View Full Version : ஆசைகள்
சுவேதா
17-04-2005, 02:32 AM
ஆசைகள்
உலகை சுற்றிவர ஆசை
ஆனால் அது முடியாது!
மயிலைப் போல் தோகைவிரிக்க ஆசை
அதுவும் முடியவே முடியாது!
காற்றை தொட்டு விளையாட ஆசை
அது நடக்கப்போகிற காரியமல்ல.
மின்னலைப் பிடித்து நிப்பாட்டிவிட ஆசை
சந்தேகம் வேண்டாம் அதுவும் முடியாது!
காதலிக்க ஆசை அதுவும் என்னால் முடியாது!
அப்படி என்னால் முடிந்தாலும்
ஒரு நல்ல காதலன் கிடைக்கமாட்டான்.
ஒரு வேளை இது அனைத்தும் நடந்தால்
இந்த ஒரு ஜென்மம் போதும்!
pradeepkt
18-04-2005, 06:41 AM
நடக்கலைன்னா இன்னும் பல ஜென்மம் வேணும் அப்படிங்கறீங்களா சுவேதா?
நல்ல கற்பனை!
சுவேதா
19-04-2005, 12:10 PM
நடக்கலைன்னா இன்னும் பல ஜென்மம் வேணும் அப்படிங்கறீங்களா சுவேதா?
நல்ல கற்பனை!
நன்றி ப்ரதீப் அண்ணா!
இந்த ஜென்மத்தில் நடக்கலைன்னா அடுத்த ஜென்மத்திலாவது நடக்காதா என்றது போல். இந்த ஜென்மத்தில் நடந்தால் இந்த ஜென்மம் ஒன்றே போதும். என்று
puppy
19-04-2005, 12:14 PM
இதில் இருந்து உங்கள் உண்மை ஆசை தெரிந்து போச்சு........
பல ஜென்மங்கள் வேனுமுன்னு சொல்லாமா சொல்லிட்டீங்க.........உங்கள் ஆசை நிறைவேற வேண்டுகிறேன்
சுவேதா
22-04-2005, 12:12 AM
இதில் இருந்து உங்கள் உண்மை ஆசை தெரிந்து போச்சு........
பல ஜென்மங்கள் வேனுமுன்னு சொல்லாமா சொல்லிட்டீங்க.........உங்கள் ஆசை நிறைவேற வேண்டுகிறேன்
இல்லை இல்லை நான் அந்த அர்த்தத்தில் கூறவில்லை இருந்தாலும் அப்படி இருந்தால் நல்லாத்தான் இருக்கும். அதனால் நான் கேக்கவில்லை மறு ஜென்மம். ஏன் என்றால் இந்த ஜென்மத்தில் உங்களது நட்பு கிடைத்திருக்கிறதே அதுவே எனக்கு போதும்!
babu4780
22-04-2005, 05:17 AM
தங்களுடைய கவிதைகளை அனைத்தையும் ஒன்று விடாமல் படித்துவருகிறேன். அனைத்தும் எளிய நடையில் மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
- பெரி
gragavan
22-04-2005, 05:23 AM
அதான ஆச தீர்ர வரைக்கும் வாழந்துதான் தீரணும். எத்தனை பிறவி எடுத்தாவது ஆசயத் தீத்துக்கிற வேண்டாமா?
நல்ல முயற்சி ஸ்வேதா.
அன்புடன்,
கோ.இராகவன்
சுவேதா
22-04-2005, 11:16 AM
தங்களுடைய கவிதைகளை அனைத்தையும் ஒன்று விடாமல் படித்துவருகிறேன். அனைத்தும் எளிய நடையில் மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்.
- பெரி
நன்றி பாபு!
சுவேதா
22-04-2005, 11:20 AM
அதான ஆச தீர்ர வரைக்கும் வாழந்துதான் தீரணும். எத்தனை பிறவி எடுத்தாவது ஆசயத் தீத்துக்கிற வேண்டாமா?
நல்ல முயற்சி ஸ்வேதா.
அன்புடன்,
கோ.இராகவன்
ஆமாம் ஆமாம் ஆசையை தீர்க்க வேண்டும் என்றால் வாழ்ந்துதானே ஆக வேண்டும். தீர்க்கா விட்டால் ஆத்மா சாந்தி அடையாது இல்லையா.