பாரதி
12-05-2005, 04:19 PM
தேதியில்லா குறிப்புகள்
நிச்சயமாக கனவு இல்லை..!
இது நிச்சயமாக கனவு இல்லை. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு இருக்கும். பெரும்பாலும் நள்ளிரவில் வலைத்தளங்களில் உலாவுவது என் வழக்கம். அப்போதெல்லாம் ஏதாவது "அரட்டை அறை"களுக்கு சென்று யாருடனாவது புனைப்பெயர்களில் கதைப்பது என்பதும் நடைமுறையில் இருந்து வந்தது.
ஒரு நாள் நள்ளிரவு அல்லது அதிகாலை இரண்டு மணி இருக்கும். "தமிழ்மூவீஸ்ஆன்லைன்" வலைத்தளத்தின் அரட்டை அறை என்று எண்ணுகிறேன். வழக்கம் போல வலைத்தளங்களைப் பார்வையிட்டுக்கொண்டே அரட்டை அறையிலும் இருந்தேன்.
ஒரு நபர் தானாக பேச அழைத்தார். அவரது பெயர் ஒரு பெண்பாலாக இருந்தது. அவரது உரையாடல் பெயர் எனக்கு சரியாக நினைவில் இல்லை - ஒரு வேளை "சாதனா"வாக இருக்கக்கூடும். அவர் சரளமாக உரையாட ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் அமைந்த அந்த தட்டச்சு உரையாடலை என் நினைவிலிருப்பதைக்கொண்டு தமிழில் சொல்கிறேன்.
அவர் : நலமா...? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இந்த நேரத்தில்?
நான்: நலம். நீங்கள் யார்?
அவர்: நான் ரம்பாலி நாயக். (அல்லது ராம்பலி நாயக் ) உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா...?
நான்: எனக்கு நம்பிக்கை எல்லாம் இல்லை.
ரம்பாலி நாயக்: ஏன் அப்படி?
நான்: எந்த ஒரு விசயத்தையும் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
ரம்பாலி நாயக்: ஜோதிடமும் ஒரு விஞ்ஞானம்தான்.
நான்: என்னால் முழுமையாக நம்ப முடியாது.
ரம்பாலி நாயக்: உங்களை பற்றி சொல்லவா..?ம்ம்.. உங்கள் பெயர்...
நான்: என் பெயர் ................
ரம்பாலி நாயக்: ஏன் அவசரப்பட்டீர்கள்...? நானே உங்கள் பெயரைச்சொல்லி இருப்பேனே... சரி..பரவாயில்லை.
நான்: அப்படியா...?
ரம்பாலி நாயக்: உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று சொல்லவா..?
நான்: சொல்லுங்கள்.
ரம்பாலி நாயக்: உங்களுக்கு மூன்று குழந்தைகள்.. முதல் குழந்தை கருவில் தங்கி இருக்காது.
நான்: (உண்மையிலேயே ஆச்சரியத்துடன் ) ஆமாம்.
ரம்பாலி நாயக்: மற்ற இருவரும் ஆண்குழந்தைகள்தானே..
நான்: ஆமாம்.
ரம்பாலி நாயக்: இப்போது நீ வேலை பார்க்கும் இடத்தில் உனக்கு திருப்தி இருக்காதே..?
நான்: ஆமாம்.. என்ன செய்யலாம்? எவ்வளவுதான் உண்மையாக வேலை செய்தாலும் மதிப்பே இல்லை. நம்புபவர்களும் இல்லை.
ரம்பாலி நாயக்: வேறு புதிய வேலையை தேட முயற்சி செய். கிடைக்கும்.
நான்: எங்கு வேலை தேடலாம்?
ரம்பாலி நாயக்: மத்தியகிழக்கு...ம்ம்... ஜோர்தான் அல்லது சிங்கப்பூர்.
நான்: கிடைக்குமா..?
ரம்பாலி நாயக்: முதலில் முயற்சி செய்.
நான்: இங்கேயே வேலையைத் தொடர்ந்தால் என்ன?
ரம்பாலி நாயக்: தொடரலாம். ஆனால் மரியாதை இருக்காது. உடனே வேறு வேலையில் சேர முயற்சி செய். கண்டிப்பாக கிடைக்கும்.
நான்: எனக்கு அமைதியில்லாமல் இருக்கிறது... நெருங்கிய நண்பர்கள் யாரும் அருகில் இல்லை... அடிக்கடி கோபம் வருகிறது.
ரம்பாலி நாயக்: குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்..?
நான்: நலமாக இருக்கிறார்கள்.. அவர்களின் எதிர்காலம் எப்படி?
ரம்பாலி நாயக்: அவர்கள் முத்துகளாக வருவார்கள். அவர்களை ஒன்றும் சொல்ல வேண்டாம். படிப்பதற்கு மட்டும் வழிகாட்டினால் போதும். பிற்காலத்தில் நட்சத்திரங்கள் போல ஒளிவீசுவார்கள்.
நான்: நீங்கள் யார்..?
ரம்பாலி நாயக்: நான் ரம்பாலி நாயக்.
நான்: எங்கு இருக்கிறீர்கள்?
ரம்பாலி நாயக்: இப்போது புதுதில்லியில்
நான்: உங்கள் தொலைபேசி எண் என்ன?
ரம்பாலி நாயக்: உனக்கு அது தேவை இல்லை.
நான்: ஏன் என்னுடன் பேசுகிறீர்கள்?
ரம்பாலி நாயக்: எனக்கு இடப்பட்ட கட்டளை.
நான்: யார் இட்டது?
ரம்பாலி நாயக்: சொல்ல எனக்கு அனுமதி இல்லை.
நான்: உங்களை நான் எப்படித் தொடர்பு கொள்வது?
ரம்பாலி நாயக்: தேவைப்பட்டால் நானே வருவேன்.
நான்: உங்கள் உதவி தேவை என்று அஞ்சல் அனுப்ப விரும்பினால்..மின்னஞ்சல் முகவரியாவது கொடுங்கள்.
ரம்பாலி நாயக்: உனக்குத் தேவையில்லை.
நான்: தயவு செய்து கொடுங்கள்.
ரம்பாலி நாயக்: என்னை சங்கடப்படுத்தாதே... சரி. ரம்பாலிநாயக்@யாஹ.காம்
நான்: ஒரு வேளை எனக்கு மிகவும் அவசரம் எனில் எங்களை எப்படித்தொடர்பு கொள்ள..?
ரம்பாலி நாயக்: உனக்கு தேவைப்படாது. தேவைப்படும் சமயத்தில் நான் அங்கிருப்பேன்.
நான்: நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்.
ரம்பாலி நாயக்: ம்ம்.. தேவையில்லை. உடன் பதில் வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
இந்த நேரத்தில் இணையத்தொடர்பு துண்டிக்கப்பட அவசர அவசரமாக மீண்டும் இணைப்புக்கு முயற்சி செய்து வலைத்தளத்திற்கு வந்தேன்.
என்னுடன் உரையாடிய அந்த பெயர் அங்கேயே இருந்தது.. அப்பாடா.. நல்ல வேளை... இன்னும் நிறைய பேசலாம் என்று முயற்சித்தால்...! அதே பெயரில் இப்போது வந்த நபரின் உரையாடல் முற்றிலும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.. மொழி நடையும், உச்சரிப்பும்...(தட்டச்சில் ) மிகவும் வேறுபட்டிருந்தது. மீண்டும் மீண்டும் என் கேள்விகளைத் தொடுக்க அந்த நபர் "மன்னிக்கவும். நீங்கள் வேறு யாரோ என்று நினைத்துக்கொண்டு என்னுடன் உரையாடுகிறீர்கள்" என்று கூறி என்னுடன் உரையாடுவதைத் தவிர்த்து விட்டார்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அன்று என்னால் உறங்கவே முடியவில்லை. அவர் சொன்ன முகவரிக்கு பெயருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அது பிழையான முகவரி என்று வந்தது! தொடர்ந்து சில தினங்கள் அந்த அரட்டை அறைக்கு சென்று பார்த்தேன். ஆனால் ரம்பாலி நாயக் வரவே இல்லை. சில மாதங்களில் அந்த சம்பவத்தை மறந்து விட்டேன்.
அந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்குப் பின்னர் சென்னை - அடையாரில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த ஒரு நேர்முகத்தேர்வு - "வெயின் பார்மசூட்டிக்கல்ஸ்" என்கிற அமெரிக்க நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளைக்காக நடைபெற்றது. ஒரு சீனர் என்னை நேர்காணல் செய்தார். ஐந்து நிமிட பேட்டிக்கு பிறகு என்னை தேர்வு செய்திருப்பதாக தெரிவித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் தேர்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொண்ட ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில், சில தவணைகளில் இந்திய மதிப்பில் கிட்டதட்ட ஒரு லட்சம் ரூபாய், வேலையில் இணைந்த பின்னர், தேர்வு செலவுக்காக கட்ட வேண்டும் என்று நேர்காணல் தேர்வுக்கு அழைத்திருந்த மனித வள நிறுவனம் சொன்னதும் எனது மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. அத்தொகை எனக்கு மிகவும் அதிகமானதாக இருந்தது. பணம் கொடுத்துதான் வேலையில் சேர வேண்டுமா என்ற கேள்வியும் கூடவே பிறந்தது. ஆகவே அந்த வேலையில் சேர முடியாமல் ஆனது.
சில மாதங்களுக்குப் பின்னர் ரமதான் மாதத்தின் ஒரு நாளில், அபுதாபியில் பிரபல அரசு எண்ணெய் நிறுவனமான "ஜாட்கோ" (ஜாக்கும் டெவலப்மெண்ட் கம்பெனி )-வில் நடைபெற்ற ஒரு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். நேர்முகத்தேர்வுக்காக அபுதாபி சென்று ஓரளவுக்கு நல்ல முறையில் தேர்வில் பதிலளித்தேன். ஒரு மாதத்திற்குப் பின்னர் அந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அங்கு வேலையிலும் சேர்ந்தேன். ஆனால் உடனடியாக ரம்பாலிநாயக்கின் நினைவு எனக்கு வரவில்லை.!
எப்போதாவது ரம்பாலிநாயக்கின் நினைவு வரும் போது, மன்றத்தில் சொல்ல வேண்டும் என்று விரும்பியது இன்றுதான் கைகூடி இருக்கிறது.
என் மனதில் இந்நிகழ்ச்சி சற்று குழப்பத்தை உண்டு பண்ணியது. இன்று வரை இதை என்னால் நம்பவும் முடியவில்லை.. நம்பாமலும் இருக்க முடியவில்லை...! உங்களில் சிலருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கக்கூடும். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?
-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995) - கணேசன்
நிச்சயமாக கனவு இல்லை..!
இது நிச்சயமாக கனவு இல்லை. சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்பு இருக்கும். பெரும்பாலும் நள்ளிரவில் வலைத்தளங்களில் உலாவுவது என் வழக்கம். அப்போதெல்லாம் ஏதாவது "அரட்டை அறை"களுக்கு சென்று யாருடனாவது புனைப்பெயர்களில் கதைப்பது என்பதும் நடைமுறையில் இருந்து வந்தது.
ஒரு நாள் நள்ளிரவு அல்லது அதிகாலை இரண்டு மணி இருக்கும். "தமிழ்மூவீஸ்ஆன்லைன்" வலைத்தளத்தின் அரட்டை அறை என்று எண்ணுகிறேன். வழக்கம் போல வலைத்தளங்களைப் பார்வையிட்டுக்கொண்டே அரட்டை அறையிலும் இருந்தேன்.
ஒரு நபர் தானாக பேச அழைத்தார். அவரது பெயர் ஒரு பெண்பாலாக இருந்தது. அவரது உரையாடல் பெயர் எனக்கு சரியாக நினைவில் இல்லை - ஒரு வேளை "சாதனா"வாக இருக்கக்கூடும். அவர் சரளமாக உரையாட ஆரம்பித்தார். ஆங்கிலத்தில் அமைந்த அந்த தட்டச்சு உரையாடலை என் நினைவிலிருப்பதைக்கொண்டு தமிழில் சொல்கிறேன்.
அவர் : நலமா...? என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் இந்த நேரத்தில்?
நான்: நலம். நீங்கள் யார்?
அவர்: நான் ரம்பாலி நாயக். (அல்லது ராம்பலி நாயக் ) உங்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை உண்டா...?
நான்: எனக்கு நம்பிக்கை எல்லாம் இல்லை.
ரம்பாலி நாயக்: ஏன் அப்படி?
நான்: எந்த ஒரு விசயத்தையும் ஏன், எதற்கு, எப்படி என்று ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்பதே என் விருப்பம்.
ரம்பாலி நாயக்: ஜோதிடமும் ஒரு விஞ்ஞானம்தான்.
நான்: என்னால் முழுமையாக நம்ப முடியாது.
ரம்பாலி நாயக்: உங்களை பற்றி சொல்லவா..?ம்ம்.. உங்கள் பெயர்...
நான்: என் பெயர் ................
ரம்பாலி நாயக்: ஏன் அவசரப்பட்டீர்கள்...? நானே உங்கள் பெயரைச்சொல்லி இருப்பேனே... சரி..பரவாயில்லை.
நான்: அப்படியா...?
ரம்பாலி நாயக்: உங்களுக்கு எத்தனை குழந்தைகள் என்று சொல்லவா..?
நான்: சொல்லுங்கள்.
ரம்பாலி நாயக்: உங்களுக்கு மூன்று குழந்தைகள்.. முதல் குழந்தை கருவில் தங்கி இருக்காது.
நான்: (உண்மையிலேயே ஆச்சரியத்துடன் ) ஆமாம்.
ரம்பாலி நாயக்: மற்ற இருவரும் ஆண்குழந்தைகள்தானே..
நான்: ஆமாம்.
ரம்பாலி நாயக்: இப்போது நீ வேலை பார்க்கும் இடத்தில் உனக்கு திருப்தி இருக்காதே..?
நான்: ஆமாம்.. என்ன செய்யலாம்? எவ்வளவுதான் உண்மையாக வேலை செய்தாலும் மதிப்பே இல்லை. நம்புபவர்களும் இல்லை.
ரம்பாலி நாயக்: வேறு புதிய வேலையை தேட முயற்சி செய். கிடைக்கும்.
நான்: எங்கு வேலை தேடலாம்?
ரம்பாலி நாயக்: மத்தியகிழக்கு...ம்ம்... ஜோர்தான் அல்லது சிங்கப்பூர்.
நான்: கிடைக்குமா..?
ரம்பாலி நாயக்: முதலில் முயற்சி செய்.
நான்: இங்கேயே வேலையைத் தொடர்ந்தால் என்ன?
ரம்பாலி நாயக்: தொடரலாம். ஆனால் மரியாதை இருக்காது. உடனே வேறு வேலையில் சேர முயற்சி செய். கண்டிப்பாக கிடைக்கும்.
நான்: எனக்கு அமைதியில்லாமல் இருக்கிறது... நெருங்கிய நண்பர்கள் யாரும் அருகில் இல்லை... அடிக்கடி கோபம் வருகிறது.
ரம்பாலி நாயக்: குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்..?
நான்: நலமாக இருக்கிறார்கள்.. அவர்களின் எதிர்காலம் எப்படி?
ரம்பாலி நாயக்: அவர்கள் முத்துகளாக வருவார்கள். அவர்களை ஒன்றும் சொல்ல வேண்டாம். படிப்பதற்கு மட்டும் வழிகாட்டினால் போதும். பிற்காலத்தில் நட்சத்திரங்கள் போல ஒளிவீசுவார்கள்.
நான்: நீங்கள் யார்..?
ரம்பாலி நாயக்: நான் ரம்பாலி நாயக்.
நான்: எங்கு இருக்கிறீர்கள்?
ரம்பாலி நாயக்: இப்போது புதுதில்லியில்
நான்: உங்கள் தொலைபேசி எண் என்ன?
ரம்பாலி நாயக்: உனக்கு அது தேவை இல்லை.
நான்: ஏன் என்னுடன் பேசுகிறீர்கள்?
ரம்பாலி நாயக்: எனக்கு இடப்பட்ட கட்டளை.
நான்: யார் இட்டது?
ரம்பாலி நாயக்: சொல்ல எனக்கு அனுமதி இல்லை.
நான்: உங்களை நான் எப்படித் தொடர்பு கொள்வது?
ரம்பாலி நாயக்: தேவைப்பட்டால் நானே வருவேன்.
நான்: உங்கள் உதவி தேவை என்று அஞ்சல் அனுப்ப விரும்பினால்..மின்னஞ்சல் முகவரியாவது கொடுங்கள்.
ரம்பாலி நாயக்: உனக்குத் தேவையில்லை.
நான்: தயவு செய்து கொடுங்கள்.
ரம்பாலி நாயக்: என்னை சங்கடப்படுத்தாதே... சரி. ரம்பாலிநாயக்@யாஹ.காம்
நான்: ஒரு வேளை எனக்கு மிகவும் அவசரம் எனில் எங்களை எப்படித்தொடர்பு கொள்ள..?
ரம்பாலி நாயக்: உனக்கு தேவைப்படாது. தேவைப்படும் சமயத்தில் நான் அங்கிருப்பேன்.
நான்: நான் உங்களுக்கு மின்னஞ்சல் அனுப்புவேன்.
ரம்பாலி நாயக்: ம்ம்.. தேவையில்லை. உடன் பதில் வரும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
இந்த நேரத்தில் இணையத்தொடர்பு துண்டிக்கப்பட அவசர அவசரமாக மீண்டும் இணைப்புக்கு முயற்சி செய்து வலைத்தளத்திற்கு வந்தேன்.
என்னுடன் உரையாடிய அந்த பெயர் அங்கேயே இருந்தது.. அப்பாடா.. நல்ல வேளை... இன்னும் நிறைய பேசலாம் என்று முயற்சித்தால்...! அதே பெயரில் இப்போது வந்த நபரின் உரையாடல் முற்றிலும் சம்பந்தமே இல்லாமல் இருந்தது.. மொழி நடையும், உச்சரிப்பும்...(தட்டச்சில் ) மிகவும் வேறுபட்டிருந்தது. மீண்டும் மீண்டும் என் கேள்விகளைத் தொடுக்க அந்த நபர் "மன்னிக்கவும். நீங்கள் வேறு யாரோ என்று நினைத்துக்கொண்டு என்னுடன் உரையாடுகிறீர்கள்" என்று கூறி என்னுடன் உரையாடுவதைத் தவிர்த்து விட்டார்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அன்று என்னால் உறங்கவே முடியவில்லை. அவர் சொன்ன முகவரிக்கு பெயருக்கு மின்னஞ்சல் அனுப்பினால் அது பிழையான முகவரி என்று வந்தது! தொடர்ந்து சில தினங்கள் அந்த அரட்டை அறைக்கு சென்று பார்த்தேன். ஆனால் ரம்பாலி நாயக் வரவே இல்லை. சில மாதங்களில் அந்த சம்பவத்தை மறந்து விட்டேன்.
அந்த சம்பவத்திற்கு சில மாதங்களுக்குப் பின்னர் சென்னை - அடையாரில் இருக்கும் ஒரு பிரபல ஹோட்டலில் நடந்த ஒரு நேர்முகத்தேர்வு - "வெயின் பார்மசூட்டிக்கல்ஸ்" என்கிற அமெரிக்க நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளைக்காக நடைபெற்றது. ஒரு சீனர் என்னை நேர்காணல் செய்தார். ஐந்து நிமிட பேட்டிக்கு பிறகு என்னை தேர்வு செய்திருப்பதாக தெரிவித்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் தேர்தெடுக்கப்பட்டவர்கள் மட்டும் கலந்து கொண்ட ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில், சில தவணைகளில் இந்திய மதிப்பில் கிட்டதட்ட ஒரு லட்சம் ரூபாய், வேலையில் இணைந்த பின்னர், தேர்வு செலவுக்காக கட்ட வேண்டும் என்று நேர்காணல் தேர்வுக்கு அழைத்திருந்த மனித வள நிறுவனம் சொன்னதும் எனது மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. அத்தொகை எனக்கு மிகவும் அதிகமானதாக இருந்தது. பணம் கொடுத்துதான் வேலையில் சேர வேண்டுமா என்ற கேள்வியும் கூடவே பிறந்தது. ஆகவே அந்த வேலையில் சேர முடியாமல் ஆனது.
சில மாதங்களுக்குப் பின்னர் ரமதான் மாதத்தின் ஒரு நாளில், அபுதாபியில் பிரபல அரசு எண்ணெய் நிறுவனமான "ஜாட்கோ" (ஜாக்கும் டெவலப்மெண்ட் கம்பெனி )-வில் நடைபெற்ற ஒரு நேர்முகத்தேர்வில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டேன். நேர்முகத்தேர்வுக்காக அபுதாபி சென்று ஓரளவுக்கு நல்ல முறையில் தேர்வில் பதிலளித்தேன். ஒரு மாதத்திற்குப் பின்னர் அந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக தகவல் வந்தது. அங்கு வேலையிலும் சேர்ந்தேன். ஆனால் உடனடியாக ரம்பாலிநாயக்கின் நினைவு எனக்கு வரவில்லை.!
எப்போதாவது ரம்பாலிநாயக்கின் நினைவு வரும் போது, மன்றத்தில் சொல்ல வேண்டும் என்று விரும்பியது இன்றுதான் கைகூடி இருக்கிறது.
என் மனதில் இந்நிகழ்ச்சி சற்று குழப்பத்தை உண்டு பண்ணியது. இன்று வரை இதை என்னால் நம்பவும் முடியவில்லை.. நம்பாமலும் இருக்க முடியவில்லை...! உங்களில் சிலருக்கும் இது போன்ற நிகழ்வுகள் நடந்திருக்கக்கூடும். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..?
-------------------------------------------------
தேதியில்லா குறிப்புகளின் சுட்டிகள்:
1. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4934 - முதல் நினைவு
2. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4935 - குற்றாலம்
3. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4936 - செல்வதாஸ்
4. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4937 - நிச்சயமாக கனவு இல்லை..!
5. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4938 - முனிப்பாய்ச்சல் ? பதில் தேடுகிறேன்
6. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4939 - நம்பிக்கை
7. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4801 - வீடு
8. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4968 - லட்சுமி
9. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4973 - முதல் புத்தகம்
10. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4987 - பிள்ளையார்
11. http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995 (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=4995) - கணேசன்