pradeepkt
13-05-2005, 05:36 AM
வெகுநாட்களாகவே இந்தத் திரியில் ஏதேனும் பங்களிக்க வேண்டும் என நான் எண்ணியதுண்டு. ஆனால் சரியாக எதுவும் அமையவில்லை.
இப்போது நண்பர்கள் கொடுத்த தைரியத்தில், முதல் முறையாகக் களம் இறங்குகிறேன்.
இந்தக் கவிதை அல்லது "கவிதை மாதிரி" ரொம்ப நாளைக்கு முன்னால் குஜராத் பூகம்பத்தின் சமீபத்தில் எழுதியது. திடீரென்று சில நாட்களாக ஓய்வில்லாமல் அலுவலகத்தில் வேலை இருந்தது. மனம் மிக கிக சலிப்புற்று இருந்த வேளையில் நடுவில் புதுதில்லிக்குச் செல்ல வேண்டியிருந்த போது விமானத்தில் கோளாறு காரணமாகத் தரையிறங்கக் கொஞ்ச நேரம் ஆனது. அந்த சமயத்தில் என் மன வெளிப்பாடுகளைப் பேனாவுக்குக் கொண்டு வந்தேன்.
படித்து மலராயினும் சரி, சாட்டையாயினும் சரி, உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
நாளை!
விண்ணில் விரையும்போது,
வெகு நாளைக்கப்புறம்,
வித்து கிளம்புகிறது!
இயந்திர மனிதன்
இற்றுப் போவான் - என்
இதயத்தின் வேக மாற்றங்களுக்கு முன்னால்!
எனக்கு என்ன தேவை?
என்று எனக்குத் தெரிய
எனக்கு என்ன தேவை?
தேடித் திரிந்தும்
தெளிந்தபாடில்லை!
பணம் என்று பாடாய்ப் படுத்தினேன் முதலில்!
"ஒருகோடி" என்று வகுத்திருந்த வரையறைகள்
"இருகோடி" என்று விரிந்த போதும் என்னுள்
ஒரு கோடிட்ட இடம் நிரம்பவேயில்லை!
பாசமோ என்று பரிதவித்தேன் அடுத்து!
"பலருக்கும் வேண்டுமளவு பாசத்தைக் கொடுத்து
அல்லது கொடுப்பது போலேனும் நடித்து
உன் பாசவேட்டையைத் தொடர்ந்து நடத்து"
- உள்ளிருந்து குரல் கட்டளையிட்டது!
கொடுத்தாயிற்று...
நடித்தாயிற்று...
ஆயினும் உள்ளே ஒரு வெறுமை
முடிவில் முடிவிலியாய்த் துரத்தியதில்
மூளை பாளம் பாளமாய்
வெடித்தாயிற்று...!
தற்காலிகச் சுகத்திற்குத்
தொலைக்காட்சியை நாடினேன்!
"ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆனேன்"
- தமிழ்நாடு பொன்மகள் வாங்கிய பொன்னையா பேட்டி,
"பதினைந்து வினாடிகளில் பிச்சைக்காரன் ஆனேன்"
- பூத்துக் குலுங்கிய குடும்பம் பூகம்பத்தால் பூஞ்சை பிடிக்க
பூமியில் தவித்த பூமிலால் பேட்டிக்கு நடுவில்!
"பளிச்" சென்று ஒரு வெளிச்சம் -
இருட்டறையில் மெழுகுவர்த்தியாய்!
"நாளை நாளை" என்று எண்ணிக்கொண்டே
இன்றைய நாளை வீணாக்கி விட்டேனோ?
எண்ணூறு இடையூறுகளை எண்ணிக்கொண்டே
இன்றைய நாளை இன்னலோடு வாழ்வதில் என்ன லாபம்?
இக்கணம் இன்பமாய் வாழ வெளிச்சம் ஆணையிட்டது!
நாளையும் நாளைய நாளாய் மட்டும் கழிப்பேனா?
மெழுகுவர்த்தி வெளிச்சம் நாளையும் வரலாம்...
வெளிச்சம் சுருங்காது...
மெழுகும் உருகாதா?
வர்த்தியும் சுருங்காதா?
நாளை பார்க்கலாம்!
அன்புடன்,
பிரதீப்
இப்போது நண்பர்கள் கொடுத்த தைரியத்தில், முதல் முறையாகக் களம் இறங்குகிறேன்.
இந்தக் கவிதை அல்லது "கவிதை மாதிரி" ரொம்ப நாளைக்கு முன்னால் குஜராத் பூகம்பத்தின் சமீபத்தில் எழுதியது. திடீரென்று சில நாட்களாக ஓய்வில்லாமல் அலுவலகத்தில் வேலை இருந்தது. மனம் மிக கிக சலிப்புற்று இருந்த வேளையில் நடுவில் புதுதில்லிக்குச் செல்ல வேண்டியிருந்த போது விமானத்தில் கோளாறு காரணமாகத் தரையிறங்கக் கொஞ்ச நேரம் ஆனது. அந்த சமயத்தில் என் மன வெளிப்பாடுகளைப் பேனாவுக்குக் கொண்டு வந்தேன்.
படித்து மலராயினும் சரி, சாட்டையாயினும் சரி, உங்கள் கருத்துகளை வரவேற்கிறேன்.
நாளை!
விண்ணில் விரையும்போது,
வெகு நாளைக்கப்புறம்,
வித்து கிளம்புகிறது!
இயந்திர மனிதன்
இற்றுப் போவான் - என்
இதயத்தின் வேக மாற்றங்களுக்கு முன்னால்!
எனக்கு என்ன தேவை?
என்று எனக்குத் தெரிய
எனக்கு என்ன தேவை?
தேடித் திரிந்தும்
தெளிந்தபாடில்லை!
பணம் என்று பாடாய்ப் படுத்தினேன் முதலில்!
"ஒருகோடி" என்று வகுத்திருந்த வரையறைகள்
"இருகோடி" என்று விரிந்த போதும் என்னுள்
ஒரு கோடிட்ட இடம் நிரம்பவேயில்லை!
பாசமோ என்று பரிதவித்தேன் அடுத்து!
"பலருக்கும் வேண்டுமளவு பாசத்தைக் கொடுத்து
அல்லது கொடுப்பது போலேனும் நடித்து
உன் பாசவேட்டையைத் தொடர்ந்து நடத்து"
- உள்ளிருந்து குரல் கட்டளையிட்டது!
கொடுத்தாயிற்று...
நடித்தாயிற்று...
ஆயினும் உள்ளே ஒரு வெறுமை
முடிவில் முடிவிலியாய்த் துரத்தியதில்
மூளை பாளம் பாளமாய்
வெடித்தாயிற்று...!
தற்காலிகச் சுகத்திற்குத்
தொலைக்காட்சியை நாடினேன்!
"ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆனேன்"
- தமிழ்நாடு பொன்மகள் வாங்கிய பொன்னையா பேட்டி,
"பதினைந்து வினாடிகளில் பிச்சைக்காரன் ஆனேன்"
- பூத்துக் குலுங்கிய குடும்பம் பூகம்பத்தால் பூஞ்சை பிடிக்க
பூமியில் தவித்த பூமிலால் பேட்டிக்கு நடுவில்!
"பளிச்" சென்று ஒரு வெளிச்சம் -
இருட்டறையில் மெழுகுவர்த்தியாய்!
"நாளை நாளை" என்று எண்ணிக்கொண்டே
இன்றைய நாளை வீணாக்கி விட்டேனோ?
எண்ணூறு இடையூறுகளை எண்ணிக்கொண்டே
இன்றைய நாளை இன்னலோடு வாழ்வதில் என்ன லாபம்?
இக்கணம் இன்பமாய் வாழ வெளிச்சம் ஆணையிட்டது!
நாளையும் நாளைய நாளாய் மட்டும் கழிப்பேனா?
மெழுகுவர்த்தி வெளிச்சம் நாளையும் வரலாம்...
வெளிச்சம் சுருங்காது...
மெழுகும் உருகாதா?
வர்த்தியும் சுருங்காதா?
நாளை பார்க்கலாம்!
அன்புடன்,
பிரதீப்