PDA

View Full Version : அதிமேதாவி அம்மாஞ்சி



Pages : [1] 2

Iniyan
14-04-2005, 10:59 AM
நான் கேட்ட படித்த பல மொழி சிரிப்புத் துணுக்குகளை தமிழில் மாற்றி நம்மூர் ஸ்டைலுக்கு நகாசு செய்து அம்மாஞ்சி எனும் கற்பனைக் கதாபாத்திரத்தின் உதவியுடன் வழங்குகிறேன். அம்மாஞ்சிக்கு முன்னோடிகள் யாரு தெரியும்ல?

நம்ம ஆண்டிப்பண்டாரம், குவாட்டர் கோவிந்து, கோயான் கோபு மற்றும் பாண்டேஜ் பாண்டியன் இவர்கள் தான்.

Iniyan
14-04-2005, 11:00 AM
ஆசிரியர்: கண்ணகி மதுரையை எரித்ததில் இருந்து நமக்கெல்லாம் என்ன தெரியுது?

அதிமேதாவி: அந்த காலத்தில தீயணைப்பு படை இல்லேன்னு தெரியுது.....

Iniyan
14-04-2005, 11:02 AM
கடந்த இரண்டொரு வருடங்களாக நானும் என் மூளையை கசக்கி வந்தேன். தூக்கமின்மை, போதிய உடற்பயிற்சி இல்லை, அதிக வெயில், வேலை பளு, எல்லாம் என் பரம்பரை வியாதி, அது இது என பல காரணங்கள் கற்பித்து வந்தேன் எனது அதீத சோர்வுக்கு.

ஆனால் ஆண்டவன் அருளால் கடைசியில் சரியான காரணம் கண்டுபிடித்து விட்டேன். மிக அதிக வேலைப்பளு தான் காரணம்....எப்படியா? ரமணா விஜயகாந்த் ஸ்டைல்ல சொல்லுறேன். கேட்டுக்கோ...

இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 273 மில்லியன்.

இதில் 140 மில்லியன் ஓய்வு பெற்றவர்கள்.
ஆக மிச்சம் 133 மில்லியன் பேர் வேலை பார்க்க.

இதில் 85 மில்லியன் பள்ளியில்.
ஆக மிச்சம் 48 மில்லியன் பேர் வேலை பார்க்க.

இதில் 29 மில்லியன் Federal கவர்மெண்ட் வேலையில்.
ஆக மிச்சம் 19 மில்லியன் பேர் வேலை பார்க்க.

இதில் 2.8 மில்லியன் ராணுவத்தில் உலகமெல்லாம் கட்டைப் பஞ்சாயத்து செய்யும் வேலையில்.
ஆக மிச்சம் 16.2 மில்லியன் பேர் வேலை பார்க்க.

இதிலும் மாநிலம், மாகாணம், நகரம், கிராம அலுவல் என்று 14,800,000 பேர் போக
மிச்சம் 1.4 மில்லியன் பேர் வேலை பார்க்க.

இதிலயும் மருத்துவமனையிலிருக்கும் 188,000, மற்றும் சிறைச்சாலைகளில் இருக்கும் 1,211,998 பேர் கணக்கு.

ஆகக் கூடி இருக்குற வேலையெல்லாம் பார்க்க மிச்சம் இருக்குறது நீயும் நானும் தான். இதுலயும் நீ இப்படி கம்ப்யூட்டர்ல உட்க்கார்ந்து வெட்டி பொழுது கழிக்கிறே..............

Iniyan
14-04-2005, 11:03 AM
நம்ம அம்மாஞ்சி பூங்கா பெஞ்சில் உட்கார்ந்து கை நிறைய மிட்டாய்களை வைத்துக் கொண்டு ஒன்றன் பின் ஒன்றாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தான். நாலு, ஐந்து, ஆறு என இடைவிடாது நம்மாள் மிட்டாய் தின்பதை பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெரியவர் 'தம்பி, இவ்ளோ மிட்டாய் சாப்பிடுறது நல்லதில்லை. தெரியுமா? இதனால உன் பல்லு கெட்டு போகும். கொழுப்பு ஜாஸ்தியாகும்' என்றார். அதற்கு நம்மாள் 'எங்க தாத்தா 102 வயசு வரைக்கும் இருந்தார். அது உங்களுக்கு தெரியுமா?' என்றான். 'அப்படியா. உங்க தாத்தா தினமும் இவ்ளோ மிட்டாய் சாப்பிட்டாரா என்ன 102 வயசு வரைக்கும் இருக்குறதுக்கு?' என்றார் அந்த பெரியவர். அம்மாஞ்சி 'அதெல்லாம் இல்லை. எங்க தாத்தா தேவையில்லாம அடுத்தவங்க விசயத்துல தலையிடாம தன் வேலைய மட்டும் பாத்துக்கிட்டு இருந்ததால தான் அவ்ளோ நாள் உயிரோட இருந்தார்' என்றான்.

Iniyan
14-04-2005, 12:01 PM
ஒரு ஆமை தன் முதுகில் உள்ள ஓட்டை இழந்து விட்டால் இப்போது அந்த ஆமை நிர்வாணமாய் உள்ளதா இல்லை வீடில்லாமல் உள்ளதா?

Iniyan
14-04-2005, 12:03 PM
விமானங்களில் இருக்கும் 'கருப்பு தகவல் பெட்டி' எப்படிப்பட்ட விபத்திலும் பாதிப்படையாது எனில் ஏன் முழு விமானத்தையும் அந்த கருப்பு பெட்டி தயாரிக்கும் பொருளிலேயே தயாரிக்கக் கூடாது?

Iniyan
14-04-2005, 12:08 PM
ஜோசியர்கள் எல்லாம் எதற்கு இன்னும் வேலை பார்த்துக் கொண்டுள்ளார்கள்? ஏன் ஒரு பெரிய ஜெயிக்கப் போகும் லாட்டரி நம்பரை ஜோசியத்தால் அறிந்து வாங்கக் கூடாது?

Iniyan
14-04-2005, 12:10 PM
ஒரு விமானம் நியூயார்க்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி புறப்பட்டது. வானில் விமானம் பறாக்கத் தொடங்கிய சிறிது நேரத்தில் விமான கேப்டன் குரல் ஒலி பெருக்கியில் கேட்டது. 'நியூயார்க்கிலிருந்து லாஸ் ஏஞ்சல்ஸ் செல்லும் இந்த விமானத்தில் உள்ள பயணியர் அனைவரையும் வரவேற்கிறேன். தட்ப வெப்பத்தில் ஏதும் பிரச்சனைகள் இல்லாதால் அமைதியான பிரச்சனைகள் இல்லாத இனிய பயணமாக இருக்கும் இது. எனவே அனைவரும் நிம்மதியாக ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஐயோ.....ஆண்டவா......'

சற்றே நேர அமைதிக்குப் பின் கேப்டனின் குரல் மீண்டும். 'மன்னிக்கவும். எனது கூக்குரல் உங்களை பயப்படுத்தி இருந்தால் என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் அப்போது பேசிக் கொண்டிருந்த போது விமானப் பணிப்பெண் எனக்கு சூடாக காபி கொண்டு வந்தார். அதை தவறுதலாக என் மடியில் கொட்டி விட்டேன். அதனால் தான் என்னையும் அறியாமல் அப்படி கத்தி விட்ட்டேன். என் பேண்ட்டின் முன்புறத்தை இப்போது நீங்கள் பார்க்க வேண்டுமே...பெரிய கறை.....'

இப்போது பயணிகளில் ஒருவரான நம்ம அம்மாஞ்சி உரக்க 'உங்க பேண்ட் முன்னாடி ஆனது ஒண்னும் பெரிய கறை இல்லை. நீங்க கத்துனதுக்கப்பறம் இப்போ என் பேண்ட்டுல பின்னாடி இருக்குற கறைய நீங்க பாக்கணும்'

Iniyan
14-04-2005, 12:14 PM
AT&T தொலைபேசிக் கம்பெனி பிரசிடெண்ட் ஜான் வால்டர் 9 மாதங்களுக்கு பின் பதவி நீக்கம் செய்யப்பட்டார். பதவி நீக்கத்திற்காக AT&T தரப்பில் சொல்லப்பட்ட காரணம் - தலைமைப் பதவிக்கு தேவையான கூரறிவு அவருக்கு இல்லை.

பதவியை விட்டு அவர் செல்லும் போது அவருக்கு வழங்கப்பட்ட மொத்த ஓய்வூதிய தொகை $26 மில்லியன்.

எனக்கென்னமோ கூரறிவு இல்லாதது வால்டருக்கு அல்ல என்றே தோணுகிறது....

Iniyan
14-04-2005, 12:17 PM
ஒரு கொள்ளைச் சம்பவத்தில் கொள்ளையனை அடையாளம் காண ஒரு அடையாள அணிவகுப்பு நடந்து கொண்டிருந்தது.

கொள்ளையன் சம்பவத்தின் போது முக மூடி போட்டிருந்ததால் குரலை வைத்து அடையாளம் காணும் முயற்சியில், சந்தேகத்திற்குறிய அனைவரையும் வரிசையாக நிற்க வைத்து 'எல்லா பணத்தையும் கொடுத்துடுங்க. இல்லேன்னா சுட்டுருவேன்' என்று சொல்லும்படி காவல் துறை கேட்டது. அப்போது வரிசையிலிருந்த ஒருவன் 'நான் ஒண்ணும் அப்படி சொல்லலியே...' என்று ரொம்ப கோபமாய் கத்தினான்.............!!!!!!!!!!!!!!!!

Iniyan
14-04-2005, 12:18 PM
தொலைபேசியில் ரொம்ப ரொம்ப அவசரமாக அம்மாஞ்சி டாக்டரை கூப்பிட்டு பதற்றத்துடன் 'டாக்டர் என் பொண்டாட்டி பிரசவ வேதனைல துடிச்சுகிட்டு இருக்கா. நீங்க உடனே வர முடியுமா?' என்றார். டாக்டர் பதற்றத்தில் இருக்கும் கணவனை சமாதானப்படுத்தும் எண்ணத்தில் 'இது அவளோட முதல் குழந்தையா?' என்றார். அதற்கு நம்மாளின் பதில் 'இல்ல டாக்டர். நான் அவளோட புருஷன்'. என்றார்

Iniyan
14-04-2005, 12:40 PM
அம்மாஞ்சி புத்தம் புதிதாக ஒரு விசைப்படகு வாங்கினார். ஒரு சனிக்கிழமை படகை பக்கத்திலிருக்கும் ஒரு பெரிய ஏரியில் சென்று ஓட்டி மகிழலாம் என்று தன் காரின் பின்னால் படகை கட்டி இழுத்து செல்லும் வசதியுள்ள சக்கரம் வைத்த இழுவை படகிலேயே இருந்ததால் படகை காருடன் இணைத்து ஏரிக்கு சென்றார்.

ஏரியில் அந்த புத்தம் புது விசைப்படகு நகர்வதாகவே தெரியவில்லை. முழு விசை கொடுத்தாலும், இஞ்சின் பெரிதாய் உருமியபடி மெல்ல மெல்ல அசைந்ததே தவிர வேகமாய் போகும் வழியை காணோம். அப்படி இப்படி என்று படாதபாடு பட்டு பக்கத்திலிருக்கும் ஒரு படகுத் துறையிலிருக்கும் ஒரு படகு செப்பனிடுபவனிடம் படகை ஏரியிலேயே இழுத்து போனார் அம்மாஞ்சி. மெக்கானிக் நன்றாக படகை பார்த்தான். ஏதும் பிரச்சனை இருப்பது போலவே தெரியவில்லை. எல்லாம் செவ்வனே இருந்தது. என்ன இது ஏன் படகு போகவே மாட்டேன் என்கிறாது என வியந்தபடி தண்ணீரில் குதித்து படகின் அடிப்புறத்தை பார்க்கப் போன மெக்கானிக் ரொம்ப விரைவாய் மேலே வந்தான் அடக்கமுடியாத சிரிப்போடும், தண்ணீருக்குள் சிரித்து அதனால் வாய் மூக்கிலெல்ல்லாம் தண்ணீர் புரை ஏறி இருமியபடியும்.

ஒரு வழியாய் அவன் சிரித்து ஓய்ந்த பின் சொன்னது 'சார், உங்க கார் இன்னும் படகோட இணைச்சே இருக்கு சார். ஆனா இப்போ கார் தண்ணிக்குள்ள.....

Iniyan
14-04-2005, 12:41 PM
அம்மாஞ்சி சொர்க்க வாசலில் நின்று கொண்டிருந்தார். சித்ர குப்தர் அவரிடம் தங்கள் வாழ்நாளில் தாங்கள் செய்த ஏதேனும் ஒரு நல்ல விசயத்தை சொல்லுங்கள் என்றார்.

சரி என்று அம்மாஞ்சி சொல்ல ஆரம்பித்தார். ஒரு முறை நான் பீகார் போய் இருந்த போது மாலை நேரம். மெல்லிய இருட்டு பரவிக் கொண்டு இருந்தது. நான் வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அங்கே ஒரு ஆளரவமில்லா சாலையில் ஒரு இளம் பெண்ணை நான்கைந்து முரடர்கள் பலாத்காரம் செய்து கொண்டிருந்தார்கள். அந்தப் பெண்ணோ காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் எனக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாள். நான் உதவும் நோக்கத்துடன் அருகில் சென்று அந்தப் பெண்ணை விட்டு விடுமாறு முரடர்களை வேண்டினேன். ஆனால் அவர்கள் யாரும் கேட்பதாய் தெரியவில்லை. எங்கிருந்து தான் எனக்கந்த வீரம் வந்ததோ தெரியாது. சட்டென அந்த முரட்டுக் கூட்டத்திடம் சென்று அவர்கள் தலைவன் போல் இருந்தனைப் பார்த்து விட்டேன் ஒரு குத்து அவன் முகத்தில். அவன் மூக்கு உடைந்து ரத்தம் வழிய நின்றான். இப்போது நான் மரியாதையாக அந்தப் பெண்ணை விட்டு விடுங்கள். இல்லையேல்....என்று மிரட்டினேன்.

சித்ர குப்தனுக்கோ ஆச்சர்யம். பார்க்க சாதுவாக இருக்கும் நீரா அப்படி செய்தது? ஆனால் தங்களின் இந்த வீர சாகசம் பற்றி என் ஏட்டில் ஒன்றும் இல்லையே? எப்போது நடந்தது இந்தச சம்பவம்? என்று கேட்டார்.

'இப்போ தான் ஒரு நிமிசம் முன்னாடி...' என்றார் அம்மாஞ்சி....

Iniyan
14-04-2005, 12:41 PM
அம்மாஞ்சி வெகு நாட்கள் கழித்து தன் சொந்த ஊருக்குப் போனார். போன இடத்தில் அவருக்கு தாங்க முடியாத பல்வலி. சரியென டெலிபோன் டைரக்டரி எடுத்து பல் டாக்டர் பெயர் தேடிய போது கோமதி என்னும் பெயரை பார்த்தார். முகவரியும் அவர் வீட்டுக்குப் பக்கத்து தெருவில். சின்ன வயதில் அவருடன் ஹைஸ்கூலில் படித்த கோமதி என்னும் அழகான பெண் அவருக்கு ஞாபகம் வந்தாள். அவள் தான் இப்போது பல் மருத்துவராய் இருக்க வேண்டும் எனக் கருதி அந்த பெண்ணை வெகு நாட்கள் கழித்து தான் சந்திக்கப் போகும் முதல் சந்திப்பிலேயே அசத்த வேண்டும் எனக் கருதி சும்மா பந்தாவாய் ஜீன்ஸ் அணிந்து கூலிங் கிளாஸ் எல்லாம் போட்டுக் கொண்டு ஒரு எதிர் பாராத ஆச்சர்யமாய் இருக்கட்டும் என்று போனிலேயே அப்பாய்ண்மெண்ட் எல்லாம் வாங்கிக் கொண்டு போனார்.

ஆனால் என்ன ஒரு ஏமாற்றம். அந்த அழகு பதுமையான கோமதி எங்கே? இங்கே குண்டாக, தடிக் கண்ணாடி போட்டுக் கொண்டு இருக்கும் இந்த பல் டாக்டர் கோமதி எங்கே? ஏமாற்றம் தாளவில்லை அம்மாஞ்சிக்கு. ஆனாலும் அவருக்கு ஆவல் தாங்கவில்லை. பரிசோதனை எல்லாம் முடிந்த பிறகு மெல்ல பேச்சுக் கொடுத்தார்.

'நீங்க உள்ளூரு தானா?'

'ஆமா'

'இங்க தான் படிச்சீங்களா?'

'ஆமா. ஏன் கேக்குறீங்க?'

எந்த வருசம் ஹைஸ்கூல் முடிச்சீங்க?'

'85ல'

'அட. அப்படியா? அப்ப நீங்க என் கிளாஸ்ல தான் இருந்திருக்கீங்க. என்ன ஞாபகம் இருக்கா?'

'சாரி சார் மன்னிக்கனும். ஞாபகம் இல்ல. என்ன பாடம் நடத்துனீங்க???'

Iniyan
14-04-2005, 12:42 PM
அம்மாஞ்சியும் அவர் மனைவியும் தியேட்டருக்கு படம் பார்க்கப் போனார்கள். இடைவேளையில் எழுந்து வெளியே வந்து டீ குடித்து விட்டு வரும் முன்னே விளக்கெல்லாம் அணைத்து படம் போட்டு விட உள்ளே வந்த அம்மாஞ்சி அந்த வரிசையின் கடைசியில் உட்கார்ந்திருந்தவரிடம் குனிந்து 'சார், நான் வெளியே போகும் போது உங்க கால மிதிச்சுட்டனா?' என்று கேட்டார். அவனும் கோபமாய் 'ஆமாப்பா ஆமா' என்றான். 'அப்ப சரி இது தான் நாம உக்காந்திருந்த வரிசை. சரிதான்' என்றார் அம்மாஞ்சி தன் மனைவியிடம்.

Iniyan
14-04-2005, 04:58 PM
அம்மாஞ்சியும் அவர் நண்பரும் ஒரு நாள் வங்கியில் வரிசையில் நின்று கொண்டுருந்தார்கள். அப்போது வங்கிக்குள் நுழைந்த கொள்ளையர்கள் எல்லோரையும் மிரட்டி காசாளரிடம் இருந்த பணத்தை எல்லாம் கொள்ளையடித்ததோடில்லாமல், அங்கிருந்த அனைவரின் பையில் இருக்கும் பணத்தையும் தாங்கள் கொண்டு வந்திருந்த சாக்குப் பையில் போடச்ச் சொல்ல அம்மாஞ்சி அவரது நண்பரை பார்த்தபடி 'இந்தாப்பா ராமசாமி, நான் உன்கிட்ட போன மாசம் கடன் வாங்கின 2000 ரூபாய். மறக்காம கொடுத்துட்டதா கணக்கு வச்சிக்கோ' என்றபடி தன் பையில் இருந்த பணத்தை எடுத்து கொள்ளையனின் சாக்கில் போட்டார்.

Iniyan
14-04-2005, 04:59 PM
கடைத்தெருவில் ஒரு பெண் தனது பர்ஸை தொலைத்து விட்டு தேடிக் கொண்டிருந்தாள். நம்ம அம்மாஞ்சி பர்ஸை அந்தப் பெண்னிடம் கொண்டு வந்து கொடுத்தார். நன்றி சொன்ன அந்தப் பெண்மணி தன் பர்சை திறந்து பார்த்து விட்டு ஆச்சர்யமாய்ச் சொன்னாள். 'அட என்ன ஆச்சர்யம். என் பர்ஸ் காணாம போனப்போ உள்ளே ஒரே ஒரு 500 ரூபா நோட்டு தான் இருந்துச்சி. ஆனா இப்போ பாத்தா அஞ்சு 100 ரூபாய் நோட்டு இருக்கே?' என்றாள். 'பரவால்லம்மா. போன தடவ நான் இப்படி ஒரு காணாம போன பர்சை கண்டு பிடிச்சு கொடுத்தப்ப நன்றி சொல்லி எனக்கு தர சில்லறை இல்லேன்னுடிச்சி ஒரு அம்மா. அதான்...' என்றார் அம்மாஞ்சி.

Iniyan
14-04-2005, 05:00 PM
அம்மாஞ்சி தன் கொல்லைப் பக்கமாய் ஒரு குழி தோண்டி கொண்டிருந்தார். அந்த பக்கம் போன பக்கத்து வீட்டுக்காரர் எட்டி பார்த்து 'என்ன சார்? எதுக்கு குழி? எதும் செடி வைக்கப் போறீங்களா?"

'அதெல்லாம் இல்ல. என் மீனு செத்து போச்சி. அதான்'

'அட மீனுக்கு எதுக்கு சார் இவ்ளோ பெரிய குழி?'

''இது எம் மீன தின்னு வயித்துல வச்சிருக்க உங்க பூனைக்கு'

Iniyan
14-04-2005, 05:01 PM
அம்மாஞ்சி ஒரு சின்னக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த ஒருவர் ஒரு சிகரெட் பாக்கெட் வாங்கி அங்கேயே சிகரெட் பத்த வைத்தார்.

அம்மாஞ்சி அவரிடம் 'சாரி சார். இங்கே புகை பிடிக்கக் கூடாது என்றார்'.

'அட இதென்ன அநியாயம். நீங்க தானே உங்க கடைல சிகரெட் விக்கிறீங்க? நீங்களே இங்கே புகை பிடிக்கக் கூடாதுன்னா எப்படி?'

'சார், நாங்க இங்க கடைல ந்ரோத் கூடத்தான் விக்கிறோம்' என்றார் அம்மாஞ்சி அமைதியாக.

Iniyan
14-04-2005, 05:01 PM
அம்மாஞ்சியின் பள்ளியில் இங்கிலீஷ் டீச்சர் ஒரு கேள்வி கேட்டார்.

'அம்மாஞ்சி, I ல் தொடங்குவது போல ஒரு வாசகம் ஆங்கிலத்தில் சொல்லு'

அம்மாஞ்சி ஆரம்பித்தார் : I is

டீச்சர்: தப்பு. தப்பு. தப்பு. எத்தனை தடவை சொல்லி இருக்கேன் கிளாசில. ஆங்கிலத்தில் I am என்று தான் சொல்ல வேண்டும். எங்கே இப்ப சொல்லு பார்க்கலாம்.

அம்மாஞ்சி : I am the ninth letter of the alphabet.

Iniyan
14-04-2005, 05:02 PM
ஒரு புது பஸ் கண்டக்டர் அம்மாஞ்சி வழக்கமாய் ஆபீஸ் போகும் ரூட்டில் வந்தார்.

முதல் நாள்: அம்மாஞ்சி பஸ்ஸில் ஏறினார்.

கண்டக்டர்: 'டிக்கெட், டிக்கெட்....'
அம்மாஞ்சி : நான் டிக்கெட் எடுக்கிற பழக்கம் இல்லை.

கண்டக்டருக்கு கடுப்பான கடுப்பு. ஆனாலும் முதல் நாளே ஏதும் பிரச்சனை வேண்டாம் என விட்டு விட்டார்.

மறு நாளும் இதே கதை. மூன்றாம் நாளும் இதே. அம்மாஞ்சி டிக்கெட் எடுக்கவே இல்லை. அவ்வளாவு தான் . கண்டக்டருக்கு வந்ததே கோபம்.

'ஏன் சார், பார்க்க டீசண்ட்டா இருக்கீங்க. ஆனா டிக்கெட் எடுக்கிற பழக்கம் இல்லேங்கிறீங்க'

அம்மாஞ்சி அமைதியாக 'ஆமாங்க. நான் டிக்கட் எடுக்கிற பழக்கம் இல்ல. ஏன்னா நான் மன்த்லி பாஸ் வச்சிருக்கேன்'.

Iniyan
14-04-2005, 05:03 PM
ஒரு பெரியவர் தெருவில் போய்க் கொண்டிருந்தார். அப்போது 6 அல்லது 7 வயது அம்மாஞ்சி அந்த தெருவில் இருக்கும் ஒரு வீட்டின் அழைப்பு மணியை அமுக்க முயண்ரு கொண்டிருந்தான். ஆனால் பையனோ குட்டை. அழைப்பு மணியின் பட்டனோ அவனுக்கு எட்டாத உயரத்தில். பையன் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் எக்கி எக்கி முயன்று கொண்டிருந்தான். இதை பார்த்துக் கொண்டே இருந்த பெரியவர் அம்மாஞ்சிப் பையனுக்கு உதவி செய்யும் நோக்கில் பயனுக்கு பின்னால் சென்று அன்பாய் அவன் தோளில் கை வைத்து அழைப்பு மணியை நன்றாக ஒரு முறை அமுக்கினார். பின் மண்டியிட்டு அம்மாஞ்சியின் உயரத்திற்கு வந்து

'உனக்காக நான் அழைப்பு மணியை அமுக்கி விட்டேன். இப்போ என்ன?' என்றார்.

'இப்போ வீட்டுக்காரர் கோபமா திட்டிக்கிட்டே வந்து கதவ திறக்கும் முன்னாடி நாம இங்க இருந்து ஓடிடணும். அதான் விளையாட்டு'

Iniyan
14-04-2005, 05:04 PM
நான் என் தாத்தா போல அமைதியாக தூக்கத்திலேயே சாக விரும்புகிறேன்.










என் தாத்தாவின் காரில் இருந்த மற்ற பிரயாணிகள் போல சும்மா கத்தி அலறி பயந்து சாக விரும்பவில்லை.

Iniyan
14-04-2005, 05:05 PM
வயதாக ஆக நம் அம்மாஞ்சிக்கு காது சரியாக கேட்கவில்லை. தொடர்ந்து இரண்டு மூன்று வருடங்களாக இது சம்பந்தமாக ஒரு மருத்துவரை பார்த்து வந்தார் அம்மாஞ்சி. இது வரை மூன்று தடவை ஹியரிங் எய்ட் மாற்றியும் முழுப்பலன் இல்லை. கடைசியாக அம்மாஞ்சி டாக்டரை பார்க்கப் போன போது மேல் நாட்டில் இருந்து புதிதாக வந்திருந்த ஒரு ஹியரிங் எய்டை அம்மாஞ்சிக்கு மாட்டி விட்டு சோதனைகள் செய்து பார்த்த டாக்டருக்கு ஆச்சர்யமோ ஆச்சர்யம். இப்போது அம்மாஞ்சிக்கு முழுதுமாய் காது கேட்கத் தொடங்கி இருந்தது. அம்மாஞ்சியும் மகிழ்ச்சியாய் வீடு திரும்பினார். ஒரு மாதம் கழித்து அம்மாஞ்சி பாலோ அப் சோதனைக்கு வந்த போது டாக்டர் கேட்டார்.

'இப்ப உங்க குடும்பத்தில எல்லோரும் மகிழ்ச்சியா இருப்பாங்களே உங்காளுக்கு காது நல்லா கேக்குதுன்னு?'

'நான் இந்த சேதிய என் குடும்பத்துல யாருக்கும் இன்னும் சொல்லல. கொஞ்ச நாள் நல்லா வேலை பாக்குதான்னு பாத்துட்டு சொல்லலாம்னு வழக்கம் போல இருந்தேன். இதுல ஒரே ஒரு பிரச்சனை என்னான்னா இது வரைக்கும் என் உயில மூணு தடவ மாத்த வேண்டி வந்துருச்சி.'

Iniyan
14-04-2005, 05:05 PM
ஏன் தான் இந்த அமெரிக்கர்கள் பிரெஞ்சுக்காரர்களை பழிக்கிறார்களோ தெரியவில்லை. உண்மையில் பிரஞ்சுக்காரர்கள் தான் அமெரிக்கர்களின் நண்பர்கள்.

இஸ்ரேலியர்கள் யாசர் அராபத்தை கொல்ல 10 வருடங்களுக்கும் மேலாக முயற்சித்தார்கள். முடியவில்லை.

ஜோர்டான் நாட்டினர் அவரைக் கொல்ல 1970களில் முயற்சித்தார்கள். முடியவில்லை.

லெபனான் நாட்டினர் அவரைக் கொல்ல 1980களில் முயற்சித்தார்கள். முடியவில்லை.

இரண்டே வாரங்கள் பாரிசில் அன்பான மருத்துவக் கவனிப்பில் அராபத். நடந்ததென்ன?


ஒசாமா!


ஈபில் டவர் பார்த்திருக்கிறாயா???

Iniyan
14-04-2005, 05:06 PM
அம்மாஞ்சியின் மனைவி: ரொம்ப நாளா உங்க கிட்ட ஒண்னு சொல்லணும்னு.....

அம்மாஞ்சி : என்ன விசயம்? சும்மா சொல்லு.

மனைவி: கல்யாணமாகி இந்த 11 வருசமா நான் பேசுறாதுக்குன்னு வாய திறந்தாலே ஏதாவது குறை கண்டுபிடிச்சு கிட்டே இருக்கீங்க.

அம்மாஞ்சி: 12 வருசமாம்மா....

Iniyan
14-04-2005, 05:07 PM
அம்மாஞ்சிக்கு திடீரென பறவைகளில் ஆர்வம். பலப் பல புத்தகங்கள் படித்து ஒரு தூரத் தொலைநோக்கி ஒன்று வாங்கி வைத்துக் கொண்டு மரம் மரமாய் பார்த்துக் கொண்டு பொழுது கழிக்கத் தொடங்கினார். இப்படி இருக்கும் போது பறவைகளுடன் பழகுவது எப்படி என்ற ஒரு புத்தகத்தில் படித்ததை செய்து பார்க்க விரும்பி ஒரு நாள் இரவு கொல்லைப்பக்கம் போன போது ஆந்தை மாதிரியே இவர் குரல் கொடுத்தார். என்ன ஆச்சர்யம். சற்றே நேரத்தில் பதிலுக்கு ஒரு ஆந்தை குரல் கொடுத்தது. குஷியானார் அம்மாஞ்சி. தினமும் இரவு அதே நேரம் இவர் ஆந்தை குரல் கொடுக்க பதிலுக்கு ஆந்தையும் குரல் கொடுக்கத் தொடங்க அவ்வளவு தான். அம்மாஞ்சி தன்னை ஒரு பறவை விஞ்ஞானி என்றே கருதத் தொடங்கினார். மாறி மாறி ஆந்தைக்குரலில் கிட்டத்தட்ட பேசிக் கொள்ளவே தொடங்கியாகி விட்டது. இப்படியே மூன்று மாதங்கள் போக இப்போது அம்மாஞ்சி தனியாக ஒரு நோட்டுப் போட்டு அன்றைய ஆந்தை அலறல்களை குறித்து வைத்து மொழி பெயர்க்கவும் தொடங்கி விட்டார். ஆறு மாதம் ஆனது. தினமும் இரவில் படுக்கைக்கு செல்லும் முன் அவர் கொல்லைக்கு சென்று ஆந்தையுடன் பேசி (அலறி) திரும்புவது வழக்கமாகி விட்டது.

அம்மாஞ்சியின் மனைவி அந்த வெள்ளிக்கிழமை கோவிலுக்கு போன போது பக்கத்து தெரு மாலதியை சந்தித்தாள். இருவரும் பேசிக் கொண்டார்கள்.

மாலதி: அக்கா, உங்கள பாத்து எவ்ளோ நாளாச்சு? உங்க வீட்டுக்காரர் எப்படி இருக்காரு?

அம்மாஞ்சியின் மனைவி: அவருக்கென்ன நல்லாத் தான் இருக்காரு. கொஞ்ச நாளா பறவைகள் பைத்தியம் பிடிச்சு போய் திரியுறாரு. தெனமும் ராத்திரி ஆனா கொல்லைப்பக்கம் போயி ஆந்தை மாறி கத்துறாரு. இதுல என்னா விசேசம்னா வேற ஏதோ ஆந்தை வேற இவர் கொரலுக்கு பதில் சொல்லுது.

மாலதி: அட அப்படியா? என்ன ஒரு ஒத்தும பாருங்களேன். எம் புருசனுக்கும் தினத்துக்கும் இதே வேலைதான்.

இப்போது ஓரிரு நிமிடங்கள் இருவருமே பேசவில்லை.

Iniyan
14-04-2005, 05:08 PM
தனது போன் ஒழுங்காக ஒலிப்பதில்லை. சில வேளைகளில் போன் ஒலிக்கும் போது அதற்கு கொஞ்சம் முன்னால் தனது நாய் முனகுவதாகவும் அம்மாஞ்சி ஒரு நாள் தொலைபேசி நிலையத்தை அழைத்து கம்ப்ளய்ண்ட் செய்தார்.

அனைவருக்கும் ஆச்சர்யமான ஆச்சர்யம். தொலைபேசி ஒலிக்கப் போவதை முன் கூட்டியே உணரும் நாயை பார்க்கவென லைன் மேன், என்ஜினியர் இருவரும் அம்மாஞ்சி வீட்டுக்கு வந்தனர். லைன்மேன் அம்மாஞ்சி வீட்டு பக்கம் இருக்கும் கம்பத்தில் ஏறி அவரது சோதனை தொலைபேசியை அம்மாஞ்சியின் வீட்டு லைனில் இணைத்து ஒரு போன் செய்தார். முதலில் போன் ஒலிக்கவில்லை. கொஞ்ச நேரத்தில் அம்மாஞ்சியின் நாய் முக்கி முனகியது. உடனே போன் அடிக்கத் தொடங்கியது.

இப்போது லைன் மேனும் என்ஜினியரும் என்ன பிரச்சனை எனப் பார்க்கத் தொடங்கினர். அவர்கள் கண்டறிந்தது இது தான்.

1. அம்மாஞ்சியின் நாய் தொலிபேசியின் எர்த் கம்பியுடன் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது.

2. அந்த எர்த் கனக்சன் வயர் சரியாக இல்லாமல் லூசாக இருந்தது.

3. அம்மாஞ்சி வீட்டு தொலைபேசியை யாரேனும் கூப்பிடுகையில், தொலைபேசியை ஒலிக்கச் செய்யும் 90 வோல்ட் கரண்ட் எர்த் வயர் வழியாக லீக் ஆகி நாயின் சங்கிலியில் பாய்ந்து நாய்க்கு மெல்லிய ஷாக் கொடுக்கிறது.

4. இரண்டொரு தரம் இப்படி ஷாக்காகும் நாய் மெல்ல முக்கி முனகுகிறது. பின் அந்த ஷாக்கில் ஒண்ணுக்குப் போகிறது.

5. இப்போது நாயின் ஒண்ணுக்கால் ஈரமான தரை வழியாக எர்த் கனக்சன் முழுமையடைந்து போன் ஒலிக்கிறது.

இது எப்படி இருக்கு???

Iniyan
14-04-2005, 05:09 PM
எனது இனிய இல்லற வாழ்வின் ரகசியங்கள். - அம்மாஞ்சி.

1. வாரம் ஒரு முறை நாங்கள் பணச்செலவு பற்றி கவலைப்படாமல் வெளியில் சென்று நல்ல உயர்தர உணவு விடுதியில் உண்போம். அவள் வெள்ளிக் கிழமை போவாள். நான் சனிக்கிழமை போவேன்.

2. நாங்கள் இருவரும் தனித்தனியே தான் படுப்போம். நான் எனது ஆபீஸ் கெஸ்ட் ஹவுசில் அவள் வீட்டில்.

3. நான் பல இடங்களுக்கும் என் மனைவியை அழைத்துச் செல்வேன். ஆனால் அவள் எப்படியோ பாதை கண்டுபிடித்து வீட்டிற்கு திரும்ப வந்து விடுகிறாள்.

4. நாங்கள் வெளியே போகும் போது எப்போதும் நான் அவள் கையை பிடித்த வண்ணம் இருப்பேன். நான் அவள் கையை விட்டால் உடனே புடவைக்கடைக்கு புடவை வாங்கப் போய் விடுவாள்.

Iniyan
14-04-2005, 05:12 PM
2005 ஆம் ஆண்டுக்கான அமெரிக்காவின் ஸ்டெல்லா விருதுகள்

அறிவிப்பாளர் - அம்மாஞ்சி

முதலில் ஸ்டெல்லா விருதுகளின் துவக்கம் குறித்து ஒரு பார்வை.

அமெரிக்காவை சேர்ந்த ஸ்டெல்லா லீபெக் என்னும் 81 வயதுப் பெண்மணி சில ஆண்டுகளுக்கு முன் சூடான காபியைத் தன் மீது தவறுதலாகக் கொட்டிக் கொண்டு காபியை சூடாகத் தந்ததற்காக உலகப் புகழ் பெற்ற மெக் டொனால்சின் மீது வழக்குத் தொடர்ந்து வென்றவர். இவரைத் தொடர்ந்து இவரின் சாதனையை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் இப்படி விசித்திர வழக்குகளுக்கான ஸ்டெல்லா விருது வழங்கப்பட்டு வருகிறது.



இனி இந்த ஆண்டிற்கான போட்டியாளர்களைப் பார்ப்போமா???

Iniyan
14-04-2005, 05:14 PM
இந்த ஆண்டு ஐந்தாம் இடத்தில் இருக்கும் வழக்கு.

கேத்லீன் ராபர்ட்சன் என்ற ஆஸ்டின், டெக்சசை சேர்ந்த பெண்மணி ஒரு விசித்திர வழக்கில் அதே ஊரைச் சேர்ந்த ஒரு பர்னிச்சர் கடையை எதிர்த்த வழக்கு ஒன்றில் $80,000 வென்றார்.

அந்த வழக்கின் விபரம் :

அந்தக் கடையில் இருக்கும் போது, கடையினுள் ஓடித் திரிந்த ஒரு சிறுவனால் தடுக்கி விழுந்து கேத்லீனின் கால் ஒடிந்து விட்டது. இந்த விபத்துக்கு கடை நிர்வாகமே பொறுப்பென்று கேத்லீன் வழக்குத் தொடர்ந்து வென்றும் விட்டார்.

இது என்ன விசித்திர வழக்கு என்பவர்களுக்கான விடை இதோ:

Iniyan
14-04-2005, 05:15 PM
கடையினுள் ஓடித் திரிந்த சிறுவன் வேறு யாருமல்ல - கேத்லீனின் 5 வயது மகன் தான்.

Iniyan
14-04-2005, 05:15 PM
நான்காம் இடத்தில் இருக்கும் வழக்கு

லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த 19 வயது கார்ல் ட்ருமன் தனது பக்கத்து வீட்டுகாரருக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து மருத்துவச் செலவுகளுக்காக $74,000 வென்றார்.

இந்த வழக்கின் விபரம் இதோ.

கார்லின் கைகளின் மேல் பக்கத்து வீட்டுகாரர் கார் ஏற்றியதாக வழக்கு. இதனால் கார்லின் கைகள் சேதமடைந்து அந்த மருத்துவச் செலவினை கார் ஓட்டிய பக்க்த்து வீட்டுக்காரர் ஏற்க வேண்டுமென வழக்கு.

கார்லின் கைகள் பக்கத்து வீட்டுக்காரரின் கார்ச் சக்கரத்தின் அடியில் போனது எப்படி?

Iniyan
14-04-2005, 05:16 PM
அந்த இரவில் கார்ல் பக்கத்து வீட்டுகாரரின் கார் சக்கரத்தை திருடி விற்பதற்காக கழட்ட முயற்சித்துக் கொண்டிருந்த போது கார்ல் அங்கே சக்கரத்தின் அருகில் வேலை பார்த்துக் கொண்டிருப்பதை அறியாமல் காரின் சொந்தக்காரர் காரினை ஆன் செய்து ரிவர்ஸ் எடுத்து விட.....


பாவம் கார்லின் கைகள் நசுங்கி விட்டன.

Iniyan
14-04-2005, 05:17 PM
மூன்றாம் இடத்தில் இருக்கும் வழக்கு

பிரிஸ்டல், பென்சில்வேனியாவைச் சேர்ந்த டெரன்ஸ் டிக்சன் ஒரு வீட்டினை விட்டு வெளியேற கார் கெராஜ் வழியாக வெளியேற முயற்சித்த போது கார் கெராஜ் கதவு ஏதோ மெக்கானிக்கல் பிரச்சனையால் திறக்கவில்லை. இப்போது கெராஜில் இருந்து வீட்டிற்குள் செல்லும் கதவும் தானியங்கிப் பூட்டால் பூட்டி விட, இப்படி பிரச்சனை உள்ள கார் கெராஜ் கதவினைக் கொண்டு விடுமுறையில் வெளியூர்

சென்றிருந்த வீட்டுச் சொந்தக்காரர் 10 நாட்கள் கழித்து வரும் வரை பரிதாபமாக உள்ளே மாட்டிக் கொண்ட டெரன்ஸ் அந்த பத்து நாட்களும் கார் கெராஜில் இருந்த காய்ந்த நாய் பிஸ்கட்டையும், அங்கிருந்த பெப்சியையும் மட்டும் குடித்து உயிர் வாழ்ந்த பரிதாபத்திற்கு அமெரிக்க நீதி மன்றம் வீட்டுச் சொந்த்க்காரரை டெரன்சுக்கு வழங்க உத்தரவிட்ட தொகை.

$500,000

ஆமாம் அடுத்தவர் வீட்டு கெராஜில் டெரன்சுக்கு என்ன வேலை???

Iniyan
14-04-2005, 05:17 PM
டெரன்ஸ் அந்த வீட்டுக்கு சென்றாது அந்த வீட்டினைக் கொள்ளை அடிக்க.....

Iniyan
14-04-2005, 05:18 PM
இரண்டாம் இடத்தில் இருக்கும் வழக்கு.

பிலடெல்பியாவில் இருக்கும் உணவகம் ஒன்றினை ஆம்பர் கார்சன் என்னும் லேன்காஸ்டர், பென்சில்வேனியாவைச் சேர்ந்த பெண்ணிற்கு $113,000 வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உணவகத்தின் தவறு - உணவகத்தினுள்ளே தரையில் கொட்டிக் கிடந்த கோக் குளிர் பானத்தை உடனே சுத்தம் செய்யாதது. இதனால் வழுக்கி விழுந்து இடுப்பெலும்பு ஒடிந்த ஆம்பருக்கு ஆதரவாய் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தான் இது.

வழக்கின் விசித்திரம்......

Iniyan
14-04-2005, 05:19 PM
மிஸ்.ஆம்பர் அதே உணவகத்தில் அதே மேசையில் எதிர் நாற்காலியில் அமர்ந்திருந்த அவரது பாய் பிரண்டுடனான சண்டையில் பாய் பிரண்டின் முகத்தில் 1 நிமிடத்துக்கு முன் எடுத்துக் கொட்டியதே தரையில் சிந்தி இருந்த கோக்.

Iniyan
14-04-2005, 05:20 PM
முதலிடம் -

மிஸஸ். மெர்வ் கிரசின்ஸ்கி, ஒக்லஹாமா சிட்டி, ஒக்லஹாமா. இவருக்கு ஆதரவாக $1,750,000 வழங்கச் சொல்லி ஒரு மொபல் ஹோம் தயாரிப்பு கம்பனியை உத்தரவிட்டது நீதிமன்றம்.

(முதலில் மொபைல் ஹோம் பற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் - நம்மூரு வேன் போல தான் இதுவும். ஆனால் டிரைவர் சீட்டின் பின்புறம் இருக்கும் கதவைத் திறந்து கொண்டு பின்னால் உள்ள பகுதிக்குச் சென்றால் சின்னதாக ஒரு கிச்சன், படுக்கை, பாத்ரூம் என அனைத்து வசதியும் நிரம்பிய சின்ன வீடு. நம்மூரில் அம்மா செயலலிதா தேர்தல் பிரச்சாரத்திற்காக இப்படி ஒரு வண்டி வைத்திருப்பதாய்க் கேள்வி.)

அடுத்து வழக்கின் முழு விவரம்:

புத்தம் புதிதாக ஒரு மொபல் ஹோம் வாங்கிய மிஸஸ். மெர்வ் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் போது குரூஸ் கண்ட்ரோலை மணிக்கு 70 மைல் வேகத்தில் செட் செய்து விட்டு பின்னால் இருக்கும் கிச்சனுக்கு ஆம்லேட் போட சென்று விட தேசிய நெடுஞ்சாலையில் இருந்து விலகி ஓடிய வண்டி ஒரு மரத்தில் மோதி விபத்துக்குள்ளாகி ஏற்பட்ட நஷ்டத்திற்காகத் தான் இந்த நஷ்ட ஈடு.

[குரூஸ் கண்ட்ரோல் பற்றி தெரியாதவர்களுக்கு மட்டும் - மோட்டார் வாகனங்களை ஒரே சீரான வேகத்தில் செல்ல பணிக்கும் எலக்ட்ரானிக் சாதனம். இதை ஆன் செய்து விட்டால் ஆக்ஸிலரேட்டர் அழுத்த தேவையில்லை. ஸ்டியரிங் மட்டும் பிடித்து ஓட்டினால் போதும்]

ஆமாம். இதில் மிஸஸ். மெர்வ் அவர்களின் முட்டாள்தனத்திற்கு மொபல் ஹோம் தயாரிப்பாளர் என்ன செய்ய முடியும் என்று கேட்பவர்களுக்கான நீதி மன்றத்தின் விளக்கம் இதோ.

Iniyan
14-04-2005, 05:21 PM
மொபைல் ஹோம் தயாரிப்பாளரின் தவறு : வாகன ஓட்டினர் கையேட்டில் குரூஸ் கண்ட்ரோல் செட் செய்தாலும் டிரைவர் சீட்டில் உட்கார்ந்து ஸ்டியரிங்கை பிடித்து வாகனத்தைச் செலுத்த வேண்டும் என்பதைத் தெளிவாக தெரிவிக்காதது.

Iniyan
14-04-2005, 05:23 PM
அம்மாஞ்சி கார் மெக்கானிக்கிடம் சென்றார்.

'என் காரில் ஒரு பிரச்சனை. நானாக கார் ஒட்டும் போதெல்லாம் ஒரு பிரச்ச்னையும் இல்லை. ஆனால் என் காரில் யாரேனும் நான் ஓட்டும் போது என்னுடன் வந்தால் மட்டும் கொஞ்ச நேரத்தில் ரொம்ப கெட்ட வாடை அடிக்கிறது. ஏன் என்று கண்டறிய முடியுமா?'

இத்தனை வருச சர்வீசில் இது வரை பார்க்காத ஒரு புது பிரச்சனையைக் கண்டு மலைத்து நின்ற மெக்கானிக் அம்மாஞ்சியிடம் சொன்னார்.

'சார். என் சர்வீசுல இது மாதிரி கார் பிரச்சனை பார்த்ததே இல்லை சார். சர் வாங்க. உங்க கார்ல நான் உட்காந்து வர்றேன் .அந்த வாடை அடிக்குதான்னு பாக்கலாம்'.

மெக்கானிக் பேசஞ்சர் சீட்டில் இருக்க அம்மாஞ்சி காரை ஓட்டினார்.

முதலில் அதீத வேகத்தில் ஒரு வழிப்பாதையில் தவறாகச் சென்றார். பின் ரோட்டோரத்தில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று குழந்தைகள் மேல் காரை ஏற்றப் போய் தெய்வாதீனமாய் கடைசி நிமிடத்தில் காரை நிறுத்தினார். மேலும் 4 அல்லது 5 சிவப்பு விளக்குகளில் காரை நிற்காமல் பறந்து ரோட்டில் நின்று கொண்டிருந்த போலீஸ் கான்ஸ்டபிளை உரசிய வண்ணம் காரை திருப்பி மெக்கானிக் செட்டுக்கு வந்து நிறுத்திய அம்மாஞ்சி கேட்டார்.

'பாத்தீங்களா...எப்படி நாறுதுன்னு? இதத் தான் சொன்னேன். தெரியுதா?'

'என்னாது தெரியுதாவா? நா அதுல தான் சார் உக்காந்திருக்கேன்' என்றார் மெக்கானிக்.

Iniyan
14-04-2005, 05:28 PM
அம்மாஞ்சி ஒரு பெரிய ஆர்ட் மியூசியத்தை பார்த்துக் கொண்டிருந்தார். அந்த மியூசியத்தின் ஒரு பெரும் பகுதிக்கு ஹீசேன் காலரி எனப் பெயரிப்பட்டு அதில் முழுக்க முழுக்க பல்வேறு சிறந்த புத்தகப் பொக்கிஷங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

அதிமேதாவியான அம்மாஞ்சிக்கு ஒரே ஆச்சர்யம். அங்கிருந்த மியூசியப் பணியாளரைப் பார்த்து

அம்மாஞ்சி: 'இந்த பகுதியை ஹீசேன் கேலரி எனப் பெயரிட்டு ஆனால் புத்தகங்களாய் அடுக்கி வைத்துள்ளீர்களே? எனக்குத் தெரிந்து நம்மூர் தலை சிறந்த ஓவியரான ஹீசேன் ஏதும் புத்தகங்கள் எழுதியதாகத் தெரியாதே? அபப்டி இருக்க அவர் பெயரில் எதற்கு இங்கே புத்தகங்கள்? ஓவியங்கள் அல்லவா இருக்க வேண்டும்?' எனக் கேட்டார்.

மியூசியப் பணியாளர்: 'இல்லை சார். இது லெப்பைக்குடிக் காடு அப்துல் ஹீசேன் என்பவர் நினைவாகக் கட்டப்பட்ட கேலரி' என்றார்.

அம்மாஞ்சி: 'அட அப்படியா? லெப்பைக்குடிக் காடு அப்துல் ஹீசேன் பெரிய எழுத்தாளரா? நிறைய எழுதியுள்ளாரா? இது வரை நான் அவரின் புத்தகம் ஒன்று கூடப் படித்ததில்லையே? கடைசியாக அவர் எழுதியது என்ன? ' என ஆர்வம் பொங்கக் கேட்டார்.

மியூசியப் பணியாளர் : 'அவர் எழுதியதெல்லாம் இந்த மியூசியத்திற்கு அன்பளிப்பாய் பெரிய தொகைக்கு செக் ஒன்று தான்'

Iniyan
14-04-2005, 05:29 PM
அம்மாஞ்சி ஒரு நாள் தனியாக கடற்கரையோரம் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது அவர் காலில் ஒரு பழைய பாசி படிந்த பாட்டில் ஒன்று இடறியது. ஆர்வக் கோளாரில் அதை எடுத்து அவர் என்னதான் இருக்கிறது என தேய்த்து சுத்தப் படுத்திய போது திடீரென புகை மண்டலம் எழுந்து அதன் நடுவில் ஒரு பூதம் தோன்றியது.

ஆச்சர்யப்பட்டுப் போன அம்மாஞ்சியைப் பார்த்த பூதம் 'என்னை வெளியில் கொணர்ந்த நன்றிக் கடனுக்காக நான் உனக்கு ஒரே ஒரு வரம் அளிக்க முடியும். என்ன வேண்டுமோ நல்லதாகக் கேள்' என்றது. ஒரு வினாடி யோசித்த அம்மாஞ்சி டக்கென தன் கையில் இருந்த புத்தகத்தைப் பிரித்து அதில் இருந்த உலக வரை படம் ஒன்றை பூதத்திடம் காட்டி, 'இதோ இங்கே பார் இந்த மத்தியக் இழக்கில் எப்ப பார்த்தாலும் சண்டை. பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலுக்கும். மதத்தீவிரவாதிகள் பிரச்சனை, பெட்ரோலுக்காய் அமெரிக்காவின் போர்கள். சீரழிந்து கொண்டிருக்கும் அந்தப் பகுதியில் நிலையான அமைதி ஏற்படுத்து.' என்றார்.

பூதம் இப்போது குழம்பிப் போனது. 'மானிடா. என்ன இது? கேட்பதைக் கொஞ்சம் நியாயமாகக் கேள். இந்த நாடுகள் பல நூற்றாண்டுகளாய்ப் போரிட்டு வருகின்றன. அழிவும் சேதமும் தவிர்க்க இயலாததாகி விட்டது. இதை சரி செய்ய பூதகணங்களுக்கெல்லாம் தலைவரான சிவனாலே முடியாது. அப்படி இருக்க குருவி தலையில் பனங்காய் வைப்பது போல இதை என்னிடம் கேட்கலாமா நீ? தயவு செய்து வேறு ஏதாவது கேள்'.

அம்மாஞ்சி யோசித்தார். உலக நலனுக்காக முயற்சித்துத் தோற்றாகி விட்டது. சரி, இனி நம் குடும்ப நலன் கருதுவோம் என்றெண்ணி 'சரி அப்படியாயின் எனக்கு டீவி சீரியல் பார்க்காத, என் அம்மா அப்பா (அதாவது அவளின் மாமனார், மாமியார்)வை அனுசரித்து அன்பாய்ப் போகும்படி, கனிவாய், இனிமையாய், கணவனே கண் கண்ட தெய்வம் என்று கருதும் படித்த வேலைக்குப் போகும் பெண்ணை எனக்கு மனைவியாக்கு'. என்று கல்யாண மாலை மோகனைக் கேட்பது போல கேட்டார்.

பெருமூச்சு ஒன்று விட்ட பூதம் சலிப்பாய் சொன்னது 'எங்கே அந்த வரைபடத்த காட்டு. பாப்போம்'.

Iniyan
14-04-2005, 05:29 PM
அமெரிக்காவில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளில் பெரும்பாலானோர் காலாவதியான விசாக்களுடன் அந்த நாட்டில் பத்து ஏன் சிலர் பதினைந்து வருடம் வரை தங்கி இருந்திருக்கிறார்கள்.

அதே அமெரிக்காவில் இருக்கும் வீடியோ வாடகைக்கு விடும் கடையான பிளாக் பஸ்டர் என்னும் கடையில் வாடகைக்கு எடுத்த வீடியோவைத் திருப்பித் தர ஓரிரு நாட்கள் தாமதமானால் போதும். உடனே நம்மைத் தேடிக் கண்டு பிடித்து போன் பண்ணி தாமதத்திற்காக தனிக்கட்டணம் வசூலித்து ஜமாய்த்து விடுவார்கள்.

பிளாக்பஸ்டரை ஏன் அமரிக்க இமிகிரேசனுக்குப் பொறுப்பாக்கக் கூடாது??

Iniyan
14-04-2005, 05:30 PM
பார்த்துக் கொண்டே இருங்கள். ஒரு நாள் இந்த உடற்பயிற்சி செய்வபர்கள், டயட்டில் இருப்பவர்கள் எல்லாம் முட்டாள்களைப் போல உணரப் போகிறார்கள்....


எங்கோ ஒரு மருத்துவமனையின் கட்டிலில் எந்த உடல் நலக் குறைவும் இல்லாமல் தங்களின் இறுதி மூச்சை விட்டபடி.......

Iniyan
14-04-2005, 05:31 PM
அரசியல் தான் உலகின் இரண்டாவது பழைய தொழில். ஆனால் கொஞ்ச காலமாக எனக்கென்னமோ இதற்கும் முதல் பழைய தொழிலுக்கும் ரொம்பவே ஒற்றுமைகள் இருப்பதாய்த் தோன்றுகிறது.

Iniyan
14-04-2005, 05:31 PM
தன் அலுவலகத்தில் நடந்த ஒரு விருந்திற்கப்புறம் முழு போதையில் அம்மாஞ்சி ஒரு நள்ளிரவில் வீடு திரும்பினார். அம்மாஞ்சி பொதுவாக அவ்வளவு குடிப்பதில்லை. ஆனால் அன்று நண்பர்களுடன் சேர்ந்து அந்த பைவ் ஸ்டார் ஹோட்டல் பாரில் ஏதேதோ புது விதமான காக்டெயில்கள் குடிக்கத் தொடங்கி ஒவ்வொரு கிளாசும் டேஸ்ட்டாக ஏதோ பழ ரசம் குடிப்பது போல இருக்கவே கொஞ்சம் ஓவராகி விட்டது. அம்மாஞ்சி கண் விழித்த போது அவருக்குத் தான் எப்படி வீடு திரும்பினோம் என்பது கூட நினைவில்லை. அவரது கட்டிலின் பக்கத்தில் இருந்த சின்ன மேசையில் ரெண்டு தலைவலி மாத்திரைகளும், ஒரு கிளாஸ் தண்ணீரும் அதற்குப் பக்கத்தில் ஒரே ஒரு ரோஜாப்பூவும் இருக்கக் கண்டார். அதை அடுத்து அவர் இன்று போட்டுக் கொள்ள வேண்டிய உடைகள் எல்லாம் அயர்ன் செய்து மடித்து தயாராக எடுத்து வைக்கப்பட்டிருந்தன. படுக்கை அறை வழக்கத்துக்கு மாறாக ரொம்ப சுத்தமாய் இருந்தது. மெல்ல எழுந்து வெளியே வந்து பார்த்தார். வீடு முழுதுமே சுத்தமாக இருந்தது. பாத்ரூமில் அவரது பிரசில் பேஸ்ட் வைத்து தயாரா. வென்னீர் இதமான சூட்டில் விளாவி வைக்கப்பட்டு. பாத்ரூம் கண்ணாடியில் சின்னதாக ஒரு பேப்பரில் அவரது மனைவியின் கையெழுத்தில் அவருக்கு ஒரு செய்தி.

'அன்பானவருக்கு, நான் கோவிலுக்குச் செல்கிறேன். குளித்து முடித்து வந்து டைனிங் டேபிளில் உங்களுக்குப் பிடித்த இட்லி, தக்காளி சட்னி, சாம்பார் மற்றும் இடியாப்பம் பாயா செய்து ஹாட் பேகில் வைத்துள்ளேன். சாப்பிட்டு விட்டு டிவி பார்த்துக் கொண்டு இருக்கவும். நான் விரைவாய் வந்து விடுகிறேன்'.

இவருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். எப்பவொ ஒரு நாள் ஓரிரண்டு பெக் அடித்து விட்டு வந்தாலே ஒரு வாரத்துக்குப் பேசாமல் மூஞ்சியைத் தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் தன் மனைவி இம்முறை தான் இவ்வளவு குடித்து விட்டு வந்தும் எப்படி இப்படி? குழம்பிப் போனார். குளித்து முடித்து டைனிங் டேபிளுக்கு வந்தால் அங்கே எல்லாம் சூடாக தயாராக இருந்தது. பிளாஸ்கில் டிகிரி காபி வேறு. பக்கத்திலேயே அவர் தினமும் படிக்கும் ஹிண்டு பேப்பர் மடித்து படிப்பதற்கு வசதியாய் எடுத்து வைக்கப்படிருக்க அம்மாஞ்சி அசந்து போனார். இத்தனை வருட திருமண வாழ்வில் ஒரு நாளும் இல்லாத திரு நாளாய் இன்று இவ்வளவும். டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த அம்மாஞ்சியின் காலேஜ் படிக்கும் மகனை பார்த்துக் கேட்டார் அம்மாஞ்சி.

'டேய், நேத்து ராத்திரி என்னடா நடந்துச்சி?'

'என்ன நடந்துச்சா? அட போங்கப்பா. பார்ட்டின்னா இப்படியா குடிக்கிறது. உங்க பிரண்டு ராஜா மாமா தான் உங்கள கொண்டாந்து ராத்திரி வீட்டுல விட்டார். உங்களுக்கு சரியான போதை. வாசல்லயே ஒரு தடவை வாந்தி எடுத்தீங்க. அப்புறமா ஹால்ல ஒருக்க. ஒரே நாஸ்தி பண்ணிட்டீங்க.'

'என்னடா இது ஆச்சர்யமா இருக்கு. சும்மா ஒரு பெக் போட்டுட்டு வீட்டுக்கு வந்தாலே தகராறு ப்ண்ணுற உங்கம்ம இன்னிக்கு அதிசயமா சண்டஒ போடாம எல்லாத்தையும் க்ளீன் பண்ணி எனக்கு பிடிச்சதெல்லாம் சமைச்சி வச்சி.....'

'ஓஒ அதுவா? உங்கள க்ளீன் பண்ணுறதுக்காக நானும் அம்மாவும் சேந்து நேத்து ராத்திரி உங்க பெட்ரூமுக்குத் தூக்கி போயி உங்கள பெட்டுல போட்டோமா? அதுக்கப்புறம் அம்மா உங்க பேண்ட்ட கழட்ட பாத்தாங்க.'

'ஐயய்யோ...எனக்கு ஒண்ணுமே நினைவில்லியே?'

'ஆமா. நீங்க சுத்தமா அவுட். ஆனா அந்த நெலலையும் நீங்க 'ய்யேய், யாரு அது என் பேண்ட்ட அவுக்குறது. ம்ஹீம். எனக்கு கல்யாணம் ஆயிருச்சி. இது தப்பு' ன்னு சத்தம் போட்டிங்க. அதான்'.

Iniyan
14-04-2005, 05:33 PM
அம்மாஞ்சி பகுதி நேர எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். அப்போது அவரை தொலைபேசியில் அழைத்த ஒரு பெண்மணி தனது வீடு பாத்ரூமில் உள்ள வாட்டர் ஹீட்டர் ஒழுங்காக வேலை பார்க்கவில்லை. அதை வந்து பார்த்து சரி செய்து தர முடியுமா என்றாள். சரியென அம்மாஞ்சி அந்தப் பெண்மணியின் வீட்டுக்குப் போன போது அந்தம்மா தான் ரொம்ப அவசரமாக ஒரு இடத்துக்குப் போக வேண்டி உள்ளதால் வீட்டுச்சாவியை அம்மாஞ்சியிடம் கொடுத்து சரி செய்து முடித்ததும் கதவை பூட்டி சாவியை எதிர் வீட்டில் கொடுத்து விட்டுப் போகுமாறு சொல்லிக் கிளம்ப அம்மாஞ்சியும் ஒத்துக் கொண்டார். அம்மாஞ்சியை வீட்டினுள் விட்டு வெளியே கிளம்பிய அந்தப் பெண் திரும்ப வந்து அம்மாஞ்சியிடம் சொன்னாள்.

'எங்க வீட்டுல பெரிய நாய் ஒண்ணும், ஒரு கிளியும் இருக்கு. நாய பாத்து பயப்பட வேண்டிய அவசியம் இல்ல. ரொம்ப அமைதியா இருக்கும். ஆனா இந்த கிளி மட்டும் கொஞ்சம் லொள்ளு பிடிச்சது. எக்காரணம் கொண்டும் இந்த கிளிகிட்ட மட்டும் ஏதும் பேசாதீங்க. நல்லா ஞாபகம் வச்சிக்கங்க. கிளி கிட்ட மாத்திரம் எதுக்காகவும் பேசீறாதீங்க'

சரின்னு அம்மாஞ்சி உள்ளாற போனாரு. அப்ப அந்த பக்கம் வந்து நின்ன நாய பாத்த அம்மாஞ்சிக்கு மூச்சே நின்னு போச்சு. பெரிய நாய். பல் ஒவ்வொண்ணும் 2 இன்ச் நீளத்துல நாக்க தொங்கப் போட்டுகிட்டு பாக்கவே பயங்கரமா இருந்துச்சி. ஆனா அந்த அம்மா சொன்னபடி ரொம்ப அமைதியா அப்படியே படுத்துகிட்டு அம்மாஞ்சிய வேடிக்கை பாத்துகிட்டு இருந்துச்சி. குலைக்கல, உறுமல. சாந்தமா படுத்துகிச்சி. இவருக்கு ஆச்சர்யம்னா ஆச்சர்யம். அதுக்கு நேர் மாறா அங்க கூண்டுல இருந்த கிளி அழகோ அழகு.

இவரு அந்தம்மா சொன்ன மாதிரி ஒண்ணும் பேசாம வேலைய ஆரம்பிச்சாரு.

'ஏய்....கய்தே...உம் பேரென்ன?'

திடுக்குன்னு திரும்பி பாத்தா அந்தக் கிளிதான். அத்தோட நிறுத்தல. 'கய்தே...கசுமாலம்...நாயி....பன்னி...' இன்னும் கெட்ட கெட்ட வார்த்தயெல்லாம் சொல்லி அம்மாஞ்சிய திட்டு திட்டுன்னு திட்டுச்சி கிளி. அதுக்கும் மேலே போயி சும்மா ஒரே கத்து. கொஞ்ச நேரத்துல அம்மாஞ்சிக்கு தலைவலியே வந்துருச்சி. இருந்தாலும் பல்லக் கடிச்சிகிட்டு பேசாம இருந்தார். ஒரு வழியா வேலைய முடிச்சிட்டு கிளம்பப் போனார். அப்பவும் கிளி இவரை விட்ட பாடில்ல.

'அட உன்னத்தாண்டா... பேசேன். வாய்ல என்னா கொழுக்கட்டையா வச்சிருக்க? மானம் ரோசம் இல்ல உனக்கு'
இதும் கிளிதான்.

அம்மாஞ்சிக்கு வந்ததே கோபம். இனியும் பொறுக்க முடியாதுன்னு 'அடச்சீ....முட்டாள் கிளியே வாய மூடு'ன்னார்.

அவ்ளோ தான் கிளி கப்சிப்புன்னு ஆயிருச்சி. அம்மாஞ்சிக்கு சிரிப்பு தாளல. கெளம்பினார்.

'டாமி....திருடன்...திருடன்...பிடி..பிடி...அவன பிடி விடாத. கடி' ன்னு கத்துச்சி கிளி இப்ப.

Iniyan
14-04-2005, 05:34 PM
ஒரு கார்ப்பரேசன் லாரி டிரைவர் சிவப்பு சிக்னலில் நிறுத்தினார். அப்போது அங்கு வந்து லாரி கதவை தட்டின அம்மாஞ்சி 'சார். உங்க லாரிலேந்து என்னமோ சிந்திகிட்டே போகுது' என்றார்.

லாரி டிரைவர் அம்மாஞ்சியை கண்டு கொள்ளவே இல்லை. சிக்னல் மாறிய பின் அவர் பாட்டுக்க லாரியை எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

அடுத்த சிக்னலில் லாரி நின்ற போதும் இதே கதை தான். லாரியைப் பின் தொடர்ந்து தன் காரில் வந்த அம்மாஞ்சி ரொம்ப அக்கறையாய் 'என்னாங்க...நான் அப்பவே சொன்னேன். உங்க லாரிலேந்து ஏதோ சிந்துதின்னு. ஆனா நீங்க பாட்டுக்கு கண்டுக்காம வர்றீங்க. கவர்மெண்ட் காசு வேஸ்ட் ஆகுதேன்னு சொன்னா....'.

லாரி டிரைவர் ஒரு புழுவைப் பார்ப்பது போல பார்த்துவிட்டு திரும்ப வண்டி எடுத்தார்.

அதற்கடுத்த சிக்னலில் லாரிக்கு முன்னால் தன் காரை நிறுத்தி பூட்டி சாவியை கையில் எடுத்துக் கொண்டு லாரியை போக விடாமல் தடுத்து அம்மாஞ்சி கோபமாய் கத்தினார். 'இந்த கவர்மெண்ட் எம்ப்ளாயீசுக்கெல்லாம் வர வர ரொம்ப திமிரு ஜாஸ்தி ஆயிருச்சு. சொல்லி கிட்டே இருக்கேன். கேக்காம '

இப்ப லாரி டிரைவருக்கு வந்ததே கோபம். 'யோவ். இன்ன்னிக்கு ராத்திரி பெரிய பனிப் பொழிவு இருக்கு. நான் ரோடெல்லாம் வழுக்காம இருக்க உப்பு தூவிகிட்டு இருக்கேன்'

(மேலை நாடுகளில் குளிர் காலத்தில் கடுமையான பனிப் பொழிவு இருக்கும் போது சாலைகளில் விழும் பனி உறைந்து ஐஸாக மாறுவதை தவிர்க்க லாரியில் பின்னால் உப்புதுகள் ஏற்றி சென்று சாலை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தூவுவார்கள்.)

Iniyan
14-04-2005, 05:34 PM
அம்மாஞ்சியிடம் டாக்டர் : "ஏங்க. நான் எழுதிக் கொடுத்த வயாகரா சாப்பிட்டதுக்கு ஏதும் சைட் எபக்ட் இருக்கா?"

அம்மாஞ்சி: "ஆமா டாக்டர். கொஞ்ச நாளா வராம இருந்த என் பொண்டாட்டியோட தலைவலி திரும்ப வந்துடுச்சி"

Iniyan
14-04-2005, 05:35 PM
முதன் முதலில் ஒரு பசு மாட்டைப் பார்த்து "ம்ம்ம்ம்ம். அதோ அங்கே அந்த மாட்டின் கீழே நீள நீளமாய் விரல் மாதிரி தொங்குதே, அதைப் பிடிச்சி கசக்கி பிழிஞ்சி அதுலேந்து வர்றத குடிக்கலாம்" என்று யாருக்கு முதன் முதலில் தோன்றியது?

Iniyan
14-04-2005, 05:36 PM
"அதோ போகுதே கோழி. அதும் பின்னாடி இருந்து வெள்ளையா உருண்டையா என்னமோ வருதே, அத நான் எடுத்து தின்னப் போறேன்." - இது யாருக்கு முத மொத தோணிச்சி?

Iniyan
14-04-2005, 05:37 PM
வெஜிடபிள் ஆயில் - வெஜிடபிள்ள இருந்து எடுத்தது. கார்ன் ஆயில் - கார்னிலிருந்து எடுத்தது. அப்ப பேபி ஆயில்???

Iniyan
14-04-2005, 05:42 PM
கோந்து பாட்டில் வாங்குறோமே - அந்த கோந்து எப்படி பாட்டிலுக்குள்ள ஒட்டாம இருக்கு???

Iniyan
14-04-2005, 05:42 PM
"இலவச பரிசுகளை வெல்லுங்கள்" ன்னு விளம்பரம் பண்ணுறாங்களே? பரிசுன்னால இலவசம் தானே???

Iniyan
14-04-2005, 05:43 PM
ஒரு நாள் அம்மாஞ்சி ஒரு பாரில் உட்கார்ந்து சோகமாய்க் குடித்துக் கொண்டிருந்தார்.

அதைப் பார்த்த அவரது நண்பர்: என்ன ஆச்சு?

அம்மாஞ்சி: அட போப்பா. என் சோகத்த ஏன் கேக்குறே?

நண்பர் :அட சொல்லேன். துக்கத்த பகிந்து கிட்ட மனசு கொஞ்சம் சாந்தி ஆகும்.

அம்மாஞ்சி: இன்னிக்கு காலைல நான் என் வீட்டு பசுமாடுகிட்ட பால் கறந்து கிட்டு இருந்தேன். கிட்டத்தட்ட பாதி கறந்தப்பறம் அந்த பசு தன் இடது பின்னங்காலை தூக்கி ஒரே எத்து. பாலெல்லாம் கவுந்து வீணாப் போச்சி

நண்பர்: அட, இதுக்கு தானா இவ்ளோ சோகம்?

அம்மாஞ்சி: அட போப்பா. சில விசயங்கள் எல்லாம் சொன்னா புரியாது. சரின்னு சொல்லி நான் அங்கிருந்த கயித்த எடுத்து மாட்டோட இடது கால பக்கத்துல இருந்த கொட்டகை கம்பத்துல கட்டிட்டி திருப்பி கறந்தேன். இப்போ வலது காலால ஒரு எத்து. திரும்ப பாலெல்லாம் வீணாப் போச்சி.

நண்பர்: அட திரும்பவுமா? சரி சரி. பால் போனா என்ன? அதுக்காக இவ்ளோ சோகமா குடிக்கணுமா???

அம்மாஞ்சி : அதான் சொல்றேன்ல. சில விசயங்கள் சொன்னா புரியாது. நீயும் விட மாட்றே. இப்போ பொறுமையா வலது காலையும் இன்னோரு கயிறு எடுத்து இன்னோரு கம்பத்துல கட்டினேன். பால் கறக்க ஆரம்பிச்சா இப்ப வாலை வச்சி பாத்திரத்த ஒரே தட்டு. மூணாவது தடவ பால் கொட்டிருச்சி.

நண்பர்: அடப்பாவமே. ரொம்பத்தான் கஷ்டப்பட்டிருக்கே. அப்பறம் என்ன செஞ்சே?

அம்மாஞ்சி: சரின்னு வாலையும் கட்டிடுவோம்னு சுத்தி முத்தி கயிறு பார்த்தா கயிறே இல்ல. சரின்னு என் இடுப்புல என் வேட்டிக்கு கட்டியிருந்த பெல்ட்ட கழட்டி மாட்டு வால்ல கட்டி இன்னோரு முனைய மேல கூரை கம்புல கட்டினேன். எட்டி கட்டுனதுல பெல்ட் இல்லாம என் வேட்டி அவுந்துடுச்சி. அந் நேரம் பாத்து தானா என்னைய தேடி எம் பொண்டாட்டி மாட்டுக் கொட்டாய்க்கு வரணும்......

Iniyan
14-04-2005, 05:47 PM
அம்மாஞ்சியும் அவரது நண்பரும் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் வேலை பார்க்கும் தொழிற்சாலையில்.

நண்பர்: அடச்சே. எக்கச்சக்க வேலைப்பா. ஒரு ரெண்டு நாள் லீவ் போட்டுட்டு எங்கயாச்சும் ஜாலியா போயிட்டு வரலாம்னு பாக்கிறேன்.

அம்மாஞ்சி : லீவா? இப்ப இருக்குற வேலைப் பளுவுல மொதலாளி லீவ் தர மாட்டாரேப்பா.

நண்பர்: அதுக்கெல்லாம் மூளை வேணும். இப்ப பாரு. நான் எப்படி நம்ம மொதலாளி கிட்ட லீவு வாங்குறேன்னு...

முதலாளி அந்தப்பக்கம் வரும் நேரம் பார்த்து சர சரெ வென அங்கிருந்த கம்பத்தை பிடித்து மேலேறிய நண்பர் அங்கிருக்கும் விட்டத்தில் காலை வைத்து பிடித்துக் கொண்டு தலை கீழாகத் தொங்கினார்.

முதலாளி: ஏய் ஏய் ஏய், அங்க என்ன பண்ணுறே தலை கீழா தொங்கிகிட்டு???

நண்பர்: நாந்தான் லைட் பல்ப். [கேணத்தனமாக சிரித்துக் கொண்டே]

சரி தான் ரொம்ப வேலை பார்த்ததுல மறை கழண்டு போச்சு போலன்னு நெனச்சி கிட்டு முதலாளி சொன்னார்

'இந்தாப்பா. நீ ரொம்ப வேலை பாக்கிறேன்னு நெனக்கிறேன். போய் ரெண்டு நாள் ரெஸ்ட் எடுத்துட்டு அப்பறமா வா'

இதான் சாக்கென்று நண்பர் முதலாளி பார்க்காத நேரத்தில் அம்மாஞ்சியிடம் கண்ணடித்து விட்டு வீட்டிற்கு கிளம்பினார்.

இப்ப அம்மாஞ்சியும் விறு விறுவென நண்பரை பின் தொடர்ந்து வெளியேறத் தொடங்கினார்.

முதலாளி : இந்தாப்பா அம்மாஞ்சி. நீ எங்க போற

அம்மாஞ்சி : மொதலாளி, லைட் இல்லாம என்னால இருட்டுல எல்லாம் வேல பாக்க முடியாது.

Iniyan
14-04-2005, 05:49 PM
அம்மாஞ்சி ஒரு கடையில் விற்பனையாளராகப் பணி புரிந்து வந்தார். ஒரு நாள் அம்மாஞ்சி ஒரு வாடிக்கையாளரிடம் பேசி கொண்டிருந்ததை அவரது மேலாளர் கேட்க நேர்ந்தது.

"இல்லீங்க. ஒரு மாசத்துக்கும் மேல இல்ல. எப்பத்தான் வருமோ தெரியல. அட சொல்லப் போனா வருமான்னே தெரியல"

கேட்ட மேலாளருக்கு கோபமான கோபம். விரைவாய் வாடிக்கையாளரிடம் சென்று "மன்னிக்கணும் சார். இந்த ஆள் சொல்றத கேட்காதீங்க. இவர் தெரியாம சொல்லுறாரு. இப்ப இல்லேங்கறது சரி தான். ஆனா ஆர்டர் பண்ணீட்டேன். கூடிய சீக்கிரம் வந்துரும்" என அவசர அவசரமாய் சமாளித்து வாடிக்கையாளாரை அனுப்பி வைத்து விட்டு கோபமாய் அம்மாஞ்சியிடம் திரும்பினார்.

"யோவ். உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா? இல்லே வருமான்னே தெரியாதுன்னுல்லாம் கஸ்டமர் கிட்ட சொல்லவே கூடாதுன்னு எத்தினி தடவ சொல்லி இருக்கேன்? அவங்க நம்ம கடைய பத்தி என்ன நினைப்பாங்க? எப்பவுமே ஆர்டர் பண்ணி இருக்கோம். இதோ வந்துரும்னு சொல்லணும் தெரியுதா? சரி...இப்ப சொல்லு அவங்க என்ன வருமான்னு கேட்டாங்க?"

அம்மாஞ்சி: "மழை"

Iniyan
14-04-2005, 05:50 PM
டெலிபோனில் டெக்னிக்கல் சப்போர்ட் தரும் கணிப்பொறி பொறியாளருக்கும், அம்மாஞ்சிக்கும் நடந்த உரையாடல்கள் இங்கே.

டெக் சப்போர்ட்: உங்க கிட்ட இருக்குறது என்ன கம்ப்யூட்டர்?

அம்மாஞ்சி: வெள்ளைக் கலர் கம்ப்யூட்டர்

Iniyan
14-04-2005, 05:50 PM
அம்மாஞ்சி: என் கம்ப்யூட்டர் பிளாப்பி டிரைவ்ல பிளாப்பி சிக்கிகிச்சு.

டெக் சப்போர்ட்: அடடா. அங்க இருக்குற பட்டனை அமுக்கினீங்களா?

அம்மாஞ்சி: அமுக்கிப் பாத்துட்டேன். நல்லா சிக்கி இருக்கு.

டெக் சப்போர்ட்: அப்படீன்னா நீங்க எங்க கடைக்குத் தான் கொண்டு வரணும் சார். நான் ரிப்பேர் ஆர்டர் பிரிப்பேர் பண்ணி வைக்கிறேன்.

அம்மாஞ்சி: இல்லை. இல்லை. ஒரு நிமிசம். இருங்க. நான் பிளாப்பிய இன்னும் சொருகவே இல்லை. இன்னும் என் டேபிள் மேலேதான் இருக்கு. ஹி ஹிஹி/

டெக் சப்போர்ட்: ???!!!???

Iniyan
14-04-2005, 05:51 PM
டெக் சப்போர்ட்: உங்கள் கம்ப்யூட்டர் திரையின் இடது பக்கம் இருக்கும் "My computer" ஐகானை க்ளிக்குங்கள்.

அம்மாஞ்சி: உங்களுக்கு இடது பக்கமா ? எனக்கு இடது பக்கமா?

Iniyan
14-04-2005, 05:52 PM
அம்மாஞ்சி: என் கம்ப்யூட்டர் பிரிண்ட் செய்ய மாட்டேன் என்கிறது.

டெக் சப்போர்ட்: அப்படியா? என்ன எரர் மெசேஜ் தருது?

அம்மாஞ்சி: "Can't Find Printer" என்கிறது. நான் என் பிரிண்டரை எடுத்து என் கம்பியூட்டர் மானிட்டருக்கு முன்னால் வைத்த பிறகும் இதே தான் சொல்கிறது.

Iniyan
14-04-2005, 05:52 PM
அம்மாஞ்சி : என் கீபோர்டு பணி செய்யவில்லை.

டெக் சப்போர்ட்: முதல்ல உங்க கம்ப்யூட்டரும் கீ போர்டும் கனக்ட் ஆகி இருக்கா?

அம்மாஞ்சி : [நக்கலாக...]ஹலோ நான் என்ன பில் கேட்சா இதெல்லாம் தெரிஞ்சுகிற? தெரியாமத் தான கூப்புடுறேன்.

டெக் சப்போர்ட்: சார். உங்க கீ போர்டை கையில் தூக்குங்கள்.

அம்மாஞ்சி: தூக்கிட்டேன்.

டெக் சப்போர்ட்: இப்போ உங்க கம்ப்யூட்டரை விட்டு 15 அடி தள்ளி நகர்ந்து போங்க.

அம்மாஞ்சி: போயிட்டேன்.

டெக் சப்போர்ட்: அப்போ உங்க கம்ப்யூட்டரும் கீ போர்டும் கனக்ட் ஆகல.

Iniyan
14-04-2005, 05:53 PM
அம்மாஞ்சி: என் பிரிண்டர் சிவப்பு எழுத்துக்களை பிரிண்ட் பண்ண மாட்டேன் என்கிறது.

டெக் சப்போர்ட்: உங்க கிட்ட இருக்குறது கலர் பிரிண்டரா?

அம்மாஞ்சி : இல்லை.

Iniyan
14-04-2005, 05:54 PM
டெக் சப்போர்ட்: இப்போ F8 அடிங்க.

அம்மாஞ்சி: ம்ஹீம். இது ஒர்க் ஆக மாட்டேங்குது.

டெக் சப்போர்ட்: என்ன பண்ணுனீங்கன்னு கரக்டா சொல்லுங்க/

அம்மாஞ்சி: நீங்க சொன்னா மாதிரி F கீய எட்டு தடவ அடிச்சேன்.

Iniyan
14-04-2005, 05:55 PM
டெக் சப்போர்ட் : உங்க பாஸ்வேர்ட் - small a, Capital V, அடுத்து நம்பர் 5.

அம்மாஞ்சி : நம்பர் 5 கேப்பிடலா சுமாலா?

Iniyan
14-04-2005, 05:56 PM
அம்மாஞ்சி : எனது பாஸ்வேர்ட் பணி செய்யவில்லை.

டெக் சப்போர்ட்: சரியான பாஸ்வேர்ட் தான் கொடுக்குறீங்களா?

அம்மாஞ்சி : அட ஆமா சார். எங்கூட வேல பாக்குறவங்க கொடுக்கறத பாத்து தானே கொடுக்கிறேன்.

டெக் சப்போர்ட்: உங்க பாஸ் வேர்ட் என்ன? சொல்லுங்க சை பாப்போம்.

அம்மாஞ்சி: அஞ்சு ஸ்டார்.

Iniyan
14-04-2005, 05:56 PM
டெக் சப்போர்ட் : நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய முடியும் ?

அம்மாஞ்சி: நான் இப்போதான் முத முத இமெயில் அடிக்கிறேன்

டெக் சப்போர்ட்: சரி. என்ன பிரச்சனை இமெயிலில்?

அம்மாஞ்சி: இமெயில் அட்ரசுல, a அடிச்சுட்டேன். இப்ப அத சுத்தி எப்படி ஒரு வட்டம் போடுறது?

Iniyan
14-04-2005, 05:57 PM
ஒரு தொழிற்சாலை ரொம்ப நஷ்டத்தில் ஓடிக் கொண்டிருந்ததால் திறமையான நிர்வாகம் வேண்டும் என அம்மாஞ்சியை அனைத்து பொறுப்புகளும் உள்ள நிர்வாக மேலாளராய் புதிதாக வேலைக்குச் சேர்த்தார்கள்.

முதல் நாள் அம்மாஞ்சிக்கு அலுவலகத்தில். அலுவலகத்தை சுற்றிப் பார்க்கலாம் என முடிவெடுத்து காலை 11:30 மணிக்கு வேலை நடப்பதை பார்த்தபடி அம்மாஞ்சி சுற்றி வந்தார். தொழிலாளர்கள் எல்லோரும் மும்பரமாக வேலை பார்த்துக் கொண்டிருக்க ஒருவன் மட்டும் ஒரு ஓரத்தில் சுவற்றில் சாய்ந்தபடி நின்று கொண்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

அவனருகில் சென்ற அம்மாஞ்சி, "உனக்கு சம்பளம் எவ்வளவு?" என்றார். கொஞ்சம் ஆச்சர்யமடைந்த அவன் சட்டென சுதாரித்து "மாசத்துக்கு 300 ரூபாய். ஏன் கேக்குறீங்க?" என்றான்.

அம்மாஞ்சி சட்டென தன் சட்டைப் பையில் கை விட்டு பணம் எடுத்து எண்ணி 900 ரூபாயை அவனிடம் கொடுத்து "இந்தா உன் மூணு மாச சம்பளம். இப்ப வேளில போ. திரும்ப இந்தப் பக்கமே வராத" என்று சப்தமிட்டார். முதலிலேயே தான் கறாரான பாஸ் என்பதை வேலை பார்க்காமல் நின்று கொண்டிருந்த ஒருவனை வேலையீ விட்டு அனுப்பியதன் மூலம் அங்கிருக்கும் அனைவருக்கும் நிரூபித்து விட்ட திருப்தியில் முகத்தில் ஒரு பெருமித புன்சிரிப்புடன் சுற்றும் முற்றும் பார்த்தபடி "அந்த சோம்பேறி இங்க என்ன வேலை பாத்துகிட்டு இருந்தான்னு யாராவது சொல்ல முடியுமா?" எனக் கேட்டார் அம்மாஞ்சி.

கொஞ்சமாக அசடு வழிந்தபடி அங்கிருந்த ஒரு தொழிலாளி சொன்னார். "அவன் எதிர்த்தாப்ல இருக்குற டீ கடைல வேல பாக்குற பையன். காலைல டீ கொடுத்த க்ளாசை எல்லாம் வாங்கிட்டு போக வந்திருந்தான்."

Iniyan
14-04-2005, 05:58 PM
வாக்குச் சாதுர்யம் என்பது சரியான நேரத்தில் சரியான பதிலை சொல்வது மட்டுமல்ல. ஆர்வக்கோளாறில் சரியான நேரத்தில் தவறான பதிலை சொல்லாமல் இருப்பதும் தான்.

Iniyan
14-04-2005, 05:58 PM
வயதாக வயதாக உடல் எடையை குறைப்பது ரொம்பக் கடினம். ஏனெனில் உடலும் உடலில் இருக்கும் கொழுப்பும் இப்போது நெருங்கிய நண்பர்களாகி விடுவதால் தான்.

Iniyan
14-04-2005, 05:59 PM
காணாமல் போன எதையும் மிக எளிதாகக் கண்டுபிடிக்கும் ஒரே வழி - காணாமல் போன அதே பொருளை மீண்டும் புதிதாக வாங்குவது தான்.

Iniyan
15-04-2005, 09:24 AM
AM ரேடியோவை மதியம் கேட்கலாமா?

Iniyan
15-04-2005, 09:25 AM
முதன் முதலில் கடிகாரம் கண்டுபிடித்த போது அவர்களுக்கு எந்த நேரத்துக்கு கடிகாரத்தை செட் செய்ய வேண்டும் என எப்படித் தெரிந்தது?

Iniyan
15-04-2005, 09:26 AM
அம்மாஞ்சி ஒரு நாள் டிரைய்னில் பயணித்துக் கொண்டிருந்தார். உடன் வந்த சர்தார்ஜி அம்மாஞ்சியிடம் பேச்சுக் கொடுத்தார்.

"எப்படி தமிழர்கள் எல்லாம் இவ்வளவு புத்திசாலிகளாக உள்ளீர்கள்? எனக்கும் கொஞ்சம் சொல்லுங்களேன்."

"அந்த ரகசியம் நாங்கள் சாப்பிடும் வெள்ளரிக்காயில் தான் உள்ளது"

"அட அப்படியா?" என வாய் பிளந்தார் சர்தார். கொஞ்ச நேரத்தில் அம்மாஞ்சி தன்னிடமிருந்த இரண்டு வெள்ளரிப்பிச்ஞ்சுகளை எடுத்து கடித்து தின்னத் தொடங்கினார்.

சர்தார்ஜி "அந்த வெள்ளரிக்காயை விலைக்குத் தருவீர்களா?" எனக் கேட்க அம்மாஞ்சி திடமாய் மறுத்து விட்டார். திரும்பத் திரும்ப சர்தார்ஜி வெள்ளாரிக்காயை தனக்கு விற்கும்படி வற்புறுத்தவே அம்மாஞ்சி சொன்னார் "இந்த வெள்ளரிக்காய் ரொம்ப விலை ஜாஸ்தி"

"அட எவ்ளோ விலைன்னாலும் பரவால்ல. சொல்லுங்க. நான் இப்பவே காசு தாரேன்"

சரி என ஒரு வெள்ளரிக்காய் 1000 ரூபாய் எனப் பேசி சர்தாரிடம் வெள்ளரியை விற்று விட்டார் அம்மாஞ்சி. சர்தார் ஆர்வமாய் வெள்ளரியை வாங்கித் தின்றார். கொஞ்ச நேரத்தில் "சுத்த பைத்தியக்காரத்தனமால்ல இருக்கு? என்னமோ போங்க...நீங்க சொன்னாமாதிரி நான் மட்டும் புத்தி சாலி ஆகம இருந்தா அப்பறம் உங்கள் கவனிச்சுக்கிறேன் "உங்கூரு வெள்ளரி இவ்ளோ வெலையா? இதே வெள்ளரிக்காய நான் 25 பைசாக்கு வாங்கி இருப்பேன் அமிர்தசரஸ்ல. " என்றார்.

அம்மாஞ்சியின் பதில் - "பாத்தீங்களா என் வெள்ளரி ஏற்கனவே வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சி"

Iniyan
15-04-2005, 09:27 AM
அம்மாஞ்சியின் புதிய கண்டுபிடிப்புகள்

1] வாட்டர் புரூப் டவல்

2] படிக்கக் கற்றுக் கொள்வது எப்படி என புத்தகம்.

3] ஹெலிகாப்டரில் எஜக்டர் சீட்

4] வாட்டர் புரூப் டீ பேக்

5] காலால் பெடல் செய்யக் கூடிய வீல் சேர்

Iniyan
15-04-2005, 09:28 AM
டார்ஜானுக்கு ஏன் தாடி இல்லை?

Iniyan
15-04-2005, 09:47 AM
ஒரு முறை அம்மாஞ்சி டாக்டரை பார்க்கப் போனார்.

"டாக்டர் எனக்கு உடம்பெல்லாம் பயங்கரமா வலிக்குது."

"என்னது ? உடம்பெல்லாம் வலிக்குதா? இப்படி மொத்தமா குத்து மதிப்பா சொல்லாம கரக்டா சொல்லுங்க. எங்கங்கல்லாம் வலிக்குது?"

அம்மாஞ்சி தன் வலது முட்டியை தன் ஆட்காடி விரலால் தொட்டு அமுக்கினார்.

"ஆ.....இங்க வலிக்குது"

பின் இடது கன்னத்தை தொட்டு அமுக்கி "ஆ...இங்கயும் வலிக்குது"

பின் தனது காது மடலைப் பிடித்து "இங்கயும் வலிக்குது" என்றார்.

டாக்டர் அமைதியாக சொன்னார்

"சார். உங்க ஆள் காட்டி விரல் ஒடைஞ்சி இருக்கு"

Iniyan
15-04-2005, 09:48 AM
இது வரை பழைய திஸ்கி பதிவுகளை யுனிகோடில் மாற்றித் தந்தேன். இப்போது புதுசு நண்பா...புதுசு.....

Iniyan
15-04-2005, 09:50 AM
1) ஜப்பானியர்கள் ரொம்ப கம்மியாய் கொழுப்பு நிறைந்த உணவு சாப்பிடுகிறார்கள். அதனால் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய்வருகிறது.

2) ஆனால் அதே நேரம், பிராஞ்சுக்காரர்கள் மிக அதிக கொழுப்பு உணவு உட்கொள்கிறார்கள். ஆனாலும் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

3) ஜப்பானியர்கள் ரொம்ப கம்மியாய் சிவப்பு ஒயின் அருந்துகிறார்கள். அதனால் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

4) ஆனால் அதே நேரம், இத்தாலியர்கள் மிக அதிகமாக சிவப்பு ஒயின் அருந்துகிறார்கள்.ஆனாலும் அமெரிக்கர் மற்றும் பிரிட்டிஷ்காரர்களை விட குறைந்த அளவே அவர்களுக்கு இதய நோய் வருகிறது.

இந்த ஆராய்ச்சியின் முடிவு???























உணவே அல்லது குடிப்பழக்கமோ அல்ல பிரச்சனை. ஆங்கிலம் பேசுவது தான்....

Iniyan
15-04-2005, 09:52 AM
அம்மாஞ்சி தேனிலவுக்கு சென்றிருந்தார். மிகப் பெரிய ஆடம்பர ஓட்டலில் தங்கி இருந்தனர் தம்பதியர். அம்மாஞ்சியின் மனிவிக்கு திடீர் சந்தேகம்.

"ஏங்க, அந்தப் பொண்ணு த்ரிஷாவ இது மாதிரி ஓட்டல்ல வச்சி தான குளிக்கும் போது படம் பிடிச்சாங்க. அது மாதிரி ஏதாச்சும் கேமாரா இருந்தா?"

ஆஹா என புறப்பட்டார் அம்மாஞ்சி. ரூமை சுத்தமாக சலித்து பார்த்தார் ஒன்றும் இல்லை. ஆனால் கடைசியில் அவர்களின் பெட்டுக்கு சற்று தள்ளி தரையில் ஒரு வட்டமான உலோகத் தகடு பார்க்க சிடி மாதிரி இருந்தது தரையுடன் 4 ஸ்கூரூக்கள் மூலம் இணைக்கப்பட்டிருந்தது. பார்ப்பதற்கு சந்தேகம் தரும் வகையில் இருந்ததால் படாதபாடுபட்டு அந்த நாலு ஸ்கூரூக்களையும் கழற்றி எடுத்து அந்த தகடை தூக்கி குப்பையில் போட்டு விட்டார்.

மறு நாள் காலை ஓட்டல் மேனேஜர் அம்மாஞ்சி தம்பதியினரை கேட்டார்.

"ரூம் நல்லா இருக்கா சார்? சர்வீஸ் எப்படி இருக்கு? ஏதும் பிரச்சனை இல்லையே?"

"அதெல்லாம் ஒண்ணும் இல்ல சார். எல்லாம் அருமை. ஆமா ஏன் கேட்குறீங்க?"

"இல்ல நேத்து ராத்திரி உங்க ரூமுக்கு கீழ் ரூமுல இருக்கறவங்க மேலே அவங்க ரூம் சாண்டிலியர் தொங்கும் விளக்கு விழுந்து ஒரு ஆக்சிடெண்ட ஆகி போச்சி. அதான்...."

Iniyan
15-04-2005, 10:01 AM
அம்மாஞ்சி லாரி ஓட்டிக் கொண்டிருந்தார். ஒரு நாள் தேசிய நெடுஞ்சாலையில் ஓரமாகலாரியைநிறுத்திவிட்டுஒரு ரோட்டோரக் கடையில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது லோக்கல் ரவுடிகள் கும்பல் ஒன்று வந்து அவரைடம் வம்பு செய்தது. ஆனாலும் அம்மாஞ்சி ஏதும் பேசாமல் பொறுமையாக இருந்து விட்டு எழுந்து போய் விட்டார். அவர் போனதற்கப்பறம் அந்த ரவுடிகள் "அந்த ஆளுக்கு சண்டை போடவே தெரியல. நாங்க அவ்ளோ வம்பு வளர்த்தும் அமைதியா போயிட்டான் பாத்தியா? " என பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஓட்டலில் வேலை பார்க்கும் சின்னப் பையன் ஒருவன் "அண்ணே! அந்த் ஆளுக்கு சண்டை போட மட்டும் இல்லேண்ணே, ஒழுங்கா லாரி ஓட்டவும் தெரியல. பாருங்களேன் வெளிய நிறுத்து இருந்த உங்க மூணு பேரோட புது மோட்டார் பைக்கையும் இடிச்சி கீழ தள்ளி நசுக்கிட்டு போயிட்டான்!"

Iniyan
15-04-2005, 10:06 AM
அம்மாஞ்சியின் மனைவி: ஏன் தான் இந்த ஆம்பிளைங்க இப்படி இருக்கீங்களோ? எது சொன்னாலும் இந்த காதுல வாங்கி அந்தக் காதுல வெளியே விட்டுருங்க.


அம்மாஞ்சி: நீங்க மட்டும் என்ன வாழுதாம்? எது சொன்னாலும் ரெண்டு காதாலயும் கேட்டுட்டு வாயால வெளில விட்டுடுவீங்க

Iniyan
15-04-2005, 10:09 AM
சின்ன வயசு அம்மாஞ்சி அவரின் அம்மாவிடம் "அம்மா கடவுள் நம்ம பாத்ரூம யூஸ் பண்ணுறாராம்மா?"

"அதெல்லாம் இல்லியே. ஏன் கேட்குறே?"

"இல்ல. தெனமும் காலைல அப்பா மூடி இருக்குற பாத்ரூம் கதவ தட்டி தட்டி 'ஆ....கடவுளே....நீ இன்னுமா உள்ளே இருக்கே?' ன்னு கேட்கிறாரே. அதான் கேட்டேன்.

Iniyan
15-04-2005, 10:12 AM
அம்மாஞ்சி - நான் பஸ்ஸில உட்கார்ந்து வரும் போது யாராவது வயசானவங்க இல்ல குழந்தைக நின்னுகிட்டு வந்தா எனக்கு பாக்க தாளாது.

நண்பர் - அப்ப எழுந்திருச்சி உன் சீட்ட அவங்களுக்கு கொடுத்துடுவியா?

அம்மாஞ்சி - இல்ல. கண்ண மூடிக்குவேன்.

Iniyan
15-04-2005, 10:15 AM
கோர்ட்டில் அம்மாஞ்சி

நீதிபதி அம்மாஞ்சியிடம் "நீ என்ன தப்பு செஞ்சே?"

"தீபாவளிக்காக கொஞ்சம் முன்னாடியே ஷாப்பிங் போனேன் யுவர் ஆனர். அதுக்காக என்னைய பிடிச்சிகிட்டு வந்துட்டாங்க"

நல்ல மூடில் இருந்த நீதிபதி "அட இதுல ஒண்ணும் தப்பு இல்லியே? எவ்ளோ முன்னாடி ஷாப்பிங் செய்தே?"

"கடை திறக்கறதுக்கு முன்னாடி யுவர் ஆனர்"

Iniyan
15-04-2005, 10:25 AM
அம்மாஞ்சி ஓர் இரவில் - அப்பா உங்களால இருட்டுல எழுத முடியுமா???

அப்பா - முடியும்னு நெனைக்கிறேன். ஏன்? என்ன எழுதணும்?

அம்மாஞ்சி [லைட்டை அணைத்து விட்டு இருட்டில்] - என் ப்ராகிரஸ் ரிப்போர்ட்ல உங்க பேர் எழுதுங்க. பாப்போம்

puppy
15-04-2005, 01:30 PM
இனியன் வேலையை ஆரம்பிச்சிட்டீங்க போல.....தொடருங்கள்......நீங்கள் இந்த தளத்தில் உள்ள "converter"-ஐ உபோயகித்து கொள்ளுங்கள்.சுலபமாக இருக்கும்

Iniyan
15-04-2005, 02:52 PM
ஆமாங்க கொள்ளப்பட்ட வேலை கிடக்குல்ல

Iniyan
15-04-2005, 05:55 PM
நம்ம அம்மாஞ்சி ஊருக்கு பக்கத்துல இருந்த ஒரு ஏரிக்கு மீன் பிடிக்கப்போனார். ஆனால் அந்த ஏரியோ வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்கே யாரும் மீன் பிடிக்கக் கூடாது என கடுமையான உத்தரவு இருந்தது. ஆனாலும் திருட்டு மாங்காயில் சுவை இருப்பது போல நம்மாளு திருட்டு தனமா போய் மீன் பிடிச்சு மீன் சாகாம இருந்தா தான் பிரெஷ்சா இருக்கும்னு சொல்லி ரெண்டு பெரிய வாளி நெறைய தண்ணீர் வச்சு அதில மீனை பிடிச்சு போட்டுக்கிட்டு மெல்ல நழுவிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த ஒரு வனத்துறை அதிகாரி அம்மாஞ்சியை கையும் களவுமாய் பிடித்து விட்டார். 'சார். இங்கே மீன் பிடிக்கிறது சட்டப்படி குற்றம் தெரியுமா? உங்களை நான் அரெஸ்ட் பண்ணுறேன்' என்றார். உடனே அம்மாஞ்சி 'சார். இல்லை இதெல்லாம் நான் இங்கே ஏரிலே பிடிச்ச மீன் இல்ல. இதெல்லாம் நான் எங்க வீட்டில வளர்க்கிற மீன்' என்றார். வனத்துறை அதிகாரியோ 'அப்படியானால் இங்கே என்ன செய்கிறீர்கள் இந்த மீன்களுடன்....' என்றார். 'வீட்டில் மீன் தொட்டியிலேயே நாளல்லாம் இருப்பதால் இந்த மீன்களை நான் சாயங்கால வேளையில் இப்படி அழைத்து வந்து இந்த ஏரியில் சுதந்திரமாய் உலாவ விடுவேன். கொஞ்ச நேரம் கழிந்ததும் நான் ஒரு விசில் அடித்தால் அனைத்து மீன்களும் மீண்டும் வந்து என் வாளிக்குள் குதித்து விடும். நான் வீட்டிற்கு எடுத்து போவேன்.' என்றார்.

வனத்துறை அதிகாரிக்கோ கோபமான கோபம். 'என்னை என்ன முட்டாள் என்று நினைத்தீர்களா? மீன்களாவது ஏரியில் நீங்கள் விசிலடித்ததும் வந்து உங்கள் வாளியில் குதிப்பதாவது? என்ன கதை விடுகிறீர்கள்?'. அம்மாஞ்சியோ அமைதியாக 'சார். இதை நம்புவது கடினம் தான். ஆனால் என்னுடன் வந்தால் நான் இதை உங்களுக்கு காட்ட முடியும்' என்றார். வனத்துறை அதிகாரி இன்னும் கோபம் சற்றும் குறையாதவராக 'சரிவோவ்....வாரும் என் கூட இப்போதே ஏரிக்கு. அதையும் பாத்துரலாம்' என்று தரதரவென அம்மாஞ்சியை இழுக்காத குறையாய் ஏரிக்கரைக்கு இழுத்து சென்றார். அம்மாஞ்சி இரண்டு வாளித் தண்ணீரையும் மீன்களுடன் ஏரியில் கொட்டி விட்டு சற்று நேரம் பொறுமையாய் நின்று கொண்டிருந்தார்.

காத்திருந்த அதிகாரிக்கோ எரிச்சலோ எரிச்சல்.

'ம். அப்புறம்....' என அவசரப்படுத்தினார்.
'என்ன சார்? என்ன அப்புறம்?'.
'எப்போ விசிலடிச்சு கூப்பிட போறீங்க..?'
'விசிலடிச்சு யார கூப்பிட?'
'யோவ் ...என்ன விளையாடுறியா? மீன்களை தான்...எப்போ கூப்பிடுவ?'
'மீன்களா? என்ன மீன்கள்?'

pradeepkt
18-04-2005, 06:55 AM
நிஜமாவே அதிமேதாவிதானய்யா நம்ம அம்மாஞ்சி.

gragavan
18-04-2005, 01:18 PM
அடேங்கப்பா! அம்மாஞ்சி நல்ல ஆளுதான். என்ன அறிவு.

அன்புடன்,
கோ.இராகவன்

பரஞ்சோதி
18-04-2005, 07:56 PM
இனியன் எப்படிங்க, இப்படி கலக்குறீங்க. சீக்கிரமாக அனைத்தும் கொடுங்க, புத்தகமாக தொகுக்க வேண்டும்.

Iniyan
19-04-2005, 02:05 PM
அம்மாஞ்சி தன் காரை மெக்கானிக்கிடம் எடுத்துச் சென்றார். இம்முறை பிரச்சனை காரை திருப்பும் போதெல்லாம் கடகடவென சப்தம் கேட்கிறது.

மெக்கானிக் காரை எடுத்துக் கொண்டு ஒரு ரவுண்ட் போய் வந்து கேராஜுக்குள் காரை கொண்டு சென்று விட்டு வெளியே கொண்டு வந்தார். இப்போது அம்மாஞ்சியை கார் ஓட்டிப் பார்க்கச் சொல்ல எந்த சப்தமும் இல்லை. மிக மகிழ்ச்சியாக அம்மாஞ்சி மெக்கானிக் கேட்ட 500 ரூபாயை கொடுத்து விட்டு காரை எடுத்துக் கொண்டு போகும் முன் கேட்டார் மெக்கானிக்கிடம்.

"ஆமா என்ன பிரச்சனை? எப்படி இவ்வளாவு வேகமா கரெக்ட் பண்ணினீங்க?"

"அதுவா வேற ஒண்ணும் இல்ல. உங்க கார் டிக்கில இருந்த பவுலிங் பால் (Bowling Ball)ஐ எடுத்துட்டேன்"

Iniyan
19-04-2005, 02:06 PM
அம்மாஞ்சி பள்ளிக்கூட டீச்சராக பணி புரிந்து வந்தார். புது வருடம் பிறந்து புது வகுப்பிற்கு வந்த மாணவர்கள் எல்லோரும் அம்மாஞ்சிக்கு பல வித பரிசுகள் கொணர்ந்தனர்.

உள்ளூர் பூக்கடைக்காரரின் மகன் ஒரு சின்ன கூடை கொண்டு வந்திருந்தான். அதைப் பெற்றுக் கொண்ட அம்மாஞ்சி அதை மோந்து பார்த்து விட்டு "இது என்ன பூக்கூடையா?" என்றார். அந்த மாணவனுக்கு சந்தோசம் தாங்கல. "எப்படி சார் கரக்டா கண்டுபிடிச்சீங்க?" "எல்லாம் ஒரு அனுமானம் தான்" என சிரித்தார் அம்மாஞ்சி.

அடுத்து உள்ளூர் சுவீட் ஸ்டால் ஓனர் பொண்ணு ஒரு சின்ன பெட்டி கொடுத்தாள். அதை ஆட்டிப் பார்த்த அம்மாஞ்சி "என்னம்மா எனக்கு ஸ்வீட்டா? ரொம்ப தேங்கஸ்" என்க, அந்த பொ பொண்ணுக்கும் சந்தோசம்.

அடுத்து வந்தது உள்ளூர் ஒயின் ஷாப் ஓனர் பையன். அவன் கொண்டு வந்த பேக்கேஜை கையில் வாங்கிய அம்மாஞ்சி பார்த்தார். ஓரு ஓரத்தில் கொஞ்சமாய் ஈரமாய் இருக்க "என்ன இது? ஒயினா?" என்றார். "இல்லை சார்" இது பையன். அம்மாஞ்சிக்கு ஆச்சர்யம். அட இவளாவு நேரம் சரியாக அனுமானித்த தன்னால் இதை அனுமானிக்க முடியவில்லையே என மீண்டும் பார்சலை நன்கு திருப்பி திருப்பி பார்த்தார். ஒன்றும் புலப்படவில்லை. பயல் இன்னும் ஆர்வமாய் டீச்சர் மூஞ்சியையே பார்த்துக் கொண்டிருக்க சரியான பதில் சொல்ல வேண்டி இப்போது அம்மாஞ்சி ஈரமாய் ஒழுகி இருந்த இடத்தில் தன் விரலை வைத்து தொட்டு எடுத்து தன் நாக்கில் வைத்து ருசி பார்த்து "ஹேய் கண்டு பிடிச்சிட்டேன். இது ஷாம்பெய்ன் தானே?" என்றார். பயல் இதுக்கும் இல்லை என தலை அசைக்க அம்மாஞ்சி "இது என்னானு தெரியலப்பா. நீயே சொல்லிடு" என்றார்.

"அது ஒரு நாய்க்குட்டி சார்" என்றான் பையன்.

Iniyan
19-04-2005, 02:07 PM
நீந்துவது உடலுக்கு நல்லதென்றால் சுறா மீன்கள் ஏன் அபப்டி பெரிதாக உருண்டையாக ஷகிலா மாதிரி இருக்கின்றன ஸ்லிம்மாக சிம்ரன் மாதிரி இல்லாமல்?

Iniyan
19-04-2005, 02:07 PM
வட மாநிலம் ஒன்றில் நிகழ்ந்த தீ விபத்தை படம் பிடிக்க அம்மாஞ்சியை போட்டோ கிராபராக அனுப்பினர். அங்கே போன அம்மாஞ்சி அதிக புகை மற்றும் வெப்பம் காரணமாக தீயின் அருகில் செல்ல இயலவில்லை. எனவே ஒரு சிறிய விமானத்தை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு விமானத்தில் இருந்து போட்டோ எடுக்கலாம் என முடிவு செய்து ஹெட் ஆபீசுக்கு போன் பண்ணி சொன்னார் அம்மாஞ்சி. ஹெட் ஆபீஸ் இதற்கு ஒப்புக் கொண்டு அவர்களே ஒரு விமானம் வாடைக்குப் பேசி அமர்த்தி விட்டு அம்மாஞ்சியிடம் போனில் பக்கத்தில் இருக்கும் ஏர்போர்ட்டில் காத்திருக்கும் விமானத்திற்கு செல்லுமாறு வேண்டினர்.

அம்மாஞ்சியும் அவசரம் அவசரமாக பக்கத்தில் இருக்கு ஏர்போர்ட் போனார். அங்கே ஒரு சின்ன விமானம் கிளம்பத் தயாராக இன்ஜின் ஓட காத்திருந்தது. சட்டென தன் பேக்கை விமானத்துள் தூக்கிப் போட்டு விமானத்தின் பக்கத்தில் நின்றிருந்த விமானியிடம் "போகலாம் சார். லேட் ஆகுது" என்றார். மிக விரைவில் விமானம் வானில் பறக்கத் தொடங்கியது.

அம்மாஞ்சி விமானியிடம் "இப்ப அந்த தீ விபத்து நடந்த ஏரியால போய் முடிஞ்ச அளவு தாழ்வா பறந்து ரெண்டு ரவுண்ட அடிங்க. நான் போட்டோ எடுத்துக்கிர்றேன்"

விமானி குழம்பியவறாக "போட்டோவா? எதுக்கு?"

அம்மாஞ்சிக்கு கடுப்பு. அதை மறைத்தபடி சொன்னார். "எதுக்கா? எதுக்குன்னா நான் ஒரு போட்டோகிராபர். போட்டோ எடுக்கிறது என் தொழில் என்றார்.

"அப்படீன்னா இன்னிக்கு எனக்கு எப்படி விமானத்தை தரையிறக்குதுன்னு சொல்லித் தர வந்த விமானம் ஓட்ட பயிற்சி தர்றவர் இல்லியா நீங்க?" என்றார் விமானி இப்போது.

gragavan
20-04-2005, 05:03 AM
நாய்க்குட்டி - அடடா! அம்மாஞ்சி...அம்மாஞ்சி.....

Iniyan
20-04-2005, 02:08 PM
பஸ் ஸ்டேசன்ல பஸ் நிற்கும்
டிரய்ன் ஸ்டேசன்ல டிரய்ன் நிற்கும்.


என் ஆபீஸ் டெஸ்க்ல வொர்க் ஸ்டேசன் ஒண்ணு இருக்கு

Iniyan
20-04-2005, 02:08 PM
ஆசிரியர் - தண்ணீருக்கான வேதிப் பெயர் என்ன?

அம்மாஞ்சி - HJKLMNO

ஆசிரியர் - என்ன உளர்றே?

அம்மாஞ்சி - நேத்து நீங்க தானே சொன்னீங்க. H to Oன்னு?

Iniyan
20-04-2005, 02:09 PM
இதென்ன இப்படி கண்றாவியா சாக்ஸ் போட்டு இருக்கீங்க. ஒண்ணு பச்சை கலர்ல இன்னோண்ணு சிவப்பு கலர்லேன்னு?

அட அத ஏன் கேக்குறீங்க. கடைக்காரன் என்னய நல்லா ஏமாத்திட்டான். இதே மாதிரி பச்சையும் செவப்புமா இன்னோரு ஜோடி சாக்ஸ் வேற இருக்கு எங்க வீட்டுல.

Iniyan
20-04-2005, 02:09 PM
ஆசிரியர் : எனது நாய் பற்றி கட்டுரை எழுதிட்டு வரச் சொன்னா, நீ உங்க அண்ணன் எழுதுன அதே கட்டுரைய காப்பியா அடிச்சிட்டு வந்துருக்கே?

அம்மாஞ்சி : இல்ல சார். நானும் அதே நாய பத்தி தான் எழுதி இருக்கேன். அதனால தான் உங்களுக்கு அப்படி தெரியுது.

Iniyan
20-04-2005, 02:09 PM
ஒரு நாள் இரவு. பயங்கர மழையும் புயலுமாக இருக்க ஹெலிகாப்டரில் இருந்த ஹெலிகாப்டர் பைலட் கண்ட்ரோல் ரூமுடன் ரேடியோ மூலம் பேசிக் கொண்டிருந்தார்.

பைலட் - சார், நான் இப்போ ஹெலி பேட் Aக்கு நேர் மேலே 3000 அடி உயரத்தில் தரை இறங்க உத்தரவு வேண்டி காத்துக் கொண்டிருக்கிறேன்

பதில் - ஆர் யு ஷ்யூர்? ஹெலிபேட் Aக்கு மேல் நான் அல்லவா காத்து இருக்கிறேன் தரை இறங்க?

கொஞ்ச நேர அமைதிக்குப் பின் பைலட்

"யோவ் அம்மாஞ்சி, நீ என்னோட கோ பைலட்டுய்யா? கொழப்பாதே"

Iniyan
20-04-2005, 02:22 PM
அம்மாஞ்சி காரில் வேகமாகப் போனதற்காக ஒரு போலீஸ் அதிகாரி அம்மாஞ்சியை பிடித்து விட்டார்.

இப்போது விசாரணை.

போலீஸ் - சார், உங்க லைசன்சும், கார் ரிஜிஸ்ட்ரேசனும் தாங்க.

அம்மாஞ்சி - எனக்கு லைசன்ஸ் இல்ல.

போலீஸ் - என்னது லைசன்ஸ் இல்லியா? அப்ப ரிஜிஸ்ட்ரேசனாவது தாங்க.

அம்மாஞ்சி - ரிஜிஸ்ட்ரேசனும் இல்ல. இது என் காரே இல்லை. இப்பத் தான் திருடிக்கிட்டு வந்துகிட்டு இருக்கேன்.

அம்மாஞ்சியின் தைரியத்தை பார்த்து அரண்டு போன போலீஸ்காரர் "எங்கேர்ந்து திருடிகிட்டு வாரே?"

"அண்ணா நகர் சிக்ஸ்த் பிளாக்ல இந்த கார் ஓனர் கார்ல ஏறப் போனப்போ அவர சுட்டுட்டு இந்த கார கெளப்பிகிட்டு வந்துட்டேன். அவர சுட்ட துப்பாக்கி அதே அந்த க்ளவ் பாக்ஸ்ல இருக்கு. ஓனரோட பொணம் கார் டிக்கில இருக்கு"

ஆகா சரியான திமிர் பிடிச்ச திருடன் தான் மாட்டி இருக்கான். தன்னால தனியா இவன் ஹேண்டில் பண்ண முடியாதுன்னு முடிவெடுத்த போலீஸ்காரர் ஸ்டேசன வாக்கி டாக்கில கூப்பிட்டு இன்ஸ்பெகட்ர் இன்னும் ரெண்டு போலீஸ்காரங்கள உதவிக்கு கூப்பிட்டாரு.

இப்ப அம்மஞ்சி கார சுத்தி ஒரே போலீஸ் படை. கைல துப்பாக்கியோட இன்ஸ்பெக்டர் அம்மாஞ்சி கிட்ட வந்தார்.

"என்னடா திமிரா? கார் ஓனர சுட்டு கொன்னு பொணத்த டிக்கில வச்சுகிட்டு சுட்ட துப்பாகிய கார்லயே வச்சிகிட்டு, கார திருடிகிட்டு வந்திருக்கேன்னு எங்க கான்ஸ்டபிள் கிட்டயே சொன்னியாமே?"

அம்மாஞ்சி ஆச்சர்யமாய் வாய் பிளந்தார். "என்ன சார் உளர்றீங்க? நான் அப்படி ஏதும் சொல்லலியே?"

இன்ஸ்பெக்டர் கார் டிக்கி திறந்து பார்க்க பிணம் இல்லை. காரில் துப்பாகியும் இல்லை. இன்ஸ்பெக்டரிடம் அம்மாஞ்சி காட்டிய லைசன்சும் கார் ரிஜிஸ்ட்ரேசனும் சரியாகவே இருந்தது.

குழம்பிப் போன இன்ஸ்பெக்டர் சொன்னார். "சாரி சார். இந்த கான்ஸ்டபிள் தான் நீங்க இதெல்லாம் சொன்னீங்கன்னு சொன்னார்"

அம்மாஞ்சி "ஆஹா. அப்படியே உங்க கான்ஸ்டபிள் நான் படு வேகமா கார் ஓட்டிகிட்டு வந்தேன்னும் சொல்லி இருப்பாரே" என்றார்.

Iniyan
20-04-2005, 02:55 PM
அம்மாஞ்சிக்கு 7 குழந்தைகள். அவர் வாடகைக்கு வீடு தேடிய போது அவரது பெரிய குடும்பத்தைப் பார்த்து யாரும் வீடு தரவில்லை. அம்மஞ்சி பொய் சொல்வதில்லை என்று வேறு சத்தியம் செய்திருந்தார். நன்கு யோசித்துப் பார்த்த அம்மாஞ்சி தன் நான்கு சின்னக் குழந்தைகளை அவரின் மனைவியுடன் பக்கத்தில் இருக்கும் கல்லறைத் தோட்டத்திற்கு அனுப்பி அங்கிருக்கும் அம்மாஞ்சியின் அம்மா கல்லறையை வணங்கி வரச் சொன்னார். இப்போது அம்மாஞ்சி தன் மூன்று மூத்த குழந்தைகளுடன் ஒரு வாடகை வீடு பார்க்கப் போனார்.

வீட்டு ஓனர் உங்களுக்கு எத்தனை கொழந்தைகள் எனக் கேட்க ஒரு பெருமூச்சுடன் அம்மாஞ்சி சொன்னார்.

"எனக்கு மொத்தம் 7 குழந்தைகள். ஆனா அதுல நாலு பேர் இப்ப அவங்க அம்மா கூட கல்லறைத் தோட்டத்துல இருக்காங்க"

உடனே வீடு கிடைத்து விட்டது அம்மாஞ்சிக்கு.

பரஞ்சோதி
20-04-2005, 04:25 PM
இனியன் தொடர்ந்து கொடுங்க, நாங்களும் படித்து மகிழ்கிறோம்.

Iniyan
21-04-2005, 06:47 PM
என்னாங்க தேடி தேடி அலைஞ்சி மேட்டர் கொடுத்தா அண்ணன் பரம்ஸ் கமெண்ட் தவிர வேறே யார் கமெண்ட்டும் காணோமே

பரஞ்சோதி
21-04-2005, 07:52 PM
அது ஒன்றும் இல்லை இனியன்,

எங்கே அம்மாஞ்சியின் செயல்களை படித்து கருத்து சொன்னால் அம்மாஞ்சி என்று அவர்களையும் சொல்லி விடுவீங்களோ என்று பயந்து போய் இருப்பாங்க.

வாணி
22-04-2005, 01:13 AM
என்னாங்க தேடி தேடி அலைஞ்சி மேட்டர் கொடுத்தா அண்ணன் பரம்ஸ் கமெண்ட் தவிர வேறே யார் கமெண்ட்டும் காணோமே


இனியன் அண்ணா! வருத்தபட வேண்டாம்
அதிமேதாவி அம்மாஞ்சி நல்ல அறிவாளிதான். நல்லா சிரிக்கவைக்கிறார்.
தொடர்ந்து எழுதுங்கள்.

gragavan
22-04-2005, 05:28 AM
நேத்து சரியாப் பாக்கலை இனியன். இன்னைக்குதான் படிச்சேன். நல்ல நகைச்சுவைத் துணுக்குகள்.

அன்புடன்,
கோ.இராகவன்

Iniyan
22-04-2005, 07:57 PM
ரொம்ப நன்றி வாணி மற்றும் ராகவன் அவர்களுக்கு. ஆசை ஆசையாய் எழுதிட்டு அஞ்சு நிமிசத்துக்கொரு தரம் யாராவது பதில் எழுதி இருக்காங்களான்னு அவாவா இருக்கு. அதான்

சுவேதா
22-04-2005, 08:49 PM
நன்றி இனியன்
உங்களது நகைச்சுவை துனுக்குகள் மிகவும் அருமையாக உள்ளது மேலும் எழுத வாழ்த்துக்கள்!

முத்து
22-04-2005, 10:59 PM
இனியன்,
வழக்கம்போலவே உங்கள் அம்மாஞ்சி கலக்குகிறார் , கூடவே நீங்களும். :)

Iniyan
23-04-2005, 01:33 AM
வாங்க முத்து வாங்க. என்னடா ரொம்ப நாளா உங்கள காணோமேன்னு நெனச்சேன்.

Iniyan
28-04-2005, 05:00 PM
ஒரு பெரும் பணக்காரர் அவரது ஐம்பதாவது பிறந்த நாளுக்காக பெரிய பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அவரது மாளிகையில் இருக்கும் பெரிய நீச்சல் குளத்தில் இரண்டு பெரிய சுறாமீன்கள் நீந்திக் கொண்டிருந்தன. வந்திருந்த விருந்தினர்களைப் பார்த்து அவர் அறிவித்தார்.

"இந்த நீச்சல் குளத்தில் தைரியமாகக் குதித்தது நீந்தி அந்தப் பக்கம் கரையேறும் ஒருவனுக்கு அவன் என்ன கேட்டாலும் தருவேன்"

கொஞ்ச நேர அமைதிக்குப் பின்னர் திடீரென யாரோ தண்ணீரில் குதிக்கும் சப்தம். பார்த்தால் நம்ம அம்மாஞ்சி தான். சுறாமீன்களுக்கு போக்கு காட்டி வேகம் வேகமாய் நீந்தி அந்தபபக்கம் கரை ஏறினார். அனைவரும் முதலில் அதிர்ச்சியில் நின்றாலும் பின்னர் ஒரே கரகோசம்.

பணக்காரர் சொன்னார். "வாவ். உங்கள் தைரியத்தை பெரிதும் பாராட்டுகிறேன். என்ன வேண்டுமோ கேளூங்கள்"

அம்மாஞ்சி சொன்னார் "முதல்ல என்னை உள்ள தள்ளி விட்ட நாய் யாருன்னு தெரியனும்"

சுவேதா
29-04-2005, 11:03 AM
ஹி ஹி அவரை தள்ளிவிட்டது நாயா??? நான் நினைத்தேன் முதலில் அம்மாங்சியே போய் தயிரியமாக குதித்தார் என்று நினைத்தேன். ஹி ஹி

gragavan
02-05-2005, 05:10 AM
எந்தத் துன்பம் வந்தாலும் தப்பிப்பது அம்மாஞ்சியின் சாமர்த்தியம். அம்மாஞ்சி புகழ் ஓங்குக.

அன்புடன்,
கோ.இராகவன்

அறிஞர்
04-05-2005, 09:02 AM
இது மாதிரி ஜோக் முன்பே படித்தாலும்.. மீண்டும் படித்ததில் மகிழ்ச்சி....

தொடருங்கள்...

pradeepkt
04-05-2005, 09:05 AM
ஹி ஹி அவரை தள்ளிவிட்டது நாயா??? நான் நினைத்தேன் முதலில் அம்மாங்சியே போய் தயிரியமாக குதித்தார் என்று நினைத்தேன். ஹி ஹி

இதுக்கு அம்மாஞ்சியே தேவலாம் போல...
சுவேதா... சும்மாச்சிக்கும் சொன்னேன்.

Iniyan
17-05-2005, 02:23 PM
அம்மாஞ்சியின் மனைவி ஒரு நாள் நள்ளிரவில் விழித்துப் பார்த்த போது கட்டிலில் அம்மாஞ்சி பக்கத்தில் இல்லை. எங்கே இவர் எனத் தேடி வந்த போது ஹாலில் அரை இருட்டில் லைட் ஏதும் போடாமல் சோபாவில் உட்கார்ந்து ரொம்ப ஆழ்ந்த சிந்தனையில் இருந்தார்.

"என்னங்க யோசிச்சிகிட்டு இருக்கீங்க இன்னேரம்?"

"உனக்கு ஞாபகம் இருக்கா 15 வருசம் முன்னாடி நாம ரெண்டு பேரும் காதலிச்சிகிட்டு இருந்தோம். அப்ப உனக்கு வயசு 16 தான்"

"நல்லா ஞாபகம் இருக்குங்க. அதுக்கென்ன இப்போ?"

"இதே தேதில தான் நாம ரெண்டு பேரும் பூங்கால முத்தம் கொடுத்துகிட்டு இருந்தப்ப உங்க அப்பா பாத்துட்டாரு. ஞாபகம் இருக்கா?"

"அட அந்த தேதிய கூட ஞாபகம் வச்சிருக்கீங்களே?" இப்போது அம்மாஞ்சியின் மனைவி உண்மையில் நெகிழ்ந்து போய் விட்டார்.

"அதுக்கப்பறம் உங்க போலீஸ்கார அப்பா உங்க வக்கீல் அண்ணன் எல்லோரும் சேர்ந்து நான் உடனே உன்னைய கட்டிக்கணும் இல்லேன்னா மைனர் பொண்ணு மனச கெடுத்துட்டேன்னு கேஸ் போட்டு 15 வருசம் ஜெயில்ல தள்ளிருவோம்னு மெரட்டி..... ஞாபகம் இருக்கா?"

"ஆமாங்க. எப்படி அதையெல்லாம் மறக்க முடியும்?" என்றார் மென்மையாக அம்மாஞ்சியின் மனைவி.

"அப்படி நடந்து நான் ஜெயிலுக்கு போயிருந்தா இன்னிக்கோட அந்த 15 வருச தண்டனை முடிஞ்சி நான் சுதந்திரமா வெளில வந்திருப்பேன்" என்றார் அம்மாஞ்சி சோகமாக.

மன்மதன்
17-05-2005, 02:32 PM
ஆயுள் தண்டனைக்கு 15 வருட தண்டனையே மேல். :D :D
அன்புடன்
மன்மதன்

Iniyan
17-05-2005, 02:32 PM
அம்மாஞ்சி ஒரு சின்ன தீவில் வசித்து வந்தார். அவர் வேலை பார்க்கும் அலுவலகத்திற்கு படகு மூலம் தான் பயணிக்க வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு படகு தான். படகை விட்டு விட்டால் அடுத்த படகுக்காக காத்திருப்பதிலேயே ஒரு மணி நேரம் வீணாகி விடும். ஒரு நாள் மாலை வேலை முடிந்து வீடு திரும்ப படகுத் துறைக்கு வந்து கொண்டிருந்தார் அம்மாஞ்சி. அப்போ துறையில் இருந்து ஒரு 15 அடி தூரத்தில் படகினை பார்த்தார். அடடா. இந்த படக விட்டுட்டா இன்னும் ஒரு மணி நேரம் வீணா காத்திருக்கனுமே என்று அவசர அவசரமாக ஓடி சென்று படகுத்துறையின் விளிம்பு வரை போய் கஷ்டப்பட்டு தாவி குதித்தார் படகில். குதித்த வேகத்தில் கைகளை கீழே ஊன்றி முழங்காலிட்டு சின்ன சின்ன சிரராய்ப்புகளோடு எப்படியோ சமாளித்து படகில் இருந்தார் அம்மாஞ்சி. இப்போ மெல்ல எழுந்து திகைத்துப் போய் பார்த்துக் கொண்டிருந்த படகில் இருந்த மக்களைப் பார்த்து பெருமையாக "அப்பாடி. ஒரு வழியா படக பிடிச்சுட்டேன். இல்லேன்னா இன்னும் ஒரு மணி நேரமுல்ல வீணா காத்திருக்கணும்?" என்றார்.

படகில் இருந்த ஒருவர் சொன்னார். "அட. ஒரு நிமிசம் காத்திருந்தீங்கன்னா படகு தான் கரைக்கு வந்திருக்குமே? நாங்கள்லாம் இறங்கினப்பறம் நீங்க பாதுகாப்பா படகுல ஏறி இருக்கலாமே?"

Iniyan
17-05-2005, 02:39 PM
அம்மாஞ்சி ஒரு முறை நடுக்காட்டில் நர மாமிசம் உண்ணும் சில ஆதி வாசிகளிடம் மாட்டிக் கொண்டார்.

"ஆண்டவா. நான் தொலைஞ்சேன்" என்று பயத்தில் உரக்கச் சப்தமிட்டார்.

அப்போது வானில் இருந்து ஒரு அசீரரி ஒலித்தது.

"இல்லை மகனே இல்லை. முன் காலுக்கடியில் இருக்க்கும் அந்த கல்லை எடுத்து அந்த ஆதி வாசிகளின் தலைவனின் தலையில் எறி"

அம்மாஞ்சிக்கு எங்கிருந்து தான் அந்த தைரியம் வந்ததோ தெரியாது. குனிந்து கல்லை எடுத்துக் கொண்டு எதிரில் இருந்த ஆதி வாசிகளின் தலைவன் மேல் பாய்ந்தார். கையில் இருந்த கல்லாலேயே அவன் தலையில் அடி அடி என அடித்து ரத்தம் வழிய தலைவனை கீழே சாய்த்து விட்டு நிமிர்ந்தார். இப்போது ஆதி வாசிகள் எல்லாம் அதிர்ச்சியும் கோபமுமாக அம்மாஞ்சியை சூழ்ந்து கொள்ள திரும்ப அசீரரி.

"இப்ப,,,இப்ப..இப்ப தான் நீ தொலைஞ்சே!"

Iniyan
17-05-2005, 02:46 PM
ஒரு நாள் அம்மாஞ்சி போஸ்ட் ஆபீசில் இருக்கும் மேஜையில் நின்று கொண்டு ஏகப்பட்ட இதய வடிவிலான அழகிய காதலர் தின வாழ்த்துகளில் ஏதோ எழுதி எழுதி ஒட்டி அனுப்பத் தயார் செய்து கொண்டிருந்தார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவன் ஒருவன் ஆர்வம் தாங்காமல் "சார், நீங்க ஒரே ஆளு இத்தனை பொண்ணுங்களுக்கு காதலர் தின வாழ்த்து அனுப்புறீங்களா? பெரிய ஆளு தான் சார் நீங்க?" என்றான்.

"அட. அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. சும்மா ஒரு 1000 வாழ்த்தட்டை வாங்கி 'Guess Who?' அப்படின்னு எழுதி எல்லோருக்கும் வருசா வருசம் அனுப்புறது என் வழக்கம்"

இப்ப பையன் சுத்தமா குழம்பிட்டான். "ஆயிரம் பேருக்கா? அதும் யாரு அனுப்பினது போடாம சும்மா 'Guess Who?' ன்னு எழுதியா? ஏன் சார்?"

அம்மஞ்சி சொன்னார். "நான் ஒரு விவாகரத்து வக்கீல்".

பரஞ்சோதி
17-05-2005, 07:43 PM
படகு மற்றும் காட்டுவாசி சிரிப்புகள் கலக்கல்.

இனியன் விடாமல் சிரிக்க வைக்கிறீங்க.

gragavan
18-05-2005, 05:05 AM
மீண்டும் அம்மாஞ்சி. வழக்கம் போல கலக்கலா!

இனியன் நீங்களும் கலக்குறீங்க. அது சரி. இப்படியா அம்மாஞ்சிய ஆதிவாசிகள் கிட்ட மாட்டி விடுறது? இனிமே அவர மாட்டி விடாதீங்க. அம்மாஞ்சிக்கு ஒரு கொடுமைன்னா நாங்க சும்மாயிருக்க மாட்டோம்.

மன்மதன்
18-05-2005, 05:08 AM
காட்டுவாசி சிரிப்பு மிக அருமை.. வடிவேல், பார்த்திபன் படத்தில் வைக்கலாம்..
அன்புடன்
மன்மதன்

pradeepkt
18-05-2005, 05:46 AM
அம்மாஞ்சி விவாகரத்து வக்கீலானால் என்னாகும் என்றறிந்தாலே திக்குங்குது.

mania
18-05-2005, 06:29 AM
அருமை......அருமை.....அருமை.....இனியன்....பாராட்டுகள்
அன்புடன்
மணியா..;)

Iniyan
18-05-2005, 01:37 PM
அம்மாஞ்சி ஒரு பல் மருத்துவரிடம் சென்றார்.

"ஒரு பல் பிடுங்க எவ்ளோ பணம் சார்ஜ் பண்ணுவீங்க?"

"1000 ரூபாய் சார்"

"ம்ம்ம்ம். அவ்ளோ பணம் என்கிட்ட இல்லையே?"

"அப்படின்னா, வலி கொறைக்க கொடுக்கும் மயக்க மருந்து இல்லாமன்னா 500 ரூபாய்க்கு பண்ணலாம்"

"500? இதும் ரொம்ப ஜாஸ்தி சார்"

"சரிங்க. அப்படின்னா சுத்தமெல்லாம் செய்யாம வெறுமனே கொரடு வச்சி பிடுங்கீறலாம். 250 ரூபாய் தான் ஆகும்"

"ம்ம்ம்ம்ம்...."

அம்மாஞ்சி இன்னும் யோசிப்பதை பார்த்த பல் மருத்துவருக்கு எரிச்சல். இருந்தாலும் சரி என "கடைசியா ஒரே ஒரு வழி இருக்கு சார். என் கிட்ட சில மாணவர்கள் டிரய்னிங் எடுத்துக்கிறாங்க. அவங்கள வச்சி ஒரு சோதனையா பல்ல பிடுங்க வைச்சா 100 ரூபாய்ல முடிஞ்சிரும்"

"அப்படின்னா சரி. என் பொண்டாட்டிக்கு நாளைக்கு சாயங்காலம் பல்லு பிடுங்க ஒரு அப்பாய்ண்ட்மெண்ட் கொடுங்க" என்றார் அம்மாஞ்சி.

Iniyan
18-05-2005, 01:38 PM
அம்மாஞ்சி: எங்க தாத்தா எப்ப சாகப் போறார்னு அவருக்கு முன்னாடியே தெரியும். அட இவ்வளவு ஏன் தேதி, கிழமை...அட அவர் சாகப்போற நேரம் கூட சரியா தெரியும்னா பாத்துக்கயேன்.

நண்பர்: ஆச்சர்யமா இருக்கே? இவ்ளோ துல்லியமா அவருக்கு எப்படி இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சது?

அம்மாஞ்சி: ஒரு நீதிபதி எங்க தாத்தா கிட்ட சொன்னாராம்.

Iniyan
18-05-2005, 01:38 PM
ஒரு நாள் அம்மாஞ்சி தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அப்படியே நில். இன்னும் ஒரு அடி கூட நகராதே. நகர்ந்தால் அடுத்த வீட்டு மாடியில் இருந்து விழும் ஒரு செங்கல் உன் மண்டையைப் பிளந்து விடும்" என ஒரு அசீரரி கேட்டது. கேட்டதை நம்பவும் முடியாமல் நம்பாமல் இருக்கவும் முடியாமல் திகைத்து நின்ர போது என்ன ஆச்சர்யம்? அதே போல ஒரு பெரிய செங்கல் அவருக்கு முன்னால் விழுந்து உடைந்து சிதறியது.

அடுத்த நாள் அம்மாஞ்சி ஒரு சாலையை கடக்கப் போகும் போது திரும்ப அதே அசீரரி. "நில். போகாதே. ஒரு குடிகாரன் கண்டபடி குடித்து விட்டு கிறுக்குத்தனமாய் கார் ஓட்டி வருகிறான். உன் மேல் மோதி விடுவான்" அதே போல அம்மாஞ்சி அந்த குடிகாரனின் காரில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பினார்.

அம்மாஞ்சி இப்போது "யார் நீ? எங்கே இருக்கே?" என்றார்.

அசீரரி "நான் தான் உன்னை பாதுகாக்கும் உன் குல தேவதை"

அம்மாஞ்சி " அடப்பாவி. அப்படீன்னா எனக்கு போன வருசம் கல்யாணமாச்சே. அப்போ எங்க போயிருந்தே?"

மன்மதன்
18-05-2005, 01:42 PM
ஆகா.. ஆகா.. 3மே ஜோர் .. ஜோக்ஸ்...
அன்புடன்
மன்மதன்

Iniyan
18-05-2005, 11:38 PM
அம்மாஞ்சி இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார் ஒரு விமான நிலையத்தில். அப்போது அங்கே வந்த ஒருவர் "சார் மணி என்ன சார்?"

அம்மாஞ்சி இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்து விட்டு தன் மணிக்கட்டைத் திருப்பி பார்த்து விட்டு "ஆறாக 10 நிமிசம் இருக்கு".

"வாவ். உங்க வாட்ச் நல்லா இருக்கு சார். எங்க வாங்கினீங்க?"

"தேங்க்ஸ். இது நானே டிசைன் பண்ணின வாட்ச். இங்க பாருங்க" என்று தன் வாட்சை காட்டினார். ஒரு பொத்தானை அமுக்க அமுக்க உலகின் உள்ள எல்லா நேரங்களையும் நொடி மாறாமல் காட்டுவதுடன், உலகில் உள்ள 86 மெட்ரோ நகரங்களில் நேரம் மற்றும் தட்ப வெப்பம் காண்பித்தது. அதே பொத்தானை மீண்டும் அமுக்க அமுக்க உலகின் பல்வேறு மொழிகளிலும் பலவிதமான அழகிய குரல்களில் அந்த கடிகாரம் நேரம் சொன்னது. இதை பார்த்த அடுத்தவருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். "அட இது மட்டுமில்ல. இதுல இந்த புள்ளி வந்து GPS சாட்டிலைட் மூலமா நான் எங்க இருக்கேன்னு டிராக் பண்ணிகிட்டே இருக்கும்". அப்புறம் பல நகரங்களின் தெளிவான மேப், இரவு விளக்கு, மேப்பினை பக்கத்தில் இருக்கும் சுவற்றில் பெரிதாக்கி தெரிய வைக்கும் திறன், அதில் இருந்த லேசர் பாய்ண்ட்டர் இன்னும் என்னென்னமோ காட்டினார். பார்த்தவர் அசந்து போய் விட்டார்.

"நீங்களே டிசைன் பண்னினதுன்னு சொன்னீங்களே? இத எனக்கு விலைக்குத் தருவீங்களா???"

"இல்ல சார். இன்னும் இது மார்க்கட்டுக்காக ரெடி ஆகல. இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன சிசயங்கள் எல்லாம் சரி பண்ண வேண்டி இருக்கு"

"அடப்போங்க சார். அப்படியே இந்த வாட்ச எனக்கு வெலைக்கு கொடுத்துடுங்க"

"இல்ல சார்"

"$1000 தர்றேன் சார்"

"அட இது இன்னும் விற்பனைக்கு ரெடி ஆகலை"

"சரி. ஒரே விலை $3000'

"சொன்னா கேளுங்க.."

"ம்ஹீம். $5000? இப்பவே தாங்க"

"இல்ல...."

"ம் . ஒண்ணும் பேசாதீங்க. $7000. இப்ப என்ன சொல்றீங்க?"

"அட நெசமாவே இது இன்னும் முழுசா....."

"ரெடி ஆகலேன்னு தானே சொல்ல வர்றீங்க? ஒண்ணும் பேசாதீங்க. கடைசி வெல $10000. எனக்கு நீங்க இத கொடுத்தே தான் ஆகணும். இவ்வளாவு விரும்பி கேட்கிறேன்"

அம்மாஞ்சி யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த வாட்சுக்காக செலவழித்தது $2000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ $10000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் அம்மாஞ்சி அவரிடம் இருந்து $10000 வாங்கிக் கொண்டு வாட்சை கழட்டிக் கொடுத்தார். வாங்கியவர் ஆனந்தமாய் கையில் வாட்சை கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்.

"ஹலோ ஒரு நிமிசம்" இது அம்மாஞ்சி.

வாட்சை வாங்கியவர் "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப அம்மாஞ்சி சொன்னார் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி











































"அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"

Iniyan
18-05-2005, 11:45 PM
அம்மாஞ்சி ஒரு நாள் பாரில் ஃபுல் மப்பில் பக்கத்தில் இருந்த ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். "எனக்கு இது வரை மூணு கல்யாணம் ஆகி இருக்கு. இனிமே நான் வாழ்க்கைல கல்யாணமே பண்ணிக்க மாட்டேன். என் முத ரெண்டு பொண்டாட்டிகளும் ஒரு விஷக் காளான சாப்பிட்டு செத்துட்டாங்க. மூணாவது பொண்டாட்டி மண்டை உடைஞ்சி செத்துட்டா."

கேட்டுக் கொண்டிருந்தவர் அனுதாபத்துடன் சொன்னார். "இது எப்படி நடந்தது?"

அம்மாஞ்சி சொன்னார். "மூணாவது பொண்டாட்டி அந்த காளான சாப்பிட மாட்டேன்னுட்டா. அதான்...."

சுவேதா
19-05-2005, 02:12 AM
அம்மாஞ்சி: எங்க தாத்தா எப்ப சாகப் போறார்னு அவருக்கு முன்னாடியே தெரியும். அட இவ்வளவு ஏன் தேதி, கிழமை...அட அவர் சாகப்போற நேரம் கூட சரியா தெரியும்னா பாத்துக்கயேன்.

நண்பர்: ஆச்சர்யமா இருக்கே? இவ்ளோ துல்லியமா அவருக்கு எப்படி இதெல்லாம் முன்னாடியே தெரிஞ்சது?

அம்மாஞ்சி: ஒரு நீதிபதி எங்க தாத்தா கிட்ட சொன்னாராம்.

:D :D

சுவேதா
19-05-2005, 02:19 AM
அம்மாஞ்சி இரண்டு பெரிய சூட்கேசுகளுடன் நடக்க முடியாமல் நடந்து வந்து கொண்டிருந்தார் ஒரு விமான நிலையத்தில். அப்போது அங்கே வந்த ஒருவர் "சார் மணி என்ன சார்?"

அம்மாஞ்சி இரண்டு சூட்கேசுகளையும் கீழே வைத்து விட்டு தன் மணிக்கட்டைத் திருப்பி பார்த்து விட்டு "ஆறாக 10 நிமிசம் இருக்கு".

"வாவ். உங்க வாட்ச் நல்லா இருக்கு சார். எங்க வாங்கினீங்க?"

"தேங்க்ஸ். இது நானே டிசைன் பண்ணின வாட்ச். இங்க பாருங்க" என்று தன் வாட்சை காட்டினார். ஒரு பொத்தானை அமுக்க அமுக்க உலகின் உள்ள எல்லா நேரங்களையும் நொடி மாறாமல் காட்டுவதுடன், உலகில் உள்ள 86 மெட்ரோ நகரங்களில் நேரம் மற்றும் தட்ப வெப்பம் காண்பித்தது. அதே பொத்தானை மீண்டும் அமுக்க அமுக்க உலகின் பல்வேறு மொழிகளிலும் பலவிதமான அழகிய குரல்களில் அந்த கடிகாரம் நேரம் சொன்னது. இதை பார்த்த அடுத்தவருக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம். "அட இது மட்டுமில்ல. இதுல இந்த புள்ளி வந்து GPS சாட்டிலைட் மூலமா நான் எங்க இருக்கேன்னு டிராக் பண்ணிகிட்டே இருக்கும்". அப்புறம் பல நகரங்களின் தெளிவான மேப், இரவு விளக்கு, மேப்பினை பக்கத்தில் இருக்கும் சுவற்றில் பெரிதாக்கி தெரிய வைக்கும் திறன், அதில் இருந்த லேசர் பாய்ண்ட்டர் இன்னும் என்னென்னமோ காட்டினார். பார்த்தவர் அசந்து போய் விட்டார்.

"நீங்களே டிசைன் பண்னினதுன்னு சொன்னீங்களே? இத எனக்கு விலைக்குத் தருவீங்களா???"

"இல்ல சார். இன்னும் இது மார்க்கட்டுக்காக ரெடி ஆகல. இன்னும் கொஞ்சம் சின்ன சின்ன சிசயங்கள் எல்லாம் சரி பண்ண வேண்டி இருக்கு"

"அடப்போங்க சார். அப்படியே இந்த வாட்ச எனக்கு வெலைக்கு கொடுத்துடுங்க"

"இல்ல சார்"

"$1000 தர்றேன் சார்"

"அட இது இன்னும் விற்பனைக்கு ரெடி ஆகலை"

"சரி. ஒரே விலை $3000'

"சொன்னா கேளுங்க.."

"ம்ஹீம். $5000? இப்பவே தாங்க"

"இல்ல...."

"ம் . ஒண்ணும் பேசாதீங்க. $7000. இப்ப என்ன சொல்றீங்க?"

"அட நெசமாவே இது இன்னும் முழுசா....."

"ரெடி ஆகலேன்னு தானே சொல்ல வர்றீங்க? ஒண்ணும் பேசாதீங்க. கடைசி வெல $10000. எனக்கு நீங்க இத கொடுத்தே தான் ஆகணும். இவ்வளாவு விரும்பி கேட்கிறேன்"

அம்மாஞ்சி யோசித்து பார்த்தார். இது வரை இவர் இந்த வாட்சுக்காக செலவழித்தது $2000 மற்றும் 2 வருட உழைப்பு. இவர் தரும் பணமோ $10000. இதற்கு மேல் மறுக்க வழி இல்லாமல் அம்மாஞ்சி அவரிடம் இருந்து $10000 வாங்கிக் கொண்டு வாட்சை கழட்டிக் கொடுத்தார். வாங்கியவர் ஆனந்தமாய் கையில் வாட்சை கட்டிக் கொண்டு நன்றி செலுத்தி விட்டு வேகமாய் கிளம்பினார்.

"ஹலோ ஒரு நிமிசம்" இது அம்மாஞ்சி.

வாட்சை வாங்கியவர் "அடடா அதுக்குள்ள இவர் தன் மனச மாத்திகிட்டாரோ என பயந்த படி திரும்ப அம்மாஞ்சி சொன்னார் அவரிடம் அந்த இரண்டு பெரிய சூட்கேஸ்களை காட்டி













































"அந்த வாட்ச்சோட பேட்டரிகளை மறந்துட்டுப் போறீங்களே?"

:D:D ஆகா அம்மாஞ்சி மூளையே தனி மூளை

Iniyan
19-05-2005, 02:23 AM
நன்றி சகோதரி.....

பரஞ்சோதி
19-05-2005, 04:21 AM
ஆகா மூன்று பொண்டாட்டி சிரிப்பு அருமை.

இனியன் அந்த காளான் எங்கே கிடைக்கிறது?

(கண்டிப்பாக நான் உபயோகிக்க இல்லை)

thempavani
19-05-2005, 04:50 AM
அண்ணீ......................
அண்ணன் என்ன கேன்வி கேட்கிறார் பாருங்க


( அப்பாடா.... கோள் மூட்டியாச்சு...
இன்னைக்கு வீட்டுல சப்பாத்தி நகி..)

pradeepkt
19-05-2005, 05:01 AM
அதானே... அண்ணா சமயத்தில அம்மாஞ்சி மாதிரி அடிக்கடி முயற்சிக்கிறார்.
நானே அண்ணிகிட்ட போன்ல பேசலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன்.
நிற்க,
இனியன், சும்மா சுழட்டி அடிக்குது உங்க அம்மாஞ்சி சிரிப்புகள். நிறையக் கொடுங்கய்யா

gragavan
19-05-2005, 05:32 AM
அண்ணீ......................
அண்ணன் என்ன கேன்வி கேட்கிறார் பாருங்க


( அப்பாடா.... கோள் மூட்டியாச்சு...
இன்னைக்கு வீட்டுல சப்பாத்தி நகி..)தம்பிக்கு அந்தச் சாமர்த்தியமெல்லாம் ஏது.....இது வேற எதுக்கோயிருக்க்கும்....ஏந்தம்பி வீட்டுல எலித்தொல்லையிருக்கா?

mania
19-05-2005, 05:35 AM
அண்ணீ......................
அண்ணன் என்ன கேன்வி கேட்கிறார் பாருங்க


( அப்பாடா.... கோள் மூட்டியாச்சு...
இன்னைக்கு வீட்டுல சப்பாத்தி நகி..)

இன்னிக்கு மட்டும் சப்பாத்தி நஹியாகட்டும்....அப்புறம் பாருங்களேன் .....டெயிலி ஒரு தடவை பரம்ஸ் இதை பற்றி கேட்பான்.....ஹி....ஹி....ஹி.... (சொந்த அனுபவம் தான் )வாழ்க சப்பாத்தி.....
அன்புடன்
மணியா....:D

பரஞ்சோதி
19-05-2005, 05:38 AM
தம்பிக்கு அந்தச் சாமர்த்தியமெல்லாம் ஏது.....இது வேற எதுக்கோயிருக்க்கும்....ஏந்தம்பி வீட்டுல எலித்தொல்லையிருக்கா?

தம்பியின் மீது உண்மையான அக்கறை உங்களுக்கு தான் உண்டு அண்ணா.

மற்றவர்கள் இது தான் சாக்கு என்று போக்கு காட்டுறாங்க.

பரஞ்சோதி
19-05-2005, 05:41 AM
இன்னிக்கு மட்டும் சப்பாத்தி நஹியாகட்டும்....அப்புறம் பாருங்களேன் .....டெயிலி ஒரு தடவை பரம்ஸ் இதை பற்றி கேட்பான்.....ஹி....ஹி....ஹி.... (சொந்த அனுபவம் தான் )வாழ்க சப்பாத்தி.....
அன்புடன்
மணியா....:D

தலை, நீங்க போட்டி வைத்தால் மட்டுமே நான் சப்பாத்தி சாப்பிடுவேன் என்று மக்களுக்கு தெரியாது, அதான் இப்படி.

கொஞ்ச நாளைக்கு போட்டி எல்லாம் வைக்காதீங்க.

அறிஞர்
19-05-2005, 07:33 AM
நல்ல சிரிப்புக்கள்.. இனியன்... இன்னும் கொடுங்கள்....

என்ன பரம்ஸ்..... காளான் பற்றி கேட்கிறீங்க...

மணியாவுக்கு வாங்கி கொடுக்கவா.....

thempavani
19-05-2005, 08:41 AM
அறிஞரே... குசும்பு...

பரஞ்சோதி
19-05-2005, 09:15 AM
நல்ல சிரிப்புக்கள்.. இனியன்... இன்னும் கொடுங்கள்....

என்ன பரம்ஸ்..... காளான் பற்றி கேட்கிறீங்க...

மணியாவுக்கு வாங்கி கொடுக்கவா.....

இது எலியாவுக்கு கொடுக்க அறிஞரே!.

உங்க ஆராய்ச்சியில் தப்பிய எலி, இங்கே அட்டுழியம் செய்கிறது.

அறிஞர்
19-05-2005, 10:10 AM
இது எலியாவுக்கு கொடுக்க அறிஞரே!.

உங்க ஆராய்ச்சியில் தப்பிய எலி, இங்கே அட்டுழியம் செய்கிறது.

எப்படியோ.. ஒரு கூட்டத்தை அழிக்கும் முடிவோடு இருக்கிறீங்க...

Iniyan
21-05-2005, 11:26 AM
மூளைக்கு பயிற்சி தருவது ரொம்ப அவசியம் இதோ சில கேள்விகள். நீங்கள் அம்மாஞ்சியா? கண்டறிய

கேள்வி 1. டோஸ்ட்டரில் (toaster) என்ன போடுவீர்கள்?













































































விடை - ப்ரெட். டோஸ்ட் என பதில் சொல்லி இருந்தால் ம்ஹீம்.

கேள்வி 2 : 20 வருடங்களுக்கு முன்னால் ஜெர்மனியின் மேலாக 20000 அடி உயரத்தில் ஒரு விமானம் பரந்து கொண்டிருக்கிறது. [சின்ன வரலாறு கொசுறுத் தகவல் - அப்போது ஜெர்மனி கிழக்கு ஜெர்மனி மற்றும் மேற்கு ஜெர்மனி என இரண்டாக பிரிக்கப்பட்டு நடுவில் பெரிய தடுப்புச் சுவர் வேறு இருந்தது.] அந்த விமானத்தின் இரண்டு எஞ்சின்களில் ஏற்கன்வே ஒன்று பழுதாகி விட இருக்கும் இனோரு எஞ்சினும் மெல்ல செயலிழந்து கொண்டுள்ளது. வேறு வழி இல்லாமல் இப்போது பைலட் விமானத்தை தரையில் மோதி தரை இறக்க முடிவு செய்கிறார் [Crash Landing]. இப்போது துரதிர்ஷ்டவசமாக விமானம் தரை இறங்கும் முன்னரே கட்டுப்பாடிழந்து கீழே விழுந்து விடுகிறது. விழுந்த இடம் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்களுக்கிடையிலான ஆனால் இரு நாடுகளின் கட்டுப்பாட்டிலும் இல்லாத ஒரு சிறு பகுதி. இப்போது பிரச்சனை - தப்பியவர்களை எங்கே புதைப்பது? கிழக்கு ஜெர்மனியிலா ? இல்லை மேற்கு ஜெர்மனியிலா? இல்லை விமானம் விழுந்து நொருங்கிய இடத்திலேயா? இல்லை. அவர்களின் சொந்த நாட்டிலா???











































































































விடை - எங்கும் அல்ல. தப்பியவர்களை ஏன் புதைக்க வேண்டும்???


கேள்வி 3: [குறிப்பு - இதற்கு தயவு செய்து கால்குலேட்டர் பயன்படுத்த வேண்டாம்.]

தாங்கள் ஒரு பேருந்தினை ஓட்டிச் செல்கிறீர்கள். பாரீஸ் கார்னரில் 17 பேர் பேருந்தில் ஏறுகிறார்கள். அடுத்து அண்ணா சாலை சாந்தி தியேட்டர் நிறுத்தத்தில் 6 பேர் இறங்க, இன்னும் 9 பேர் ஏறுகிறார்கள். அடுத்து LIC ஸ்டாப்பில் 2 பேர் ஏற, 4 பேர் இறங்குகிறார்கள். தேனாம்பேட்டையில் 11 பேர் இறங்க, 16 பேர் ஏறுகிறார்கள். சைதாப்பேட்டையில் 3 பேர் ஏற, 9 பேர் இறங்குகிறார்கள். கடைசியில் தாம்பரம் வந்த போது 6 பேர் இறங்க, 3 பேர் ஏற...இப்போது கேள்வி - இப்பேருந்தின் ஓட்டுனர் பெயர் என்ன???










































































விடை: -உங்க பேரே உங்களுக்கு மறந்து போச்சா???

thempavani
21-05-2005, 12:43 PM
அண்ணா........

Iniyan
21-05-2005, 01:00 PM
சொல்லுங்க தேம்பா......

பரஞ்சோதி
21-05-2005, 01:06 PM
அண்ணா........

வெறும் அண்ணா இல்லை,

ஓட்டுநர் இனியன் அண்ணா என்று சொல்லுங்க. எவ்வளவு ஆவலா கேட்கிறார் பாருங்க.

சுவேதா
21-05-2005, 09:13 PM
ஹி ஹி
அண்ணா 3 வது கேள்வி ஏற்கனமே அறிந்தது அதத உங்கள் மூலம் மீண்டும் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி அண்ணா!

thempavani
22-05-2005, 07:00 AM
அண்ணா நீங்க கடிச்ச கடியில ஒண்ணுமே சொல்லத்தோணலை.....
அதான் பாதியிலே நிறுத்திட்டேன்......

மன்மதன்
22-05-2005, 08:25 AM
தப்பியவர்களை எங்கே புதைப்பது என்ற கேள்வி.. சற்றே சிந்திக்க வைத்தது :D :D
அன்புடன்
மன்மதன்

pradeepkt
23-05-2005, 05:36 AM
மன்மதனையே சிந்திக்க வைத்த மனிதருள் மாணிக்கம் இனியன் அவர்கள் வாழ்க வாழ்க.

:)

அறிஞர்
23-05-2005, 10:18 AM
இனியனுக்கு புதுப்பட்டமா....... வாழ்க.....

pradeepkt
23-05-2005, 10:29 AM
அறிஞரே உங்களுக்கும் ஒரு பட்டம் கொடுத்திருவமா?

அறிஞர்
23-05-2005, 12:09 PM
அறிஞரே உங்களுக்கும் ஒரு பட்டம் கொடுத்திருவமா?

உள்ள பட்டமே.. போதும் சாமி......

Iniyan
23-05-2005, 01:34 PM
என்ன பிரதீப் ? ஏதோ வலை விரிக்கிற மாதிரி தெரியுதே???

அறிஞர்
24-05-2005, 02:10 AM
என்ன பிரதீப் ? ஏதோ வலை விரிக்கிற மாதிரி தெரியுதே???

திருநெல்வேலிக்கே அல்வாவா.....

இதுக்கெல்லாம் மசியற ஆள் இல்லை.

பரஞ்சோதி
24-05-2005, 04:47 AM
உள்ள பட்டமே.. போதும் சாமி......

யாரு நம்ம அறிஞரா இப்படி பேசுவது, ஆச்சரியமாக இருக்குதே.

இது ஏதோ ஆராய்ச்சினால் ஏற்ப்பட்ட கோளாறு.

pradeepkt
24-05-2005, 05:39 AM
என்ன பிரதீப் ? ஏதோ வலை விரிக்கிற மாதிரி தெரியுதே???

நீங்க எப்பவுமே இப்படித்தான் கெட்டிக்காரரு.
கண்டு புடிச்சிட்டீங்களே. பாத்தீங்களா? அறிஞரு திரும்ப அல்வா பத்தியே யோசிக்கிறாரு.

அறிஞர்
24-05-2005, 06:04 AM
நீங்க எப்பவுமே இப்படித்தான் கெட்டிக்காரரு.
கண்டு புடிச்சிட்டீங்களே. பாத்தீங்களா? அறிஞரு திரும்ப அல்வா பத்தியே யோசிக்கிறாரு.
அல்வா கொடுக்கிறதுன்னா என்ன சும்மாவா......

Iniyan
26-05-2005, 07:26 PM
சூரியனை கையில் பிடித்த அம்மாஞ்சி

http://i7.photobucket.com/albums/y279/iniyan/magic.jpg

Iniyan
26-05-2005, 07:27 PM
அம்மாஞ்சியின் தலைசிறந்த சிந்தனைகள் பிறப்பது இங்கே தான்.


http://i7.photobucket.com/albums/y279/iniyan/toilet.jpg

Iniyan
26-05-2005, 07:28 PM
குடியின் விளைவு - அம்மாஞ்சி

http://i7.photobucket.com/albums/y279/iniyan/6beers.gif

Iniyan
26-05-2005, 07:31 PM
குடியின் விளைவுகள் ஆணுக்கு - அம்மாஞ்சி

http://i7.photobucket.com/albums/y279/iniyan/maddgirl.jpg

பரஞ்சோதி
26-05-2005, 07:31 PM
அய்யோ இனியன் என்ன இது, இத்தனை நாட்கள் நம்ம அம்மாஞ்சியின் பெருமைகளை பத்தி பத்தியாக எழுதியிருந்தீங்க.

இப்போ என்னடா என்றால் படம் போட்டு அம்மாஞ்சியின் பெருமைக்கு பெருமை சேர்க்கிறீங்க, பாராட்டுகள்.

Iniyan
26-05-2005, 07:31 PM
குடியின் விளைவு பெண்ணிற்கு

http://i7.photobucket.com/albums/y279/iniyan/maddman.jpg

Iniyan
26-05-2005, 07:33 PM
பரம்ஸ்!

நான் ரசிப்பதை எல்லாம் அம்மாஞ்சியின் மூளை வழியாக சிந்திப்பதால் வந்த விளைவு இது.....

சுவேதா
27-05-2005, 12:13 AM
மிகவும் நன்றாக இருக்கிறது ஆனால் ஒன்று மட்டும் புரியவில்லை குடிப்பதனால் நன்மையா இல்லை தீமையா. குடி என்றால் என்னை பொறுத்தவரை தீமை என்று என்னுகின்றேன். குடித்து சும்மா வீண் செய்கின்றார்கள். இந்த படம் எதை கூறுகின்றது என்று புரியவில்லை அண்ணா!

gragavan
27-05-2005, 05:20 AM
குடிப்பது நன்றன்று. ஆனால் அளவோடு குடிக்கலாம். ஹி ஹி

அறிஞர்
27-05-2005, 06:12 AM
இந்த படம் எதை கூறுகின்றது என்று புரியவில்லை அண்ணா!

கொஞ்சம் நாள் கழித்து புரியும்......

அறிஞர்
27-05-2005, 06:13 AM
என்ன பழைய படங்களும் வலம் வர ஆரம்பித்துள்ளது....
பரம்ஸ் நீங்களும் உங்க பங்குக்கு எடுத்து விடுங்க....

மன்மதன்
28-05-2005, 04:38 AM
அம்மாஞ்சியின் தலைசிறந்த சிந்தனைகள் பிறப்பது இங்கே தான் படம் . அய்யய்யோ.. வாழ்க்கையே அங்கேதான் நடக்குது போல :D :D
அன்புடன்
மன்மதன்

Iniyan
01-06-2005, 02:59 PM
அம்மாஞ்சி தன் மனைவியின் அலுவலகத்திற்கு ஒரு நாள் காலை போன் செய்தார்.

"உன் கூட கொஞ்சம் பேசணும்"

"இப்ப முடியாதுங்க. எனக்கு ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு"

"அப்படி ஒண்ணும் ரொம்ப நேரமெல்லாம் ஆகாது. சீக்கிரம் சொல்லிடுறேன்"

"என்னங்க இது சின்ன பிள்ளை மாதிரி பிடிவாதம் பிடிக்கிறீங்களே? எல்லோரும் எனக்காக மீட்டிங்ல காத்துகிட்டு இருக்காங்க"

"சரி அப்ப ஒரு நல்ல சேதியும் ஒரு கெட்ட சேதியும் இருக்கு. ஒண்ண மாத்திரம் சொல்றதுன்னா எத சொல்ல"

"சரி டக்குன்னு நல்ல சேதிய மட்டும் சொல்லிட்டு போன கட் பண்ணிடுங்க. நான் அப்பறமா பேசறேன்"

"உன்னோட புது லெக்சஸ் கார்ல ஏர் பேக் நல்லா வேலை செய்யுது" என்றுவிட்டு போனை கட் செய்து விட்டார் அம்மாஞ்சி.

சுவேதா
01-06-2005, 05:41 PM
:):D:)

Mathu
01-06-2005, 09:29 PM
அப்போ மீட்டிங் கான்சல்.

:p :confused: :D

பரஞ்சோதி
02-06-2005, 04:24 AM
மீட்டிங் மட்டுமா கேன்சல், அம்மாஞ்சி கூட கேன்சல் தான்.

thempavani
02-06-2005, 04:29 AM
அம்மாஞ்சியின் தலைசிறந்த சிந்தனைகள் பிறப்பது இங்கே தான்.


http://i7.photobucket.com/albums/y279/iniyan/toilet.jpg

நண்பர் சேரனும் இந்த வகைதான்..

மணிலாவில் இருந்தபோது அவரது வீட்டில் அவருக்கு பிடித்த இடம் இதுதானாம்...அடிக்கடி கூறுவார்..

pradeepkt
02-06-2005, 04:49 AM
அடப்பாவமே...
மனிதப் பதர், பேப்பர் படிப்பது, சிந்திப்பது, தூங்குவது போன்ற நல்ல காரியங்கள் செய்வதே இங்கேதான். இதற்கும் இப்போது பொல்லாப்பா?

gragavan
02-06-2005, 05:46 AM
அடப்பாவமே...
மனிதப் பதர், பேப்பர் படிப்பது, சிந்திப்பது, தூங்குவது போன்ற நல்ல காரியங்கள் செய்வதே இங்கேதான். இதற்கும் இப்போது பொல்லாப்பா?செய்யுற வேலையெல்லாம் விட்டுட்டு கண்ட வேலையச் செய்றது...இதெல்லாம் நல்லாவா இருக்கு?

Iniyan
08-06-2005, 02:42 AM
அம்மாஞ்சி வீட்டில் கிச்சனில் டைல்ஸ் பதிக்க காண்ட்ராக்ட் ஆட்கள் வந்திருந்தார்கள். கிச்சனில் இருந்த பெரிய ப்ரிட்ஜ் மற்றும் கிரைண்டரை எடுத்து ஹாலில் வைத்து விட்டு டைல்ஸ் போட்டு முடித்து விட்டு ஆட்கள் கிளம்பிய போது அம்மாஞ்சி ப்ரிட்ஜையும், கிரைண்டரையும் தள்ளி சுவரோரமாக வைக்க உதவும்படி கேட்டார். அதற்கு அந்த ஆட்கள் அந்த வேலை செய்வதற்கெல்லாம் என காண்ட்ராக்டில் பணம் குறிப்பிடப்படவில்லை என்றும் அதனால் அதற்கு தனியாக 500 ரூபாய் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தவே தனி ஆளாக இந்த பெரிய சாமான்களை மாற்ற முடியாத அம்மாஞ்சியும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டு பணம் கொடுத்தார்.

அவர்கள் கிளம்பி கொஞ்ச நேரத்தில் அம்மாஞ்சியின் வீட்டுக்கதவு தட்டப்பட்டு கதவைத் திறந்தால் அதே ஆட்கள். இப்போது அவர்கள் வந்த வேனின் பின்னால் நிறுத்தப்பட்டிருந்த அம்மாஞ்சியின் காரை எடுத்தால் தான் அவர்கள் கிளம்ப முடியும்.

அம்மாஞ்சி சொன்னார் அவரது காரை நகர்த்த பீஸ் - 500 ரூபாய் என.

Iniyan
08-06-2005, 02:52 AM
ஒரு கிருத்துவ கல்யாணத்திற்காக சர்ச்சுக்கு போய் இருந்த அம்மாஞ்சி திருமணம் முடிந்து பக்கத்து ஹாலில் நடந்த பார்ட்டியில் ஓவராக தண்னி போட்டு மப்பு தலைக்கேறி விட்டது. இந்நிலையில் சர்ச்சுக்குள் நுழைந்த அம்மாஞ்சி நேராக அங்கிருக்கும் பாவமன்னிப்பு கேட்கும் அறைக்குள் நுழைந்தார். உள்ளே இருந்த சின்ன மர அறைக்குள் இருந்த பாதிரியார் உள்ளே வந்த அம்மாஞ்சி ஏதாவது பேசட்டும் என காத்திருந்தார். ம்ஹீம். ஒரே அமைதி. சரி என அம்மாஞ்சியின் கவனத்தை ஈர்க்கும் விதமாக மரக்கதவை டொக் டொக் என தட்டினார் பாதிரியார். இப்போ அம்மாஞ்சி. "யோவ். சும்மா தட்டினா பிரயோசனமில்ல. இங்கேயும் தான் டாய்லெட் பேப்பர் இல்ல"

mania
08-06-2005, 04:19 AM
:D சான்ஸே இல்லை.....சூப்பர் அம்மாஞ்சி.....:D
அன்புடன்
மணியா

பரஞ்சோதி
08-06-2005, 04:30 AM
கார் - பீஸ் கலக்கல் சிரிப்பு.

gragavan
08-06-2005, 04:55 AM
அடங்................அந்த பாதிரியாரு மூக்க வீட்டுல விட்டுட்டு வந்துட்டாரா?

அறிஞர்
08-06-2005, 06:01 AM
இரண்டும்..... கலக்கல்....

முள்ளை முள்ளால எடுக்கவேண்டும் என்ற மாதிரி பீஸ்...

பாதிரியார் பாவம்......

Iniyan
09-06-2005, 03:43 AM
அம்மாஞ்சியின் கை மருத்துவம் 1

வீட்டில் யாரேனும் ஐஸ்கட்டி தொண்டையில் சிக்கி மூச்சு விட சிரமப்படுகிறார்களா? கவலையே வேண்டாம். நன்கு கொதிக்கும் தண்ணீரை எடுத்து அப்படியே அவர் தோண்டைக்குள் ஊற்றி விட்டால் அடைத்துக் கொண்டிருக்கும் ஐஸ்கட்டி போயே போச்.

Iniyan
09-06-2005, 03:43 AM
அம்மாஞ்சியின் கை மருத்துவம் 2

கத்தியால்காய்கறி வெட்டும் போது அடிக்கடி கையை வெட்டிக் கொள்கிறீர்களா? அடுத்த முறை காய் வெட்டும் போது வேறு யாரையேனும் காயை பிடித்துக் கொள்ளச் செய்து விட்டு சும்மா வெட்டித் தள்ளுங்கள் [காய்களை....]

Iniyan
09-06-2005, 03:43 AM
அம்மாஞ்சியின் கை மருத்துவம் 3

அதிக இரத்த அழுத்தத்தால் தொல்லையா? ஒரு டஜன் அட்டைப் பூச்சிகளை உங்கள் தோலில் சில மணி நேரம் விட்டுக் கொள்ளுங்கள்.

Iniyan
09-06-2005, 03:44 AM
அம்மாஞ்சியின் கை மருத்துவம் 4

அதிக இருமலா? கவலையே வேண்டாம். கடையில் கிடைக்கும் டல்கோலாக்ஸ் அல்லது வேறு ஏதேனும் நல்ல மலமிளக்கி சாப்பிடுங்கள். இப்போது தாங்கள் இருமவே பயப்படுவீர்கள்.

Iniyan
09-06-2005, 03:44 AM
அம்மாஞ்சியின் ஐடியா

காலையில் அலாரம் அடிக்க அடிக்க ஆப் செய்து விட்டு தூங்கி தினமும் லேட்டாக கிளம்புபவரா? இனி உங்கள் அலாரத்தின் ஆப் பட்டனுக்கு மேல் ஒரு சின்ன எலிப்பொறியை வைத்துத் தான் பாருங்களேன்.

Iniyan
09-06-2005, 03:45 AM
அம்மாஞ்சியின் கேள்வி

ஏன் எப்போதும் மணி கேட்பவர்கள் மணிகட்டை காண்பித்து மணி கேட்க வேண்டும். எனக்குத் தெரியாதா என்ன என் வாட்ச் எங்கே உள்ளதென? நாம்என்னஎன்பேண்ட்டினைத்தொட்டுக்காட்டியாபாத்ரூம்எங்கேஎனக்கேட்கிறோம்?

Iniyan
09-06-2005, 03:45 AM
ஒரு பஸ்ஸில் அம்மாஞ்சியுடன் 30 பேர் பயணித்துக் கொண்டிருந்தார்கள். ஒரு கோர விபத்தில் சிக்கி அனைவரும் இறந்து போக இப்போது எல்லோருமே சித்திர குப்தனிடம் தங்கள் கணக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப் பக்கம் வந்த எமன் அவர்கள் அனைவரையும் பார்த்தான். என்னே பரிதாபம். அனைவருமே பார்ப்பதற்கு கேவலமாக அவலட்சணமாக இருக்க எமனுக்கே அவர்கள் மேல் பரிதாபம் வந்து விட ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு வரம் கொடுத்து திரும்ப பூலோகம் அனுப்ப முடிவு செய்தான். வரிசையாக ஒவ்வொருவராக வரத் தொடங்கினர். ஒவ்வொருவரும் சொல்லி வைத்தாற் போல தான் அழகாக மாற வேண்டும் என வரம் கேட்டு சென்றனர். இப்போது வரிசையின் கடைசியில் இருந்த அம்மாஞ்சி வரிசை முடிய பாதி இருக்கும் போது சம்பந்தமே இல்லாமல் சிரிக்கத் தொடங்கினார். ஒவ்வொருவராக தான் அழகாக வேண்டும் எனக் கேட்டு வரம் பெற்று செல்ல செல்ல அம்மாஞ்சியின் சிரிப்பும் அதிகரித்துக் கொண்டே வந்தது. கடைசியில் அம்மாஞ்சியின் முறை வந்த போது சிரித்து களைத்து வயிற்று வலியால் தன் கைகளை தன் வயிற்றில் இறுக்கக் கட்டிக் கொண்டு அம்மாஞ்சி கேட்டார்.

"இப்போ எல்லோரையும் திரும்ப அசிங்கமா மாத்திடுங்க"

Iniyan
09-06-2005, 03:45 AM
அம்மாஞ்சியுடன் சேர்ந்து மொத்தம் மூவர் செவ்வாய் கிரகத்திற்கு இரண்டாண்டுகள் செல்வதற்காக தேர்வு செய்யப்பட்டனர். இந்த புதிய விண்கலத்தில் ஒவ்வொருவரும் 60 கிலோ வரை எடையுள்ள எந்தப் பொருளை வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம் என அறிவிக்கப்பட முதலாமவர் 56 கிலோ எடையுள்ள தன் மனைவியை தன்னுடன் அழைத்துச் சென்றார். இரண்டாமவர் தன்னுடன் 10 வெவ்வேறு மொழிகளைக்கற்றுக் கொள்ளத் தேவையான புத்தகங்களைத் தன்னுடன் எடுத்துச் சென்றார். தீவிர புகைபிடிப்பவரான அம்மாஞ்சி 60 கிலோ எடைக்கும் சிகரெட் பாக்கட்டுகளாக வாங்கிச் சென்றார்.

இரண்டாண்டுகள் கழிந்தன. இந்த விண்கலம் பூமிக்குத் திரும்பும் நாளில் பெரிய கூட்டம் கூடி இருந்தது இவர்களை வரவேற்க. முதலாமவர் விண்கலத்தில் இருந்து தன் மனைவியுடனும் ஒரு அழகான குழந்தையுடனும் வெளியே வந்தார். அடுத்து வந்தவர் சரளமாக பத்து வெவ்வேறு மொழிகளில் பேசி அசத்தினார். கடைசியாக வாயில் தொங்கும் சிகரெட்டுடன் சரி கடுப்பாகவெளியே வந்த அம்மாஞ்சி அங்கே இருந்த கூட்டத்தினரை பார்த்துக் கேட்டார் எரிச்சலாக.

"ஏம்பா...இங்க யார்கிட்டயாச்சும் வத்திப் பெட்டி இருக்கா?"

mania
09-06-2005, 04:07 AM
ஹா......ஹா.......ஹா...... அருமை இனியன்:D
அன்புடன்
மணியா

அறிஞர்
09-06-2005, 04:13 AM
தொங்கும் சிகரெட்டுடன் சரி கடுப்பாகவெளியே வந்த அம்மாஞ்சி அங்கே இருந்த கூட்டத்தினரை பார்த்துக் கேட்டார் எரிச்சலாக.

"ஏம்பா...இங்க யார்கிட்டயாச்சும் வத்திப் பெட்டி இருக்கா?"


சூப்பர் ஜோக்... தீப்பெட்டி.... எடுத்து செல்லாமல்... 60 கிலோ சிகரெட்டும் வேஸ்ட்...

--------
ஒவ்வொன்றும் அருமை இனியன் இன்னும் கொடுங்கள்

பரஞ்சோதி
09-06-2005, 04:23 AM
அருமையான நகைச்சுவை தொகுப்பு நண்பரே!. வாழ்த்துகள்.

மன்மதன்
09-06-2005, 04:27 AM
ஹாஹ்ஹா...... சரியான ஜோக். தீப்பெட்டி ஜோக்..
அன்புடன்
மன்மதன்

gragavan
09-06-2005, 10:28 AM
அம்மாஞ்சியின் கை மருத்துவம் 3

அதிக இரத்த அழுத்தத்தால் தொல்லையா? ஒரு டஜன் அட்டைப் பூச்சிகளை உங்கள் தோலில் சில மணி நேரம் விட்டுக் கொள்ளுங்கள்.

இது உண்மையிலேயே மருத்துவம்தான். ஆனால் ரத்த அழுத்தத்திற்கல்ல. இரத்தம் கட்டிப்பட்டு அடைப்பு ஏற்பட்ட இடங்களில் இது மிகவும் சிறந்த முறை.

iniyavan
09-06-2005, 11:45 AM
எல்லாம் அருமையன நகைசுவைகள் , வாழ்த்துகள் நண்பரே.

சுவேதா
09-06-2005, 05:23 PM
மிகவும் அருமையான ஜோக்ஸ் அண்ணா தொடருங்கள்.

Iniyan
09-06-2005, 07:02 PM
வாழ்த்திய அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

மன்மதன்
06-07-2005, 07:48 AM
அம்மாஞ்சி சிரிப்புகளை தொடருங்க இனியன்..
அன்புடன்
மன்மதன்

Iniyan
06-07-2005, 10:59 AM
கட்டாயம் தொடருவேன் மன்மதன். நல்ல சிரிப்புகள் கிடைக்க கிடைக்க மாற்றித் தருகிறேன்.

Iniyan
26-07-2005, 02:14 PM
அம்மாஞ்சி அப்போது தான் மருத்துவப் படிப்பு முடிந்து இளநிலை மருத்துவராக ஒரு மருத்துவமனியில் பணி புரிந்து வந்தார். ஒரு நாள் காலை அவரை பார்க்க ஒரு பெண்மணி வந்திருந்தார். இருவரும் அறைக்குள் போன ஐந்தாவது நிமிடத்தில் இந்தப் பெண்மணி ஆவென அலறி அதிர்ச்சியில் கத்தியபடி கோபமாய் வெளியேற அதை பார்த்த தலைமை மருத்துவர் அந்தப் பெண்மணியை நிறுத்தி ஆதரவாய் பேசி தனது அறையில் உட்கார வைத்து ஃகாபி கொடுத்து உபசரித்து அமைதிப்படுத்தி என்ன நடந்தது எனக் கேட்டுக் கொண்டு அம்மாஞ்சியின் அறைக்கு வந்தார், ரொம்ப கோபமாக அம்மாஞ்சியிடம்
"என்ன ஆச்சு உங்களுக்கு? மிஸஸ் சாரதாம்மாக்கு வயசு 62. அவங்களுக்கு நாலு பெரிய பசங்க. மேலும் 7 பேரன் பேத்திகள் கொண்ட மரியாதைக்குரிய பெண்மணி அவர். அவங்க கிட்ட போய் நீங்க கர்ப்பமா இருக்கீங்க இப்போன்னு ஏன் சொன்னீங்க?" என்றார்.
குனிந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்த அம்மாஞ்சி நிமிர்ந்து கூட பார்க்காமல் கேட்டார்.
"அந்தம்மாக்கு விக்கல் நின்னு போச்சா இல்லையா?"

aren
26-07-2005, 02:28 PM
விக்கல் நிக்க இப்படியா பயமுறுத்துவது. ஜோக் நன்றாக ரசிக்கும்படி இருக்கு. தொடருங்கள்.

aren
26-07-2005, 02:33 PM
அருமையான சிரிப்புகள். அம்மாஞ்சி நிஜமாகவே அம்மாஞ்சிதான்.

Iniyan
26-07-2005, 03:46 PM
நல்ல நட்புகள்.


ஒரு நாள் இரவு முழுதும் அம்மாஞ்சி வீடு திரும்பவில்லை. மறு நாள் காலை வீடு திரும்பிய அம்மாஞ்சி அவரின் மனைவியிடம் தன்னுடன் பணி புரியும் ஒரு நண்பர் வீட்டில் இரவு தங்கி விட்டதாக சொல்லி சமாளித்தார்.

அம்மாஞ்சியின் மனைவிக்கோ இவர் மேல் நம்பிகை இல்லை. சரி என அம்மாஞ்சிக்குத் தெரியாமல் அவரது அலுவலக நண்பர்கள் பத்து பேருக்குத் தனித்தனியே போன் செய்து விசாரித்தார்.


இந்த 10ல் 8 பேர் அம்மாஞ்சி அவர்கள் வீட்டில் அவர்களுடன்தான் தங்கி இருந்ததாகச் சத்தியம் செய்தனர்.


மிச்சம் இருந்த இரண்டு பேர் நேற்றிரவு தங்களுடன் தங்கிய அம்மாஞ்சி இன்னும் தங்களுடன் தங்கள் வீட்டில் தான் இருப்பதாக சொன்னனர்.

Iniyan
26-07-2005, 05:05 PM
அம்மாஞ்சி சின்னப் பையனாய் இருந்த போது தன் அப்பாவை பார்த்துக் கேட்டார்.

"ஏன்ப்பா உனக்கு அங்கங்கே முடி நரைச்சிருக்கு?"

"ஒவ்வொரு தடவை நீ ஏதாச்சும் சேட்டை செய்யும் போதும் இல்லை சொன்ன பேச்சு கேக்காத போதும் எனக்கு ஒரு முடி நரைச்சிடும்"

"அப்படியாப்பா. அப்பன்னா ஏன் நம்ம தாத்தா முடி முழுக்க வெள்ளையா இருக்கு?"

Iniyan
26-07-2005, 05:43 PM
அம்மாஞ்சியின் மனைவி அவரின் பிறந்த நாள் அன்று காலை எழுந்ததும் அம்மாஞ்சியிடம் "ஏங்க நான் நேத்து ராத்திரி என் பிறந்த நாளைக்கு நீங்க எனக்கு ஒரு அழகான முத்து மாலை வாங்கித் தந்ததா கனவு கண்டேன். அதுக்கு என்னாங்க அர்த்தம்?" என ஆர்வமாய் கேட்டாள்.

அம்மாஞ்சி அன்பாய் பதில் சொன்னார் "சாயங்காலம் வரைக்கும் பொறுத்திரு. தெரிஞ்சிடும்" என்றார்.

மாலை அம்மாஞ்சி ஆபீசிலிருந்து வந்த போது கையில் சின்னதாக ஒரு பரிசு பொருள் பார்சலுடன் வந்தார். கனவில் கண்ட முத்து மாலையை மனதுள் நினைத்து சந்தோசப்பட்டபடி பார்சலை திறந்தாள் அம்மாஞ்சியின் மனைவி. உள்ளே இருந்தது















"கனவுகளும் அதன் பலன்களும்" என்ற புத்தகம்.

Iniyan
26-07-2005, 05:44 PM
ஒரு நாள் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அம்மாஞ்சி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நன்கு திருப்தியாக சாப்பிட்டு முடித்து இருப்பதிலேயே விலை உயர்ந்த ஒரு ஐஸ்க்ரீமும் சாப்பிட்டு முடித்த அம்மாஞ்சி ஹோட்டல் மேனேஜரை பார்க்க வேண்டும் என்றார். வந்து வணக்கம் சொல்லி நின்ற மேனேசரிடம் அம்மாஞ்சி"சாப்பாடு அருமை. என்னை ஞாபகமிருக்கா சார்? ஒரு வருசத்துக்கு முன்னாடி இதே ஹோட்டல்ல நான் இதே மாதிரி சாப்பிட்டுட்டு பில் கொடுக்க காசு இல்லாததால என்னைய ரெண்டு ஆளுங்கள விட்டு அடிச்சி தெருவில தூக்கி போட்டீங்க"

மன வருத்தப்பட்டுப் போன மேனேசர் ரொம்ப வருத்தமாக "மன்னிக்கனும் சார். அப்ப ஏதோ தப்பு நடந்து போயிருச்சின்னு நெனக்கிறேன்" என்றார்.

"அட அதெல்லாம் பரவாயில்லைங்க. என்ன ஒரு விசயம்னா நீங்க திரும்ப அதே தான் பண்ணனும் இப்பவும்..."

Iniyan
26-07-2005, 05:44 PM
அம்மாஞ்சி ஒரு ஹோட்டலுக்கு போயிருந்தார். அங்கே போய் சாப்பாடு ஆர்டர் செய்தார்.

"ஒரு ப்ளேட் தயிர் வடை. அதுல தயிர் நல்லா புளிப்பா இருக்கனும். அப்பறம் ஒரு பிளேட் பொங்கல். சாதம் கொழையாம அரிசி அரிசியா இருகனும். அப்புறம் ஒரு ப்ளேட் இட்லி. இட்லி சும்மா கல்லு மாதிரி கடிக்கவே முடியாத மாதிரி இருக்கனும்"

"சார். என்ன சார் கிண்டல் பண்றீங்களா?"

"அட இல்லப்பா. நெஜமாத்தான் சொல்றேன்"

"இது ரொம்ப கஷ்டமான ஆர்டரா இருக்கே?"

"அட.. இது அப்படி ஒண்ணும் கஷ்டமில்லப்பா. நேத்து கூட எனக்கு நீ இதே ஆர்டர் தான கொடுத்தே?"

சுவேதா
27-07-2005, 01:52 AM
ஒரு நாள் ஒரு பெரிய ஐந்து நட்சத்திர ஹோட்டலில் அம்மாஞ்சி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். நன்கு திருப்தியாக சாப்பிட்டு முடித்து இருப்பதிலேயே விலை உயர்ந்த ஒரு ஐஸ்க்ரீமும் சாப்பிட்டு முடித்த அம்மாஞ்சி ஹோட்டல் மேனேஜரை பார்க்க வேண்டும் என்றார். வந்து வணக்கம் சொல்லி நின்ற மேனேசரிடம் அம்மாஞ்சி"சாப்பாடு அருமை. என்னை ஞாபகமிருக்கா சார்? ஒரு வருசத்துக்கு முன்னாடி இதே ஹோட்டல்ல நான் இதே மாதிரி சாப்பிட்டுட்டு பில் கொடுக்க காசு இல்லாததால என்னைய ரெண்டு ஆளுங்கள விட்டு அடிச்சி தெருவில தூக்கி போட்டீங்க"

மன வருத்தப்பட்டுப் போன மேனேசர் ரொம்ப வருத்தமாக "மன்னிக்கனும் சார். அப்ப ஏதோ தப்பு நடந்து போயிருச்சின்னு நெனக்கிறேன்" என்றார்.

"அட அதெல்லாம் பரவாயில்லைங்க. என்ன ஒரு விசயம்னா நீங்க திரும்ப அதே தான் பண்ணனும் இப்பவும்..."


ஹா...ஹா என்ன அம்மாஞ்சியிடம் காசு இல்லையா... பாவமே அடி வாங்க போகின்றாறே...

சுவேதா
27-07-2005, 01:54 AM
நல்ல நட்புகள்.


ஒரு நாள் இரவு முழுதும் அம்மாஞ்சி வீடு திரும்பவில்லை. மறு நாள் காலை வீடு திரும்பிய அம்மாஞ்சி அவரின் மனைவியிடம் தன்னுடன் பணி புரியும் ஒரு நண்பர் வீட்டில் இரவு தங்கி விட்டதாக சொல்லி சமாளித்தார்.

அம்மாஞ்சியின் மனைவிக்கோ இவர் மேல் நம்பிகை இல்லை. சரி என அம்மாஞ்சிக்குத் தெரியாமல் அவரது அலுவலக நண்பர்கள் பத்து பேருக்குத் தனித்தனியே போன் செய்து விசாரித்தார்.


இந்த 10ல் 8 பேர் அம்மாஞ்சி அவர்கள் வீட்டில் அவர்களுடன்தான் தங்கி இருந்ததாகச் சத்தியம் செய்தனர்.


மிச்சம் இருந்த இரண்டு பேர் நேற்றிரவு தங்களுடன் தங்கிய அம்மாஞ்சி இன்னும் தங்களுடன் தங்கள் வீட்டில் தான் இருப்பதாக சொன்னனர்.



ஹா...ஹா... சூப்பர் அண்ணா!

சுவேதா
27-07-2005, 02:01 AM
நல்ல நட்புகள்.


ஒரு நாள் இரவு முழுதும் அம்மாஞ்சி வீடு திரும்பவில்லை. மறு நாள் காலை வீடு திரும்பிய அம்மாஞ்சி அவரின் மனைவியிடம் தன்னுடன் பணி புரியும் ஒரு நண்பர் வீட்டில் இரவு தங்கி விட்டதாக சொல்லி சமாளித்தார்.

அம்மாஞ்சியின் மனைவிக்கோ இவர் மேல் நம்பிகை இல்லை. சரி என அம்மாஞ்சிக்குத் தெரியாமல் அவரது அலுவலக நண்பர்கள் பத்து பேருக்குத் தனித்தனியே போன் செய்து விசாரித்தார்.


இந்த 10ல் 8 பேர் அம்மாஞ்சி அவர்கள் வீட்டில் அவர்களுடன்தான் தங்கி இருந்ததாகச் சத்தியம் செய்தனர்.


மிச்சம் இருந்த இரண்டு பேர் நேற்றிரவு தங்களுடன் தங்கிய அம்மாஞ்சி இன்னும் தங்களுடன் தங்கள் வீட்டில் தான் இருப்பதாக சொன்னனர்.



ஆகா... அம்மாஞ்சி....

சுவேதா
27-07-2005, 02:03 AM
அம்மாஞ்சி சின்னப் பையனாய் இருந்த போது தன் அப்பாவை பார்த்துக் கேட்டார்.

"ஏன்ப்பா உனக்கு அங்கங்கே முடி நரைச்சிருக்கு?"

"ஒவ்வொரு தடவை நீ ஏதாச்சும் சேட்டை செய்யும் போதும் இல்லை சொன்ன பேச்சு கேக்காத போதும் எனக்கு ஒரு முடி நரைச்சிடும்"

"அப்படியாப்பா. அப்பன்னா ஏன் நம்ம தாத்தா முடி முழுக்க வெள்ளையா இருக்கு?"

ஆகா... அப்ப முடி வெள்ளையாக இருந்தா ஏதாச்சும் சேட்டை செய்பவர்களா???

pradeepkt
27-07-2005, 05:37 AM
அதானே சேட்டை செய்பவர்களுக்கு எல்லாம் முடி வெள்ளையா இருக்கணுமின்னா, சுவேதாவுக்கு தலையில் ஒரு கருப்பு முடி கூட இருக்காதே...
நல்ல அம்மாஞ்சி சிரிப்புகள் இனியன்.

gragavan
27-07-2005, 05:43 AM
மீண்டும் இனியன். மீண்டும் அம்மாஞ்சி. அருமையோ அருமை.

சுவேதா
27-07-2005, 03:20 PM
அதானே சேட்டை செய்பவர்களுக்கு எல்லாம் முடி வெள்ளையா இருக்கணுமின்னா, சுவேதாவுக்கு தலையில் ஒரு கருப்பு முடி கூட இருக்காதே...
நல்ல அம்மாஞ்சி சிரிப்புகள் இனியன்.

அண்ணா எனக்கு இருக்கோ இல்லையோ...
ஆனால் உங்களுக்கு சுத்த நரை முடியாமே.... :rolleyes: :rolleyes:
கேள்விப்பட்டேன்!

pradeepkt
28-07-2005, 05:07 AM
அண்ணா எனக்கு இருக்கோ இல்லையோ...
ஆனால் உங்களுக்கு சுத்த நரை முடியாமே.... :rolleyes: :rolleyes:
கேள்விப்பட்டேன்!
உன் வாழ்க்கையில நீ உண்மைகளைப் பேசுறதுதான் இல்லை, கேள்விகூடப் பட்டதில்லையா? :D

gragavan
28-07-2005, 05:11 AM
உன் வாழ்க்கையில நீ உண்மைகளைப் பேசுறதுதான் இல்லை, கேள்விகூடப் பட்டதில்லையா? :Dகேள்விப் பட்டுட்டாலும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

சுவேதா
28-07-2005, 07:58 PM
அண்ணா நானா உண்மை பேசுவதில்லை... அது நான் அல்ல நீங்கள் தான்.....

பரஞ்சோதி
30-07-2005, 04:57 AM
மீண்டும் மீண்டும் நம்ம அம்மாஞ்சி, நன்றி இனியன்.

கேட்டதும் கொடுத்த நீங்க உண்மையில் இனியவர் தான்.

Iniyan
20-08-2005, 12:23 PM
அமெரிக்காவில் இருந்தஅம்மாஞ்சி புதிதாக வாங்கிய தன் கணிணியில் உதவிக்காக டெக் சப்போர்ட்டை கூப்பிட்டார். இந்தியாவில் உள்ள ஒரு கால் செண்டருக்கு போக அம்மாஞ்சி கேட்டார்.

"உங்க கால் சென்டர் எப்பல்லாம் திறந்திருக்கும்?"

"24 X 7 சார்"

"இந்தியன் டைமா இல்லை அமெரிக்கன் டைமா?"

Iniyan
20-08-2005, 12:23 PM
அம்மாஞ்சி புதிதாக ஒரு கார் வாங்கினார். பின் அத்துடன் ஒரு பாதுகாப்பு சாதனமும் வாங்கினார். அந்த பாதுகாப்பு சாதனம் விபத்தின் போது காரின் சீட் பெல்ட்டில் சிக்கிக் கொண்டால் சீட் பெல்ட்டை அறுத்துக் கொண்டு வெளியே வர உதவுவது.



இந்த சாதனத்தை காரின் டிக்கியில் பத்திரமாக வைத்துப் பூட்டினார் அம்மாஞ்சி.

Iniyan
20-08-2005, 12:23 PM
அப்போது தான் விமானத்தில் இருந்து இறங்கி இருந்த அம்மாஞ்சியின் பெட்டிகள் வந்து சேரவில்லை. சரி என தொலைந்த பெட்டிகள் பகுதியில் சென்று ரிப்போர்ட் செய்யப் போனார். அங்கே இருந்த க்ளார்க் கேட்ட முதல் கேள்வி.

"உங்க பிளைட் வந்துடுச்சா?"

Iniyan
20-08-2005, 12:24 PM
ஒரு வகுப்பின் முடிவில் செயற்திறமை நிபுணர் (Efficiency Expert) ஆன அம்மாஞ்சி ஒரு எச்சரிக்கையுடன் தனது உரையை முடித்தார்.

"இங்கே கற்றுக் கொண்டவை எவற்றையும் தயவு செய்து வீட்டில் முயற்சித்துப் பார்க்காதீர்கள்"

வகுப்பில் இருந்த ஒருவர் கேட்டார். "ஏன்?"

"என் மனைவி காலையில் சமையலறையில் பிசியாக இருப்பதை நான் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். ஒவ்வொரு நாளும் அவள் ப்ரிட்ஜ்ஜுக்கும், அடுப்படிக்கும், டைனிங் டேபிளுக்குமாய் பல முறை அலைந்து கொண்டிருப்பாள். இதை பார்த்துக் கொண்டே இருந்த நான் ஒரு நாள் அவளிடம் சொன்னேன். இப்படி சும்மா அங்கேயும் இங்கேயும் போய் வந்து கொண்டிருப்பதை விட முதலிலேயே கொஞ்சம் திட்டமிட்டால் ஒரே முறை பிரிட்ஜில் இருந்து தேவையானதை எல்லாம் எடுத்து அடுப்பு மேடையில் வைத்துக் கொண்டு, சமைத்து முடித்து விட்டு, பின் மொத்தமாய் எல்லாவற்றாஇயும் டைனிங் டேபிளுக்கு கொண்டு வந்தால் நேரம் மிச்சம் ஆகுமே என்று"

வகுப்பில் இருந்த ஒருவர் கேட்டார். "நல்ல ஐடியா தானே. இது கட்டாயம் நேரத்தை சேமித்திருக்க வேண்டுமே?"

அம்மாஞ்சி சொன்னார். "நிச்சயமாக. சந்தேகமே இல்லாமல் எனது திட்டமிடல் நேரத்தை சேமித்தது. அனைத்தையும் சமைத்து முடித்து எடுத்து வைக்க என் மனைவிக்கு முன்பு 50 நிமிடங்கள் ஆகிக் கொண்டிருந்தது. ஆனால் இப்போது அதையே நான் 30 நிமிடங்களில் செய்து கொண்டுள்ளேன்"

Iniyan
20-08-2005, 12:26 PM
அம்மாஞ்சியின் சில சந்தேகங்கள்.

தண்ணீருக்குள் அழ முடியுமா?

Iniyan
20-08-2005, 12:27 PM
கோக் பேக்டரியில் வேலை பார்ப்பவர் பெப்சி குடித்தால் அவரை வேலையை விட்டு தூக்கி விடுவார்களா?

pradeepkt
21-08-2005, 05:47 AM
ஆகா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்த அம்மாஞ்சி சிரிப்புகள் சூப்பர் இனியன்.

மன்மதன்
21-08-2005, 05:59 AM
கோக் பேக்டரியில் வேலை பார்ப்பவர் பெப்சி குடித்தால் அவரை வேலையை விட்டு தூக்கி விடுவார்களா?

கோக், பெப்சி கேள்வி தமாஷா இருக்கு.. 7 அப்லாஸ்.. ஃபேண்டாஸ்டிக்... :rolleyes: :rolleyes: :rolleyes:
அன்புடன்
மன்மதன்

Iniyan
06-09-2005, 11:27 AM
நியூ ஆர்லியன்சில் பெய்த மழையின் அளவு - 18 இன்ச்சுகள்
மும்பையில் பெய்த மழையின் அளவு - 37.1 இன்ச்சுகள்

நியூ ஆர்லியன்சின் மக்கள் தொகை - 484,674
மும்பையின் மக்கள் தொகை - 12,622,500

நியூ ஆர்லியன்சில் முதல் 48 மணி நேரத்தில் நிகழ்ந்த மரணங்கள் - 100
மும்பையில் முதல் 48 மணி நேரத்தில் நிகழ்ந்த மரணங்கள் - 37

நியூ ஆர்லியன்சில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மொத்தம் - முழு நகரமும்...
மும்பையில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்கள் மொத்தம் - 10,000

நியூ ஆர்லியன்சில் கேட்ரீனாவை தொடர்ந்த வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பங்களில் கொல்லப்பட்ட மக்கள் - கணக்கிலடங்காது.
மும்பையில் கனமழையை தொடர்ந்த வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பங்களில் கொல்லப்பட்ட மக்கள் - ஒன்றுமில்லை.

நியூ ஆர்லியன்சை அடைய அமெரிக்க ராணுவம் எடுத்துக் கொண்ட நேரம் - 48 மணி நேரம்
மும்பையை அடைய இந்திய ராணுவம் எடுத்துக் கொண்ட நேரம் - 12 மணி நேரம்

நியூ ஆர்லியன்சில் 48 மணி நேரத்திற்கு பின் நிலை - இன்னும் மக்கள் உதவி வேண்டிக் காத்திருக்கிறார்கள், பிணங்கள் அழுகுகின்றன. அமெரிக்க அதிபர் சொல்கிறார் பல ஆண்டுகள் ஆகும் நிலமை சீரடைய என்று.
மும்பையில் 48 மணி நேரத்திற்கு பின் நிலை - ஏகப்பட்ட கஷ்ட நஷ்டங்கள் இருந்தாலும் இயல்பு வாழ்க்கை திரும்பியது.

அமெரிக்கா - அனைத்து தொழில் நுட்பங்களும் நிறைந்த உலகின் பணக்கார வல்லரசு நாடு
இந்தியா - மூன்றாம் உலக நாடுகளில் ஒன்றான ஏழை நாடு.


கடைசி மேட்டரில் நான் சொன்னது தப்போ???

பிரியன்
06-09-2005, 11:31 AM
ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிற்கு உதவிப் பொருட்கள் அனுப்பி இருக்கிறதாம். நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும்.....

வாங்க வாங்க இனியன். ரெம்பநாளா ஆளையே காணோமே. நலம்தானே

மன்மதன்
06-09-2005, 12:01 PM
ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிற்கு உதவிப் பொருட்கள் அனுப்பி இருக்கிறதாம். நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும்.....

வாங்க வாங்க இனியன். ரெம்பநாளா ஆளையே காணோமே. நலம்தானே

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் என்பார்களே இதுதானோ..:rolleyes: :rolleyes:

gragavan
06-09-2005, 12:06 PM
இந்தியா ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்காவிற்குக் கொடுத்துள்ளது.

அமெரிக்கர்கள் எதிலும் எச்சரிக்கையாக செயல் படுகிறேன் என்று குழப்பி வைப்பார்கள். ஆனால் அவர்கள் திட்டத்தில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் சின்னாபின்னமாகிப் போவார்கள்.

எந்தக் கடையிலும் வரிசையில் நிற்க வேண்டும். வரிசை மாறி யாராவது வந்தால் குழம்பி விடுவார்கள். இது ஒரு எளிய எடுத்துக்காட்டு.

மேலும் இந்த நியூ ஓர்லண்சில் நடந்ததற்கு அமெரிக்காவின் முறையான திட்டமிடலின்மையே காரணம். பணம் கோடிக்கணக்கில் வைத்திருந்தாலும் முறையாகச் செய்யத் தெரியாதவன் என்ன செய்வான். பேந்தப் பேந்த முழிப்பான்.

karikaalan
06-09-2005, 12:20 PM
இந்தியா ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்காவிற்குக் கொடுத்துள்ளது.
.

ராகவன்ஜி

இந்தியா அளித்துள்ள தொகை ஐந்து மில்லியன்கள் மட்டுமே!

===கரிகாலன்

pradeepkt
06-09-2005, 01:09 PM
அருமையான கருத்தாய்வு இனியன். திண்ணையில் வருவது போன்று.
இந்த விஷயத்தில் மும்பையை ஒப்பிடுவதே தவறு... எத்தனையோ இன்னல்களைத் தாண்டியும் இந்தியாவின் வணிகத் தலைநகரம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
அமெரிக்காவில் ராகவன் சொன்னது போல்தான் 5 நிமிடம் மின்சாரம் நின்று போனால் அதைப் பற்றி 5 வருடங்களுக்குப் பேசுமளவு சேதம் இருக்கும்.
அது சரி, இதை ஒரு தனிப்பதிவாக இட்டிருக்கலாமே

Iniyan
06-09-2005, 06:39 PM
ஆப்கானிஸ்தான் அமெரிக்காவிற்கு உதவிப் பொருட்கள் அனுப்பி இருக்கிறதாம். நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும்.....

வாங்க வாங்க இனியன். ரெம்பநாளா ஆளையே காணோமே. நலம்தானே

நலம் தான் நண்பரே. கொஞ்சம் வேலைகள் அதிகமானதால் இந்த இடைவெளி. அவ்வளவு தான்.

Iniyan
06-09-2005, 06:40 PM
அருமையான கருத்தாய்வு இனியன். திண்ணையில் வருவது போன்று.
இந்த விஷயத்தில் மும்பையை ஒப்பிடுவதே தவறு... எத்தனையோ இன்னல்களைத் தாண்டியும் இந்தியாவின் வணிகத் தலைநகரம் தலை நிமிர்ந்து நிற்கிறது.
அமெரிக்காவில் ராகவன் சொன்னது போல்தான் 5 நிமிடம் மின்சாரம் நின்று போனால் அதைப் பற்றி 5 வருடங்களுக்குப் பேசுமளவு சேதம் இருக்கும்.
அது சரி, இதை ஒரு தனிப்பதிவாக இட்டிருக்கலாமே

எனக்கென்னெமோ இது அம்மாஞ்சி மேட்டராக பட்டது. அதான்..... ஹிஹிஹி

அம்மாஞ்சி மேட்டரா போட்டே நீங்க அமெரிக்காவையும் மும்பையையும் ஒப்பிடக் கூடாது என்று விட்டீர்கள். இதையே எனது கருத்தாகப் பதித்திருந்தால் .... நொம்பக் கஷ்டம்.....

Iniyan
06-09-2005, 06:48 PM
இந்தியா ஐந்து பில்லியன் அமெரிக்க டாலர்களை அமெரிக்காவிற்குக் கொடுத்துள்ளது.

அமெரிக்கர்கள் எதிலும் எச்சரிக்கையாக செயல் படுகிறேன் என்று குழப்பி வைப்பார்கள். ஆனால் அவர்கள் திட்டத்தில் சின்ன மாற்றம் ஏற்பட்டாலும் சின்னாபின்னமாகிப் போவார்கள்.

எந்தக் கடையிலும் வரிசையில் நிற்க வேண்டும். வரிசை மாறி யாராவது வந்தால் குழம்பி விடுவார்கள். இது ஒரு எளிய எடுத்துக்காட்டு.



இதோ ஒரு எடுத்துக்காட்டு. $4.25 க்கு ஏதேனும் பொருள் வாங்கி விட்டு ஒரு $5 நோட்டும் ஒரு 25 செண்ட் காசும் நீட்டி, ஒரு டாலர் நோட் திரும்ப எதிர் பார்த்தீர்களானால் போதும். பெரும்பாலான விற்பனையாளர்கள் குழம்பிப் போய் விடுவார்கள். அதை பார்க்கும் போது எங்க ஊர் நாடார் பலசரக்கு கடையில் மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்த கால்குலேட்டரை வாழ்நாளிலேயே பார்த்திராதா செல்லைய தாத்தா மொத்த குடுமப்த்திற்குமான மாதாந்திர பலசரக்கை எடை போட்டு வைத்து விட்டு மனக்கணக்காய் மொத்தம் 230 ரூபாய் 65 பைசா என மின்னல் வேகத்தில் கணக்கு போட்டு சொல்வார் பாருங்கள் அது தான் ஒவ்வொரு முறையும் ஞாபகம் வரும்.

எது எப்படியோ? இந்த மாதிரி இருப்பதால் தான் இது வரை எங்கள் பொழப்பு இங்கே ராச போகமாய் நடந்து கொண்டுள்ளது.... :p

அறிஞர்
06-09-2005, 09:10 PM
எது எப்படியோ? இந்த மாதிரி இருப்பதால் தான் இது வரை எங்கள் பொழப்பு இங்கே ராச போகமாய் நடந்து கொண்டுள்ளது.... :p இனிதான் ராச போக வாழ்க்கையை ருசி பார்க்கனும்

மன்மதன்
07-09-2005, 08:42 AM
இனியனுடன் கூட்டணி அமைச்சுக்கோங்க அறிஞரே...

Iniyan
07-09-2005, 12:36 PM
இனியனுடன் கூட்டணி அமைச்சுக்கோங்க அறிஞரே...

அதெல்லாம் அமைச்சாச்சு ஏற்கனவே.... சும்மா விட்டுடுவோமா?

பரஞ்சோதி
07-09-2005, 04:02 PM
அதெல்லாம் அமைச்சாச்சு ஏற்கனவே.... சும்மா விட்டுடுவோமா?

கலக்கு கண்ணா கலக்கு.

கனடாவை கலக்கு கண்ணா கலக்கு. :D

அறிஞர்
07-09-2005, 07:15 PM
கலக்கு கண்ணா கலக்கு.

கனடாவை கலக்கு கண்ணா கலக்கு. :Dகனடாவா... நாங்கள் இருப்பது அமெரிக்காவில் அன்பரே.... இம்மாதக்கடைசியில் இனியனை சந்திப்பேன் என எண்ணுகிறேன்

மன்மதன்
08-09-2005, 04:22 AM
அதுவா.. இனியனை சுவேதா என்று நினைத்துவிட்டான் நண்பன்..:D :D