rambal
15-04-2003, 06:24 PM
கம்பி கட்டி
மண்ணைப் பிரித்து
இது என் எல்லை
என்று
தம்பட்டம் அடிக்கும்..
ஆயுதம் குவித்து
கேட்பாரற்ற வேலி காக்கும்..
வழிபாடு முறை வைத்து
மனிதனைப் பிரித்து
தனிப் பெருங்கூட்டம் உருவாக்கி
தலைவன் என்று
மார்தட்டும்..
ஆயுதமேந்திய
ஆத்திகனாகவும் காட்டிக் கொள்ளும்..
செய்யும் தொழில் வைத்து
இனம் உருவாக்கி
அதில்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
என்றும்
வாய்கிழியப் பேசும்..
சுடுகாட்டைக் கூட
பிரித்து வைக்கும்..
இப்படித்தான்
மனிதன் என்ற நாட்டு விலங்கினம்
தனித்தனித் தீவாய் போனது
கண்டு
காட்டு விலங்கினம்
சிரித்துக் கொண்டிருக்கிறது...
மண்ணைப் பிரித்து
இது என் எல்லை
என்று
தம்பட்டம் அடிக்கும்..
ஆயுதம் குவித்து
கேட்பாரற்ற வேலி காக்கும்..
வழிபாடு முறை வைத்து
மனிதனைப் பிரித்து
தனிப் பெருங்கூட்டம் உருவாக்கி
தலைவன் என்று
மார்தட்டும்..
ஆயுதமேந்திய
ஆத்திகனாகவும் காட்டிக் கொள்ளும்..
செய்யும் தொழில் வைத்து
இனம் உருவாக்கி
அதில்
உயர்ந்தவன் தாழ்ந்தவன்
என்றும்
வாய்கிழியப் பேசும்..
சுடுகாட்டைக் கூட
பிரித்து வைக்கும்..
இப்படித்தான்
மனிதன் என்ற நாட்டு விலங்கினம்
தனித்தனித் தீவாய் போனது
கண்டு
காட்டு விலங்கினம்
சிரித்துக் கொண்டிருக்கிறது...