rambal
12-04-2003, 05:55 PM
ராணித்தேனீயும் வெறுங்கூடும்..
நான் வசித்த வீட்டில்
ஒரு தேன்கூடு உண்டு..
பல அற்புத பூக்களும் உண்டு..
தேன்கூட்டில்
ஒரு ராணித்தேனீயும் உண்டு..
அந்த ராணிக்கு தோழியும் உண்டு..
ராணித்தேனீக்கு
சேவகம் செய்ய
ஆயிரமாயிரம் தேனீ உண்டு..
அற்புத பூக்களில்
வழிந்த தேனமுதை
சேவகர்கள் எடுத்துக் கொடுக்க..
அதை ராணித்தேனீயும்
தோழியும் அருந்தி
போதையாக...
தொடர்ந்த இந்த ஆட்டத்தில்
தேன்கூடு
வெறுங்கூடாக
இரைதேடி
கூட்டை விட்டுப் வெளி வந்தாள் ராணி...
தேனெடுத்த பூக்களை
கசக்கிப் பிழிந்து
சாறெடுத்தால் என்ன?
என்று ஒரு உத்தி தோன்ற
தோழியுடன் சேர்ந்து
தேன் கொடுத்த பூக்களை நாசம் செய்தாள்..
எல்லாப் பூக்களும்
நாசம் ஆனதும்
ஒரு சிறு புன்னகை..
அப்போதுதான்
ராணிக்கே தெரிந்தது
தான் குரூர ரத்தத்தாலும்
அகம்பாவ சதைகளாளும் தான்
உருவாக்கப்பட்டவள் என்ற உண்மை..
இந்தக் குரூர விளையாட்டு
பிடித்துப் போக
தொடர்ந்து விளையாடினாள் ராணி..
பூக்கள் மட்டுமல்லாமல்
என் தோட்டத்து
காய்களைக் கூட விட்டு வைக்கவில்லை..
சர்வம் நாசம் மயம்...
எல்லாம் அழிக்கப்பட்டு
பிழியப்பட்டு..
ஆடிமுடித்த களைப்பில்
ஓய்வு என்ற பெயரில்
என் தோட்டம் விட்டுப் போனாள்..
நானும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு
சீர்குலைந்த தோட்டத்தை சரி செய்ய
ஆரம்பித்தேன்..
அப்பொழுதுதான்
தெரிந்தது ராணியும் தோழியும்
ஓய்வெடுக்கப் போகவில்லை..
அருகில் இருந்த பூங்காட்டுக்குள் நுழைந்த விஷயம்...
சரி..
நான் தான் அங்கிருந்து
பூக்களை வாங்கிவந்துவிட்டேனே..
என கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவதற்குள்
ராணியும் தோழியும்
திரும்பி வந்தனர்
என் தோட்டக்காரனுக்கு லஞ்சம்
கொடுத்துவிட்டு..
நான் என்ன செய்ய இப்போது?
மீண்டும் வந்த ராணி
உயிருள்ள பூக்களில் இருந்து
உயிரற்ற பொம்மைகள்
வரை விசிறி அடித்து
விளையாட ஆரம்பித்துவிட்டாள்..
இதில்
தோட்டக்காரனைக் குற்றம் சொல்லி
என்ன செய்ய?
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்
இந்த உலகில்..
இப்படியாகத்தான்
ராணியும் தோழியும்
வாசம் செய்கின்றனர்
வெறுங்கூட்டில்..
நான் வசித்த வீட்டில்
ஒரு தேன்கூடு உண்டு..
பல அற்புத பூக்களும் உண்டு..
தேன்கூட்டில்
ஒரு ராணித்தேனீயும் உண்டு..
அந்த ராணிக்கு தோழியும் உண்டு..
ராணித்தேனீக்கு
சேவகம் செய்ய
ஆயிரமாயிரம் தேனீ உண்டு..
அற்புத பூக்களில்
வழிந்த தேனமுதை
சேவகர்கள் எடுத்துக் கொடுக்க..
அதை ராணித்தேனீயும்
தோழியும் அருந்தி
போதையாக...
தொடர்ந்த இந்த ஆட்டத்தில்
தேன்கூடு
வெறுங்கூடாக
இரைதேடி
கூட்டை விட்டுப் வெளி வந்தாள் ராணி...
தேனெடுத்த பூக்களை
கசக்கிப் பிழிந்து
சாறெடுத்தால் என்ன?
என்று ஒரு உத்தி தோன்ற
தோழியுடன் சேர்ந்து
தேன் கொடுத்த பூக்களை நாசம் செய்தாள்..
எல்லாப் பூக்களும்
நாசம் ஆனதும்
ஒரு சிறு புன்னகை..
அப்போதுதான்
ராணிக்கே தெரிந்தது
தான் குரூர ரத்தத்தாலும்
அகம்பாவ சதைகளாளும் தான்
உருவாக்கப்பட்டவள் என்ற உண்மை..
இந்தக் குரூர விளையாட்டு
பிடித்துப் போக
தொடர்ந்து விளையாடினாள் ராணி..
பூக்கள் மட்டுமல்லாமல்
என் தோட்டத்து
காய்களைக் கூட விட்டு வைக்கவில்லை..
சர்வம் நாசம் மயம்...
எல்லாம் அழிக்கப்பட்டு
பிழியப்பட்டு..
ஆடிமுடித்த களைப்பில்
ஓய்வு என்ற பெயரில்
என் தோட்டம் விட்டுப் போனாள்..
நானும் நிம்மதிப் பெருமூச்சு விட்டு
சீர்குலைந்த தோட்டத்தை சரி செய்ய
ஆரம்பித்தேன்..
அப்பொழுதுதான்
தெரிந்தது ராணியும் தோழியும்
ஓய்வெடுக்கப் போகவில்லை..
அருகில் இருந்த பூங்காட்டுக்குள் நுழைந்த விஷயம்...
சரி..
நான் தான் அங்கிருந்து
பூக்களை வாங்கிவந்துவிட்டேனே..
என கொஞ்சம் ஆசுவாசப்படுத்துவதற்குள்
ராணியும் தோழியும்
திரும்பி வந்தனர்
என் தோட்டக்காரனுக்கு லஞ்சம்
கொடுத்துவிட்டு..
நான் என்ன செய்ய இப்போது?
மீண்டும் வந்த ராணி
உயிருள்ள பூக்களில் இருந்து
உயிரற்ற பொம்மைகள்
வரை விசிறி அடித்து
விளையாட ஆரம்பித்துவிட்டாள்..
இதில்
தோட்டக்காரனைக் குற்றம் சொல்லி
என்ன செய்ய?
பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும்
இந்த உலகில்..
இப்படியாகத்தான்
ராணியும் தோழியும்
வாசம் செய்கின்றனர்
வெறுங்கூட்டில்..