PDA

View Full Version : தாய்மையைப் போற்றுவோம்!!



நிலா
16-04-2003, 09:18 PM
மூலவிக்ரகமாய் எனை பூஜித்து
உற்சவமாய் உலவுகிறாய்!
பத்தியங்கள் பலயிருந்து
கவலையிலும் கரையாது
பத்துத் திங்கள் காத்திருத்தலில்
பொறுமைதனைப் போதிக்கிறாய்!
உண்ணாமல் உறங்காமல்
கடமைதனைக் கற்றுணர்த்தும் உணர்வே!
உண்னுள்ளே உலவுகையில்
உலகினையே உணர்த்துகிறாய்!
என்னுயிரைக் காப்பாற்ற
நின்னுயிரைப் பகிர்ந்தளித்து
அன்புமொழி புகட்டுகிறாய்!
வதைத்தாலும் உதைத்தாலும்
சுதந்திரம்தனை உணர்த்துகிறாய்!
நிலழாக நினைப்பினிலே
நீயுள்ளாய் என்னோடு
நிஜமாக்கி நீ என்னை அணைத்திடவே
முடியாதோ பத்துத் திங்கள்?
என் தாயே! உனை நாளும் பூஜிக்க!

நிலா

இளசு
16-04-2003, 09:40 PM
அன்னைக்கு கவிதை படைத்தால் - தமிழ்
அன்னை எத்தனை களிப்போடு ஓடிவந்து
வண்ண வரிகளாய் எண்ண அலைகளை
என்னமாய் எழுத உதவுகிறாள்....

பெண்ணுக்கு பெண் செய்யும் உதவி அது...
நிலாவின் அழகுக் கவிதை கூறும் உண்மை இது!

பாராட்டுகள் நிலா...

poo
17-04-2003, 01:17 PM
அன்னையெனும் தெய்வம் பற்றி அழகாய்...

நன்றி நிலா!!

Hayath
17-04-2003, 02:34 PM
நிலா.....நம் தளத்தின் கவிதை நிலா......பாராட்டுக்கள்.

lingam
17-04-2003, 06:00 PM
தாயினை பூஜிக்கும்
பக்தனில் ஒருவனாய்
தாய்க்குலத்தின் கவிதை
கண்டு மகிழ்ந்தேன்.

கவி படைக்கும் நிலா
நீ தமிழ் மன்றமெனும்
வானில் வெளிச்சமூட்டும்
நிலா என வாழ்த்துகிறேன்

subavaanan
18-04-2003, 06:17 AM
அன்னைக்கு அரங்கு
படைத்திற்கும் உமையவளே..
அன்னையின் அருமை
உணர்ந்தவளே... நிலவே
குளிர்ச்சியூட்டு, தாங்கியிருந்த
அடிவயிற்றையும், எங்களின்
மனங்களையும்...