இராசகுமாரன்
26-04-2005, 06:02 AM
தொழில் முனைவோன்
தமிழ் மன்றத்து சொந்தங்களே.. . எனக்கும் உங்களுடன் சேர்ந்து நிறைய விசயங்களை தோன்றும் போதெல்லாம் பகிர்ந்து கொள் வேண்டும் என்று மிகுந்த ஆவல். ஆனால், எனது பணி நிலைமை தற்போது அதற்க்கு அதிக இடம் கொடுப்பதில்லை. இந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்த தலைப்பு, என்னை வாழ்க்கை படிகளில் தாவ வைத்த தலைப்பு, அவ்வப்போது என் மூளையை துள்ளி எழவைக்கும் தலைப்பு, வாழ்க்கையில் நான் அதிகம் ஆராய்ந்த தலைப்பு. நேரம் போதாமையால் இதை தள்ளி வைத்திருந்த எனக்கு, சமீபத்தில் சில நண்பர்களுக்கு உதவுவதற்க்காக இந்த ஆராய்ச்சிகளை மீண்டும் துவங்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அதனால், இதை இனி எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த தலைப்பில் வந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
இதற்கு முன் நான் ஆரம்பித்த ஒன்றிரண்டு தொடர்கள் ஏற்கனவே பாதியில் நிற்கின்றன. இதற்கும் அதே நிலைமை வருமா என்னால், "இல்லை", எனென்றால், இந்த தலைப்பில் நான் மட்டும் தான் எழுத வேண்டுமென்றில்லை, நீங்களும் இதில் சேர்ந்து கொள்ளலாம். இதை ஒரு சுழற் தொடர் போல வைத்துக் கொள்வோம், அதம் மூலம் நான் தொடர தாமதமானாலும், இந்த தலைப்பில் விருப்பம் உள்ளவர்கள் தொடரலாம்.
யார் இந்த தொழில் முனைவோன்?
முன்பொரு காலம் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் அல்லது குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து வருபவர்கள் தான் தொழில் முனைவோனாக வருவார்கள், அல்லது இருக்க வேண்டுமென்றிருந்த காலம் போய் விட்டது நண்பர்களே..! இன்று அவன் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறான். ஆம்.. நம் ஒவ்வொருவருள்ளும் இவன் ஒழிந்து கொண்டிருக்கிறான். அவனை தட்டி எழுப்ப நமக்கு நேரம் கிடைப்பதில்லை, அல்லது நாம் விரும்புவதில்லை, அதனால் அவனை நாம் இனம் கண்டு கொள்வதில்லை. இருந்தும் தெரிந்தும் தெரியாமலும் சில சந்தர்ப்ப சூழ்நிலை என்னும் தீப்பொறியால் அவன் வெளிப்பட்டு விடுகிறான். அவனை வெளிக்கொணரும் அந்த சந்தர்ப்ப 'தீப்பொறி', உங்கள் வெறியை தூண்டிய ஒரு சந்தர்ப்பமாக இருந்தால், உங்கள் வெற்றி நிச்சயம், அல்லது கடமைக்காக தொழில் முனைவோனாக மாறினால், வெற்றி உங்களுக்கு நெடுந்தூரம்.
அந்த சந்தர்ப்பங்கள் பின்வருமாறு:
1) உங்களை ஏமாற்றுதல் / வஞ்சித்தலுக்கு பழி வாங்குதல்
2) உங்களை விட்டு சென்றதற்க்கு பழி வாங்குதல்
3) உங்களை, உங்கள் திறமையை தாழ்த்திப் பேசியதற்கு பதிலடி
4) உங்களை கையாலாகாதவன் போல் நடத்துதலுக்கு பாடம் கற்ப்பித்தல்
5) வாழ்க்கையில் வேறு வழியில்லை என வீருகொண்டெழுதல்
6) வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென்ற வெறி
7) இவனை விட நான் நன்றாக முன்னுக்கு வர வேண்டும் என்ற ஒரு வெறி
8) இந்த வேலையை இவனை விட நன்றாக செய்ய முடியும் என்ற வெறி..
'வெறி' என்ற சொல் சிறிது அநாகரீகமாக பட்டாலும், , இது பிறரை தீங்கு விளைவிக்காத ஒரு வெறி.. உங்களை உச்சிக்கு உயர்த்தும் வெறி, உங்களுடைய வெறியின் அளவில் உங்கள் உயர்வு இருக்கும். அது தான் அவனை தட்டி எழுப்பும் தீப்பொறி.. இந்த வெறியில்லாவிடில் ஒருவன் புதிதாக எதையும் சாதிக்க முடியாது.
இந்த வெறி எப்போது கிளம்பும் என்றால், ஒருவருடைய உடல் அல்லது உள்ளம் கஷ்டப் படும்போது, சோர்வுரும் போது, அவன் சிந்திக்க வேண்டும், ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், பாஸிட்டிவ் மைண்ட் செட் என்று கூறும் ஆக்கப் பூர்வமான மனத்துடன் சிந்திக்க வேண்டும். அப்போது எழுபவை தான் இந்த வெறி.. அந்த வெறி உணர்ச்சியில் ஊர்ந்து அவனை எழ வைக்கும்.
இதே சந்தர்ப்பத்தை அவரே 'நெகட்டிவ் மைண்ட் செட்'-டுடன் எடுத்துக் கொண்டால், அவர் வாழ்க்கையின் முடிவுக்கு செல்ல நேரலாம். ஏனென்றால், அப்படி ஒரு கடைசி படிக்கட்டில் இருக்கிறார், அவர் மீண்டு வர வேண்டுமென்றால் அதீத முயற்சி தேவை, அந்த அதீத முயற்சியைத் தான் நாம் இங்கே வெறி என குறிப்பிடுகிறோம்.
இந்த சந்தர்ப்பங்களை நாம் ஒவ்வொன்றாக அலசப் போகிறோம்.
எனக்கும் இது போல ஒரு சந்தர்ப்பம் வந்து வெறி பிடித்தது, எனக்கு தெரிந்த சில நண்பர்களுக்கு நபர்களுக்கும் அவ்வாறே நடந்தது. அவர்கள் என்ன ஆனார்கள், என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.
( இன்னும் வரும் )
தமிழ் மன்றத்து சொந்தங்களே.. . எனக்கும் உங்களுடன் சேர்ந்து நிறைய விசயங்களை தோன்றும் போதெல்லாம் பகிர்ந்து கொள் வேண்டும் என்று மிகுந்த ஆவல். ஆனால், எனது பணி நிலைமை தற்போது அதற்க்கு அதிக இடம் கொடுப்பதில்லை. இந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்த தலைப்பு, என்னை வாழ்க்கை படிகளில் தாவ வைத்த தலைப்பு, அவ்வப்போது என் மூளையை துள்ளி எழவைக்கும் தலைப்பு, வாழ்க்கையில் நான் அதிகம் ஆராய்ந்த தலைப்பு. நேரம் போதாமையால் இதை தள்ளி வைத்திருந்த எனக்கு, சமீபத்தில் சில நண்பர்களுக்கு உதவுவதற்க்காக இந்த ஆராய்ச்சிகளை மீண்டும் துவங்கும் சந்தர்ப்பம் கிட்டியது. அதனால், இதை இனி எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இந்த தலைப்பில் வந்து உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கிறேன்.
இதற்கு முன் நான் ஆரம்பித்த ஒன்றிரண்டு தொடர்கள் ஏற்கனவே பாதியில் நிற்கின்றன. இதற்கும் அதே நிலைமை வருமா என்னால், "இல்லை", எனென்றால், இந்த தலைப்பில் நான் மட்டும் தான் எழுத வேண்டுமென்றில்லை, நீங்களும் இதில் சேர்ந்து கொள்ளலாம். இதை ஒரு சுழற் தொடர் போல வைத்துக் கொள்வோம், அதம் மூலம் நான் தொடர தாமதமானாலும், இந்த தலைப்பில் விருப்பம் உள்ளவர்கள் தொடரலாம்.
யார் இந்த தொழில் முனைவோன்?
முன்பொரு காலம் ஒரு குறிப்பிட்ட இனத்தவர் அல்லது குறிப்பிட்ட குடும்பத்தில் இருந்து வருபவர்கள் தான் தொழில் முனைவோனாக வருவார்கள், அல்லது இருக்க வேண்டுமென்றிருந்த காலம் போய் விட்டது நண்பர்களே..! இன்று அவன் ஒவ்வொருவருள்ளும் இருக்கிறான். ஆம்.. நம் ஒவ்வொருவருள்ளும் இவன் ஒழிந்து கொண்டிருக்கிறான். அவனை தட்டி எழுப்ப நமக்கு நேரம் கிடைப்பதில்லை, அல்லது நாம் விரும்புவதில்லை, அதனால் அவனை நாம் இனம் கண்டு கொள்வதில்லை. இருந்தும் தெரிந்தும் தெரியாமலும் சில சந்தர்ப்ப சூழ்நிலை என்னும் தீப்பொறியால் அவன் வெளிப்பட்டு விடுகிறான். அவனை வெளிக்கொணரும் அந்த சந்தர்ப்ப 'தீப்பொறி', உங்கள் வெறியை தூண்டிய ஒரு சந்தர்ப்பமாக இருந்தால், உங்கள் வெற்றி நிச்சயம், அல்லது கடமைக்காக தொழில் முனைவோனாக மாறினால், வெற்றி உங்களுக்கு நெடுந்தூரம்.
அந்த சந்தர்ப்பங்கள் பின்வருமாறு:
1) உங்களை ஏமாற்றுதல் / வஞ்சித்தலுக்கு பழி வாங்குதல்
2) உங்களை விட்டு சென்றதற்க்கு பழி வாங்குதல்
3) உங்களை, உங்கள் திறமையை தாழ்த்திப் பேசியதற்கு பதிலடி
4) உங்களை கையாலாகாதவன் போல் நடத்துதலுக்கு பாடம் கற்ப்பித்தல்
5) வாழ்க்கையில் வேறு வழியில்லை என வீருகொண்டெழுதல்
6) வாழ்க்கையில் பெரிய அளவில் சாதிக்க வேண்டுமென்ற வெறி
7) இவனை விட நான் நன்றாக முன்னுக்கு வர வேண்டும் என்ற ஒரு வெறி
8) இந்த வேலையை இவனை விட நன்றாக செய்ய முடியும் என்ற வெறி..
'வெறி' என்ற சொல் சிறிது அநாகரீகமாக பட்டாலும், , இது பிறரை தீங்கு விளைவிக்காத ஒரு வெறி.. உங்களை உச்சிக்கு உயர்த்தும் வெறி, உங்களுடைய வெறியின் அளவில் உங்கள் உயர்வு இருக்கும். அது தான் அவனை தட்டி எழுப்பும் தீப்பொறி.. இந்த வெறியில்லாவிடில் ஒருவன் புதிதாக எதையும் சாதிக்க முடியாது.
இந்த வெறி எப்போது கிளம்பும் என்றால், ஒருவருடைய உடல் அல்லது உள்ளம் கஷ்டப் படும்போது, சோர்வுரும் போது, அவன் சிந்திக்க வேண்டும், ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், பாஸிட்டிவ் மைண்ட் செட் என்று கூறும் ஆக்கப் பூர்வமான மனத்துடன் சிந்திக்க வேண்டும். அப்போது எழுபவை தான் இந்த வெறி.. அந்த வெறி உணர்ச்சியில் ஊர்ந்து அவனை எழ வைக்கும்.
இதே சந்தர்ப்பத்தை அவரே 'நெகட்டிவ் மைண்ட் செட்'-டுடன் எடுத்துக் கொண்டால், அவர் வாழ்க்கையின் முடிவுக்கு செல்ல நேரலாம். ஏனென்றால், அப்படி ஒரு கடைசி படிக்கட்டில் இருக்கிறார், அவர் மீண்டு வர வேண்டுமென்றால் அதீத முயற்சி தேவை, அந்த அதீத முயற்சியைத் தான் நாம் இங்கே வெறி என குறிப்பிடுகிறோம்.
இந்த சந்தர்ப்பங்களை நாம் ஒவ்வொன்றாக அலசப் போகிறோம்.
எனக்கும் இது போல ஒரு சந்தர்ப்பம் வந்து வெறி பிடித்தது, எனக்கு தெரிந்த சில நண்பர்களுக்கு நபர்களுக்கும் அவ்வாறே நடந்தது. அவர்கள் என்ன ஆனார்கள், என்பதைப் பற்றி அடுத்த பகுதியில் காண்போம்.
( இன்னும் வரும் )