gragavan
08-10-2004, 08:42 AM
மாரி மாறி
கடும்பசியில்
உணவு கொடுத்தார்கள்
அம்மணத்தில்
உடைகள் கொடுத்தார்கள்
தெருவில் நிற்கையில்
உறைவிடமும் கொடுத்தார்கள்
உள்ளத்திலும் உதட்டிலும்
போற்றிட வாழ்த்திட வணங்கிட
வேறொன்றையும் கொடுத்தார்கள்
வந்தோர் வழியோ
தந்தோர் வழியோ
குழம்பித் தவித்தேன்
மறுக்கவும் முயன்றேன்
நன்றி ஒருவர்க்கு வேண்டுமாம்
அதன்றி இருத்தல் ஆகாதே
வாழ்க்கையை திருத்தலும் ஆகாதே
உய்வில்லையே செய்நன்றி கொன்றவர்க்கு
பெரியோர் சொன்னதென்ன
கைம்மாறு வேண்டாத
கடப்பாட்டு மாரியை நினைத்தேன்
மாரி பொய்த்ததால் மாறிவிட்டேன்
அன்புடன்,
கோ.இராகவன்
கடும்பசியில்
உணவு கொடுத்தார்கள்
அம்மணத்தில்
உடைகள் கொடுத்தார்கள்
தெருவில் நிற்கையில்
உறைவிடமும் கொடுத்தார்கள்
உள்ளத்திலும் உதட்டிலும்
போற்றிட வாழ்த்திட வணங்கிட
வேறொன்றையும் கொடுத்தார்கள்
வந்தோர் வழியோ
தந்தோர் வழியோ
குழம்பித் தவித்தேன்
மறுக்கவும் முயன்றேன்
நன்றி ஒருவர்க்கு வேண்டுமாம்
அதன்றி இருத்தல் ஆகாதே
வாழ்க்கையை திருத்தலும் ஆகாதே
உய்வில்லையே செய்நன்றி கொன்றவர்க்கு
பெரியோர் சொன்னதென்ன
கைம்மாறு வேண்டாத
கடப்பாட்டு மாரியை நினைத்தேன்
மாரி பொய்த்ததால் மாறிவிட்டேன்
அன்புடன்,
கோ.இராகவன்