பரஞ்சோதி
10-10-2004, 09:57 AM
பரமாத்மா குரு தலையும், அட்டகாச சிஷ்யர்களும்
மாலையில் வழக்கம் போல் கோழிக்கோடு நாயர் நடத்தும் மதுரை முனியாண்டி விலாஸ் முன்பு சேரன், பரம்ஸ், பூ, மன்மதன் அனைவரும் கூடினார்கள்.
ஓரமா போட்டியிருந்த பெஞ்சில் பெருசுங்க உட்கார்ந்து ஊர் வம்பு அடித்துக் கொண்டிருந்தாங்க. :idea:
சிறிது நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக தலை நடந்து வந்தார், முகத்தில் உற்சாகமில்லை. :cry:
தலை உற்சாகம் இல்லாமல் வந்தால் கீழ் கண்ட காரணங்களாகத் தான் இருக்கும் :!:
1) இணைய இணைப்பு கிடைக்காமல் தமிழ் மன்றம் போயிருக்க முடியாது. :cry:
2) அப்படியே போனாலும் ஆராய்ச்சி புகழ் அறிஞரும், ஸ்பெல்லிங் குயின் மைதிலியும் வந்திருக்கமாட்டாங்க. :evil:
3) கஷ்டமான புதிர் என்று போட்டதை பரம்ஸ் கும்சாவா உடனே சரியான பதில் சொன்னது. :twisted:
4) அந்த வாரம் முழுவதும் வேலை நிமித்த பயணம் ஏதுவும் இருந்திருக்காது. :oops:
பரம்ஸ்: வாங்க தலை, உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம். (மனசுக்குள்ளே அப்பாடா, டீ காசு கொடுக்க தலை வந்தாச்சு)
சேரன்: ஏம்பா நாயரே! சூடா 5 பால் டீ போடு. இம்மாம் நேரம் குந்திகின்னு இருக்கிறது. 8)
டீ கடை நாயர்: சூடா வெள்ளம், இல்லை அது கூட கிடையாது. :twisted:
தலை : ஏம்பா? :?:
டீ கடை நாயர்: சாரே! ஒரு மாசமா குடிச்ச டீ கணக்கு 498 ரூபாய் சாரே. :idea:
சேரன்: ரவுண்ட் பிகர் ஆகட்டும், அப்புறமா கொடுக்கலாம்னு இருந்தேன் தலை. :wink:
மன்மதன்: நாயரே! ஒரு போண்டா கொடு, பிகரு ரவுண்ட் ஆகிடும். :idea:
சேரன்: மவனே, உன்னை ரவுண்டு கட்டி அடிச்சா, உன் பிகரு சேப்பு மாறிடும். :twisted:
நாயர்: இ கணக்கை சரி செய்யுங்க சாரே! :x
பூ: அடப்பாவி, டீயில் கிடந்த ஈக்கு கூட கணக்கு இருக்கா? :idea:
பரமஸ்: பூ, அது ஈ கணக்கு இல்லை, இந்த கணக்கு, ஞ்நானு மலையாளம் கொரச்சு கொரச்சு :lol: சம்சாரிக்கும்.
தலை: சரி சரி! பிரச்சனையை விடுங்க. நானே ... :cry:
சேரன்: தலை, அப்போ நீங்க காசை கட்டிவிடுவீங்களா? தங்கமான மனசு, தலைன்னா தலை தான். :idea:
தலை : ??????? நானே நொந்து நூலாகி வந்திருக்கேன். :oops:
உடனே, அனைவரும் "கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி" என்ற செய்தியை கேட்டு அதிர்ந்தது போல் அதிர் ச்சி அடைந்தார்கள். :roll: :x :shock:
மன்மதன்: என்னாச்சி தலை, நீங்க ஏன் சோகமாயிட்டீங்க? :x
பூ: தலை, மாமி ஏதாச்சும் சொன்னாங்களா? :?
சேரன்: அதான் தினமும் நடக்கிற கதை தானே. :lol:
பரம்ஸ்: சும்மா இருங்கப்பா, தலை, சொல்லுங்க தலை.
தலை: அது ஒன்னும் இல்லைப்பா, கம்பெனியில் கணக்கு வழக்கு பார்க்கும் போது தான் பிரச்சனை. :?:
மன்மதன்: தலை உங்க கணக்கே தப்பா? (மனசுக்குள் குஷி, தலை, எத்தனை வாட்டி நான் சொன்ன கணக்கு விடையை தப்பு என்று சொல்லியிருக்கீங்க) :idea:
தலை: நீ கொஞ்சம் சும்மா இருக்கியா. நான் வேலையில் சேர்ந்தது முதல் இது வரை வேலை நிமித்தம் காரணமாக சென்ற நாட்கள், நான் ஆபிஸில் இருந்து வேலை செய்த நாட்களை 3 மடங்கு அதிகமாம். அரசாங்க விடுமுறை நாட்களை விட 6 மடங்கு அதிகமாம், 2 1/2 மடங்கு எங்க பாஸ் ஆபிஸ்க்கு வந்ததை விட அதிகமாம்.
பரம்ஸ்: அய் ஜாலி, தலை நான் பேப்பர், பென்சில் இல்லாம நீங்க எத்தனை நாட்கள் ஊர் சுத்தினீங்கன்னு சொல்லட்டுமா? :idea:
சேரன்: ஏலே பரம்ஸ், நீ வேற, தலை என்னது இது, உங்க புதிர் திறமையை காட்டும் நேரமா இது, என்னாச்சு சொல்லுங்க. :twisted:
தலை: அதான் சொல்லுறேன்ன, நான் சுற்று பயணத்தில் செய்த செலவு, எங்க கம்பெனி லாபத்தில் 35%, சென்ற ஆண்டு சுற்று பயண செலவை விட 11.5% மடங்கு அதிகமாம்.
பூ: சே! தலையை திருப்பவே, மன்னிக்கவும் திருத்தவே முடியாது. :shock:
தலை: எல்லாம் கூட்டி கணக்கு பார்த்து, என் கணக்கை முடித்து விட்டாங்க. :cry:
மன்மதன்: தலை செட்டில்மெண்ட் பணம் வந்திருக்குமே, ஜாலியா கோவா போவோமா. :lol:
பூ: ஆகா,என்னமா ஐடியா. டெஸ்ட் போட்டி வேற நடக்குது, 5 நாள் ஜாலியா இருந்து, பெரிய கட்டுரையே கொடுத்திடலாம். :P
பரம்ஸ்: ஏம்பா, வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுறீங்க, நொந்த இதயத்தை வேலை வைத்து நோண்டி எடுக்கிறீங்க. :oops:
சேரன்: பரம்ஸ் இனிமே பழமொழியில் கூட வேலை பற்றி பேசவேண்டாம், பாவம் தலை. :oops:
தலை: அ(ட)ப்பாவிங்களா (உபயம்: இராகவன்). :twisted:
பூ: தலை அப்புறம் என்னாச்சு, மாமிக்கு தெரியுமா?
தலை: மாமிக்கு தெரியுமாவா? என் சீட்டை கிழிக்கும் முன்பே, அவளை வரச் சொல்லி, என் செட்டில்மெண்டை கொடுத்துட்டாங்க. வாங்கின கையோடு திருச்சி போயிட்டா.
டீ கொண்டு வந்த நாயர்: மாமி திருச்சி வருமா? :?:
மன்மதன்: யோவ் நாயரு, இப்போ தான் தலை திருச்சி போயிருக்காங்க, என்று சொல்லுறாரு. காது கேக்கலை. :twisted:
சேரன்: மவனே! அவர் கேட்டது மாமி திரும்பி வருவார்களா? நாயர் கவலை நாயருக்கு.
நாயர்: நானு சம்சாரிக்கதை கிண்டல் செய்ய வேண்டாம், சம்பாதித்து காசை கொடுங்க. :evil:
மன்மதன்: தலை, பெத்த அவமானம், உடனே ஒரு 100 ஆட்டோவை உங்க கம்பெனி முன்னால் போய் நிப்பாட்டட்டா? 8)
பூ: அட, ஒரு லிட்டர் டீசல் காசை கொடு, நான் காக்கா பிரியாணியாவது சாப்பிடுகிறேன், அதை விட்டு விட்டு 100 ஆட்டோவாம்.
பரம்ஸ்: சாமியே நடந்து போகும் போது, பூசாரி புல்லட் கேட்டானாம்.
பூ: ஆமாம் தலை, நீங்க மாளவிகைவை மன்னிக்கவும் மாளவிகா காரை வைத்திருந்தீங்களே அது எங்கே?
தலை: அதை ஏன் கேட்கிற? (சோகமாக)
பூ: சரி கேட்கல
தலை: அட நீ வேறப்பா, மாமி என் செட்டில்மெண்ட் எல்லாம் வாங்கி, நேரே என்கிட்ட வந்து கார் சாவி கொடுங்க, பெட்ரோல் போட்டுட்டு வாரேன்னு சொன்னா, நானும் ஆகா, செலவு மிச்சம் என்று கொடுத்தேன், அவ அந்த கார்ல தான் திருச்சி போயிருக்கா. :(
சேரன்: தலை இத்தனை அவமானத்திற்கும் காரணாமான அந்த கம்பெனியை விடக்கூடாது, வாங்க எல்லோரும் போவோம். :twisted:
தலை: அது முடியாதுப்பா. :cry:
மன்மதன்: ஏன் தலை, நான் இருக்கேன்ல. :?
தலை: கூட வாட்ச்மேனும் இருப்பானே
பூ: ஏன் தலை வாட்ச்மேனுக்கு பயப்படுறீங்க, பகல்ல தானே போகப்போறோம்.
தலை: அது இல்லப்பா, வரும் போது நாளைக்கு காசை கொடுக்கிறேன் என்று சொல்லி வாட்மேன்கிட்ட தான் கை மாத்தா 50 ரூபாய் வாங்கி வந்தேன், அதை வைத்து பஸ்ஸில் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் கஷ்டப்பட்டு புட்போர்ட் அடித்தேன்.
சேரன்: அப்போ தலை, இனிமே எங்க தான் போவது, இப்போதைக்கு டீ கணக்கை எப்படி செட்டில் செய்வது.
திடிரென்று, பரம்ஸ், "அண்ணே, அண்ணே" என்று கத்த, எல்லோரும் எங்கே இளசு அல்லது இக்பால் வருகிறார்களோ என்று திரும்பி பார்த்தார்கள்.
(தொடரும்..)
(நண்பர்களே! ஏதோ எழுதிவிட்டேன், தவறு இருந்தால் இங்கே திட்டுங்க, ரொம்ப திட்டுவதாக இருந்தால் தயவு செய்து தனிமடலில் திட்டுங்க, யாருக்கும் தெரியாது தானே, அதிலும் அறிஞருக்கு தெரியாது)
மாலையில் வழக்கம் போல் கோழிக்கோடு நாயர் நடத்தும் மதுரை முனியாண்டி விலாஸ் முன்பு சேரன், பரம்ஸ், பூ, மன்மதன் அனைவரும் கூடினார்கள்.
ஓரமா போட்டியிருந்த பெஞ்சில் பெருசுங்க உட்கார்ந்து ஊர் வம்பு அடித்துக் கொண்டிருந்தாங்க. :idea:
சிறிது நேரத்தில் வழக்கத்திற்கு மாறாக தலை நடந்து வந்தார், முகத்தில் உற்சாகமில்லை. :cry:
தலை உற்சாகம் இல்லாமல் வந்தால் கீழ் கண்ட காரணங்களாகத் தான் இருக்கும் :!:
1) இணைய இணைப்பு கிடைக்காமல் தமிழ் மன்றம் போயிருக்க முடியாது. :cry:
2) அப்படியே போனாலும் ஆராய்ச்சி புகழ் அறிஞரும், ஸ்பெல்லிங் குயின் மைதிலியும் வந்திருக்கமாட்டாங்க. :evil:
3) கஷ்டமான புதிர் என்று போட்டதை பரம்ஸ் கும்சாவா உடனே சரியான பதில் சொன்னது. :twisted:
4) அந்த வாரம் முழுவதும் வேலை நிமித்த பயணம் ஏதுவும் இருந்திருக்காது. :oops:
பரம்ஸ்: வாங்க தலை, உங்களுக்காகத் தான் காத்திருக்கிறோம். (மனசுக்குள்ளே அப்பாடா, டீ காசு கொடுக்க தலை வந்தாச்சு)
சேரன்: ஏம்பா நாயரே! சூடா 5 பால் டீ போடு. இம்மாம் நேரம் குந்திகின்னு இருக்கிறது. 8)
டீ கடை நாயர்: சூடா வெள்ளம், இல்லை அது கூட கிடையாது. :twisted:
தலை : ஏம்பா? :?:
டீ கடை நாயர்: சாரே! ஒரு மாசமா குடிச்ச டீ கணக்கு 498 ரூபாய் சாரே. :idea:
சேரன்: ரவுண்ட் பிகர் ஆகட்டும், அப்புறமா கொடுக்கலாம்னு இருந்தேன் தலை. :wink:
மன்மதன்: நாயரே! ஒரு போண்டா கொடு, பிகரு ரவுண்ட் ஆகிடும். :idea:
சேரன்: மவனே, உன்னை ரவுண்டு கட்டி அடிச்சா, உன் பிகரு சேப்பு மாறிடும். :twisted:
நாயர்: இ கணக்கை சரி செய்யுங்க சாரே! :x
பூ: அடப்பாவி, டீயில் கிடந்த ஈக்கு கூட கணக்கு இருக்கா? :idea:
பரமஸ்: பூ, அது ஈ கணக்கு இல்லை, இந்த கணக்கு, ஞ்நானு மலையாளம் கொரச்சு கொரச்சு :lol: சம்சாரிக்கும்.
தலை: சரி சரி! பிரச்சனையை விடுங்க. நானே ... :cry:
சேரன்: தலை, அப்போ நீங்க காசை கட்டிவிடுவீங்களா? தங்கமான மனசு, தலைன்னா தலை தான். :idea:
தலை : ??????? நானே நொந்து நூலாகி வந்திருக்கேன். :oops:
உடனே, அனைவரும் "கிரிக்கெட்டில் இந்தியா வெற்றி" என்ற செய்தியை கேட்டு அதிர்ந்தது போல் அதிர் ச்சி அடைந்தார்கள். :roll: :x :shock:
மன்மதன்: என்னாச்சி தலை, நீங்க ஏன் சோகமாயிட்டீங்க? :x
பூ: தலை, மாமி ஏதாச்சும் சொன்னாங்களா? :?
சேரன்: அதான் தினமும் நடக்கிற கதை தானே. :lol:
பரம்ஸ்: சும்மா இருங்கப்பா, தலை, சொல்லுங்க தலை.
தலை: அது ஒன்னும் இல்லைப்பா, கம்பெனியில் கணக்கு வழக்கு பார்க்கும் போது தான் பிரச்சனை. :?:
மன்மதன்: தலை உங்க கணக்கே தப்பா? (மனசுக்குள் குஷி, தலை, எத்தனை வாட்டி நான் சொன்ன கணக்கு விடையை தப்பு என்று சொல்லியிருக்கீங்க) :idea:
தலை: நீ கொஞ்சம் சும்மா இருக்கியா. நான் வேலையில் சேர்ந்தது முதல் இது வரை வேலை நிமித்தம் காரணமாக சென்ற நாட்கள், நான் ஆபிஸில் இருந்து வேலை செய்த நாட்களை 3 மடங்கு அதிகமாம். அரசாங்க விடுமுறை நாட்களை விட 6 மடங்கு அதிகமாம், 2 1/2 மடங்கு எங்க பாஸ் ஆபிஸ்க்கு வந்ததை விட அதிகமாம்.
பரம்ஸ்: அய் ஜாலி, தலை நான் பேப்பர், பென்சில் இல்லாம நீங்க எத்தனை நாட்கள் ஊர் சுத்தினீங்கன்னு சொல்லட்டுமா? :idea:
சேரன்: ஏலே பரம்ஸ், நீ வேற, தலை என்னது இது, உங்க புதிர் திறமையை காட்டும் நேரமா இது, என்னாச்சு சொல்லுங்க. :twisted:
தலை: அதான் சொல்லுறேன்ன, நான் சுற்று பயணத்தில் செய்த செலவு, எங்க கம்பெனி லாபத்தில் 35%, சென்ற ஆண்டு சுற்று பயண செலவை விட 11.5% மடங்கு அதிகமாம்.
பூ: சே! தலையை திருப்பவே, மன்னிக்கவும் திருத்தவே முடியாது. :shock:
தலை: எல்லாம் கூட்டி கணக்கு பார்த்து, என் கணக்கை முடித்து விட்டாங்க. :cry:
மன்மதன்: தலை செட்டில்மெண்ட் பணம் வந்திருக்குமே, ஜாலியா கோவா போவோமா. :lol:
பூ: ஆகா,என்னமா ஐடியா. டெஸ்ட் போட்டி வேற நடக்குது, 5 நாள் ஜாலியா இருந்து, பெரிய கட்டுரையே கொடுத்திடலாம். :P
பரம்ஸ்: ஏம்பா, வெந்த புண்ணுல வேலை பாய்ச்சுறீங்க, நொந்த இதயத்தை வேலை வைத்து நோண்டி எடுக்கிறீங்க. :oops:
சேரன்: பரம்ஸ் இனிமே பழமொழியில் கூட வேலை பற்றி பேசவேண்டாம், பாவம் தலை. :oops:
தலை: அ(ட)ப்பாவிங்களா (உபயம்: இராகவன்). :twisted:
பூ: தலை அப்புறம் என்னாச்சு, மாமிக்கு தெரியுமா?
தலை: மாமிக்கு தெரியுமாவா? என் சீட்டை கிழிக்கும் முன்பே, அவளை வரச் சொல்லி, என் செட்டில்மெண்டை கொடுத்துட்டாங்க. வாங்கின கையோடு திருச்சி போயிட்டா.
டீ கொண்டு வந்த நாயர்: மாமி திருச்சி வருமா? :?:
மன்மதன்: யோவ் நாயரு, இப்போ தான் தலை திருச்சி போயிருக்காங்க, என்று சொல்லுறாரு. காது கேக்கலை. :twisted:
சேரன்: மவனே! அவர் கேட்டது மாமி திரும்பி வருவார்களா? நாயர் கவலை நாயருக்கு.
நாயர்: நானு சம்சாரிக்கதை கிண்டல் செய்ய வேண்டாம், சம்பாதித்து காசை கொடுங்க. :evil:
மன்மதன்: தலை, பெத்த அவமானம், உடனே ஒரு 100 ஆட்டோவை உங்க கம்பெனி முன்னால் போய் நிப்பாட்டட்டா? 8)
பூ: அட, ஒரு லிட்டர் டீசல் காசை கொடு, நான் காக்கா பிரியாணியாவது சாப்பிடுகிறேன், அதை விட்டு விட்டு 100 ஆட்டோவாம்.
பரம்ஸ்: சாமியே நடந்து போகும் போது, பூசாரி புல்லட் கேட்டானாம்.
பூ: ஆமாம் தலை, நீங்க மாளவிகைவை மன்னிக்கவும் மாளவிகா காரை வைத்திருந்தீங்களே அது எங்கே?
தலை: அதை ஏன் கேட்கிற? (சோகமாக)
பூ: சரி கேட்கல
தலை: அட நீ வேறப்பா, மாமி என் செட்டில்மெண்ட் எல்லாம் வாங்கி, நேரே என்கிட்ட வந்து கார் சாவி கொடுங்க, பெட்ரோல் போட்டுட்டு வாரேன்னு சொன்னா, நானும் ஆகா, செலவு மிச்சம் என்று கொடுத்தேன், அவ அந்த கார்ல தான் திருச்சி போயிருக்கா. :(
சேரன்: தலை இத்தனை அவமானத்திற்கும் காரணாமான அந்த கம்பெனியை விடக்கூடாது, வாங்க எல்லோரும் போவோம். :twisted:
தலை: அது முடியாதுப்பா. :cry:
மன்மதன்: ஏன் தலை, நான் இருக்கேன்ல. :?
தலை: கூட வாட்ச்மேனும் இருப்பானே
பூ: ஏன் தலை வாட்ச்மேனுக்கு பயப்படுறீங்க, பகல்ல தானே போகப்போறோம்.
தலை: அது இல்லப்பா, வரும் போது நாளைக்கு காசை கொடுக்கிறேன் என்று சொல்லி வாட்மேன்கிட்ட தான் கை மாத்தா 50 ரூபாய் வாங்கி வந்தேன், அதை வைத்து பஸ்ஸில் ரொம்ப நாட்களுக்கு அப்புறம் கஷ்டப்பட்டு புட்போர்ட் அடித்தேன்.
சேரன்: அப்போ தலை, இனிமே எங்க தான் போவது, இப்போதைக்கு டீ கணக்கை எப்படி செட்டில் செய்வது.
திடிரென்று, பரம்ஸ், "அண்ணே, அண்ணே" என்று கத்த, எல்லோரும் எங்கே இளசு அல்லது இக்பால் வருகிறார்களோ என்று திரும்பி பார்த்தார்கள்.
(தொடரும்..)
(நண்பர்களே! ஏதோ எழுதிவிட்டேன், தவறு இருந்தால் இங்கே திட்டுங்க, ரொம்ப திட்டுவதாக இருந்தால் தயவு செய்து தனிமடலில் திட்டுங்க, யாருக்கும் தெரியாது தானே, அதிலும் அறிஞருக்கு தெரியாது)