பாரதி
12-05-2005, 04:30 PM
தேதியில்லா குறிப்புகள்
முனிப்பாய்ச்சல்....? பதில் தேடுகிறேன்.
இதே போல இன்னொரு முறை...
அன்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு மேலே இருக்கும். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தொலைபேசியில் செய்தி வந்தது. உடனே கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தேன். பேருந்தில் கிளம்பி தூத்துக்குடிக்கு வந்தால் ஏதோ பிரச்சினை காரணமாக பேருந்துகள் எல்லாம் ஓடாது என்பதாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். சற்று நேரம் பொறுத்துப் பார்த்து விட்டு.. இனி தாமதிப்பதில் பயனில்லை என்பதால் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
திரும்பவும் வீட்டுக்கு வந்து, பிரதீப்பை உடன் வர முடியுமா என்று கேட்டேன். உடனே அவசர விடுப்பு சொல்லி விட்டு அவனும் என்னுடன் வர ஒப்புக்கொண்டான்.
கிளம்பி வரும் போது, அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த நெடுஞ்சாலையில் நீர் தேங்கி இருந்தது.. இரவு நேரம் என்பதால் சாலையில் எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை. வாகனத்தில் வேகத்தைக்காட்டும் கருவியில் முள் ஓடாமல் இருப்பதை சுட்டிக்காட்டி நான் பிரதீப்பிடம் ஏதோ கேட்க, சற்றே கவனம் அவன் பதிலிலும்- அந்தக்கருவியிலும் சென்றது.
சரியாக அதே சமயத்தில் சாலையில் உண்டாகியிருந்த, நீரில் மறைந்திருந்த பெரிய பள்ளத்தில் முன்சக்கரம் உள்ளே இறங்கி விட, வந்த வேகத்தில் நானும் பிரதீப்பும் வாகனத்திற்கு முன்பாக தூக்கி வீசப்பட்டோம். எதிரே எந்த வாகனமும் வராத காரணத்தால் சில சிராய்ப்புகளுடன் எழுந்தோம். வாகனத்தில் எதுவும் பிரச்சினை இல்லை என்பதை ஒரு மெக்கானிக்கிடம் உறுதிப்படுத்திக்கொண்டு, சிராய்ப்புகளுக்கு மருந்து போட்டுக்கொண்டு, பிரயாணத்தைத் தொடங்கினோம். வாகனம் ஓட்டக்கற்றுக்கொண்ட பின் அத்தனை வருடங்களில் வாகனம் ஓட்டும் போது கீழே விழுந்தது அதுவே முதல்முறை.
உள்ளங்கையிலும் சில சிராய்ப்புகள் இருந்த காரணத்தால் வாகனத்தை ஓட்டுவதில் கொஞ்சம் சிரமம் இருக்கவே செய்தது. மிதமான வேகத்தில் இரவு சுமார் பதினொன்றரை மணியளவில் தூத்துக்குடியை விட்டு வெளியே வந்தோம். நேரடி பேருந்துத்தடத்தை விட, எட்டையாபுரம், கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம், செக்கானூரணி, உசிலம்பட்டி வழியாக ஊருக்கு செல்வதே குறுக்கு வழி என்பதால் அந்த வழியாக செல்ல முடிவு செய்தோம்.
எட்டையாபுரத்திற்கும், கோவில்பட்டிக்கும் இடையே செல்லும் போது சாலையில் கும்மிருட்டு. சாலை ஓரங்களில் எந்த மின்விளக்கும் இல்லை. சாலையின் இருமருங்கிலும் தோட்டம் . கம்பு அல்லது சோளம் போன்ற பயிர் பயிரடப்பட்டிருந்தது. எந்த ஒரு வாகனமும் எங்களுக்கு பின்போ, முன்போ வரவில்லை. எங்களின் இருசக்கர வாகன வெளிச்சம் மட்டுமே சாலையில் இருந்தது.
கோவில்பட்டிக்கு ஒரு ஐந்து கிலோமீட்டர் இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். அப்போது ஏறக்குறைய ஒரு பர்லாங்கு தொலைவில் சாலையின் இடது பக்கத்தில் வெகு தொலைவில் இருந்து பிரகாசமான ஒரு வெளிச்சம்... இரண்டு பெரிய டார்ச் லைட்டுகளை அருகருகே - ஒரு அடி தொலைவில் வைத்தால் எப்படி இருக்குமோ, அது போல இருந்தது. வெளிச்சமும் அதே போல இருந்தது. அது மிகவும் வித்தியாசமாகவும், கவனத்தை கவருவதாகவும் இருந்ததால் அதைப் பற்றி பிரதீப்பிடம் சொன்னேன்... அவனும் கவனித்தான்.
கிட்டத்தட்ட சராசரியான ஒரு ஆள் உயரத்தில் தெரிந்த அந்த வெளிச்சம் அதிவேகத்தில் இடப்புறத்தில் இருந்து வலதுபுறமாக நகர்ந்தது. சாலையை கடந்து வலப்புறமாக சென்ற அந்த வெளிச்சம் சில விநாடிகளில் மறைந்து விட்டது.
வெளிச்சம் கடந்த அந்த இடத்தை நெருங்கிய போது அங்கு எந்த சாலையும் இல்லை என்பது தெரிந்தது. ஆகவே எந்த வாகனமும் தோட்டங்களுக்கிடையே சென்றிருக்க வாய்ப்பே இல்லை. எந்த ஒரு மனிதனாலும் விளக்குகளைப் பொருத்திக்கொண்டு, அந்த நள்ளிரவு வேளையில் தோட்டங்களுக்கு இடையிலும், சாலைக்கு இடையிலும் நம்ப முடியாத அந்த வேகத்தில் நிச்சயமாக ஓடி இருக்க முடியாது. ஒரு வேளை ஏதாவது பறந்து சென்ற பறவையின் கண்களாக இருக்க முடியுமா என்றால் அந்த அளவுக்கு ( சுமார் ஆறு அல்லது ஏழு இஞ்சுகள் கொண்ட வட்டங்கள் ) பெரிய கண்களைக் கொண்ட பறவையை இது வரை நான் நேரில் பார்த்ததில்லை. வெளிச்சங்களுக்கு இடையே இருந்த இடைவெளி கிட்டத்தட்ட ஒரு அடி இருக்கும். எனவே பறவையாக இருப்பதற்கான சாத்தியக்கூறும் இல்லை.
காரணமில்லாமல்... மயிர்கூச்செரிதல் என்று சொல்வார்களே... அந்த நேரத்தில் அது எனக்கும் ஏற்பட்டது.
பிரதீப்பிடமும் இதைப்பற்றிக்கேட்டேன். இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே சென்றேன். இருவருக்கும் சரியான, அறிவியல்பூர்வமான பதில் இன்று வரைக்கும் கிடைக்கவில்லை!
அதிகாலையில் வீடு சென்று சேர்ந்தோம். மருத்துவமனையில் அம்மா நலமாகத்தான் இருந்தார்கள். எனவே மனதுக்கு சற்று நிம்மதி.
சில மாதங்களுக்குப் பின்னர் பேருந்தில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அருகில் அமர்ந்திருந்த பயணி என்னுடன் பேசிக்கொண்டு வந்தார். எப்படியோ பேச்சு... இந்த விளக்கைப்பற்றியும் வந்தது. அவர் சொன்னார் - இது "முனிப்பாய்ச்சல்"-ஆக இருக்கும்; இல்லாவிட்டால் கொள்ளிவாய்பேயாக இருக்கும்; அல்லது அம்மன் ஊர்வலம் வந்திருப்பார்! எனக்கு எதுவும் ஆகவில்லை என்பதால் கண்டிப்பாக நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்றும் சொன்னார்..! இது உண்மையா..??
-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995) - கணேசன்
முனிப்பாய்ச்சல்....? பதில் தேடுகிறேன்.
இதே போல இன்னொரு முறை...
அன்று இரவு சுமார் ஒன்பது மணிக்கு மேலே இருக்கும். அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்றும், மருத்துவமனையில் சேர்த்திருப்பதாகவும் தொலைபேசியில் செய்தி வந்தது. உடனே கிளம்ப வேண்டும் என்று முடிவு செய்தேன். பேருந்தில் கிளம்பி தூத்துக்குடிக்கு வந்தால் ஏதோ பிரச்சினை காரணமாக பேருந்துகள் எல்லாம் ஓடாது என்பதாக எல்லோரும் பேசிக்கொண்டார்கள். சற்று நேரம் பொறுத்துப் பார்த்து விட்டு.. இனி தாமதிப்பதில் பயனில்லை என்பதால் இரு சக்கர வாகனத்தில் ஊருக்கு செல்லலாம் என்று முடிவு செய்தேன்.
திரும்பவும் வீட்டுக்கு வந்து, பிரதீப்பை உடன் வர முடியுமா என்று கேட்டேன். உடனே அவசர விடுப்பு சொல்லி விட்டு அவனும் என்னுடன் வர ஒப்புக்கொண்டான்.
கிளம்பி வரும் போது, அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இருந்த நெடுஞ்சாலையில் நீர் தேங்கி இருந்தது.. இரவு நேரம் என்பதால் சாலையில் எந்த வித்தியாசமும் எனக்கு தெரியவில்லை. வாகனத்தில் வேகத்தைக்காட்டும் கருவியில் முள் ஓடாமல் இருப்பதை சுட்டிக்காட்டி நான் பிரதீப்பிடம் ஏதோ கேட்க, சற்றே கவனம் அவன் பதிலிலும்- அந்தக்கருவியிலும் சென்றது.
சரியாக அதே சமயத்தில் சாலையில் உண்டாகியிருந்த, நீரில் மறைந்திருந்த பெரிய பள்ளத்தில் முன்சக்கரம் உள்ளே இறங்கி விட, வந்த வேகத்தில் நானும் பிரதீப்பும் வாகனத்திற்கு முன்பாக தூக்கி வீசப்பட்டோம். எதிரே எந்த வாகனமும் வராத காரணத்தால் சில சிராய்ப்புகளுடன் எழுந்தோம். வாகனத்தில் எதுவும் பிரச்சினை இல்லை என்பதை ஒரு மெக்கானிக்கிடம் உறுதிப்படுத்திக்கொண்டு, சிராய்ப்புகளுக்கு மருந்து போட்டுக்கொண்டு, பிரயாணத்தைத் தொடங்கினோம். வாகனம் ஓட்டக்கற்றுக்கொண்ட பின் அத்தனை வருடங்களில் வாகனம் ஓட்டும் போது கீழே விழுந்தது அதுவே முதல்முறை.
உள்ளங்கையிலும் சில சிராய்ப்புகள் இருந்த காரணத்தால் வாகனத்தை ஓட்டுவதில் கொஞ்சம் சிரமம் இருக்கவே செய்தது. மிதமான வேகத்தில் இரவு சுமார் பதினொன்றரை மணியளவில் தூத்துக்குடியை விட்டு வெளியே வந்தோம். நேரடி பேருந்துத்தடத்தை விட, எட்டையாபுரம், கோவில்பட்டி, விருதுநகர், திருமங்கலம், செக்கானூரணி, உசிலம்பட்டி வழியாக ஊருக்கு செல்வதே குறுக்கு வழி என்பதால் அந்த வழியாக செல்ல முடிவு செய்தோம்.
எட்டையாபுரத்திற்கும், கோவில்பட்டிக்கும் இடையே செல்லும் போது சாலையில் கும்மிருட்டு. சாலை ஓரங்களில் எந்த மின்விளக்கும் இல்லை. சாலையின் இருமருங்கிலும் தோட்டம் . கம்பு அல்லது சோளம் போன்ற பயிர் பயிரடப்பட்டிருந்தது. எந்த ஒரு வாகனமும் எங்களுக்கு பின்போ, முன்போ வரவில்லை. எங்களின் இருசக்கர வாகன வெளிச்சம் மட்டுமே சாலையில் இருந்தது.
கோவில்பட்டிக்கு ஒரு ஐந்து கிலோமீட்டர் இருக்கக்கூடும் என்று எண்ணுகிறேன். அப்போது ஏறக்குறைய ஒரு பர்லாங்கு தொலைவில் சாலையின் இடது பக்கத்தில் வெகு தொலைவில் இருந்து பிரகாசமான ஒரு வெளிச்சம்... இரண்டு பெரிய டார்ச் லைட்டுகளை அருகருகே - ஒரு அடி தொலைவில் வைத்தால் எப்படி இருக்குமோ, அது போல இருந்தது. வெளிச்சமும் அதே போல இருந்தது. அது மிகவும் வித்தியாசமாகவும், கவனத்தை கவருவதாகவும் இருந்ததால் அதைப் பற்றி பிரதீப்பிடம் சொன்னேன்... அவனும் கவனித்தான்.
கிட்டத்தட்ட சராசரியான ஒரு ஆள் உயரத்தில் தெரிந்த அந்த வெளிச்சம் அதிவேகத்தில் இடப்புறத்தில் இருந்து வலதுபுறமாக நகர்ந்தது. சாலையை கடந்து வலப்புறமாக சென்ற அந்த வெளிச்சம் சில விநாடிகளில் மறைந்து விட்டது.
வெளிச்சம் கடந்த அந்த இடத்தை நெருங்கிய போது அங்கு எந்த சாலையும் இல்லை என்பது தெரிந்தது. ஆகவே எந்த வாகனமும் தோட்டங்களுக்கிடையே சென்றிருக்க வாய்ப்பே இல்லை. எந்த ஒரு மனிதனாலும் விளக்குகளைப் பொருத்திக்கொண்டு, அந்த நள்ளிரவு வேளையில் தோட்டங்களுக்கு இடையிலும், சாலைக்கு இடையிலும் நம்ப முடியாத அந்த வேகத்தில் நிச்சயமாக ஓடி இருக்க முடியாது. ஒரு வேளை ஏதாவது பறந்து சென்ற பறவையின் கண்களாக இருக்க முடியுமா என்றால் அந்த அளவுக்கு ( சுமார் ஆறு அல்லது ஏழு இஞ்சுகள் கொண்ட வட்டங்கள் ) பெரிய கண்களைக் கொண்ட பறவையை இது வரை நான் நேரில் பார்த்ததில்லை. வெளிச்சங்களுக்கு இடையே இருந்த இடைவெளி கிட்டத்தட்ட ஒரு அடி இருக்கும். எனவே பறவையாக இருப்பதற்கான சாத்தியக்கூறும் இல்லை.
காரணமில்லாமல்... மயிர்கூச்செரிதல் என்று சொல்வார்களே... அந்த நேரத்தில் அது எனக்கும் ஏற்பட்டது.
பிரதீப்பிடமும் இதைப்பற்றிக்கேட்டேன். இதைப்பற்றி சிந்தித்துக் கொண்டே சென்றேன். இருவருக்கும் சரியான, அறிவியல்பூர்வமான பதில் இன்று வரைக்கும் கிடைக்கவில்லை!
அதிகாலையில் வீடு சென்று சேர்ந்தோம். மருத்துவமனையில் அம்மா நலமாகத்தான் இருந்தார்கள். எனவே மனதுக்கு சற்று நிம்மதி.
சில மாதங்களுக்குப் பின்னர் பேருந்தில் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருக்கும் போது, அருகில் அமர்ந்திருந்த பயணி என்னுடன் பேசிக்கொண்டு வந்தார். எப்படியோ பேச்சு... இந்த விளக்கைப்பற்றியும் வந்தது. அவர் சொன்னார் - இது "முனிப்பாய்ச்சல்"-ஆக இருக்கும்; இல்லாவிட்டால் கொள்ளிவாய்பேயாக இருக்கும்; அல்லது அம்மன் ஊர்வலம் வந்திருப்பார்! எனக்கு எதுவும் ஆகவில்லை என்பதால் கண்டிப்பாக நான் அதிர்ஷ்டம் செய்தவன் என்றும் சொன்னார்..! இது உண்மையா..??
-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995) - கணேசன்