View Full Version : ஆணின் குரங்குமனம்
சுவேதா
20-04-2005, 12:45 AM
ஆணின் குரங்குமனம்
டேய் மனுசா!
காதலிக்கும் போது
அழகாய் தெரிந்த
நான் நாலு
பிள்ளையை பெற்ற
பிறகு அழகில்லாதவளாய்
தெரிகிறேனா?
உன்னுடைய முகத்திற்கு
ஊர்வசிபோல்
பொம்பிளை தேவையா?
உனக்கு அவள்தான்
சரி ஏறி காலால்
மிதிச்சே சாகடிக்க...
பரஞ்சோதி
20-04-2005, 04:08 AM
ஆணின் குரங்குமனம்
டேய் மனுசா! காதலிக்கும் போது
அழகாய் தெரிந்த நான் நாலு பிள்ளையை
பெற்ற பிறகு அழகில்லாதவளாய் தெரிகிறேனா?
உன்னுடைய முகத்திற்கு ஊர்வசிபோல் பொம்பிளை
தேவையா? உனக்கு அவள்தான் சரி ஏறி
காலால் மிதிச்சே சாகடிக்க...
அடாடா, என்ன அனல் பறக்கும் கவிதை.
நீங்க என்னைப் பற்றி சொன்ன கவிதை இல்லை என்று நம்புகிறேன், என் மனைவி எனக்கு ஊர்வசியாகத் தான் தெரிகிறார், காரணம் ஒரு மகள் தானே இருக்கிறார்.
சுவேதா
20-04-2005, 11:50 AM
அடாடா, என்ன அனல் பறக்கும் கவிதை.
நீங்க என்னைப் பற்றி சொன்ன கவிதை இல்லை என்று நம்புகிறேன், என் மனைவி எனக்கு ஊர்வசியாகத் தான் தெரிகிறார், காரணம் ஒரு மகள் தானே இருக்கிறார்.
பரம்ஸ் அண்ணா
என் மனைவி எனக்கு ஊர்வசியாகத் தான் தெரிகிறார்,
என்றீர்கள் அப்போ நீங்கள் மிதிவாங்குகிறீர்களா?
பரஞ்சோதி
20-04-2005, 12:06 PM
பரம்ஸ் அண்ணா
என் மனைவி எனக்கு ஊர்வசியாகத் தான் தெரிகிறார்,
என்றீர்கள் அப்போ நீங்கள் மிதிவாங்குகிறீர்களா?
ஹா ஹா, சகோதரி மீதியை யார் வாங்குவது?
gragavan
21-04-2005, 05:21 AM
ஊர்வசி மாதிரி ஏன் தெரியனும் தம்பி. அப்புறம் ஊர்வசி புருசன் கொழம்பிப் போயிருவார். அவரவர் மனைவியர் அவரவர் மனைவியரைப் போலத்தான் தெரிய வேண்டும். அதைத்தான் அனைவரும் விரும்ப வேண்டும். கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் எடுத்த சர்வேயின் முடிவு.
"தமிழகத்தில் பெரும்பாலான கட்டில்களில் அசீத்தும் சிம்ரனும்தான் கூடுகிறார்கள்".
அன்புடன்,
கோ.இராகவன்
(அப்பாடி கொஞ்சம் சீரியசாச் சொல்லியாச்சி)
Iniyan
21-04-2005, 06:46 PM
கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் எடுத்த சர்வேயின் முடிவு.
"தமிழகத்தில் பெரும்பாலான கட்டில்களில் அசீத்தும் சிம்ரனும்தான் கூடுகிறார்கள்".
அன்புடன்,
கோ.இராகவன்
அடடா. இந்த மேட்டர் புதுசா இருக்கே.
சுவேதா
22-04-2005, 12:02 AM
ஹா ஹா, சகோதரி மீதியை யார் வாங்குவது?
அண்ணா! மீதியா இல்லை மிதியா?
சுவேதா
22-04-2005, 12:05 AM
ஊர்வசி மாதிரி ஏன் தெரியனும் தம்பி. அப்புறம் ஊர்வசி புருசன் கொழம்பிப் போயிருவார். அவரவர் மனைவியர் அவரவர் மனைவியரைப் போலத்தான் தெரிய வேண்டும். அதைத்தான் அனைவரும் விரும்ப வேண்டும். கொஞ்ச ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் எடுத்த சர்வேயின் முடிவு.
"தமிழகத்தில் பெரும்பாலான கட்டில்களில் அசீத்தும் சிம்ரனும்தான் கூடுகிறார்கள்".
அன்புடன்,
கோ.இராகவன்
(அப்பாடி கொஞ்சம் சீரியசாச் சொல்லியாச்சி)
நல்ல கருத்துத்தான் கூறியிருக்கிறீர்கள்.
பிரியன்
25-04-2005, 08:01 PM
நண்பர் சுவேதாவிற்கு,
தங்கள் பங்களிப்பிற்கு வாழ்த்துக்கள். இன்னும் செறிவாக செய்யுங்கள்.
வெறும் வாக்கியங்கள் கவிதையாகாது என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். உங்களுடைய கவிதைகளை படித்துவிட்டே என் கருத்தை பதிவு செய்திருக்கிறேன்.
வசன கவிதை வேறு... வசனங்கள் வேறு....
உங்கள் கருத்துகளோடு நல்ல கவிதையையும் எதிர்பார்க்கிறேன்.
அன்புடன்
பிரியன்
mania
26-04-2005, 06:53 AM
பரம்ஸ் அண்ணா
என் மனைவி எனக்கு ஊர்வசியாகத் தான் தெரிகிறார்,
என்றீர்கள் அப்போ நீங்கள் மிதிவாங்குகிறீர்களா?.
ஏன் மிதி மட்டும்.....பரம்ஸ் நீ மிதி அடி வாங்கியதை சொல்கிறாள் போலும்....(மிதியடி ) ி....
சமய சஞ்ஜீவி
மணியா........
puppy
26-04-2005, 09:42 AM
மிதி வாங்கினவங்க எல்லாம் தனியா நில்லுங்க.......ரொம்ப பெரிய வரிசை ஆகிடும்.....ஏன்னா எல்லாருமே வாங்கி இருப்பீங்க...தினம் வாங்குறவங்க எல்லாம் தனியா நில்லுங்க...நம்ம பூ தான் முதலில் இருப்பார்ன்னு நினைக்கிறேன்......
Vijay
26-04-2005, 10:26 AM
பாவம் பூவை என் இப்படி கடிக்கிறிங்க...
mania
26-04-2005, 11:11 AM
பாவம் பூவை என் இப்படி கடிக்கிறிங்க...
:D தலைப்பை பாத்தீங்கல்ல......அதிலேயிருந்து தெரியலையா....பூ என்ன பாடுபடும்ன்னு....:rolleyes:
அன்புடன்
மணியா...:D
சுவேதா
26-04-2005, 11:14 AM
:D தலைப்பை பாத்தீங்கல்ல......அதிலேயிருந்து தெரியலையா....பூ என்ன பாடுபடும்ன்னு....:rolleyes:
அன்புடன்
மணியா...:D
பூ என்று குறிப்பிடுகிறீர்களே யார் அந்த பூ?? எனக்குப் புரியவில்லை
puppy
26-04-2005, 12:52 PM
மணீயா இப்படி ஒரு கேள்வி கேக்க விடலாமா ? பூவை சீக்கிரம் வர சொல்லுங்க
முத்து
26-04-2005, 07:01 PM
பூ என்று குறிப்பிடுகிறீர்களே யார் அந்த பூ?? எனக்குப் புரியவில்லை
ஸ்வேதா,
நண்பர் பூ நம் தமிழ் மன்றத்தின் 5000 பதிவுக்ளுக்குமேல் செய்த, பிரபல உறுப்பினர்களில் ஒருவர்.
முத்து
26-04-2005, 07:05 PM
பப்பி அவர்களே,
எனது மன்ற உறுப்பினர் பெயரை திஸ்கியிலிருந்து யுனிக்கோடுக்கு மாற்ற உங்கள் உதவி தேவை.
பரஞ்சோதி
27-04-2005, 04:23 AM
கவிதை எழுதிய சகோதரிக்கு வெற்றி, இத்தனை பதிவுகளை கொண்ட தலைப்பாக மாற்றி விட்டீங்க.
சுவேதா
27-04-2005, 11:29 AM
ஸ்வேதா,
நண்பர் பூ நம் தமிழ் மன்றத்தின் 5000 பதிவுக்ளுக்குமேல் செய்த, பிரபல உறுப்பினர்களில் ஒருவர்.
அண்ணா!
நான் இம் மன்றத்திற்கு புதியவர் அதனால் தான் பூ என்றதும் புரியவில்லை என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். இனி எல்லோரையும் தெரிந்து கொள்ளுகின்றேன்.
பிரியன்
02-05-2005, 07:09 PM
о Ţ Ȣ Ţ ؾ ȡǡ...
Ǣ..
Χ.
Ţ Ȣ Ţ..
Ţ Ũ .
â
சுவேதா
02-05-2005, 11:36 PM
о Ţ Ȣ Ţ ؾ ȡǡ...
Ǣ..
Χ.
Ţ Ȣ Ţ..
Ţ Ũ .
â
ப்ரியன் அண்ணா!
உங்கள் எழுத்துரு தெளிவில்லாமல் உள்ளது. என்னால் வாசிக்கமுடியவில்லை.
babu4780
03-05-2005, 05:49 AM
இது அந்த உதை யால் வந்த வினையோ..???
அறிஞர்
05-05-2005, 04:01 AM
ஆஹா..... இது என்ன பக்கம்... சீக்கிரம் கலட்டா பகுதியை ஆரம்பியுங்க...
ஸ்வேதா தோழியே... வணக்கம்..
நிறைய எழுதுங்கள்.. உங்கள் உணர்ச்சிகளின் வெளிப்பாடு தெரிகிறது.. கொஞ்சம் நிதானித்து கவித்துவமாய் எழுத ஆரம்பித்தீர்களானால் அருமையாக இருக்கும்!!
தொடருங்கள்... பாராட்டுக்களோடு!!
(என்னை அருமையாக அறிமுகம் செய்துள்ளீர்கள் பப்பி!!.. (தலை.. நீங்களுமா?!!) )
பிரியன்
05-05-2005, 11:37 AM
ப்ரியன் அண்ணா!
உங்கள் எழுத்துரு தெளிவில்லாமல் உள்ளது. என்னால் வாசிக்கமுடியவில்லை.
நன்றி சகோதரி..
தொடர்ந்து எழுதுங்கள்.
வடிவ நேர்த்தியே கவிதைக்கு அழகு...
ஆவலுடன் படைப்புகளை எதிர்பார்க்கும்
பிரியன்