poo
19-07-2004, 11:35 AM
என் மனதினைப் பிசையும் மழலைச்செல்வங்களுக்கு சமர்ப்பணம்.
காக்காய்க் கடி கடித்து
காயா பழமா விட்டு
சாதிசாக்கடைகளுக்கு அணைக்கட்டாய்...
நாளைய சமுதாயத்திற்கு படிக்கட்டாய்..
கோர்த்துக்கொண்ட விரல்கள்
வளமான இந்தியாவின் வரைபடம்
வடித்துக்காட்டிய சிற்பிகளாய்....
வந்ததோ சோதனைக்காலம்...
கோலங்கள் பூர்த்தியாகும்முன்னே
புள்ளிகள் கலைந்த கொடூரம்..
ஊதாங்குழலில் சுவாசத்தை
தொலைக்கும் அம்மா...சமையற்கூடத்தில்...
வண்ணமயமான வாழ்க்கையை
எதிர்நோக்கும் அப்பா சாயப்பட்டறையில்...
தினப்படிக்கு அகவிலைப்படி ஏறாதாவென்ற
ஏக்கத்தில்...
வயிறுநிறைய வறட்சிகுறையாதாவென்ற
துக்கத்தில்..
இத்துணை துயரிலும்
தூணாக நிற்பாரென்றே
உன்னை துணையாக்கி
தலைவாரி பூச்சூடி பாடசாலைக்கு...
என்ன பிழைகண்டாய்...
ஏனப்பா பாடைசாலையாக்கி
எமையெல்லாம் சிலையாக்கினாய்?!
கொஞ்சும் மொழியில் சங்கீதம்...
சலங்கையொலி கேட்கவிருந்த
செவிகளில் சங்கொலி...
இறைவா...
எம்மை ஒலி(ளி)யிழந்தவனாக்கிவிட்டு
இசைத்திருக்கலாம் இந்த முகாரி ராகங்களை...
நஞ்சுகலக்காத மனங்கள்...
நாளைய விடியலைத்தேடுகையில்
இன்றைய இரவை நீட்டித்துவிட்டாயே?!!
கருவறை பிரவேசத்தில்
மணவறை மகிழ்ச்சியை மிஞ்சினோம்..
இந்த கல்லறை பயணத்தில்
பிணவறை செல்ல துடித்திடும்
எம் உணர்வுகளுக்கு என்ன பதில்?!!
இறைவா திருப்பிக்கொடு...
தேசத்தின் களைகளை
கலையவந்த எம் கருவிகளை....
நாளைய இருளுக்கு
விளக்கான எம் விடிவெள்ளிகளை...
சிறகுவிரிக்க காத்திருந்த
வண்ணத்துப்பூச்சிகளை....
மலர்வதற்குள் பறித்துச்சென்ற
எம் மனத்தோட்டத்து மல்லிகைகளை...
திருப்பிக்கொடு...
வேண்டுமெனில்
ஈடாக எனைத்தருகிறேன்...
இணையில்லா செல்வங்களை திருப்பிக்கொடுத்துவிடு....
இருந்தபடி இறந்துகொண்டிருக்க
விருப்பமில்லையெனக்கு!!!
காக்காய்க் கடி கடித்து
காயா பழமா விட்டு
சாதிசாக்கடைகளுக்கு அணைக்கட்டாய்...
நாளைய சமுதாயத்திற்கு படிக்கட்டாய்..
கோர்த்துக்கொண்ட விரல்கள்
வளமான இந்தியாவின் வரைபடம்
வடித்துக்காட்டிய சிற்பிகளாய்....
வந்ததோ சோதனைக்காலம்...
கோலங்கள் பூர்த்தியாகும்முன்னே
புள்ளிகள் கலைந்த கொடூரம்..
ஊதாங்குழலில் சுவாசத்தை
தொலைக்கும் அம்மா...சமையற்கூடத்தில்...
வண்ணமயமான வாழ்க்கையை
எதிர்நோக்கும் அப்பா சாயப்பட்டறையில்...
தினப்படிக்கு அகவிலைப்படி ஏறாதாவென்ற
ஏக்கத்தில்...
வயிறுநிறைய வறட்சிகுறையாதாவென்ற
துக்கத்தில்..
இத்துணை துயரிலும்
தூணாக நிற்பாரென்றே
உன்னை துணையாக்கி
தலைவாரி பூச்சூடி பாடசாலைக்கு...
என்ன பிழைகண்டாய்...
ஏனப்பா பாடைசாலையாக்கி
எமையெல்லாம் சிலையாக்கினாய்?!
கொஞ்சும் மொழியில் சங்கீதம்...
சலங்கையொலி கேட்கவிருந்த
செவிகளில் சங்கொலி...
இறைவா...
எம்மை ஒலி(ளி)யிழந்தவனாக்கிவிட்டு
இசைத்திருக்கலாம் இந்த முகாரி ராகங்களை...
நஞ்சுகலக்காத மனங்கள்...
நாளைய விடியலைத்தேடுகையில்
இன்றைய இரவை நீட்டித்துவிட்டாயே?!!
கருவறை பிரவேசத்தில்
மணவறை மகிழ்ச்சியை மிஞ்சினோம்..
இந்த கல்லறை பயணத்தில்
பிணவறை செல்ல துடித்திடும்
எம் உணர்வுகளுக்கு என்ன பதில்?!!
இறைவா திருப்பிக்கொடு...
தேசத்தின் களைகளை
கலையவந்த எம் கருவிகளை....
நாளைய இருளுக்கு
விளக்கான எம் விடிவெள்ளிகளை...
சிறகுவிரிக்க காத்திருந்த
வண்ணத்துப்பூச்சிகளை....
மலர்வதற்குள் பறித்துச்சென்ற
எம் மனத்தோட்டத்து மல்லிகைகளை...
திருப்பிக்கொடு...
வேண்டுமெனில்
ஈடாக எனைத்தருகிறேன்...
இணையில்லா செல்வங்களை திருப்பிக்கொடுத்துவிடு....
இருந்தபடி இறந்துகொண்டிருக்க
விருப்பமில்லையெனக்கு!!!