அறிஞர்
12-05-2005, 10:04 AM
ஐ.ஏ.எஸ் தேர்வில் தமிழர் முதலிடம்
புதுடில்லி மே 12: தமிழகத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஸ்ரீநிவாசன் நாகராஜன் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூ.பி.எஸ்.சி) யால் நடத்தப்படும் இந்தத் தேர்வில், மொத்தம் 422 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் முதல் 20 இடங்களில் 6 பெண்கள் தேர்வாகியுள்ளனர். பொது வகுப்பிலிருந்து 193 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து 118 பேரும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பிலிருந்து 64 மற்றும் 47 பேரும் தேர்வாகியுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டன. இதில் முதல் 10 இடங்களில் ஒரு பொறியாளர், இரண்டு மருத்துவர்கள் ஆகியோரும் தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜன் நான்காவது முறையாக இந்தத் தேர்வினை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் "எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தபோதும், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அந்த வாய்ப்பை மறுத்தேன். முதலிடம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்தார்.
--------
நன்றி- விகடன்
புதுடில்லி மே 12: தமிழகத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஸ்ரீநிவாசன் நாகராஜன் ஐ.ஏ.எஸ் தேர்வில் முதலிடம் பெற்றுள்ளார்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்(யூ.பி.எஸ்.சி) யால் நடத்தப்படும் இந்தத் தேர்வில், மொத்தம் 422 பேர் தேர்வு பெற்றுள்ளனர். இதில் முதல் 20 இடங்களில் 6 பெண்கள் தேர்வாகியுள்ளனர். பொது வகுப்பிலிருந்து 193 பேரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பிலிருந்து 118 பேரும், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி வகுப்பிலிருந்து 64 மற்றும் 47 பேரும் தேர்வாகியுள்ளனர்.
இந்தத் தேர்வு முடிவுகள் நேற்று(புதன்கிழமை) வெளியிடப்பட்டன. இதில் முதல் 10 இடங்களில் ஒரு பொறியாளர், இரண்டு மருத்துவர்கள் ஆகியோரும் தேர்வு பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த நாகராஜன் நான்காவது முறையாக இந்தத் தேர்வினை எழுதி வெற்றி பெற்றுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில் "எனக்கு அமெரிக்காவில் வேலை கிடைத்தபோதும், ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் இருந்ததால் அந்த வாய்ப்பை மறுத்தேன். முதலிடம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்தார்.
--------
நன்றி- விகடன்