மன்மதன்
01-12-2004, 07:33 AM
முதல் பேச்சு - சிறுகதை
பரசுராமன் மனைவி கீதா வீட்டிற்கு பின்புறம் உள்ள கொல்லைப்புறத்தில் அடுத்த வீட்டுக்காரரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.. பேப்பரில் மூழ்கியிருந்த பரசுராமன் காதில் அவள் கத்தியது விழுந்தது.
'எப்படிய்யா அதுவா கிணத்திலே விழும்.. உங்க வீட்டு கொல்லைக்கு தவறுதலா வந்தா, எங்ககிட்ட சொல்ல வேண்டியதுதானே. இல்லேன்னா எடுத்து இங்கே வீசிடவேண்டியதுதானே. கிணத்திலே போட்டு சாகடிச்சிட்டிங்களே..'
பரசுராமன் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்டுத்தெரிந்து கொண்டான். அவர்கள் வளர்ந்த கோழிகளில் ஒன்று சுவரை தாண்டி பக்கத்து வீட்டில் போனதால் கொன்று விட்டார்களாம். மனைவியின் கோபத்தில் பரசுராமனுக்கு நாடி புடைத்தது.. இதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் . இன்று இரவு அவர்கள் கோழிப்பண்ணையை நாசம் பண்ணிட வேண்டியதுதான்..
இரவு பரசுராமன் வீட்டிற்கு வெளியே ஜீப் ஹாரன் கேட்டது. பரசுராமனின் கோஷ்டிகள் வந்தாச்சு..அவசரமாக கிளம்பிய பரசுராமனின் காலுக்கடியில் இரண்டு கோழிக்குஞ்சுகள் பயந்த படி ஒதுங்கின.
அவன் மனைவி வந்து 'அதுவா.. பக்கத்து வீட்டுக்காரங்க கொடுத்தது. நம்ம கோழி தவறுதலாதான் செத்து விட்டதாம். அவங்க மேல எந்த குத்தமும் இல்லையாம். இருந்தாலும் அவங்க இந்த கோழிக்குஞ்சுகளை நம்மிடம் பதிலுக்கு கொடுத்தாங்க.. ரொம்ப நல்லவங்க இல்லீங்க...'
அடிப்பாவி , உன் பேச்சை கேட்டு பெரிய பாவம் பண்ண இருந்தேனே.. இனி மனைவியின் முதல் பேச்சை காது கொடுத்து கேட்கவே கூடாது என்று மனதுக்குள் சொல்லியபடி ஜீப்பை திருப்பி அனுப்பினான்..
-
மன்மதன்
பரசுராமன் மனைவி கீதா வீட்டிற்கு பின்புறம் உள்ள கொல்லைப்புறத்தில் அடுத்த வீட்டுக்காரரிடம் சண்டை போட்டுக்கொண்டிருந்தாள்.. பேப்பரில் மூழ்கியிருந்த பரசுராமன் காதில் அவள் கத்தியது விழுந்தது.
'எப்படிய்யா அதுவா கிணத்திலே விழும்.. உங்க வீட்டு கொல்லைக்கு தவறுதலா வந்தா, எங்ககிட்ட சொல்ல வேண்டியதுதானே. இல்லேன்னா எடுத்து இங்கே வீசிடவேண்டியதுதானே. கிணத்திலே போட்டு சாகடிச்சிட்டிங்களே..'
பரசுராமன் அவளிடம் என்ன நடந்தது என்று கேட்டுத்தெரிந்து கொண்டான். அவர்கள் வளர்ந்த கோழிகளில் ஒன்று சுவரை தாண்டி பக்கத்து வீட்டில் போனதால் கொன்று விட்டார்களாம். மனைவியின் கோபத்தில் பரசுராமனுக்கு நாடி புடைத்தது.. இதற்கு பதிலடி கொடுத்தே ஆக வேண்டும் . இன்று இரவு அவர்கள் கோழிப்பண்ணையை நாசம் பண்ணிட வேண்டியதுதான்..
இரவு பரசுராமன் வீட்டிற்கு வெளியே ஜீப் ஹாரன் கேட்டது. பரசுராமனின் கோஷ்டிகள் வந்தாச்சு..அவசரமாக கிளம்பிய பரசுராமனின் காலுக்கடியில் இரண்டு கோழிக்குஞ்சுகள் பயந்த படி ஒதுங்கின.
அவன் மனைவி வந்து 'அதுவா.. பக்கத்து வீட்டுக்காரங்க கொடுத்தது. நம்ம கோழி தவறுதலாதான் செத்து விட்டதாம். அவங்க மேல எந்த குத்தமும் இல்லையாம். இருந்தாலும் அவங்க இந்த கோழிக்குஞ்சுகளை நம்மிடம் பதிலுக்கு கொடுத்தாங்க.. ரொம்ப நல்லவங்க இல்லீங்க...'
அடிப்பாவி , உன் பேச்சை கேட்டு பெரிய பாவம் பண்ண இருந்தேனே.. இனி மனைவியின் முதல் பேச்சை காது கொடுத்து கேட்கவே கூடாது என்று மனதுக்குள் சொல்லியபடி ஜீப்பை திருப்பி அனுப்பினான்..
-
மன்மதன்