ரூ.10 ஆயிரம் கோடி கேட்டு முகேஷ் அம்பானி மீது அனில் அம்பானி வழக்கு

6-30-ந் தேதி நள்ளிரவு முதல் கர்நாடக மாநிலத்திற்கு தமிழக லாரிகள் செல்லாது

7-சிங்கூரில் இருந்து டாடா நிறுவனம் எந்திரங்களை வெளியேற்றியது

8-சின்னமனூர் நகரசபை தலைவர் மீதான நம்பிக்கை இல்லா தீர்மான கூட்டம் தள்ளிவைப்பு

9-தமிழ்நாட்டில் மின் பற்றாக்குறைக்கு காரணம் என்ன?; ஜெயலலிதா அறிக்கை

10-`ஆன்லைன்' மூலம் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் முறை: திருச்சியில் அறிமுகம்


11-மதுரையில் மாதா சிலை மீது கற்கள் வீச்சு; கண்ணாடிகள் உடைப்பு


12-57ஆயிரம் கட்டிட உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ்


13-10 ஆண்டுகளாக தேடப்பட்ட நக்சலைட்டு தர்மபுரியில் கைது

14-மதுரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சிறுவன் படுகொலை


15-தமிழக விவசாயிகளுக்கு மாநில அரசு ரூ.125.5 கோடி இழப்பீடு

kampan
25-09-2008, 01:36 PM
1.அமெரிக்காவில் மகிந்தவின் வருகையினை எதிர்த்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் கண்டனப் பேரணி

http://www.puthinam.com/full.php?2b1VoAe0decYA0ecKA4K3b4U6Dh4d3f1e3cc2AmI2d434OO2a030Mt3e

2.வன்னியின் அவலம் குறித்து ஐ.நா முன்றலில் கவனயீர்ப்புப் போராட்டங்கள்
http://www.pathivu.com/?p=4383

mgandhi
27-09-2008, 05:08 PM
28-9-2008

1-ஒரே அணியில் அதிமுக, தேமுதிக இடம் பெறுவது நாட்டுக்கு நல்லது: தா.பாண்டியன்

2-அணு ஒப்பந்தம் நிறைவேறும்: புஷ் உறுதிமொழி

3-சென்னை கே.கே.நகர் டெப்போவில் 5 பஸ்கள் எரிந்து சாம்பல்

4-காதலில் விழுந்தேன் படத்தை மதுரையில் திரையிட முதல்வர் தலையிட வேண்டும்: இயக்குநர் பிரசாத் பேட்டி

5- முஸ்லிம்களுக்கு அரணாக இருப்போம்: ஜெயலலிதா

6-தேவாலயங்கள் மீது தாக்குதல்: அரசு வேடிக்கை பார்க்காது: கருணாநிதி எச்சரிக்கை

7- தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட சர்வதேச ஒத்துழைப்பு: ஐ.நா.சபையில் பிரதமர் வலியுறுத்தல்

8- அத்வானிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது

9-சபரிமலை ஐயப்பன் ஆலயத்துக்குத் தீவிரவாதிகள் குறி: கேரளா காவல்துறை உஷார்படுத்துகிறது

10-புதிதாக 6 நீர் மூழ்கிக் கப்பல்களை வாங்க இந்திய கடற்படை முடிவு

11-தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஊடுருவலா?: அகதிகள் முகாம்களில் போலீசார் சோதனை

12-துப்பாக்கி, வெடிபொருள் வைத்திருந்ததாக லாலு கட்சி எம்பிக்கு 10 ஆண்டு ஜெயில்

13- வளரும் நாடுகள் உணவுப் பற்றாக்குறைக்குக் காரணமல்ல: ஐ.நா.சபையில் இந்தியா தகவல்

14-டெல்லியில் மீண்டும் குண்டுவெடிப்பு ஒரு குழந்தை உட்பட 4 பேர்* பலி18 பேர் காயம்

kampan
27-09-2008, 08:00 PM
தாயகத்தில் அல்லலுறும் மக்களுக்காக கனடா தமிழ் இளையோரின் 30 மணிநேர உண்ணாநிலை கவனயீர்ப்பு நிகழ்வு தொடங்கியது



http://www.puthinam.com/full.php?2bZXpHe0dGg6H0ecODbb3b4V7FD4d3k7e3cc2CtK3d436UP2b025Ts3e (http://www.puthinam.com/full.php?2bZXpHe0dGg6H0ecODbb3b4V7FD4d3k7e3cc2CtK3d436UP2b025Ts3e)

kampan
28-09-2008, 01:15 PM
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான உண்ணாநிலைப் போராட்டத்துக்கு ஜெயலலிதா ஆதரவு


http://www.puthinam.com/full.php?2b44OO44b3aU6DR34d31VoA2a03e4AKe4d3YImAce0de0MtHce0df1eo2cc0IcYA3e

தீபன்
28-09-2008, 02:53 PM
இலங்கை கடற்படையினர் சுட்டதி;ல் தமிழக மீனவர் ஒருவர் பலி
[ ஞாயிற்றுக்கிழமை, 28 செப்ரெம்பர் 2008, 02:01.33 PM GMT +05:30 ]
இலங்கை கடற்படையினர் நேற்று இரவு நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் தமிழக மீனவர் ஒருவர் பலியானார். சுமார் 100 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
மதுரை தட்டானேரியை சேர்ந்த முருகன் என்பவரே இலங்கைக் கடற்படையினரின் துப்பாக்கி பிரயோகத்தில் பலியானதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவத்தில் காயங்களுடன் தப்பி வந்துள்ள மீனவர்கள், தம்மை இலங்கை கடற்படையினர் இரும்பு சங்கிலியால் தாக்கியதாக குறிப்பிட்டுள்ளனர்.அத்துடன் தம்மை கடலில் தூக்கி வீசியதாகவும் குறித்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில் சம்பவத்தில் பலியான மீனவரின் குடும்பத்தி;ற்கு மாவட்ட அதிகாரி பூன்கொடி 3 லட்சம் ரூபாவை இழப்பீடாக வழங்கினார்.

நன்றி: தமிழ்வின்.கொம்

mgandhi
29-09-2008, 06:25 PM
30-9-2008

1-மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

2-குஜராத்தில் குண்டுவெடிப்பு : ஒருவர் பலி : 7 பேர் காயம்

3-இந்தியாவும், ஐரோப்பிய யூனியன் வர்த்தக உறவு பலப்படும்: மன்மோகன்சிங்

4-பன்னீர்செல்வம் பேத்திக்கு பெயர் சூட்டினார் ஜெ.,

5-ஜெ., மீதான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

6-ஐ.சி.எல்., டுவென்டி-20: சண்டிகர் லயன்ஸ் அணி பைனலுக்கு முன்னேறியது

7-தூத்துக்குடியில் வெடிகுண்டு தயாரித்தபோது விபத்து: வாலிபர் படுகாயம்

8-கன்னியாக்குமரியில் அகற்றப்பட்ட 24 அடி ஆஞ்சநேயர் சிலை நெல்லை வருகை

9-புகை பிடிக்க தடை விதித்தது சரியே : சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

10-டென்னிஸ் ரேங்கிங்: மகேஷ் பூபதி, ரோகன் போபண்ணா பின்னடைவு

11-பங்கு சந்தையில் வீழ்ச்சி : 400 புள்ளிகளுக்கு மேல் சரிந்தன

12-சென்னை மீனாட்சி கல்வி நிறுவனத்தில் வருமானவரி சோதனை

13-தசரா பண்டிகையை முன்னிட்டு மைசூரில் 20 பேர் கைது

14-போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ்: தமிழக அரசு

15-காவேரி-கொள்ளிடம் பாலம் 3 மாதங்களுக்கு மூடப்படும்: டி.ஆர்.பாலு

mgandhi
01-10-2008, 06:20 PM
2-10-2008

1-திரிபுராவில் தொடர் குண்டுவெடிப்பு: ஒருவர் பலி, 50 பேர் காயம்


2-சிவராஜ் பாட்டீல் மாற்றம் இல்லை: பிரதமர் உறுதி


3- சர்வதேச பொருளாதார பிரச்னையில் இந்தியா விடுபட முடியாது: கமல்நாத்


4-பழம்பெரும் நடிகர் பூர்ணம் விஸ்வநாதன் காலமானார்


5-இலங்கையில் கடும் சண்டை: 68 பேர் பலி


6- இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் படம் வெளியீடு


7- ராஜ் தாக்கரேக்கு கைது வாரண்ட்

8- பாகிஸ்தான் ராணுவ எதிர்ப்பை மீறி சியாச்சினில் இந்திய குழு மலையேற்ம்
.

9-ஒரிசா அரசு மீது மத்திய அரசு அதிருப்தி


10-துணை ராணுவத்தினருக்கு ஊதிய உயர்வு


11-இந்தியன் முஜாஹிதீன் அமைப்பின் நிறுவனர் படம் வெளியீடு


12-சூரிய சக்திக்கு மாறும் ரயில்வே


13-மாமனார் வீட்டில் வசிக்க பெண் உரிமை கோர முடியாது: நீதிமன்றம் தீர்ப்பு


14-ஆவணங்களைச் சரிபார்க்காமல் சிம் கார்டு வழங்கினால் கடும் அபராதம்

mgandhi
02-10-2008, 06:11 PM
3-10-2008

1-அணுசக்தி ஒப்பந்தத்துக்கு யுஎஸ் செனட் ஒப்புதல்


2-நிதி நெருக்கடியை சமாளிக்க 70 ஆயிரம் கோடி டாலர் உதவி : அமெரிக்க செனட் ஒப்புதல்


3-இராக்கில் மசூதி அருகே குண்டு வெடித்து 22 பேர் சாவு


4-29 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் படை பிடித்ததுச் சென்றது


5-பாகிஸ்தானில் தற்கொலைப் படைத் தாக்குதல்: தப்பினார் மாகாண ஆளும் கட்சித் தலைவர்



6-திரிபுரா குண்டுவெடிப்பு: 6 பேர் கைது


7-அணுசக்தி ஒப்பந்தத்துக்கு யுஎஸ் செனட் ஒப்புதல்


8-நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி கோலாகல கொண்டாட்டம்


9-மானிய விலையில் மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டம் தொடக்கம்


10-நிதி நெருக்கடியை சமாளிக்க 70 ஆயிரம் கோடி டாலர் உதவி : அமெரிக்க செனட் ஒப்புதல்



11-இலங்கைத் தமிழர்களுக்காக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் குரல் கொடுக்கவில்லை: தா.பாண்டியன் குற்றச்சாட்டு


12-தமிழக மீனவர் பிரச்னையைத் தீர்க்க வழிமுறை காண இந்தியா, இலங்கை முடிவு


13தீவிரவாதிகள் விஷயத்தில் அரசியல் ஆதாயம் தேட வேண்டாம்: சோனியா வேண்டுகோள்

14-.நிலம் கையகப்படுத்தல் சட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும் : வி.பி. சிங் வலியுறுத்தல்


15-மேற்கு வங்க முதல்வரை நாளை சந்திக்கிறார் ரத்தன் டாடா

mgandhi
03-10-2008, 06:31 PM
4-10-2008

1-ரூ.1,300 லஞ்சம் வாங்கிய புதுகை சர்வேயர் கைது
2-கோவை அருகே தி.மு.க., பிரமுகருக்கு சரமாரி கத்திக்குத்து

3-திருப்பதிக்கு புறப்பட்டது ஆண்டாள் மாலை

4-தாயை கவனிக்காத 6 பிள்ளைகள் மீது வழக்கு

5-மேற்குவங்கத்தில் நானோ கார் நிறுவனம் இல்லை: ரத்தன் டாடா அறிவிப்பு

6-குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வக்கீல்களுடன் பேச அனுமதி

7-தமிழகத்தில் கோதுமை தட்டுப்பாடு வராது : அன்பழகன் அறிவிப்பு

8-உண்ணாவிரதத்தில் அ.தி.மு.க., பங்கேற்காததால் வருத்தமில்லை : தா.பாண்டியன்

9-சேலத்தில் 500 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணக்காளர் கைது

10-அலைவரிசை தொகுப்பு ஒதுக்கீட்டால் அரசுக்கு நட்டமில்லை : ராஜா பேட்டி

11-மின் வாரிய ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ்

12-தீவிரவாதிகள் கைதான செய்தி வதந்தி : ஐ.ஜி., அறிவிப்பு

13-மணல் திருட்டை கண்டித்து திருப்புவனத்தில் ஆர்ப்பாட்டம் : அ.தி.மு.க., அறிவிப்பு

14-இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்தது

15-ராமேஸ்வரம் கோவிலில் பாலிதீன் பைகளுக்கு தடை
__________________



!

இளசு
04-10-2008, 10:52 AM
1300 கோடி சேர்த்திருந்தால் - அரசியல் தலைவர் ஆகியிருப்பார்!
அப்புறம் அவரை அணுக முடியுமா?
அணுகினாலும் ஆண்டாண்டுக்கும் வழக்கை இழுத்தடிக்க நாரிமன்கள் கிடைப்பார்களே!
அவசரப்பட்டுவிட்டார்களே

mgandhi
05-10-2008, 06:36 PM
6-10-2008

1-சிங்குரிலிருந்து வெளியேற டாடா நிறுவனம் முடிவு

2-இடஒதுக்கீடு: வருமான வரம்பு 4.5 லட்சமாக உயர்வு

2- இலங்கை: வான் தாக்குதலில் 59 புலிகள் சாவு

3-சென்னை: கடலில் மூழ்கி 4 இளைஞர்கள் பலி?

4-போலி மருந்து தயாரித்தால் ஆயுள் தண்டனை: வரும் மக்களவை கூட்டத் தொடரில் மசோதா தாக்கல்: அன்புமணி

5-இலங்கைத் தமிழர் பிரச்னையில் தூங்கியதில்லை: இந்திய கம்யூனிஸ்டுக்கு கருணாநிதி பதில்

6-அணுகுண்டு சோதனை நடத்த நமக்கு உரிமை உண்டு: பிரணாப் முகர்ஜி

7- 2 பேர் வெட்டிக் கொலை: ஒரிசாவில் மீண்டும் பதட்டம்

8-மங்களூரில் குண்டுவெடிப்பு சதி: 5 தீவிரவாதிகள் கைது

9-தமிழகத்தில் மத்திய பல்கலைக் கழகம்: அமைச்சரவை அனுமதி

10-பிரிட்டிஷ் அறக்கட்டளை தூதராக கஜோல் நியமனம்

11-பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி: 529 புள்ளிகள் சரிவு |

12- இலங்கை தமிழர்கள் மீது தாக்குதல்-ஜெயலலிதா கடும் கண்டனம்


13-சிங்கூர் ஆலை வெளியேறுவதைக் கண்டித்து மறியல், ஆர்ப்பாட்டம்

14-காண்டலீசா ரைஸ் வருகை-இடதுசாரிகள் எதிர்ப்பு
.
15- இந்திய எல்லையில் 13 தீவிரவாதிகள் பலி

mgandhi
07-10-2008, 06:51 PM
8-10-2008

1-வனவிலங்குகளை வேட்டையாட வைத்திருந்த 16 துப்பாக்கிகள் பறிமுதல் தேனி மாவட்டத்தில்


2-இன்ஜின் பழுதானது : நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் தாமதமாக புறப்பட்டது


3-சந்தனமரம் கடத்திய 2 பேர் கைது



4-மின்வாரியம் பிரிப்பு: தமிழக அமைச்சரவை ஆலோசனை



6-காஷ்மீரில் சகஜ நிலை திரும்பியது



7-ஜெ., பிறந்த நாள் பரிசு வழக்கு : தள்ளிவைப்பு



8-கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு : கங்குலி உருக்கம்



9-குஜராத்தில் நானோ கார் தொழிற்சாலை ஒப்பந்தம் கையெழுத்தானது




10-மாநில மகளிர் கிரிக்கெட் போட்டி : சென்னை ஒய்.எம்.சி.ஏ., வெற்றி



11-மின்தடையால் காரைக்குடியில் ஆலைகளில் தினமும் ரூ.8 கோடி இழப்பு


12-இந்தியா வந்துள்ள பாலஸ்தீன் அதிபர் முகமது அப்பாசுக்கு உற்சாக வரவேற்பு



13-மின்வெட்டை கண்டித்து அ.தி.மு.க., விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்


14-ஈரோட்டில் 2 சர்ச்சுகள் மீது தாக்குதல்



15-அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்

mgandhi
09-10-2008, 06:19 PM
9-10-2008

1-நீதிபதிகள் ஊழலை விசாரிக்க புதிய சட்டம் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2-நெல்லையில் மின்னல் தாக்கி 3 பேர் பலி

3-அ.தி.மு.க., மாவட்ட செயலர் இளவரசன் எம்.பி அதிரடி நீக்கம்

4-தலாய்லாமா மருத்துவமனையில் அனுமதி

5-கால்பந்து ரேங்கிங்: 148வது இடத்தில் இந்தியா

6-இந்தியா - ஆஸ்திரேலியா முதல் டெஸ்ட் : ஆஸ்திரேலியா 254/4

7-பிறந்த குழந்தை மூச்சு திணறி பலி: பணிக்கு வராத டாக்டர்கள் மீது நடவடிக்கை

8-கிரிக்கெட்: ஐ.சி.எல்., டுவென்டி20 தொடர் இன்று ஆரம்பம்

9-மணலியில் பெட்ரோலிய கழக கிடங்கில் தீ விபத்து

10-தெலுங்கு தேசம் தனி தெலுங்கானாவுக்கு ஆதரவு

11-தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

12-எல்லையில் தீவிரவாதி ஊடுருவல் : ராணுவ வீரர் பலி

13-சென்னை ராயப்பேட்டை வணிக வளாகத்தில் தீ விபத்து

14-அமைச்சர் ராஜாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும் :வைகோ

15-நாமக்கல்லில் தடுப்பூசி போட்டதால் பெண் குழந்தை பரிதாப சாவு

mgandhi
10-10-2008, 05:16 PM
10-10-2008

1-கிரிக்கெட்: முதல் இன்னிங்ஸில் ஆஸி. 430; இந்தியா விக்கெட் இழப்பின்றி 68 ரன்கள்


2-இலங்கை அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்: வைகோ கைது


3-பங்குச் சந்தையில் பெரும் சரிவு


4-இலங்கை பிரச்னைக்கான அனைத்துக் கட்சி கூட்டம்: அதிமுக, மதிமுக புறக்கணிப்பு; பாமக பங்கேற்கும்


5-பிரபாகரனுடன் சமரசம் கிடையாது: இலங்கை அதிபர் ராஜபக்ஷ


6-பிரதமர் காஷ்மீர் வருகை: வேலைநிறுத்தம் மேற்கொள்ள பிரிவினைவாதிகள் அழைப்பு


7-பணவீக்கம் 11.80%


8-பொது இடத்தில் புகைபிடிக்கத் தடை; கண்டித்து அக்.14-ல் வேலைநிறுத்தம்: பீடி தொழிலாளர் சம்மேளனம் அறிவிப்பு


9-முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீது 8000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்


10-முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா மீது ஆள்கடத்தல் வழக்குப் பதிவு



11-மின்வெட்டைக் கண்டித்து மருங்காபுரியில் அதிமுக நாளை கண்டன ஆர்ப்பாட்டம்


12-உ.பி: சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

mgandhi
11-10-2008, 05:47 PM
11-10-2008

1-அமிதாப் பச்சனுக்கு பிறந்தநாள்: உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி


2-முதல் டெஸ்ட்: இந்தியா 8 விக்கெட் இழப்புக்கு 313


3-"123' உடன்பாடின்படியே இந்தியா செயல்படும்: பிரணாப்


4-அனைத்துக் கட்சிக் கூட்டத்தை பா.ஜ.க.வும் புறக்கணிக்கிறது: இல. கணேசன் அறிவிப்பு


5-நானோவுக்கு குஜராத்திலும் சிக்கல்?


6-காஷ்மீரில் முதல் ரயில் போக்குவரத்தை துவக்கி வைத்தார் பிரதமர்


7-ஆர்எஸ்எஸ் தொண்டர் கொலை: கேரளத்தில் பதற்றம்


8-ஜெனரேட்டர் டீசலுக்கு மதிப்பு கூட்டுவரி திரும்பக் கிடைக்கும்: முதல்வர் ஆணை


9-முதலீட்டாளர்கள் அச்சமடையத் தேவையில்லை: ரிசர்வ் வங்கி கவர்னர் உறுதி



10-உத்தபுரத்தில் அமைதி ஏற்படுத்த அனைத்துக் கட்சி நல்லெண்ணக்குழு: டாக்டர் கிருஷ்ணசாமி


11-எந்த மதத்துக்கு எதிரான வன்முறையும் ஏற்க முடியாது: அத்வானி


12-பாஜக, தெலுங்கு தேசத்துடன் கூட்டணியா? சிரஞ்சீவி கட்சி மறுப்பு


13-மதுரையில் நாளை மறுநாள் அதிமுக ஆர்ப்பாட்டம்


14-14-ம் தேதி ரேபரேலி செல்கிறார் சோனியா



.லண்டன் சென்ற ஏர்இந்தியா விமானத்தில் இயந்திர கோளாறு: தில்லியில் அவசரமாக தரையிறங்கியது



.அணுசக்தி ஒப்பந்தம்: கான்டலீசா ரைஸ், பிரணாப் கையெழுத்து

mgandhi
12-10-2008, 06:11 PM
13-10-2008

1-அமிதாப் பச்சன் உடல்நிலையில் முன்னேற்றம்

2 புனிதர் பட்டம்: அல்போன்சா உருவம் பொறித்த நாணயம்: மத்திய அரசு அறிவிப்பு

3-அனைத்துக் கட்சி கூட்டத்தை பி.ஜே.பி.யும் புறக்கணிக்கும்: இல.கணேசன்

4- நெல்லை: மின்வெட்டைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை அதி.மு.க. ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா அறிவிப்பு

5-வங்கிகளில் முதலீடு செய்தவர்கள் அச்சமடையத் தேவையில்லை: ரிசர்வ் வங்கி ஆளுநர் சுப்பராவ் உறுதி

6- மின்தடைக்கு தீர்வு காணாவிட்டால் தமிழகம் முழுவதும் போராட்டம்: தொழில் வர்த்தக சங்கம் எச்சரிக்கை

7- இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கிய சந்திராயன் விண்கலம்: 22ம் தேதி விண்ணில் செலுத்தப்படுகிறது

8- இலங்கைப் பிரச்னை: பிரதமர் தலையிட டி.ராஜா நேரில் வலியுறுத்தல்

9- புனிதர் பட்டம்: அல்போன்சா உருவம் பொறித்த நாணயம்: மத்திய அரசு அறிவிப்பு

10-அனைத்துக் கட்சி கூட்டத்தை பி.ஜே.பி.யும் புறக்கணிக்கும்: இல.கணேசன்

mgandhi
13-10-2008, 05:53 PM
14-10-2008

1-இந்து அமைப்புகள் மீது பிரதமர் கடும் தாக்கு :
கிறிஸ்தவர் மீதான தாக்குதலுக்கு கண்டனம்


2-சரிவிலிருந்து மீண்டது பங்குச் சந்தை


3-இலங்கைப் பிரச்னையில் பிரதமர் தலையிட வைகோ நேரில் வலியுறுத்தல்


4-நானாவதி கமிஷன் அறிக்கைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு



5-இந்தியா}ஆஸ்திரேலியா இடையேயான் முதல் டெஸ்ட் டிரா


6-மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மருத்துவமனையில் அனுமதி



7-உத்தரப்பிரதேசம்: ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 4 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் மீட்பு


8-ஐ.டி., ஏற்றுமதி பாதிக்கப்படும் : தணிக்கையாளர் ஜி. நாராயணசாமி


9-ஆயுள் தண்டனை கைதிகளை விடுவித்தது சட்டவிரோதம்: ஜெ.


10-இலங்கை அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி



11-மின்வெட்டுக்கு காரணம் தரக்குறைவான நிலக்கரி: ராமதாஸ்


12-சித்தா, ஓமியோபதி படிப்புகளுக்கு 14-ந் தேதி சிறப்பு கவுன்சிலிங்


13-ஆந்திராவில் 2 குழந்தைகள் உள்பட 6 பேர் எரித்துக்கொலை


14-ஜனாதிபதி பிரதீபா பட்டீலுக்கு இ மெயிலில் கொலை மிரட்டல்



15-பாராளுமன்ற தேர்தல் குறித்து மார்க்சிஸ்ட் கொல்கத்தாவில் ஆலோசனை

mgandhi
14-10-2008, 05:21 PM
-10-2008

1-தமிழக அனைத்துக்கட்சி கூட்டத்தில் அதிரடி தீர்மானம் போரை நிறுத்துமாறு இலங்கை அரசை கட்டுப்படுத்த வலியுறுத்தல் எம். பி.க்கள் பதவி விலக நேரிடும் எச்சரிக்கை


2-சிறை செல்லவும் தயார்: சோனியா ஆவேசம்


3-குடியரசுத் தலைவர் செல்லும் பாதையில் அரசு சின்னம் பொறித்த மர்மக் கார்



4-5 மாநில சட்டசபை தேர்தலுக்கான தேதிகளை அறிவித்தது தேர்தல் ஆணையம்


5-தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மேலும் 2 நாள் மழை



6--5 மாநிலங்களின் தேர்தல் தேதி அறிவிப்பு



7--பங்குச்சந்தையில் ஏற்ற இறக்கம்


8--அணுசக்தி மூலம் 35% மின்சாரம் ககோத்கர் நம்பிக்கை


6-அசாமில் பேருந்து விபத்து: 23 பேர் பலி


9--மத்திய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி உடல்நிலையில் முன்னேற்றம்


10-வளர்ச்சியடைந்த நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்: து. ராஜா


11-அறிவுசார் கமிஷன் பதவிக்காலம் மார்ச் வரை நீட்டிப்பு


12-இரண்டாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் தேர்வு முடிவுகள் இணைய தளத்தில் வெளியீடு


13-மல்யுத்தப் போட்டியில் இந்தியாவுக்கு இரண்டு தங்கம்


14விரிவுரையாளர்களுக்கான செட் தேர்வு டிச., 21க்கு ஒத்திவைப்பு

mgandhi
15-10-2008, 05:34 PM
16-10-2008



1-இலங்கை நிலைமை கவலையளிக்கிறது: மன்மோகன்


2-கனிமொழி எம்பி பதவியிலிருந்து ராஜிநாமா: பின்தேதியிட்ட கடிதத்தை அளித்தார்


3-எம்.பி.,க்கள் ராஜிநாமா முடிவு கண்துடைப்பு நாடகம்: ஜெயலலிதா


4-நானோவுக்கு விவசாய நிலமா? குஜராத் அரசுக்கு எதிராக வழக்கு


5-இலங்கையுடன் தூதரக உறவை இந்தியா முறிக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்


6-இந்திய எழுத்தாளர் அரவிந்த் ஆதிகாவுக்கு புக்கர் விருது


7-வாக்கு வங்கி அரசியல் நடத்துகிறார் சோனியா: மாயாவதி


8-பகலில் மதுக் கடைகளை மூட சரத்குமார் வலியுறுத்தல்


9-பங்குச்சந்தையில் மீண்டும் சரிவு


10-.ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தில் 850 பேர் பணிநீக்கம்


11-இலங்கை விவகாரத்தில் மத்திய அரசு தாமதம் கூடாது: வீரமணி அறிக்கை


12-அக்டோபர் 19-ல் ராமேஸ்வரத்தில் திரையுலகப் போராட்டம்: மாநிலம் முழுவதும் பகல் காட்சிகள் ரத்து


13-கான்பூரில் குண்டுவெடிப்பு: 7 பேர் காயம்



14-சிறுபான்மை ஆணையத் தலைவர் முதல்வருக்கு நன்றி


15-2012-ல் மின்சார பற்றாக்குறை தீரும்: அமைச்சர் ஆர்க்காடு வீராசாமி

mgandhi
16-10-2008, 05:30 PM
17-10-2008

1-தென் மாவட்டங்களில் தொழில் தொடங்கினால் சிறப்பு சலுகை: கருணாநிதி அறிவிப்பு


2-இலங்கைக்கு ராணுவ உதவி அளிப்பது ஏன்?: மத்திய அரசு விளக்கம்



3-வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு மலர் வளையம்: வைகோ அஞ்சலி



4-பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்?: மத்திய மந்திரி பதில்



5-இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக விடுதலைச்சிறுத்தைகள் 23-ந் தேதி ரெயில் மறியல்



6-என்.எல்.சி. பேச்சுவார்த்தை மீண்டும் தள்ளி வைப்பு



7-கருணாகரன் சிகிச்சை முடிந்து கேரளா திரும்பினார்



8-இளையோர் காமன்வெல்த் போட்டி: தமிழக வீராங்கனை காயத்ரி `ஹாட்ரிக்' பதக்கம் வென்றார்



9-சென்டிரல் ரெயில்நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்



10-தீபாவளி நெரிசலை சமாளிக்க கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து 3 ஆயிரம் பஸ்கள்



11-ராஜபாளையம் நகராட்சி கலைக்கப்படுகிறது: தமிழக அரசு உத்தரவு



12-நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.50 போனஸ்: மத்திய மந்திரிசபை ஒப்புதல்



13-ஆக்ராவில் வெடிகுண்டு கண்டிபிடிப்பு



14-ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 பள்ளி சிறுவர்கள் பலி



15-ராமேஸ்வரத்தில் சூறாவளி: காற்றில் படகுகள் கவிழ்ந்தன

mgandhi
17-10-2008, 05:24 PM
18-10-2008

1-சாதனை படைத்தார் சச்சின்சச்சின் சாதனை: 12000 ரன்கள்



2-10 ஆயிரத்துக்கு கீழ் சரிந்தது சென்செக்ஸ்



3-அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க தயார்: மன்மோகன்



4-மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் அமிதாப்



5-தென் மாவட்டங்களில் தொழில்கள் தொடங்க ஊக்கம்: கருணாநிதி



6-புதிய காற்றழுத்த தாழ்வு நிலை மழை நீடிக்கும்



7-நாடாளுமன்றம் கூடியது; மாநிலங்களவையில் அமளி



8-சுரங்கத்தில் வெடி விபத்து: 16 பேர் சாவு



9-தே.மு.தி.க.வின் எழுச்சி மாநாடு



10-பணி நீக்க உத்தரவை திரும்ப பெற்றது ஜெட் ஏர்வேஸ்!



11-இலங்கை தமிழர் பிரச்சனை: மேலும் 3 தி.மு.க. எம்.பி.க்கள் ராஜினாமா!



.12-கபட நாடகம் ஆடுவது யார்? ஜெ., புகாருக்கு முதல்வர் பதில்




13-ஈழத்தமிழரை காக்க மனிதச் சங்கிலி: சிங்கக் கூட்டமென சென்னைக்கு வாரீர்- கருணாநிதி கடிதம்



14-ஆதிக்கத்தை நிலநாட்டவே இலங்கைக்கு ராணுவ உதவி : இந்தியா

mgandhi
18-10-2008, 05:17 PM
19-10-2008

1-மொகாலி டெஸ்ட்: இந்தியா 469 ரன் குவிப்பு- ஆஸ்திரேலியா விக்கெட் சரிவு


2-என்ன விலை கொடுத்தேனும் இலங்கை தமிழர்கள் படுகொலையை தடுப்போம்: கருணாநிதி அறிவிப்பு


3-இளைஞர் அணி மாநாடு; சென்னையில் தே.மு.தி.க. தொண்டர்கள் குவிந்தனர்-பேரணியை விஜயகாந்த் பார்வையிட்டார்


4-இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு நல்ல முடிவு எடுக்கும்: டி.ஆர்.பாலு பேட்டி


5-தனி ரெயிலில் திரையுலகத்தினர், இன்று ராமேஸ்வரம் பயணம்: கே.பாலசந்தர் கொடியசைத்து வழியனுப்புகிறார்

6-காமன்வெல்த் இளைஞர் விளையாட்டு-இந்தியா 33 தங்கம் குவித்து முதலிடம்


7-தங்கம் விலை மேலும் ரூ.200 சரிந்தது


8-வடசென்னையில் இருந்து வண்டலூர் வரை 50 கி.மீ தூரத்துக்கு மனிதச்சங்கிலி; நந்தனத்தில் நடிகர்கள் அணிவகுக்கிறார்கள்


9-திருத்துறைப்பூண்டியில் பள்ளி சுவர் இடிந்து 4-ம் வகுப்பு மாணவன் சாவு: பள்ளி தாளாளர்- முதல்வர் கைது


10-நாகர்கோவிலைச் சேர்ந்த தே.மு.தி.க. தொண்டர்கள் 5 பேர் பலி



11-நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் பலத்த மழை: வெள்ளம் சூழ்ந்ததால் 9 கிராம மக்கள் தவிப்பு


12-ஆலந்தூரில் ஓட்டல் தொழிலாளி எரித்துக் கொலை-நண்பர்கள் கைது


13-டெஸ்டில் அதிக ரன்: எனது சாதனைகளில் சிறந்தது-தெண்டுல்கர் பெருமை


14-திருப்பூரில் பெரியார்- அண்ணா சிலைகள் :அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்


15-இலங்கையில் போர் தீவிரம்: தமிழகத்தில் புதிய முகாம் அமைக்க நடவடிக்கை-தாசில்தார்களுக்கு உத்தரவு

mgandhi
19-10-2008, 05:33 PM
20-10-2008

1-தர்மபுரி மாவட்டத்தில் ரூ.12 லட்சம் எரிசாராயம் பறிமுதல்


2-தமிழ் மண்ணை தமிழன்தான் ஆளவேண்டும்: ராமேஸ்வரத்தில் பாரதிராஜா பேச்சு


3-இலங்கை தமிழர்கள் பிரச்னையில் ஒரு கணமும் தயங்க வேண்டாம்: கருணாநிதி



4-ஐ.சி.எல்., டுவென்டி-20: ராயல் பெங்கால் டைகர்ஸ் அணி வெற்றி


5-சாதிக்க துடிக்கும் மாணவர்களே கலாமிடம் கேளுங்கள்...! www.kalvimalar.com


6-அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்காத கட்சிகளுக்கு நடிகர் ராஜேந்தர் கண்டனம்


7-தமிழர்களை காத்திட உயிரையும் தியாகம் செய்ய தயார் : வைரமுத்து ஆவேசம்


8-ஐதராபாத்தில் மோட்டார் பைக்கில் வைக்கப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிப்பு


9-மூன்றாயிரம் அகதிகளுக்கு புத்தாடை : திரையுலகினர் வழங்கினர்


10-டில்லியில் மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து: 4 பேர் பலி, பலர் படுகாயம்உடனடியாக விசாரிக்க ஷீலா தீட்ஷித் உத்தரவு


11-உதகையில் நாளை அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்



12-தமிழகத்தில் மழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



13-நவம்பர் 17 முதல் டிசம்பர் 24 வரை 7 கட்டமாக காஷ்மீர் தேர்தல்



14-புதுடில்லி: காஷ்மீர் மாநில சட்டசபைக்கு நவம்பர் 17ம் தேதி முதல



15-சாத்தூரில் கூரை வீடு இடிந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

mgandhi
21-10-2008, 05:29 PM
22-10-2008


1-கனரா வங்கி லாபம் அதிகரிப்ப


2-தி.மு.க., தலைமை சட்ட ஆலோசகராக ஜோதி நியமனம்


3-ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் மூன்று மாதம் சிறை


4-தாய், மகளை கற்பழிக்க முயற்சி: மதுரை ஏட்டு மீது வழக்கு


5-ஈரோடு ரிஜிஸ்டர் ஆபீசில் லஞ்ச ஒழிப்பு ரெய்டு


6-தொடர்ந்து ஏற்றத்தில் செல்லும் இந்திய பங்குச்சந்தை


7-பொது மன்னிப்பு கோரி நளினி சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீட


8-மின் விநியோக கட்டுப்பாட்டை அரசு திரும்ப பெற வேண்டும் : ஜெ., வலியுறுத்தல்

9-முரளி தியோரா - பிரபுல் படேல் நாளை சந்திக்கின்றனர்


10-தாக்கரேவை கைது செய்வதை தாமதித்தது மகாராஷ்டிரா அரசு: பா.ஜ.,


11-பாந்த்ரா கோர்ட்டில் கல்வீச்சு, ராஜ்தாக்கரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்


12-மும்பையில் ரிசர்வ் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்


13-சர்ச் சீது தாக்குதல், மாதா *சிலை உடைப்பு : கொடைக்கானலில் பதட்ட


14-ராஜ்தாக்கரே கைது; மும்பையில் பதட்டம்



15-ஜப்பான் புறப்பட்டு சென்றார் பிரதமர் மன்மோகன்சிங்

ராஜா
24-10-2008, 01:41 PM
மோகன் காந்தி அண்ணா..!

வைகோ என்பவரை கைது பண்ணிட்டாங்களாமே..?

தமிழ்நாடே ஸ்தம்பிச்சுடுச்சாமே.. உண்மையா..?

mgandhi
24-10-2008, 05:28 PM
உண்மை தான் ராஜா

செய்தி

ம.தி.மு.க., சார்பில், "ஈழத்தில் நடப்பது என்ன?' என்ற தலைப்பில், சென்னையில் கடந்த 21ம் தேதி கருத்தரங்கம் நடந்தது. இதில் பேசிய ம.தி.மு.க., அவைத் தலைவர் கண்ணப்பன், "தமிழ் ஈழம் மட்டும் அல்ல; தனித் தமிழ்நாடும் மலரும்' என்றார். தொடர்ந்து பேசிய அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ, "இலங்கையின் இறையாண்மையைக் காப்பதாக நினைத்து, இந்தியாவின் இறையாண்மையைக் குலைத்து விடாதீர்கள்' என்றார். இந்த பேச்சுக்கள், நாட்டில் அடங்கியிருந்த பிரிவினைவாதம், தேசவிரோத சிந்தனைக்கு தூபம் போடுவதாக சர்ச்சை எழுந்தது.இதை அடுத்து
இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக, ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ நேற்று மாலை கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். அதே போல ம.தி.மு.க., அவைத் தலைவர் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டார்.

shibly591
24-10-2008, 05:33 PM
என்னதான் நடக்கிறது....?????