இளசு
05-07-2004, 10:13 PM
நன்றி -திரு.க.இராமச்சந்திரன் -- பேராசிரியர், திறனாய்வாளர்..
___________________________________________________
படித்தவை -- பாலகுமாரன் கவிதைகள்..
ஈகோ... ஈகோதான் கவிதைகளுக்கு அடிப்படை..
நாலு பேர் என்னைக் குறைந்தபட்சம் 'கவிஞர்' என்று கூப்பிடவேண்டும்
என்கிற ஆசை என்னை எழுதவைத்தது"
-- பாலகுமாரன் முன்னுரையில்)
பாலா...
இந்தப் பெயர் அறியாதவர் இன்று தமிழுலகில் இல்லை..
சிறுகதைகள்...
மன அலசல்கள், அவஸ்தைகள், தேடல்கள் மற்றும் ஆன்மீகம், ஞானம் தேடும்
களங்களைக் கொண்ட பன்முக நாவல்கள்...
வாழ்வியலை தோளில் கைபோட்டு சொல்லிக்கொடுக்கும் சிநேகிதனாய்
அள்ளி வழங்கும் கட்டுரைகள் (சிநேகிதி இதழில் இப்போது வந்தபடி..)
இன்னும் கோயில் , புராண, வரலாற்றுப் படிவங்கள்..
திரைத்துறை....
இப்படி பன்முகம், பல்சுவை கொண்டவர் பாலா..
நம் எல்லாருக்கும் இத்தனை அறிமுகமான பாலா..
எழுதும் நாவலையும் கவிதை போல் அழகுற செதுக்கும் பாலா..
தனியே கவிதை எழுதியிருக்கிறாரா?
இருக்கிறார்.. அடையாளம் சொல்ல இருக்கிறது..
"விட்டில் பூச்சிகள்" தொகுப்பு...
இந்தத் தஞ்சைக்காரரின் மனக்குழைவு - இவரின் தாய் தந்தது..
கதை எழுதும் ஆர்வம் சீரங்கத்துக்காரரால் வந்தது..
கவிதை?
"தவித்துக்கிடந்த என்னை வழிப்படுத்தியது நா.முத்துசாமி..
என்னுள் குருவாகி நான் வணங்குவது -- ஞானக்கூத்தன்..
குருவே தோழனாகி சொல்லித்தந்தவை ஏராளம்.."
--- பாலா ..)
ஆனாலும் பாலா எழுத்துகளில் யாருடைய பாதிப்பும் இல்லை..
இவர் நடையால் பாதிக்கப்பட்டவர்கள்தான் உண்டு..
ஊக்கம், உந்துதல், குருஸ்நானம் அங்கங்கே பெற்று..
யார் போலவும் இல்லாமல் ..தமக்கே உரிய தனித்த நடையில்..
ஊடாய் பரவி நிற்கும் மனிதநேயம் கலந்து இவர் படைக்கும்
பாலா படைக்கும் எழுத்து விருந்துக்கு
பசியோடு காத்திருக்கும் இதழ்கள்.. வாசக மனங்கள் பலப்பல..
வர்த்தகரீதியாய் மிக உச்ச வெற்றி பெற்றாலும்..
பாலா எழுத்துகள் வியாபார உத்திகள் முதன்மையாய்க் கொண்டு
செதுக்கப்படுபவை அல்ல..
"எந்தக்கலையும் பொழுதைப் போக்குவதற்கு இல்லை..
பொழுதை அர்த்தமுள்ளதாக்குவதுதான் கலைகளின் இலட்சியம்.. இயல்பு".
சொன்னதை இன்றுவரை செய்பவர் பாலா..
கணையாழி, கசடதபற போன்ற இதழ்களின் முலம் இலக்கிய உலகத்தில்
பிரவேசம் ஆனவர் பாலா..
புதுப்பரிமாணக்கவிஞர்களை ஊக்குவித்த கணையாழி தந்த
உந்துதலே இவரின் கவிதாமுயற்சிக்கு வித்து..
முதல் கவிதையான "டெலிபோன் துடைப்பவள்" வெளியானதும்
கணையாழியில்தான்..
ஆனாலும் எடுத்த எடுப்பில் கவிதை எழுத வந்துவிடவில்லை பாலா..
பேராசிரியர் இராமச்சந்திரன் (திறனாய்வாளர்) சொல்கிறார் ---
"பட்டுப்புழுக்கள் வயிறு நிறைய நிறைய இலைகளைத் தின்றுவிட்டுப்
பின்னர் நிதானமாக பட்டு இழைகளைத் தருவதுபோல...-
சங்க இலக்கியங்களை அசைபோட்டு அசைபோட்டு மனதிற்குள்
தக்கவைத்துக்கொண்டார். அதற்குப் பின்னர் கவிதை எழுதும் வெறி
பாசுரங்களால் ஏற்பட்டிருக்கிறது.."
கவிதையைப் பற்றி பாலாவின் கருத்து -
"ஒரு கவிதையில் அதன் மையம் தாண்டி----
கட்டுக்கோப்பு,இழைவு, குளுமை, ஓசைநயம்
என்று பல வேண்டியிருக்கிறது.."
பாலா
கருத்து -
"ஆகாயகங்கை, அமிர்தவாஷினி, ரத்தசிம்மாசனம் என்றெல்லாம்
புவியீர்ப்பை நிராகரித்து இறக்கை கட்டிய புதுக்கவிஞர்களின்
புதுக்கவிதைகளுக்கு மத்தியில்..-
எளிமையாய், வெட்கப்படாமல் தரையில் கால்பரவியவர் பாலா"
புதுமை விரும்பி..பாலா ரசிகன் கமல் சொல்வது உண்மையா?
பாலா கவிதைகளையே கேட்போம்...
இனி பாலா தொகுப்பு பேசட்டும்...
______________________________________________________
பெண் வேறு..கவிதை வேறா?
பாலாவின் முதல் கவிதையும் பெண்மை பற்றியதுதான்..
ஆண்கள் மட்டும் வேலைபார்க்கும் அலுவலகம் அது..
செவ்வாய் தோறும் வரும் தொலைபேசி துடைக்கும் பணிப்பெண்..
அத்தனை ஆண் நெஞ்சிலும் ஒரு நாள் தென்றல்..குளிர்..சுகந்தம்..
ஆண்பார்வையில் அது..
பெண் பார்வையில்?
வேலைக்குப்போகும் இடத்தில் மொய்க்கும் பார்வை ஊறும்
அவலம் சொல்லும் இது ---
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
டெலிபோன் துடைப்பவள்..
இன்றைக்குச் செவ்வாய்க்கிழமை
நிலா பகலிலே வரும்
ஆகவே லேசாய்க் குளிரும்
மௌனமாய் நறுமணம் வீசும்
வீசவே இளமை விழிக்கும்
ஊமையாய் உடலும் மாறும்
மாறவே இமைகள் பேசும்
திரும்பிய நிலவும் போகும்
போகவே இதயம் கேட்கும்
"என்றைக்குச் செவ்வாய்க்கிழமை?"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_____________________________________________________________
படிப்பு முடிந்துவிட்டது.. காலம் கரைந்தோடியபடியே..
வரன் ஒன்றும் குதிரவில்லை..
காத்திருக்கிறாள் வீட்டில் அந்த ராஜகுமாரி..
வருவான் ஒருவன் குதிரையில் என்றபடியே...
"என் பேத்திக்கென்ன.. தங்கக்கிளி.. கொத்திகிட்டு போயிடுவான்ல" -- பாட்டி..
"மடியில நெருப்பைக் கட்டிகிட்டு இருக்காப்ல" --- அம்மா
"எங்காவது வேலை தேடு.. பொழுதை வீணாக்காமல் " -- அப்பா
"பிரகதீஸ்வரர் ஆலய நந்தினி(நீ) - விலகு.. எனக்கு வழி பிறக்கும்" - அண்ணா...
வேலை தேடத் தெருவில் இறங்கினால்...
ஈயாய் அடைமொய்க்க எத்தனை ஜோடிக் கண்கள்..
ஆமாம், அவள் வீட்டினுள் இருக்கும்போது 'பார்க்க'
இதில் ஒருத்தனும் வரக்காணுமே???!!!
நடுத்தர வர்க்கச்சிக்கலில் ஒரு பெண்..
மொய்க்கப்படுகையில் நரகலாய் தன்னை உணர்ந்து அருவருக்கும் பெண்..
பல இடர்ப்பாடு, கட்டுப்பாடுகள் இடையில் வாழும் இடையினம் அவள்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இடையினங்கள்
கொத்திக்கொண்டு போவதற்கு
ஜாதகபக்ஷி வரவில்லை
வெட்டிப்பொழுதின் விடிவுக்கும்
வேளை வரலை இதுநாளாய்..
வேலை தேடிக் கால் தேய
வெளியே நடக்கத் தலைப்பட்டால்
ஈயாய் கண்கள் பலமொய்க்க
என்னை உணர்ந்தேன் தெருமலமாய்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_______________________________________________________________________
காதலுக்காக சில கவிதைகள்..
அவளுக்கு அவனும் இன்னபிறவும் முக்கியம்..
அவனுக்கோ அவள் மட்டுமே..
ஏன்.. அது அந்த வயதின்..உணர்வின் பலம்..
வேறொன்றும் வேண்டாமென்று அர்ச்சுனன் மனமாய் குறிபார்க்கும் பருவம்..
அதுவே காதல் தவம்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காதல் தவம்
உனக்கென்ன
சாமி பூதம் கோயில் குளம்
ஆயிரமாயிரம் ஜாலியாய்
பொழுது போகும்...
வலப்பக்க கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன..
அடியே.. நாளையேனும்
மறக்காமல் வா..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_________________________________________________
வடுவாய் தங்கிவிட்ட வலிகள்..
மனிதத்துக்கு வலிக்கும்..
மரத்துக்கு?
உணர்வுகளைப் பூட்டிவைக்கும் காதலிக்கு கண்டனம்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வடு
அம்மா இழுத்த சூடும்
அப்பா இறைத்த வசவும்
இன்னுமிருக்கின்றன
என்னில் பசுமையாய்..
நடுமரத்தில் நம் பெயரை
நீ செதுக்கின வடு மாதிரி..
நீயோ ------
மரம் மாதிரி..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காதல் பிரிவு...ஓ..எத்தனை உன்னத வலி அது!
அந்த ஒரு சூழலில் மட்டுமே உணரக்கூடிய தனித்துவ வலி அது..
அது என்னவென்று அறிவதற்காவாவது
எல்லாரும் ஒரு முறையேனும் நிஜக்காதலின் வசப்படவேண்டும்..
அதுவும் தோல்வியில் முடியவேண்டும்..
இரவு நேரம்..
இருவர் விழித்திருக்கின்றனர்..
ஆனால் காரணங்கள் வேறு வேறு..
தென்னை முற்றல் ஒன்று இரவுக்காற்றில் பிடிப்பு பெயர்ந்து
சொத்தென்று தோட்டத்தில் விழ விழித்தவர் - முதியவர்.
எதிரே இருட்டில் உறங்காமல் புரளும் இளையவனைப் பார்த்துக் கேட்கின்றார்--
"தூங்கலையா?"
கையறு நிலையைக் கண்முன் காட்டும் பதில் இக்கவிதையின் உச்சம்..
பறவைச்சத்தம் கேட்கும்வரைக்கும் பாவனை காட்டி காட்டி விலகும் உறக்கம்..
இரவோடும் நிலவோடும் மல்லுக்கட்டி தோற்ற அனுபவம் உங்களுக்கும் உண்டுதானே?
"என் காதலியை நினைவுபடுத்தும் ஒவ்வொரு பொருளும்
என் இருதயத்தில் இறங்கும் ஈட்டிக்குச் சமம்" என கீட்ஸ் சொன்னது நிஜந்தானே?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
முற்றல் நெஞ்சு
...................................
........................................
"தூங்கலையோ?"
" நெற்றுத் தென்னை கழன்றதற்கே
தூக்கம் போச்சே உங்களுக்கு..
நெஞ்சு கழன்று வீழ்ந்து கிடக்க
தூக்கம் எங்கே சொல்லுங்க..?"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_______________________________________________________
காதல் பிணக்கு..
உணவில் உப்பு போல் இந்த ஊடல்தான்
உறவின் சுவையை எத்தனை மடங்கு கூட்டிவிடுகிறது..
வள்ளுவனைக் கேட்டால் வகைவகையாய்ச் சொல்லுவான்..
பாலா என்ன சொல்கிறாராம்?
ஓர் இனிமையான இறுக்கத்தில் முடிந்திருக்கவேண்டிய
நெருக்க நெருப்பை மரபு வழி வந்த நாண நீர் ஊற்றிப்
பாதியில் அ¨ணைத்த பாதகி அவள்..!!???
அவளுக்கும் ஒரு வாழ்த்து அட்டை அனுப்பியாகவேண்டும்..
அந்த பழிகாரிக்கு என்ன மாதிரி வாழ்த்து அனுப்ப?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வாழ்த்துகள்
............................................
....................................................
உறவிழுத்த பிடிக்குள் மயங்கிப்போய்
மரபைக்காட்டி
கொண்ட ஒரு கனவையும் குலைத்துவிட்ட
உனக்கென்ன அனுப்ப..???
அட்டைக்கருப்பில்
நீல மசி தோய்த்து
'நீங்காத நினைவோடே'
என்றெழுதி அனுப்புகிறேன்
தேடிப்புரிந்து கொள்..!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காமத்துக்கும் சில கவிதைகள் உண்டு.. அதைத் தவிர்த்து மேலே செல்வோம்..
இவற்றை நான் கவிதைகள் என்று சொல்வது ஒரு அடையாளத்தின் பொருட்டே..
தகுதியைக் கொண்டல்ல"
-- பாலாவின் தன்னடக்கக்கூற்று இது..
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பாலா கவிதைகள் பற்றி..?
இன்று புதுக்கவிஞர்கள் வெகுவாய்க் கையாளும் முரண் என்னும் உத்தியைப் பயன்படுத்தி
நாட்டு நிலைமை இருப்பதற்கும், தன் விருப்பத்துக்கும் உள்ள இடைவெளியை
நையாண்டியாய்ச் சாடி, ஆனால் படிப்பவர் மனதில் கோபம் மூட்டி..
எழுபதுகளிலேயே பாலா படைத்த கவிதை...
காந்தியின் அத்தனை கொள்கைகளையும் கொன்றுவிட்டு
காந்தி ஜெயந்தியைக் கொண்டாடும் தேசம் பற்றி பாலா...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பாரதத்தில் கொண்டாட்டம்
சத்யமேவ -- தமிழில் மாற்றிக்கொண்டாடுவோம்
சேலை உருவிப் பிறன் மனைவியைப் பெண்டாளுவோம்
கத்தி தீட்டி மாட்டினையே துண்டாடுவோம்
கள்ளுக்கடை வாசலிலே சாய்ந்தாடுவோம்
அரிஜனத்தை நெருப்பிலிட்டுப் பந்தாடுவோம்
ஆலைகட்ட கடனை வாங்கித் திண்டாடுவோம்
அடுத்தவனை அரிசி கேட்டு மன்றாடுவோம்
ஆனவரை காந்தியையும் கொண்டாடுவோம்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
______________________________________________________
பாலா தந்த காட்சிப்பாக்கள் (ஹைகூக்கள்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விட்டில் பூச்சிகள்
முட்டி முட்டிப் பால் குடிக்கின்றன
நீலக்குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உள்ளே
மழைக்குப் பயந்து அறைக்குள்
ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விடலைகள்
துள்ளித் துவண்டு தென்றல் நடக்க
விசில் அடித்தன
மூங்கில் மரங்கள்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இன்னும் குதிரை வேதமும் இத்தொகுதியில் உண்டு..
அவை ஏற்கனவே மன்றத்தில் தரப்பட்டதாக நினைவு..
பாலா கவிதை நினைவுகளில் உங்களை மூழ்கவிட்டு
நான் ஒதுங்கிக்கொள்கிறேன்..
நன்றி..
___________________________________________________
படித்தவை -- பாலகுமாரன் கவிதைகள்..
ஈகோ... ஈகோதான் கவிதைகளுக்கு அடிப்படை..
நாலு பேர் என்னைக் குறைந்தபட்சம் 'கவிஞர்' என்று கூப்பிடவேண்டும்
என்கிற ஆசை என்னை எழுதவைத்தது"
-- பாலகுமாரன் முன்னுரையில்)
பாலா...
இந்தப் பெயர் அறியாதவர் இன்று தமிழுலகில் இல்லை..
சிறுகதைகள்...
மன அலசல்கள், அவஸ்தைகள், தேடல்கள் மற்றும் ஆன்மீகம், ஞானம் தேடும்
களங்களைக் கொண்ட பன்முக நாவல்கள்...
வாழ்வியலை தோளில் கைபோட்டு சொல்லிக்கொடுக்கும் சிநேகிதனாய்
அள்ளி வழங்கும் கட்டுரைகள் (சிநேகிதி இதழில் இப்போது வந்தபடி..)
இன்னும் கோயில் , புராண, வரலாற்றுப் படிவங்கள்..
திரைத்துறை....
இப்படி பன்முகம், பல்சுவை கொண்டவர் பாலா..
நம் எல்லாருக்கும் இத்தனை அறிமுகமான பாலா..
எழுதும் நாவலையும் கவிதை போல் அழகுற செதுக்கும் பாலா..
தனியே கவிதை எழுதியிருக்கிறாரா?
இருக்கிறார்.. அடையாளம் சொல்ல இருக்கிறது..
"விட்டில் பூச்சிகள்" தொகுப்பு...
இந்தத் தஞ்சைக்காரரின் மனக்குழைவு - இவரின் தாய் தந்தது..
கதை எழுதும் ஆர்வம் சீரங்கத்துக்காரரால் வந்தது..
கவிதை?
"தவித்துக்கிடந்த என்னை வழிப்படுத்தியது நா.முத்துசாமி..
என்னுள் குருவாகி நான் வணங்குவது -- ஞானக்கூத்தன்..
குருவே தோழனாகி சொல்லித்தந்தவை ஏராளம்.."
--- பாலா ..)
ஆனாலும் பாலா எழுத்துகளில் யாருடைய பாதிப்பும் இல்லை..
இவர் நடையால் பாதிக்கப்பட்டவர்கள்தான் உண்டு..
ஊக்கம், உந்துதல், குருஸ்நானம் அங்கங்கே பெற்று..
யார் போலவும் இல்லாமல் ..தமக்கே உரிய தனித்த நடையில்..
ஊடாய் பரவி நிற்கும் மனிதநேயம் கலந்து இவர் படைக்கும்
பாலா படைக்கும் எழுத்து விருந்துக்கு
பசியோடு காத்திருக்கும் இதழ்கள்.. வாசக மனங்கள் பலப்பல..
வர்த்தகரீதியாய் மிக உச்ச வெற்றி பெற்றாலும்..
பாலா எழுத்துகள் வியாபார உத்திகள் முதன்மையாய்க் கொண்டு
செதுக்கப்படுபவை அல்ல..
"எந்தக்கலையும் பொழுதைப் போக்குவதற்கு இல்லை..
பொழுதை அர்த்தமுள்ளதாக்குவதுதான் கலைகளின் இலட்சியம்.. இயல்பு".
சொன்னதை இன்றுவரை செய்பவர் பாலா..
கணையாழி, கசடதபற போன்ற இதழ்களின் முலம் இலக்கிய உலகத்தில்
பிரவேசம் ஆனவர் பாலா..
புதுப்பரிமாணக்கவிஞர்களை ஊக்குவித்த கணையாழி தந்த
உந்துதலே இவரின் கவிதாமுயற்சிக்கு வித்து..
முதல் கவிதையான "டெலிபோன் துடைப்பவள்" வெளியானதும்
கணையாழியில்தான்..
ஆனாலும் எடுத்த எடுப்பில் கவிதை எழுத வந்துவிடவில்லை பாலா..
பேராசிரியர் இராமச்சந்திரன் (திறனாய்வாளர்) சொல்கிறார் ---
"பட்டுப்புழுக்கள் வயிறு நிறைய நிறைய இலைகளைத் தின்றுவிட்டுப்
பின்னர் நிதானமாக பட்டு இழைகளைத் தருவதுபோல...-
சங்க இலக்கியங்களை அசைபோட்டு அசைபோட்டு மனதிற்குள்
தக்கவைத்துக்கொண்டார். அதற்குப் பின்னர் கவிதை எழுதும் வெறி
பாசுரங்களால் ஏற்பட்டிருக்கிறது.."
கவிதையைப் பற்றி பாலாவின் கருத்து -
"ஒரு கவிதையில் அதன் மையம் தாண்டி----
கட்டுக்கோப்பு,இழைவு, குளுமை, ஓசைநயம்
என்று பல வேண்டியிருக்கிறது.."
பாலா
கருத்து -
"ஆகாயகங்கை, அமிர்தவாஷினி, ரத்தசிம்மாசனம் என்றெல்லாம்
புவியீர்ப்பை நிராகரித்து இறக்கை கட்டிய புதுக்கவிஞர்களின்
புதுக்கவிதைகளுக்கு மத்தியில்..-
எளிமையாய், வெட்கப்படாமல் தரையில் கால்பரவியவர் பாலா"
புதுமை விரும்பி..பாலா ரசிகன் கமல் சொல்வது உண்மையா?
பாலா கவிதைகளையே கேட்போம்...
இனி பாலா தொகுப்பு பேசட்டும்...
______________________________________________________
பெண் வேறு..கவிதை வேறா?
பாலாவின் முதல் கவிதையும் பெண்மை பற்றியதுதான்..
ஆண்கள் மட்டும் வேலைபார்க்கும் அலுவலகம் அது..
செவ்வாய் தோறும் வரும் தொலைபேசி துடைக்கும் பணிப்பெண்..
அத்தனை ஆண் நெஞ்சிலும் ஒரு நாள் தென்றல்..குளிர்..சுகந்தம்..
ஆண்பார்வையில் அது..
பெண் பார்வையில்?
வேலைக்குப்போகும் இடத்தில் மொய்க்கும் பார்வை ஊறும்
அவலம் சொல்லும் இது ---
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
டெலிபோன் துடைப்பவள்..
இன்றைக்குச் செவ்வாய்க்கிழமை
நிலா பகலிலே வரும்
ஆகவே லேசாய்க் குளிரும்
மௌனமாய் நறுமணம் வீசும்
வீசவே இளமை விழிக்கும்
ஊமையாய் உடலும் மாறும்
மாறவே இமைகள் பேசும்
திரும்பிய நிலவும் போகும்
போகவே இதயம் கேட்கும்
"என்றைக்குச் செவ்வாய்க்கிழமை?"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_____________________________________________________________
படிப்பு முடிந்துவிட்டது.. காலம் கரைந்தோடியபடியே..
வரன் ஒன்றும் குதிரவில்லை..
காத்திருக்கிறாள் வீட்டில் அந்த ராஜகுமாரி..
வருவான் ஒருவன் குதிரையில் என்றபடியே...
"என் பேத்திக்கென்ன.. தங்கக்கிளி.. கொத்திகிட்டு போயிடுவான்ல" -- பாட்டி..
"மடியில நெருப்பைக் கட்டிகிட்டு இருக்காப்ல" --- அம்மா
"எங்காவது வேலை தேடு.. பொழுதை வீணாக்காமல் " -- அப்பா
"பிரகதீஸ்வரர் ஆலய நந்தினி(நீ) - விலகு.. எனக்கு வழி பிறக்கும்" - அண்ணா...
வேலை தேடத் தெருவில் இறங்கினால்...
ஈயாய் அடைமொய்க்க எத்தனை ஜோடிக் கண்கள்..
ஆமாம், அவள் வீட்டினுள் இருக்கும்போது 'பார்க்க'
இதில் ஒருத்தனும் வரக்காணுமே???!!!
நடுத்தர வர்க்கச்சிக்கலில் ஒரு பெண்..
மொய்க்கப்படுகையில் நரகலாய் தன்னை உணர்ந்து அருவருக்கும் பெண்..
பல இடர்ப்பாடு, கட்டுப்பாடுகள் இடையில் வாழும் இடையினம் அவள்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இடையினங்கள்
கொத்திக்கொண்டு போவதற்கு
ஜாதகபக்ஷி வரவில்லை
வெட்டிப்பொழுதின் விடிவுக்கும்
வேளை வரலை இதுநாளாய்..
வேலை தேடிக் கால் தேய
வெளியே நடக்கத் தலைப்பட்டால்
ஈயாய் கண்கள் பலமொய்க்க
என்னை உணர்ந்தேன் தெருமலமாய்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_______________________________________________________________________
காதலுக்காக சில கவிதைகள்..
அவளுக்கு அவனும் இன்னபிறவும் முக்கியம்..
அவனுக்கோ அவள் மட்டுமே..
ஏன்.. அது அந்த வயதின்..உணர்வின் பலம்..
வேறொன்றும் வேண்டாமென்று அர்ச்சுனன் மனமாய் குறிபார்க்கும் பருவம்..
அதுவே காதல் தவம்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காதல் தவம்
உனக்கென்ன
சாமி பூதம் கோயில் குளம்
ஆயிரமாயிரம் ஜாலியாய்
பொழுது போகும்...
வலப்பக்க கடல் மணலை
இடப்பக்கம் இறைத்திறைத்து
நகக்கணுக்கள் வலிக்கின்றன..
அடியே.. நாளையேனும்
மறக்காமல் வா..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_________________________________________________
வடுவாய் தங்கிவிட்ட வலிகள்..
மனிதத்துக்கு வலிக்கும்..
மரத்துக்கு?
உணர்வுகளைப் பூட்டிவைக்கும் காதலிக்கு கண்டனம்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வடு
அம்மா இழுத்த சூடும்
அப்பா இறைத்த வசவும்
இன்னுமிருக்கின்றன
என்னில் பசுமையாய்..
நடுமரத்தில் நம் பெயரை
நீ செதுக்கின வடு மாதிரி..
நீயோ ------
மரம் மாதிரி..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காதல் பிரிவு...ஓ..எத்தனை உன்னத வலி அது!
அந்த ஒரு சூழலில் மட்டுமே உணரக்கூடிய தனித்துவ வலி அது..
அது என்னவென்று அறிவதற்காவாவது
எல்லாரும் ஒரு முறையேனும் நிஜக்காதலின் வசப்படவேண்டும்..
அதுவும் தோல்வியில் முடியவேண்டும்..
இரவு நேரம்..
இருவர் விழித்திருக்கின்றனர்..
ஆனால் காரணங்கள் வேறு வேறு..
தென்னை முற்றல் ஒன்று இரவுக்காற்றில் பிடிப்பு பெயர்ந்து
சொத்தென்று தோட்டத்தில் விழ விழித்தவர் - முதியவர்.
எதிரே இருட்டில் உறங்காமல் புரளும் இளையவனைப் பார்த்துக் கேட்கின்றார்--
"தூங்கலையா?"
கையறு நிலையைக் கண்முன் காட்டும் பதில் இக்கவிதையின் உச்சம்..
பறவைச்சத்தம் கேட்கும்வரைக்கும் பாவனை காட்டி காட்டி விலகும் உறக்கம்..
இரவோடும் நிலவோடும் மல்லுக்கட்டி தோற்ற அனுபவம் உங்களுக்கும் உண்டுதானே?
"என் காதலியை நினைவுபடுத்தும் ஒவ்வொரு பொருளும்
என் இருதயத்தில் இறங்கும் ஈட்டிக்குச் சமம்" என கீட்ஸ் சொன்னது நிஜந்தானே?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
முற்றல் நெஞ்சு
...................................
........................................
"தூங்கலையோ?"
" நெற்றுத் தென்னை கழன்றதற்கே
தூக்கம் போச்சே உங்களுக்கு..
நெஞ்சு கழன்று வீழ்ந்து கிடக்க
தூக்கம் எங்கே சொல்லுங்க..?"
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
_______________________________________________________
காதல் பிணக்கு..
உணவில் உப்பு போல் இந்த ஊடல்தான்
உறவின் சுவையை எத்தனை மடங்கு கூட்டிவிடுகிறது..
வள்ளுவனைக் கேட்டால் வகைவகையாய்ச் சொல்லுவான்..
பாலா என்ன சொல்கிறாராம்?
ஓர் இனிமையான இறுக்கத்தில் முடிந்திருக்கவேண்டிய
நெருக்க நெருப்பை மரபு வழி வந்த நாண நீர் ஊற்றிப்
பாதியில் அ¨ணைத்த பாதகி அவள்..!!???
அவளுக்கும் ஒரு வாழ்த்து அட்டை அனுப்பியாகவேண்டும்..
அந்த பழிகாரிக்கு என்ன மாதிரி வாழ்த்து அனுப்ப?
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
வாழ்த்துகள்
............................................
....................................................
உறவிழுத்த பிடிக்குள் மயங்கிப்போய்
மரபைக்காட்டி
கொண்ட ஒரு கனவையும் குலைத்துவிட்ட
உனக்கென்ன அனுப்ப..???
அட்டைக்கருப்பில்
நீல மசி தோய்த்து
'நீங்காத நினைவோடே'
என்றெழுதி அனுப்புகிறேன்
தேடிப்புரிந்து கொள்..!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
காமத்துக்கும் சில கவிதைகள் உண்டு.. அதைத் தவிர்த்து மேலே செல்வோம்..
இவற்றை நான் கவிதைகள் என்று சொல்வது ஒரு அடையாளத்தின் பொருட்டே..
தகுதியைக் கொண்டல்ல"
-- பாலாவின் தன்னடக்கக்கூற்று இது..
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் பாலா கவிதைகள் பற்றி..?
இன்று புதுக்கவிஞர்கள் வெகுவாய்க் கையாளும் முரண் என்னும் உத்தியைப் பயன்படுத்தி
நாட்டு நிலைமை இருப்பதற்கும், தன் விருப்பத்துக்கும் உள்ள இடைவெளியை
நையாண்டியாய்ச் சாடி, ஆனால் படிப்பவர் மனதில் கோபம் மூட்டி..
எழுபதுகளிலேயே பாலா படைத்த கவிதை...
காந்தியின் அத்தனை கொள்கைகளையும் கொன்றுவிட்டு
காந்தி ஜெயந்தியைக் கொண்டாடும் தேசம் பற்றி பாலா...
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
பாரதத்தில் கொண்டாட்டம்
சத்யமேவ -- தமிழில் மாற்றிக்கொண்டாடுவோம்
சேலை உருவிப் பிறன் மனைவியைப் பெண்டாளுவோம்
கத்தி தீட்டி மாட்டினையே துண்டாடுவோம்
கள்ளுக்கடை வாசலிலே சாய்ந்தாடுவோம்
அரிஜனத்தை நெருப்பிலிட்டுப் பந்தாடுவோம்
ஆலைகட்ட கடனை வாங்கித் திண்டாடுவோம்
அடுத்தவனை அரிசி கேட்டு மன்றாடுவோம்
ஆனவரை காந்தியையும் கொண்டாடுவோம்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
______________________________________________________
பாலா தந்த காட்சிப்பாக்கள் (ஹைகூக்கள்)
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விட்டில் பூச்சிகள்
முட்டி முட்டிப் பால் குடிக்கின்றன
நீலக்குழல் விளக்கில்
விட்டில் பூச்சிகள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
உள்ளே
மழைக்குப் பயந்து அறைக்குள்
ஆட்டம் போட்டன
துவைத்த துணிகள்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
விடலைகள்
துள்ளித் துவண்டு தென்றல் நடக்க
விசில் அடித்தன
மூங்கில் மரங்கள்..
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இன்னும் குதிரை வேதமும் இத்தொகுதியில் உண்டு..
அவை ஏற்கனவே மன்றத்தில் தரப்பட்டதாக நினைவு..
பாலா கவிதை நினைவுகளில் உங்களை மூழ்கவிட்டு
நான் ஒதுங்கிக்கொள்கிறேன்..
நன்றி..