PDA

View Full Version : வார்த்தை மறந்த கவிதை



noveltv
07-04-2005, 08:31 AM
விலங்கு என்றாய்
ஒப்புக்கொள்வேன்..
விலகு என்றால்?

பரிவு என்றால்
ஒட்டிக்கொள்வேன்..
பிரிவு என்றால்
விட்டுசெல்வேன்..

கோபம் என்றால்
கட்டிக்கொள்வேன்..
சாபம் என்றால்
ஏற்றுக்கொள்வேன்..

வெட்டிச்சென்றால்
என்ன செய்வேன்..?

இக்பால்
07-04-2005, 09:16 AM
என்னங்க நாவல்டி...புதிர் மாதிரி நிறுத்தி விட்டீர்கள்.

கவிதை நன்றாகவே வருகிறது. தொடருங்கள்.

கவலை ஒன்றும் மனதில் இல்லையே.-அன்புடன் இக்பால்.

பரஞ்சோதி
07-04-2005, 09:55 AM
வெட்டி சென்றவர்கள் மீண்டும் வந்தால் வசந்தம் தானே நாவல்டி.

அருமையாக இருக்கிறது.

அறிஞர்
08-04-2005, 04:15 PM
இது புதிர் பகுதி இல்லையே....

அருமையாக தொடருங்கள்.. அன்பரே...

karikaalan
09-04-2005, 11:10 AM
விலகு என்றால் விலக மாட்டீர்கள்

ஆனால் பிரிவு என்றால் சென்று விடுவீர்கள்;

அதுபோல், வெட்டிச் சென்றால், விடமாட்டீர்கள் எனலாமா??!!

===கரிகாலன்

pradeepkt
11-04-2005, 05:29 AM
தாங்க இயலாது உங்களுக்காக முடிக்கிறேன் நாவல்டிவி
வெட்டிச்சென்றால்
என்ன செய்வேன்..?

-- மீண்டும் மீண்டும் வளர்வதைத் தவிர!

அன்புடன்,
பிரதீப்

சுகந்தப்ரீதன்
21-04-2008, 09:03 AM
வெட்டிச்சென்றால்
என்ன செய்வேன்..?
ஹி..ஹி..இந்த மாதிரி கவிதை எழுதுவீர்கள்.....:confused::sprachlos020::aetsch013::icon_rollout:

விகடன்
21-04-2008, 10:43 AM
வெட்டிச்சென்றால்
என்ன செய்வேன்..?

குப்பென்று அடித்துவிட்டு குப்புற்றக்கிடக்கவேண்ண்டியதுதான்!!!

ஓவியன்
21-04-2008, 11:04 AM
ஹி..ஹி..இந்த மாதிரி கவிதை எழுதுவீர்கள்.....:confused::sprachlos020::aetsch013::icon_rollout:

அடடா இப்படி ஒரு அறிவு பூர்வமான பதிலுக்கு இந்தக் கவிதை ஏறத்தாழ மூன்று வருடங்கள் காத்துக் கிடந்திருக்கிறதே.......??? :rolleyes:

ஓவியன்
21-04-2008, 11:09 AM
வெட்டிச் சென்றால்
முறிந்து விட
உன் நினைவுகள்
விரலில்லை - அவை
வெட்ட வெட்ட
தளிர்த்து வளரும்
நகம் போல....!!

விகடன்
26-04-2008, 08:24 PM
அடடா இப்படி ஒரு அறிவு பூர்வமான பதிலுக்கு இந்தக் கவிதை ஏறத்தாழ மூன்று வருடங்கள் காத்துக் கிடந்திருக்கிறதே.......??? :rolleyes:

யாராக இருந்தாலும் முதலில் படிக்கவேண்டுமல்லவா?
படித்தாலும், பின்னூட்டமிட ஏதவாக இருக்கவேண்டுமல்லவா? :icon_b:

அமரன்
26-04-2008, 08:28 PM
வெட்டிச்சென்றால்
என்ன செய்வேன்..?
மீண்டும் எழுவேன்
ஏனெனில்
நான் வாழையடி !

ஒருங்குறியில் பரிமாறிய சுகந்தப்ரீதனுக்கு நன்றிகள் பல.

shanthija
06-05-2008, 12:57 AM
நன்பரே பிரிவு என்ரால் விட்டு செல்வீர்கல் அதனால் வெட்டி சென்ரால் கவலைபட தேவயில்லை .... வாழ்த்துக்கல் நன்பரே..

அன்புடன்
லதுஜா

அனுராகவன்
06-05-2008, 01:11 AM
நண்பரே நன்றி!!
கவிதை வரிகள் அருமையாக உள்ளது..