மன்மதன்
29-10-2004, 06:09 PM
மச்சி , எனக்கு உதவி பண்ணுவியா மாட்டியா.."
"பண்றேண்டா, கண்டிப்பா பண்றேன், என்ன பண்ணனும் சொல்லு"
"மேனேஜர் போஸ்ட்ல இருக்கோங்கிற திமிறல அட்டகாசம் பண்ற ஸ்ரீராம நாம காலி பண்ணனும்.."
"அடப்பாவி, உனக்கு நல்லா ஏறிப்போச்சுன்னு நினைக்கிறேன், நான் கிளம்புறேன்"
"போடா போ, நேத்து எல்லார் முன்னாடியும் வச்சு திட்டினான்லே, அப்ப வந்து சிகரெட்ட பத்த வைச்சிகிட்டு அதால அவன் உடம்பு முழுக்க சூடு போடணும்னு சபதம் எடுத்தியே.. அதெல்லாம் சும்மா உதார்தானா?"
"ஆளை காலி பண்ற அளவுக்கு நான் யோசிக்கலைடா.. இது ரொம்ப ரிஸ்க்"
"ஆளை காலி பண்ண வேண்டாம் , வேலை மட்டும் காலி பண்ணிடுவோம்"
முரளியும், சேகரும் ரகசிய திட்டம் தீட்டி விட்டு வேலன் ஒயின்ஸிலிருந்து புறப்பட 10 மணி ஆகிவிட்டது...
மறுநாள் காலை,
ஸ்ரீராம் , அந்த இருவரையும் கூப்பிட்டு, "ஏம்பா உங்க நல்லதுக்கு சிலது செய்தா என்னையே கவுக்கலாம்னு பார்க்கிறீங்களே.. இதுவரை இரண்டு தடவை மேலிடத்திருந்து மெமொ உங்களுக்கு வந்திருக்கு. வேலையை விட்டு நீக்கவும் சொல்லிட்டாங்க.. நான் தான் உங்களை கவர் பண்றேன். ஏன் என்னையே வேலையை விட்டு தூக்க அலையறீங்க.."
"அது இல்லை ஸ்ரீராம், சும்மா மப்புல எதாவது உளறியிருப்போம், ஆமாம் யார் இதெல்லாம் உன்ட்ட போட்டு கொடுக்கிறது"
"நானே என் காதால் கேட்டேன், நேற்று அந்த பாரில் நான் உங்க பக்கத்து சீட்டலதான் உட்கார்ந்திருந்தேன். எந்த பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே"
"இனி இப்படியெல்லாம் உளறி வைக்க மாட்டோம், ப்ராமிஸ்.. "
"சரி..சரி.. வேலையை போயி பாருங்க"
சிறிது நேரம் கழித்து பியூன் வந்து முரளியை மேலிடத்தில் கூப்பிடுகிறார்கள் என்றான். ஜெனரல் மேனேஜர் கேபினுக்கு போய் வந்த முரளியின் கையில் ஒரு மெமோ இருந்தது. அதை வாங்கி பார்த்த சேகருக்கு முகம் கொஞ்சம் மாறியது. அதிலிருந்து முரளியிடம் சரியாக பேசவேயில்லை..
அன்றிரவு
சேகர் வீடு,
சேகர் மனைவி சேகரிடம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என கேட்டாள்...
"இத்தனை நாள் என் நண்பனாக பழகிய முரளி ஒரு ஒட்டுண்ணி, என் கூட இருந்தே குழி பறிச்சுட்டான், ஸ்ரீராமை என் பக்கத்திலே வச்சுகிட்டே என் வாயை கிளறிட்டான். என்னை காட்டி கொடுத்து எனக்கு கிடைக்க இருந்த ப்ரொமொஷனை அவன் எடுத்துகிட்டான் துரோகி...
முரளி வீடு
முரளியின் முகம் சோகமா இருப்பது கண்டு ஏன் என்ற பதறிய படி அவன் மனைவி கேட்டாள்..
"பாவம் சேகர், அவனுக்கு கிடைக்க இருந்த ப்ரொமோஷன் எனக்கு கொடுத்திட்டாங்க. ஏன்னு நான் கேட்டதுக்கு , ஸ்ரீராம் வேலை மாற்றலாகி வேற பிராஞ்சு போறான், அப்ப அந்த வேலை சேகருக்கு கிடைக்கனும்னாங்க.. அதுக்கு ரொம்ப நாள் ஆகுமாம்.. அது தெரியாம நான் தான் அவன் ப்ரோமோஷனை கெடுத்திட்டேன்னு என் மேல் கோபமா இருக்கான்"
ஸ்ரீராம் வீடு
மிகவும் சந்தோஷக்களைப்பில் இருந்த ஸ்ரீராமிடம் அவள் மனைவி காரணம் கேட்டாள்...
"என்னை எப்படியாவது வேலையில் இருந்து தூக்கிடணும்னு அந்த முரளி பயலும் , சேகர் பயலும் ரொம்ப குறியா இருந்தாங்க, இரண்டு பேரும் சேர்ந்து இருந்தா எப்படியாவது என் வேலைக்கு ஆப்பு அடிச்சுடுவாங்க அதான் அவங்களை ஒரு ஐடியா பண்ணி பிரிச்சுட்டேன்' என்று ஒரு திருட்டு புன்னகை புரிந்தான்.................
-மன்மதன்
பி.கு.. இது மூன்றாவது கதை.. கதையில் ஒண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுதத்தான் கதை, கதை மாதிரி வருமாமே.. மூன்றாவதுதானே..பொறுத்தருள்க :D :D
"பண்றேண்டா, கண்டிப்பா பண்றேன், என்ன பண்ணனும் சொல்லு"
"மேனேஜர் போஸ்ட்ல இருக்கோங்கிற திமிறல அட்டகாசம் பண்ற ஸ்ரீராம நாம காலி பண்ணனும்.."
"அடப்பாவி, உனக்கு நல்லா ஏறிப்போச்சுன்னு நினைக்கிறேன், நான் கிளம்புறேன்"
"போடா போ, நேத்து எல்லார் முன்னாடியும் வச்சு திட்டினான்லே, அப்ப வந்து சிகரெட்ட பத்த வைச்சிகிட்டு அதால அவன் உடம்பு முழுக்க சூடு போடணும்னு சபதம் எடுத்தியே.. அதெல்லாம் சும்மா உதார்தானா?"
"ஆளை காலி பண்ற அளவுக்கு நான் யோசிக்கலைடா.. இது ரொம்ப ரிஸ்க்"
"ஆளை காலி பண்ண வேண்டாம் , வேலை மட்டும் காலி பண்ணிடுவோம்"
முரளியும், சேகரும் ரகசிய திட்டம் தீட்டி விட்டு வேலன் ஒயின்ஸிலிருந்து புறப்பட 10 மணி ஆகிவிட்டது...
மறுநாள் காலை,
ஸ்ரீராம் , அந்த இருவரையும் கூப்பிட்டு, "ஏம்பா உங்க நல்லதுக்கு சிலது செய்தா என்னையே கவுக்கலாம்னு பார்க்கிறீங்களே.. இதுவரை இரண்டு தடவை மேலிடத்திருந்து மெமொ உங்களுக்கு வந்திருக்கு. வேலையை விட்டு நீக்கவும் சொல்லிட்டாங்க.. நான் தான் உங்களை கவர் பண்றேன். ஏன் என்னையே வேலையை விட்டு தூக்க அலையறீங்க.."
"அது இல்லை ஸ்ரீராம், சும்மா மப்புல எதாவது உளறியிருப்போம், ஆமாம் யார் இதெல்லாம் உன்ட்ட போட்டு கொடுக்கிறது"
"நானே என் காதால் கேட்டேன், நேற்று அந்த பாரில் நான் உங்க பக்கத்து சீட்டலதான் உட்கார்ந்திருந்தேன். எந்த பிரச்சனையா இருந்தாலும் என்கிட்ட சொல்ல வேண்டியதுதானே"
"இனி இப்படியெல்லாம் உளறி வைக்க மாட்டோம், ப்ராமிஸ்.. "
"சரி..சரி.. வேலையை போயி பாருங்க"
சிறிது நேரம் கழித்து பியூன் வந்து முரளியை மேலிடத்தில் கூப்பிடுகிறார்கள் என்றான். ஜெனரல் மேனேஜர் கேபினுக்கு போய் வந்த முரளியின் கையில் ஒரு மெமோ இருந்தது. அதை வாங்கி பார்த்த சேகருக்கு முகம் கொஞ்சம் மாறியது. அதிலிருந்து முரளியிடம் சரியாக பேசவேயில்லை..
அன்றிரவு
சேகர் வீடு,
சேகர் மனைவி சேகரிடம் ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் என கேட்டாள்...
"இத்தனை நாள் என் நண்பனாக பழகிய முரளி ஒரு ஒட்டுண்ணி, என் கூட இருந்தே குழி பறிச்சுட்டான், ஸ்ரீராமை என் பக்கத்திலே வச்சுகிட்டே என் வாயை கிளறிட்டான். என்னை காட்டி கொடுத்து எனக்கு கிடைக்க இருந்த ப்ரொமொஷனை அவன் எடுத்துகிட்டான் துரோகி...
முரளி வீடு
முரளியின் முகம் சோகமா இருப்பது கண்டு ஏன் என்ற பதறிய படி அவன் மனைவி கேட்டாள்..
"பாவம் சேகர், அவனுக்கு கிடைக்க இருந்த ப்ரொமோஷன் எனக்கு கொடுத்திட்டாங்க. ஏன்னு நான் கேட்டதுக்கு , ஸ்ரீராம் வேலை மாற்றலாகி வேற பிராஞ்சு போறான், அப்ப அந்த வேலை சேகருக்கு கிடைக்கனும்னாங்க.. அதுக்கு ரொம்ப நாள் ஆகுமாம்.. அது தெரியாம நான் தான் அவன் ப்ரோமோஷனை கெடுத்திட்டேன்னு என் மேல் கோபமா இருக்கான்"
ஸ்ரீராம் வீடு
மிகவும் சந்தோஷக்களைப்பில் இருந்த ஸ்ரீராமிடம் அவள் மனைவி காரணம் கேட்டாள்...
"என்னை எப்படியாவது வேலையில் இருந்து தூக்கிடணும்னு அந்த முரளி பயலும் , சேகர் பயலும் ரொம்ப குறியா இருந்தாங்க, இரண்டு பேரும் சேர்ந்து இருந்தா எப்படியாவது என் வேலைக்கு ஆப்பு அடிச்சுடுவாங்க அதான் அவங்களை ஒரு ஐடியா பண்ணி பிரிச்சுட்டேன்' என்று ஒரு திருட்டு புன்னகை புரிந்தான்.................
-மன்மதன்
பி.கு.. இது மூன்றாவது கதை.. கதையில் ஒண்ணும் விசேசமில்லை என்பதுதான் விசேசமே.. எழுத எழுதத்தான் கதை, கதை மாதிரி வருமாமே.. மூன்றாவதுதானே..பொறுத்தருள்க :D :D