PDA

View Full Version : தபு சங்கருடன் ஒரு எதிர்பாராத சந்திப்பு



மன்மதன்
25-01-2005, 10:02 AM
சென்ற மாதம் சென்னை போயிருந்த போது அண்ணன் அறிவுமதியிடன் அவரது அலுவலகத்தில் உரையாடிக்கொண்டிருந்த போது ஏதோ ஒரு பேச்சுக்கு (அதென்ன ஏதோ ஒரு பேச்சு.. எப்பவுமே கவிதை பேச்சுதான்), தபு சங்கர் பற்றி பேச்சு எழ, நான் முந்திரி கொட்டையாக 'ஆமாம்ண்ணே, விகடன்லே எழுதுறாரு, முதல்ல அவர் கவிதைதான் படிப்பேன்.. நல்லா எழுதுறாரு' என்றேன்..

அண்ணன் உடனே அவரது இடப்பக்கம் கையை காண்பித்தார்.. (எனக்கு வலப்பக்கம்).. நான் அதை சரியாக கவனிக்காமல், இரண்டாவது தடவையாக 'தபு சங்கர், ரொம்ப சிம்பிளா எழுதுறார். இண்டர்நெட்ல விகடன் திறந்ததும் அவர் கவிதைதான் முதலில் படிப்பேன்' என்றேன். அறிவுமதி பொறுமை இழந்து 'அதை அவரிடமே சொல்' என்று மறுபடியும் இடப்பக்கம் விரலை காட்டினார்.. அட என் பக்கத்தில் இவ்ளோ நேரம் உட்கார்ந்திருந்தது அதே தபு சங்கர் தான்.. அந்த பாராட்டை மறுபடியும் அவரிடம் தெரிவித்தேன்.. நான் அவரைப்பற்றி அவர் இருப்பது தெரியாமலேயே அண்ணனிடம் புகழ்ந்ததை அவர் ரசித்திருக்கக்கூடும்.. நான் நேரில் பாராட்டினாலும் ஒரு புன்னகை மட்டுமே புரிந்தார்.

அவர் ஒரு படம் இயக்கப்போவதாகவும் சொன்னார்.. படம் கவிதை, பாடல் சம்பந்தப்பட்ட கதையா என்று கேட்டதற்கு 'கண்டிப்பா கமர்சியலா இருக்கும்' என்று சொன்னார். இந்த வார விகடனில் வந்த கடைசி கவிதை படித்தவுடன் அது புரிந்தது...

-----

சின்ன வயசிலேர்ந்தே என்னை
தொட்டுப் பேசும் பழக்கத்தை
நீ நிறுத்திக் கொண்ட போதுதான்
தெரிந்து கொண்டேன்
நீ என்னை கட்டிக்கொள்ள
ஆசைப்பட்டதை..

----

நீ சுத்த ஏமாளி
உன்னை அழகுபடுத்திக்கொள்ள
நீ விலை கொடுத்து வாங்கிய
எல்லா பொருட்களுமே
உன்னைக்கொண்டு
தங்களை
அழகுபடுத்திக்கொள்கின்றன!

----

ஒரே நிமிடத்தில்
உன்னை கடந்துபோகிற பெண்ணை பார்க்க
தினமும் ஒரு மணி நேரம் காத்திருக்கிறாயே என்று
கேட்ட என் நண்பனிடம் சொன்னேன்...
'நீ கூடத்தான்
ஒரே ஒரு நாள் சம்பளம் வாங்குவதற்காக
ஒரு மாதம் முழுதும் வேலை செய்கிறாய்'


-----

அன்புடன்
மன்மதன்

ஜீவா
25-01-2005, 12:40 PM
அய்யோ.. மன்மதன்.. நானும் அவரின் ரசிகன்.. நானும் முதலில் அவர் கவிதையைத்தான் விகடனில் படிப்பேன் .. தெரியுமா...

அவர் படம் எடுக்கிறார் என்றால்.. பாட்டு சூப்பர் டூப்பர் ஹிட் தான்.. :D

pradeepkt
27-01-2005, 03:19 AM
மன்மதன், எனக்கு உங்களை நினைச்சா ஒரே பொறாமையா இருக்கு. :)
நானும் அவரது படங்களை எதிர்பார்க்கிறேன்.

அது சரி, அறிவுமதி அவர்களின் திரைப்பாடல்கள் என்னை மிகக் கவர்ந்தவை. ஆங்கிலம் கலக்காமல் எழுதுவதை அவர் ஒரு தவமாகவே செய்து கொண்டிருந்தார். ஏன் இப்போதெல்லாம் அவர் திரைப்பாடல்கள் எழுதுவதில்லை?

அன்புடன்,
பிரதீப்

மன்மதன்
27-01-2005, 03:38 AM
Originally posted by pradeepkt@Jan 27 2005, 09:19 AM
மன்மதன், எனக்கு உங்களை நினைச்சா ஒரே பொறாமையா இருக்கு. :)
நானும் அவரது படங்களை எதிர்பார்க்கிறேன்.

அது சரி, அறிவுமதி அவர்களின் திரைப்பாடல்கள் என்னை மிகக் கவர்ந்தவை. ஆங்கிலம் கலக்காமல் எழுதுவதை அவர் ஒரு தவமாகவே செய்து கொண்டிருந்தார். ஏன் இப்போதெல்லாம் அவர் திரைப்பாடல்கள் எழுதுவதில்லை?

அன்புடன்,
பிரதீப்

95112

அண்ணன் அறிவுமதி ஒரு கொள்கை பிடிப்பாளர்.. யாருக்காகவும், எதற்காகவும் கொள்கையை விட்டுக்கொடுக்காதவர்.. முக்கியமாக பணம் முக்கியமில்லை என்று நினைப்பவர். அவரை பற்றி சொல்லிகொண்டே இருக்கலாம்.
அவர் என்னிடம் சொன்னது 'இனி படத்திற்கு பாட்டு எழுதுகிற மாதிரி எண்ணம் இல்லை'

அன்புடன்
மன்மதன்

பாரதி
28-01-2005, 03:30 PM
தபூ சங்கரை சந்தித்ததை "எதிர்பாராமல்" சொன்ன மன்மதரே.. அண்ணன் அறிவுமதி பற்றியும் கொடுங்களேன்...! பாராட்டுக்கள்.

மன்மதன்
29-01-2005, 07:38 AM
அண்ணன் பற்றி ஏற்கனவே அனைவருக்கும் தெரியும்தானே.. நான் வேற தனியா எதுக்கு பாரதி..???
அன்புடன்
மன்மதன்

rajeshkrv
31-01-2005, 09:24 AM
நல்ல எழுத்தாளர் . தினம் ஒரு கவிதை பகுதியில் முன்பு நிறைய எழுதியவர்.

ஆம் அறிவுமதி கொள்கையை விட்டுக்கொடுப்பதில்லை

சினேகன் சொல்லும்போது கூட இப்படித்தான் சொன்னார்.

சேரன்கயல்
02-02-2005, 02:35 AM
அண்ணன் அறிவுமதியின் அலுவலகத்துக்கு சென்றால் ஒரு மினி தற்போதைய, எதிர்கால திரையுலகத்தினரை காணலாம்...இளம் கவிஞர்களின் சோலை அண்ணன் அறிவுமதியின் அலுவலகம்...

சேரன்கயல்
02-02-2005, 02:37 AM
மவனே மன்மதா...
அடுத்த தபா ஊருக்கு வரும்போது, நானும் உன்னோடு வருகிறேன்...
(இந்த முறை எதிர்பாராத விதமாக வேறு யாரையாவது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமே)

மன்மதன்
02-02-2005, 03:11 AM
Originally posted by சேரன்கயல்@Feb 2 2005, 08:37 AM
மவனே மன்மதா...
அடுத்த தபா ஊருக்கு வரும்போது, நானும் உன்னோடு வருகிறேன்...
(இந்த முறை எதிர்பாராத விதமாக வேறு யாரையாவது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமே)

95229


குறும்பூபூபூ...... :D :D :D
அன்புடன்
மன்மதன்

mania
02-02-2005, 03:31 AM
Originally posted by மன்மதன்+Feb 2 2005, 09:11 AM--><div class='quotetop'>QUOTE(மன்மதன் @ Feb 2 2005, 09:11 AM)</div><div class='quotemain'><!--QuoteBegin-சேரன்கயல்@Feb 2 2005, 08:37 AM
மவனே மன்மதா...
அடுத்த தபா ஊருக்கு வரும்போது, நானும் உன்னோடு வருகிறேன்...
(இந்த முறை எதிர்பாராத விதமாக வேறு யாரையாவது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமே)

95229


குறும்பூபூபூ...... :D :D :D
அன்புடன்
மன்மதன்

95238
[/b][/quote]

:D :D :D அதானே......நாம போன இடத்துக்கெல்லாம் சேரனை கூட்டிகிட்டு போகமுடியுமா என்ன..... :rolleyes: :rolleyes: :rolleyes: ரசா பாசமாயிடும்ல..... :rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா.... :D :D

(குண்டக்கா மண்டக்கான்னு ஏதவது சொல்லி என்னையும் கழட்டி விடாதே மன்மதா.... :rolleyes: :D )

அறிஞர்
02-02-2005, 03:45 AM
தங்களின் சந்திப்பு குறித்து மெத்த மகிழ்ச்சி.... நானும் விகடனில் அவருடைய படைப்புக்களை ரசித்து படித்துள்ளேன்......

அறிஞர்
02-02-2005, 03:46 AM
Originally posted by mania+Feb 2 2005, 12:31 PM--><div class='quotetop'>QUOTE(mania @ Feb 2 2005, 12:31 PM)</div><div class='quotemain'>
Originally posted by மன்மதன்@Feb 2 2005, 09:11 AM
<!--QuoteBegin-சேரன்கயல்@Feb 2 2005, 08:37 AM
மவனே மன்மதா...
அடுத்த தபா ஊருக்கு வரும்போது, நானும் உன்னோடு வருகிறேன்...
(இந்த முறை எதிர்பாராத விதமாக வேறு யாரையாவது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமே)

95229


குறும்பூபூபூ...... :D :D :D
அன்புடன்
மன்மதன்

95238


:D :D :D அதானே......நாம போன இடத்துக்கெல்லாம் சேரனை கூட்டிகிட்டு போகமுடியுமா என்ன..... :rolleyes: :rolleyes: :rolleyes: ரசா பாசமாயிடும்ல..... :rolleyes: :rolleyes: :D :D




சேரனை கூட்டிட்டு போகவேண்டிய இடம் வேறு என்று சொல்லுங்கள் :unsure: :unsure:

mania
02-02-2005, 04:23 AM
Originally posted by அறிஞர்+Feb 2 2005, 09:46 AM--><div class='quotetop'>QUOTE(அறிஞர் @ Feb 2 2005, 09:46 AM)</div><div class='quotemain'>
Originally posted by mania@Feb 2 2005, 12:31 PM

Originally posted by மன்மதன்@Feb 2 2005, 09:11 AM
<!--QuoteBegin-சேரன்கயல்@Feb 2 2005, 08:37 AM
மவனே மன்மதா...
அடுத்த தபா ஊருக்கு வரும்போது, நானும் உன்னோடு வருகிறேன்...
(இந்த முறை எதிர்பாராத விதமாக வேறு யாரையாவது சந்திக்க வாய்ப்பு கிடைக்குமே)

95229


குறும்பூபூபூ...... :D :D :D
அன்புடன்
மன்மதன்

95238


:D :D :D அதானே......நாம போன இடத்துக்கெல்லாம் சேரனை கூட்டிகிட்டு போகமுடியுமா என்ன..... :rolleyes: :rolleyes: :rolleyes: ரசா பாசமாயிடும்ல..... :rolleyes: :rolleyes: :D :D




சேரனை கூட்டிட்டு போகவேண்டிய இடம் வேறு என்று சொல்லுங்கள் :unsure: :unsure:

95244
[/b]

:D :D நான் இந்த ஆட்டத்துக்கு வரலை...... :rolleyes: :rolleyes: :D :D
அன்புடன்
மணியா.... :D

மன்மதன்
02-02-2005, 05:00 AM
சரி... அந்த ஆட்டத்துக்காவது வந்துடுங்க.. :D :D
அன்புடன்
மன்மதன்

சேரன்கயல்
02-02-2005, 05:05 AM
அதானே......நாம போன இடத்துக்கெல்லாம் சேரனை கூட்டிகிட்டு போகமுடியுமா என்ன..... ரசா பாசமாயிடும்ல.....
அன்புடன்
மணியா....

(குண்டக்கா மண்டக்கான்னு ஏதவது சொல்லி என்னையும் கழட்டி விடாதே மன்மதா.... )

உங்க ஆட்டம் தாங்க முடியலையே...
ஆமா அதென்ன "ரசாபாசமாகக்கூடிய" இடங்கள்... :unsure: :rolleyes:

mania
02-02-2005, 06:20 AM
Originally posted by சேரன்கயல்@Feb 2 2005, 11:05 AM

அதானே......நாம போன இடத்துக்கெல்லாம் சேரனை கூட்டிகிட்டு போகமுடியுமா என்ன..... ரசா பாசமாயிடும்ல.....
அன்புடன்
மணியா....

(குண்டக்கா மண்டக்கான்னு ஏதவது சொல்லி என்னையும் கழட்டி விடாதே மன்மதா.... )

உங்க ஆட்டம் தாங்க முடியலையே...
ஆமா அதென்ன "ரசாபாசமாகக்கூடிய" இடங்கள்... :unsure: :rolleyes:

95247


:D :D :D :D ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதா............ நிறைய பாசமுடன் ரசம் பரிமாறும் இடங்கள்.......அதாவது நமக்கு நன்கு அறிமுகமான ஹோட்டல்கள்...... :D :D :D அதான் ரசா பாசம்.... :D :D (அப்பாடி ஒருவழியா சேரனுக்கு புரியற மாதிரி சொல்லியாச்சுன்னு நினைக்கிறேன்....)

பாசமுடன்
மணியா..... :rolleyes: :D

மன்மதன்
02-02-2005, 06:35 AM
Originally posted by mania+Feb 2 2005, 12:20 PM--><div class='quotetop'>QUOTE(mania @ Feb 2 2005, 12:20 PM)</div><div class='quotemain'><!--QuoteBegin-சேரன்கயல்@Feb 2 2005, 11:05 AM

அதானே......நாம போன இடத்துக்கெல்லாம் சேரனை கூட்டிகிட்டு போகமுடியுமா என்ன..... ரசா பாசமாயிடும்ல.....
அன்புடன்
மணியா....

(குண்டக்கா மண்டக்கான்னு ஏதவது சொல்லி என்னையும் கழட்டி விடாதே மன்மதா.... )

உங்க ஆட்டம் தாங்க முடியலையே...
ஆமா அதென்ன "ரசாபாசமாகக்கூடிய" இடங்கள்... :unsure: :rolleyes:

95247


:D :D :D :D ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதா............ நிறைய பாசமுடன் ரசம் பரிமாறும் இடங்கள்.......அதாவது நமக்கு நன்கு அறிமுகமான ஹோட்டல்கள்...... :D :D :D அதான் ரசா பாசம்.... :D :D (அப்பாடி ஒருவழியா சேரனுக்கு புரியற மாதிரி சொல்லியாச்சுன்னு நினைக்கிறேன்....)

பாசமுடன்
மணியா..... :rolleyes: :D

95255


ரசாபாசம்க்கு இப்படி அர்த்தம்னா :rolleyes: :rolleyes: :rolleyes: .....ஆசா பாசம் க்கு நீங்க அர்த்தம் சொல்லியே ஆகணும் தலை...... :D :D :D

அன்புடன்
மன்மதன்

mania
02-02-2005, 07:46 AM
Originally posted by மன்மதன்+Feb 2 2005, 12:35 PM--><div class='quotetop'>QUOTE(மன்மதன் @ Feb 2 2005, 12:35 PM)</div><div class='quotemain'>
Originally posted by mania@Feb 2 2005, 12:20 PM
<!--QuoteBegin-சேரன்கயல்@Feb 2 2005, 11:05 AM

அதானே......நாம போன இடத்துக்கெல்லாம் சேரனை கூட்டிகிட்டு போகமுடியுமா என்ன..... ரசா பாசமாயிடும்ல.....
அன்புடன்
மணியா....

(குண்டக்கா மண்டக்கான்னு ஏதவது சொல்லி என்னையும் கழட்டி விடாதே மன்மதா.... )

உங்க ஆட்டம் தாங்க முடியலையே...
ஆமா அதென்ன "ரசாபாசமாகக்கூடிய" இடங்கள்... :unsure: :rolleyes:

95247


:D :D :D :D ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அதா............ நிறைய பாசமுடன் ரசம் பரிமாறும் இடங்கள்.......அதாவது நமக்கு நன்கு அறிமுகமான ஹோட்டல்கள்...... :D :D :D அதான் ரசா பாசம்.... :D :D (அப்பாடி ஒருவழியா சேரனுக்கு புரியற மாதிரி சொல்லியாச்சுன்னு நினைக்கிறேன்....)

பாசமுடன்
மணியா..... :rolleyes: :D

95255


ரசாபாசம்க்கு இப்படி அர்த்தம்னா :rolleyes: :rolleyes: :rolleyes: .....ஆசா பாசம் க்கு நீங்க அர்த்தம் சொல்லியே ஆகணும் தலை...... :D :D :D

அன்புடன்
மன்மதன்

95256


:D :D ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ பாசத்துக்கு........ :rolleyes: :rolleyes: அர்த்தம் வேற வேணுமா உனக்கு.... :rolleyes: :rolleyes: :D :D (சேரனுக்கே சந்தேகம் வரலை....அதுக்குள்ள....... :D :D )
பாசரசத்துடன்
மணியா..... :rolleyes: :D :D

அமரன்
02-10-2007, 02:58 PM
கவிச்சுவை தொடங்கி நகைச்சுவைக்கு மாறிய தமிழ்ச்சுவை சுவைத்து நகைச்சுவையுங்கள் மக்களே.!மறைஞ்சிருந்ததை எடுத்துகொடுத்த ரசிகனையும் மனதில் வையுங்கள்.

பிரியமுடன்,

என்னவன் விஜய்
08-10-2007, 11:12 PM
தபு சங்கரின்கவிதயை படித்தால் காதலித்து பார்க்க ஆசை வரும்.அவ்வளவு மென்மையாக மனதை வருடும் கவிதைகள் அவருடையவை...............

நிலவில் வாழமுடியுமா ?
முடியாதா ?
என்பதுபற்றியெல்லாம்
எனக்கு கவலையில்லை
நான் நிலவோடு
வாழ்ந்துகொண்டிருப்பவன் !
- தபூ சங்கர்