PDA

View Full Version : DR.மாத்ருபூதம் சென்னையில் மரணம்



தமிழ்குமரன்
18-11-2004, 12:44 PM
டாக்டர்.மாத்ருபூதம் சென்னையில் மரணம். இதய நோய் காரணமாக.

thiruarul
18-11-2004, 05:10 PM
ஆம். சிறந்த மனோதத்துவவியலாளர்.அவரது ஆன்மா சாந்தியடையப் பிரார்த்திக்கிறேன்.

ஆனால் தமிழகத்தின் இரு முன்னணிப் பத்திரிகைகள் இவ்விடயத்தையும் இருவேறுவிதமாக எழுதுவது ஆச்சரியத்தைத்தருகிறது. பிந்திய செய்தி என்ற பிரிவில் காணப்பட்ட தகவலை அப்படியே தருகிறேன்.


தினகரன்

சென்னை,நவ.18- புதிரா? புனிதமா புகழ் டாக்டர் மாத்ருபூதம் காலமானார்.

பிரபல மனநல மருத்துவ நிபுணர் டாக்டர் மாத்ருபூதம் (60) இன்று காலை சென்னை அண்ணா நகரில் உள்ள அவரது இல்லத்தில் மாரடைப்பால் கால மானார். தூக்கத்திலேயே அவரது உயிர் பிரிந்ததாக தெரிகிறது. மறைந்த மாத்ருபூதம் பல்வேறு நூல்கள், ஆராய்ச்சி கட்டுரைகள் எழுதியவர். புதிரா புனிதமா என்ற டி.வி. நிகழ்ச்சி மூலம் பிரசித்தி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மாத்ரூபூதத்துக்கு கீதா என்ற மனைவியும், பாஸ்கர், ஸ்ரீதர் என்ற 2 மகன்களும் உள்ளனர். பாஸ்கர் அமெரிக்காவிலும், ஸ்ரீதர் இங்கிலாந்திலும் உள்ளனர்.

தினமலர்

பிரபல மனநல மருத்துவர் மாத்ருபூதம் திடீர் மரணம்

சென்னை : பிரபல மனநல மருத்துவரான மாத்ருபூதம் சென்னையில் ஒரு தனியார் மருத்துவமனையில் இன்று இருதயக் கோளாறு, மற்றும் சிறுநீரகக் கோளாறு காரணமாக மரணமடைந்தார். இவர் இந்த வியாதிகள் தொடர்பாக சில காலமாகவே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிசிக்சை பலனளிக்காமல் இன்று மரணமடைந்தார். இவருக்கு வயது 60. இவருக்கு மனைவியும், இரு பையன்களும் உள்ளனர். செக்ஸ் தொடர்பாக டிவியில் நிகழ்ச்சி நடத்தி பிரபலம் அடைந்தவர். சினிமாத் துறையிலும் கடந்த ஆண்டில் 7 படங்களில் நடித்துள்ளார்.

lavanya
18-11-2004, 10:44 PM
நல்ல மனோதத்துவ இயலாளர்..கொஞ்ச நாட்களாக கிட்னியில் ஏதோ நோய்வாய்ப்பட்டு சுகமில்லாமல் இருந்தார்..அதனால்தான்
இறந்திருப்பார் என்று நினைக்கிறேன்..செய்தியை முந்தி தரும்
ஆர்வத்தில் ஏதும் தவறி இருக்கலாம்

தமிழ்குமரன்
19-11-2004, 04:55 AM
நல்ல மனோதத்துவ இயலாளர்..கொஞ்ச நாட்களாக கிட்னியில் ஏதோ நோய்வாய்ப்பட்டு சுகமில்லாமல் இருந்தார்..அதனால்தான்
இறந்திருப்பார் என்று நினைக்கிறேன்..செய்தியை முந்தி தரும்
ஆர்வத்தில் ஏதும் தவறி இருக்கலாம்

சிறுநீரக கோளாறு இருப்பினும், மாரடைப்பே மரணத்திற்க்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரியன்
19-11-2004, 05:46 PM
சிறந்த மருத்துவர் . கடந்த சில நாட்களாகவே சிறுநீரக கோளாறு காரணமாக அவதியுற்று வந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கிறேன்

mythili
20-11-2004, 05:37 AM
சிறந்த மருத்துவர். நேற்று தான் காலை தினகரன் பேப்பரில் படித்தேன்,

அன்புடன்,
மைதிலி

தஞ்சை தமிழன்
20-11-2004, 07:03 AM
தமிழகத்தில் ஒரு சிலருக்காவது விழிப்புணர்வை வழங்கி சென்ற எதையிம் தெளிவுடன் சொல்லத்தெரிந்த மருத்துவரும் மரணம் வருந்ததக்கது. அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.