kavitha
09-10-2004, 11:02 AM
101. முன் கோபம் கொண்டோரை எதற்கு ஒப்பிடலாம்?
அவர்களை மாலுமி இல்லாத மரக்கலத்துக்கு ஒப்பிடலாம் என்கிறார் நபிகள் நாயகம். கொந்தளிக்கும் கடலில் சிக்கிக்கொண்ட மரக்கலத்தை விடக்கோபக்காரனின் நிலைமை மோசமானது என்கிறார் அவர். மரக்கலம் அல்லாடும்போது அதைச் சீர்படுத்த மாலுமி இருப்பார். மாலுமி இல்லையென்றால் மரக்கலம் என்னாகும்?
மனித மனம் ஒரு மரக்கலம். அறிவுதான் மாலுமி. கோபம்,அறிவு என்கிற மாலுமியின் கண்களை அவித்து விடும். செவியைச் செவிடாக்கிவிடும். அதனால்தான் கோபக்காரனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பது தெரிவதில்லை.
102. வாழ்க்கை என்பது ஒரு தற்காலிக நாடகம் என்று தெரிந்திருந்தும் கூட, பலர் தங்கள் 'ஆட்டத்தைக் குறைத்துக் கொள்வதில்லையே.. ஏன்?
கனவு முடியும் வரையில் நாம் கண்டு கொண்டிருப்பது கனவு என்பது நமக்குப் புரிவதில்லை. விழித்துக்கொண்ட பிறகுதான் விவரம் தெரிய வருகிறது.ஆட்டத்தைக் குறைத்துக்கொள்ளாதவர்கள், ஆடிக்கொண்டிருப்பது நாடகம் என்கிற விழிப்பு நிலைக்கு இன்னும் வராதவர்கள். பெருவாரியானவர்கள் இன்றைக்கு விழித்துக் கொள்வதற்கு முன்பாகவே செத்துப் போய் விடுகிறார்கள்.
103. காதலி, மனைவி என்ன வித்தியாசம்?
தப்பிக்கக்கூடிய பந்தம்!
இது தப்பிக்க முடியாத பந்தம்!
காதல் - உணர்வு பூர்வமாக நடைபெறுகிற செயல். எனவே அந்த சமயத்தில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொடுப்பார்கள்.
"ஒரு நாயைக் கூட எதுகை மோனையுடன் குரைக்கச் செய்து விடுகிறது காதல்" - என்கிறார் ஜான் பிளாட்சர்.
104. பெண்களைக் கிண்டல் செய்யும்போது சிலர் சிரிக்கிறார்கள்.. சிலர் திட்டுகிறார்கள்.. சிலர் அமைதியாக
இருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றி..?
சிரிக்கிறவர்கள்.. புதியவர்கள்
திட்டுகிறவர்கள்.. பெரியவர்கள்
அமைதியாக இருப்பவர்கள்.. ஏற்கனவே அடி வாங்கியவர்கள்.
105. கலையாத ஒப்பனை எது?
இயற்கை செய்து கொண்டிருக்கிற ஒப்பனை என்றைக்கும் கலைவதில்லை! அதனால்தான் அதன்
உண்மையான முகம் ஒரு போதும் புரிவதில்லை!
106. அடக்கம் யார் யாரிடம் எப்படி இருக்கவேண்டும்?
மத்தவங்களை விடுங்க சார்... நம்மளை விட புத்திசாலிகளைப் பார்க்கிறப்போ, நம்மகிட்டே இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பண்பு அது!
107. ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளாரே..?
இது இன்றைய தேவை.. மருத்துவமனைகளே தேவைப்படாத அளவுக்கு மக்களை உருவாக்க வேண்டியது எதிர்காலத்தேவை!
108. மன்னிக்க முடியாதது எது? மன்னிக்கக்கூடியது எது?
வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் விட்டவர்களைக் கூட மன்னிக்கலாம். "வாக்குறுதியா? எப்போது கொடுத்தேன்?" என்று கேட்கிறவர்களை மன்னிக்கவே முடியாது!
109. அ)காதலில் வெற்றி பெறுவது எப்படி?
ஆ)மரணபயத்தை வெல்ல என்ன வழி?
இ)கடவுளை எந்த அளவுக்கு நம்பலாம்?
ஈ) நினைக்கத் தெரிந்த மனத்திற்கு மறக்கத் தெரிவதில்லையே ஏன்?
(கேள்விகளை கேட்டவர் ஒருவரே!)
உங்கள் சூழ்நிலை எனக்குப்புரிகிறது.
உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் ஓரளவுக்குப் பதில் கிடைக்கிற மாதிரி ஒரு கதை சொல்கிறேன்.. கேளுங்கள்!
ஒரு பெரிய செல்வந்தர். அவர் ஒரு போட்டி வைத்தார். "இந்த நீச்சல் குளத்தில் ஏராளமான விஷப்பாம்புகள் எல்லாம் உண்டு!" இதில் யாராவது துணிந்து குதித்து நீந்திக்கரையேறி வந்துவிட்டால்.. 100 ஏக்கர் நிலம் அவருக்குக் கொடுப்பேன். அல்லது 1000 ஆடுகள் கொடுப்பேன்.
அல்லது என் ஒரே மகளை அவருக்கு மணம் செய்து கொடுப்பேன்." ஓர் இளைஞர் அதில் குதித்தார். நீந்தினார். கரையேறி வந்தார். செல்வந்தர் கேட்டார் : " உன் துணிச்சலைப் பாராட்டுகிறேன். உனக்கு என்னவேண்டும்? நிலமா?"
"இல்லை"
"ஆடுகளா? "
"இல்லை"
"என் மகளா?"
"இல்லை"
"வேறு என்ன தான் வேண்டும்"
"என்னைப் பாம்புக்குளத்தில் பிடித்துத் தள்ளியவன் யார் என்பது எனக்குத் தெரியவேண்டும்"
110. ராணுவ ஆட்சி வந்தால் ஊழல் ஒழியுமா?
ஒழியாது! ஒளியும்!!
ஒரு ராணுவத்தலைவர் மீது எல்லாரும் குற்றம் சாட்டினார்களாம். 'உங்கள் ஆட்சியில் ஜன நாயகமே இல்லை!' என்று. வெளி உலகத்தை திருப்திபடுத்துவதற்காக அவர் ஒரு தேர்தலை நடத்தினார். வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன. அவருடைய ராணுவ வீரர்களே எல்லாச் சீட்டுகளிலும் முத்திரை குத்திப் பெட்டியில் போட்டார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எல்லா வாக்குகளும் அவருக்கே விழுந்து கொண்டிருக்கின்றன! இடையில் ஒரே ஒரு வாக்கு மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு விழுந்தது. உடனே ராணுவத்தலைவர் மகிழ்வோடு
பத்திரிக்கையாளர்களைப் பார்த்தார்: "பார்த்தீர்களா? என்னுடைய நாட்டில் ஜன நாயகம் இல்லை என்றீர்களே.. பாருங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கும் ஓட்டு விழுந்திருக்கிறது!" என்றார்.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் ஒரு வாக்கு எதிர்க்கட்சிகளுக்கு விழுந்திருந்தது. ராணுவத் தலைவர் தமக்குள்
முணு முணுத்தார்: " திருட்டுப்பயல்! ஒருவனே இரண்டு வாக்குகள் போட்டிருக்கிறான்!"
111. மனித நேயம் எப்படி இருக்க வேண்டும்?
கலைவாணரின் கடைசி நாட்கள்...
மருத்துவமனையில் படுத்திருக்கிறார்.
"அண்ணே... என் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கிறேன்!" என்கிற செய்தியோடு ஒருவர் வருகிறார்.
வருகிறவரின் நிலை இவருக்குப் புரியும்.
ஏதாவது கொடுக்க வேண்டுமே என்று யோசிக்கிறார்.
இவர் கையிலும் அப்போது ஏதும் இல்லை.. என்ன செய்வது?
எதிரே இருந்த ஒரு வெள்ளி தம்ளர் கண்ணில் படுகிறது. இதை எடுத்துக் கொடுத்தால்.. மனைவி மதுரம் என்ன நினைப்பாரோ..?
"மதுரம், அங்கே வெளியே என்ன சத்தம்.. யாரு வந்திருக்காங்க பாரு!" என்கிறார்; மதுரம் வெளியே போகிறார்.
இவர் மெதுவாக அந்த தம்ளரை எடுத்து... அவரிடம் கொடுத்து ... "மறைச்சு வச்சுக்கோ.. பொண்ணு கல்யாணத்தை நல்லபடியாக நடத்து!" என்று சொல்லி அனுப்புகிறார்.
க.கமெண்ட்: வலப்பாகம் தருவது இடப்பாகம் அறியக்கூடாது என்பது இது தானோ?
112. மன அமைதிக்கு மார்க்கம் என்ன?
எனக்குத்தெரிந்த மார்க்கம் தூக்கம் ஒன்று தான்.
எல்லாம் தெரிந்தவர்கள் சொல்லுகிற மார்க்கம் சன்மார்க்கம்!
க.கமெண்ட்: ஆனால் அந்தத் தூக்கம் தழுவுவதற்கும் துக்கம் தழுவாமல் இருக்க வேண்டும்!
113. மனிதனின் அழகு எதுவரை?
இன்னொரு மனிதனை மதிக்கற வரையில்!
114. வெளி நாட்டில் வேலை வாய்ப்புத்தேடி நம் இந்திய மக்கள் செல்கிறார்களே! நம் நாட்டில் வேலைக்குப் பஞ்சமா?
வேலைக்குத் தக்க ஊதியத்துக்குத்தான் பஞ்சம்!
115. எது நல்ல இலக்கியம்?
எது எழுதுகிறவனையும் உயர்த்தி.. படிக்கிறவனையும் உயர்த்துகிறதோ... அதுவே நல்ல இலக்கியம்.
116. அறிவாளி என்று பெயர் எடுக்க என்ன வழி?
'வைத்தியரே! முதலில் உமது நோயைக் குணப்படுத்திக் கொள்ளும்!" ('Doctor! Heal thyself first') என்று ஒரு பொன்மொழி உண்டு.. இதைப் புரிந்து கொண்டவர்கள் அறிவாளிகள்.
117. கவலைப் படாமல் காலம் தள்ள முடியுமா?
காலத்தைத் தள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கவலைப் படுகிறார்கள்! காலத்தை அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! எனவே காலத்தை தள்ள நினைக்காதீர்கள்.
காலத்தைக் கொள்ள முயலுங்கள்! கவலை விலகிக் கொள்ளும்.
118. இங்கே நடக்கிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?
சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்தபோது அங்கே ஒருவர் அவரைப் பார்த்துக் கேட்டார்:
"சுவாமி! எங்கள் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று ஏராளமான குற்றங்கள்! உங்கள் நாடு அமைதியாக இருக்கிறதே... இது மாதிரி இல்லையே!"
அதற்கு சுவாமி:
"அதற்காக நான் பெருமைப் படவில்லை.. வெட்கப்படுகிறேன்." "ஏன்?"
"உங்கள் மக்கள் உயிரோடு உலவுகிறார்கள்.. ஆகவே தவறுகளும் செய்கிறார்கள். என் நாட்டு மக்கள் பிரேதங்களாகி விட்டார்கள். அதனால்தான் அங்கே பிரச்சினைகள் இல்லை. என் மக்களும் குற்றங்கள் செய்வதை நான் வரவேற்கிறேன். அப்போது தான் அவர்கள் பிரேதங்கள் அல்ல!"
இன்றைக்கு நான் பிரேதங்கள் அல்ல. எல்லா குற்றங்களும் நடக்கின்றன. தாமச குணத்திலிருந்து ராஜஸ குணத்தை அடைந்திருக்கிறோம். இந்த ராஜச குணாம்சத்தில் சுரக்கும் சக்தியை வரையறைப்படுத்தி, முறைப்படுத்தினால், அழிவிலிருந்து ஆக்க சக்தியாக
மாற்றமுடியும். மனித நேயமாக்க முடியும். ஆன்ம நேயமாக்க முடியும். இதுதான் சாத்விக குணாம்சம் என்பது- என்றார் சுவாமி
ரங்க நாதனந்த மகராஜ்
.
மானுட நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் இந்த மூன்று அம்சங்களும் உண்டு. தாமச, ராஜச, சாத்விக அம்சங்கள்.
இந்தியா இப்போது அந்த மூன்றாவது கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
119. 'விவேக சதகம்' படித்ததுண்டா?
'பிள்ளைதான் வயதில்
மூத்தால்
பிதாவின் சொற்
புத்திக் கேளான்.
கள்ளிநற் குழலாள்
மூத்தால்
கணவனைக் கருதிப்
பாராள்!'
என்றெல்லாம் எப்பவோ படித்தது ஞாபகத்துக்கு வருகிறது.
120. செலவைக் கட்டுப்படுத்த ஒரு வழி சொல்லுங்களேன்..!
பணம் நமக்குப் பயன்பட வேண்டுமானால் அதைச் செலவு செய்யவேண்டும். எனவே, சம்பாதியுங்கள். செலவு செய்யுங்கள். இப்படிச் செய்கிறவர்கள்தான் வாழத்தெரிந்தவர்கள். சம்பாதிக்க மட்டுமே தெரிந்தவர்கள் அல்லது செலவு செய்ய மட்டுமே தெரிந்தவர்கள் - இவர்கள் வாழத்தெரியாதவர்கள். எது செலவு எது விரயம் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
Money is to be spent and not to be wasted!
க.கமெண்ட்: பணம் மட்டுமல்ல, நீர், உணவு என அத்தியாவசியப்பொருட்கள் யாவுமே..
121. எதை எண்ணிப் பார்க்கவேண்டும்?
இப்போதைய தலைவர்கள் எண்ணிப் பார்க்க அப்போதைய தகவல் ஒன்று சொல்கிறேன், கேளுங்கள்.
கம்யூனிஸ்ட் தலைவர் தோழர். ப. ஜீவானந்தமும் காந்திஜியும் ஒரு முறை சந்தித்துக் கொண்டார்கள்.
காந்திஜி: உங்களுக்கு ஏதேனும் சொத்து இருக்கிறதா?
ஜீவா: தாய் நாடு தான் என் சொத்து.
காந்திஜி: இல்லையில்லை.. நீங்கள் தான் தாய் நாட்டின் சொத்து.
122. சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கஞ்சத்தனமா?
சிக்கனம் வேறு. கஞ்சத் தனம் வேறு. தேவையை மட்டும் நிறைவு செய்து கொள்வது சிக்கனம்.
தேவையையும் தேவை இல்லாமல் செய்ய முடியுமா என்று பார்ப்பது கஞ்சத்தனம்.
கடைக்குப்போய்த் தேவைக்குத் தகுந்த மாதிரி ஒரு செருப்பை வாங்குவது சிக்கனம். அதைக் காலில் மாட்டினால் தேய்ந்து போகுமே என்று யோசிப்பது கஞ்சத்தனம்.
க.கமெண்ட்: குழாயில் ஒழுகும் நீரைச் சேமித்து வைப்பது சிக்கனம். குளிக்காமலே இருப்பது கஞ்சத்தனம். )
123. தலைவலிக்கு மருந்து போடலாம். தலைவிதிக்கு மருந்து உண்டா?
டாக்டரை நம்பி மருந்து சாப்பிடுங்கள்.. தலைவலி குணமாகும்.
உங்களை நம்பி உறக்கம் கலையுங்கள்.. தலைவிதி குணமாகும்.
அதாவது - தலைவலிக்கு மருந்து நன்னம்பிக்கை; தலைவிதிக்கு மருந்து தன்னம்பிக்கை.
124. நான் நினைப்பதெல்லாம் தோல்வியில் முடிகிறது..!
கவலைப் படாதீர்கள். அதுமாதிரி எண்ணம் பொதுவாகவே எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படக்கூடியது தான். அப்படிப்பட்ட சமயம் உங்கள் மனசை ஓரங்கட்டிவிட்டு, அறிவை முன்னால் கொண்டுவந்து நிறுத்துங்கள். முயற்சி திருவினை ஆக்கும். எழுத்தாளர்கள் 'சுபா' (சுரேஷ்-பாலா) இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு புத்தாண்டு வாழ்த்து அனுப்பியிருந்தார்கள். அதில் எழுதியிருந்த கவிதை வரிகள்..
"உலகமே முடிந்துவிட்டது என்று
கம்பளிப்பூச்சி நினைக்கும் தருணம்..
ஒரு பட்டாம்பூச்சியின் ஆரம்பம்."
125. உண்மையான அன்பு எது?
சொர்க்கம் இருக்கும் இடம் எதுவோ அங்கேதான் உண்மையான அன்பை அடையாளம் காணமுடியும். நபிகள் நாயகம் சொல்கிறார்: 'சொர்க்கம் தாயின் காலடியில் உள்ளது' என்று.
__________________
அவர்களை மாலுமி இல்லாத மரக்கலத்துக்கு ஒப்பிடலாம் என்கிறார் நபிகள் நாயகம். கொந்தளிக்கும் கடலில் சிக்கிக்கொண்ட மரக்கலத்தை விடக்கோபக்காரனின் நிலைமை மோசமானது என்கிறார் அவர். மரக்கலம் அல்லாடும்போது அதைச் சீர்படுத்த மாலுமி இருப்பார். மாலுமி இல்லையென்றால் மரக்கலம் என்னாகும்?
மனித மனம் ஒரு மரக்கலம். அறிவுதான் மாலுமி. கோபம்,அறிவு என்கிற மாலுமியின் கண்களை அவித்து விடும். செவியைச் செவிடாக்கிவிடும். அதனால்தான் கோபக்காரனுக்குத் தான் என்ன செய்கிறோம் என்பது தெரிவதில்லை.
102. வாழ்க்கை என்பது ஒரு தற்காலிக நாடகம் என்று தெரிந்திருந்தும் கூட, பலர் தங்கள் 'ஆட்டத்தைக் குறைத்துக் கொள்வதில்லையே.. ஏன்?
கனவு முடியும் வரையில் நாம் கண்டு கொண்டிருப்பது கனவு என்பது நமக்குப் புரிவதில்லை. விழித்துக்கொண்ட பிறகுதான் விவரம் தெரிய வருகிறது.ஆட்டத்தைக் குறைத்துக்கொள்ளாதவர்கள், ஆடிக்கொண்டிருப்பது நாடகம் என்கிற விழிப்பு நிலைக்கு இன்னும் வராதவர்கள். பெருவாரியானவர்கள் இன்றைக்கு விழித்துக் கொள்வதற்கு முன்பாகவே செத்துப் போய் விடுகிறார்கள்.
103. காதலி, மனைவி என்ன வித்தியாசம்?
தப்பிக்கக்கூடிய பந்தம்!
இது தப்பிக்க முடியாத பந்தம்!
காதல் - உணர்வு பூர்வமாக நடைபெறுகிற செயல். எனவே அந்த சமயத்தில் அவர்கள் என்ன வேண்டுமானாலும் வாங்கிக் கொடுப்பார்கள்.
"ஒரு நாயைக் கூட எதுகை மோனையுடன் குரைக்கச் செய்து விடுகிறது காதல்" - என்கிறார் ஜான் பிளாட்சர்.
104. பெண்களைக் கிண்டல் செய்யும்போது சிலர் சிரிக்கிறார்கள்.. சிலர் திட்டுகிறார்கள்.. சிலர் அமைதியாக
இருக்கிறார்கள்.. இவர்களைப் பற்றி..?
சிரிக்கிறவர்கள்.. புதியவர்கள்
திட்டுகிறவர்கள்.. பெரியவர்கள்
அமைதியாக இருப்பவர்கள்.. ஏற்கனவே அடி வாங்கியவர்கள்.
105. கலையாத ஒப்பனை எது?
இயற்கை செய்து கொண்டிருக்கிற ஒப்பனை என்றைக்கும் கலைவதில்லை! அதனால்தான் அதன்
உண்மையான முகம் ஒரு போதும் புரிவதில்லை!
106. அடக்கம் யார் யாரிடம் எப்படி இருக்கவேண்டும்?
மத்தவங்களை விடுங்க சார்... நம்மளை விட புத்திசாலிகளைப் பார்க்கிறப்போ, நம்மகிட்டே இருக்க வேண்டிய ஒரு முக்கியமான பண்பு அது!
107. ஏழைகளுக்கு இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் என்று முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளாரே..?
இது இன்றைய தேவை.. மருத்துவமனைகளே தேவைப்படாத அளவுக்கு மக்களை உருவாக்க வேண்டியது எதிர்காலத்தேவை!
108. மன்னிக்க முடியாதது எது? மன்னிக்கக்கூடியது எது?
வாக்குறுதி கொடுத்துவிட்டு அதை நிறைவேற்றாமல் விட்டவர்களைக் கூட மன்னிக்கலாம். "வாக்குறுதியா? எப்போது கொடுத்தேன்?" என்று கேட்கிறவர்களை மன்னிக்கவே முடியாது!
109. அ)காதலில் வெற்றி பெறுவது எப்படி?
ஆ)மரணபயத்தை வெல்ல என்ன வழி?
இ)கடவுளை எந்த அளவுக்கு நம்பலாம்?
ஈ) நினைக்கத் தெரிந்த மனத்திற்கு மறக்கத் தெரிவதில்லையே ஏன்?
(கேள்விகளை கேட்டவர் ஒருவரே!)
உங்கள் சூழ்நிலை எனக்குப்புரிகிறது.
உங்களின் எல்லாக் கேள்விகளுக்கும் ஓரளவுக்குப் பதில் கிடைக்கிற மாதிரி ஒரு கதை சொல்கிறேன்.. கேளுங்கள்!
ஒரு பெரிய செல்வந்தர். அவர் ஒரு போட்டி வைத்தார். "இந்த நீச்சல் குளத்தில் ஏராளமான விஷப்பாம்புகள் எல்லாம் உண்டு!" இதில் யாராவது துணிந்து குதித்து நீந்திக்கரையேறி வந்துவிட்டால்.. 100 ஏக்கர் நிலம் அவருக்குக் கொடுப்பேன். அல்லது 1000 ஆடுகள் கொடுப்பேன்.
அல்லது என் ஒரே மகளை அவருக்கு மணம் செய்து கொடுப்பேன்." ஓர் இளைஞர் அதில் குதித்தார். நீந்தினார். கரையேறி வந்தார். செல்வந்தர் கேட்டார் : " உன் துணிச்சலைப் பாராட்டுகிறேன். உனக்கு என்னவேண்டும்? நிலமா?"
"இல்லை"
"ஆடுகளா? "
"இல்லை"
"என் மகளா?"
"இல்லை"
"வேறு என்ன தான் வேண்டும்"
"என்னைப் பாம்புக்குளத்தில் பிடித்துத் தள்ளியவன் யார் என்பது எனக்குத் தெரியவேண்டும்"
110. ராணுவ ஆட்சி வந்தால் ஊழல் ஒழியுமா?
ஒழியாது! ஒளியும்!!
ஒரு ராணுவத்தலைவர் மீது எல்லாரும் குற்றம் சாட்டினார்களாம். 'உங்கள் ஆட்சியில் ஜன நாயகமே இல்லை!' என்று. வெளி உலகத்தை திருப்திபடுத்துவதற்காக அவர் ஒரு தேர்தலை நடத்தினார். வாக்குச் சாவடிகள் கைப்பற்றப்பட்டன. அவருடைய ராணுவ வீரர்களே எல்லாச் சீட்டுகளிலும் முத்திரை குத்திப் பெட்டியில் போட்டார்கள். வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. எல்லா வாக்குகளும் அவருக்கே விழுந்து கொண்டிருக்கின்றன! இடையில் ஒரே ஒரு வாக்கு மட்டும் எதிர்க்கட்சிகளுக்கு விழுந்தது. உடனே ராணுவத்தலைவர் மகிழ்வோடு
பத்திரிக்கையாளர்களைப் பார்த்தார்: "பார்த்தீர்களா? என்னுடைய நாட்டில் ஜன நாயகம் இல்லை என்றீர்களே.. பாருங்கள்.. எதிர்க்கட்சிகளுக்கும் ஓட்டு விழுந்திருக்கிறது!" என்றார்.
வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது. கொஞ்ச நேரத்தில் மீண்டும் ஒரு வாக்கு எதிர்க்கட்சிகளுக்கு விழுந்திருந்தது. ராணுவத் தலைவர் தமக்குள்
முணு முணுத்தார்: " திருட்டுப்பயல்! ஒருவனே இரண்டு வாக்குகள் போட்டிருக்கிறான்!"
111. மனித நேயம் எப்படி இருக்க வேண்டும்?
கலைவாணரின் கடைசி நாட்கள்...
மருத்துவமனையில் படுத்திருக்கிறார்.
"அண்ணே... என் பெண்ணுக்குக் கல்யாணம் நிச்சயம் பண்ணியிருக்கிறேன்!" என்கிற செய்தியோடு ஒருவர் வருகிறார்.
வருகிறவரின் நிலை இவருக்குப் புரியும்.
ஏதாவது கொடுக்க வேண்டுமே என்று யோசிக்கிறார்.
இவர் கையிலும் அப்போது ஏதும் இல்லை.. என்ன செய்வது?
எதிரே இருந்த ஒரு வெள்ளி தம்ளர் கண்ணில் படுகிறது. இதை எடுத்துக் கொடுத்தால்.. மனைவி மதுரம் என்ன நினைப்பாரோ..?
"மதுரம், அங்கே வெளியே என்ன சத்தம்.. யாரு வந்திருக்காங்க பாரு!" என்கிறார்; மதுரம் வெளியே போகிறார்.
இவர் மெதுவாக அந்த தம்ளரை எடுத்து... அவரிடம் கொடுத்து ... "மறைச்சு வச்சுக்கோ.. பொண்ணு கல்யாணத்தை நல்லபடியாக நடத்து!" என்று சொல்லி அனுப்புகிறார்.
க.கமெண்ட்: வலப்பாகம் தருவது இடப்பாகம் அறியக்கூடாது என்பது இது தானோ?
112. மன அமைதிக்கு மார்க்கம் என்ன?
எனக்குத்தெரிந்த மார்க்கம் தூக்கம் ஒன்று தான்.
எல்லாம் தெரிந்தவர்கள் சொல்லுகிற மார்க்கம் சன்மார்க்கம்!
க.கமெண்ட்: ஆனால் அந்தத் தூக்கம் தழுவுவதற்கும் துக்கம் தழுவாமல் இருக்க வேண்டும்!
113. மனிதனின் அழகு எதுவரை?
இன்னொரு மனிதனை மதிக்கற வரையில்!
114. வெளி நாட்டில் வேலை வாய்ப்புத்தேடி நம் இந்திய மக்கள் செல்கிறார்களே! நம் நாட்டில் வேலைக்குப் பஞ்சமா?
வேலைக்குத் தக்க ஊதியத்துக்குத்தான் பஞ்சம்!
115. எது நல்ல இலக்கியம்?
எது எழுதுகிறவனையும் உயர்த்தி.. படிக்கிறவனையும் உயர்த்துகிறதோ... அதுவே நல்ல இலக்கியம்.
116. அறிவாளி என்று பெயர் எடுக்க என்ன வழி?
'வைத்தியரே! முதலில் உமது நோயைக் குணப்படுத்திக் கொள்ளும்!" ('Doctor! Heal thyself first') என்று ஒரு பொன்மொழி உண்டு.. இதைப் புரிந்து கொண்டவர்கள் அறிவாளிகள்.
117. கவலைப் படாமல் காலம் தள்ள முடியுமா?
காலத்தைத் தள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள் கவலைப் படுகிறார்கள்! காலத்தை அனுபவிக்கவேண்டும் என்று நினைக்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்! எனவே காலத்தை தள்ள நினைக்காதீர்கள்.
காலத்தைக் கொள்ள முயலுங்கள்! கவலை விலகிக் கொள்ளும்.
118. இங்கே நடக்கிற கொலை, கொள்ளை, கற்பழிப்பு இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?
சுவாமி விவேகானந்தர் லண்டன் சென்றிருந்தபோது அங்கே ஒருவர் அவரைப் பார்த்துக் கேட்டார்:
"சுவாமி! எங்கள் நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என்று ஏராளமான குற்றங்கள்! உங்கள் நாடு அமைதியாக இருக்கிறதே... இது மாதிரி இல்லையே!"
அதற்கு சுவாமி:
"அதற்காக நான் பெருமைப் படவில்லை.. வெட்கப்படுகிறேன்." "ஏன்?"
"உங்கள் மக்கள் உயிரோடு உலவுகிறார்கள்.. ஆகவே தவறுகளும் செய்கிறார்கள். என் நாட்டு மக்கள் பிரேதங்களாகி விட்டார்கள். அதனால்தான் அங்கே பிரச்சினைகள் இல்லை. என் மக்களும் குற்றங்கள் செய்வதை நான் வரவேற்கிறேன். அப்போது தான் அவர்கள் பிரேதங்கள் அல்ல!"
இன்றைக்கு நான் பிரேதங்கள் அல்ல. எல்லா குற்றங்களும் நடக்கின்றன. தாமச குணத்திலிருந்து ராஜஸ குணத்தை அடைந்திருக்கிறோம். இந்த ராஜச குணாம்சத்தில் சுரக்கும் சக்தியை வரையறைப்படுத்தி, முறைப்படுத்தினால், அழிவிலிருந்து ஆக்க சக்தியாக
மாற்றமுடியும். மனித நேயமாக்க முடியும். ஆன்ம நேயமாக்க முடியும். இதுதான் சாத்விக குணாம்சம் என்பது- என்றார் சுவாமி
ரங்க நாதனந்த மகராஜ்
.
மானுட நாகரிகத்தின் பரிணாம வளர்ச்சியில் இந்த மூன்று அம்சங்களும் உண்டு. தாமச, ராஜச, சாத்விக அம்சங்கள்.
இந்தியா இப்போது அந்த மூன்றாவது கட்டத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது.
119. 'விவேக சதகம்' படித்ததுண்டா?
'பிள்ளைதான் வயதில்
மூத்தால்
பிதாவின் சொற்
புத்திக் கேளான்.
கள்ளிநற் குழலாள்
மூத்தால்
கணவனைக் கருதிப்
பாராள்!'
என்றெல்லாம் எப்பவோ படித்தது ஞாபகத்துக்கு வருகிறது.
120. செலவைக் கட்டுப்படுத்த ஒரு வழி சொல்லுங்களேன்..!
பணம் நமக்குப் பயன்பட வேண்டுமானால் அதைச் செலவு செய்யவேண்டும். எனவே, சம்பாதியுங்கள். செலவு செய்யுங்கள். இப்படிச் செய்கிறவர்கள்தான் வாழத்தெரிந்தவர்கள். சம்பாதிக்க மட்டுமே தெரிந்தவர்கள் அல்லது செலவு செய்ய மட்டுமே தெரிந்தவர்கள் - இவர்கள் வாழத்தெரியாதவர்கள். எது செலவு எது விரயம் என்பதை மட்டும் புரிந்து கொள்ளுங்கள்.
Money is to be spent and not to be wasted!
க.கமெண்ட்: பணம் மட்டுமல்ல, நீர், உணவு என அத்தியாவசியப்பொருட்கள் யாவுமே..
121. எதை எண்ணிப் பார்க்கவேண்டும்?
இப்போதைய தலைவர்கள் எண்ணிப் பார்க்க அப்போதைய தகவல் ஒன்று சொல்கிறேன், கேளுங்கள்.
கம்யூனிஸ்ட் தலைவர் தோழர். ப. ஜீவானந்தமும் காந்திஜியும் ஒரு முறை சந்தித்துக் கொண்டார்கள்.
காந்திஜி: உங்களுக்கு ஏதேனும் சொத்து இருக்கிறதா?
ஜீவா: தாய் நாடு தான் என் சொத்து.
காந்திஜி: இல்லையில்லை.. நீங்கள் தான் தாய் நாட்டின் சொத்து.
122. சிக்கனத்தைக் கடைப்பிடிப்பது கஞ்சத்தனமா?
சிக்கனம் வேறு. கஞ்சத் தனம் வேறு. தேவையை மட்டும் நிறைவு செய்து கொள்வது சிக்கனம்.
தேவையையும் தேவை இல்லாமல் செய்ய முடியுமா என்று பார்ப்பது கஞ்சத்தனம்.
கடைக்குப்போய்த் தேவைக்குத் தகுந்த மாதிரி ஒரு செருப்பை வாங்குவது சிக்கனம். அதைக் காலில் மாட்டினால் தேய்ந்து போகுமே என்று யோசிப்பது கஞ்சத்தனம்.
க.கமெண்ட்: குழாயில் ஒழுகும் நீரைச் சேமித்து வைப்பது சிக்கனம். குளிக்காமலே இருப்பது கஞ்சத்தனம். )
123. தலைவலிக்கு மருந்து போடலாம். தலைவிதிக்கு மருந்து உண்டா?
டாக்டரை நம்பி மருந்து சாப்பிடுங்கள்.. தலைவலி குணமாகும்.
உங்களை நம்பி உறக்கம் கலையுங்கள்.. தலைவிதி குணமாகும்.
அதாவது - தலைவலிக்கு மருந்து நன்னம்பிக்கை; தலைவிதிக்கு மருந்து தன்னம்பிக்கை.
124. நான் நினைப்பதெல்லாம் தோல்வியில் முடிகிறது..!
கவலைப் படாதீர்கள். அதுமாதிரி எண்ணம் பொதுவாகவே எல்லோருக்கும் எப்போதாவது ஏற்படக்கூடியது தான். அப்படிப்பட்ட சமயம் உங்கள் மனசை ஓரங்கட்டிவிட்டு, அறிவை முன்னால் கொண்டுவந்து நிறுத்துங்கள். முயற்சி திருவினை ஆக்கும். எழுத்தாளர்கள் 'சுபா' (சுரேஷ்-பாலா) இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஒரு புத்தாண்டு வாழ்த்து அனுப்பியிருந்தார்கள். அதில் எழுதியிருந்த கவிதை வரிகள்..
"உலகமே முடிந்துவிட்டது என்று
கம்பளிப்பூச்சி நினைக்கும் தருணம்..
ஒரு பட்டாம்பூச்சியின் ஆரம்பம்."
125. உண்மையான அன்பு எது?
சொர்க்கம் இருக்கும் இடம் எதுவோ அங்கேதான் உண்மையான அன்பை அடையாளம் காணமுடியும். நபிகள் நாயகம் சொல்கிறார்: 'சொர்க்கம் தாயின் காலடியில் உள்ளது' என்று.
__________________