PDA

View Full Version : மழையில் நனைந்து பார்....



rambal
14-04-2003, 06:01 PM
மழையில் நனைந்து பார்....

மழை உருவாக்கிய
தற்காலிக சிற்றாற்றில்
கவிழ்ந்தாலும்
கவலையே இல்லாமல்
விட்டுப் பழகலாம்
காகிதக் கப்பல்!

உச்சந் தலையில் மழை நீர்
விழுந்து அனுபவித்திருக்கிறாயா?
அதுதான்
கடவுள் கொடுத்த
இன்ஸ்டண்ட் குற்றாலம்!

மழையில் நன்றாய்
நனைந்து
எதிர்ப்பட்ட தேனீர்க் கடையில்
சூடாய் தேனீர் அருந்திப் பார்...
அதுதான் அமிர்தம்...

மழையில் நனைந்து கொண்டே
இரு சக்கர வாகனம் ஓட்டிப் பார்...
மழைத்துளி கம்பியாய் கண்களில் குத்தும்...
பற்கள் தந்தி அடிக்கும்....
கைகள் விறைக்கும்...
உடம்பு சிலிர்க்கும்...

இந்தச் சுகம் கிடைக்குமா?
ஜன்னல் கம்பி பிடித்துக் கொண்டே
மழையை ஏதோ
நிர்வாணப் பெண்ணை
வேடிக்கை பார்ப்பது போல்
பார்ப்பதில்....

இளசு
14-04-2003, 09:30 PM
மழையில் நனைவதும் சுகம் -- உன் கவிதை
மழையில் நனைவதும் சுகம்.....

gankrish
15-04-2003, 05:39 AM
ஐயா ராம், உங்கள் கவிதை மழையில் நனைந்து எனக்கு ஜலதோஷம் பிடித்து விட்டது.