Nanban
19-10-2004, 04:47 PM
அலையின் நுரைப்பூச்சுகளில்
அவசரமாய் அலைந்து
உடல் நனைத்து
கடல் கண்ட திருப்தியுடன்
வெளியேறுகையில்
நான் பிரிந்து இரண்டாகினேன்....
ஆழியின் ஆழக்கருவறையின்
மௌன வெளிகளில்
வாய்மூடிக் கிடக்கின்றன
சில முத்து சிப்பிகள்....
மூச்சடக்கி முங்கியெழுந்து
முத்துகளைத் தேடியெடுத்து வர
ஆசை தான் -
தெவங்கிப் போகையிலே
கயிற்றைப் பிடித்திழுக்க
நம்பிக்கை கொண்ட ஒரு துணை
கரை மீது காத்திருப்பதாய் இருந்தால்......
ஆட்டம் போடும்
அலையின் இரைச்சலையே
கடலென
எல்லோரும் நம்பிக்கைக் கொள்ளும் பொழுது
மீண்டும் திரும்புவேன் என்ற
நிச்சயமற்ற முங்குதலுக்கு
முயலப்போவதில்லை என்றுமே....
நானும் நானும் இணைந்து
ஒருவாறு வெளியேகுகையில்
சில முத்து சிப்பிகள்
கடலில் இருந்து எடுக்கப்படாமலே
கிடக்கின்றன -
கால எல்லைகளற்ற கர்ப்பத்தில்...
அவசரமாய் அலைந்து
உடல் நனைத்து
கடல் கண்ட திருப்தியுடன்
வெளியேறுகையில்
நான் பிரிந்து இரண்டாகினேன்....
ஆழியின் ஆழக்கருவறையின்
மௌன வெளிகளில்
வாய்மூடிக் கிடக்கின்றன
சில முத்து சிப்பிகள்....
மூச்சடக்கி முங்கியெழுந்து
முத்துகளைத் தேடியெடுத்து வர
ஆசை தான் -
தெவங்கிப் போகையிலே
கயிற்றைப் பிடித்திழுக்க
நம்பிக்கை கொண்ட ஒரு துணை
கரை மீது காத்திருப்பதாய் இருந்தால்......
ஆட்டம் போடும்
அலையின் இரைச்சலையே
கடலென
எல்லோரும் நம்பிக்கைக் கொள்ளும் பொழுது
மீண்டும் திரும்புவேன் என்ற
நிச்சயமற்ற முங்குதலுக்கு
முயலப்போவதில்லை என்றுமே....
நானும் நானும் இணைந்து
ஒருவாறு வெளியேகுகையில்
சில முத்து சிப்பிகள்
கடலில் இருந்து எடுக்கப்படாமலே
கிடக்கின்றன -
கால எல்லைகளற்ற கர்ப்பத்தில்...