kavitha
18-02-2005, 02:53 AM
நீ ஒரு...
நீ ஒரு வானம்
நினைக்கும்போது வெளிச்சம்
மறக்கும்போது இருள்
நீ ஒரு ரோஜா
நினைக்கும்போது மணம்
மறக்கும்போது முள்
நீ ஒரு பரமபதம்
நினைக்கும்போது ஏற்றிவிடுவாய்
மறக்கும்போது கொத்திவிடுவாய்
நீ ஒரு குழந்தை
நினைக்கும்போது கொஞ்சுவாய்
மறக்கும்போது கெஞ்சுவாய்
நீ ஒரு விண்மீன்
நினைக்கும்போது ஒளிர்வாய்
மறக்கும்போது உதிர்வாய்
நீ ஒரு படகு
நினைக்கும்போது பயணம்
மறக்கும்போது பணயம்
நீ ஒரு மலை
நினைக்கும்போது எழுவாய்
மறக்கும்போது எழுவாய்
நீ ஒரு காடு
நினைக்கும்போது காணாமல்போவேன்
மறக்கும்போது கண்டுகொள்வேன்
நீ ஒரு உண்மை
நினைக்கும்போது தெரியும்
மறக்கும்போது தெரியாது
நீ ஒரு பொய்
இருந்தும் இருப்பாய்
இல்லாமலும் இருப்பாய்
நீ ஒரு வானம்
நினைக்கும்போது வெளிச்சம்
மறக்கும்போது இருள்
நீ ஒரு ரோஜா
நினைக்கும்போது மணம்
மறக்கும்போது முள்
நீ ஒரு பரமபதம்
நினைக்கும்போது ஏற்றிவிடுவாய்
மறக்கும்போது கொத்திவிடுவாய்
நீ ஒரு குழந்தை
நினைக்கும்போது கொஞ்சுவாய்
மறக்கும்போது கெஞ்சுவாய்
நீ ஒரு விண்மீன்
நினைக்கும்போது ஒளிர்வாய்
மறக்கும்போது உதிர்வாய்
நீ ஒரு படகு
நினைக்கும்போது பயணம்
மறக்கும்போது பணயம்
நீ ஒரு மலை
நினைக்கும்போது எழுவாய்
மறக்கும்போது எழுவாய்
நீ ஒரு காடு
நினைக்கும்போது காணாமல்போவேன்
மறக்கும்போது கண்டுகொள்வேன்
நீ ஒரு உண்மை
நினைக்கும்போது தெரியும்
மறக்கும்போது தெரியாது
நீ ஒரு பொய்
இருந்தும் இருப்பாய்
இல்லாமலும் இருப்பாய்