Nanban
09-08-2004, 06:57 PM
என் தோழியே
என்ன கோபம் உனக்கு?
எந்தக் கனவிலோ
தன்னை இழந்து
உன்னை மறந்தேனென்று
சொல்லிவிடலாம் தான்.
நீயும்
அந்த கனவுகளில்
ஒன்றாய்
இல்லையென்றால்.
ஒரிரண்டு மின்னஞ்சல்
தவறியதால்
மௌனப் புறக்கணிப்புகள்.
நீ அறியாததா -
மௌனத்திலே
நேசம் வளர்ப்பவன்
நானென்பதை?
சீண்டி விளையாடும்
சிறுபிள்ளை
நட்பல்ல நம்மது -
இந்த மௌனச் சீண்டல்
புதிது தான்;
புரியவில்லை தான்.
என்றாலும் ரசிக்கிறேன்,
உன் கோபத்தை.
இறுதியில்
இந்த கோபம் வடிந்து
வண்டல் தங்கும்
நிலங்களில்
புதிதாக
நட்பைப் பயிரிடுவேன்.
எத்தனை
கூட்டத்தின் நடுவேயும்
என் மீது
ஒரு கண் வைத்திருப்பாய் -
என் மௌனங்களோடு
நான் பேசாமல்
அமர்ந்திருப்பதைக் கண்டு
புன்னகை பூப்பாய் -
நான் நானாக
இருக்கிறேன் என்று.
வாகன தாமத பதற்றமாக
உன் மௌனம்
வருத்துகிறது -
கரை தொடும் சமுத்திரம்
மௌனம் காப்பதில்லையே..?
உன்னைப் பார்த்த
கால இடைவெளி
அடுத்த குறிஞ்சி மலரும்
காலத்தைத் தொடப்போகிறது.
மௌனம் உடை -
நீ
உயிருடன்
உலாவுவதாக
வானலைகளில்
ஒளிபரப்பு -
என் மௌனங்களோடு
நான் நானாக
இருப்பதற்கு.
உயிர்தொடும்
வார்த்தை கொண்டு
கவிதை எழுதலாம் தான் -
எங்கே அனுப்புவேன் அதை?
நட்பாகிய காதலா..
காதலாகிய நட்பா..
குழம்பித் தவிக்கும்
கூட்டத்தில்
உன் இணைப் பிறாவும்
ஒன்றென்பதால்
முகவரி அற்றுப் போன
இந்த நட்பை
நான் என்ன செய்வேன்?
இன்று வளர்ந்து
நிற்கும்
உன் நிழலுக்கு
நீ சொல்லியிருப்பாயா -
உனக்கு ஒரு அன்பான
தோழன் ஒருவன்
உண்டென்று?
அமுதூட்டி வளர்த்திய
அந்தப் பிள்ளை
அறியுமா -
பேசி பேசி அறுக்காத
இந்த நண்பனை?
எப்படி
அறிமுகப் படுத்துவாய்
என்னை?
எந்த உறவாகவும் வேண்டாம் -
நண்பனாகவே
அறிமுகப்படுத்து.
ஒரு குழந்தையோடு
உன் அறிவாற்றல்
ஒத்துப் போகுமாவென
கவலைப்படாதே -
அறிவாற்றல் அற்றுப்போன
காலத்தைத் தான்
தேடி அலைகிறேன்.
மௌனத்தைப்
பேசுபவனிடம்
அறிவின் உச்சமும்
அமைதியாகத் தான்
இருக்கும்.
கடலடி டால்பின்களாய்
மின்னலைகளை
விண்ணெங்கும் இறைக்கிறது
என் மனம் -
பெறுவதற்கு
யாரும் உண்டா என
அறியாமலே..!
ஒரு மின்னஞ்சல்
தவறிய கோபத்தில்
மௌனத்தினுள் ஆழ்ந்தவளே -
எத்தனை மின்னலைகளை
நீ தவறவிட்டாய்..?
மௌனம்
உணர்வுகளைப் பேசாது.
உணர முடிந்தால்
மௌனம்
சொல்லும் செய்திகள்
நட்சத்திரக் கணக்காகும்.
உன்னிடத்தில்
வாங்கிய கடன்
நிறைய உண்டு
திருப்பித் தருவதற்கு -
நீ தந்த நட்பு,
மதிப்பு, மரியாதையுடன்
நீ குழைத்து
தந்த தயிர்சாதமும் தான்.
வாங்கிய கடனின் முதல்
திருப்பப்படாமலே
போய்விடக்கூடாதென்பதால்
உன் மகளிடம் சொல்லிப் போ -
இந்த நண்பனைப் பற்றி;
இந்த நட்பைப் பற்றி;
உணரக் கூடிய
தொலைவில்
நீ உண்டா?
என் மௌனம்
புரியாத தூரத்தில்
நீ.
இறந்து தானே
போயிருப்பாய்?
என்ன கோபம் உனக்கு?
எந்தக் கனவிலோ
தன்னை இழந்து
உன்னை மறந்தேனென்று
சொல்லிவிடலாம் தான்.
நீயும்
அந்த கனவுகளில்
ஒன்றாய்
இல்லையென்றால்.
ஒரிரண்டு மின்னஞ்சல்
தவறியதால்
மௌனப் புறக்கணிப்புகள்.
நீ அறியாததா -
மௌனத்திலே
நேசம் வளர்ப்பவன்
நானென்பதை?
சீண்டி விளையாடும்
சிறுபிள்ளை
நட்பல்ல நம்மது -
இந்த மௌனச் சீண்டல்
புதிது தான்;
புரியவில்லை தான்.
என்றாலும் ரசிக்கிறேன்,
உன் கோபத்தை.
இறுதியில்
இந்த கோபம் வடிந்து
வண்டல் தங்கும்
நிலங்களில்
புதிதாக
நட்பைப் பயிரிடுவேன்.
எத்தனை
கூட்டத்தின் நடுவேயும்
என் மீது
ஒரு கண் வைத்திருப்பாய் -
என் மௌனங்களோடு
நான் பேசாமல்
அமர்ந்திருப்பதைக் கண்டு
புன்னகை பூப்பாய் -
நான் நானாக
இருக்கிறேன் என்று.
வாகன தாமத பதற்றமாக
உன் மௌனம்
வருத்துகிறது -
கரை தொடும் சமுத்திரம்
மௌனம் காப்பதில்லையே..?
உன்னைப் பார்த்த
கால இடைவெளி
அடுத்த குறிஞ்சி மலரும்
காலத்தைத் தொடப்போகிறது.
மௌனம் உடை -
நீ
உயிருடன்
உலாவுவதாக
வானலைகளில்
ஒளிபரப்பு -
என் மௌனங்களோடு
நான் நானாக
இருப்பதற்கு.
உயிர்தொடும்
வார்த்தை கொண்டு
கவிதை எழுதலாம் தான் -
எங்கே அனுப்புவேன் அதை?
நட்பாகிய காதலா..
காதலாகிய நட்பா..
குழம்பித் தவிக்கும்
கூட்டத்தில்
உன் இணைப் பிறாவும்
ஒன்றென்பதால்
முகவரி அற்றுப் போன
இந்த நட்பை
நான் என்ன செய்வேன்?
இன்று வளர்ந்து
நிற்கும்
உன் நிழலுக்கு
நீ சொல்லியிருப்பாயா -
உனக்கு ஒரு அன்பான
தோழன் ஒருவன்
உண்டென்று?
அமுதூட்டி வளர்த்திய
அந்தப் பிள்ளை
அறியுமா -
பேசி பேசி அறுக்காத
இந்த நண்பனை?
எப்படி
அறிமுகப் படுத்துவாய்
என்னை?
எந்த உறவாகவும் வேண்டாம் -
நண்பனாகவே
அறிமுகப்படுத்து.
ஒரு குழந்தையோடு
உன் அறிவாற்றல்
ஒத்துப் போகுமாவென
கவலைப்படாதே -
அறிவாற்றல் அற்றுப்போன
காலத்தைத் தான்
தேடி அலைகிறேன்.
மௌனத்தைப்
பேசுபவனிடம்
அறிவின் உச்சமும்
அமைதியாகத் தான்
இருக்கும்.
கடலடி டால்பின்களாய்
மின்னலைகளை
விண்ணெங்கும் இறைக்கிறது
என் மனம் -
பெறுவதற்கு
யாரும் உண்டா என
அறியாமலே..!
ஒரு மின்னஞ்சல்
தவறிய கோபத்தில்
மௌனத்தினுள் ஆழ்ந்தவளே -
எத்தனை மின்னலைகளை
நீ தவறவிட்டாய்..?
மௌனம்
உணர்வுகளைப் பேசாது.
உணர முடிந்தால்
மௌனம்
சொல்லும் செய்திகள்
நட்சத்திரக் கணக்காகும்.
உன்னிடத்தில்
வாங்கிய கடன்
நிறைய உண்டு
திருப்பித் தருவதற்கு -
நீ தந்த நட்பு,
மதிப்பு, மரியாதையுடன்
நீ குழைத்து
தந்த தயிர்சாதமும் தான்.
வாங்கிய கடனின் முதல்
திருப்பப்படாமலே
போய்விடக்கூடாதென்பதால்
உன் மகளிடம் சொல்லிப் போ -
இந்த நண்பனைப் பற்றி;
இந்த நட்பைப் பற்றி;
உணரக் கூடிய
தொலைவில்
நீ உண்டா?
என் மௌனம்
புரியாத தூரத்தில்
நீ.
இறந்து தானே
போயிருப்பாய்?