இளசு
27-07-2004, 10:07 PM
படித்தவை : பெரிய இடத்துப் பிள்ளை
__________________________________________________________
அது கர்நாடக மாநிலத்தின் பிரம்மாண்ட
விருந்தினர் மாளிகை..
நேரம் இரவு 11 மணி..
மாநில உளவுத்துறைத் தலைவரும் மாநில முதல்வரும்
விருந்தினராய் வந்திருக்கும் அந்த இளைஞரின் பயணத்திட்டத்தில்
சில மாறுதல்களைச் சொல்வதற்காக..
அந்த இளைஞரின் அறைக்கதவைத் தட்டுகிறார்கள்..
" உள்ளே வாருங்கள்" -- இளைஞரின் குரல்..
இருவரும் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைய ----
அங்கே படுக்கை மீது அவர் அமர்ந்து ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறார்.
குளித்தபின் துவட்டும் பெரிய துண்டு மட்டும் இடுப்பில் சுற்றிக்கொண்டு.!
முதல்வர் : " யோகாசனம் செய்தீர்களா?"
இளைஞர் : " இல்லையே... வரும்போது இரண்டு செட் உடைகள் எடுத்து வந்தேன்.
பிதார் நகர் வரவேற்பில் மாலை, ஆரத்தி என ஒரு செட் கறையாகிவிட்டது.
இன்றைய மாலை குல்பர்கா பொதுக்கூட்டத்திலும், அங்கிருந்து வந்த பயணத்திலும்
இன்னொன்றும் கசங்கி விட்டது. ஆகையால், இரண்டு செட் குர்த்தா- பைஜாமாவையும்
நாளைக்கு வேண்டி இந்த இரவே துவைத்து விட்டேன்."
முதல்வர் : " எங்களிடம் சொல்லியிருக்கக்கூடாதா? துவைக்க ஆள் அனுப்பி இருப்போமே!
இல்லை, இரவே புது குர்த்தா- பைஜாமா தைக்க ஏற்பாடு செய்திருப்போமே!"
இளைஞர் : " பரவாயில்லை.. இப்ப ஓக்கே.! ஒருத்தங்க துணியை அவங்களே துவைக்கிறது
அப்படி ஒண்ணும் சிரமம் இல்லை.."
முதல்வரும், உளவுத்துறைத் தலைவரும் அடுத்த அறைக்குத் திரும்பினர்.
முதல்வர் கடுப்பாய் " இந்த ராத்திரி வேளையில் இந்த இளைஞர் எதுக்கு துணி துவைப்பதில்
அவர் நேரத்தை வீணடிக்கிறார்? வரும்போதே கூட டிரஸ் எடுத்து வந்திருக்கலாம்.. இல்லையா
ஆளிடம் துவைக்கச் சொல்லி இருக்கலாம் அல்லது புது உடை கேட்டிருக்கலாம். "
உளவுத்துறைத் தலைவர் : " அப்படி இல்லை சார்.. அவ்வளவு செல்வாக்கான குடும்பத்துப் பிள்ளை
அப்பவும் இப்பவும் பதவியில் இருக்கிற குடும்பத்தின் வாரிசு - இப்படி அடக்கத்துடன் தன் துணியை
தானே துவைச்சுக்கிறதும், அடுத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாதுன்னு நினைக்கிறதும்
பாராட்டப்படவேண்டிய குணங்கள்தானே!"
முதல்வர் : " ம்ம்ம்... உங்களுக்கு இப்படிப்பட்ட குணங்கள்தான் பிடிக்கும்.. ஆனா பிராக்டிகலா
யோசிக்க மாட்டீங்க!!"
முதல்வர் - குண்டுராவ்
உளவுத்துறைத் தலைவர் : D.R. கார்த்திகேயன்
இளைஞர் : ராஜீவ் காந்தி
(D.R. கார்த்திகேயன் எழுதிய "Triumph of Truth" - [b]வாய்மையின் வெற்றி நூலில் இருந்து..)
__________________________________________________________
அது கர்நாடக மாநிலத்தின் பிரம்மாண்ட
விருந்தினர் மாளிகை..
நேரம் இரவு 11 மணி..
மாநில உளவுத்துறைத் தலைவரும் மாநில முதல்வரும்
விருந்தினராய் வந்திருக்கும் அந்த இளைஞரின் பயணத்திட்டத்தில்
சில மாறுதல்களைச் சொல்வதற்காக..
அந்த இளைஞரின் அறைக்கதவைத் தட்டுகிறார்கள்..
" உள்ளே வாருங்கள்" -- இளைஞரின் குரல்..
இருவரும் அறைக்கதவைத் திறந்து உள்ளே நுழைய ----
அங்கே படுக்கை மீது அவர் அமர்ந்து ஒரு புத்தகம் வாசித்துக்கொண்டிருக்கிறார்.
குளித்தபின் துவட்டும் பெரிய துண்டு மட்டும் இடுப்பில் சுற்றிக்கொண்டு.!
முதல்வர் : " யோகாசனம் செய்தீர்களா?"
இளைஞர் : " இல்லையே... வரும்போது இரண்டு செட் உடைகள் எடுத்து வந்தேன்.
பிதார் நகர் வரவேற்பில் மாலை, ஆரத்தி என ஒரு செட் கறையாகிவிட்டது.
இன்றைய மாலை குல்பர்கா பொதுக்கூட்டத்திலும், அங்கிருந்து வந்த பயணத்திலும்
இன்னொன்றும் கசங்கி விட்டது. ஆகையால், இரண்டு செட் குர்த்தா- பைஜாமாவையும்
நாளைக்கு வேண்டி இந்த இரவே துவைத்து விட்டேன்."
முதல்வர் : " எங்களிடம் சொல்லியிருக்கக்கூடாதா? துவைக்க ஆள் அனுப்பி இருப்போமே!
இல்லை, இரவே புது குர்த்தா- பைஜாமா தைக்க ஏற்பாடு செய்திருப்போமே!"
இளைஞர் : " பரவாயில்லை.. இப்ப ஓக்கே.! ஒருத்தங்க துணியை அவங்களே துவைக்கிறது
அப்படி ஒண்ணும் சிரமம் இல்லை.."
முதல்வரும், உளவுத்துறைத் தலைவரும் அடுத்த அறைக்குத் திரும்பினர்.
முதல்வர் கடுப்பாய் " இந்த ராத்திரி வேளையில் இந்த இளைஞர் எதுக்கு துணி துவைப்பதில்
அவர் நேரத்தை வீணடிக்கிறார்? வரும்போதே கூட டிரஸ் எடுத்து வந்திருக்கலாம்.. இல்லையா
ஆளிடம் துவைக்கச் சொல்லி இருக்கலாம் அல்லது புது உடை கேட்டிருக்கலாம். "
உளவுத்துறைத் தலைவர் : " அப்படி இல்லை சார்.. அவ்வளவு செல்வாக்கான குடும்பத்துப் பிள்ளை
அப்பவும் இப்பவும் பதவியில் இருக்கிற குடும்பத்தின் வாரிசு - இப்படி அடக்கத்துடன் தன் துணியை
தானே துவைச்சுக்கிறதும், அடுத்தவங்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாதுன்னு நினைக்கிறதும்
பாராட்டப்படவேண்டிய குணங்கள்தானே!"
முதல்வர் : " ம்ம்ம்... உங்களுக்கு இப்படிப்பட்ட குணங்கள்தான் பிடிக்கும்.. ஆனா பிராக்டிகலா
யோசிக்க மாட்டீங்க!!"
முதல்வர் - குண்டுராவ்
உளவுத்துறைத் தலைவர் : D.R. கார்த்திகேயன்
இளைஞர் : ராஜீவ் காந்தி
(D.R. கார்த்திகேயன் எழுதிய "Triumph of Truth" - [b]வாய்மையின் வெற்றி நூலில் இருந்து..)