இளசு
14-12-2004, 07:28 PM
யாரைப் பாராட்ட வேண்டும்?
கவிஞர் அழ.வள்ளியப்பா கவிதையில் மட்டுமல்ல-கதை சொல்வதிலும் வல்லவர்.
அவர் கவிதையிலும் கதை வரும். ஒரு பள்ளி ஆண்டு விழாவில் பரிசு வழங்கிவிட்டுச் சொன்ன கதை?
யாரைப் பாராட்ட வேண்டும்?
பரிசு பெற்றவர்களையா?
போட்டியில் பங்கு கொண்டவர்களையா?
யாரை?
அவர் சொன்ன இந்தக் கதையில் தெரியும்.
ஒரு திருடன் தெருவில் ஒரு கழைக்கூத்தாடியைப் பார்க்கிறான். ஒரு சிறுவன் சிறிய சிறிய வளையங்களிலெல்லாம் புகுந்து வருகிறான்.
மேலும் பல நிகழ்ச்சிகள்-
முடிவில் கழைக் கூத்தாடிக்கு கிடைப்பது ஒரு சில ரூபாய்களே. திருடன் கழைக்கூத்தாடியிடம் பேரம் பேசுகிறான். பையனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போக ஒரு பொருந்தொகை கொடுக்கிறான்.
பையனுக்குச் சுகவாசம்... பலமான சாப்பாடு.. தூக்கம்... ஒரு நாள் திருடன் பையனைத் தன்னுடன் அழைக்கிறான். பின்னிரவு... ஒரே இருட்டு ஒரு பணக்கார வீடு... திருடன் கன்னக்கோல் வைத்து சுவரில் ஓட்டை போடுகிறான். பையனை ஓட்டை வழியாக உள்ளே போய்க் கதவைத் திறந்துவிடச் சொல்லுகிறான்.
பையன் தயங்குகிறான்
"ஓட்டையைப் பெரிதாகப் போடட்டுமா?'
"வேண்டாம்'
"பிறகு என்னதான் வேண்டும்?'
"கொட்ட ஒரு மேளம்... கைதட்டிச் சீட்டியடிக்க பத்து சிறுவர்கள்...'
"ஐயய்யோ! அதெல்லாம் முடியாது, ஆபத்து'
பையனே கையைத் தட்டி, விசிலடித்து, டும் டும் டும் என்று கத்தி உய் என்ற இரைச்சலுடன் வீட்டுள்ளே குதித்தான்.
விளைவு?
போட்டியில் பரிசு பெற்றவர், பங்கு பெற்றவர் மட்டுமல்ல பார்த்து உற்சாகம் ஊட்டியவர்களும் பாராட்டுக்குரியவர்களே என்றார் கவிஞர்.
நன்றி - திசைகள் இதழில் ஆர்.பி.சாரதி அவர்கள்
கவிஞர் அழ.வள்ளியப்பா கவிதையில் மட்டுமல்ல-கதை சொல்வதிலும் வல்லவர்.
அவர் கவிதையிலும் கதை வரும். ஒரு பள்ளி ஆண்டு விழாவில் பரிசு வழங்கிவிட்டுச் சொன்ன கதை?
யாரைப் பாராட்ட வேண்டும்?
பரிசு பெற்றவர்களையா?
போட்டியில் பங்கு கொண்டவர்களையா?
யாரை?
அவர் சொன்ன இந்தக் கதையில் தெரியும்.
ஒரு திருடன் தெருவில் ஒரு கழைக்கூத்தாடியைப் பார்க்கிறான். ஒரு சிறுவன் சிறிய சிறிய வளையங்களிலெல்லாம் புகுந்து வருகிறான்.
மேலும் பல நிகழ்ச்சிகள்-
முடிவில் கழைக் கூத்தாடிக்கு கிடைப்பது ஒரு சில ரூபாய்களே. திருடன் கழைக்கூத்தாடியிடம் பேரம் பேசுகிறான். பையனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு போக ஒரு பொருந்தொகை கொடுக்கிறான்.
பையனுக்குச் சுகவாசம்... பலமான சாப்பாடு.. தூக்கம்... ஒரு நாள் திருடன் பையனைத் தன்னுடன் அழைக்கிறான். பின்னிரவு... ஒரே இருட்டு ஒரு பணக்கார வீடு... திருடன் கன்னக்கோல் வைத்து சுவரில் ஓட்டை போடுகிறான். பையனை ஓட்டை வழியாக உள்ளே போய்க் கதவைத் திறந்துவிடச் சொல்லுகிறான்.
பையன் தயங்குகிறான்
"ஓட்டையைப் பெரிதாகப் போடட்டுமா?'
"வேண்டாம்'
"பிறகு என்னதான் வேண்டும்?'
"கொட்ட ஒரு மேளம்... கைதட்டிச் சீட்டியடிக்க பத்து சிறுவர்கள்...'
"ஐயய்யோ! அதெல்லாம் முடியாது, ஆபத்து'
பையனே கையைத் தட்டி, விசிலடித்து, டும் டும் டும் என்று கத்தி உய் என்ற இரைச்சலுடன் வீட்டுள்ளே குதித்தான்.
விளைவு?
போட்டியில் பரிசு பெற்றவர், பங்கு பெற்றவர் மட்டுமல்ல பார்த்து உற்சாகம் ஊட்டியவர்களும் பாராட்டுக்குரியவர்களே என்றார் கவிஞர்.
நன்றி - திசைகள் இதழில் ஆர்.பி.சாரதி அவர்கள்