பாரதி
23-05-2005, 12:36 AM
தேதி இல்லா குறிப்புகள்
முதல் புத்தகம்
இது வந்து பள்ளிக்கூடத்துல படிச்ச மொத வகுப்பு தமிழு புத்தகம்னு நினச்சீங்கன்னா .. அது தப்பு. என் இஷ்டத்துக்கு நானா தனியா போயி கடைல வாங்குன புத்தகம் பத்தித்தான் சொல்ல நெனச்சேன்.
சின்ன புள்ளையா இருக்குறப்போ அம்புலி மாமா, இரும்புக்கை மாயாவி மாதிரி புத்தகங்கள்ல வர்ற படத்த பாக்குறதும், எழுத்தக்கூட்டி படிக்கிறதும் எனக்கு ரொம்ப புடிக்கும். யார் வீட்டுக்கும் நான் போறதில்லங்கறதால எப்பயாவது அக்காங்க கொண்டு வர்ற புஸ்தகங்கள திருப்பி திருப்பி வாசிச்சுகிட்டே இருப்பேன். அந்த புஸ்தகங்கள்ல வர்றதெல்லாம் நெசம்னு நம்பிகிட்டு இருந்த நேரமும் உண்டுதான்.
ம்ம்... ஒரு ஏழாவது எட்டாவது படிச்சுகிட்டு இருந்திருப்பேன்னு நெனக்கிறேன். விருந்தாளிக வந்தா கொடுத்துட்டுப்போற நயாபைசாக்களை எல்லாம் சேர்த்து வச்சுகிட்டிருந்தேன். தேனியில "நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் " புத்தக கண்காட்சி போட்டுருக்குன்னு போஸ்டர்ல பார்த்தன, எப்படியாவது அங்க போகணும்னு ஆசை. ஏன்னு கேக்குறீங்களா...? அப்பல்லாம் நோட்டு, புத்தகத்துக்கு எல்லாம் காக்கி அட்டை போடறதெல்லாம் இன்ஸ்பெக்சன் அப்ப மாத்திரம்தான். மத்த நேரத்துல எந்த அட்டை வேணும்னாலும் போட்டுக்கலாம். அப்ப பழய சோவியத் யூனியன் புத்தகங்களை எல்லாம் வெலைக்கி விப்பாங்க...! 20, 25 காசுன்னு. ஒரு புத்தகம் வாங்குனா நெறய நோட்டுக்கு அட்டை போடலாமே..! அதும்மில்லாம அந்த புத்தகங்களோட பேப்பரு...! கலர் கலர் போட்டோக்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லாருக்கும். ஒலிம்பிக் வெளாட்டுல வெளாடுனவங்க படம், ராக்கெட் படம், பூக்களோட படம் இப்படி.. எல்லாமே பார்த்து பிரமிச்சு போயிருக்கேன். அந்த புத்தகம் இங்கிலீஷ், தமிழ் ரெண்டுலயும் வரும். இங்கிலீஷ் புத்தகத்துல பக்கமெல்லாம் நெறய இருக்கும். தமிழ் புத்தகத்துல பக்கமெல்லாம் கொஞ்சம் கம்மி. படங்களும் கம்மியாத்தான் இருக்கும்.
அதனால பழய புத்தகங்களை வாங்குறத விட நாமளே புதுப்புத்தகத்த வாங்குனா படிக்கிறதுக்கும் வசதி. அப்புறம் அட்டையும் போட்டுறலாம்னு அய்யாவோட திட்டம். அதோட சேர்த்து சோவியத் யூனியன் காலண்டரும் கிடைக்கும்னு பழைய புத்தகத்துல படிச்ச நெனவு வேற.
அப்படி நான் சேர்த்து வச்ச காசோட, வீட்டுலேருந்து [ அழுது ] வாங்குன காசையும் சேர்த்துகிட்டு மொத தடவையா புத்தகம் வாங்க தனியா தேனிக்கு நடந்தேன்.
தேனி பஸ்ஸ்டாண்டுக்கு கொஞ்சம் தள்ளி, கெழக்க புதுசா ஒரு கீத்துக்கொட்டாய் போட்டு வெளில ஒரு பேனர் கட்டியிருந்தாங்க. எல்லாப் புத்தகத்தையும் வரிசையா அடுக்கி வச்சிருந்தாங்க. இப்ப நெறய கடக்கி போயிருந்தாலும் அப்போதைக்கு அது எனக்கு ரொம்ப பெரிய புத்தக கண்காட்சியா தோணிச்சு. நல்ல வேளையா புத்தகத்த எல்லாம் நான் பார்க்கக்கூடிய அளவு உசரத்துலதான் வச்சிருந்தாங்க.
ஒவ்வொரு புத்தகமாக பாக்க பாக்க ரொம்ப ரொம்ப ஆசயா இருந்துச்சு. அங்கெல்லாம் இருந்த கட்டிடங்க, சுத்துப்பயணம் போற இடங்க, அறிவியல் சம்பந்தமான கதைக, சின்ன குழந்தைக்களுக்கான புத்தகம்.. இப்படி... எல்லாத்தையும் அப்பிடியே வீட்டுக்கு அள்ளிகிட்டு போகணும்னு தோணிச்சு. பைல இருந்த காச எண்ணிப்பார்த்தேன். பத்து ரூபாய் அளவுக்குத்தான் இருந்துச்சு. ஹம்.
மூணு வருசத்துக்கு சந்தா கட்டுனாத்தான் சோவியத் யூனியன் புத்தகத்தோட காலண்டர் தருவாங்கன்னு சொன்னாங்க. மூணு வருசத்துக்கும் சேர்த்து சந்தா எத்தன ரூபான்னு இப்ப மறந்து போச்சு. ஆனா என்கிட்ட இருந்த ரூபா நிச்சயமா பத்தாது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அழுகையா வருது.
நிச்சயம் வேற ஏதாவது புத்தகம் வாங்கிட்டுத்தான் போகணுங்கிற வெறி வந்துச்சு. இருந்த பத்து ரூபாய்க்கும் ஏதாவது வாங்கிறணும்னு நானும் அந்த கடைய சுத்தி சுத்தி வந்தேன். கடேசில ரெண்டு புஸ்தகம் வாங்குனேன்.
ஒரு புத்தகத்தோட பேரு " மறைந்த தந்தி". இன்னொரு புத்தகத்தோட பேரு " உலகை குலுக்கிய பத்து நாட்கள்".
மறைந்த தந்தி புத்தகத்தோட அட்டை ரொம்ப கெட்டி. புத்தகத்தோட அளவும் பெரிசா இருக்கும். இப்ப எங்க்ரேவ்ட்-னு சொல்றாங்க பாருங்க அது மாதிரி - அந்த அட்டையில படமும் எழுத்துக்களும் இருக்கும். புத்தகம் பூரா படமா நெறம்பி இருக்கும். படத்த எல்லாம் நல்லா வரஞ்சிருப்பாங்க. பேப்பரும் சும்மா வழுவழுன்னு இருக்கும். படம் பார்த்துகிட்டே படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். புத்தகத்தோட வெல 3ரூபா 75 காசு.
அந்த ரெண்டாவது புத்தகம் " உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" - எழுதுனவரு பேரு ஜான் ரீட். வெல 5ரூபா 50 காசு. அந்தப்புத்தகம் வாங்குனதுக்கு காரணம் அந்தப் புத்தகத்தோட அட்டை... சிகப்பு வெல்வெட் துணியில தச்சிருந்தாங்க. அந்த அட்டைக்கே அந்த காசு பெறுமே..! அப்புறம் புத்தகத்தோட பக்கம்.. ஆயிரம் பக்கத்துக்கும் மேலே.. எடைக்குப் போட்டாலும் நல்ல வெலைக்குப் போகுமே..!!
புத்தகத்த வாங்கிட்டு வீட்டுக்கு நான் நடந்து வரும்போது பாக்கணுமே.. அவ்ளோ ஒரு சந்தோசம், அப்படி ஒரு கெத்து எனக்கு. அப்பப்ப பைல இருந்து எடுத்து எடுத்து பாத்துட்டே வந்தேன். வீட்டுலயும் ஒருத்தரயும் தொட விடலயே.
இதுல முதலாவதா சொன்னேன் பாருங்க "மறைந்த தந்தி" - அத எழுதுனவரு பேரு மறந்து போச்சு. ஆனா கத அப்படியே நெனவு இருக்கு. மாஸ்கோவுல ஒரு வீட்டுல ரெண்டு குட்டிப்பசங்க இருப்பாங்க. அவங்க எப்போவும் அவங்களுக்குள்ள சண்ட போட்டுக்குவாங்க. ஒரு நா அவங்க அம்மா அவங்ககிட்ட அவங்க அப்பா அவரு வேல பாக்குர பனிப்பிரதேசத்துக்கு வரச்சொல்லி இருக்காருன்னு சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்துட்டு இருப்பாங்க. அவங்க பிரயாணத்துக்கு மொத நாளு ஒரு தந்தி வரும். அந்த நேரம் வீட்டுல அம்மா இருக்க மாட்டாங்க. வழக்கம் போல சண்ட போடுற ரெண்டு பசங்களும் எதிர்பாராத விதமா அந்த தந்திய பனியில தொலச்சிருவாங்க. எங்கே அம்மா அடிப்பாங்களோங்கிற பயத்துல ரெண்டு பேரும் ராசியாகி அம்மாட்ட சொல்லக்கூடாதுன்னு முடிவுக்கு வந்திருவாங்க. வீட்டுக்கு வந்த அம்மாவுக்கோ இவங்க கம்னு இருக்குறத பாத்து கொஞ்சம் சந்தேகம்தான். ஆனா ஒண்ணும் கண்டு பிடிக்க முடியல.
அடுத்த நாளு ரெயில்ல அவங்க எல்லாம் போவாங்க. போற வழில அவங்க பாக்குற இடம், ஆளுங்க, கனவு - எல்லாம் அழகான படமா அங்கங்க இருக்கும். ஸ்டெப்பி புல்வெளி, பைன் மரங்கள், பனி மலைகள் இப்படி வழியெல்லாம் பாத்துட்டே போவாங்க. அவங்க போய் சேர வேண்டிய ஸ்டேசனுக்குப் போய் சேந்தவங்களுக்கு ஒரே அதிர்ச்சி! அவங்கள கூட்டிட்டுப்போக யாருமே வரல. அவங்களுக்கு என்ன பண்றதுண்ணே தெரியாது. ஒரு வழியா நாய்கள் இழுக்குமே - 'ஸ்லெட்ஜ்' வண்டிய வாடகைக்கு வச்சுகிட்டு, ரொம்ப நேரத்துக்கு அப்புறமா அவங்க போயி சேர வேண்டிய அந்த தூரதேச இடத்துக்கு போய் சேருறாங்க. அங்கேயும் ஆச்சரியம் அவங்களுக்கு காத்துகிட்டிருக்கு. அங்கேயும் யாரும் இல்ல. பக்கதுல வீடுகளும் கெடயாது. ஆளுங்களும் கெடயாது!
கூப்பிட்டு வந்த வண்டிக்காரன அவங்களுக்கு பிடிக்கவே இல்ல. ஆனாலும் அவனோட ஒதவில்லாம அங்க காலத்த தள்ள முடியாது. எக்கச்சக்கமா பனி மூடிட்டு இருக்குற பிரதேசம் அது. தண்ணி எடுத்துட்டு வர, ரொட்டிகளை ரெடி பண்ண - இப்படி அவன் ஒதவி பண்ணுனாலும் அவன் எப்போவும் கடுகடுன்னே இருப்பான். ரெண்டு மூணு நாளைக்கப்புறம் அந்த வண்டிக்காரன் காணாம போயிடுவான். அவங்க அம்மா படாதபாடு பட்டு அவங்களுக்கு சாப்பாடு பண்ணுவாங்க. அந்த நேரத்துல அந்த பசங்க படுற பாடு, பயம் எல்லாம் படத்துல அப்படியே தத்ரூபமா வரஞ்சிருப்பாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அந்த வண்டிக்காரன் திரும்பி வருவான். அவங்ககிட்டே சொல்லாமலே, ரொம்ப தூரத்தில இருக்குற அவங்க அப்பாகிட்ட ஸ்கீயிங் மூலமா தனியா போயி பேசிட்டு வந்திருக்காங்கிற விசயம் தெரிய வரும். வந்தவன் அவங்க அப்பா கிருஸ்துமஸக்கு முந்துன தினம் அங்கே வருவார்ங்கிற நல்ல சேதிய சொல்லுவான்.
சொன்ன மாதிரியே கொஞ்ச நாள்ள அவங்க அப்பா கூட்டத்தோட வந்திருவார். வந்ததுக்கு அப்புறந்தான் தெரியும் - இன்ன மாதிரி தொழில் விசயமா, அவசரமா வேற இடத்துக்குப் போறேன்; இப்போதைக்கு ஊருக்கு கெளம்ப வேணாம்; நான் மறுபடி தந்தி அனுப்புனதுக்கப்புறமா வந்தா போதும்..ன்னு தந்தி கொடுத்திருந்தாருன்னு. அவர் அனுப்புன அந்த தந்தியத்தான் அந்த குட்டிப்பசங்க காணாம போட்டது! ரொம்ப தூரத்தில் இருக்கும் மாதா கோவில் மணியோசைய கேட்டுகிட்டு, அக்கார்டியன் வாசிச்சுகிட்டு எல்லோரும் சந்தோசமா இருந்தாங்க அப்டீங்கறதோட கத முடியும்.
அந்த ரெண்டாவது புத்தகம் "உலகை குலுக்கிய பத்து நாட்கள்" - அந்த புத்தகத்தை நான் கொஞ்ச வருசத்துக்கு அப்புறம்தான் படிச்சேன்! படிச்சு முடிக்க கொஞ்ச மாசம் ஆச்சு..! அந்தப்புத்தகம் வந்தது சோவியத்திலிருந்துன்னாலும் எழுதுனவரு ஒரு அமெரிக்கரான ஜான்ரீட் அப்டீங்கிறதுதான் ஆச்சரியம். சோவியத்தில் மக்களாட்சி வர்றதுக்கு முன்னாடி என்ன என்ன நடந்திச்சு அப்டீங்கிறத கூடவே இருந்து பாத்து அவரு எழுதிய உண்மை சம்பவங்கள விவரிக்கிற புத்தகம்தான் அது. கசாக்குகள், போல்ஷ்விக்குகள்... அப்டீன்னு எல்லா குரூப்போட பேரும் வித்தியாசமா இருக்கும்; லெனின் பேசின பேச்சுக்கள், கூட்டங்கள், அங்க அப்பப்ப நடந்த சண்ட பத்தியெல்லாம் ரொம்ப வெலாவாரியா இருக்கும். முக்கியமான படங்களும் நெறய இருந்திச்சு. படிச்சதுக்கு அப்புறமா, நான் வாங்குன புத்தகம் அவ்வளவொன்னும் மோசமில்லன்னு நெனச்சுகிட்டேன்.
இப்ப நெனச்சா நெனச்ச புத்தகத்த வாங்க முடியுதுன்னாலும் மொதல்ல வாங்குன அந்த புத்தகங்களுக்கு ஈடு இருக்க முடியாது! ரொம்ப ரொம்ப பத்திரமா வச்சிருந்த அந்த புத்தகங்களை, ஏழு, எட்டு வருசத்துக்கு முன்னாடி படிச்சுட்டுத்தரேன்னு சொந்தக்காரங்க சொன்னத தட்ட முடியாம எடுத்துக் கொடுத்தேன். இன்னிக்கு வரைக்கும் என் கைக்கு திரும்பி வரலே. இனிமே வரும்னு நம்பிக்கையும் இல்ல. அதனால என்ன.. எப்பவும்தான் என் நெனைவுல இருக்குமே..!
-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை
21. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8493 - குளிர்காலம்
முதல் புத்தகம்
இது வந்து பள்ளிக்கூடத்துல படிச்ச மொத வகுப்பு தமிழு புத்தகம்னு நினச்சீங்கன்னா .. அது தப்பு. என் இஷ்டத்துக்கு நானா தனியா போயி கடைல வாங்குன புத்தகம் பத்தித்தான் சொல்ல நெனச்சேன்.
சின்ன புள்ளையா இருக்குறப்போ அம்புலி மாமா, இரும்புக்கை மாயாவி மாதிரி புத்தகங்கள்ல வர்ற படத்த பாக்குறதும், எழுத்தக்கூட்டி படிக்கிறதும் எனக்கு ரொம்ப புடிக்கும். யார் வீட்டுக்கும் நான் போறதில்லங்கறதால எப்பயாவது அக்காங்க கொண்டு வர்ற புஸ்தகங்கள திருப்பி திருப்பி வாசிச்சுகிட்டே இருப்பேன். அந்த புஸ்தகங்கள்ல வர்றதெல்லாம் நெசம்னு நம்பிகிட்டு இருந்த நேரமும் உண்டுதான்.
ம்ம்... ஒரு ஏழாவது எட்டாவது படிச்சுகிட்டு இருந்திருப்பேன்னு நெனக்கிறேன். விருந்தாளிக வந்தா கொடுத்துட்டுப்போற நயாபைசாக்களை எல்லாம் சேர்த்து வச்சுகிட்டிருந்தேன். தேனியில "நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் " புத்தக கண்காட்சி போட்டுருக்குன்னு போஸ்டர்ல பார்த்தன, எப்படியாவது அங்க போகணும்னு ஆசை. ஏன்னு கேக்குறீங்களா...? அப்பல்லாம் நோட்டு, புத்தகத்துக்கு எல்லாம் காக்கி அட்டை போடறதெல்லாம் இன்ஸ்பெக்சன் அப்ப மாத்திரம்தான். மத்த நேரத்துல எந்த அட்டை வேணும்னாலும் போட்டுக்கலாம். அப்ப பழய சோவியத் யூனியன் புத்தகங்களை எல்லாம் வெலைக்கி விப்பாங்க...! 20, 25 காசுன்னு. ஒரு புத்தகம் வாங்குனா நெறய நோட்டுக்கு அட்டை போடலாமே..! அதும்மில்லாம அந்த புத்தகங்களோட பேப்பரு...! கலர் கலர் போட்டோக்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப நல்லாருக்கும். ஒலிம்பிக் வெளாட்டுல வெளாடுனவங்க படம், ராக்கெட் படம், பூக்களோட படம் இப்படி.. எல்லாமே பார்த்து பிரமிச்சு போயிருக்கேன். அந்த புத்தகம் இங்கிலீஷ், தமிழ் ரெண்டுலயும் வரும். இங்கிலீஷ் புத்தகத்துல பக்கமெல்லாம் நெறய இருக்கும். தமிழ் புத்தகத்துல பக்கமெல்லாம் கொஞ்சம் கம்மி. படங்களும் கம்மியாத்தான் இருக்கும்.
அதனால பழய புத்தகங்களை வாங்குறத விட நாமளே புதுப்புத்தகத்த வாங்குனா படிக்கிறதுக்கும் வசதி. அப்புறம் அட்டையும் போட்டுறலாம்னு அய்யாவோட திட்டம். அதோட சேர்த்து சோவியத் யூனியன் காலண்டரும் கிடைக்கும்னு பழைய புத்தகத்துல படிச்ச நெனவு வேற.
அப்படி நான் சேர்த்து வச்ச காசோட, வீட்டுலேருந்து [ அழுது ] வாங்குன காசையும் சேர்த்துகிட்டு மொத தடவையா புத்தகம் வாங்க தனியா தேனிக்கு நடந்தேன்.
தேனி பஸ்ஸ்டாண்டுக்கு கொஞ்சம் தள்ளி, கெழக்க புதுசா ஒரு கீத்துக்கொட்டாய் போட்டு வெளில ஒரு பேனர் கட்டியிருந்தாங்க. எல்லாப் புத்தகத்தையும் வரிசையா அடுக்கி வச்சிருந்தாங்க. இப்ப நெறய கடக்கி போயிருந்தாலும் அப்போதைக்கு அது எனக்கு ரொம்ப பெரிய புத்தக கண்காட்சியா தோணிச்சு. நல்ல வேளையா புத்தகத்த எல்லாம் நான் பார்க்கக்கூடிய அளவு உசரத்துலதான் வச்சிருந்தாங்க.
ஒவ்வொரு புத்தகமாக பாக்க பாக்க ரொம்ப ரொம்ப ஆசயா இருந்துச்சு. அங்கெல்லாம் இருந்த கட்டிடங்க, சுத்துப்பயணம் போற இடங்க, அறிவியல் சம்பந்தமான கதைக, சின்ன குழந்தைக்களுக்கான புத்தகம்.. இப்படி... எல்லாத்தையும் அப்பிடியே வீட்டுக்கு அள்ளிகிட்டு போகணும்னு தோணிச்சு. பைல இருந்த காச எண்ணிப்பார்த்தேன். பத்து ரூபாய் அளவுக்குத்தான் இருந்துச்சு. ஹம்.
மூணு வருசத்துக்கு சந்தா கட்டுனாத்தான் சோவியத் யூனியன் புத்தகத்தோட காலண்டர் தருவாங்கன்னு சொன்னாங்க. மூணு வருசத்துக்கும் சேர்த்து சந்தா எத்தன ரூபான்னு இப்ப மறந்து போச்சு. ஆனா என்கிட்ட இருந்த ரூபா நிச்சயமா பத்தாது. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல. அழுகையா வருது.
நிச்சயம் வேற ஏதாவது புத்தகம் வாங்கிட்டுத்தான் போகணுங்கிற வெறி வந்துச்சு. இருந்த பத்து ரூபாய்க்கும் ஏதாவது வாங்கிறணும்னு நானும் அந்த கடைய சுத்தி சுத்தி வந்தேன். கடேசில ரெண்டு புஸ்தகம் வாங்குனேன்.
ஒரு புத்தகத்தோட பேரு " மறைந்த தந்தி". இன்னொரு புத்தகத்தோட பேரு " உலகை குலுக்கிய பத்து நாட்கள்".
மறைந்த தந்தி புத்தகத்தோட அட்டை ரொம்ப கெட்டி. புத்தகத்தோட அளவும் பெரிசா இருக்கும். இப்ப எங்க்ரேவ்ட்-னு சொல்றாங்க பாருங்க அது மாதிரி - அந்த அட்டையில படமும் எழுத்துக்களும் இருக்கும். புத்தகம் பூரா படமா நெறம்பி இருக்கும். படத்த எல்லாம் நல்லா வரஞ்சிருப்பாங்க. பேப்பரும் சும்மா வழுவழுன்னு இருக்கும். படம் பார்த்துகிட்டே படிக்க ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும். புத்தகத்தோட வெல 3ரூபா 75 காசு.
அந்த ரெண்டாவது புத்தகம் " உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்" - எழுதுனவரு பேரு ஜான் ரீட். வெல 5ரூபா 50 காசு. அந்தப்புத்தகம் வாங்குனதுக்கு காரணம் அந்தப் புத்தகத்தோட அட்டை... சிகப்பு வெல்வெட் துணியில தச்சிருந்தாங்க. அந்த அட்டைக்கே அந்த காசு பெறுமே..! அப்புறம் புத்தகத்தோட பக்கம்.. ஆயிரம் பக்கத்துக்கும் மேலே.. எடைக்குப் போட்டாலும் நல்ல வெலைக்குப் போகுமே..!!
புத்தகத்த வாங்கிட்டு வீட்டுக்கு நான் நடந்து வரும்போது பாக்கணுமே.. அவ்ளோ ஒரு சந்தோசம், அப்படி ஒரு கெத்து எனக்கு. அப்பப்ப பைல இருந்து எடுத்து எடுத்து பாத்துட்டே வந்தேன். வீட்டுலயும் ஒருத்தரயும் தொட விடலயே.
இதுல முதலாவதா சொன்னேன் பாருங்க "மறைந்த தந்தி" - அத எழுதுனவரு பேரு மறந்து போச்சு. ஆனா கத அப்படியே நெனவு இருக்கு. மாஸ்கோவுல ஒரு வீட்டுல ரெண்டு குட்டிப்பசங்க இருப்பாங்க. அவங்க எப்போவும் அவங்களுக்குள்ள சண்ட போட்டுக்குவாங்க. ஒரு நா அவங்க அம்மா அவங்ககிட்ட அவங்க அப்பா அவரு வேல பாக்குர பனிப்பிரதேசத்துக்கு வரச்சொல்லி இருக்காருன்னு சொல்லி அதற்கான ஏற்பாடுகளை செய்துட்டு இருப்பாங்க. அவங்க பிரயாணத்துக்கு மொத நாளு ஒரு தந்தி வரும். அந்த நேரம் வீட்டுல அம்மா இருக்க மாட்டாங்க. வழக்கம் போல சண்ட போடுற ரெண்டு பசங்களும் எதிர்பாராத விதமா அந்த தந்திய பனியில தொலச்சிருவாங்க. எங்கே அம்மா அடிப்பாங்களோங்கிற பயத்துல ரெண்டு பேரும் ராசியாகி அம்மாட்ட சொல்லக்கூடாதுன்னு முடிவுக்கு வந்திருவாங்க. வீட்டுக்கு வந்த அம்மாவுக்கோ இவங்க கம்னு இருக்குறத பாத்து கொஞ்சம் சந்தேகம்தான். ஆனா ஒண்ணும் கண்டு பிடிக்க முடியல.
அடுத்த நாளு ரெயில்ல அவங்க எல்லாம் போவாங்க. போற வழில அவங்க பாக்குற இடம், ஆளுங்க, கனவு - எல்லாம் அழகான படமா அங்கங்க இருக்கும். ஸ்டெப்பி புல்வெளி, பைன் மரங்கள், பனி மலைகள் இப்படி வழியெல்லாம் பாத்துட்டே போவாங்க. அவங்க போய் சேர வேண்டிய ஸ்டேசனுக்குப் போய் சேந்தவங்களுக்கு ஒரே அதிர்ச்சி! அவங்கள கூட்டிட்டுப்போக யாருமே வரல. அவங்களுக்கு என்ன பண்றதுண்ணே தெரியாது. ஒரு வழியா நாய்கள் இழுக்குமே - 'ஸ்லெட்ஜ்' வண்டிய வாடகைக்கு வச்சுகிட்டு, ரொம்ப நேரத்துக்கு அப்புறமா அவங்க போயி சேர வேண்டிய அந்த தூரதேச இடத்துக்கு போய் சேருறாங்க. அங்கேயும் ஆச்சரியம் அவங்களுக்கு காத்துகிட்டிருக்கு. அங்கேயும் யாரும் இல்ல. பக்கதுல வீடுகளும் கெடயாது. ஆளுங்களும் கெடயாது!
கூப்பிட்டு வந்த வண்டிக்காரன அவங்களுக்கு பிடிக்கவே இல்ல. ஆனாலும் அவனோட ஒதவில்லாம அங்க காலத்த தள்ள முடியாது. எக்கச்சக்கமா பனி மூடிட்டு இருக்குற பிரதேசம் அது. தண்ணி எடுத்துட்டு வர, ரொட்டிகளை ரெடி பண்ண - இப்படி அவன் ஒதவி பண்ணுனாலும் அவன் எப்போவும் கடுகடுன்னே இருப்பான். ரெண்டு மூணு நாளைக்கப்புறம் அந்த வண்டிக்காரன் காணாம போயிடுவான். அவங்க அம்மா படாதபாடு பட்டு அவங்களுக்கு சாப்பாடு பண்ணுவாங்க. அந்த நேரத்துல அந்த பசங்க படுற பாடு, பயம் எல்லாம் படத்துல அப்படியே தத்ரூபமா வரஞ்சிருப்பாங்க. கொஞ்ச நாள் கழிச்சு அந்த வண்டிக்காரன் திரும்பி வருவான். அவங்ககிட்டே சொல்லாமலே, ரொம்ப தூரத்தில இருக்குற அவங்க அப்பாகிட்ட ஸ்கீயிங் மூலமா தனியா போயி பேசிட்டு வந்திருக்காங்கிற விசயம் தெரிய வரும். வந்தவன் அவங்க அப்பா கிருஸ்துமஸக்கு முந்துன தினம் அங்கே வருவார்ங்கிற நல்ல சேதிய சொல்லுவான்.
சொன்ன மாதிரியே கொஞ்ச நாள்ள அவங்க அப்பா கூட்டத்தோட வந்திருவார். வந்ததுக்கு அப்புறந்தான் தெரியும் - இன்ன மாதிரி தொழில் விசயமா, அவசரமா வேற இடத்துக்குப் போறேன்; இப்போதைக்கு ஊருக்கு கெளம்ப வேணாம்; நான் மறுபடி தந்தி அனுப்புனதுக்கப்புறமா வந்தா போதும்..ன்னு தந்தி கொடுத்திருந்தாருன்னு. அவர் அனுப்புன அந்த தந்தியத்தான் அந்த குட்டிப்பசங்க காணாம போட்டது! ரொம்ப தூரத்தில் இருக்கும் மாதா கோவில் மணியோசைய கேட்டுகிட்டு, அக்கார்டியன் வாசிச்சுகிட்டு எல்லோரும் சந்தோசமா இருந்தாங்க அப்டீங்கறதோட கத முடியும்.
அந்த ரெண்டாவது புத்தகம் "உலகை குலுக்கிய பத்து நாட்கள்" - அந்த புத்தகத்தை நான் கொஞ்ச வருசத்துக்கு அப்புறம்தான் படிச்சேன்! படிச்சு முடிக்க கொஞ்ச மாசம் ஆச்சு..! அந்தப்புத்தகம் வந்தது சோவியத்திலிருந்துன்னாலும் எழுதுனவரு ஒரு அமெரிக்கரான ஜான்ரீட் அப்டீங்கிறதுதான் ஆச்சரியம். சோவியத்தில் மக்களாட்சி வர்றதுக்கு முன்னாடி என்ன என்ன நடந்திச்சு அப்டீங்கிறத கூடவே இருந்து பாத்து அவரு எழுதிய உண்மை சம்பவங்கள விவரிக்கிற புத்தகம்தான் அது. கசாக்குகள், போல்ஷ்விக்குகள்... அப்டீன்னு எல்லா குரூப்போட பேரும் வித்தியாசமா இருக்கும்; லெனின் பேசின பேச்சுக்கள், கூட்டங்கள், அங்க அப்பப்ப நடந்த சண்ட பத்தியெல்லாம் ரொம்ப வெலாவாரியா இருக்கும். முக்கியமான படங்களும் நெறய இருந்திச்சு. படிச்சதுக்கு அப்புறமா, நான் வாங்குன புத்தகம் அவ்வளவொன்னும் மோசமில்லன்னு நெனச்சுகிட்டேன்.
இப்ப நெனச்சா நெனச்ச புத்தகத்த வாங்க முடியுதுன்னாலும் மொதல்ல வாங்குன அந்த புத்தகங்களுக்கு ஈடு இருக்க முடியாது! ரொம்ப ரொம்ப பத்திரமா வச்சிருந்த அந்த புத்தகங்களை, ஏழு, எட்டு வருசத்துக்கு முன்னாடி படிச்சுட்டுத்தரேன்னு சொந்தக்காரங்க சொன்னத தட்ட முடியாம எடுத்துக் கொடுத்தேன். இன்னிக்கு வரைக்கும் என் கைக்கு திரும்பி வரலே. இனிமே வரும்னு நம்பிக்கையும் இல்ல. அதனால என்ன.. எப்பவும்தான் என் நெனைவுல இருக்குமே..!
-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை
21. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8493 - குளிர்காலம்