View Full Version : கவிதையாய் ஒரு காதலி
gans5001
08-12-2004, 01:51 PM
கனவுகளோடு
வாழ்பவர்களுக்கு
கவிதை கைவருமாமே...
ஆனால்
நீ மட்டும் எப்படி
அடுத்தவன் மனைவியாய்!
....
பிரியன்
08-12-2004, 03:10 PM
கவிதை எழுதப்பட இடம் தேவை....
சூழல்கள்தான் எதை என்று தீர்மானிக்கின்றன ....
வாழ்த்துகள்.
thamarai
08-12-2004, 07:35 PM
கனவுகளோடு
வாழ்பவர்களுக்கு
கவிதை கைவருமாமே...
காதல் வந்தாலே கவிதையும் வரும் கனவும் வரும்.
கவிதை அருமை.
வாழ்த்துக்கள்...
gans5001
08-12-2004, 10:50 PM
உற்சாகமூட்டிய நண்பர்களுக்கு நன்றி
அவள் அல்லது கவிதை
ஏதோ ஒன்று மட்டுந்தான்..
அதனால்தான்
இரண்டாவது வாய்த்திருக்கிறது..
கன்ஸிடம் இருந்து இன்னும் இன்னும் எதிர்பார்க்கும்
நண்பன் இளசு.. பாராட்டுகள் நண்பா..
manitha
13-12-2004, 02:31 AM
உங்களுக்கு கனவுகள் வந்துவிட்டதென்றாலே
நீங்கள் கற்பனை உலகுக்கு அதிபதியாகிவிடுவீர்கள்
உங்களுக்கு கற்பனை உலகம் சொந்தமென்றால்
கவிதைகள் ஊற்றெடுப்பதில் ஆச்சர்யம் என்ன இருக்கிறது நண்பரே!!!!!!
என்ன நான் சொல்வது சரிதானே மன்றத்தோழர்களே?
அக்னி
30-05-2007, 09:57 PM
கறுப்பு வெள்ளைக் கனவுகளிலேயே
அழகிய கவிதைகள் உருவாகும்...
கண்ணைக் கவரும் நனவுகளிலே,
உண்மைக் கவிதைகள் குறைவாகும்....
விந்தையான முரண்பாடு...
விகடன்
07-06-2007, 08:41 PM
கவிதை புலம்பலுடன்.
பாராட்டுக்கள்.