PDA

View Full Version : மழை



சுவேதா
19-04-2005, 03:04 AM
மழை

மேகத்தில் ஒன்றாய் நின்று தனித்தனியே
பிரிந்து எமக்கு வாழ்வளித்தவளே!
சிறு துளியாய் முத்துப்போல் வந்தவளே!
உன்னை தொடுகையிலே சில்லரித்துப்
போகின்றேன் நான்!
உனது உருவத்தை நிறத்தை என்னால்
சொல்ல முடியவில்லை!
நீ இல்லை என்றால் நிச்சியமாக நான் இல்லை!
சொல்லப் போனால் இயற்கையின்
அதிசயத்தில் நீயும் ஒன்று!
என்றென்றும் நீ எமக்கு வேண்டும் உன்னை
நாங்கள் எப்பொழுதும் வரவேற்போம்!