பாரதி
24-05-2005, 09:36 PM
தேதி இல்லா குறிப்புகள்
பிள்ளையார்
சின்ன வயசுல எனக்கு கடவுள் பக்தி ரொம்ப இருக்கும். [ இப்ப எப்படின்னு ஏடாகூடமா கேட்காதீங்க... ! ] ஏதாவது தப்பு பண்ணுணோம்னா கடவுள் கண்ண குத்திருவாருன்னு வீட்டுல இருக்குறவங்க அடிக்கடி சொன்னதுனால பயமும் ரொம்பவே இருக்கும். கடவுள் கூட இருந்தாருன்னாத்தான் நல்ல மார்க் வாங்க முடியும்னு எல்லோரும் சொல்லுவாங்க.
வீட்டுலயும் நெறய சாமிப்படங்க இருக்கும். மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி பகவதி அம்மன், சுசீந்திரம் அனுமார், திருப்பதி, முருகன், சாமுண்டீஸ்வரி, பிள்ளையார், சரஸ்வதி, அஷ்ட லட்சுமி இப்படி... நெறய சாமிங்க. எல்லாம் கண்ணாடில பிரேம் போட்டு வரிசையா வச்சிருப்பாங்க. அதோட சின்னதா புல்லாங்குழல் வாசிக்கிற கிருஷ்ணர் சிலையும், பிள்ளையார் சிலையும் குத்துவிளக்கு பக்கத்துல இருக்கும். தினம் சாயந்திரம் பத்திக்குச்சி, சூடம் எல்லாம் ஏத்தி சாமி கும்பிட்டு, துண்ணூர நெத்தி பூரா பூசிகிட்டு வாயிலயும் கொஞ்சம் போட்டுகிட்ட அப்புறம்தான் சாப்பாடே..!
இதுல வழக்கம் போல பிள்ளையார்னா எனக்கும் பிடிக்கும். காரணம் மத்த சாமிங்க மாதிரி எங்கடா கோயில் இருக்குன்னு தேடிகிட்டு போக வேண்டிய அவசியமில்ல. ரோட்டோரத்துலயே இருப்பாரு. போற வழியிலேயே தெருவுல நின்னே கும்பிட்டுக்கலாம். கோவுச்சுக்கவும் மாட்டாருல்ல. அதே மாதிரி ஏதாவது தப்பு பண்ணிட்டோம்னா 'உக்கி' போட்டா போதும். உச்சி குளுந்துருவாருல்ல..!
பெரிய தெருவுக்கு திரும்புறதுக்கு முன்னாடியே அந்த சின்னப் பிள்ளையார் கோயில் இருக்கும். அங்க கூட்டமும் ரொம்ப இருக்காது. ரொம்ப அமைதியா இருக்கும். தினம் காலைல அந்த பூசாரி கோயில கழுவி விட்ருப்பாருங்கிறதால அந்த கல்தரை ஈரத்தோடதான் இருக்கும். பிள்ளையாருக்கு பின்னாடி ஒரு சின்ன வெளக்கு - கண்ணாடில பண்ணிருப்பாங்க - அது சுத்திகிட்டே இருக்கும். புள்ளையாருக்கு முன்னாடி அவரோட வாகனம் சுண்டெலியும் பெரிய சிலையா இருக்கும். பெரும்பாலும் வெள்ளப்பூவுதான் மாலையா இருக்கும். கோயிலோட சுவத்துல " வாக்குண்டாம்.. நல்ல மணமுண்டாம்..." அப்புறம் "பாலும் தெளிதேனும்..." இத மாதிரி கொஞ்சம் பாட்டு எல்லாம் கல்லுல செதுக்கி வைச்சிருப்பாங்க. சும்மா சூடம் வாங்கிட்டுப் போனாலே ஆராதனை நடத்தி துண்ணூறு கொடுப்பாரு பூசாரி.
விநாயக சதுர்த்தி அன்னைக்கு மட்டும் பிள்ளையார பிடிக்க முடியாது. அவலும் கொலுக்கட்டையும் கோயில்ல நெரம்பி வழியும். அது போக சொல்ல மறந்துட்டேனே... தெனம் சாயங்காலம் போனா சுடச்சுட சக்கரப் பொங்கலு வாழயிலல வச்சு பிரசாதமா தருவாங்க.. ரொம்ப நல்லா இருக்கும்.
ஹைஸ்கூல்ல படிக்க ஆரம்பிச்சதுக்கு பின்னாடி காலைல வாய்க்காலுக்கு போயி குளிக்கிறதுங்கிறதுதான் ஆம்பள பசங்களுக்கு அழகு. அதனால வெள்ளனவே துண்டு, சோப்பு, பல்லுப்பொடியோட கெளம்பிருவேன். ஹைஸ்கூலுக்கு பின்னாடி கொஞ்ச தூரத்துல படித்துறை இருக்கும். அந்த இடத்துலதான் நான் குளிக்கிறது. கொஞ்சம் பெரியவனா ஆனதுக்கு அப்புறம் குளிக்கப் போன இடம் வேற. ஊரப்பத்தி சொல்லும் போது சொல்றேன்.
ஒரு மூணு கருங்கல்லு, நல்ல பெரிசா இருக்கும். ஒவ்வொரு கல்லும் ரெண்டடி அகலம், எட்டு ஒம்போதடி நீளமிருக்கும். அந்தக் கல்லுகளா படியா வச்சு வாய்க்காலுக்குள்ள எறங்குறதுக்கு வசதியா பன்ணியிருப்பாங்க. ரெண்டு பக்கமும் மண்ணுல கட்டுன கைப்பிடி சுவரும் இருக்கும். அந்த சுவத்துல இருக்குற ஓட்டைகள்ல சோப்ப வச்சிட்டு குளிப்போம். அந்த படித்துற முகப்புலேயே சின்னதா அழகா ஒரு புள்ளையார். சின்ன கல்லு கட்டிடத்துல மேல அவரும் அவர் வாகனமும் மட்டும்தான். கோபுரம் எல்லாம் கெடையாது. வெட்ட வெளில 'நான் எல்லாருக்கும் சொந்தம்' அப்டீன்னு சொல்லுற மாதிரி இருப்பார். அப்பப்ப எண்ணெக் குளியல் நடந்தது மாதிரி சும்மா அவர் உடம்பு மினுமினுக்கும். இடுப்புல செவப்புக்கலரு துண்டு - கைத்தறி - கட்டிருப்பாரு. தெனம் செம்பருத்திப்பூ வச்சிருப்பாரு. அந்தப்பூ ஸ்கூல் பக்கத்துலேயே கிடைக்கும். இல்லாட்டி நந்தவனத்துல இருக்குற செடியில இருந்து யாராவது கொண்டு வந்து வச்சிருப்பாங்க. எப்பாச்சும் யாராவது ஸ்பெசலா கவனிச்சா அவர் கழுத்துல மால தொங்கும். ஆனா ஒண்ணு எப்ப போனாலும் துண்ணூறு கெடைக்கும். குங்குமம் எப்பாச்சும் கெடைக்கும்.
காலைல வாய்க்கால்ல குளிச்சுட்டு - ஹம். அப்பல்லாம் வருசம் முச்சூட தண்ணி ஓடிகிட்டுத்தான் இருக்கும் - படித்துறைல இருக்குற புள்ளயாருக்கு ஒரு கும்புடு போட்டுட்டு வந்தோம்னா அன்னைக்கு நாள் பூரா நிம்மதி அப்டீங்கிற மாதிரி நம்பிக்கை. பரீட்சை வந்திருச்சுன்னா போதும் ரெண்டு புள்ளையார்கிட்டேயும் தவறாம ஆஜாரகிடுவோம்ல. வழக்கமான " அப்பா..புள்ளையாரப்பா... என்னக் காப்பாத்துப்பா.. நான் நெனச்சதெல்லாம் நடக்கணும்பா.. வீட்ல எல்லாரும் நல்லாருக்கணும்பா.. சாமி... நீதான் காப்பாத்தணும்" - இது மாதிரி சொல்றதோட பரீட்சைல மொத ரேங்க் வாங்கணும் அப்டீங்கிறதும் சேந்துக்கும். அவரும் ஓரளவுக்கு நம்மள நல்ல ரேங்க்லதான் வச்சுருந்தாரு. முழுப்பரீட்சைல பாஸாகிட்டோம்னு வச்சுக்கங்க... ஒரு அபிசேகமும் நடக்குறது உண்டு. அப்பவும் சரி.. எப்பவும் போல புள்ளையார் கெழக்க பாத்துகிட்டு ஒரே மாதிரி அருள்பாளிச்சுகிட்டு இருப்பாரு.
பெரியவனாகி, படிச்சு வேற ஊர்ல வேலைக்கி சேந்ததுக்கப்புறம் புள்ளையாரப் பாக்கப் போனதே இல்ல. சரீ.. நெறய வருசம் ஆகிப்போச்சேன்னு ரெண்டு மூணு வருசம் முன்னாடி வாய்க்காலுக்கு போய்ட்டு வருவோம்னு போனேன். வாய்க்கால்ல சுத்தமா தண்ணியே இல்ல. அது கூட பரவால்ல. சாக்கடத் தண்ணிய அங்க போயி விட்டிருக்காங்க.. ஹம். என்னத்த சொல்ல..? அது கூடப் பரவால்ல... படித்துறய பாத்தப்ப 'பகீர்'ன்னு ஆகிப்போச்சு. படித்துற புள்ளையாரக் காணோம். அவர் இருந்த கல்லுக் கட்டிடம் மாத்திரம் இருந்துச்சு. என்னடான்னு விசாரிச்சா... யாரோ ராவோட ராவா பிள்ளையார தூக்கிட்டுப் போய்ட்டாங்களாம். ஏன்னா திருடிப்போய் வக்கிற புள்ளையாருக்குத்தான் சக்தி அதிகமாம். அதனால எவனாவது தூக்கிட்டுப் போயிருப்பானுங்க அப்டீன்னு சொன்னாங்க...! புள்ளயாரக் காப்பாத்த சொல்லி யாருமே வேண்டிகிட்டதில்லையோன்னு தோணுது.
-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
பிள்ளையார்
சின்ன வயசுல எனக்கு கடவுள் பக்தி ரொம்ப இருக்கும். [ இப்ப எப்படின்னு ஏடாகூடமா கேட்காதீங்க... ! ] ஏதாவது தப்பு பண்ணுணோம்னா கடவுள் கண்ண குத்திருவாருன்னு வீட்டுல இருக்குறவங்க அடிக்கடி சொன்னதுனால பயமும் ரொம்பவே இருக்கும். கடவுள் கூட இருந்தாருன்னாத்தான் நல்ல மார்க் வாங்க முடியும்னு எல்லோரும் சொல்லுவாங்க.
வீட்டுலயும் நெறய சாமிப்படங்க இருக்கும். மதுரை மீனாட்சி, கன்னியாகுமரி பகவதி அம்மன், சுசீந்திரம் அனுமார், திருப்பதி, முருகன், சாமுண்டீஸ்வரி, பிள்ளையார், சரஸ்வதி, அஷ்ட லட்சுமி இப்படி... நெறய சாமிங்க. எல்லாம் கண்ணாடில பிரேம் போட்டு வரிசையா வச்சிருப்பாங்க. அதோட சின்னதா புல்லாங்குழல் வாசிக்கிற கிருஷ்ணர் சிலையும், பிள்ளையார் சிலையும் குத்துவிளக்கு பக்கத்துல இருக்கும். தினம் சாயந்திரம் பத்திக்குச்சி, சூடம் எல்லாம் ஏத்தி சாமி கும்பிட்டு, துண்ணூர நெத்தி பூரா பூசிகிட்டு வாயிலயும் கொஞ்சம் போட்டுகிட்ட அப்புறம்தான் சாப்பாடே..!
இதுல வழக்கம் போல பிள்ளையார்னா எனக்கும் பிடிக்கும். காரணம் மத்த சாமிங்க மாதிரி எங்கடா கோயில் இருக்குன்னு தேடிகிட்டு போக வேண்டிய அவசியமில்ல. ரோட்டோரத்துலயே இருப்பாரு. போற வழியிலேயே தெருவுல நின்னே கும்பிட்டுக்கலாம். கோவுச்சுக்கவும் மாட்டாருல்ல. அதே மாதிரி ஏதாவது தப்பு பண்ணிட்டோம்னா 'உக்கி' போட்டா போதும். உச்சி குளுந்துருவாருல்ல..!
பெரிய தெருவுக்கு திரும்புறதுக்கு முன்னாடியே அந்த சின்னப் பிள்ளையார் கோயில் இருக்கும். அங்க கூட்டமும் ரொம்ப இருக்காது. ரொம்ப அமைதியா இருக்கும். தினம் காலைல அந்த பூசாரி கோயில கழுவி விட்ருப்பாருங்கிறதால அந்த கல்தரை ஈரத்தோடதான் இருக்கும். பிள்ளையாருக்கு பின்னாடி ஒரு சின்ன வெளக்கு - கண்ணாடில பண்ணிருப்பாங்க - அது சுத்திகிட்டே இருக்கும். புள்ளையாருக்கு முன்னாடி அவரோட வாகனம் சுண்டெலியும் பெரிய சிலையா இருக்கும். பெரும்பாலும் வெள்ளப்பூவுதான் மாலையா இருக்கும். கோயிலோட சுவத்துல " வாக்குண்டாம்.. நல்ல மணமுண்டாம்..." அப்புறம் "பாலும் தெளிதேனும்..." இத மாதிரி கொஞ்சம் பாட்டு எல்லாம் கல்லுல செதுக்கி வைச்சிருப்பாங்க. சும்மா சூடம் வாங்கிட்டுப் போனாலே ஆராதனை நடத்தி துண்ணூறு கொடுப்பாரு பூசாரி.
விநாயக சதுர்த்தி அன்னைக்கு மட்டும் பிள்ளையார பிடிக்க முடியாது. அவலும் கொலுக்கட்டையும் கோயில்ல நெரம்பி வழியும். அது போக சொல்ல மறந்துட்டேனே... தெனம் சாயங்காலம் போனா சுடச்சுட சக்கரப் பொங்கலு வாழயிலல வச்சு பிரசாதமா தருவாங்க.. ரொம்ப நல்லா இருக்கும்.
ஹைஸ்கூல்ல படிக்க ஆரம்பிச்சதுக்கு பின்னாடி காலைல வாய்க்காலுக்கு போயி குளிக்கிறதுங்கிறதுதான் ஆம்பள பசங்களுக்கு அழகு. அதனால வெள்ளனவே துண்டு, சோப்பு, பல்லுப்பொடியோட கெளம்பிருவேன். ஹைஸ்கூலுக்கு பின்னாடி கொஞ்ச தூரத்துல படித்துறை இருக்கும். அந்த இடத்துலதான் நான் குளிக்கிறது. கொஞ்சம் பெரியவனா ஆனதுக்கு அப்புறம் குளிக்கப் போன இடம் வேற. ஊரப்பத்தி சொல்லும் போது சொல்றேன்.
ஒரு மூணு கருங்கல்லு, நல்ல பெரிசா இருக்கும். ஒவ்வொரு கல்லும் ரெண்டடி அகலம், எட்டு ஒம்போதடி நீளமிருக்கும். அந்தக் கல்லுகளா படியா வச்சு வாய்க்காலுக்குள்ள எறங்குறதுக்கு வசதியா பன்ணியிருப்பாங்க. ரெண்டு பக்கமும் மண்ணுல கட்டுன கைப்பிடி சுவரும் இருக்கும். அந்த சுவத்துல இருக்குற ஓட்டைகள்ல சோப்ப வச்சிட்டு குளிப்போம். அந்த படித்துற முகப்புலேயே சின்னதா அழகா ஒரு புள்ளையார். சின்ன கல்லு கட்டிடத்துல மேல அவரும் அவர் வாகனமும் மட்டும்தான். கோபுரம் எல்லாம் கெடையாது. வெட்ட வெளில 'நான் எல்லாருக்கும் சொந்தம்' அப்டீன்னு சொல்லுற மாதிரி இருப்பார். அப்பப்ப எண்ணெக் குளியல் நடந்தது மாதிரி சும்மா அவர் உடம்பு மினுமினுக்கும். இடுப்புல செவப்புக்கலரு துண்டு - கைத்தறி - கட்டிருப்பாரு. தெனம் செம்பருத்திப்பூ வச்சிருப்பாரு. அந்தப்பூ ஸ்கூல் பக்கத்துலேயே கிடைக்கும். இல்லாட்டி நந்தவனத்துல இருக்குற செடியில இருந்து யாராவது கொண்டு வந்து வச்சிருப்பாங்க. எப்பாச்சும் யாராவது ஸ்பெசலா கவனிச்சா அவர் கழுத்துல மால தொங்கும். ஆனா ஒண்ணு எப்ப போனாலும் துண்ணூறு கெடைக்கும். குங்குமம் எப்பாச்சும் கெடைக்கும்.
காலைல வாய்க்கால்ல குளிச்சுட்டு - ஹம். அப்பல்லாம் வருசம் முச்சூட தண்ணி ஓடிகிட்டுத்தான் இருக்கும் - படித்துறைல இருக்குற புள்ளயாருக்கு ஒரு கும்புடு போட்டுட்டு வந்தோம்னா அன்னைக்கு நாள் பூரா நிம்மதி அப்டீங்கிற மாதிரி நம்பிக்கை. பரீட்சை வந்திருச்சுன்னா போதும் ரெண்டு புள்ளையார்கிட்டேயும் தவறாம ஆஜாரகிடுவோம்ல. வழக்கமான " அப்பா..புள்ளையாரப்பா... என்னக் காப்பாத்துப்பா.. நான் நெனச்சதெல்லாம் நடக்கணும்பா.. வீட்ல எல்லாரும் நல்லாருக்கணும்பா.. சாமி... நீதான் காப்பாத்தணும்" - இது மாதிரி சொல்றதோட பரீட்சைல மொத ரேங்க் வாங்கணும் அப்டீங்கிறதும் சேந்துக்கும். அவரும் ஓரளவுக்கு நம்மள நல்ல ரேங்க்லதான் வச்சுருந்தாரு. முழுப்பரீட்சைல பாஸாகிட்டோம்னு வச்சுக்கங்க... ஒரு அபிசேகமும் நடக்குறது உண்டு. அப்பவும் சரி.. எப்பவும் போல புள்ளையார் கெழக்க பாத்துகிட்டு ஒரே மாதிரி அருள்பாளிச்சுகிட்டு இருப்பாரு.
பெரியவனாகி, படிச்சு வேற ஊர்ல வேலைக்கி சேந்ததுக்கப்புறம் புள்ளையாரப் பாக்கப் போனதே இல்ல. சரீ.. நெறய வருசம் ஆகிப்போச்சேன்னு ரெண்டு மூணு வருசம் முன்னாடி வாய்க்காலுக்கு போய்ட்டு வருவோம்னு போனேன். வாய்க்கால்ல சுத்தமா தண்ணியே இல்ல. அது கூட பரவால்ல. சாக்கடத் தண்ணிய அங்க போயி விட்டிருக்காங்க.. ஹம். என்னத்த சொல்ல..? அது கூடப் பரவால்ல... படித்துறய பாத்தப்ப 'பகீர்'ன்னு ஆகிப்போச்சு. படித்துற புள்ளையாரக் காணோம். அவர் இருந்த கல்லுக் கட்டிடம் மாத்திரம் இருந்துச்சு. என்னடான்னு விசாரிச்சா... யாரோ ராவோட ராவா பிள்ளையார தூக்கிட்டுப் போய்ட்டாங்களாம். ஏன்னா திருடிப்போய் வக்கிற புள்ளையாருக்குத்தான் சக்தி அதிகமாம். அதனால எவனாவது தூக்கிட்டுப் போயிருப்பானுங்க அப்டீன்னு சொன்னாங்க...! புள்ளயாரக் காப்பாத்த சொல்லி யாருமே வேண்டிகிட்டதில்லையோன்னு தோணுது.
-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்