PDA

View Full Version : இனியவளே!



சுவேதா
26-05-2005, 08:56 PM
இனியவளே!

என் உயிரிலே
கலந்தவளே!
எனக்கெனவே
பிறந்தவளே!

என்னை மிக மிக
நேசித்தவளே!
எனக்காக உன்
உயிரையும்
கொடுக்க முன்
வந்தவளே!

எனது உயிருக்காக
உனது காதலை
தியாகம் செய்து
பிரிந்து சென்றவளே!

உனது பிரிவு தாங்காது
துடிக்கின்றேன்
நான்

இவ்வுலகை
விட்டு நீ எப்பொழுது
செல்கின்றாயோ
அப்பொழுதே அன்ரில்
பறவை போல் என்
உயிரும் செல்லும்
இது தான்
நமது காதல்!

பரஞ்சோதி
26-05-2005, 09:34 PM
அருமையான கவிதை சகோதரி.

என்றைக்கு அவள் காதலை தியாகம் செய்தாலோ அன்றே அவனது உயிர் பிரிந்ததை அவள் அறியவில்லையா? ஏன்?