Mano.G.
19-04-2005, 05:51 AM
கட்டண உயர்வு
Feri சேவைக் கட்டணத்தை எதிர்வரும் மே 1 திகதியிலிருந்து, 10 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை உயர்த்த போக்குவரத்துத் துறை முடிவெடுத்துள்ளதாக அதன் அமைச்சர் Datuk Seri Chan Kong Choi தெரிவித்தார்.
லாபத்தை ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் அவ்வமைச்சு பல்வேறு வகையான வசதிகளைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தருவதற்காகவே இக்கட்டண உயர்வு
அமல்படுத்தப்படவிருப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.
Penang Port Sdn Bhd என்னும் நிறுவனம் இந்த Feri சேவையை பல ஆண்டுகளாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------
விவசாயத்துறை மேம்பாட்டிற்குப் பயிற்சி பெற்ற அதிகாரிகள்
நாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கும்,நவீனமாக்குவதற்கும் சுமார் 3,000 பயிற்சி பெற்ற அதிகாரிகள் தேவைப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.
விவசாயத்துறையினை மறுசீரமைப்பு செய்வதன் தொடர்பில் அத்துறைக்கு மேலும் அதிகாரிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
இது மட்டுமின்றி Mardi-கழகத்திற்கு சுமார் 500 ஆய்வு அதிகாரிகள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த பதவிகளுக்கு உண்டான கல்வித்தகுதிகளைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே
பணியமர்த்தபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Muzium Negara-வில் விவசாயம் தொடர்பான கண்காட்சி ஒன்றைத் தொடக்கி வைத்த
போது அவ்வாறு தமது உரையில் குறிபிட்டார்.
-----------------------------------------------------------------
(felda) குடியிருப்பு மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு
Felda குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு முழு கவனம் செலுத்தும் என்று துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.
Felda குடியிருப்பு மக்களின் வாழ்க்கைத்தரம் தற்பொழுது குறிப்பிட்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளபோதும், அங்கு சமூக பிரச்சினைகள் பெருமளவில் உருவாகி வருவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, அதன் தொடர்பாக தீர்வு காண்பதற்கு வெகுவிரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், felda குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் தற்பொழுது 1.9 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-----------------------------------------------------------------
திட்டம் முழுமையடைந்த பின்பே நடவடிக்கை நிறுத்தம்
கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட OPS TEGAS நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் முழுமையான திருப்தியடைந்த பிறகே அந்நடவடிக்கை நிறுத்தப்படும் என உள்நாட்டு விவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் Datuk Paduka Abdul Rahman Ibrahim தெரிவித்தார்.
அனைத்து சட்டவிரோத வெளிநாட்டுப் பிரஜைகளும் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரே இந்நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்
-----------------------------------------------------------------
விபத்தில் ஆடவர் மரணம்
Jalan Tanjung Bungah-விலுள்ள வியாபாரி ஒருவர் குளிர்பான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் கார் ஒன்று அவரை மோதியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் 4 மணி நேரத்திற்கு பின் மரணமுற்றார்.
சுமார் 49 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் பினாங்கு மருத்துவமனையில் மரணமுற்றதாக பொது போக்குவரத்து போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த கார் அவ்வாடரை மோதியதால் பலத்த காயங்களுக்கு இலக்கான அவர் மரணமுற்றதாக அவர் மேலும் கூறினார்.
-----------------------------------------------------------------
பிரதமர் திரங்கானு பயணம்
பிரதமர் படாவி மற்றும் துணைப் பிரதமர் நஜிப் ஆகியோர் அரை நாள் பயணமாக நேற்று Kuala Terengganu சென்றனர்.
அவர்களை திரங்கானு Menteri Besar Datuk Seri Idris Jusoh, அவரது துணைவியார் Puan Seri Cik Kamariah Zakaria, மாநில சட்டமன்ற பேச்சாளர் Datuk Che Mat Jusoh, அரசாங்க அதிகரிகள் மற்றும் Barisan Nasional தலைவர்கள் வரவேற்றனர்.
பிரதமர் Hulu Terengganu-வில் Semai Bakti என்ற நிகழ்ச்சியை அவர் நேற்று தொடக்கி வைத்தார்.
-----------------------------------------------------------------
சூறைக்காற்றில் சேதமடைந்த தேசிய சேவைப் பயிற்சி முகாம்
Taman Templer தேசிய சேவை பயிற்சி முகாம் பகுதிகளில் வீசிய கடுமையான காற்றில், அம்முகாம்களின் கூரைகள் விழுந்து ஐந்து மாணவர்களும், இரு பெற்றோர்களும் காயமுற்றனர்.
இச்சம்பவம் நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில், ஏற்பட்டதாக Gombak மாவட்ட
போலிஸ் தலைவர் ACP Mohd Azmi Mohd Nazri தெரிவித்தார்.
காயமுற்ற ஏழு பேரும் தற்போது வெளி நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
-----------------------------------------------------------------
மின்கசிவால் தீ விபத்து
கிள்ளான் Connaught மின் உற்பத்தி நிலையத்தில், எண்ணை கசிவுகள் ஏற்பட்டதால் அதன் transformer வெடித்து தீப்பற்றியது என சிலாங்கூர் Tenaga Nasional Berhad உயர் நிர்வாகி Amir Nordin Abd Aziz தெரிவித்தார்.
இச்சம்பவம், நேற்று முன் தினம் மாலை ஐந்து மணி அளவில் ஏற்பட்டதாகவும், இதனால் மின்சாரத்தடை ஏதும் ஏற்படவில்லை என அவர் கூறினார்.
அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, தீயணைப்பு வண்டிகளும், வீரர்களும் அவ்விடத்துக்கு விரைந்து முப்பது நிமிடத்தில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்ததாகவும், தெற்கு கிள்ளான் தீயணைப்பு அதிகாரி Ghafar Mat Zin தெரிவித்தார்.
இச்சம்பவத்தில், உயிருடர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
_____________________________________________________________________
முதலில் இந்தியா,பின்பே பாகிஸ்தான்
இந்தியா மேற்கொண்டு வரும் ஏவுகணை சோதனைகளை முதலில் நிறுத்தினால் பாகிஸ்தானும் உடனடியாக நிறுத்த தயார் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறினார்.
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர், நேற்று முன் தினம் டெல்லியில் இந்தியா பாகிஸ்தான் ஆடிய கிரிக்கெட் போட்டியை பார்த்தார்.
இதன் பிறகு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப்பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே தொழில் வர்த்தக உறவை மேம்படுத்தவும், கூடுதலான பஸ்,ரெயில்களை இயக்கவும் உடன்பாடு ஏற்பட்டது.
காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச்சு எழுந்த போது இந்திய எல்லைகளை மாற்றியமைப்பது நடக்காத காரியம் என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக கூறிவிட்டதாக இந்திய அரசின் தகவல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க முடியாது: சீனா
சீனாவில் ஜப்பானுக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரங்களுக்காக, தாங்கள் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சீனாவின் Shanghai நகரில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் மீதும், ஜப்பானியர்களின் கடைகள், நிறுவனங்கள் மீதும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், ஜப்பானிய பிரதமரின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.
ஜப்பானியர்களுக்கு எதிரான இந்நடவடிக்கைகளுக்காக சீனா மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், ஜப்பானியர்களுக்கு நஷ்ட ஈடு அளிக்குமாறும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் Nobuthaka Simura எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சர் Lee Sausing, நடக்கும் விஷயங்களுக்கு ஜப்பானே காரணம் எனவும், இரண்டாம் உலகப் போரின் போது நடந்த சம்பவங்களுக்காக ஜப்பான் தான் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், சீனா மன்னிப்பு கேட்காது எனவும் அவர் கூறினார்.
-----------------------------------------------------------------
இலங்கையில் நோர்வே தூதர்
சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், வடகிழக்கு பகுதியை சீரமைப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நார்வே அமைதி தூதர் Eric Solheim இலங்கை வந்துள்ளார்.
அவர் அதிபர் சந்திரிகா, பிரதமர் ராஜபக்சே, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில்
விக்ரம்சிங்கே, மற்றும் விடுதலைப்புலி தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இதனிடையே, மட்டக்களப்பு பகுதியில், விடுதலை புலிகளுக்கும் கருணா பிரிவிற்கும் இடையே நடந்துவரும் மோதல்கள் குறித்தும் அவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
-----------------------------------------------------------------
தலிபான்கள் வெடிக்கச் செய்த அமெரிக்க லாரிகள்
ஆப்கானிஸ்தானிலுள்ள Kandahar-ரில் தலிபான் தீவிரவாதிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில் அமெரிக்க ராணுவ முகாமுக்கு எண்ணெய் ஏற்றிச் செல்லும் ஐந்து டேங்கர் வாகனங்கள் வெடித்துச் சிதறின.
இச்சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று லாரி ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர்.
டேங்கர் லாரி திடீரென வெடித்ததால் அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற லாரிகளும் வெடித்துச் சிதறியதாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.
தலிபான் தீவிரவாதிகளே வெடிகுண்டுகளைப் புதைத்து வைத்து லாரிகளை வெடிக்கச் செய்தனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-----------------------------------------------------------------
பிலிப்பைன்ஸில் போக்குவரத்து வேலைநிறுத்தம்
பிலிப்பைன்ஸில் பொது போக்குவரத்து நடத்துனர்கள் நேற்று மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தில் மணிலா மற்றும் பிற நகரங்களின் போக்குவரத்து நிலைக்குத்தியது.
எண்ணெய் விலையேற்றத்தைத் தொடர்ந்து போக்குவரத்து கட்டணத்தை 50 சதவிகிதம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்நாட்டு போக்குவரத்து இலாகா தற்காலிகமாக உல்லாச பயண பஸ்களைப் பயன்படுத்தி
நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்துள்ளது.
_____________________________________________________________________
வளரும் நாடுகளில் நோய்களால் ஆண்டுதோறும் 11 மில்லியன் குழந்தைகள் இறப்பு
வளர்ந்து வரும் நாடுகளில் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 11 மில்லியன் குழந்தைகள் நோய்கள் மற்றும் பல்வேறு காரணங்களினால் இறப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
தொற்றுநோய்,வயிற்றுப்போக்கு,அம்மை,மலேரியா போன்ற நோய்களால் குழந்தைகள் அதிகம் இறப்பதாக அவர் தெரிவித்தார். உலக வளர்ச்சி குறித்து கண்காணிக்கும் அதிகாரிகள் அவ்வாறு தெரிவித்தனர்.
1990 ஆம் ஆண்டு தீட்டப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி அடுத்த 25 ஆண்டுகளில் குழந்தை இறப்பு எண்ணிக்கை தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கிடையில் பெரிதும் வேறுபடுவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாடுகளுக்கு உள்ளேயே சமுதாயத்தில் ஏற்ற-இறக்கங்கள் நிலவுவதே இதற்குக் காரணம் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
உலகம் முழுவதும் ஏறத்தாழ 100 மில்லியன் குழந்தைகள் கல்வி கற்கப் பள்ளிக்குப் போகாமல் இருப்பதாகவும் அவர்களுள் 60 சதவீதம் பேர் பெண்கள் என்றும் உலகவங்கி தெரிவித்துள்ளது.
Feri சேவைக் கட்டணத்தை எதிர்வரும் மே 1 திகதியிலிருந்து, 10 விழுக்காடு முதல் 100 விழுக்காடு வரை உயர்த்த போக்குவரத்துத் துறை முடிவெடுத்துள்ளதாக அதன் அமைச்சர் Datuk Seri Chan Kong Choi தெரிவித்தார்.
லாபத்தை ஈட்டுவதை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் அவ்வமைச்சு பல்வேறு வகையான வசதிகளைப் பொதுமக்களுக்கு ஏற்படுத்தி தருவதற்காகவே இக்கட்டண உயர்வு
அமல்படுத்தப்படவிருப்பதாக நேற்று நாடாளுமன்றத்தில் அவர் கூறினார்.
Penang Port Sdn Bhd என்னும் நிறுவனம் இந்த Feri சேவையை பல ஆண்டுகளாக வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
-----------------------------------------------------------------
விவசாயத்துறை மேம்பாட்டிற்குப் பயிற்சி பெற்ற அதிகாரிகள்
நாட்டில் விவசாயத்துறையை மேம்படுத்துவதற்கும்,நவீனமாக்குவதற்கும் சுமார் 3,000 பயிற்சி பெற்ற அதிகாரிகள் தேவைப்படுவதாக விவசாயத்துறை அமைச்சர் Tan Sri Muhyiddin Yassin தெரிவித்தார்.
விவசாயத்துறையினை மறுசீரமைப்பு செய்வதன் தொடர்பில் அத்துறைக்கு மேலும் அதிகாரிகள் தேவைப்படுவதாக அவர் கூறினார்.
இது மட்டுமின்றி Mardi-கழகத்திற்கு சுமார் 500 ஆய்வு அதிகாரிகள் தேவைப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஆனால் இந்த பதவிகளுக்கு உண்டான கல்வித்தகுதிகளைப் பெற்றிருப்பவர்கள் மட்டுமே
பணியமர்த்தபடுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
Muzium Negara-வில் விவசாயம் தொடர்பான கண்காட்சி ஒன்றைத் தொடக்கி வைத்த
போது அவ்வாறு தமது உரையில் குறிபிட்டார்.
-----------------------------------------------------------------
(felda) குடியிருப்பு மேம்பாட்டிற்காக நிதி ஒதுக்கீடு
Felda குடியிருப்புப் பகுதிகளில் வசிக்கும் பொது மக்களின் சமூக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் அரசு முழு கவனம் செலுத்தும் என்று துணைப் பிரதமர் Datuk Seri Najib Tun Razak தெரிவித்தார்.
Felda குடியிருப்பு மக்களின் வாழ்க்கைத்தரம் தற்பொழுது குறிப்பிட்ட வளர்ச்சியைப் பெற்றுள்ளபோதும், அங்கு சமூக பிரச்சினைகள் பெருமளவில் உருவாகி வருவதாக அவர் தெரிவித்தார்.
எனவே, அதன் தொடர்பாக தீர்வு காண்பதற்கு வெகுவிரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும், felda குடியிருப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு அரசாங்கம் தற்பொழுது 1.9 லட்சம் ரிங்கிட் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-----------------------------------------------------------------
திட்டம் முழுமையடைந்த பின்பே நடவடிக்கை நிறுத்தம்
கடந்த மார்ச் மாதம் தொடங்கப்பட்ட OPS TEGAS நடவடிக்கைகள் குறித்து அரசாங்கம் முழுமையான திருப்தியடைந்த பிறகே அந்நடவடிக்கை நிறுத்தப்படும் என உள்நாட்டு விவகார அமைச்சின் நாடாளுமன்றச் செயலாளர் Datuk Paduka Abdul Rahman Ibrahim தெரிவித்தார்.
அனைத்து சட்டவிரோத வெளிநாட்டுப் பிரஜைகளும் மலேசியாவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னரே இந்நடவடிக்கைகள் நிறுத்தப்படும் என அவர் தெரிவித்தார்
-----------------------------------------------------------------
விபத்தில் ஆடவர் மரணம்
Jalan Tanjung Bungah-விலுள்ள வியாபாரி ஒருவர் குளிர்பான வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையில் கார் ஒன்று அவரை மோதியதால் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் 4 மணி நேரத்திற்கு பின் மரணமுற்றார்.
சுமார் 49 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் பினாங்கு மருத்துவமனையில் மரணமுற்றதாக பொது போக்குவரத்து போலீஸ் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டை இழந்த கார் அவ்வாடரை மோதியதால் பலத்த காயங்களுக்கு இலக்கான அவர் மரணமுற்றதாக அவர் மேலும் கூறினார்.
-----------------------------------------------------------------
பிரதமர் திரங்கானு பயணம்
பிரதமர் படாவி மற்றும் துணைப் பிரதமர் நஜிப் ஆகியோர் அரை நாள் பயணமாக நேற்று Kuala Terengganu சென்றனர்.
அவர்களை திரங்கானு Menteri Besar Datuk Seri Idris Jusoh, அவரது துணைவியார் Puan Seri Cik Kamariah Zakaria, மாநில சட்டமன்ற பேச்சாளர் Datuk Che Mat Jusoh, அரசாங்க அதிகரிகள் மற்றும் Barisan Nasional தலைவர்கள் வரவேற்றனர்.
பிரதமர் Hulu Terengganu-வில் Semai Bakti என்ற நிகழ்ச்சியை அவர் நேற்று தொடக்கி வைத்தார்.
-----------------------------------------------------------------
சூறைக்காற்றில் சேதமடைந்த தேசிய சேவைப் பயிற்சி முகாம்
Taman Templer தேசிய சேவை பயிற்சி முகாம் பகுதிகளில் வீசிய கடுமையான காற்றில், அம்முகாம்களின் கூரைகள் விழுந்து ஐந்து மாணவர்களும், இரு பெற்றோர்களும் காயமுற்றனர்.
இச்சம்பவம் நேற்று முன் தினம் மாலை 5 மணி அளவில், ஏற்பட்டதாக Gombak மாவட்ட
போலிஸ் தலைவர் ACP Mohd Azmi Mohd Nazri தெரிவித்தார்.
காயமுற்ற ஏழு பேரும் தற்போது வெளி நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அவர் கூறினார்.
-----------------------------------------------------------------
மின்கசிவால் தீ விபத்து
கிள்ளான் Connaught மின் உற்பத்தி நிலையத்தில், எண்ணை கசிவுகள் ஏற்பட்டதால் அதன் transformer வெடித்து தீப்பற்றியது என சிலாங்கூர் Tenaga Nasional Berhad உயர் நிர்வாகி Amir Nordin Abd Aziz தெரிவித்தார்.
இச்சம்பவம், நேற்று முன் தினம் மாலை ஐந்து மணி அளவில் ஏற்பட்டதாகவும், இதனால் மின்சாரத்தடை ஏதும் ஏற்படவில்லை என அவர் கூறினார்.
அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதை தொடர்ந்து, தீயணைப்பு வண்டிகளும், வீரர்களும் அவ்விடத்துக்கு விரைந்து முப்பது நிமிடத்தில் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு
வந்ததாகவும், தெற்கு கிள்ளான் தீயணைப்பு அதிகாரி Ghafar Mat Zin தெரிவித்தார்.
இச்சம்பவத்தில், உயிருடர் சேதம் ஏதும் ஏற்படவில்லை.
_____________________________________________________________________
முதலில் இந்தியா,பின்பே பாகிஸ்தான்
இந்தியா மேற்கொண்டு வரும் ஏவுகணை சோதனைகளை முதலில் நிறுத்தினால் பாகிஸ்தானும் உடனடியாக நிறுத்த தயார் என்று பாகிஸ்தான் அதிபர் முஷாரப் கூறினார்.
3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் அதிபர், நேற்று முன் தினம் டெல்லியில் இந்தியா பாகிஸ்தான் ஆடிய கிரிக்கெட் போட்டியை பார்த்தார்.
இதன் பிறகு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்குடன் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்தப்பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே தொழில் வர்த்தக உறவை மேம்படுத்தவும், கூடுதலான பஸ்,ரெயில்களை இயக்கவும் உடன்பாடு ஏற்பட்டது.
காஷ்மீர் பிரச்சினை பற்றி பேச்சு எழுந்த போது இந்திய எல்லைகளை மாற்றியமைப்பது நடக்காத காரியம் என பிரதமர் மன்மோகன் சிங் திட்டவட்டமாக கூறிவிட்டதாக இந்திய அரசின் தகவல் குறிப்புகள் தெரிவிக்கின்றன.
ஜப்பானிடம் மன்னிப்பு கேட்க முடியாது: சீனா
சீனாவில் ஜப்பானுக்கு எதிராக நடைபெற்று வரும் கலவரங்களுக்காக, தாங்கள் மன்னிப்பு கேட்கப் போவதில்லை என சீனா திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சீனாவின் Shanghai நகரில் உள்ள ஜப்பானிய தூதரகத்தின் மீதும், ஜப்பானியர்களின் கடைகள், நிறுவனங்கள் மீதும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், ஜப்பானிய பிரதமரின் உருவபொம்மையும் எரிக்கப்பட்டது.
ஜப்பானியர்களுக்கு எதிரான இந்நடவடிக்கைகளுக்காக சீனா மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், ஜப்பானியர்களுக்கு நஷ்ட ஈடு அளிக்குமாறும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் Nobuthaka Simura எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதற்குப் பதிலளித்த சீன வெளியுறவு அமைச்சர் Lee Sausing, நடக்கும் விஷயங்களுக்கு ஜப்பானே காரணம் எனவும், இரண்டாம் உலகப் போரின் போது நடந்த சம்பவங்களுக்காக ஜப்பான் தான் மன்னிப்பு கேட்க வேண்டுமெனவும், சீனா மன்னிப்பு கேட்காது எனவும் அவர் கூறினார்.
-----------------------------------------------------------------
இலங்கையில் நோர்வே தூதர்
சுனாமி நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவும், வடகிழக்கு பகுதியை சீரமைப்பது குறித்தும் பேச்சு வார்த்தை நடத்துவதற்கு நார்வே அமைதி தூதர் Eric Solheim இலங்கை வந்துள்ளார்.
அவர் அதிபர் சந்திரிகா, பிரதமர் ராஜபக்சே, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் ரணில்
விக்ரம்சிங்கே, மற்றும் விடுதலைப்புலி தலைவர்கள் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.
இதனிடையே, மட்டக்களப்பு பகுதியில், விடுதலை புலிகளுக்கும் கருணா பிரிவிற்கும் இடையே நடந்துவரும் மோதல்கள் குறித்தும் அவர்கள் விவாதிக்கவுள்ளனர்.
-----------------------------------------------------------------
தலிபான்கள் வெடிக்கச் செய்த அமெரிக்க லாரிகள்
ஆப்கானிஸ்தானிலுள்ள Kandahar-ரில் தலிபான் தீவிரவாதிகள் புதைத்து வைத்த வெடிகுண்டுகள் வெடித்ததில் அமெரிக்க ராணுவ முகாமுக்கு எண்ணெய் ஏற்றிச் செல்லும் ஐந்து டேங்கர் வாகனங்கள் வெடித்துச் சிதறின.
இச்சம்பவத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று லாரி ஓட்டுநர்கள் படுகாயமடைந்தனர்.
டேங்கர் லாரி திடீரென வெடித்ததால் அதன் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற லாரிகளும் வெடித்துச் சிதறியதாக ராணுவ அதிகாரிகள் கூறினர்.
தலிபான் தீவிரவாதிகளே வெடிகுண்டுகளைப் புதைத்து வைத்து லாரிகளை வெடிக்கச் செய்தனர் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
-----------------------------------------------------------------
பிலிப்பைன்ஸில் போக்குவரத்து வேலைநிறுத்தம்
பிலிப்பைன்ஸில் பொது போக்குவரத்து நடத்துனர்கள் நேற்று மேற்கொண்ட வேலை நிறுத்த போராட்டத்தில் மணிலா மற்றும் பிற நகரங்களின் போக்குவரத்து நிலைக்குத்தியது.
எண்ணெய் விலையேற்றத்தைத் தொடர்ந்து போக்குவரத்து கட்டணத்தை 50 சதவிகிதம் உயர்த்த வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
அந்நாட்டு போக்குவரத்து இலாகா தற்காலிகமாக உல்லாச பயண பஸ்களைப் பயன்படுத்தி
நிலமையை கட்டுக்குள் கொண்டு வர முயற்சி எடுத்துள்ளது.
_____________________________________________________________________
வளரும் நாடுகளில் நோய்களால் ஆண்டுதோறும் 11 மில்லியன் குழந்தைகள் இறப்பு
வளர்ந்து வரும் நாடுகளில் ஆண்டுதோறும் ஐந்து வயதுக்குட்பட்ட சுமார் 11 மில்லியன் குழந்தைகள் நோய்கள் மற்றும் பல்வேறு காரணங்களினால் இறப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
தொற்றுநோய்,வயிற்றுப்போக்கு,அம்மை,மலேரியா போன்ற நோய்களால் குழந்தைகள் அதிகம் இறப்பதாக அவர் தெரிவித்தார். உலக வளர்ச்சி குறித்து கண்காணிக்கும் அதிகாரிகள் அவ்வாறு தெரிவித்தனர்.
1990 ஆம் ஆண்டு தீட்டப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின்படி அடுத்த 25 ஆண்டுகளில் குழந்தை இறப்பு எண்ணிக்கை தடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
குழந்தைகள் இறப்பு எண்ணிக்கை கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களுக்கிடையில் பெரிதும் வேறுபடுவதாகவும் அந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. நாடுகளுக்கு உள்ளேயே சமுதாயத்தில் ஏற்ற-இறக்கங்கள் நிலவுவதே இதற்குக் காரணம் என அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.
உலகம் முழுவதும் ஏறத்தாழ 100 மில்லியன் குழந்தைகள் கல்வி கற்கப் பள்ளிக்குப் போகாமல் இருப்பதாகவும் அவர்களுள் 60 சதவீதம் பேர் பெண்கள் என்றும் உலகவங்கி தெரிவித்துள்ளது.