பாரதி
20-05-2005, 11:27 PM
தேதி இல்லா குறிப்புகள்
லட்சுமி
அன்பு செலுத்துவது மிக மிக எளிதான செயல். ஆனால் அதை தொலைத்து விட்டாலோ அல்லது திரும்ப கிடைக்காமல் போகும் போதோ மனம் ரொம்பவே கஷ்டப்படும். நான் அன்பு வைத்திருந்த சில உயிர்களைப் பற்றி...
எங்கள் வீட்டின் முன்பகுதியில் வாசற்படிக்கு இரண்டு புறமும் பெரிய திண்ணைகள் இருக்கும். தெற்குபக்கம் தலையணை போல வழு வழுவென்று சற்று உயர்ந்த பகுதி இருக்கும். அதன் மேலே ஏறி நின்று பார்த்தால் ( நான் சிறுவனாக இருந்த போது ) மாட்டுத்தொழுவம் தெரியும். மாட்டுத்தொழுவம்... அதற்கே உரிய ஒரு மணம் இருக்கும்தான். ஆரம்பத்தில் அத்தொழுவத்தில் பல மாடுகள் இருந்தனவாம்.மாட்டைக்கட்ட வசதியாக கற்களில் துளையும், மாடுகளுக்கு தேவையான தீவனம் போட கற்களால் கட்டப்பட்ட சிறு சுவரும், தண்ணீர் வைக்க சிறுகல் தொட்டியும் அங்கே இருந்தன.
வீட்டில் பசு இருந்தால்தான் 'செல்வம்' என்கிற நம்பிக்கை எல்லா கிராமத்து சம்சாரிகளின் வீடுகளிலும் இருக்கும். எங்கள் வீடும் அதற்கு விதிவிலக்கல்ல.. லட்சுமி ரொம்ப களையாக, மூக்கும் முளியுமாக இருக்கும். எப்போதும் ரொம்ப சாதுவாக இருக்கும். குடும்பத்தில் ஒருவர் போல..
எனக்கு விபரம் தெரிந்த ஆரம்ப நாட்களில், வீட்டிற்கு ஒரு ஆள் வந்து பசுவை அழைத்துச்சென்று புல்வெளியில் மேயவிட்டு அழைத்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அது சில வருடங்களில் நின்று விட்டது. சொந்தமாக புல்லை அறுத்தோ, அல்லது விற்பனைக்கு வரும் புல்லோ வீட்டிலேயே தீவனம் வழங்குவது வாடிக்கையாகி விட்டது.
காலையில் வயலுக்கு சென்று பச்சை பசேலென்று இருக்கும் புல்லை அறுத்துக்கொண்டு வருவதை ஆவலுடன் காத்திருந்து பார்க்கும். புற்கட்டை பிரிக்கும் முன்பே புற்கட்டை இழுக்கும். வேக வேகமா சாப்பிடுவதை பார்க்க வேடிக்கையாக இருக்கும். புற்கட்டு மட்டுமில்லாமல் தேனிக்கு சென்று கடலை புண்ணாக்கு வாங்கி வந்து நன்றாக ஊற வைத்து கரைத்து வைத்தால் ரொம்ப விரும்பி குடிக்கும். இது தவிர சோளத்தட்டை, மக்காச்சோளத்தட்டை, நெற்கதிரடித்த பின் கிடைக்கும் வைக்கோல் போன்றவையும் சேமித்து வைக்கப்பட்டு, தேவையான போது தீவனமாக மாறும். காலத்திற்கு தகுந்தவாறு சில வேளைகளில் மற்ற இழை தழை கொடிகளும் தரப்படும். சீமைக்கருவேலி மரங்களில் இருக்கும் காய்களும் அவ்வப்போது உணவாக மாறும்.
தினம் லட்சுமி தரும் பாலின் மூலம்தான் காப்பி..! எழுந்திருக்கும் போது பெரிய டம்ளரில் தழும்ப தழும்ப அம்மா தரும் காப்பியை படுக்கையில் இருந்து கொண்டே, பல்லைக்கூட விளக்காமல் [ ? ] கண்ணை திறக்காமல் "சர்"ரென்ற சத்தத்துடன் உறிஞ்சிக்குடிக்கும் சுகமே தனிதான்.
அப்போதெல்லாம் தயிரை வீட்டிலேயே கடைந்து வெண்ணெய் எடுப்பார்கள். வழக்கமா யாராவது ஒரு அக்கா 'மத்து' மூலம் தயிரைக் கடைவார்கள். நான் பக்கத்திலேயே இருந்து பார்ப்பேன். சுவரோரமாக பானையை வைத்திருப்பார்கள். மத்து கவிழ்ந்து விடாமல் இருக்க ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கும். மத்தில் ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி கயிறு மூலம் ஒரே விதமாக கடைவார்கள். இடப்பக்கமாகவும், வலப்பக்கமாகவும் ஒரே அளவில் மாற்றி மாற்றி கடையும் போது தயிரில் இருந்து நுரை நுரையாக வெண்ணெய் திரண்டு வரும். மத்தின் பற்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய் படிய ஆரம்பிக்கும். ஓரளவுக்கு சேர்ந்ததும், மத்தை எடுத்து சேர்ந்த வெண்ணெயை ஒரு கிண்ணத்தில் சேகரிப்பார்கள். அவ்வப்போது நான் அதை அப்படியே 'லபக்' செய்து விடுவேன். தயிர் கடையும் போது ஓரளவுக்கு கடைந்ததும் நிறுத்தி விடுவார்கள். இப்போது நான் கடைகளில் பார்க்கும் தயிர்தான் அப்போதெல்லாம் 'மோர்' என்றழைக்கப்பட்டது..!! அப்போது தயிர் மிகவும் கெட்டியாக இருக்கும். மேலே மெல்லிய மஞ்சள் நிற ஆடையுடன் இருக்கும் அந்த தயிரை பழைய சாதத்துடன் பிசைந்து, வெங்காயத்தை கடித்துக்கொண்டு சாப்பிட்டதை இப்போது நினைத்தாலும் ஏக்கமாக இருக்கிறது.
சேர்த்து வைத்த தயிர் அவ்வப்போது நெய்யாக மாறும். அப்போதும் நான் சமையலறையில் ஆஜராகி விடுவேன். காய்ச்சியது போதுமா இல்லையா என்பதை கண்டுணர முருங்கை இலை அல்லது கறிவேப்பிலையை அதில் இட்டு எடுத்துப்பார்ப்பார்கள். அப்படி பக்குவம் பார்த்து எடுக்கும் அந்த இலைகளின் சுவை... அடடா.... எப்படி சொல்ல..! மீதமாகும் பால், தயிர் போன்றவற்றை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு விற்று அம்மா 'சிறுவாடு'-ம் சேர்த்து வருவார்கள்.!
மாட்டுப் பொங்கல் வந்து விட்டால் போதும் ... லட்சுமியை நாங்கள் கவனிக்கும் விதமே தனி. கொம்பை எல்லாம் சீவி, பெயிண்ட் மூலம் அலங்கரித்து, நெற்றில் திலகமிட்டு, கழுத்தில் மாலையுடன், மகனுடன் ஊரை முழுக்க சுற்றி காட்டி வருவோம். அதில் எனக்கு ரொம்பவும் பெருமையாக இருக்கும். எங்கள் லட்சுமிதான் ஊரிலேயே மிகவும் அழகு என்பது என் அலாதியான நம்பிக்கை.
நான் சிறுவனாக இருந்த போது, பிறந்த சில வாரங்களே ஆகி இருந்த கன்றை தடவிக்கொடுக்க மிகவும் ஆசைப்படுவேன். அதுவும் கழுத்தை தூக்கி நான் வருட மிகவும் ஒத்துழைக்கும். ஒரு முறை நான் கன்று அருகில் சென்று அதன் நெற்றியில் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என்னை யாரோ தூக்குவது போல இருந்தது. யாரென்று பார்த்தால் லட்சுமி தன் கொம்புகளால் என் காற்சட்டையின் மூலம் என்னைத் தூக்கி, சற்றே தலையை ஆட்டி தூக்கி எறிந்தது. நல்லவேளையாக நான் விழுந்த இடம் ... சாணி சேமித்து வைத்திருந்த கூடை.! ஏதோ சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பது போல அங்கே விழுந்து கிடந்ததைப்பார்த்து எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. எனக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை. இருந்தாலும் அதற்குப்பின்னர் லட்சுமிக்கு அருகில் செல்ல கொஞ்சம் பயம்தான்.
'லட்சுமி' என்று யாரழைத்தாலும் போதும். தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு உடனே அது திரும்பிப் பார்க்கும். மதிய வேளைகளில் உணவோ, தாகமோ எடுத்தால் ' அம்மா' என்றழைக்கும். அது அழைக்கும் தொனியைக் கொண்டே அம்மா லட்சுமி எதற்காக அழைக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்படுவதும் எனக்கு எப்போதும் ஆச்சரியத்தையே கொடுக்கும். அம்மாவும் கன்றுக்கு போக மீதமிருக்கும் பாலையே கறப்பார்கள். பெருவிரலை உட்புறம் மடக்கிக்கொண்டு, அம்மா பால் கறக்கும் போது லட்சுமி எப்போதும் தொந்தரவே செய்ததில்லை.
என்ன காரணத்தாலோ சில வருடங்களுக்குப் பின் ... [ ஒரு வேளை லட்சுமிக்கு வயதாகி இருக்குமோ..? ] லட்சுமி யாரிடமோ விற்கப்பட்டது. அதற்குப்பின் வேறொரு லட்சுமி வீட்டிற்கு வந்தது. இது பழைய லட்சுமி போல் இல்லை. அளவிலும் பெரிதாக இருந்தது. எனக்கென்னவோ பழைய லட்சுமியைத்தான் பிடித்திருந்தது.
புது லட்சுமி சில மாதங்களில் ஒரு கன்றை ஈன்றது. முதன்முறையாக ஒரு ஜீவன் உதயமாவதை கண்கூடாக பார்த்தேன். புது லட்சுமிக்கு கவனிப்பு அதிகம்தான். பால் நிறைய தந்ததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
புது லட்சுமிக்கு ஒரு முறை உடல் சரியில்லாமல் போனது. உள்ளூர் நாட்டு வைத்தியர் என்னனென்னவோ பச்சிலை மருந்து தந்து பார்த்தார். ஆனால் பலனில்லை. சில தினங்களிலேயே அதன் உடல் மிகவும் மோசமானது. எந்த உணவையும் உண்ண மறுத்து விட்டது. ஒரு நாளிரவு படுத்த லட்சுமியால் மீண்டும் எழுந்திருக்க இயலவில்லை. அதன் வாயில் நுரை வர ஆரம்பித்தது.
உடனே கொடுவிலார்பட்டியில் இருக்கும் ஒரு வைத்தியரை அழைத்து வர வேண்டும் என்று நானும் அத்தானும் நள்ளிரவு ஒரு மணிக்கு சைக்கிளில் கிளம்பினோம். அந்த வைத்தியரை அழைத்துக்கொண்டு வந்து சேரும் போது அதிகாலை நான்கு மணி ஆகிவிட்டது. வந்தவர் அவரது வைத்தியத்தை பார்க்க ஆரம்பித்தார். லட்சுமி படும் வேதனையை என்னால் பார்க்க முடியவில்லை. வீட்டிற்குள் வந்து விட்டேன். கன்று 'அம்மா' என்றழைக்கும் சத்தம் மேலும் வேதனைப்படுத்தியது.
காலை ஆறு மணிக்கு அம்மா அழ ஆரம்பித்தார். அதற்குப் பின் இன்று வரை எங்கள் வீட்டிற்கு எந்த லட்சுமியும் வரவில்லை. வீட்டில் முன்கூரையில் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கும் வாய்க்கூண்டுகள் ஒரு காலத்தில் வீட்டில் இருந்த லட்சுமியை இன்னும் நினைவுறுத்திக்கொண்டிருக்கிறன. மாட்டுத்தொழுவம் இப்போது அறையாக மாறிவிட்டிருக்கிறது..!
-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை
21. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8493 - குளிர்காலம்
லட்சுமி
அன்பு செலுத்துவது மிக மிக எளிதான செயல். ஆனால் அதை தொலைத்து விட்டாலோ அல்லது திரும்ப கிடைக்காமல் போகும் போதோ மனம் ரொம்பவே கஷ்டப்படும். நான் அன்பு வைத்திருந்த சில உயிர்களைப் பற்றி...
எங்கள் வீட்டின் முன்பகுதியில் வாசற்படிக்கு இரண்டு புறமும் பெரிய திண்ணைகள் இருக்கும். தெற்குபக்கம் தலையணை போல வழு வழுவென்று சற்று உயர்ந்த பகுதி இருக்கும். அதன் மேலே ஏறி நின்று பார்த்தால் ( நான் சிறுவனாக இருந்த போது ) மாட்டுத்தொழுவம் தெரியும். மாட்டுத்தொழுவம்... அதற்கே உரிய ஒரு மணம் இருக்கும்தான். ஆரம்பத்தில் அத்தொழுவத்தில் பல மாடுகள் இருந்தனவாம்.மாட்டைக்கட்ட வசதியாக கற்களில் துளையும், மாடுகளுக்கு தேவையான தீவனம் போட கற்களால் கட்டப்பட்ட சிறு சுவரும், தண்ணீர் வைக்க சிறுகல் தொட்டியும் அங்கே இருந்தன.
வீட்டில் பசு இருந்தால்தான் 'செல்வம்' என்கிற நம்பிக்கை எல்லா கிராமத்து சம்சாரிகளின் வீடுகளிலும் இருக்கும். எங்கள் வீடும் அதற்கு விதிவிலக்கல்ல.. லட்சுமி ரொம்ப களையாக, மூக்கும் முளியுமாக இருக்கும். எப்போதும் ரொம்ப சாதுவாக இருக்கும். குடும்பத்தில் ஒருவர் போல..
எனக்கு விபரம் தெரிந்த ஆரம்ப நாட்களில், வீட்டிற்கு ஒரு ஆள் வந்து பசுவை அழைத்துச்சென்று புல்வெளியில் மேயவிட்டு அழைத்து வந்து கொண்டிருந்தார். ஆனால் அது சில வருடங்களில் நின்று விட்டது. சொந்தமாக புல்லை அறுத்தோ, அல்லது விற்பனைக்கு வரும் புல்லோ வீட்டிலேயே தீவனம் வழங்குவது வாடிக்கையாகி விட்டது.
காலையில் வயலுக்கு சென்று பச்சை பசேலென்று இருக்கும் புல்லை அறுத்துக்கொண்டு வருவதை ஆவலுடன் காத்திருந்து பார்க்கும். புற்கட்டை பிரிக்கும் முன்பே புற்கட்டை இழுக்கும். வேக வேகமா சாப்பிடுவதை பார்க்க வேடிக்கையாக இருக்கும். புற்கட்டு மட்டுமில்லாமல் தேனிக்கு சென்று கடலை புண்ணாக்கு வாங்கி வந்து நன்றாக ஊற வைத்து கரைத்து வைத்தால் ரொம்ப விரும்பி குடிக்கும். இது தவிர சோளத்தட்டை, மக்காச்சோளத்தட்டை, நெற்கதிரடித்த பின் கிடைக்கும் வைக்கோல் போன்றவையும் சேமித்து வைக்கப்பட்டு, தேவையான போது தீவனமாக மாறும். காலத்திற்கு தகுந்தவாறு சில வேளைகளில் மற்ற இழை தழை கொடிகளும் தரப்படும். சீமைக்கருவேலி மரங்களில் இருக்கும் காய்களும் அவ்வப்போது உணவாக மாறும்.
தினம் லட்சுமி தரும் பாலின் மூலம்தான் காப்பி..! எழுந்திருக்கும் போது பெரிய டம்ளரில் தழும்ப தழும்ப அம்மா தரும் காப்பியை படுக்கையில் இருந்து கொண்டே, பல்லைக்கூட விளக்காமல் [ ? ] கண்ணை திறக்காமல் "சர்"ரென்ற சத்தத்துடன் உறிஞ்சிக்குடிக்கும் சுகமே தனிதான்.
அப்போதெல்லாம் தயிரை வீட்டிலேயே கடைந்து வெண்ணெய் எடுப்பார்கள். வழக்கமா யாராவது ஒரு அக்கா 'மத்து' மூலம் தயிரைக் கடைவார்கள். நான் பக்கத்திலேயே இருந்து பார்ப்பேன். சுவரோரமாக பானையை வைத்திருப்பார்கள். மத்து கவிழ்ந்து விடாமல் இருக்க ஒரு கயிறு கட்டப்பட்டிருக்கும். மத்தில் ஒன்றிரண்டு சுற்றுகள் சுற்றி கயிறு மூலம் ஒரே விதமாக கடைவார்கள். இடப்பக்கமாகவும், வலப்பக்கமாகவும் ஒரே அளவில் மாற்றி மாற்றி கடையும் போது தயிரில் இருந்து நுரை நுரையாக வெண்ணெய் திரண்டு வரும். மத்தின் பற்களில் கொஞ்சம் கொஞ்சமாக வெண்ணெய் படிய ஆரம்பிக்கும். ஓரளவுக்கு சேர்ந்ததும், மத்தை எடுத்து சேர்ந்த வெண்ணெயை ஒரு கிண்ணத்தில் சேகரிப்பார்கள். அவ்வப்போது நான் அதை அப்படியே 'லபக்' செய்து விடுவேன். தயிர் கடையும் போது ஓரளவுக்கு கடைந்ததும் நிறுத்தி விடுவார்கள். இப்போது நான் கடைகளில் பார்க்கும் தயிர்தான் அப்போதெல்லாம் 'மோர்' என்றழைக்கப்பட்டது..!! அப்போது தயிர் மிகவும் கெட்டியாக இருக்கும். மேலே மெல்லிய மஞ்சள் நிற ஆடையுடன் இருக்கும் அந்த தயிரை பழைய சாதத்துடன் பிசைந்து, வெங்காயத்தை கடித்துக்கொண்டு சாப்பிட்டதை இப்போது நினைத்தாலும் ஏக்கமாக இருக்கிறது.
சேர்த்து வைத்த தயிர் அவ்வப்போது நெய்யாக மாறும். அப்போதும் நான் சமையலறையில் ஆஜராகி விடுவேன். காய்ச்சியது போதுமா இல்லையா என்பதை கண்டுணர முருங்கை இலை அல்லது கறிவேப்பிலையை அதில் இட்டு எடுத்துப்பார்ப்பார்கள். அப்படி பக்குவம் பார்த்து எடுக்கும் அந்த இலைகளின் சுவை... அடடா.... எப்படி சொல்ல..! மீதமாகும் பால், தயிர் போன்றவற்றை பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு விற்று அம்மா 'சிறுவாடு'-ம் சேர்த்து வருவார்கள்.!
மாட்டுப் பொங்கல் வந்து விட்டால் போதும் ... லட்சுமியை நாங்கள் கவனிக்கும் விதமே தனி. கொம்பை எல்லாம் சீவி, பெயிண்ட் மூலம் அலங்கரித்து, நெற்றில் திலகமிட்டு, கழுத்தில் மாலையுடன், மகனுடன் ஊரை முழுக்க சுற்றி காட்டி வருவோம். அதில் எனக்கு ரொம்பவும் பெருமையாக இருக்கும். எங்கள் லட்சுமிதான் ஊரிலேயே மிகவும் அழகு என்பது என் அலாதியான நம்பிக்கை.
நான் சிறுவனாக இருந்த போது, பிறந்த சில வாரங்களே ஆகி இருந்த கன்றை தடவிக்கொடுக்க மிகவும் ஆசைப்படுவேன். அதுவும் கழுத்தை தூக்கி நான் வருட மிகவும் ஒத்துழைக்கும். ஒரு முறை நான் கன்று அருகில் சென்று அதன் நெற்றியில் தடவிக்கொடுத்துக்கொண்டிருந்தேன். திடீரென்று என்னை யாரோ தூக்குவது போல இருந்தது. யாரென்று பார்த்தால் லட்சுமி தன் கொம்புகளால் என் காற்சட்டையின் மூலம் என்னைத் தூக்கி, சற்றே தலையை ஆட்டி தூக்கி எறிந்தது. நல்லவேளையாக நான் விழுந்த இடம் ... சாணி சேமித்து வைத்திருந்த கூடை.! ஏதோ சாய்வு நாற்காலியில் அமர்ந்திருப்பது போல அங்கே விழுந்து கிடந்ததைப்பார்த்து எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. எனக்கு சிறு காயம் கூட ஏற்படவில்லை. இருந்தாலும் அதற்குப்பின்னர் லட்சுமிக்கு அருகில் செல்ல கொஞ்சம் பயம்தான்.
'லட்சுமி' என்று யாரழைத்தாலும் போதும். தன்னைத்தான் அழைக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு உடனே அது திரும்பிப் பார்க்கும். மதிய வேளைகளில் உணவோ, தாகமோ எடுத்தால் ' அம்மா' என்றழைக்கும். அது அழைக்கும் தொனியைக் கொண்டே அம்மா லட்சுமி எதற்காக அழைக்கிறது என்பதை புரிந்து கொண்டு செயல்படுவதும் எனக்கு எப்போதும் ஆச்சரியத்தையே கொடுக்கும். அம்மாவும் கன்றுக்கு போக மீதமிருக்கும் பாலையே கறப்பார்கள். பெருவிரலை உட்புறம் மடக்கிக்கொண்டு, அம்மா பால் கறக்கும் போது லட்சுமி எப்போதும் தொந்தரவே செய்ததில்லை.
என்ன காரணத்தாலோ சில வருடங்களுக்குப் பின் ... [ ஒரு வேளை லட்சுமிக்கு வயதாகி இருக்குமோ..? ] லட்சுமி யாரிடமோ விற்கப்பட்டது. அதற்குப்பின் வேறொரு லட்சுமி வீட்டிற்கு வந்தது. இது பழைய லட்சுமி போல் இல்லை. அளவிலும் பெரிதாக இருந்தது. எனக்கென்னவோ பழைய லட்சுமியைத்தான் பிடித்திருந்தது.
புது லட்சுமி சில மாதங்களில் ஒரு கன்றை ஈன்றது. முதன்முறையாக ஒரு ஜீவன் உதயமாவதை கண்கூடாக பார்த்தேன். புது லட்சுமிக்கு கவனிப்பு அதிகம்தான். பால் நிறைய தந்ததும் ஒரு காரணமாக இருக்கக்கூடும்.
புது லட்சுமிக்கு ஒரு முறை உடல் சரியில்லாமல் போனது. உள்ளூர் நாட்டு வைத்தியர் என்னனென்னவோ பச்சிலை மருந்து தந்து பார்த்தார். ஆனால் பலனில்லை. சில தினங்களிலேயே அதன் உடல் மிகவும் மோசமானது. எந்த உணவையும் உண்ண மறுத்து விட்டது. ஒரு நாளிரவு படுத்த லட்சுமியால் மீண்டும் எழுந்திருக்க இயலவில்லை. அதன் வாயில் நுரை வர ஆரம்பித்தது.
உடனே கொடுவிலார்பட்டியில் இருக்கும் ஒரு வைத்தியரை அழைத்து வர வேண்டும் என்று நானும் அத்தானும் நள்ளிரவு ஒரு மணிக்கு சைக்கிளில் கிளம்பினோம். அந்த வைத்தியரை அழைத்துக்கொண்டு வந்து சேரும் போது அதிகாலை நான்கு மணி ஆகிவிட்டது. வந்தவர் அவரது வைத்தியத்தை பார்க்க ஆரம்பித்தார். லட்சுமி படும் வேதனையை என்னால் பார்க்க முடியவில்லை. வீட்டிற்குள் வந்து விட்டேன். கன்று 'அம்மா' என்றழைக்கும் சத்தம் மேலும் வேதனைப்படுத்தியது.
காலை ஆறு மணிக்கு அம்மா அழ ஆரம்பித்தார். அதற்குப் பின் இன்று வரை எங்கள் வீட்டிற்கு எந்த லட்சுமியும் வரவில்லை. வீட்டில் முன்கூரையில் இன்னும் தொங்கிக்கொண்டிருக்கும் வாய்க்கூண்டுகள் ஒரு காலத்தில் வீட்டில் இருந்த லட்சுமியை இன்னும் நினைவுறுத்திக்கொண்டிருக்கிறன. மாட்டுத்தொழுவம் இப்போது அறையாக மாறிவிட்டிருக்கிறது..!
-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 -பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 - கணேசன்
12. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5344 - இளசு அண்ணா
13. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5351 - விளையாட்டு
14. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5501 - பெரியம்மா
15. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5510 - ராமு
16. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5649 - தேர்வு
17. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5657 - பயணம்
18. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5660 - சினிமா... சினிமா...
19. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5662 - தோட்டம்
20. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=5888 - அறுவடை
21. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=8493 - குளிர்காலம்